வியாழன், 8 மார்ச், 2018

சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஏப்ரல் பூமியில் மோதும் அபாயம்

சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஏப்ரல் முதல் வாரம் பூமியின் மீது மோதவுள்ளதாக அந்நாட்டு விண்வெளித்துறை தெரிவித்துள்ளது. #Tiangong1 #SpaceStation

சீனாவின் முதலாவது விண்வெளி ஆராய்ச்சி நிலையமான டியாங்கோங் - 1 பூமியின் மீது மோத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரம்  இவ்விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியின் மீது மோத உள்ளதாக அந்நாட்டு விண்வெளித்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு போட்டியாக 2011-ஆம் ஆண்டு மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினை சீனா விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது. சுமார் 8.5 டன் எடைகொண்ட விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 2016-ஆம் ஆண்டுடன் தனது கட்டுப்பாட்டை முற்றாக இழந்துவிட்டது. இந்த நிலையில் டியாங்கோங் - 1 பூமியுடன் மோதி அழிவுக்குள்ளாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மணிக்கு சுமார் 27,000 கிலோ மீட்டர் அதிக வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் டியாங்கோங் – 1, பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது எரியத் தொடங்கிவிடும். எனினும் முற்றாக எரியாத நிலையில் பெரும்பாலான பகுதிகள் பூமியில் மோதக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது. டியாங்கோங் – 1 பூமியுடன் மோதப்போகும் இடம் எது அதனால் ஏற்படும் பாதிப்பு  என்ன என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.