வெள்ளி, 20 மார்ச், 2015

எது கனவு? யார் நிஜம்? ‘எனக்குள் ஒருவன்’. திரை விமர்சனம்

கனவு நனவென சம்பவங்கள் மாறி மாறி நிகழும் படம் மாறுபட்ட கதைக் களத்தைக் கொண்டுள்ளது ‘எனக்குள் ஒருவன்’. கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘லூசியா’ படத்தின் மறு ஆக்கம் என்ற போதும் தமிழ்ப் படமாகவே உள்ளது. நனவுலகில் நடிகர் விக்கி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அது தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விக்கியை அவருடைய காதலியே கொலை செய்ய முயல்கிறார். எது கனவு? யார் நிஜம்? ஏன் இந்தக் கொலை முயற்சி? காதலியின் பிரச்சினை என்ன? நாயகனின் உண்மையான பிரச்சினை என்ன? இறந்து போவது யார்? இப்படிக் குழப்பமான பல விஷயங்கள் எந்தக் குழப்பமுமின்றி அழகான திரைக்கதையாக்கப்பட்டுள்ளன. 


இரு கதைகளும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துதான் ஆக வேண்டும் என்பதும் அதுவரையில் பார்வையாளர்களின் குழப்பம் அல்லது எதிர்பார்ப்பு தக்கவைக்கப்பட வேண்டும் என்பதும் இதுபோன்ற படங்களில் கட்டாயம். அதை இயக்குநர் ஓரளவு சிறப்பாகவே கையாண்டிருக்கிறார். ஆனால் புலனாய்வுக் கட்டத்தில் பங்கு பெறும் நாயகனின் காதலி சித்தரிக்கப்பட்டுள்ள விதம் அந்தக் குழப்பத்தைத் தக்கவைப்பதற்காகச் செய்யப்பட்டுள்ள செயற்கையான திணிப்பாகவே உள்ளது.





அதாகப்பட்டது.. Sankoviiii :)

இன்செப்சன் படத்தின் இன்ஸ்பிரேசனில் கன்னடத்தில் உருவான படம், லூசியா. க்ரவுட் ஃபண்டிங் முறையில் வெளியாகி மெகா ஹிட் ஆனது. அந்தப் படத்தினை தமிழில் ‘எனக்குள் ஒருவனாக’ ரீமேக் செய்திருக்கிறார்கள். சி.வி.குமாரின் தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவான படம்.

 
ஒரு ஊர்ல :
நிஜ வாழ்வில் சலிப்புற்ற ஹீரோவுக்கு, கனவில் நினைத்த வாழ்க்கையை வாழ லூசியா எனும் மாத்திரை மூலம் ஒரு வாய்ப்பு வருகிறது. அது ஹீரோவின் வாழ்க்கையை

எப்படி திருப்பிப் போடுகிறது என்பதே கதை.

உரிச்சா:

திரைக்கதை தான் படத்தின் மிகப்பெரிய பலம்.

கோமாவில் கிடக்கும் சித்தார்த். அதற்கான காரணத்தை விசாரிக்கும் போலீஸ்.

தியேட்டரில் டார்ச் அடித்து, ஆட்களை உட்கார வைக்கும் ஏழை சித்தார்த்தின் கதை, கூடவே ஹீரோயின் தீபா சன்னதியுடன் ஒரு அழகான காதல்.

டாப் சினிமா ஸ்டார் சித்தார்த்தின் கதை..கூடவே மாடல்(தீபா சன்னதி) மேல் காதல் கொள்ளும் கதை.

மூன்று கதையையும் கலந்து கட்டி அடிக்கிறார்கள். மூன்று கதையும் ஒன்று சேரும்புள்ளியில் ‘அட’ என்று நம்மை அசர வைக்கிறார்கள். தமிழில் பொதுவாக மறுபடியும்

மறுபடியும் பார்த்துப் புரிந்துகொள்ள வைக்கும் ஸ்டைலில் திரைக்கதைகள் வருவதில்லை. அந்தவகையில், இதுவொரு முக்கியமான படம்.

ஒரு கதையில் நரேனுக்கு விசுவாசமாக சித்தார்த் இருக்க, இன்னொரு கதையில் சித்தார்த்துக்கு விசுவாசமாக வருகிறார். இப்படி இரண்டு கதையிலும் பல தலைகீழ்

மாற்றங்கள், நுணுக்கமான சித்தரிப்புகளுடன் தரமான படமாக வந்திருக்கிறது.

இதில் ஒரே ஒரு சிக்கல் தான்..நம் மக்கள் பொழுதுபோக்கிற்குத் தான் படம் பார்க்க வருகிறார்களே ஒழிய, உட்கார்ந்து யோசிக்க அல்ல. நெட்டில் டவுன்லோடு செய்து

நோலனின் படத்தை சிலாகிக்கும் கும்பல்கூட ‘அனேகன்’ போன்ற முயற்சிகளை ரசிப்பதில்லை என்பதே யதார்த்தம்.

ஸ்லோவாக நகரும் படம், மூன்று கதைகள், கிளைமாக்ஸ் ட்விஸ்ட்வரை ‘அப்புறம் என்ன..?’ என சற்று அசுவாரஸ்யமாகவே உட்கார வைக்கின்றன. எனவே கமர்சியலாக ஏ

செண்டர் தாண்டி படம் தேறுவது கஷ்டம் தான்.

கதையைப் பற்றி இதற்கு மேல் என்ன சொன்னாலும் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால்....உரிச்சது போதும்!

சித்தார்த்:

ஒரிஜினல் கன்னட ஹீரோவைவிட, இரண்டு கேரக்டருக்கு இடையே அதிக வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். உடல்மொழி, பேசும் விதம் என எல்லாவற்றிலும் நல்ல 
உழைப்பு. ஏழை அப்பாவியாக காதலில் தயக்கம் காட்டுவதும், சினிமா ஸ்டாராக அதிகாரம் காட்டுவதுமாக கலக்கல் நடிப்பு. சித்தார்த்தின் கரியரில் இதுவொரு முக்கியமான படமாக இருக்கும். சினிமா ஸ்டாராக வரும் காதல் போர்சன் தற்செயலாக சமந்தாவை ஞாபகப்படுத்துகிறது.

தீபா சன்னதி:

சமந்தா-சித்தார்த் காதல் பிரிவிற்குக் காரணமே இந்த கன்னி பாம் தான் என்றார்கள். ஸ்டில் அளவிற்கு படத்தில் அம்மணி அழகாக இல்லை. முகத்தில் முதிர்ச்சி தெரிகிறது. இவரை விட ’மேகா நாயகி’ சிருஷ்டி அழகாக இருக்கிறார். ஆனால் அவரை டம்மியாக யூஸ் செய்திருக்கிறார்கள். வெரி பேட். அந்த கன்னக்குழி அழகியை ஹீரோயின் ஆக்கியிருக்கலாம்.

நரேன்:
ரொம்ப நாளைக்கு அப்புறம் மனுசருக்கு நல்ல கேரக்டர். நொடித்துப்போன தியேட்டர் அதிபராகவும், ஹீரோவின் மேனேஜராகவும் பின்னி எடுக்கிறார்.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- லூசியா மாத்திரை..கனவில் வேறொரு வாழ்க்கை என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்கள். அதில் இருந்து இண்டர்வெல்வரை வேறு பெரிய ட்விஸ்ட்டே இல்லை.
- மெதுவாக நகரும் படம்
- விசாரணை அதிகாரி கேரக்டருக்கு வேறு ஃபேமஸான நடிகரைப் போட்டிருக்க வேண்டும். அந்த போர்சன்மேல் பெரிய ஆர்வம் வருவதில்லை. ஆனால் படத்தில் அது தான் த்ரில்லர் போர்சன்
- ஹீரோயின்
- பெண் தன்மையுள்ளவராக அறிமுகமாகும் ஜான் விஜய், அதற்கு அடுத்த காட்சிகளில் நார்மல் ஆணாக இருப்பது!
- நல்ல படம்!

பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- திரைக்கதை..கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டும் தொடரும் காட்சிகளும் தான் படத்தின் பெரும் பலம்.
- சித்தார்த்
- வழக்கம்போல் சந்தோஷ் நாராயணின் கலக்கல் பாடல்களும் இசையும்.
- திரைக்கதைக்கு தோள் கொடுக்கும் பக்கா எடிட்டிங்.
- ரொம்ப நாளைக்கு அப்புறம், திரையில் பாதிப்படத்தை ப்ளாக் & ஒயிட்டில் பார்ப்பது. குறிப்பாக, ஓப்பனிங் ஷாங்கில் ஒளிப்பதிவும் ஆர்ட்டும் அட்டகாசம்.
- நல்ல படம்!! 

நிஜத்தை கருப்பு வெள்ளையாகவும், கனவுகளை வண்ணங்களாகவும் காணும் விக்னேஷ் பாத்திரம் சரியாக செதுக்கப்பட்டிருக்கிறது. சிறு வயதில் பெற்றோரை இழந்து அதோடு வண்ணங்களை உணரும் பார்வைக் குறைபாட்டையும் பெறும் விக்னேஷ், படம் முழுக்க கருப்பு வெள்ளை, வண்ணம் என்று மாறி மாறி வருவது நல்ல உத்தி. கடைசி காட்சியில் கனவு முடிந்து, போக நிஜ வாழ்வில் அவை பார்வையாளனுக்கு வண்ணமாக மாறுவது ரசிக்க வைக்கிறது.

பார்க்கலாமா?

நல்ல தரமான படம் பார்க்க விரும்புபவர்கள்….பார்க்கலாம் - கனவால், நிஜ வாழ்வு விபரீதமாகும் ஒருவனின் விசித்திரக் கதை!

வெள்ளி, 13 மார்ச், 2015

பில்லியர்களின் செல்வவள வளர்ச்சி

திங்களன்று Forbes இதழால் பிரசுரிக்கப்பட்ட சமீபத்திய தொகுப்புரையின்படிஉலக பில்லியனர்களின் மொத்த ஒருங்கிணைந்த மதிப்பு ஒரு புதிய மட்டத்திற்கு 2015 இல் 7.05 ட்ரில்லியன் டாலரை எட்டியுள்ளது.
அங்கே சாதனையளவிற்கு 1,826 பில்லியனர்கள்ஒவ்வொருவரும் சராசரியாக 3.8 பில்லியன் செல்வ வளத்துடன் உள்ளனர்கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்உலக பில்லியனர்கள் அவர்களின் மொத்த செல்வ வளத்தை 2014 இல் 6.4 ட்ரில்லியனில் இருந்து 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்து கொண்டுள்ளனர்.அதேவேளையில் மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை 11 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது.
அதன் அறிக்கையின் அறிமுகத்தில்Forbes இதழ் உலகின் மிகப் பணக்காரர்களின் செல்வ வளம் தொடர்ந்து உயர்ந்து வருவதற்கும் உலக பொருளாதார நிலைக்கும் இடையிலான மலைப்பூட்டும் இடைவெளியை குறிப்பிட்டுக் காட்டியது. “வீழ்ச்சி அடைந்துவரும் எண்ணெய் விலைகள் மற்றும் பலவீனமடைந்து வரும் யூரோ ஆகியவற்றிற்கு இடையேஉலக செல்வந்தர்களின் எண்ணிக்கை உலக பொருளாதார கொந்தளிப்புடன் போட்டிபோட்டு மீண்டுமொருமுறை விரிவடைந்தது,” என்று எழுதியது.
பில்லியர்களின் இந்த செல்வவள வளர்ச்சி தொடர்ந்து உலகளாவிய பங்குவிலை நிர்ணய சந்தைகளின் உயர்வுடன் பிணைந்துள்ளனஅகில உலக FTSE குறியீடு கடந்த மாதம் சாதனை அளவிற்கு உயர்ந்ததுமற்றும் அமெரிக்க சந்தைகள் சாதனைகளை முறிப்பதை தொடர்ந்து கொண்டிருக்கிறதுபங்குடைமையோ (share ownership) "பணத்தை அச்சடித்தல்" (quantitative easing), சாதனையளவிலான குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் ஏனைய அரசாங்க கொள்கைகளின் பிரதான ஆதாயதாரர்களாக உள்ள செல்வந்தர்களின் கரங்களில் அதிகளவில் குவிந்துள்ளது.

உலக பில்லியனர்களின் செல்வ வளம்
வோல் ஸ்ட்ரீட் தாயகமாக மற்றும் உலகளாவிய நிதியியல் மூலதனத்தின் மையமாக விளங்கும் அமெரிக்கா,இதுவரையில் இல்லாத வகையில் மீண்டும் பில்லியனர்களின் மிக அதிக எண்ணிக்கையுடன் —536—உள்ளது. 2009 இல் “பொருளாதார மீட்சிஎன்றழைக்கப்பட்டது தொடங்கியதில் இருந்துஅமெரிக்காவில் மொத்த இலாப வருவாய்களில் சுமார் 95 சதவீதம் மேல்மட்ட சதவீதத்தினருக்கு சென்றுள்ளது.இதற்கிடையேதான்அந்நாட்டில் அண்மித்தளவில் நான்கில் ஒரு குழந்தை வறுமையில் வாழ்கிறது.
அமெரிக்காவில் உள்ள பில்லியனர்களின் பட்டியலில் பரிசயமானவர்களின் பெயர்களே மேலே இடம்பெற்றுள்ளனமைக்ரோசாப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ் பெயரும் அதில் உள்ளடங்கும்இவரது தனிப்பட்ட செல்வ வளம் மட்டுமே 3.2 பில்லியனில் இருந்து 79.2 பில்லியன் டாலருக்கு உயர்ந்ததுஅமெரிக்கர்களின் மத்தியில்கேட்ஸூக்கு அடுத்து இருப்பவர் முதலீட்டாளர் வாரென் பஃபெட் (Warren Buffett) ஆவார்இவர் இவ்வாண்டின் மிகப்பெரிய இலாபமீட்டியவராக அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கடந்த ஆண்டு 14.5பில்லியன் டாலரில் இருந்த இவரது சொத்தின் நிகர மதிப்புஇப்போது 72.7 பில்லியன் டாலராகும்.
அப்பட்டியலில் அதற்கு கீழே இருப்பவர்களில்தனியார் முதலீட்டு நிர்வாகி ஸ்டீவன் கோஹென் (Steven Cohen) போன்றவர்களை ஒருவரால் பார்க்க முடியும்இவர் அமெரிக்க முதலாளித்துவத்தின் குற்றகர குணாம்சத்தின் இன்றியமையாத உருவடிவமாவார்ஓராண்டிற்கு முன்னர்கோஹெனின் முன்னாள் தனியார் முதலீட்டு நிதியம், SAC Capital Advisors, உள்-வர்த்தக கட்டண குற்றங்களுக்காக வழக்கில் இழுக்கப்பட்டதுகோஹென் (Cohen) மீதே கூட ஒருபோதும் குற்றஞ்சாட்டப்படவில்லை என்பதோடுஅவர் எளிமையாக அவரது செல்வங்களை Point72 Asset Management என்ற புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொண்டார்கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டாலர் ஈட்டிய கோஹென்அவரது மொத்த நிகர மதிப்பை 11.4பில்லியன் டாலருக்குக் கொண்டு வந்தார்.
தனி உள்ளாட்சியாக வகைப்படுத்தினால்Forbes பட்டியலில்கலிபோர்னியாவெறுமனே ஒட்டுமொத்தமாக அமெரிக்காவை மற்றும் சீனாவை அடுத்து, 131 பில்லியனர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும்.நிச்சயமற்ற மற்றும் ஒழுங்குமுறையற்ற வேலை நேரங்களுடன்குறைந்த ஊதியம் பெறும் ஓட்டுனர்களை ஒருங்கிணைப்பதில் சிறப்புதன்மை கொண்ட கார்-பகிர்வு சேவையான Uber நிறுவனத்தின் இணை-ஸ்தாபகர்கள் Travis Kalanick மற்றும் Garett Camp ஆகியோர் கலிபோர்னியாவின் புதிய பில்லியனர்களில் உள்ளனர்அதுபோன்ற உழைப்பு சுரண்டும் முறை ஒட்டுமொத்தமாக அமெரிக்க பொருளாதாரத்திற்கான ஒரு முன்மாதிரியாக பெருமளவில் பார்க்கப்பட்டு வருகிறது.
மெக்சிகன் தொலைதொடர்புத்துறை அதிபர் கார்லோஸ் ஸ்லிம் (Carlos Slim), அந்த உலகளாவிய பட்டியலில்77.1 பில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்தில் இருந்தார்மெக்சிகோவின் 122 மில்லியன் மக்கள்தொகையில் பாதி மக்கள் வறுமையில்நாளொன்றுக்கு சுமார் டாலருக்கும் குறைந்த வருவாயில்(மாதத்திற்கு 2,329 பெசொஸூடன் -pesos) வாழ்வதாக வரையறுக்கப்படுகிறதுஸ்லிமின் தனிப்பட்ட செல்வமேவறிய 60 மில்லியன் மெக்சிகோ தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த ஆண்டு வருவாய் உடன் தோராயமாக ஒப்பிடக்கூடியதாக உள்ளது.
இலத்தீன் அமெரிக்காவில் மிகப்பெரிய தனிநபராக ஸ்லிம் விளங்குகிறார் என்ற நிலையில்அப்பிராந்தியத்தில் அதிக எண்ணிக்கையிலான 54 பில்லியனர்களை கொண்ட நாடாக பிரேசில் உள்ளதுபிரேசிலின் 60மில்லியன் குழந்தைகளில் பாதி வறுமையில் வாழ்கின்றன.
ஒட்டுமொத்தமாகமிக அதிகமாக 213 என்ற எண்ணிக்கையில் பில்லியனர்களை கொண்ட இரண்டாவது நாடு சீனாவாகும்அதைத் தொடர்ந்து ஜேர்மனிஇந்தியா மற்றும் ரஷ்யா உள்ளன.
உலக முதலாளித்துவத்திற்கு ஒரு மலிவு உழைப்பு தளமாக விளங்கும் சீனாஇந்த ஆண்டு Forbes பட்டியலில்290 பில்லியனர்களில் 71 புதியவர்களுக்குஅல்லது மொத்த நபர்களில் சுமார் ஒரு கால் பங்கினருக்கு புகலிடமாக உள்ளதுசீனாவில் உள்ள மிகப் பெரிய செல்வந்தர் ஒரு நில/கட்டிடத்துறை அதிபரான வாங் ஜியான்லின் (Wang Jianlin) (24.2 பில்லியன் டாலர்ஆவார்இவருக்கு அடுத்து நில சொத்து (real estate)வர்த்தக நிறுவனமான அலிபாபா குழுமத்தின் (Alibaba Group) அதிபர் ஜேக் மா (22.7 பில்லியன் டாலர்)ஆவார்.
கடந்த ஆண்டு சீனாவின் பங்கு-நிர்ணய சந்தைகளில் இருந்த உயர்வு சீன பில்லியனர்களுக்கு மட்டும் ஆதாயமளிக்கவில்லைForbes குறிப்பிடுகையில், “சீன பில்லியனர்கள் பட்டியலில் மேல்மட்ட 20பில்லியனர்களால் நடத்தப்படும் நிறுவனங்களில் நீங்கள் முதலீடு செய்திருந்தால்நீங்கள் அவர்களின் செல்வ வளத்திலிருந்து சரியாக உங்களின் பங்கு கணக்கைப் பெற்று வந்திருப்பீர்கள்,” என்றதுகடந்த ஆண்டு அலிபாபாவின் ஆரம்ப பொது பங்கு வெளியீடானது ஊக வணிகம் மற்றும் பேராசையின் ஒரு சர்வதேச காட்சியாக மாறி இருந்ததுடன்உலகளாவிய முதலீட்டாளர்களிடம் இருந்து பில்லியன் பில்லியன் கணக்கில் இலாபங்களைக் குவித்தன.
இந்தியாவில்அந்நாட்டின் 90 பில்லியனர்கள் "பெரிதும் பிரதம மந்திரி நரேந்திர மோடியின் 'நல்ல காலத்திற்கானவாக்குறுதியின் மீது சவாரி செய்து வருவதாகForbes கருத்துரைத்ததுகடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த வலதுசாரி இந்து அடிப்படைவாத அரசியல்வாதிஅந்நாட்டை உலகின் கொத்தடிமை கூடமாக ஆக்கிக் கொண்டேவணிகம்-சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு தொகுப்பை வேகமாக முன்னெடுத்துள்ளார்.
Reliance Industries Limited இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி, 21 பில்லியன் டாலர் நிகர சொத்துக்களுடன்இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார்இந்தியாவில் சுமார் 60சதவீத மக்கள்அல்லது 750 மில்லியன் மக்கள்நாளொன்றுக்கு டாலருக்கும் குறைந்த வருவாயில் வாழ்கின்றனர்.
ரஷ்யாவின் பில்லியனர்கள் எண்ணிக்கை கணிசமான அளவில் 111இல் இருந்து 88க்கு வீழ்ச்சி அடைந்து,ஒட்டுமொத்த நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு இறங்கியது.கூர்மையான எண்ணெய் விலை வீழ்ச்சியாலும்அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவினால் திணிக்கப்பட்ட முடமாக்கும் பொருளாதார தடைகளாலும்அந்நாட்டை சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடியில் இதுவும் ஒரு விளைவாகும்இத்தகைய தடைகளின் பிரதான நோக்கங்களில் ஒன்றுதங்களின் செல்வ வளத்தின் மீதான தாக்கங்களைக் குறித்து பீதியுற்றுள்ள ரஷ்ய செல்வந்த தட்டுக்களின் ஒரு பிரிவை விளாடிமீர் புட்டின் அரசாங்கத்திற்கு எதிராக திருப்பி விட ஊக்குவிப்பதாகும்.
நம்பகமான பரந்தளவில் இதற்கு இணையானவையும் வெளிப்பட்டு வருகின்றனசான்றாக ஐரோப்பிய வங்கிகளில் கிரீஸ் கொண்டிருக்கும் கடன் சுமார் 90 பில்லியன் டாலர் ஆகும்உலக பில்லியனர்களின் செல்வவளம் இந்த தொகையை விட 77 மடங்கு அதிகமாகும்.
அமெரிக்காவில்டெட்ராய்ட் நகரத்தின் கடன் 6.9 பில்லியன் டாலராகும்அல்லது உலக பில்லியனர்களின் மொத்த செல்வ வளத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காகும்.
கிரீஸூம் சரி டெட்ராய்டும் சரி இரண்டுமே வங்கிகளால் கட்டளையிடப்பட்டஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தால் ஆமோதிக்கப்பட்ட ஒரு பேரழிவுகரமான மறுசீரமைப்பிற்குள் இழுக்கப்பட்டுள்ளதோடு,அதனால் பாரிய வறுமையும் வாழ்க்கை தரங்களின் சீரழிவும் விளைந்துள்ளன.
ஒட்டுமொத்தமாக Forbes பட்டியல் உலக முதலாளித்துவத்தின் ஒட்டுண்ணித்தனமான குணாம்சத்திற்கு வெளிப்பாட்டை வழங்குகிறதுஅவர்களின் செல்வ வளமானது—நிதிஉற்பத்திதொலைதொடர்பு என—பொருளாதாரத்தின் எந்தவொரு குறிப்பிட்ட துறையுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரிபெரும் பணக்காரர்களின் சொத்துக்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பங்கு சந்தைகளின் உயர்வுடன் பிணைந்துள்ளன.
அதுபோன்ற பெரும் தொகைகள் மிக சிலரின் கரங்களில் திரண்டிருப்பது வெறுமனே வார்த்தையளவில் பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் விளைவுபொருள் அல்லமாறாக அது 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் தீவிரமாக்கப்பட்ட திட்டமிட்ட அரசாங்க கொள்கைகளின் விளைபொருளாகும்அந்த சமயத்திலேயேஉலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டதைப் போலஇந்த நெருக்கடியின் "வடிவில் அமெரிக்க மற்றும் உலகளாவிய பொருளாதாரத்திலும்மற்றும் அதை அடித்தளமாக கொண்டுள்ள சமூக மற்றும் வர்க்க உறவுகளிலும் ஓர் அடிப்படை மறுகட்டமைப்பு நடந்து கொண்டிருக்கிறது.”
2009இல் இருந்துவங்கி பிணையெடுப்புகள்பூஜ்ஜியத்திற்கு அண்மித்த வட்டிவிகிதங்கள் மற்றும் "பணம் அச்சடித்தல்ஆகிய கொள்கைகள் முழுமையாக நடைமுறைபடுத்தப்பட்ட போதுஉலக பில்லியனர்களின் செல்வ வளம் சுமார் மூன்று மடங்கு உயர்ந்துள்ளனஅமெரிக்காவில் ஒபாமா நிர்வாகத்தின் தலைமையில்,ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது ஓர் இரக்கமற்ற தாக்குதலை நடத்திக் கொண்டேநிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை பாய்ச்சி உள்ளது.
இத்தகைய நிகழ்ச்சிப்போக்கின் உலகந்தழுவிய குணாம்சம்நிலவும் பொருளாதார ஒழுங்கமைப்பின் இயல்பு தான் பிரச்சினையே என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறதுசமூக சமத்துவமின்மையின் அசாதாரண வளர்ச்சி மற்றும் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு செல்வ வளத்தை பாரியளவில் கைமாற்றுவது ஆகியவை ஒரு திவாலான மற்றும் நோய்பீடித்த அமைப்புமுறையான முதலாளித்துவத்தின் வெளிப்பாடுகளாகும்இந்த அமைப்புமுறையின் சீரழிவும் நெருக்கடியும் அதை அழிப்பதற்கான வழிவகைகளை அதுவே உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன —அதாவது சமூக மோதல் மற்றும் உலகந்தழுவிய வர்க்க போராட்டத்தின் மேலெழுச்சியை உருவாக்கி வருகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியமும், சிரியா மற்றும் ஈராக்கில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் எழுச்சியும்

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மக்கள் எதிர்ப்பின் முன்னால் சிரியா மீது குண்டுவீசும் அதன் திட்டங்களிலிருந்து ஒபாமா நிர்வாகம் பின்வாங்கி வெறும் ஓராண்டுக்குப் பின்னர்மத்திய கிழக்கில் ஒரு பகிரங்கமான ஏகாதிபத்திய தாக்குதலை தொடங்க ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS)சௌகரியமான புதிய போலிக்காரணமாக எழுந்துள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ISISஐ இலக்கில் வைப்பதற்காக என்று கூறப்படும் ஒரு முடிவில்லா யுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா புதனன்றுதேசியளவிலான-தொலைக்காட்சி உரையில்அறிவிக்க இருக்கிறார்அந்நிர்வாகம் அந்நாட்டிற்குள் துருப்புகளின் மறுஅறிமுகம் உள்ளடங்கலாக ஈராக்கின் மீது வான் தாக்குதல்களை ஏற்கனவே தொடங்கிவிட்டதுஇது பாரியளவில் விரிவாக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு சிரியாவிற்கு எதிராக போர் அறிவிப்பதற்கு காரணமாககூத்தா நகர் மீது இரசாயன ஆயுதங்களின் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டதுஇத்தகைய தாக்குதல்களுக்கு அசாத் அரசாங்கம் தான் பொறுப்பு என்ற ஏகாதிபத்திய சக்திகளின் வாதங்கள்பின்னர் ஒரு திட்டமிட்ட மோசடியாகஅம்பலப்படுத்தப்பட்டனஅதில் இதழாளர் செமோர் ஹெர்ஸின் ஓர் அறிக்கையும் உள்ளடங்கும்,அதைத்தொடர்ந்து வந்த காலங்களில் இந்த அறிக்கை அமெரிக்க ஊடகங்களால் புதைக்கப்பட்டுவிட்டது.
மத்திய கிழக்கில் விரிவாக்கப்பட்ட யுத்த உந்துதலின் இலக்காக இப்போதைக்கு வெளிவேஷத்திற்கு ISISஇருக்கின்ற போதினும்திரைக்குப் பின்னால் அமெரிக்க ஆளும் வர்க்கம் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்குபுத்துயிரூட்டவும் மற்றும் அசாத் அரசாங்கத்திற்கு எதிரான— அது எதை தொடங்கியதோ அதை முடித்து வைக்கும்— நடவடிக்கைகளைத் தயாரிக்கவும் அந்த நெருக்கடியைப் பயன்படுத்த முனைந்து வருகிறதுஅசாத் அரசாங்கம் காலங்காலமாக ஈரான் மற்றும் ரஷ்யா இரண்டினதும் நெருங்கிய பங்காளியாக இருந்து வருகிறதுபிந்தையது (அதாவது ரஷ்யாஉக்ரேனில் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் ஆதரிக்கப்பட்ட வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியால் தொடங்கிய தீவிரமடைந்துவரும் யுத்த உந்துதலில் ஓர் இலக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா இன்னமும் அசாத்திற்கு எதிராக சதி செய்து வருவதைச் சிந்தனை கூடங்கள் மற்றும் வெளியுறவு கொள்கை இதழ்களில் வெளியாகும் பல்வேறு கட்டுரைகளிலும் காண முடியும்முன்னாள் சிஐஏ பகுப்பாய்வாளரும்ஜனநாயக கட்சியின் முன்னணி மூலோபாயவாதியும்புரூக்கிங்ஸ் பயிலகத்தின் ஒரு மூத்த ஆய்வாளருமான கென்னெத் எம்பொல்லாக் எழுதிய ஒரு கட்டுரை (அசாத்தைத் தோற்கடிப்பதற்கு ஓர் இராணுவம்Foreign Affairsஇன் மிக சமீபத்திய பதிப்பில் வெளியானதுபொல்லாக், ISISஐ தோற்கடிக்கக்கூடிய மற்றும் அசாத் ஆட்சியைக் கவிழ்க்கக்கூடிய ஓர் இராணுவத்தை உருவாக்கி சிரியாவில் உள்ள தற்போதைய எதிர்ப்பு சக்திகளுக்குப் பயிற்சியளிக்கவும் மற்றும் பாரியளவில் ஆயுதயுதவிகள் வழங்கவும்,மற்றும் ஓர் அமெரிக்க-ஆதரவிலான இராணுவ சர்வாதிகாரத்தை அங்கே ஸ்தாபிக்கவும் அமெரிக்காவிற்கு அழைப்புவிடுக்கிறார்.
இந்த தருவாயில், ISISஆல் அமெரிக்க இதழாளர்கள் ஜேம்ஸ் ஃபோலே மற்றும் ஸ்டீவன் சோட்லோஃப் காட்டுமிராண்டித்தனமாக கழுத்தறுத்து கொல்லப்பட்டமைகுறைந்தபட்சம்அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சரியான நேரத்தில் கிடைத்த போலிக்காரணமாக இருக்கின்றன.

ISISயும்சிரியாவிற்கு எதிரான நடவடிக்கையும்
அமெரிக்க அரசாங்கமும் பிரதான ஊடகங்களும் வலியுறுத்துவதைப் போல, ISIS ஒரு விளங்கமுடியாத "தீய"சக்தியோ அல்லது ஒரு "புற்றுநோயோஅல்லசிரியாவிலும் ஈராக்கிலும் ISIS மற்றும் ஏனைய இஸ்லாமிய தீவிரவாத குழுக்களின் வெற்றி என்பது முற்றிலும் மத்திய கிழக்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கையின் ஒரு விளைபொருளே ஆகும்.
அல் கொய்தா மற்றும் ஒசாமா பின்லேடன் உடனான அதன் தொடர்புகள் உட்பட, ISIS உடனான அமெரிக்க அரசாங்கத்தின் தொடர்புகளும் ஒரு பாரம்பரிய வடிவத்தைப் பின்தொடர்கிறதுஅல் கொய்தாவைப் போலவே, ISISயும் அமெரிக்க தலையீட்டின் ஒரு விளைபொருளாகும்முந்தையது 1980களில் சோவியத் ஒன்றியத்துடனான பினாமி யுத்தத்தின் பாகமாக முதலில் ஆப்கானிஸ்தானிலும்பிந்தையது சிரியா மற்றும் ஈராக்கிலும் உருவாக்கப்பட்டதுமத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா மீது கட்டுப்பாட்டை பெறும் அதன் முயற்சியில்அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிகவும் பிற்போக்குத்தனமான,பின்தங்கிய உட்கூறுகளின் மீது தங்கியிருந்துள்ளது. (பார்க்கவும்ISIS atrocities and US imperialism)
அமெரிக்காபிரதான ஐரோப்பிய சக்திகள்சவூதி அரேபியா மற்றும் கட்டார் போன்ற அவற்றின் பிராந்திய பங்காளிகள் அனைத்துமே, ISIS மற்றும் ஏனைய தீவிரவாத அமைப்புகள் பெரிதும் ஆதாயமடையும் வகையில்,சிரியாவில் அசாத்-விரோத குழுக்களுக்குக் கணிசமான இராணுவஅரசியல் மற்றும் நிதி உதவிகளை வழங்கியுள்ளன.
ஜோர்ஜ் டபிள்யுபுஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் இரண்டினது கீழும்அமெரிக்க அரசாங்கம் அசாத் ஆட்சியைத் தூக்கியெறிய நோக்கம் கொண்ட ஒரு பொதுவான கொள்கையின் பாகமாகசிரிய எதிர்ப்பு படைகளுக்குப் பணத்தைப் பாய்ச்சி இருந்தனஇவ்விதத்தில் சிரியாவை நிலைகுலைக்கும் மூலோபாயத்தின் ஒரு முக்கிய விளைவாக, ISIS போன்ற சுன்னி தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜாங்கத்துறை கசிவுகள்அமெரிக்க அரசுத்துறை இலண்டனில் நாடுகடந்து வாழும் சிரியர்களால் அமைக்கப்பட்ட நீதி மற்றும் வளர்ச்சிக்கான இயக்கம் (MJD)எனும் ஒரு இஸ்லாமிய குழுவிற்கு, 2006க்கும் மற்றும் 2010க்கும் இடையே, 6 மில்லியன் டாலர் வழங்கியதை அம்பலப்படுத்தியதுஅந்த பணம், MJDஇன் செயற்கைக்கோள் செய்தி ஒளிபரப்பானபராடா தொலைக்காட்சிக்கு (Barada TV) நிதியளிக்கவும்அத்துடன் சிரியாவிற்குள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் MJDஆல் பயன்படுத்தப்பட்டது.
டிசம்பர் 2006இல் வெளியான ஒரு இராஜாங்க கசிவுஅசாத் ஆட்சியை ஆத்திரமூட்டும் மற்றும் சிரியாவை நிலைகுலைக்கும் அரசுத்துறையின் திட்டங்களை அம்பலப்படுத்தியதுஅதில் முன்னாள் சிரிய துணை ஜனாதிபதி அப்துல் ஹலீம் கஹாத்தம் மற்றும் அவரது தேசிய மீட்சிப்படையை (National Salvation Front)ஊக்குவிப்பதும் உள்ளடங்கி இருந்தது.
2011இல் சிரியாவில் விரோத நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்துசுதந்திர சிரிய இராணுவத்தில்(Free Syrian Army - FSA) இருந்த மிதவாதிகள் என்றழைக்கப்பட்டவர்களுக்கு உயிருக்கு சேதம் விளைவிக்காத உதவி வழங்குகிறோம் என்ற போர்வையில் சிஐஏ ஒரு முக்கிய துப்பாக்கி சுடும் பயிற்சியை மற்றும் இராணுவ பயிற்சி நடவடிக்கையைத் தொடங்கியது.
அந்த இரகசிய சிஐஏ நடவடிக்கையில் சவூதி அரேபியாகட்டார்மற்றும் துருக்கி ஆகியவையும் சம்பந்தப்பட்டிருந்தனஅவை விலைக்கு வாங்கிய ஆயுதங்களை வடக்கு சிரியாவிற்குள் துருக்கி எல்லை வழியாக கொண்டு சென்றதுடன்சிரிய முஸ்லீம் சகோதரத்துவம் உட்பட இடைத்தரகர்கள் மூலமாக வினியோகித்தனலிபியாகுரேஷியா மற்றும் சூடானிலிருந்து சிரியாவிற்குள் ஆயுத தொகுப்புகள் கடத்தப்பட்டு வந்தன என்பது அறியப்பட்ட ஒன்றேயாகும்.
CIAஇன் இந்த தலையீடு சிரியாவிற்குள் தானியங்கி துப்பாக்கிகள்ராக்கெட் மூலமாக ஏவப்படும் வெடிகுண்டுகள் மற்றும் மில்லியன் கணக்கில் துப்பாக்கி தோட்டாக்கள்அத்துடன் டாங்கி தகர்ப்பு மற்றும் விமான தகர்ப்பு ஏவுகணைகள் ஆகியவற்றை வெள்ளமென கொண்டு சென்றது.
நியூ யோர்க் டைம்ஸிற்கு எழுதிய சி.ஜேசீவெர்ஸின் கருத்துப்படிசவூதி அரேபியா மற்றும் கட்டாரிலிருந்து ஜோர்டான் மற்றும் துருக்கி வரையில் நூற்றுக் கணக்கான இராணுவ ஆயுத விமானங்கள் நவம்பர் 2012மற்றும் மார்ச் 2013க்கு இடையே சிரியாவிற்குள் குறைந்தபட்சம் 3,500 டன் இராணுவ உபகரணங்களைக் கொண்டு சென்றிருந்தனஇவை CIAஆல் அமைக்கப்பட்ட வலையமைப்புகள் மூலமாக வினியோகிக்கப்பட்டன மற்றும் மேற்பார்வை செய்யப்பட்டன.
செமோர் ஹெர்ஸ்ஏப்ரல் 2014இல் புத்தகங்களின் இலண்டன் மீளாய்வு கட்டுரையில்லிபியாவிலிருந்து சிரியாவிற்குள் போராளிகள் மற்றும் ஆயுதங்களை அனுப்புவதற்கு CIAஆல் நடத்தப்பட்ட "எலிப்பாதை" (rat line) என்ற நடவடிக்கையை விவரித்திருந்தார்.
ஹெர்ஸின் கருத்துப்படிஅந்த நடவடிக்கை சிஐஏ இயக்குனர் டேவிட் பெட்ரீயஸ்மற்றும் பெங்காசி தூதரகத்தால் மேற்பார்வையிடப்பட்டதுசெப்டம்பர் 11, 2012இல் அத்தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆயுத பரிவர்த்தனைக்கு மூடிமறைப்பை வழங்க பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஹெர்ஸின் கருத்துப்படிசிஐஏ நடவடிக்கைக்கு நிதி கிடைப்பதற்கு, MI6இன் பிரிட்டிஷ் உளவுத்துறை முகவர்களால் உத்தியோகபூர்வமாக மேற்பார்வையிடப்பட்டதுஆயுதங்கள் வாங்குவதற்காக மற்றும் சிரியாவிற்குள் ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்காக முன்னணி நிறுவனங்களால் ஓய்வுபெற்ற அமெரிக்க சிப்பாய்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்பெங்காசி தூதரக தாக்குதலுக்குப் பின்னர் சிஐஏ அந்த நடவடிக்கையை நிறுத்திவிட்டதுஆனால் ஆயுதங்களும் போராளிகளும் சிரியாவிற்குள் செல்வது தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.
FSAஇன் போராளிகளுக்காக என்று கூறப்பட்ட போதினும்அத்தகைய ஆயுதங்களில் ஒரு கணிசமான எண்ணிக்கை ISISஇன் மற்றும் அல் நுஸ்ரா முன்னணிசிரியாவில் உள்ள அல் கொய்தாவின் கிளை அமைப்பு உட்பட இதர இஸ்லாமிக் அடிப்படைவாத குழுக்களின் கைகளுக்குப் போய் சேர்ந்தன.
நியூ யோர்க் டைம்ஸில் எழுதிய டேவிட் சாங்கெரின் கருத்துப்படி, 2012 முழுவதும் சிரியாவிற்குள் கடத்தப்பட்டு வந்த பெரும்பாலான ஆயுதங்கள் "கடுமையான போக்கெடுக்கும் இஸ்லாமிய ஜிஹாதிஸ்டுகளின்கரங்களுக்கு போயிருப்பதை அமெரிக்க அதிகாரிகளும் மற்றும் மத்திய கிழக்கு இராஜாங்க அதிகாரிகளும் அறிவார்கள்இருந்தபோதினும்சிரியாவிற்குள் ஆயுதங்களை வெள்ளமென பாய்ச்சும் மற்றும் எதிர்ப்பு போராளிகளுக்கு பயிற்சியளிக்கும் திட்டம் தொடர்ந்தது.
பெப்ரவரி 2013இல் குரேஷியாவிலிருந்து ஜோர்டான் வழியாக சிரியாவிற்குள் கடத்தப்பட்ட ஆயுதங்களில் பெருந்தொகுதி இறுதியாக ISIS போராளிகள் மற்றும் அஹ்ரார் அல்-ஷாம் (Ahrar al-Sham) உட்பட இதர குழுக்களின் கைகளில் போய் சேர்ந்தது. ISIS போராளிகள் அன்பார் மாகாணத்தில் நடத்திய அவர்களின் தாக்குதலின் போது ஈராக்கிய இராணுவத்திற்கு எதிராக ஒரு குரேஷிய M79 ஒசா (M79 Osa) டாங்கி-தகர்ப்பு ஆயுதத்தைப் பயன்படுத்தி இருந்தார்கள். ISIS போராளிகள் ஈராக்கில் ஒரு குரேஷிய RBG-6குண்டுவீசியைக் கொண்டு சண்டையிட்டதும் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
ஜோர்டான் மற்றும் துருக்கியை ஒட்டிய சிரிய எல்லையோரத்தில்சிஐஏ மற்றும் அமெரிக்க இராணுவம் நூற்றுக் கணக்கான சிரிய எதிர்ப்பாளர்களுக்கு இராணுவ பயிற்சியளிப்பதிலும் ஈடுபட்டுள்ளதுகடந்த ஆண்டுவெளியிட்ட ஒரு கட்டுரையில்நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகையில்ஜோர்டானில் CIAஆல் பயிற்சியளிக்கப்பட்ட 50-நபர் குழு செப்டம் பர் 2013இல் சிரியாவிற்கு அனுப்பப்பட்டதாக அறிவித்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் எதை வெளிப்படையாக ஆதரித்ததோ அந்த FSAக்கும்மற்றும் ISIS போன்ற குழுக்களுக்கும் இடையே ஒரு கடினப் போக்கை எடுப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சி,முற்றிலும் ஓர் அரசியல் மோசடியாகும்.
சிரிய மோதல் போக்கின் போதுஅக்-கொய்தா கிளைஅமைப்புடன் அவர்களின் பற்றுறுதியைச் சூளுரைத்து ஒட்டுமொத்த படையணிகளுடன்ஆயிரக் கணக்கான போராளிகள் FSAஇல் இருந்து அல்-நுஸ்ராவிற்குள் மாறினார்கள்அல்-நுஸ்ரா பிரிவுகளும் மற்றும் FSA படையணிகளும் அசாத்தின் படைகளுக்கு எதிராக வழக்கமாக கூட்டு தாக்குதல்கள் நடத்தியுள்ளன.
கடந்த ஆண்டின் இறுதியில் சுதந்திர சிரிய இராணுவத்தின் கிழக்குப் படைப்பிரிவின் உயர் இராணுவ கவுன்சிலின் ஒரு தளபதிசதாம் அல்-ஜமால், ISIS உடனான அவரது பற்றுறுதியைச் சூளுரைத்தார்இந்த ஆண்டின் தொடக்கத்தில்அல்-நுஸ்ராவும் ISISஉம் சிரிய இராணுவத்தின் ஒரு தாக்குதலில் இருந்து யாப்ரௌத் நகரத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒன்றாக சண்டையிட்டனஆனால் அது தோல்வியடைந்தது.

பாக்தாதி மற்றும் சிஷானியின் அமெரிக்க தொடர்புகள்
அல் கொய்தாவைப் போலவேஅந்த அமைப்பில் இணைந்திருந்தவர்களில் பலர் ஓர் இரகசிய கடந்தகாலத்தைக் கொண்டிருந்தார்கள்அமெரிக்கா மற்றும் அதன் பிரதான பங்காளிகளுடனான தொடர்புகளும் அதில் உள்ளடங்கும்.
2010இல் தலைமை ஏற்ற தற்போதைய ISISஇன் தலைவர் அபு பக்ர் அல் பாக்தாதி குறித்த பல ஊடக செய்திகள்அவர் முன்னர் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதை அம்பலப்படுத்தி உள்ளன.
பாக்தாதி வரலாறின் இந்த அத்தியாயம் பிரதான ஊடகங்களில் பெரிதும் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது,அவை பாக்தாதியை ஒரு குறிப்பிடத்தக்க கடந்தகாலம் இல்லாத ஒரு வஞ்சக நபராக காட்ட விரும்புகின்றன.ஆனால் அநேகமாக பாக்தாதியின் சிறைக்காலம்அந்த அமைப்பின் தலைவராக அவர் வேகமாக உயர்வதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருக்கக்கூடும்.
பாதுகாப்புத்துறையை பொறுத்த வரையில்பெப்ரவரி 2004இல் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பாக்தாதி டிசம்பர் 2004இல் ஒரு நிபந்தனையற்ற விடுதலை அளிக்கப்படும் வரையில் இழிபெயர்பெற்ற புக்கா முகாமில் ஒரு சாமானிய கைதியாக வைக்கப்பட்டிருந்தார்எவ்வாறிருப்பினும்,புக்கா முகாமின் முன்னாள் தளபதி கேர்னல் கென்னத் கிங் The Daily Beastக்கு கூறுகையில் பாக்தாதி 2009வரையில் அமெரிக்க சிறைக்காவலில் இருந்து விடுவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
ISISஇன் முன்னோடி அமைப்பான ஈராக்கிய இஸ்லாமிக் அரசின் தலைவராகபாக்தாதி மே 2010இல் பெயரிடப்பட்டார்இதுஅவ்வமைப்பின் முந்தைய தலைவர்கள் அபு ஒமர் அல்-பாக்தாதி மற்றும் அபு அயூப் அல்-மஸ்ரி இருவரும் திக்ரிட்டிற்கு அருகில் அமெரிக்க மற்றும் ஈராக்கிய படைகளால் ஒரு கூட்டு இராணுவ வேட்டையில் கொல்லப்பட்டு நீண்டகாலத்திற்குப் பின்னர் நடந்ததல்ல.
அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளுடன் முன்னர் தொடர்பு கொண்டிருந்த மற்றொரு முக்கிய பிரமுகர்,ஜோர்ஜியாவிலிருந்து வந்த இனரீதியில் செச்செனியரான தார்கான் பாட்ராஷ்விலி (Tarkhan Batirashvili)அல்லது அபு ஒமர் அல்-சிஷானி என்று அறியப்படுபவர் ஆவார்இவர் 2013இன் கோடையில் சிரியாவின் வடக்கு பகுதியில் ISISஇன் தளபதி ஆனார்.
வெள்ளியன்று NPR உடனான ஒரு நேர்காணலில்மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் கோர்டன் ஹானின் கருத்துப்படி, “கிளர்ச்சி ஒடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயங்களில் ஜோர்ஜிய இராணுவத்தைத் தயாரிப்பு செய்ய அமெரிக்க பயிற்சி மற்றும் ஆயுதமேந்த செய்யும் திட்டத்தின் கீழ்சிஷானி "ஜோர்ஜிய இராணுவத்தில் சேர்ந்துபல்வேறு ஆயுதங்களைக் கையாளும் வல்லுனராக பயிற்சியளிக்கப்பட்டார்."
ஜோர்ஜிய இராணுவத்திலிருந்து வெளியேறிய பின்னர்சிஷானி சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்ததற்காக கைது செய்யப்பட்டுமூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தார்பின்னர் சிரியாவில் சண்டையிட்டு வந்த ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவில் இணைய துருக்கிக்குப் பயணித்தார்.
செச்சென் தேசியவாத மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுடன் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் சம்பந்தப்பட்டிருக்கும் விவகாரம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. “காகசஸ் எமிரேட்டின் ஜிஹாதி[இஸ்லாமிய அடிப்படைவாதஇயல்பை...வாஷிங்டனில் உள்ள பலர்...குறைத்துக் காட்டுகிறார்கள் அல்லது மறுக்க முயல்கிறார்கள்," காகசஸ் எமிரேட் செசென்யாவில் இருக்கும் ஒரு பிரிவினைவாத அமைப்பாகும். “செச்சென் விளைவை மற்றும் காகசஸ் எமிரேட்டைஎன்றாவதுஒருவேளைரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா அவர்களை ஆதரிக்கக்கூடுமென்ற நம்பிக்கையில்அது யதார்த்தத்தில் இருப்பதைக் காட்டிலும் மிகவும் மிதமானதாக காட்ட முயலும் ஒரு குறிப்பிட்ட உட்கூறும் வாஷிங்டனுக்குள் இருக்கிறது."


2013இல் பாஸ்டன் மாரதான் குண்டுவெடிப்பில் சந்தேகத்திற்குரியவர்களில் ஒருவரான தாமர்லன் ஜார்னெவ் இனரீதியில் செச்சென் ஆவார் என்பதும்அவரும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளோடு தொடர்பு வைத்திருந்தார் என்பதை நினைவுகூர்வதும் மதிப்புடையதாக இருக்கிறதுஜார்னெவ்வின் தாயாரும்அவர் தரப்பு வழக்கறிஞர்களும்செச்சென்யாவில் இஸ்லாமிய படைகளின் தலைமையில் ரஷ்ய-விரோத நடவடிக்கைகளின் பாகமாக அவரைப் பயன்படுத்துவதற்காக ஜார்னெவ்வை நியமிக்க FBI முனைந்தது என்று கூறுகிறார்கள்.

அமெரிக்காவுக்கும் ISISஇன் தலைவர்களுக்கும் இடையே என்னமாதிரியான குறிப்பிட்ட தொடர்புகள் இருந்தாலும்அந்த அமைப்பும் மற்றும் அதன் தொடர்ச்சியான குற்றங்களும் உயர்வதற்கான பொறுப்பு,அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் காலடியில் தான் சுருண்டுவந்து விழுகிறதுஅசாத்தை பதவியிலிருந்து இறக்கும் அவர்களின் உந்துதலில்ஏகாதிபத்திய சக்திகள் சுன்னி அடிப்படைவாத உட்கூறுகள் ஆதாயமடையும் வகையில் ஆயுதங்கள்பணம்மற்றும் பயிற்சிகளை வழங்கி சிரியாவை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்க செயலூக்கத்துடன் வேலை செய்துள்ளனஅந்த நிகழ்வுபோக்கினூடாக அப்பிராந்தியத்தில் இராணுவ தலையீடுகளை இன்னும் மேற்கொண்டும் தீவிரப்படுத்த ஒரு சௌகரியமான போலிக்காரணத்தை உருவாக்கி வருகின்றன.