வெள்ளி, 26 ஏப்ரல், 2019

உருளைக்கிழங்கில் இரட்டை படுக்கை கொண்ட தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவில் 2012-ம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டு தற்போது அது இரட்டை படுக்கை கொண்ட சிறிய தங்கும் விடுதியாக அமைக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்:

அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தில் தலைநகர் போய்சில் உருளைக்கிழங்கு பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக, கடந்த 2012-ம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டது.

28 அடி நீளம் மற்றும் 12 அடி அகலத்தில் 6 டன் எடையுடன் விளைந்த இந்த உருளைக் கிழங்கு உலகிலேயே மிகப் பெரிய உருளைக்கிழங்காக அறியப்பட்டது. அதன் பின்னர் மக்களின் பார்வைக்காக இந்த உருளைக்கிழங்கு ராட்சத லாரி மூலம் அமெரிக்கா முழுவதும் சுற்றிவந்தது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த சுற்றுப்பயணம் முடிந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த உருளைக் கிழங்கு இரட்டை படுக்கை கொண்ட சிறிய தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கை குடைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதியில், சொகுசு இருக்கைகள், படுக்கை மற்றும் கழிவறை என அனைத்து வசதிகளும் உள்ளன. இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

இந்த விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு 200 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.14 ஆயிரம்) வசூலிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் மே மாதம் முழுவதும் இந்த விடுதி முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  #PotatoHouse #PotatoAirbnb

ரஷியாவில் மிதக்கும் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி சோதனை வெற்றி

ரஷியாவில் மிதக்கும் அணுமின் நிலையத்தில் முதல் முறையாக மின் உற்பத்தி சோதனை நடந்தி, வெற்றிகரமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
மாஸ்கோ:

ரஷியாவை சேர்ந்த தனியார் அணுசக்தி நிறுவனம் ஒன்று, பெரும் பொருட்செலவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி உள்ளது. பிரமாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில் நேற்று முன்தினம் முதல் முறையாக மின் உற்பத்தி சோதனை நடந்தது. இதில் வெற்றிகரமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்திருப்பது, மிகப்பெரிய சாதனை என அந்த நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு, மின்திறன் படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது முழு உற்பத்தி திறனை பெற்றுள்ள இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Russia #WorldFirstFloating #NuclearPowerPlant 

செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம்... - நாசா

செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பூமியில் ஏற்படுவதைப் போலவே செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்காவின் நாசா அனுப்பியுள்ள இன்சைட் ஆய்வு வாகனம் மூலம் தெரியவந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா அனுப்பியுள்ள இன்சைட் ஆய்வு வாகனம் செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை ஆராய்ந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்சைட் வாகனம் செவ்வாய் கிரகத்தில் உள்ள காற்று மற்றும் செவ்வாய் கிரகம் எப்படி உருவானது உள்ளிட்ட தகவல்களை திரட்டி அனுப்பி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதை ஆவணப்படுத்துவது வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும். இதனை நாசாவின் அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்

ஐ.எஸ் அமைப்பு இதுவரை நடத்தியுள்ள தாக்குதல்கள்!

உலக நாடுகளையே அச்சுறுத்தும் ஐ.எஸ். எனப்படும்  தீவிரவாத இயக்கம் சிரியா, ஈராக், ஆபிரிக்கா, மத்திய கிழக்காசியா, தெற்காசியா போன்ற பகுதிகளில் இயங்கி வருகிறது. 

ஈரான் மற்றும் சிரியா பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பது ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பின் கொள்கை.ஸூன்னி முஸ்லிம் கிளர்ச்சியாளர்களான ஐ.எஸ். இயக்கம் ஈராக் படையினரை வெற்றிகொண்டு ஈராக் மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகள் சிலவற்றை முழுமையாகக் கைப்பற்றி அதனை இஸ்லாமிய கலீபா ஆட்சிக்குட்பட்ட ஒரு தனிநாடாக ஏனைய நாடுகளின் ஒப்புதலின்றி தாமாகவே அறிவித்திருந்தது.அத்துடன், தனது பெயரையும் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) எனவும் மாற்றியமைத்துக்கொண்டது.இதனையடுத்து, உலகம் முழுவதும் அதிகளவில் பேசப்­படும் இயக்கமாக ஐ.எஸ். மாற்றமடைந்துவிட்டது.

இதுவரை ஐ.எஸ் அமைப்பு நடத்தியுள்ள தாக்குதல்கள்!


2015ஆம் ஆண்டு ஏமன் நாட்டின் இரண்டு மசூதிகள் மீது ஐ.எஸ் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர்.


அதே ஆண்டு பிரான்ஸில், சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் மீதும்  ஐ.எஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது. இதில் 11 பேர் பலியாகினர்.


இதை தொடர்ந்து, எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள் 30 பேரை ஐ.எஸ்.படுகொலை செய்து தனது கொலை வெறியை உலகிற்கு காட்டியது.


இதன் பின்னர், சிரியாவின் கோபென் நகர் மீதான ஐ.எஸ் நடத்திய தாக்குதலில் 250 பேர் உயிரிழந்தனர். 


ரஷ்ய பயணிகள் விமானம் மீது ஐ.எஸ் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் 224 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.


2016ஆம் ஆண்டு பெல்ஜியம் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தியதில் 30 பேர் உயிரிழந்தனர்.


அதே ஆண்டு ஈராக்கில் ஐ.எஸ் நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் 200 பேர் உயிரிழந்தனர். 


2019 ஆம் ஆண்டு இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 250 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
 


ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்கு அடியில் தேங்கிய பிளாஸ்டிக் அகற்றம்!

ராமேஸ்வரத்தில் கடலுக்கு அடியில் தேங்கிய 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை ஸ்கூபா டைவிங் மூலம் வனத்துறை அதிகாரிகள் அகற்றினர். 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே பாக் ஜலசந்தியில் கடலுக்கு அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் தேங்கியுள்ளன. இந்நிலையில் சர்வதேச பூமி தினத்தை கொண்டாடும் வகையில் கடலுக்கு அடியில் உள்ள குப்பைகளை அகற்ற வனத்துறையினர் திட்டமிட்டனர். 

இதற்காக வனத்துறையை சேர்ந்த 2 பெண் உட்பட 10 பேர் ஸ்கூபா நீச்சல் மூலம் கடலுக்கு அடியில் சென்று பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர். இந்த வித்தியாசமான முயற்சிக்கு பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வியாழன், 25 ஏப்ரல், 2019

பிணங்களின் மீதே அரசியல் செய்து பழகிவிட்ட ஒரு இந்திய பைத்தியகாரனின் வாக்குமூலம்

இலங்கை குண்டுவெடிப்பின் ரத்த ஈரம் காய்வதற்குள் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சாமி, “இலங்கையில் நடந்த தீவிரவாத நடவடிக்கை காரணமாக இப்போது  இந்தியாவில் பாஜக அரசுதான் வரவேண்டும். ஏனெனில் காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவானது. விரைவில் திக்விஜய் கொழும்பில் நடந்த தாக்குதலுக்கு இந்து தீவிரவாதமே காரணம் என அறிவிப்பார்” என டிவிட்டரில் கருத்திட்டார்.

இந்த கருத்துகளுக்கு பல எதிர்ப்புக்கள் வலுத்தன.

இலங்கை மக்களின் கண்டனத்துக்கு பதிலளித்திருக்கும் பல இந்தியர்கள், அவர்களின் துயரத்தில் பங்கெடுப்பதாக ஆதரவு தெரிவிக்கின்றனர்; பாஜக-வின் கீழ்த்தரமான சந்தர்ப்பவாதத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

வழிபாடும், அவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்!

சகிப்புதன்மைகளை வளர்த்து இயல்பு வாழ்க்கையை மீட்போம்..!

மதத்தளங்களை குறிவைத்துத் தாக்குவது கோழைத்தனமானது. கொடூரமானது. சமீபத்திய சம்பவங்களில் இருந்து  இலங்கை  தேசத்து மக்கள் மட்டுமல்ல. உலக தேசங்களும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை 

இன்றும் தன் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தியவர்கள் ஏற்படுத்திய அனர்த்தங்களினால் பல இஸ்லாமிய சமூகத்தவர்களுடைய  உள்ளங்களும் அதிகமாக காயப்பட்டிருக்கின்றது. மீளமுடியாத துன்பியல் சம்பவத்தின் குற்றவாளிகளா? என்ற கேள்விகளையும் மனிதம் நிறைந்தவர்கள் தாங்கி நிற்கின்றார்கள்.

'வன்மம் நிறைந்த கொடூரமான மனிதர்களுக்காக அந்த சமூகத்தினருடைய நம்பிக்கைகளையும், வழிபாடுகளும் தண்டனைகளுக்கு இலக்காகி விடக்கூடாது.'

இறந்த அப்பாவி ஆன்மாக்களின் சாந்திக்காகவும், மனித அவலங்களை கடந்த இயல்பு வாழ்க்கைக்காகவும் நாளை வெள்ளிக்கிழமை அவர்களுடைய தொழுகையும் பிராத்தனைகளாய் நிச்சயம் பள்ளிவாயல்களில் எதிரொலிக்கும். அவர்கள் அச்சுறுத்தல்கள் எதிர்கொள்ளா வண்ணம் அவர்களுடைய சூழலையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும். இது புரிந்துணர்வுகளையும், நம்பிக்கைகளையும் கட்டியெழுப்பும் காலம்.

பிற மதங்களையும், மனிதங்களை நேசிப்பவர்களும் பாதுகாப்புத்துறையுடன் இணைந்து ஆரோக்கியமான வழிபாட்டு சுதந்திரங்களை அனைத்து மதத்தவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். கிரகத்தில் வாழ தகுதியில்லாத நபர்களுடைய எதிர்வினைகளை அப்பாவிகள் மீதும், இயல்பான சமூக வாழ்வியல் மீதும் காயம் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்வோம். சகிப்புத்தன்மைகளை வளர்த்து மனிதம் காப்போம்

இறந்த அப்பாவிகளுக்காகவும், அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்காக பிராத்திக்கின்றேன். 'அந்த சிறு குழந்தைகள்' இறைவனின் தோட்டத்தில் பட்டாம்பூச்சிகளாய் சிறகடிப்பார்கள். விரைந்து தேசம் மீட்சி கொள்ள அமைதிக்காகவும், இயல்பு வாழ்க்கைக்காகவும் பிராத்திப்போம்.


கனத்த இதயத்துடன்....!
அமலதாஸ் எல்றோய்

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

இலங்கை அரசாங்க அவசர கால சட்டம் என்றால் என்ன? கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள்.

அவசர கால சட்டம் என்றால் என்ன? அவசர கால தடைச் சட்டம் என்றால் என்ன என்பதை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும், இல்லையென்றால் மிகப் பெரிய தண்டனைகளுக்கோ, துப்பாக்கிப் பிரயோகத்திற்கோ இலக்காக நேரிடும். இந்த செய்தி அனைவருக்குமான ஒரு எச்சரிக்கை!
President issues gazette declaring State of Emergency in Sri Lanka giving more powers to police and military

இலங்கை அரசாங்கத்தால் நேற்றில் இருந்து அடுத்து வரும் பத்து நாட்களுக்கு அவசர காலத் தடைச் சட்டம் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அவசர கால தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் காலத்தில் எங்கேயும் எதற்காகவும் சுடப்படலாம். இந்த அதிகாரத்தின் கீழ் முப்படையினரும் 24 மணி நேரமும் கடமையில் இருக்க வேண்டும். விடுமுறைகளை எடுக்க முடியாது.

இந்த சட்டத்தின் கீழ் நபரொருவர் எந்த நேரத்திலும் எவ்வித காரணமின்றியும் கைது செய்யப்படலாம். அத்துடன் சந்தேகத்தின் பேரில் எவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முடியும்.

இரண்டு பேருக்கு அதிகமாக பொது இடங்களில் (தேசிய பாதுகாப்புக்கு பங்கம் இல்லாத அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய இடங்களில்) கூடுதல், திட்டம் தீட்டுதல், அதிக ஒலி எழுப்புதல் உட்பட ஆயுதங்களை உடமையில் (முகச் சவரம் செய்யும் அலகு, ஊசி என்பனவற்யைும்) வைத்திருத்தல் பாரிய குற்றமாகும்.

அத்துடன் தீவிரவாதத்திற்கு ஒத்துழைத்தல், நிதிசேகரித்தல் உட்பட பல விடயங்கள் இதற்குள் அடங்கும்.

சாதாரண சிவில் கடமைகளுக்கு கூட பொலிஸாரின் கைகளில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அவசர கால தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர் ஒருவர் விசாரணைகள் எதுவும் இன்றி எவ்வளவு காலத்திற்கேனும் தடுத்துவைக்க முடியும்.

கைதுக்கு முன்னோ கைதுக்கு பின்னரோ விசாரணை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

கைது செய்யப்படும் போது யாராவது தப்பியோட முயன்றால் சுட்டுப்பிடிப்பதற்கும் அதிகாரம் உள்ளது. அதேவேளை கைது செய்யப்படும் நபர் தேவையெற்படின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதற்கும் உரிமை உண்டு.

விசாரணைக்காக புலனாய்வுப் பிரிவினரின் கைகளுக்கும் ஒப்படைப்பதற்கான சரத்துக்களும் உண்டு.

மேலும், அவசரகாலச்சட்டமானது, மக்களின் அல்லது வாகனங்களின் போக்குவரத்துக்களை தடை செய்யவும், பாதுகாப்பு பிரதேசங்களை உருவாக்கி, அங்கு வெளியிலிருந்து செல்பவர்களைத் தடுக்கவும் அனுமதி அளிக்கின்றது.

பாதுகாப்பு பிரிவினரின் கடமைக்குக் குந்தகம் விளைவிக்கும், குறிப்பிட்ட நபர்களை, குறிப்பிட்ட பகுதிக்கு வருவதற்கும், அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் வசிப்பதற்கும், தடைசெய்யும் அதிகாரத்தை வழங்குகின்றது.

மக்கள் வாழும் பகுதிகளில், உடனாடியான பாதுகாப்புப் பிரதேசத்தை உருவாக்கி, அவர்களைப் பாதுகாக்கவும் காவற்துறையினர்க்கு அதிகாரம் அளிக்கின்றது.

யாரையும் அவர்களின் வீடுகளில் வைத்துக் கைது செய்வதற்கு அனுமதி வழங்க உள்துறை அமைச்சரிற்கு அதிகாரம் வழங்குகின்றது.

நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பவர்கள் எனச் சந்தேகப்படும் யாரையும் கைது செய்து விசாரைண செய்ய முடியும்.

விழா மண்டபங்களையோ அல்லது திரையங்குகளையோ அல்லது கூட்டம் நடக்கும் இடங்களையோ, உடனடியாக மூடுவதற்கும் அங்குள்ளவர்களை வெளியேற்றுவதற்கும் அனுமதி அளிக்கின்றது.

ஒரு கூட்டமோ, அல்லது சந்திப்புகளோ, அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் எனச் சந்தேகிக்கப்பட்டால், அதனைத் தடை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தனியாரிடம் இருக்கும் ஆயுதங்களை, அனுமதி பெற்றிருந்தாலும் கூட, பறிமுதல் செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரப்போகும் மறு காலனிய காவலாதிக்கம். வாய்ப்புக்கள் வேறு. வரலாறு ஒன்றே!


இலங்கையில் நடைபெற்ற துன்பியல் சம்பவங்களின் பின்னணியில் ஏகாதிபத்திய சக்திகளுக்கும், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பிற்கும் ஒரு பரந்த, குற்றவியல் ஒத்துழைப்பு உண்டு. அவை கண்ணுக்கு புலப்படாத பிம்பங்கள். ஒரு வனப்பான சிறுதீவு அவர்களால் இலக்காக்கப்பட்டிருக்கின்றது. அப்பாவிகள் மதத்தின் பெயரால் நிகழ்ச்சி நிரல்களுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள்.

தூண்டப்பட்டிருக்கின்றார்கள்...

தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள்...

பிராந்திய நலன்சார்ந்த அரசியலின் புதிய உள்ளக அதி ஒத்துழைப்பு கொண்ட தூர தேச நாட்டை தள்ளி வைப்பதற்காக தூபம். இவை கொள்கை வகுப்பாளர்களுடைய அறியாமைகள் அல்ல!

இந்து சமுத்திர தேவைகளை தாங்கிய புதிய கலாச்சாரம். இனி இலங்கைக்கு அறிமுகப்படுத்துவார்கள்.

விரிவடையும் பதற்றங்கள் பிராந்தியத்தில் மேலைத்தேய தளங்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்கும்.

இரத்தக்களரியான தேசத்தில் சிதைந்து போன மனித உயிர்கள் குறித்த “மனிதாபிமான” பாசாங்கு கதைகளும் ஆராயப்பட வேண்டியவை.

தமது ஏகாதிபத்திய நலன்களைப் பின்பற்றுவதற்கும், வன்முறைகளை தூண்டவும், குழப்பவும் பயங்கரவாத அமைப்புக்களை தங்களின் பினாமிகளாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

மத்திய கிழக்கில் அவர்கள் செய்ததை மறவாதீர்கள்.

பயங்கரவாத வலையமைப்புகளுக்குப் பெருமளவு பொது நிதியை  வாரி இறைக்கும் அமைப்புக்களையும், வெளி உலக  பினாமி அரசாங்கங்களின் பின்னணிகளை ஆராய்ந்தால் சில திரைகள் விலகும்.

அரசியலுக்காகவோ, அதிகாரத்துக்காகவோ விசாரணைகள் முற்றிலும் அம்பலமாகாமல் முற்றுப்பெறுமாயின் காட்டுமிராண்டித்தன அச்சுறுத்தல்களாக பிராந்தியத்தில் தொடரும். அவை தென்னாசியாவில் ஒரு சிரியாவையோ, ஈராக்கையோ கொண்டு வரலாம்.


அமலதாஸ் எல்றோய்

பாசிச கட்சிகளை வளர்த்து விடப்போகும் இலங்கையின் புதிய சட்டங்கள்.

(பாசிச கட்சிகளை வளர்த்து விடப்போகும் இலங்கையின் புதிய சட்டங்கள்... மனிதம் நிறைந்த சுதந்திர வாழ்க்கைக்கு தடையில்லாமல் இருக்கும் வரையில்...)
கேள்விக்குள்ளாகும் கருத்துச்சுதந்திரங்கள். ஊடகவியலாளர்களின் எல்லைகள் ஏதுவரை

தமிழ் உறவுகளே நினைவேந்தல்கள் MAY 18  அடுத்த மாதம் ஏற்பாடுகள் பண்ணுகிறீர்களா?
தங்களது உறவுகளை நிறைவேந்தல் செய்பவர்களுக்கான சாவுமணி அடிக்கப்பட்டாயிற்று. - இலங்கையின் புதிய சட்டம்!

வெறுமனே தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் மற்றும் மாவீரர் நினைவு தினங்களின் ஞாபகார்த்த சம்பவங்கள் மட்டுமல்ல,
இது பொதுவாக இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பொதுவானது.
பொதுப்படையான...

தொழிலாள வர்க்க போராட்டங்களின் எழுச்சி

வேலைநிறுத்த அலைகளும்

விவசாயிகள் மற்றும் ஏழைகளின் போராட்டங்களும் 

அரசியல் எழுச்சி  போராட்டங்களும்

மாணவர்கள் போராட்டங்களும் 


பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதன் போக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ்-அரச வழிமுறைகள் தவிர்க்க முடியாத வகையில் சமூக, சயாதீன வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்தப்படும்.

அழகான, வனப்பான தேசத்தில் எதிர்கால தனிநபர் சுதந்திரங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வரை சட்டங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் மனிதர்களும் அவ்வாறே!

இப்படிக்கு
அன்புள்ள சுதந்திர சுற்றுலாவாசி
அமலதாஸ் எல்றோய்

இலங்கையில் 2019 வருடம் சபிக்கப்பட்டதா?

  • அரசியல் குழப்பங்கள்
  • பொருளாதார வீழ்ச்சிகள்
  • கடும் வரட்சி 
  • அதிக போக்குவரத்து விபத்துக்கள் 
  • போதைபொருள் கடத்தல்கள்
  • கொலைகள்
  • கொள்ளைகள்
  • மோசடிகளும், ஊழல்களும்
  • கொடூரமான குண்டுவெடிப்புக்கள்
தொடர்ந்து மற்றுமொரு சாபங்களுக்குள் சிக்கப்போகும் இலங்கை. பேரழிவுகளை ஏற்படுத்தும் இயற்கையின் ரூபத்தில் நம்மை நோக்கி நகருகின்றது. பலி கொள்ளும் சூழற்சியில் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

மனித நேயத்தை வளர்ப்போம், வரும்முன் காப்போம்...

திங்கள், 22 ஏப்ரல், 2019

இலங்கை காலியாகிவிட்டதா? நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளான அதிபர் ட்ரம்ப்

இலங்கையில் இன்று நடந்த 8 மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகக்கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தவறாக ட்விட் செய்ததால், நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளாகினார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையான இன்று, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, கொழும்பு நகரங்களில் உள்ள தேவாலாயங்கள், ஹோட்டல்கள் என 8 இடங்களில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 207 பேர் கொல்லப்பட்டனர், 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும், இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.
அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்பும், இலங்கை தாக்குதல் குறித்து கேள்விப்பட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தையும் வேதனையையும் பதிவு செய்தார். ஆனால், சற்று அதிகமாக வருத்தப்பட்டு, மக்கள் எண்ணிக்கையை தவறாக பதிவிட்டதால், நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளாகினார். இலங்கை தாக்குதலில் 138 பேர் கொல்லப்பட்டார்கள் என்று பதிவிடுவதற்கு பதிலாக 138 மில்லியன்(13.80 கோடி) மக்கள் என்று தவறாக பதிவிட்டார். இதைத்தான் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் கூறுகையில், " இலங்கையில் உள்ள தேவாலாயங்கள், ஹோட்டல்களில் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 138 மில்லியன் மக்கள், 600க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்களுக்காக அமெரிக்க மக்கள் சார்பில் நான் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கிறேன். உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம் " எனத் தெரிவித்தார்.
அதிபர் ட்ரம்பின் ட்விட்டை கவனித்த நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்விட்டரில் கூறுகையில், " அனைத்தையும் மில்லியனில் குறிப்பிடாதீர்கள், உங்கள் எண்ணிக்கையை மாற்றுங்கள். இவ்வாறு தவறான எண்ணிக்கையில் பதிவிட்டால் எப்படி உளப்பூர்வமாக ஆறுதல் தெரிவித்து இருப்பீர்கள்" எனத் தெரிவித்தார்.
மற்றொருவர் " 138 மில்லியனா, அப்படியென்றால், தாக்குதல் அதிகரிப்புக்காக காத்திருக்க வேண்டுமா" எனக் கேட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன், " இலங்கையி்ல இருப்பதே 2 கோடி மக்கள்தான், 13.80 கோடி மக்களுக்கு எங்கு செல்லவது வாய்ப்பே இல்லை. உங்களின் தப்பான அனுதாபங்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அது தேவையில்லை" என்று இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் " 138 மில்லியனா,... இலங்கை மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் கணக்கின்படி எங்கள் நாடு இப்போது காலியாகிவிட்டதா" எனத் கிண்டலடித்துள்ளார்.
அதிபர் ட்ரம்ப் தவறாக ட்வீட் செய்வது முதல்முறை அல்ல, இதற்கு முன் அமேசான் அதிபர் ஜெப் பிஜோஸ் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஜெப் போஜோ என்று குறிப்பிட்டார்.
ஆப்பிள் அதிபர் டிம் குக் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக டிம் ஆப்பிள் என்று குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் முக்கிய 2 பேர் பலி


இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் முக்கிய நிர்வகைகள் 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான இந்தியர்கள் 5 பேரில் இருவர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்தவர்கள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மஜக நிர்வாகிகள் 5 பேர் இலங்கை சென்றதாகவும், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் இன்று காலை கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்த நிலையில் தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.

நேற்று கொழும்புவில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை இன்று மதிய நிலவரப்படி 300 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டுவெடிப்பில் காயமடைந்த 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கை மக்களுக்கு மலாலா டிவீட்!

இலங்கையில் நேற்று ஈஸ்டர் பண்டிகைக்காக தேவாலயத்தில் மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் இந்தியர்கள் மூன்று பேர் உட்பட சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பலியாகினார். மேலும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீவிரவாத தாக்குதலில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட பல பகுதிகளில் தொடர்ச்சியாக 8 முறை குண்டுகள் வெடித்தது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா , அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் கண்டணத்தைத் தெரிவித்து வருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் பெண் கல்விக்கு ஆதரவாக போராடி , தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து மீண்டு, தற்போது லண்டனில் வசித்து வரும்  மலாலா உலக அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார். இவர் இலங்கை தீவிரவாத தாக்குதல் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். இதில் அவர் கூறுகையில் ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் இலங்கையில்  தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் , "தீவிரவாதிகள் ஒருவரையொருவர் நேசிக்க மாட்டார்கள் " . 

இதனால் தான் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியுள்ளதாக மலாலா அவர்கள் தனது டிவிட்டர் வாயிலாக தெரிவித்தார். உலகம் முழுவதும் தீவிரவாதத்தை அடியோடு ஒழித்து அமைதி என்னும் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பது அனைத்து மக்களின் கருத்தாக உள்ளது.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

எல்லை தாண்டும் சிலுவை யுத்தம்.

800 வருட பழமையான பாரிஸ் தேவாலயம் எரிந்து இலங்கைக்கு சொன்ன செய்தி. '900' வருட பகைக்கு சம்பந்தமில்லாமல் நீ இலக்காவாய் என்று...

எல்லை தாண்டும் சிலுவை யுத்தம். அவற்றுக்கான வயது 900+.

விரைவில் அலுவல அறிக்கைகளை சர்வதேச தீவிரவாதிகளே வெளியிடுவார்கள். காரணங்களாய் 'நியுசிலாந்து' ஆன்மாக்களுக்காக பரிந்துரைப்பார்கள்.

அதிக சுற்றுலா பயணிகள் வரும் சிறு தேசத்தில் பிற சக்திகளின் அழிவுக்கான களமாக ஏன் தெரிவு செய்யப்பட்டது. 2002 இந்தோனேஷியாவின் பாலி தீவுகளில் நடந்த குண்டுவெடிப்பை ஆராயுங்கள்.

பல்லின மக்கள் வாழும் தேசம், முரண்பாடுகளை கடந்து ஜக்கியப்படும் சந்தர்ப்பங்களை விதைத்த சர்வதேச தீவிரவாதம், இது அரசியலல்ல. மனிதர்களுக்காக பிராத்திப்போம்!

www.amalathaselroy.blogspot.com

Pray for srilanka

'10,917 km' க்கான எதிர்வினைகளா?

'5,697 km' க்கான
10ம், 12ம் நூற்றாண்டு இடைவெளிகளின் களமாற்றங்களா?

Srilanka...!