ஞாயிறு, 26 டிசம்பர், 2010

இனிய நத்தார் வாழ்த்துக்கள்



ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய் அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய் பாரம் சுமப்போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த பாலன் யேசு பிறந்த இனிய நத்தார் வாழ்த்துக்களை எமது உறவுகள் அனைவருக்கும் தெரியப்படுத்தி சாந்தியும் சமாதானமும் மிக்க தேசமொன்றில் வளமும் நிறைவும் கொண்ட நல்வாழ்விற்காய் இறையாசி வேண்டி பிரார்த்திக்கும் நண்பன்

அமைதியின் இரவில்
அமலன் பிறந்தார்
அன்னை மரியின்
மடியினில் தவழ்ந்தார்

வாருங்கள் அனைவரும்
வணங்கிடுவோமே
வள்ளல் யேசுவை
தொழுதிடுவோமே

உலகுக்கு ஒளியானவர்
உயிருக்கு வழியானவர்
உனக்கும் எனக்கும் பலியானவர்
உண்மை வடிவானவர்

வாழ்வில் ஜீவன் ஆனவர்
வள்ளல் யேசு வடிவானவர்
வழியாய் என்றும் இருப்பவர்
வருத்தம் நீக்கி காப்பவர்

ஏழை எழிய மக்களையே
என்றும் அவரே அழைக்கிறார்
எங்கே நீயும் என்று தான்
ஏங்கி கொண்டே இருக்கிறார்