வியாழன், 23 ஏப்ரல், 2020

உலக புத்தக தினம்

"படிப்பதில் ஆழ்ந்து,
மாய உலகங்கள் சென்று வருவோமா...?

கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கலாமா,
ஒரு பிறவியில்,பல பிறவிகளின் அனுபவம் பெறலாமா...? 

புத்தக கடலில்,
ஆழ்ந்து மூழ்கி,
புத்துணர்வு பெறலாமா...?

எண்ண வெளியில் பறந்து
எல்லையில்லா பெருவெளியில் கரைந்து விடலாமா...?"

#WorldBookDay 
#உலகபுத்தகதினம்❤

'தூக்கு கயிற்றை முத்தமிடும் வரை படித்துகொண்டிருந்தார்
உமர்முக்தர்!

தூக்குமேடைக்கு செல்லும் வரை
படித்துகொண்டிருந்தார்
பகத்சிங்!

படுக்கும் இடம்கூட
படிப்பகம் அருகே வேண்டுமென்றார் 
அம்பேத்கர்!

படித்த புத்தகத்தை 
முடிக்கவேண்டும் என்பதற்காக 
அறுவை சிகிச்சையை அடுத்த நாள் மாற்ற சொன்னார் அண்ணா!

கடைசி வரையிலுப் புத்தகத்தை நேசித்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்!
-
வாசிப்பை நேசிப்போம், அதை மூச்சாகியும் சுவாசிப்போம்..'

“Books are like mirrors: You only see in them what you already have inside you.”
#உலகபுத்தகதினம்