திங்கள், 22 பிப்ரவரி, 2010

இதயம் சில உண்மைகள்!

இதயம் சில உண்மைகள்!
பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும்.
(எலி - நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.
3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன .
5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் …நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)

6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).
8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.
9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.
10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.

சகலகலா வல்லவன் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா

மறைந்த அண்ணன் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்களுக்கு எனது மனப்பூர்வமான கண்ணீர் அஞ்சலிகள்.



நம்மை சிரிக்க வைத்தவரை நினைத்து அழுவதை விட அவரின் சிறந்த நடிப்பை நினைத்து புன்சிரிப்பதுதான் அவருக்கு சரியான மரியாதை.ஒரு இயக்குநராய் நான் உன்னுடன் பழகிய நாட்கள் இறைவன் எனக்கு கொடுத்த வரம் என்று எண்ணுகிறேன்.என்னைக் கவர்ந்த உன்னை என்றும் என்சிரம் தாழ்த்தி நிற்கும்
சகலகலா வல்லவன் எனும் பட்டம் உனக்கானது.இனம், மதம், மொழிகளைக் கடந்து அனைவரையும் கட்டிப்போட்ட கலைஞன். பூதவுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாத கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலி.
மென்மையான குழந்தை தனமான இதயம் கொண்டவர் என்பதை அவரோடு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். கலைஞர்கள் உருவாகுவதில்லை. கலைஞர்கள் பிறக்கிறார்கள் என்பதே உண்மை. அந்த இரத்த துடிப்பு அனைவரிடம் இருப்பதில்லை. அது பிறப்போடு சம்பந்தபட்ட விடயம். ஒரு திறமையான கலைஞனின் இழப்பில் துயர் கொண்டு அஞ்சலி செய்வோம்.

சனி, 20 பிப்ரவரி, 2010

மகளீர் தினம் - Woman Day's

Woman Day's

மார்ச் 8 –ம் நாள் உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

மகளீர் தினம் தோற்றம், வரலாறு குறிப்பு


***மகளிர் தின தோன்றம்*..**


மார்ச் 8 –ம் நாள் உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாள் பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இனம்,மொழி,கலாச்சாரம்,பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை குறிப்பிடத்தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.. பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிக்கு கொண்டு வர பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சு புரட்சியின் போது பெண்கள் சுகந்திரம்,,சமத்துவம் மற்றும் சகோதரத் தன்மை வேண்டி போராடினார்கள். ஆனால் கடந்த நூற்றாண்டில்தான் பெண்கள் தினம் கொண்டாடுவது கடைபிடிக்கப்பட்டது.
1909-இல் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியின் அமெரிக்கா முழுவதும் பெண்கள் தினம்

பிப்ரவரி 28-ல் கொண்டாடப்பட்டது. அதன் பின் பிபரவரி கடைசி ஞாயிற்றுகிழமை பெண்கள் தினம் கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டது.. 1910-ல் 17 நாடுகளிலிருந்து வந்திருந்த பெண்கள் கோபன்கேஹனில் கூடி பெண்கள் தினத்தை சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர்.அதன் பின் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது..


1911 மார்ச்19 ல் முதல் சர்வதேச பெண்கள் தினம் இலட்சக்கணக்கான பெண்கள் அணிவகுத்த பேரணியால் அமர்க்களப்பட்டது.. அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 140 பெண்கள் வேலைக்கு சென்ற இடத்தில் கருகி இறந்தனர்.இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் நலன் கருதும் சட்டங்கள் அமெரிக்காவில் இயற்றப்பட்டன..



1917-ல் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் போரில் பலியானார்கள். அந்த சமயத்தில் பெண்கள் ரொட்டிக்காவும் அமைதிக்காவும் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக் கிழமையில் பெண்கள் தினத்தன்று பெண்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்குள்ள ஓட்டுரிமை அளிக்கப்பட்டது.. ரஷ்யாவின் ஜூலியன் காலண்டர்படி அது

பிப்ரவரி 23.

ஆனால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட கிரிகோரியன் காலண்டர்படி மார்ச் 8 ம் நாள்.


ஆகவேதான் *மார்ச் 8 **–**ல் தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது*..


ஐ.நாவும் பெண்கள் முன்னேற்றத்துக்காவும் அவர்கள் சம்த்துவ கோரிக்கைகளுக்காவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.. 1945-ல் சான்பிரான்ஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி பெண்களுக்கு சம உரிமை என்பது அடைப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேச கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றம் திட்டங்கள்,
லட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐ..க்கிய நாடு உழைத்துள்ளது..
1975- ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடு அறிவித்தது.

1977-ல் ஐக்கிய நாடு பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடு பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடு ஏற்பாடு செய்தது. சர்வதேச
அளவில் பெண்கள் தினம் கடை பிடிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் நலன்
குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.
அதன்பின் பெண்கள் தங்களது உரிமையினால் தங்களால் எதுவும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த நாள் உணர்த்தும் வகையில் உள்ளதோடு அவர்களின் முயற்சிகளுக்கு ஆண்களும் ஆக்கம்,ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பதையும் இந்நாள் உணர்த்துகிறது.

சர்வதேச அளவில் பெண்களுக்கான இயக்கங்கள் வளரத்தொடங்கியது..
பெண்களுக்காக ஐக்கிய நாடு நான்கு வழிகளில் வழிக்காட்டி முயற்சியும் செய்து வருகிறது..

சட்ட நடவடிக்கைகள், பொதுக்கருத்து உருவாக்குதல், சர்வதேச நடவடிக்கைகள், பயிற்சி, ஆராய்ச்சியே அவைகள். நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் உள்ள தொடர்புகள் அதிகம் என்றும் அதனால் பெண்கள் வளர்ச்சிக்கு ஒவ்வொரு அரசும் பாடுபடவேண்டும் என்றும் பல்வேறு அறிஞர்கள் தொடந்து கூறி வந்துள்ளார்கள், கூறியும் வருகிறார்கள். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்கும் என்றும் பெண்களே இவ்வுலகின் கண்களென முண்டாசு கவிஞன் பாரதி முழங்கினான்..

இது எல்லா நாட்டுக்கும் பொருந்தும் சால பொருந்தும்.

உலகில் உள்ள ஏறத்தாழ் 3 கோடி அகதிகளில் 80முதல் 85 சதவித்தினர் பெண்கள்.

தினமும் பிரசவத்தின் போது 1,600 பெண்கள் மரணமடைகிறார்கள்.

ஸ்வீடன்,கனடா,நோர்வே, அமெரிக்கா, பின்லாந்து பெண்களின் ஆயுள்,கல்வி,வருமானம் ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.

* பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடுகளில் முதன்மை பெறுவது நியூசிலாந்து.

1893 –ஆம் ஆண்டிலிருந்து அங்கு பெண்கள் ஓட்டளித்து வருகிறார்கள்.

* இதுவரை உலகில் 28 பெண்களே நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தியுள்ளனர்.
சர்வதேச நாடாளுமன்றகளில் இதுவரை 14.1 சதவீதத்துக்கு மேல் பெண்கள் இடம் பெற்றுள்ளார்கள்.


* ஸ்வீடனில் 1995 –ல் அமைச்சரவையில் பெண்கள் சமவிகிதத்தில் இடம் பெற்றனர்.

International Women's Day has been observed since the early 1900's, a time of great expansion and turbulence in the industrialized world that saw booming population growth and the rise of radical ideologies.

*1908*

**Great unrest and critical debate was occurring amongst women. Women's oppression and inequality was spurring women to become more vocal and active in campaigning for change. Then in 1908, 15,000 women marched through New York City demanding shorter hours, better pay and voting rights.

*1909*
**In accordance with a declaration by the Socialist Party of America, the first National Woman's Day (NWD) was observed across the United States on 28
February. Women continued to celebrate NWD on the last Sunday of February until 1913.


*1910*

**In 1910 a second International Conference of Working Women was held in Copenhagen. A womannamed a Clara Zetkin(Leader of the 'Women's Office' for the Social Democratic Party in Germany) tabled the idea of an International Women's Day. She proposed that *every year in every country there should be a celebration on the same day - a Women's Day - to press for their demands.* The conference of over 100 women from 17 countries, representing unions, socialist parties, working women's clubs, and including the first three women elected to the Finnish parliament,greeted Zetkin's suggestion with unanimous approval and thus International

Women's Day was the result.


*1911***

Following the decision agreed at Copenhagen in 1911, International Women's Day (IWD) was honoured the first time in


- Austria

- Denmark

- Germany and

- Switzerland


on 19 March.

More than one million women and men attended IWD rallies campaigning for women's rights to work, vote, be trained, to hold public office and end discrimination. However less than a week later on 25 March, the tragic 'Triangle Fire' in New York City took the lives of more than 140 working women, most of them Italian and Jewish immigrants. This disastrous event drew significant attention to working conditions and labour legislation in the United States that became a focus of subsequent International Women's Day events. 1911 also saw women's 'Bread and Roses' campaign.


*1913-1914*


**On the eve of World War I campaigning for peace, Russian women observed their first International Women's Day on the last Sunday in February 1913. In 1913 following discussions, International Women's Day was transferred to 8 March and this day has remained the global date for International Women's Day ever since. In 1914 further women across Europe held rallies to campaign against the war and to express women's solidarity.


** *1917*
**On the last Sunday of February, Russian women began a strike for "bread and peace" in response to the death over 2 million Russian soldiers in war. Opposed by political leaders the women continued to strike until four days later the Czar was forced to abdicate and the provisional Government granted women the right to vote. The date the women's strike commenced was Sunday 23 February on the Julian calendar then in use in Russia. This day on the Gregorian calendar in use elsewhere was 8 March.


*1918 - 1999*

Since its birth in the socialist movement, International Women's Day has grown to become a global day of recognition and celebration across developed and developing countries alike. For decades, IWD has grown from strength to strength annually. For many years the United Nations has held an annual IWD conference to coordinate international efforts for women's rights and participation in social, political and economic processes. 1975 was designated as *'International Women's Year*' by the United Nations. Women's organisations and governments around the world have also observed IWD annually on 8 March by holding large-scale events that honour women's advancement and while diligently reminding of the continued vigilance and action required to ensure that women's equality is gained and maintained in all aspects of life.



*2000 and beyond***


IWD is now an official holiday in
- China

- Armenia

- Russia

- Azerbaijan

- Belarus

- Bulgaria

- Kazakhstan

- Kyrgyzstan

- Macedonia

- Moldova

- Mongolia

- Tajikistan

- Ukraine

- Uzbekistan and

- Vietnam

The tradition sees men honouring their mothers, wives, girlfriends, colleagues, etc with flowers and small gifts. In some countries IWD has the equivalent status of Mother's Day where children give small presents to their mothers and grandmothers.
The new millennium has witnessed a significant change and attitudinal shift in both women's and society's thoughts about women's equality and emancipation. Many from a younger generation feel that 'all the battles have been won for women' while many feminists from the 1970's know only too well the longevity and ingrained complexity of patriarchy. With more women in the boardroom, greater equality in legislative rights, and an increased critical mass of women's visibility as impressive role models in every aspect of life, one could think that women have gained true equality. The unfortunate fact is that women are still not paid equally to that of their male counterparts, women still are not present in equal numbers in business or politics, and globally women's education, health and the violence against them is worse than that of men.


However, great improvements have been made. We do have female astronauts and prime ministers, school girls are welcomed into university, women can work and have a family, women have real choices. And so the tone and nature of IWD has, for the past few years, moved from being a reminder about the negatives to a celebration of the positives.
[image: Google]Annually on 8 March, thousands of events are held throughout the world to inspire women and celebrate achievements. A global web of rich and diverse local activity connects women from all around the world ranging from political rallies, business conferences, government activities and networking events through to local women's craft markets, theatric performances, fashion parades and more.

Many global corporations have also started to more actively support IWD by running their own internal events and through supporting external ones. For example, on 8 March search engine and media giant Google some years even changes its logo on its global search pages. Year on year IWD is certainly increasing in status. The United States even designates the whole month of March as *'Women's History Month'.*
So make a difference, think globally and act locally!!Make everyday International Women's Day.

Do your bit to ensure that the future for girls is bright, equal, safe and rewarding.

Thanks
Amalathas Elroy Leslee

சனி, 13 பிப்ரவரி, 2010

தொடரும் நம் பயணம்!

வலிகள் தந்த இறுக்கம் கலைத்து


சில மணி நேரம், சில தூரம் என

உன் விரல் கோர்த்து நடந்து

உன் அன்பில் நனைந்தவாறே

தொடரும் நம் பயணம்!



இருவரின் நேசமும்

விகிதங்களி‎ன்‎றி

அன்பை அள்ளித் தெளிக்க

மொழி திறக்காது

மெளனப் போர்வைக்குள்

இமைகள் சுருக்கி

பார்வைக்குள் உருகும் விழிகள்!



ஓ…!

இந்த உதடுகள்

இன்னும் ஏதேதோ சொல்லத்துடிக்க

வார்த்தைகள் யாவும் ஒளிந்து

உயிர்வரை சென்று கொல்ல…



தெளிந்த நீரோடையாய் இரு மனமும்

தெளிந்து அடங்கிய பொழுதுகளில்

தொடர்கிறது நம் பயணம்!!!

நீலப்பல் வளையத்தால் பேசுவோமா..

Bluetooth rings that turn your hand into a phone


என்ன விவகாரமான பேச்சு இது என்று நினைக்கிறீர்களா ? இல்லை விந்தையான வடிவமைப்பினால் வந்த ஒரு பேச்சுத்தான்.


வருங்காலத்துக்கு ஏற்றவாறு செல்லிட / கையடக்க தொலைபேசிகளும் (cell/handphone) புது புது தொழிநுட்பங்களை கையாள தொடங்கியுள்ளன. அவற்றில் இப்பொழுது வந்துள்ளதுதான் நீலப்பல் மோதிரம் அல்லது வளையம் (Bluetooth ring)


புதிய புத்தாக்க வடிவமைப்புகளை (fashion) உருவாக்கும் புகழ்பெற்ற கலையகமான bck (design studio-http://www.bck-id.com) தரத்தில் 13 வது இடத்தில் இப்புதிய புதிய வடிவமைப்புக்கு தர நிர்ணயம் செய்துள்ளது.
சரி இதை பாவிக்கும் முறை என்னவென்று பார்ப்போமா…

இது இரண்டு புளுத்துட் (Bluetooth) மோதிர வடிவ வளையங்களைக்கொண்டுள்ளது.
ஒன்று உங்கள் கையின் பெருவிரலில் (thumb) அணியக்ககூடிய ஒலிபெருக்கியை கொண்ட கேட்டல் பகுதி/காதுப்பகுதி மற்றையது கட்டைவிரலில் (pinky /little finger) அணியக்ககூடிய ஒலிவாங்கியை(microphone) கொண்ட கதைக்கும் பகுதி. இரண்டும் இடத்துக்கு ஏற்ற உணர்திறனை கொண்டவை.
இது கம்பில்லா தந்தி(wirelessl) மூலம் தொலைபேசியுடன் இடையே இணைக்கப்பட்டு இருக்கும்.


இனி செல்லிட தொலைபேசி அலறும் போது எடுத்து கதைக்கவேண்டியது தொலைபேசி அல்ல.. உங்கள் கையைத்தான்..
வடிவமைப்பாளர்கள் கருத்து தெரிவிக்கும் போது “ இது இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடிக்கும் கவர்ச்சிகரமான கலர் மோதிர வடிவம் மற்றும் அவசர உலகத்திற்கு ஏற்றவடிவம்” என்று கருத்துரைத்தனர்.


இனி நீங்கள் உங்களுடன் மட்டுமல்ல உங்கள் கைவிரல்களுடன் பேச தயாராகுங்கள் எதிர்காலத்தில்… விரைவில் உங்கள் விரல்களுக்கு மோதிரம் போட காத்திருக்கின்றனர் உற்பத்தி செய்வோர்.

கொஞ்சம் பொறுங்க.. கையை மட்டும் தண்ணியில கழுவாதிங்கோ…

இயந்திரகொசு – bionic hornet

போட்டி உலகில் ஆக்கவழியில் பலர் சிந்திக்க வழக்கம்போல அழிவுவேலைக்கும் சிலர் சிந்திக்கின்றார்கள்.
கொசுவை மாதிரியாக கொண்டு, படத்தில் காண்பது போல “bionic hornet” எனும் “இயந்திரகொசு”-வை இஸ்ரேல் ( Israel Scientist ) விஞ்ஞானிகள் உருவாக்கிவருகின்றார்கள்.
இது நனோ தொழிநுட்பத்தை ( nanotechnology-based) அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இயந்திர-கொசுவாகும். இது ஓடோடி விரட்டி பறந்து எதிரியை தாக்கி கொல்வதோடு கூடவே கேமராவால் படமும் எடுத்துக்கொண்டு மீண்டும் வருமாம்.
“சிறு ஆயுதங்களின் தேவையை லெபனான் போர் உணர்த்தியது. தற்கொலைபடை தீவிரவாதியை கொல்ல 100 மில்லியன் டாலர் விமானத்தை அனுப்புதல் அனாவசியம். அதனால் எதிர்காலத்திய ஆயுதங்களை உருவாக்குகிறோம்” என்கிறார் இஸ்ரேலிய துணைபிரதமர்.


மிகப்பெரிய ஆயுதங்கள் இனிதேவையா யுத்தத்துக்கு…?

இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும் இயற்கை!

அண்டங்கள் ஆகாயங்கள்  

இயற்கை!

வானும் விண்மீன்களும்

இயற்கை!

சூரியனும் ஒளியும்

இயற்கை!

அதைச் சுற்றிவரும் கிரகங்கள்

இயற்கை!

நேரமும் காலமும்

இயற்கை!

மேகமும் மின்னலும்

இயற்கை!

காற்றும் மழையும்

இயற்கை!

நீரும் நிலமும்

இயற்கை!

நிலநடுக்கமும் எரிமலைகளும்

இயற்கை!

ஆறுகள் கடல்கள் அருவிகள்
இயற்கை!

வறட்சியும் பசுமையும்

இயற்கை!

உயிரினங்கள் அனைத்தும்

இயற்கை!

அவற்றின் பிறப்பும் இறப்பும்

இயற்கை!

உயிரும் உடலும்

இயற்கை!

இரவும் பகலும்

இயற்கை!

உறக்கமும் விழிப்பும்

இயற்கை!

பசியும் தாகமும்

இயற்கை!

அன்பும் பாசமும்

இயற்கை!

இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும்

இயற்கை!

அவற்றின் மாட்சியும் மகிமையும்

இயற்கை! இயற்கை !!

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

ஹிட்லருக்கு யூதர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது ஏன்?

ஜெருசலேம் : "ஜெர்மன் சர்வாதிகாரியாக இருந்த அடால்ப் ஹிட்லர், தன் தாயை, யூத இனத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் விஷம் கொடுத்து கொன்றார், என, நம்பியதாலேயே, அவருக்கு யூதர்கள் மீது வெறுப்பு உண்டாகியது' என, புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோகிம் ரீக்கர் என்பவர், "முதல் உலகப் போர் படுகொலைகளுக்கு எப்படி வழிவகுத்தது' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.

 
அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஹிட்லரின் தாய் கிளாரா, அவரின் வாழ்க்கையில் ஒரு அழியாத நினைவை விட்டு சென்றார். ஹிட்லருக்கு 18 வயதிருக்கும் போது, அவரது தாய்க்கு, மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, அவருக்கு யூத இனத்தை சேர்ந்த டாக்டரான, எட்வர்டு பிளாக் என்பவர் சிகிச்சை அளித்து வந்தார். அவர், கிளாராவிற்கு, ஐயடோபார்ம் மருந்து அளித்தார். இதை தொடர்ந்து, கிளாரா, கடந்த 1907ம் ஆண்டு, தன் 47வது வயதில் உயிரிழந்தார். இதிலிருந்து, யூத டாக்டர், தன் தாய்க்கு விஷம் கொடுத்து கொன்றதாக, ஹிட்லர் நம்ப தொடங்கினார். இதனாலேயே, அவருக்கு யூதர்கள் மீது வெறுப்பு உண்டாகியது.இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது

சினிமா சமூகத்தின் சிந்தனை தளம்

( This Was my very first article I have ever written, which was initially published in Thinakkural in 2006 soon after my Advanced Level Examination. Though Some of opinions I have expressed in this article have changed through out the times, I thought of post this article exactly in the same way, as it was published earlier).



கலை என்பது ஒரு சமூகத்தின் உணர்வுகளையும் விழுமியங்களையும் பறை சாற்றும் ஒரு விடயமாகும். ஒரு சமூகத்தின் பெறுமானங்களும், விழுமியங்களும் உயரிய நிலையில் இருந்து கீழ் நோக்கி வரும் பொது, அச்சமூகத்தின் கலை, இலக்கிய வடிவங்களும் ஆபாச, வக்கிர உணர்வுகளை பிரதிபலிப்பனவாக பரிணானம் பெறுகின்றன.
இன்றைய நவீன சினிமாவில் இந்நிலையை நன்கு அவதானிக்கலாம். ஏனைய கலை இலக்கிய வடிவங்கள் போலன்றி, சினிமா சமூகத்தின் சமூகத்தின் சிந்தனை தளத்தை படம் பிடித்து காட்டுவதோடு, தான் விரும்பிய சிந்தனை கட்டமைப்பை மிகக் கூர்மையாக, ஆழமாக கட்டமைக்கின்ற, அதி சக்தி வாய்ந்த, கலை, இலக்கிய வடிவமாகவும் திகழ்கின்றது.
எடுத்துக்காட்டாக, இன்றைய ஹாலிவுட் சினிமா துறையை எடுத்துக் கொண்டால், அது அரசியல் மேலதிக்கத்திற்காகவும், ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை, நடைமுறை படுத்துவதற்கும், நன்கு திட்டமிட்டு பயன்படுத்தப்படுகின்றது.
ஹாலிவுட் சினிமா துறையில் 9௦% பங்கு யூதர்களின் கைகளிலேயே உள்ளது. ஹாலிவுட் சினிமாத்துறை சார்ந்த நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள் என 150௦ இற்கும் மேற்பட்ட கலைஞர்கள் யூதர்கள் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதனால், திட்டமிட்ட அடிப்படையில் யூதர்களின் மேலதிக்கத்திட்காகவும், அவர்களின் எதிரிகளை மட்டம் தட்டவும், ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கவும், ஹாலிவுட் ஐ கனகச்சிதமாக அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இன்று அமெரிக்காவை வழிநடாத்துவது யூத சியோநிசமே..! யூதர்களினதும், இஸ்ரேளினதும் நலனுக்கு விரோதமாக செயல்படும் எவரும் இன்று அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது. அமெரிக்க வெளிநாட்டுக்கொள்கை கூட, அமெரிக்க தேசிய நலனை விடவும், இஸ்ரேலின் நலனை மையப்படுத்தும் போக்கு பல ஆண்டுகளாக தொடர்கிறது. இத்தனைக்கும் அமெரிக்காவில் வாழும் யூதர்களின் சதவீதம் 3% மாத்திரமே.
அமெரிக்காவில் மட்டுமன்றி, உலக அரசியல், சர்வதேசிய பொருளாதாரம் என்று சகல துறைகளிலும் யூதர்களின் வலிமையான மறைகரம் செயல்படுவதை இத்துறை சார்ந்தோர் நன்கு அறிந்திருப்பர.
இத்தகைய யூதர்களின் மேலாதிக்கதிற்ற்கு பல்வேறுபட்ட காரணிகள் பங்களிப்பு செய்த போதிலும், ஹாலிவுட் சினிமா துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
யூதர்கள் தமது எதிரிகளை , குறிப்பாக அரபு முஸ்லிம்களை கொச்சைப் படுத்தவும், அவர்களை தீவிரவாதிகளாகவும், சிந்திக்க தெரியாதவர்ளாகவும் கட்டமைப்பதிலும் ஹாலிவுட் சினிமா பெரும் பங்களிப்பை ஆற்றுகிறது.


செப்டம்பர் 11 இற்கு பின்னர் வெளியான ஹாலிவுட் சினிமாக்களின் 1/3 ஆனவை யுத்தப்படங்களாக மாறியதாக ஒடோவா பல்கலைகழக உலகமயமாக்கல் தொடர்பான ஆய்வுகளின் பணிப்பாளர் மைகள் குறிப்பிடுகிறார். இத்திரை படங்கள் அரபு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், முரடர்களாகவும் சித்தரித்தன.


"பயங்கரங்களின் கோடை காலம்" அணு ஆயுத யுத்தம் பற்றி பேசியது. "Some of All Fears", "the Coiled", "Sepert", "Rules of Engagement" போன்ற படங்கள் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மிக அதிகமாக கொச்சை படுத்துவதாக முஹம்மது ஜமால் என்பவர் அரபு சஞ்சிகை ஒன்றில் எழுதுகிறார்.
தமிழ் சினிமாவிலும் அவ்வப்போது அரசியல் நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்ட சினிமாக்கள் வெளிவராமலில்லை.


இடதுசாரி சிந்தனையையும், மதச்சார்பற்ற போக்கையும் ஆதரித்து வெளிவந்த எம்.ஜி.ஆர, கமல் ஹசன் போன்றோரின் பல திரைப்படங்கள் அவர்களது கொள்கைகளை தமிழ் ரசிகர்கள் மத்தியில் வளர்க்க உதவின. பலர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தனர். எம்.ஜி.ஆர, ஜெயலலிதா, விஜயகாந்த், கருணாநிதி, அண்ணாதுரை, சரத்குமார், கார்த்திக் என்று இந்த வரிசையில் பலர்.
சில கோலிவுட் சினிமாக்களும், பல பாலிவுட் சினிமாக்களும் இனவாதிகளை கவர்வதற்காக, காஷ்மீர் மக்களின் தார்மிக நியாயங்களை மறுதலித்து, அவர்களது நியாமான போராட்டத்தை கொச்சை படுத்தும் பணியை செய்கின்றன.
இத்தகைய அரசியல் நோக்கிலான திரைப்படங்கள் ஒருபுறம் இருக்க, ஒழுக்க, பண்பாட்டு எல்லைகளை தாண்டும் பல திரை படங்களே இன்று பெருமளவில் வெளி வருகின்றன. நிர்வான கலாசாரத்தை இவை போதிக்கின்றன. ஆண் - பெண் உறவில் உள்ள புனிதத்தை மறுதலித்து, சகல பண்பாட்டு வேளிகையும் இவை தகர்த்து எரிகின்றன. எமது பண்பாட்டு பெரிமைகள் அனைத்தும் காற்றில் அடித்து செல்கின்றன. குடும்ப கட்டுகோப்பை முழுமையாக சிதைக்கும் பணியை இவை செய்கின்றன.

தமிழ் சினிமாக்களை பொறுத்தவரை, சமூகத்தின் சிந்தனை வீழ்ச்சியை அவை அப்பட்டமாக பிரதி பழிப்பதை காணலாம். வெறும் வியாபார நோக்கில் சினிமாவிற்குள் நுழையும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சமூகத்தின் சிந்தனை வீழ்ச்சியை தமக்கு சாதகமாக பாவித்து, அதில் இலாபம் உழைக்கவே இவர்கள் முனைகின்றனர். இதனால் எட்டுக்கு போட்டியாக சினிமா கலாசாரத்தை சிதைக்கும் வேலையை செய்கின்றது.

சிங்கள சினிமாவும் கிட்டத்தட்ட இதே நிலையில் தான் உள்ளது.
இருப்பினும், தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் "நல்ல சினிமாக்கள்" என பட்டியல் படுத்த மொடியுமான ஒரு சில நல்ல படைப்புக்கள் வெளிவருவதை மறுப்பதற்கில்லை.
எனினும் ஒட்டு மொத்தமாக இன்றைய சினிமா துறையை நோக்கும் இடத்து, அது நாற்றம் எடுக்கும் ஒரு சாக்கடை என்றே கூறலாம். இச்சினிமாக்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கம் புத்தி ஜீவிகளின் ஆழ்ந்த கவலை மிக்க கவன ஈர்ப்பைப்பெற்றுள்ளது.
இதன் விளைவாக ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகவும், வியாபார நோக்கிலும் தயாரிக்கப் படும் அதீத கற்பனைகளையும், மாயாஜால வித்தைகளையும் ஆபாசத்தையும், வன்முறையையும் நம்ப முடியா வீர தீரத்தையும் கொண்ட சினிமாக்களுக்கு மாற்றாக, சமூகத்தின் இயல்பான பிரச்சினைக்கும், அதன் இயல்பான போக்கையும், அவலங்களையும், குறைபாடுகளையும் சித்தரிக்கும், மாற்று சினிமாக்கள் குறித்து பலர் சிந்திக்க முற்பட்டுள்ளனர்.

இலங்கையை பொறுத்தவரை பேசப்பட வேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. வேலை இல்லா பிரச்சினை, வருமான இடைவெளி, ஏற்றத் தாழ்வுகள், மதுப்பாவனையால் சீரழிந்து வரும் குடும்ப அமைப்புக்கள், சேரிப்புற மக்களின் பிரச்சினை, உள்நாட்டு யுத்தத்தின் கொடூரம், வெளி நாட்டிலும் உள்நாட்டிலும் வாசிக்கும் அகதிகள் பிரச்சினை என்று எண்ணற்ற பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை பற்றி பல கோணங்களில் எம்மால் பேசி இருந்திருக்க முடியும்.

இந்தியாவை பொறுத்தவரை கதைக்கான களம் இன்னும் விசாலமானது. பல இனகுளுமங்களையும், கலாசாரத்தையும், விரிந்த நிலப்பரப்பையும் கொண்ட பிரதேசம் என்பதால் அவர்களுக்கு எவ்வலவோ விடயங்கள் குறித்து யதார்த்த பூர்வமாக பேசி இருந்திருக்க முடியும். அத்தனையையும் விடுத்து பாலிவுடும், கோலிவுடும் குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டமை வருந்தத்தக்கதாகும்.


நாம் வலியுறுத்தும் சமூகப்பிரச்சினைகளை வலியுறுத்தும், யதார்த்தபூர்வமான "மாற்று சினிமாக்கள்" ஏற்கனவே பல நாடுகளில் தயாரிக்கப்பட்டு சர்வதேச விருதுகள் பலவற்றையும் அவை வென்று எடுத்துள்ளன. குறிப்பாக துருக்கியிலும் இரானிலும் அரச ஆதரவுடன் மாற்று சினிமாக்கள் தயாரிக்கப்படுகின்றன. ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளில் தனியார் துறையினர் இவற்றை தயாரிக்கின்றனர். தமிழில் மாற்று சினிமாக்கள் போதிய வளர்ச்சி காணவில்லை என்றே கூற வேண்டும்.


உண்மையில், இன்றைய சமூக, கலாசார தளத்தில் சினிமா ஏற்படுத்தி வரும் அதிர்வுகளை அவதானிக்கும் போது, ஒரு சீரிய சமூக, பண்பாட்டு, கலாசார தளத்தை உருவாக்க எத்தனிக்கையில், அதற்கு மாற்று சினிமாவின் தேவையை மறுதலிக்க முடியாதுள்ளது.

இது தவிர, இன்றைய சாக்கடை சினிமாவில் உழன்று சீரழியும், இளம் சந்ததியை அதிலிருந்து மீட்டு எடுப்பதானால், அவர்களின் அழகியல் தேவையை பூர்த்தி செய்ய எம்மிடம் இல்லாத குறையை பூர்த்தி செய்ய இம் மாற்று சினிமா உதவும்.


இப்போது நம் முன்னாள் உள்ள கேள்வி, ஈழச்சினிமா தேக்க நிலையில் உள்ள ஒரு காலத்தில், இலங்கை மக்கள் தமது இளம் சந்ததிக்கு சாக்கடை சினிமாவுக்கு மாற்றாக, மாற்று சினிமாவை வழங்கப் போகும் காலம் எப்போது என்பதுதான்...!

உலகை உலுக்கிய பொருளாதார பிரச்னை, இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதா?

திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு வருடம் முடிந்து விட்டது. உலகை உலுக்கிய பொருளாதார பிரச்னை, உலக நாடுகள் அனைத்திற்கும் பரவ ஆரம்பித்தது. எரிந்த தீ அணைந்து விட்டதா? இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதா? விடை தெரியத்தான் இந்தக் கட்டுரை.
சரியாக செப்., 2008ல் தான் அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான "லேமென் பிரதர்ஸ்' மூழ்கி விட்டது என்ற செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்த செய்திகளும் உலகையே திருப்பிப் போட்டு சென்றது.யானை புகுந்த கரும்புத் தோட்டம் போல் ஆனது உலகம். பங்குச் சந்தைகள் இருந்ததில் பாதியை இழந்தன. வங்கிகள் பல மூழ்கின. அரசாங்கங்கள், என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தன.அடிபட்டவர்கள் பல லட்சக்கணக்கானோர். எழுந்தவர்கள் சில லட்சம் பேர் தான். ஆனால், கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம். ஏனெனில் பலர் இது போன்ற நிகழ்வுகளை வாழ்க்கையில் சந்திக்காதது.அதிகம் பாதிக்கப்படாத நாடுகள் மிகவும் குறைவாக இருந்தன. அதில் இந்தியாவும் ஒன்று என்பதில் நமக்கு மிகவும் பெருமை.



விழுந்த காரணம் என்ன? அளவுக்கு அதிகமான சம்பளம், போனஸ் (அதாவது கோடிக்கணக்கில்) என்று கொடுத்து எடுக்கப்பட்ட எம்.பி.ஏ., இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், என்ன செய்தாவது கம்பெனியின் வருமானத்தை உயர்த்துங்கள் என்று. ஆதலால் பலருக்கு ஏதாவது செய்தாவது லாபத்தை கூட்ட வேண்டும் என்ற எண்ணங்கள், செயல்பாடுகள்.அதில் ஒன்று தான் நிதி ஆதாரம் அதிகம் இல்லாதவர்களுக்குக் கூட அதிகப்படியான வீட்டுக் கடன்களை வாரி வழங்கியது. வட்டி மிகவும் குறைந்திருந்த போது வாங்கிய அளவுக்கு அதிகமான கடன்கள் பின்னர் வட்டி கூடிய போது வட்டி கூட கட்ட முடியாத ஒரு சூழ்நிலை.வீடுகளின் விலை வேறு குறைய ஆரம்பித்தது. உலகளவில் இந்தக் கம்பெனிகள் முதலீடு செய்திருந்த முதலீடுகளும் பங்குச் சந்தையின் பாதிப்பால் மதிப்பு குறைய ஆரம்பித்தன. நஷ்டங்கள் லட்சக்கணக்கான கோடிகளில்.கடன்கள் திரும்பி வராமல் போனதால் வங்கிகளுக்கும், வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய நஷ்டம். ஆதலால், கொடுத்த கடன்கள் திரும்ப வராததால் பல வீட்டுக் கடன் நிறுவனங்களும், நூற்றுக்கணக்கான வங்கிகளும் திவாலாகி வந்தன.

எப்படி திரும்ப எழுந்தது?திரும்ப எழ காரணம், அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தான். பல நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் பல லட்சம் கோடிகள் பண உதவி செய்து அந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து மீள வழிவகை செய்தது. எல்லோருடைய ஒருங்கிணைந்த முயற்சி தான், விரைவில் மீண்டெழுந்ததற்கான காரணம். அதனால், பல நிறுவனங்கள் தப்பின.இருந்தாலும், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் காணாமல் போயின. இதில் நூறாண்டுகள் கழிந்த நிறுவனங்களும் அடங்கும்.இது தவிர மக்களும் தங்களது வாயைக் கட்டி, வயிற்றை கட்டி இருந்ததும் ஒரு காரணம். அதாவது, அந்த கஷ்டமான சூழ்நிலையில் பெரிய செலவு ஏதும் செய்யாமல் இருந்தனர். கம்பெனிகளும் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்தின. ஆதலால், அவர்களின் லாபம் கூடியது. விற்பனைகள் குறைந்த போதும் லாபம் கூடியது.

திரும்பி வந்த பங்குச் சந்தை நஷ்டங்கள்:பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டங்களை பலர் ஒரு வருடத்தில் திரும்பப் பெற முடிந்தது மிகவும் ஒரு ஆச்சரியமான விஷயம் தான். இதற்கு முந்தைய பொருளாதார நெருக்கடிகளில், அதாவது, 1987ம் ஆண்டு முதலீட்டாளர்கள், தாங்கள் இழந்தவற்றை திரும்பப்பெற இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1973ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியில் முதலீட்டாளர்கள் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.ஆனால், 1929ம் ஆண்டு ஏற்பட்ட "கிரேட் டிப்ரஷன்' (பண வாட்டம்) இழந்தவற்றை திரும்பப் பெற 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்படி பார்க்கும் போது இந்த முறை உலக நாடுகள் மீண்டெழுந்தது ஒரு வருடத்திற்குள். ஆதலால், இந்த மீண்டெழுச்சியை பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்ததற்கு இணையாக ஒப்பிடுகின்றனர்.

இந்தியா ஏன் அதிகம் பாதிக்கப்படவில்லை?கடந்த ஆண்டு பொருளாதார சீர்குலைவோ அல்லது அதற்கு முன் ஏற்பட்ட ஆசிய பொருளாதார வீழ்ச்சியோ இந்தியாவை அதிகம் பாதிக்கவில்லை. காரணம், திறமையான நிர்வாகம். மேலும், உலகத்தின் பல பாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைப் போல, பொருளாதார சீர்திருத்தங்களை பெரிய அளவில் இங்கு கொண்டு வராதது தான்.

உலகமெங்கும் வங்கிகளின் நிலைமை:உலகமெங்கும் வங்கிகள் இன்னும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு 25 வங்கிகளும், இந்த ஆண்டு 75 வங்கிகளுக்கும் மேல் மூழ்கி விட்டன. இந்திய வங்கிகள் நல்ல நிலையிலேயே இருக்கின்றன.இந்தியாவில் வங்கிகள் சமீபகாலத்தில் மூழ்கியதாக சரித்திரமே இல்லை. அப்படி மூழ்கும் நிலை வந்தாலும் அந்த வங்கியை நல்ல நிலையில் இருக்கும் வங்கியோடு இணைத்து, முதலீட்டாளர்களின் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. உதாரணம் நியூ பாங்க் ஆப் இந்தியா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப் பட்டது. தனியார் வங்கியான குளோபல் டிரஸ்ட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சுடன் இணைக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சாங்கில் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியுடன் இணைக்கப்பட்டது.இந்திய வங்கிகளில், தனி நபர் ஒருவருக்கு, ஒரு வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணத்திற்கு காப்பீடு இருக்கிறது. ஏனெனில், வங்கிகளுக்கு ஏதாவது ஆகும் பட்சத்தில் அங்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் போட்டிருந்தால் அந்த வங்கியை வேறு வங்கியுடன் இணைக்காத பட்சத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் திருப்ப கிடைக்கும். ஆனால், அது போல சந்தர்ப்பங்கள் சமீப காலங்களில் ஏற்படவேயில்லை என்பதால் பயம் ஏதும் தேவையில்லை.

இந்த நிகழ்வுகளில் கற்றுக் கொண்டது என்ன?சேமிப்பின் அவசியத்தைக் கற்றுக் கொண்டோம். சேமிக்காதவர்களுக்கு இது ஒரு பாடமாக இருந்தது. எல்லா சேமிப்பையும் ஒரே முதலீட்டில் போடக் கூடாது என்பதையும் கற்றுக் கொண்டோம்.ஆண்டாண்டு காலமாக தங்கம், வெள்ளியில் சேமித்து வந்திருக்கிறோம், அது எவ்வளவு உன்னதமானது என்று உலகத்திற்கு நாம் எடுத்துக் காட்டினோம். உலகமும் நம்மை பின்பற்றத் தொடங்கியது. ஆதலால், தங்கம், வெள்ளி தொடமுடியாத அளவிற்கு சென்று விட்டது.

துபாயில் என்ன நடந்தது?துபாய் அரசுக்கு சொந்தமான "துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம் தனது கட்டுமானப் பணிகளுக்காக பல நிறுவனங்களிடமிருந்து கடன்கள், வேலைகளை வாங்கியிருந்தது. அதில் 80 பில்லியன் டாலர் (3,70,000 கோடி) அளவு கடன்களை செலுத்த முடியாததால் அதை செலுத்துவதற்கு இன்னும் ஆறு மாத தவணை வேண்டும் என்ற கேட்டது உலகையை உலுக்கியது.ஏனெனில், உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டது அரபு நாடுகள் தான். உலகின் பெரிய நாடுகளே தங்களுக்கு பிரச்னை ஏற்படும் போது அரபு நாடுகளை நாடுவது வழக்கம் (சிட்டி வங்கி தனக்கு பிரச்னை ஏற்பட்ட போது அரபு நாடுகளைத் தான் நாடியது). அவர்களுக்கே பிரச்னை என்றால் எங்கு செல்வார்கள்? அரசு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனது உலகை ஒரு உலுக்கு உலுக்கியது. அதாவது தனி நபரோ அல்லது கம்பெனியோ கடன் வாங்கி கொடுக்க முடியாமல் போயிருந்தால் அது வேறு விஷயம். ஆனால், கடன் வாங்கியதோ துபாய் அரசு. அவர்களே கொடுக்க முடியாமல் போனால்?

துபாய் திரும்ப எழுமா?துபாய், உலகத்தின் வர்த்தக மையமாகவும் திகழ்கிறது. ஆதலால், துபாயின் பிரச்னையின் அளவு 80 பில்லியன் டாலர் என்றால், அதை தீர்ப்பது அவர்களுக்கு அவ்வளவு கடினமான காரியம் இல்லை. ஆனால், பிரச்னை இதை விட பெரிது என்றால், அது இந்தியாவை சிறிது பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.ஏனெனில், தற்போதே அங்கு கட்டட விலை மிகவும் குறைந்து விட்டது. இது தவிர வங்கிகள் இனி வீடுகள் வாங்கக் கடன் கொடுக்குமா என்பது யோசிக்க வேண்டும். ஆதலால், கட்டுமானப் பணிகள் குறையும் பட்சத்தில் அங்கு வேலை செய்யும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.துபாயும் மற்ற நாடுகளைப் போல செலவுகளை குறைக்க முயற்சிக்கும். தற்போது துபாய் போன்ற நாடுகளில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை தலைமைப் பதவிக்கு அமர்த்தி அழகு பார்ப்பதும் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சம்பளம் கொடுப்பதும் வாடிக்கை தான். இனிமேல் அது போன்ற பதவிகள்  வாய்ப்புகள் உள்ளன.

2012ல் மூன்றாம் உலக போர் - தென் ஆசியா மையமாகுமா?

இரண்டாம் உலக போருக்கு பின் பல நாடுகள் காலணி ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. அடிமைகளாக பல ஆண்டுகள் ஏன் தலைமுறைகளைக்கூட கடந்த நாடுகளும் உண்டும். இந்தியாவும் அடிமை இந்தியாவும் அப்படி தலைமுறைகளை தாண்டிய நாடாக இருந்தது.



படித்துமுடித்த கையுடன் தென் ஆப்ரிக்காவிற்கு பயணம் சென்ற காந்தி ஆங்கிலேயர்களால் பற்கள் உடைக்கப்பட்டார். அன்றைக்கு அவரது பற்கள் பறிக்கப்பட்டதில் பட்ட அவமானம் அவரை இந்திய சுதந்திர போராட்டம் வரை கொண்டு வந்தது.


அனேகமாக இந்தே கால கட்டங்களில் அனேகமான காலணி ஆதிக்கதில் இருந்த நாடுகளும் சுதந்திரம் வேண்டி போராட்டங்களை நடத்திக்கொண்டு இருந்தன.


உலக போர் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் இந்த துக்கடா காரியங்களில் எல்லாம் கவனமோ அல்லது எதிர்போ செலுத்த நேரம் இல்லாத அந்த வல்லரசான இங்கிலாந்து அதன் காலணியாதிக்கத்துக்கு விடைகொடுத்து விடைபெற்றது.

உலகப்போர் மட்டும் அப்போது இல்லாமல் இருந்திருந்தால், ஐரோப்பாவிலே நடைபெற்ற மதவாத பயங்கரவாதம் எல்லாம் இன்னமும் சீற்றமுடன், மனிதனால் சகிக்கவே முடியாத வகையில் நடந்து இருக்கும். அதுவும் அந்த கால கட்டங்களில் போராடும் மனிதர்களை விட அவர்களை பார்த்து மற்றவர்களும் அவர்கள் போல் இறங்கிவிடக்கூடாது என்றதில் ஆட்சியாளர்களும் மதகுருமார்களும் மிகவும் கவனமாக் இருந்தார்கள்

போராட்டம் நடத்துபவர்களை பிடித்துவந்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்து அவர்களை எப்படி எல்லாம் சித்திரவதை செய்யமுடியுமோ அப்படி எல்லாம் செய்து அணு அணுவாக கொல்வதை பொதுமக்கள் அனைவரும் கண்கொண்டு பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளுவார்கள் ஆட்சியாளர்கள்.


புரட்சியாளனின் தந்தை என்றோ, மகன் என்றோ, இல்லை நண்பன் என்றோ ஒருவரும் பெருமைபட்டுக்கொள்ள முடியாத கால கட்டங்கள் அவை.


அப்படி யாரேனும் இருந்தால் அவர்களை மக்களின் முன் நிறுத்தி பெண்ணாக இருந்தால் பாலியல் அவமானம், ஆணாக இருந்தால் அணு அணுவாக அவனை சிதைத்து அவன் மறனத்திற்கு கெஞ்சும் நிலையிலும் அவனை சுய நினைவோடு வைத்து படுத்தும் பாடுகளை பார்த்த மக்களில் ஒருவர் கூட இந்த வம்பு நமக்கு ஏன் என்று ஒதுங்கும் விதமாக இருக்கும்.



மொத்ததில் நடப்பது ஒன்றே ஒன்று தான், தான் பலசாளி என்று காட்டிக்கொள்ளும் அதே வேளையில் தன்னை எதிர்க்க நினைக்கும் அனைவரது மன உறுதியையும் குலைக்கும் விதமாக பயங்கரவாதத்தை பயன் படுத்துவது தான் ஆட்சியாளர்களது தந்திரம்.

தந்திரம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், மக்களின் எண்ணிக்கையோடு நோக்கினால், இந்த ஆட்சியர்களது எண்ணிகை மிகவும் சொற்பம். இருப்பினும், இந்த ஆட்சியர்களது விருப்படிதான் அந்த எண்ணிக்கையில் மிக்க மனிதர்கள் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று ஆட்டிவைபதால்.



ஆக அரசு மக்களை பணியவைப்பதும் ஒரு பயங்கரவாதத்தினால் தான், இந்த உண்மையை இறையாண்மை, ஆட்சி, மாட்சி, அமைச்சு என்று என்ன பெயர் இட்டு ஒளித்தாலும், குன்றின் மேல் இட்ட விளக்காக அது சொலிக்க தவறியதில்லை.

இந்த அரச பயங்கரவாதத்திற்கு மதங்களும் உறுதுணையாக இருக்கும். காரணம், மதங்களையும் ஒரு ஆயுதமாகத்தான் ஆட்சியர் பயன்படுத்தியுள்ளார்கள் என்றது படிக்காத பாமரனுக்கும் நன்றாகவே தெரியும்.

ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கும் அப்பால் இன்று உலகில் மக்களாட்சி பெரும்பாலும் உள்ள நாடுகளில் கூட மக்கள் எதற்கு எதிராக போராடி வெள்ளையர்களை விரட்டினார்களோ அந்த காரணங்கள் இன்னமும் அப்படியே இருப்பது எவரும் மறுக்கமுடியாத உண்மை.

இந்தியாவை பொருத்த அளவில் காந்தி சொன்ன அந்த கனவு நாள் இன்னமும் எந்த ஊரிலும் இல்லை என்றதே சோகமான உண்மை.

இப்படி மக்களாட்சியிலும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற நிலையில், எங்களுக்கு நீங்கள் செய்த உதவிகள் எல்லாம் போதும். நீங்கள் எங்களை ஆளவும் வேண்டாம், நாங்களி உங்களிடம் அடிமைபட்டு இருக்கவும் வேண்டாம் என்று மக்கள் கூட்டம் கூற துவங்கியுள்ளதுடன் நில்லாது. போராட்டங்களையும் நடத்தி வருகிறது.


இரண்டாம் உலக போர் காலத்தில் மன்னர்களையும் முடியாட்சியின் இழி நிலை மற்றும் வக்கிரங்களை மேடையேற்றி இத்தணை தாக்குதலுக்கும் இடையிலும் சுதந்திர போராட்டத்தை விதைத்து வளர்த்து வழி நடத்தி. மன்னர்களி முடியாட்சிகளை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சி மலர்ந்ததே நமக்கு எல்லாம் சொர்கம் கிடைப்பபோகின்றது என்றார்கள் சுதந்திர போராளிகள்.

ஐம்பது ஆண்டுகாலம் கூட ஆகவில்லை, அதற்குள் மக்களாட்சியின் மேல் படிந்துள்ள முடியாட்சியின் கோரகரங்களது கீரல்கள் மக்களாட்சியின் மக்களின் நெஞ்சங்களில் கீரி கொஞ்சம் கொஞ்சமாக இரத்தம் சொட்டவைத்து தவணை முறையில் உயிர் நீக்கும் வேலையை வெகுவாக வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதை போல் செய்துகொண்டிருக்கிறது.

இன்றைக்கு மக்களாட்சி பல் இளிக்கும் இடங்களில் எல்லாம், மக்கள் வீதிக்கு வந்து போரட்டங்களை வைத்துள்ளது. அப்படியும் நசுபபடும் நாடுகளில் ஆயுத போராட்டம் வரை கொண்டு வந்து இருக்கிறது.


உலகமும் தனது பங்கிற்கு பயங்காரவாதத்தை ஒழித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு போராளிகளை அழிக்க முயலுவதையும் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.


போராளிகளை அழிக்கத்துடிக்கும் அவர்களது செய்கையில், போரட்டத்தின் அடிப்படை காரணம் ஆராயப்படுமானால் போராட்டமே வெடித்திருக்காதே. ஆனால் ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள், இப்போதைக்கு போராட்டத்தை அடக்குவோம். அதற்கு பிறகு போராட்டம் நடத்தும் எண்ணம் கூட மக்களின் மனதில் தோன்றா வண்ணம் முடியாட்சியில் கையாண்ட அனைத்து அழிவு வழிகளையும் அறிவியல் வழிகொண்டு இன்னமும் கோரமாக நடத்திமுடிப்போம் என்று செல்கிறது.


அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தகர்த்தார்கள் போராளிகள். வெறும் இரண்டே கோபுரங்கள், ஆனால் அதன் விளைவு இன்றைக்கு உலகமே திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. என்ன தான் தேனொழுக பேசினாலும் அமெரிக்காவினால் இன்னமும் எழுந்து நிற்கமுடியவில்லை, இதுவே உண்மை. என்ன தான் மூடி மறைத்தாலும் விழுந்தது குதிரை என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அமெரிக்காவின் நிலையே மலையின் உச்சில் இருந்து விழுந்த இடைனோசரசு நிலைக்கு ஆளாகி நிற்கிறது.
அல்லது மக்களாட்சி தோற்றுப்போன நாடுகளில் எல்லாம் வெடிக்கும் போராட்டம் பின்னாளில் ஒரு உலக போருக்கு வழிவகுக்குமா என்றும் தோன்றுகிறது. நாடு பிடிக்கும் ஆசையில் அன்று சப்பான் மற்றும் இட்லரின் படைகள் நாளாபுறமும் படை எடுக்க. அதை தடுக்கும் விதமாக மற்ற அனைத்து நாடுகளும் போராடும் வேளையில். குட்டி நாடாக இருந்த இந்தியா போன்றோர்கள் பலன்களை அனுபவித்தார்கள். அதுபோல் இன்றைக்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்துகொண்டு சந்தை பொருளாதாரத்தை நிலை நிறுத்தும் போரில் ஈடுப்பட்டுவருவதில் எதிர்தாக்குதலும் அதன் விளைவாக உலக போர வந்தாலும் ஆச்சரியபடுவத்ற்கு இல்லை தான்.

ஒபாமாவின் ஆட்சியில் பொருளாதாரத்தை நிலைகொள்ள செய்வது நடக்காத ஒன்றாக தோன்றுகிறது. அமெரிக்கா மூழ்குவதுடன், அது உலகையும் அதனுடன் இழுத்து செல்லும் வேலையையும் அழகாக செய்கிறது. மற்ற நாடுகள் இவர்களை கைகழுவி நிற்கையில், வேறு வழியில்லாமல் அமெரிக்காவே உலக போரை துவக்கினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை
 
தொடரும்...

மே 17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்

உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள புறாக்களைப் பயன்படுத்தினான் என்று வரலாறு கூறுகின்றது. ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்திப்பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம்.



நவீன தகவல் தொடர்பின் வரலாற்றுப் பின்னணியை நோக்குமிடத்து 1450 -களில் ஜோகன்ஸ் கட்டன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த நிகழ்வு வரை முன்னோக்கிச் செல்லும். அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜோகன்ஸ் கட்டன்பர்க் தனது வாழ்நாளில் கண்டுபிடிப்புக்கான பாராட்டைப் பெறாமலேயே இறந்து போனார்.


தொலைத்தொடர்பின் அடுத்த திருப்புமுனை கிரஹாம் பெல்லினால ஆரம்பித்து வைக்கப்படுகிறது. கிரஹாம் பெல்லின் தொலைபேசிக் கண்டுபிடிப்புடன் தொலைத்தொடர்பு புதிய பரிமாணத்தைப் பெறுகின்றது. தந்தி முறையை மேம்படுத்த கிரஹாம் பெல் எடுத்த முயற்சிகளின் விளைவே தொலைபேசி. தோமஸ் வாட்சன் தொலைபேசியை வடிவமைத்தாலும், மின்சாரம் மூலம் ஒலியை எடுத்துச் செல்வது பெல்லின் மூளையில் உதித்த யோசனையாகும். ஒரே சமயத்தில் இரண்டு சமிக்ஞைகள் தந்தி வயர் மூலம் அனுப்ப 1875-ஆம் ஆண்டில் ஏப்ரல் 6 ஆம் திகதி அரசாங்கம் அனுமதித்தது. கிரஹாம் பெல் இம்முறையை மேம்படுத்தி 1876 மார்ச் 07ஆம் திகதி ஒலியைத் தந்தி வயர் மூலம் பரிமாறச் செய்து காட்டினார்.



இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட நவீன தொலைதொடர்பின் மூலங்கள் கம்பியில்லாத் தந்தி கண்டுபிடிக்கப்பட்டதும், தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடையத் தொடங்கியது. இத்துறையில் வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, கையடக்கத் தொலைபேசி, டெலக்ஸ், பெக்ஸ், மின்னஞ்சல், இணையம், முகத்துக்கு முகம் பார்த்துக் கதைக்கும் தொலைபேசி இணைப்புகள், செய்மதித் தொடர்புகள் என்பன தொலைத் தொடர்புத்துறையில் மனிதன் அடைந்த சாதனைகளின் எச்சங்களாகும். தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பத்தையும் (Information Technology) போஷித்து வருகிறது. இவ்வாறாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியின் பெறுபேறுகளாகும்.

மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஊன்று கோலாக விளங்கும் இலத்திரனியல் துறையில் கொடிகட்டிப் பறப்பவர்கள் ஜப்பானியர் ஆவார் என்பது கண்கூடு. தொலைத் தொடர்பில் அந்நாடு காட்டிவரும் அரும் பெரும் சாதனைகள் மூலம் தொலைபேசியை இலத்திரனியல் மயமாக்கப்பட்டமை சர்வதேசத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் கொள்ளப்படுகின்றது.

1865இல் உருவான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் International Telecommunication Union (ITU) உலக தொலைத்தொடர்பு தினத்தை அனுஷ்டிக்கிறது. மனித குலத்துக்கு அது ஆற்றிவரும் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. ஆண்டு தொரும் கொண்டாடப்படும் சர்வதேச தொலைத்தொடர்பு தினத்தின் முக்கிய எதிர்பார்க்கை தொலைத்தொடர்பு நாட்டின் அபிவிருத்திற்கும் மனிதாபிமான வளர்ச்சிக்கும் உதவுதல் பற்றி எடுத்துக் காட்டுவதாகும்.



மனிதனின் தகவல் தொடர்புகள், செய்மதிப் பரிமாற்றம், கல்வியூட்டல், கருத்துப் பரிமாற்றம், பொழுதுபோக்கு, கலை வெளிப்பாடு, வர்த்தகம், முன்னெச்சரிக்கையான பல தேவைகளுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகின்றது. சூறாவளிகள், எரிமலைகள், பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்த வேளைகளிலும், போர்மூட்டம், பாதுகாப்பு, தொற்றுநோய் போன்ற சந்தர்பங்களிலும் அறிவுறுத்தல்களை வழங்குவதால் மக்கள் முதற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. நிவாரண நடவடிக்கைகளைக்கூட இன்று நடமாடும் கம்பியில்லாத் தொலைபேசி மூலம் துரிதமாக மேற்கொள்ள முடிகிறது. உலகளவிய ரீதியில் செல்பே‌சி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில் 4 பில்லியனைத் தாண்டியிருந்ததாக என ஐ.நா சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் தெரிவித்திருந்தது


அண்மைக்காலத்தில் கணனி முறைக்கும் தொடர்பில் தொழில்நுட்பத்துக்கும் இடையில் ஓர் இணைவுப்போக்கு செயல்பட்டு வருகின்றது. தகவல்களைச் சேமித்து வைக்கவும், மீண்டும் பார்க்கவும் பாரிய அளவிலான வசதிகளைக் கணனிகள் வழங்குகின்றன. இவை இணையம் எனப்படும் இன்டர்நெற் முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்டர்நெற் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட அதி நவீன சாதனையாகும். உலகளாவிய நாடுகள் இந்த வலைப்பின்னல் அமைப்பில் இணைந்துள்ளன. செய்மதி மூலம் வழங்கப்படும் இணைய சேவையில், தொடர்பு சேவைகள், தகவல் சேவைகள் ஆகிய இருவகைச் சேவைகள் மையப்படுத்தப்பட்டுள்ளன.



மின்னியல் தபால், மின்னியல் சஞ்சிகை, மின்னியல் வெளியீடு, ரெல்நெட், தொடர் கலந்துரையாடல், உலகின் பரந்த வலை (World Wide Web) போன்ற பல வகையான நிகழ்ச்சித்திட்டங்கள் என்று நாளுக்குநாள் இதன் சேவைப் பரிமாணங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன. இவ்விடத்தில் நவீன தகவல் தொடர்பில் இன்றியமையாத இணையத்தைப் பற்றி சுருக்கமாக நோக்க வேண்டியது அவசியமாகும்.


எதிர்பாராமல் பிறந்த இணையம் என்கிற மகத்தான தகவல் புரட்சியின் விளைவுகள் கூட யாரும் எதிர்பாராததாகவே இருக்கிறது.. இணையம் ஒரு வல்லரசின் இராணுவத் தேவைக்காகப் பிறந்தது. அது உலக மயமாகும் சந்தையைப் பின்தொடர்ந்து உலகத்தில் பரவியது. அது தகவல் தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு என்கிற இரு பாரிய தொழில்நுட்பத் தொழில்துறைகளும் கைகோர்த்துக் கொண்டதால் எழுந்தது.

ஆரம்பத்தில் இணையத்தின் மூல மொழியாக ஆங்கில மொழியே விளங்கியது. இன்று வலையகத்தில் பல மொழிகள் உள் வாங்கப்பட்டுள்ளது. எனவே இன்று மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம் என்று அது அழைக்கப்படுகிறது.


ஆரம்ப காலத்தில் இணையம் பெரும்பாலும் அமெரிக்க மூலதனம், அமெரிக்கச் சந்தை, அமெரிக்கக் கலாச்சாரம் செல்லும் வழியில் சென்று கொண்டிருக்கின்றது.. சந்தை முதன்மைப்படுத்தும் கலாசாரங்களுக்கு மாற்றாக, எண்ணற்ற பிற கலாசாரங்களுக்கான பாலமாகவும் இருக்கிறது. அது எதிர்பாராதவர்கள் மத்தியில் புதிய உறவுகளை உருவாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் ஒற்றுமை உடையவர்களை இணைக்க இணையம் போல ஒரு ஊடகம் இதுவரை வாய்த்ததில்லை எனலாம் .


அதே போல நவீன தொலைத்தொடர்பில் செய்மதிகளும் நேரடிப்பங்களிப்பை வழங்குகின்றன. மேற்குலக நாடுகளில் செய்மதிகளின் மூலம் தகவல் பரிவர்த்தனையை மனிதனால் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளது. 'நெவிகேடர்" மேற்கத்திய நாடுகளில் வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள பாதை வழிகாட்டியாகும். நெவிகேடரில் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை நிரப்பினால் செய்மதியின் துணை கொண்டும் நெவிகேடர் குரல் சமிக்ஞையாக எமக்கு வழியைக் காட்டிக் கொண்டே செல்லும்.

இவ்வாறாக தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாவொன்றாக நவீன இலத்திரனியல் யுகத்தில் மாறிவிட்டது. இந்த தொலைத் தொடர்பு தினத்தில் தொலைத் தொடர்பைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தொலைத் தொடர்புக்கும் மக்களின் அபிவிருத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகளை இனங்காட்டுவதும் முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டாலும்கூட சராசரி மனிதனுக்கு தொலைத் தொடர்பு எத்தகைய முக்கியத்துவமானது என்பதை உணர்த்தலின் ஊடாக இல்லாமலே அவர்களது வாழ்வில் ஒன்றிணைந்துள்ளமையினால் அது இயல்பான ஓர் உணர்வாக மாறிவிடுகின்றது.

அதேநேரம், தொலைத் தொடர்பின் அபிவிருத்தியானது நவீன காலத்தில் மனிதனின் அழிவுகளுக்குக்கூட பயன்படுத்தப்பட்டு வருகின்றது.. நவீன தொலைதொடர்பில் செய்மதியின் பங்களிப்பு உலகளாவிய நாடுகளை வேவு பார்ப்பதற்கும், நாட்டு இரகசியங்களை அறிவதற்கும் குறிப்பிட்ட வல்லரசுகளின் ஆதிக்கத்தை பேணிக் கொள்வதற்கு பயன்படுத்தப்படுவது எதிர்காலத்தில் சில பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமையலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது. எவ்வாறாயினும் நவீன மிலேனிய யுகத்தில் வாழும் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றே தொலைதொடர்பு என்பதை கருத்திற் கொள்வோம்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

நீ காதல் வயப்படாதவரை...

காலையில்                                                                    

நிர்வாணம் பூண்ட

நீலவானம்

மின்சாரம் இல்லாததால்

அடிபம்புத் தண்ணீரில்

குளியல்

பரவசம் படிந்த

பறவையின் மொழி

எப்போதும் போல

இன்றும்

எதிர்வீட்டுக் குழந்தையின்

கையசைப்பு...

இவையன்றி

வேறென்ன சிறப்பு

இருக்கமுடியும்

இந்நாளில்?

இனியவளே

நீ காதல்

வயப்படாதவரை...

மலர்ந்ததிந்த காதலர் திருநாள்

வருடா வருடம் மாசித் திங்களில்

வசந்தகால பனிக்குளிர் தன்னில்

மலர்கள் மலர்ந்து குலுங்கும் பொழுதினில்

மலர்ந்ததிந்த காதலர் திருநாள்

அன்புப் பரிசும் ஆசை முத்தமும்

இன்ப பெருக்கால் இதயச் சுத்தமும்

துன்பம் நீங்கி துயரம் மறப்பதும்

காதலர் தினத்தின் மகிமை அன்றோ

பெண்ணைப் படைத்த பிரமன் கூட

என்னை ஏன் தான் படைத்தானோ - அட

கண்ணை படைத்த இறைவன் பின்னர்

பெண்ணை ஏன்தான் படைத்தானோ


வெண்நிலா சிந்திய தண்ணொழி பாரீர்

பூ நகை சிந்திய பூமியைப் பாரீர்

பொன்னகை அணிந்த பெண்ணினைப் பாரீர்

புன்னகை சிந்திய ஆண்தனைப் பாரீர்

காதலர் தினம்

காதலரிருவர் கருத்தொருமித்து    

வாழ்தலில் இன்பம் பலவருவித்து

பூவுலகில் தனிநாள் தெரிவித்து

புலர்ந்ததே இன்று காதலர் திருநாள்



வருடா வருடம் மாசித் திங்களில்

வசந்தகால பனிக்குளிர் தன்னில்

மலர்கள் மலர்ந்து குலுங்கும் பொழுதினில்

மலர்ந்ததிந்த காதலர் திருநாள்



இழமைக் கால இனிமை நாளில்

இதயக் கமலப் பூக்கள் தோளில்

இருவர் மனமும் இணைந்ததாலே

தெரிவில் எல்லாம் இழமைக்கூட்டம்





அன்புப் பரிசும் ஆசை முத்தமும்

இன்ப பெருக்கால் இதயச் சுத்தமும்

துன்பம் நீங்கி துயரம் மறப்பதும்

காதலர் தினத்தின் மகிமை அன்றோ





பெண்ணைப் படைத்த பிரமன் கூட

என்னை ஏன் தான் படைத்தானோ - அட

கண்ணை படைத்த இறைவன் பின்னர்

பெண்ணை ஏன்தான் படைத்தானோ





கண்ணையும் பெண்ணையும்

படைத்ததன் காரணம்

காதலின் பின்பே புரிந்ததன்றோ - அது

காதலர் தினத்தில் தெரிந்ததன்றோ





வெண்நிலா சிந்திய தண்ணொழி பாரீர்

பூ நகை சிந்திய பூமியைப் பாரீர்

பொன்னகை அணிந்த பெண்ணினைப் பாரீர்

புன்னகை சிந்திய ஆண்தனைப் பாரீர்





எல்லா நகையும் ஒன்றாய் சேர்ந்ததால்

பூமியே இன்று புனிதனாள் ஆச்சு

கதிரவன் வீச்சால் காரிருள் போச்சு

கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தாச்சு





வேறென்ன வேண்டும் வேறென்ன வேண்டும்

ஒருசுகம் வேண்டும் புதியுகம் வேண்டும

பிறிதொரு சுகத்தை ஈழபூமி தரவேண்டும்

மறுபடி எமக்கெல்லாம் சுதந்திரம் வேண்டும்



நன்றி வணக்கம்
எச்சிலுக்கு மனிதன்
மதிப்பு கொடுப்பது
இங்கு மட்டும் தான்…!