சனி, 30 ஜூன், 2018

இன்று சமூக வலைத்தள தினம் - June30

உலகம் முழுக்க இன்று சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூக வலைத்தள வாசிகள் பலருக்கும் தெரிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #SocialMediaDay

தொழில்நுட்ப யுகத்தின் அகன்ற கண்டுபிடிப்புகளில் நமக்கு அதிகம் பயன்தரும் சிலவற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன.


இணைய வசதி மட்டும் இருந்தால் உலகில் உயிருடன் வாழும் எவருடனும் நட்பு கொள்ள வைக்கும் வலைத்தளங்களாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கம்ப்யூட்டரில் அமர்ந்து வலைத்தளங்களில் உலவி, சில மணி நேரங்களில் புதிய நட்பு வட்டாரத்தை டிஜிட்டல் உலகில் உருவாக்கக்கூடிய நிலை இருந்து வந்தது. 

ஆனால் ஸ்மார்ட்போன் வரவுக்கு பின், சமூக வலைத்தளங்கள் நம் உள்ளங்கையில் வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் ஆப் மூலம் நட்புகளை கடல் கடந்தும் காதல் செய்ய இவை பாலமாக இருக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை நீளும் தருவாயில் உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 30% பேர் இவற்றில் நீந்துகின்றனர்.


மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கினால் கொண்டாட்டம் என்ற வகையில், இன்று உலகம் முழுக்க சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் சமூக வலைத்தளம் குறித்து பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.


உலக மக்கள் தொகை சுமார் 760 கோடியாக இருக்கும் நிலையில், இணையத்தை பயன்படுத்துவோர் மட்டும் சுமார் 420 கோடி என கண்டறியப்பட்டு இருக்கிறது.


உலகில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 300 கோடி ஆகும்.


உலகின் பிரபல பிராண்டுகள் குறைந்தபட்சம் இரண்டுக்கும் அதிகமான சமூக வலைத்தள சேனல்களை பயன்படுத்துகின்றன.


வியாபாரம் செய்வோரில் 81% பேர் ஏதேனும் வகையில் வியாபார வளர்ச்சி காரணங்களுக்காக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். 


2017-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து 2017 மூன்றாவது காலாண்டு வரை மட்டும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 12.1 கோடியாக அதிகரித்தது. அந்த வகையில் ஒவ்வொரு 15 நொடியிலும் ஒருவர் சமூக வலைத்தளத்தில் சேர்கின்றனர்.


ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் தினமும் 6000 கோடி குறுந்தகவல்கள் தினசரி அடிப்படையில் பரிமாறப்படுகின்றன.


சமூக வலைத்தள விளம்பரங்களில் மட்டும் 2017-ம் ஆண்டு சுமார் 4000 கோடி டாலர்கள் செலவிடப்பட்டிருக்கிறது.


உலகின் 38 சதவிகித நிறுவனங்கள் 2015-ம் ஆண்டு வாக்கில் சமூக வலைத்தள செலவினங்களை சுமார் 20 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கின்றன, இது முந்தைய ஆண்டை விட 13 சதவிகிதம் அதிகம் ஆகும்.


ட்விட்டரில் குறிப்பிட்ட பிரான்டு மீது புகார் தெரிவிப்போர் அந்நிறுவனத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் பதில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


ஃபேஸ்புக்கில் இருக்கும் வீடியோக்கள் தினமும் சராசரியாக 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன.


ஸ்னாப்சாட் தளத்திலும் வீடியோக்கள் தினமும் சுமார் 800 கோடி முறை  பார்க்கப்படுகின்றன.


2018ம் ஆண்டு மொத்த ஆன்லைன் தரவுகளில் 74 சதவிகிதம் வீடியோவாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.


உலகில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மற்றும் இத்துறை சார்ந்த வளர்ச்சி பல்வேறு பரிணாமங்களை கடந்து வருகிறது. உலக அரசியல் வரை ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளங்கள் பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்கினாலும், இவற்றால் நமக்கு ஏற்படும் அபாயங்களும் அதிகமாவதை அனைவரும் உணர வேண்டிய காலக்கட்டம் இது. #SocialMediaDay 

www.amalathaselroy.blogspot.com

வியாழன், 14 ஜூன், 2018

உலக இரத்த தானம் நாள் - இரத்த தானம் வழங்குவோம், வாழ்வை பகிர்வோம்

உலகம் முழுவதும் இன்று இரத்த தானம் நாள் அனைவராலும் இரத்த தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. #WorldBloodDonorDay

கடவுள் எப்படி இருப்பார்? விஞ்ஞானிகள் உருவாக்கிய உருவம்

கடவுள் எப்படி இருப்பார்? என நடத்திய ஆய்வு ஒன்றில் விஞ்ஞானிகள் அவரது உருவத்தை உருவாக்கி உள்ளனர்.

கடவுள் எப்படி இருப்பார்?  கடவுள் எங்கோ வானில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை  கடவுள்  நீக்க மற நிறைந்தவர் அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்.   ஆனால் எப்படி இருப்பார்.   கடவுள் உருவம்  என்பது அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப  என ஆய்வு கூறுகிறது. 

‘கடவுள் எப்படி இருப்பார்?, கடவுளின் குணம் எப்படிப்பட்டது? கடவுள் எந்த வண்ணம் கொண்டவர்?’  

உலகில்  நெருப்பில் இருந்து அனைத்திலும் கடவுள் இருப்பதாக  ஆதிகாலம் தொட்டு மனிதன் வணக்கி வந்து இருக்கிறான். அதில் உருவம் இல்லாமலும் கடவுளை வணங்குகிறோம்.

புதிய ஆய்வு ஒன்றில் கடவுள்  பெண்ணின் அம்சங்களைக் கொண்ட ஒரு இளமையான  முகத்துடன் இருப்பார் என கூறப்படுகிறது.

வட கரோலினாவைச் சேர்ந்த  விஞ்ஞானிகளின் வினோதமான ஆய்வு  ஒன்றை நடத்தினர். ஆய்வு முடிவு சுவாரஸ்யமாக, வேதாகம பதிவுகளிலிருந்து ஒரு பழைய மனிதராக இருந்தது. அவர்கள் இளம் வயதினரைப்  போல் கடவுளைப் புரிந்துகொள்வார்கள்.

சேப்பல் ஹில்லில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் உளவியலாளர்கள் குழு 511 அமெரிக்க கிறிஸ்தவர்களின் உதவியுடன் இந்த ஓவியத்தை உருவாக்கியது.

இந்த ஆய்வில்   பங்கேற்றவர்கள்  நூற்றுக்கணக்கான தோற்றமளிக்கும் முகம்-ஜோடியைப் பார்த்து, ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் முகத்தைத் தேர்வு செய்தனர்.

தேர்ந்தெடுத்த முகங்களை இணைப்பதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் கடவுளை எவ்வாறு தோற்றமளிக்க நினைத்தார்கள் என்பதைப் பிரதிபலிக்கும் ஒரு கலப்பு 'கடவுளின் முகத்தை' கொண்டு வந்தார்கள். அவர்களின் முடிவு ஆச்சரியம் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.

எல்லோரும் கடவுளால் எடுத்துக் கொள்ளப்பட்ட விளக்கங்கள், மைக்கேலேஞ்சலோவிலிருந்து மோனி பைத்தான் வரை, அவரை ஒரு பழைய மற்றும் ஆகஸ்ட் வெள்ளை தாடி வைத்த கவுகேசிய மனிதன்,  ஆராய்ச்சியாளர்கள் பல கிறிஸ்துவர் கடவுளை  இளமையாக  வரைந்து உள்ளனர் மற்றும் இன்னும் பெண்பால், மற்றும் குறைந்த கெளகேசியன்  பிரபலமான கலாச்சாரத்துடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சொல்லப்போனால், கடவுளுடைய மக்களின் உணர்வுகள் அவர்களின் அரசியல் தொடர்புக்கு முற்றிலும் உட்பட்டுள்ளன என்று அந்த ஆய்வு காட்டுகிறது. தாராளவாதிகள் கடவுளை இன்னும் பெண்பால், இளையவர், கன்சர்வேடிவ்களை விட அன்பாகக் கருதுகிறார்கள்.

கன்சர்வேடிவ்கள் மேலும் தாராளவாதிகளை விட கெளகேசியனாகவும்  சக்தி வாய்ந்தவராகவும்  கடவுள் காண்கிறார்கள்.

அதைப் பற்றி பேசுகையில், ஜோன்ட் கான்ட்ரட் ஜாக்சனின் ஆய்வு எழுதிய எழுத்தாளர்  தாராளவாதிகள் மற்றும் பழமைவாதிகள் விரும்பும் சமுதாயங்களின் வகைகளில் இருந்து வேறுபாடுகள் தோன்றியிருக்கலாம் என கூறினார்.

மக்களின் உணர்வுகள் அவற்றின் சொந்த மக்கள்தொகை பண்புகளுடன் தொடர்புடையவையாகும்.

அமெரிக்காவில் கடவுள் முகங்கள்  மக்கள் மற்றும் அரசியலில் மத வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது.

இளைஞர்கள் இளம் வயதினராக கடவுள்  இருப்பதாக நம்புகிறார்கள், மேலும் அதிக உடல்ரீதியாக கவர்ச்சிகரமானதாக அறிவிக்கப்பட்டவர்கள் மேலும் உடல்ரீதியாக கவர்ச்சிகரமான கடவுளை நம்புகின்றனர். ஆய்வின் முழுமையான முடிவுகள் PLOS பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

சனி, 9 ஜூன், 2018

தான் வசித்த மரங்களை அழித்த ஊழியர்களுடன் சண்டை போட்ட குரங்கு

தான் வசித்த மரங்களை அழித்த ஊழியர்களுடன் ஒரு ஓரங்குட்டான் குரங்கு சண்டை போட்டுள்ளது.

ஓரங்குட்டான் குரங்கு ஒன்று தான் தங்கிய மரத்தை அழிக்க வேண்டாம் என்று சண்டை போட்டது தொடர்பான வீடியோ பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. (https://youtu.be/R4zzbwM07bw)

இந்தோனிசியாவின் போர்னியோ பகுதியில் உள்ள சுங்காய் புத்ரி காட்டில் உள்ள மரங்களை புல்ட்ரோசர் வைத்து அழித்துள்ளனர்.அப்போது மரம் ஒன்றை புல்ட்ரோசர் உடைத்து கொண்டிருந்த போது, அந்த மரத்தில் இருந்த ஓரங்குட்டான் குரங்கு ஒன்று, புல்ட்ரோசரனை பிடித்து ஒன்றும் செய்ய வேண்டாம் என்பது போல் செய்கை காட்டியது.

அதன் பின் கீழே சென்ற போது மீண்டும் மரத்தை உடைப்பதற்கு புல்ட்ரோசர் வைத்து முயற்சி செய்த போது, மீண்டும் குரங்கு மேலே வந்து தடுத்தது.இது தொடர்பான வீடியோ 2013-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த செவ்வாய் கிழமை சர்வதேச விலங்கு நல அமைப்பு வெளியிட்டுள்ளது.ஆனால் காட்டில் இருந்த மரங்கள் ஏன் அழிக்கப்பட்டதற்கான காரணம் சரிவர தெரியவில்லை. இருப்பினும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது