திங்கள், 29 பிப்ரவரி, 2016

யார் இந்த யூதர்கள்? – ஒரு வரலாறு

“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது.
19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)
பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும்.
சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினார்.
பாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர்.
புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர்.
ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை).
அதன் படி, ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர்.
சியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை.
பைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியாளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை.
மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராய்ச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன்.
1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.
கிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க்கதரிசி. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு(பாலஸ்தீனம்) கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர்.
முதலாவதாக இப்போது உள்ளது போல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும்? இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை.
டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை.
இருப்பினும், அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள். (யூதர்கள் மத்தியிலும் பல கடவுள் வழிபாடு முறை நிலவியதை பைபிளே கூறுகின்றது) அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஈரானிலும், ஈராக்கிலும் சராதூசரின் மதம் பரவியிருந்தது. அவர்கள் “மாஸ்டா” என்ற ஒரேயொரு கடவுளை வழிபட்டனர். இதிலிருந்து தான் யூத மதமும், “யாஹ்வே” அல்லது “எல்” (ஒரு காலத்தில் சிரியர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்) என்ற ஒரே கடவுளை வரித்துக் கொண்டது. பிற்காலத்தில் யூதர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட, “ஒரு கடவுள் கோட்பாட்டை” கிறிஸ்தவர்களின் மீட்பர் இயேசு, மற்றும் முஸ்லிம்களின் இறைதூதர் முஹம்மது ஆகியோர் பின்பற்றினர்.
கி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அத்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும்.
இன்று, இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். “யூத எதிர்ப்பாளர்” என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது.
யூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்” என்ற கேள்வி எழுகிறதல்லவா? “யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது.
முதலில், யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா (மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரையில்,  யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர்.
குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும் (அல்ஜீரியா-மொரோக்கோ), குறிப்பிட்ட காலம் யூத இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர்.
நீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை.
யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன்? இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேட பட்டப் பெயர்கள் உள்ளன.
இன்றைய இஸ்ரேலிய தேசத்தின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய யூதர்களின் கைகளில் உள்ளது. இவர்களது நதிமூலம் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகள் நடந்துள்ளன. அந்த தேடலில் “கஸார்” இராசதானி பற்றி தெரியவந்தது. அதுவே ஐரோப்பிய யூதர்களின் மூலமாக நம்பப்படுகின்றது.
முன்னொரு காலத்தில் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும், தெற்கு ரஷ்யாவையும், கிழக்கு உக்ரைனையும் சேர்த்து ஒரு மாபெரும் யூத இராஜ்யம் பத்தாம் நூற்றாண்டு வரை நிலைத்து நின்றது. கஸார் மக்கள் மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர்கள்.
இருப்பினும் அவர்கள் ஆட்சியின் கீழ் பிற இனத்தவர்களும் வாழ்ந்தனர். மேற்கே கிறிஸ்தவ மதமும், கிழக்கே இஸ்லாமிய மதமும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டுக்குமிடையே தமது தனித்தன்மையை காப்பாற்றுவதற்காக, கஸார் ஆளும் வர்க்கம் யூத மதத்திற்கு மாறியது. இந்த மத மாற்றம் அரசியல் காரணத்திற்காக ஏற்பட்ட ஒன்று. இன்று நடுநிலை பேண விரும்பும் சுவிட்சர்லந்துடன் ஒப்பிடத்தக்கது.
கஸார் இராசதானி அரபு-இஸ்லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர்களுடன் கலந்து விட்டனர். பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது.
புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்” கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது.
இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது.
உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற தேசத்தினுள் ஒற்றுமையாக வைத்திருப்பது கடினமான விடயம். (”எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை.” என்ற சுயபச்சாதாபம் இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது.
தமது ஆக்கிரமிப்பு, “கடவுளால் முன்மொழியப்பட்டது” என்பதால் நியாயமானது, என்று வாதிடுகின்றனர். அதனால் தான், யூத குடிகளின் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமினை (அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின் தலைநகராக்குவதன் மூலம், தமது சரித்திர ஆதாரத்தை எதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர்.

பேர்முடா முக்கோண வலயம் – தீர்க்கப்படாத மர்மம்!

துரித கதியில் நகர்ந்துகொண்டிருக்கும் உலகில், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்திய வண்ணம் அனைத்து உயிரினங்களுக்கும் மேலான உண்ணதமான உரினினம் என்ற இறுமாப்புடன் நாம் அனைவரும் நகர்ந்துகொண்டிருக்கின்றோம்.
எவ்வளவு தான் அறிவு மேம்பட்டாலும்; இன்னமும் பல மர்மங்கள் எமது அறிவியலுக்கு ” நீ ஒரு முட்டாள்” என்ற ரீதியில் சவால் விட்டபடிதான் உள்ளது. ஏலியன்ஸ், கருந்துளைகள், பேய்கள், பேர்முடா முக்கோணவலையம் உள்ளடங்களாக ஒரு மர்ம பட்டியலே நீண்டு செல்கிறது…
பேர்முடா முக்கோண வலையம் பற்றி பெரிதாக அறிமுகம் செய்யவேண்டியதில்லை. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பேர்முடா பற்றி தெரிந்துவைத்திருக்கின்றோம். (தெரிந்தவர்கள் தான் இந்த பதிவை தேடி வந்தும் இருப்பீர்கள்!) எனினும், புதியவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகத்தைப்பார்க்கலாம்.
பேர்முடா முக்கோணம்…
அமெரிக்காவின் ஃப்லோரிடா மாணிலத்திற்கு அருகில் பசுபிக் சமுத்திரத்தில்; ஃப்லோரிடா, சன்யுவான் பியூட்ரோறிகா மற்றும் பேர்முடா பகுதிகளை இணைக்கும் போது வரும் முக்கோணப்பகுதியே பேர்முடா முக்கோணம் எனப்படுகிறது.
அதிகமான மர்ம நிகழ்வுகள் பேர்முடா தீவை ஒட்டி நகர்வதால் பேர்முடா முக்கோணம் என இவ் வலையம் அறியப்படுகிறது.
( பேர்முடா தீவு, 1505 ஆண்டில் Juan de Bermúdez எனும் ஸ்பானிய தலைமை கப்பலோட்டியால் கண்டறியப்பட்டது. 1707 இல் பிரித்தானிய நாடு கடந்த ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.)
இனி…
பேர்முடா முக்கோண வலைய பகுதியின் மர்மத்திற்கான பின்னனியை பார்க்க முதல், பேர்முடா பகுதியில் இடம்பெற்ற பிரபல மர்ம சம்பவங்களை பார்க்கலாம்…
1945 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி…
ஃப்லோரிடாவில் உள்ள LAUDERDALE எனும் இராணுவ விமான தளத்தில் இருந்து சாள்ஸ் கரொல் ரெய்லர் எனும் அனுபவ விமானியுடன் புதிதாக இணைந்துகொண்ட 14 விமானிகளும் பயிற்சிக்காக ஃப்லைட் 19 எனும் விமானத்தில் புறப்பட்டார்கள். விமான பயிற்சியின் போது விமானி எப்போதுமே தரை கட்டுப்பாட்டகத்துடன் தொடர்பில் இருப்பது வழமை. அன்றும் அது போலவே நடந்தது, ஆனால்…
பிற்பகல் 3.15 மணியளவில் கரொல் ரெய்லர் விமான கட்டுப்பாட்டகத்தை பதட்டத்துடன் தொடர்புகொண்டார்…
ரெய்லர் : எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை, எமது கருவிகல் வழமைக்கு மாறாக செயற்படுகின்றன…
கட்டுப்பாட்டகம் : நீங்கள் இப்போது எங்கே உள்ளீர்கள்?
ரெய்லர் : என்னால் இடத்தை கூறமுடியாதுள்ளது. நாம் எங்கிருக்கிறோம் என எமக்குதெரியவில்லை.
கட்டுப்பாட்டகம் விமானத்தின் இருப்பிடத்தை ஊகித்துக்கொண்டு மேற்குத்திசையில் திருப்புமாறு பணித்தது.
ரெய்லர் : எம்மால் மேற்குத்திசையை இனங்காண முடியவில்லை. இங்கு எல்லாமே விசித்திரமாக உள்ளது. கடலின் நிறம் வெண்மைப்படுகிறது!
தொடர்பு துண்டிக்கப்பட்டது…
பிற்பகல் 3.30….
“நாம் எங்கிருக்கிறோம் என தெரியவில்லை… எமது கருவிகல் அனைத்தும் செயல் இழந்துவிட்டன. திசையை அறியமுடியவில்லை. இப்போது வெள்ளை நீரினுள் சென்றுகொண்டிருகிறோம்…” ரெய்லரிடம் இருந்து வந்த இறுதி செய்தி!
ஃப்லைட் 19 திசை மாறுவதாக அறிந்த கட்டுப்பாட்டகம், அவர்களை மீட்க மார்டின் மரினர் எனும் விமானத்தை அனுப்பிவைத்தது. அவ் விமானி “சுமார் 6000 அடி உயரத்தில் பலத்த காற்று வீசுகிறது” என அறிவித்தார். சற்று நேரத்தில் அவ் விமானமும் ரேடர் கருவிகளை விட்டு அகன்றது.
இரவு 7 மணி…
கட்டுப்பாட்டகத்திற்கு FT… FT… எனும் தெளிவற்ற சமிக்ஞை கிடைத்தது… அது காணாமல் போன ஃப்லைட் 19 இன் இரகசிய குறியீடாகும்….
அவ் விமானத்திற்கு என்ன நடந்தது?
என்ன நடந்திருக்கலாம்?
இன்றுவரை அவ் விமானம் பற்றி தகவல்கள் இல்லையா?
இந்த நேர வித்தியாசத்தை ஆராயும் போது சில முடிவுகளை தர்க்க ரீதியாக எடுக்க முடிகிறது.
அதாவது,
வேற்றுக்கிரக வாசிகள் அந்த விமானத்தை “கடத்தி சென்றிருப்பார்கள்” என நாம் கூறமுடியாது. காரணம், இதுவரை பறக்கும் தட்டுக்கள் பற்றி அறியப்பட்டவரை அவை மிக அதிவேகமாக பயணிக்க கூடியவை. அவர்களின் கடத்தலாக இருந்தால் சில நிமிடங்களிலேயே புவியின் ஈர்ப்பு எல்லையை தாண்டி இருப்பார்கள். தாண்டி மூன்றரை மணி நேரத்திற்கு பின்னர் இந்த இருந்தால் சமிக்ஞை கேட்க வாய்ப்பில்லை.
ஒரு வேளை, அவர்கள் பூமியிலேயே அந்த விமானத்தை சிறைப்பிடித்திருந்தால் சாத்தியம். பூமியில் எங்கே சிறைப்பிடிப்பது? அந்த சமிக்ஞைகள் சமுத்திரத்தில் இருந்து தான் வந்தது. அப்படியானால் கடலின் அடியில் ஏதாவது ஏலியன்ஸின் ஆராய்வு கூடம் இருக்கலாமா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
அப்படி இருக்குமாயின், அதற்கு வந்து போகும் ஏலியன்ஸ்கள் பறக்கும் தட்டு மூலம் வரும் போது எமது செய்மதிகளின் உணர் எல்லைக்குள் அகப்படாதது எப்படி? போன்ற தர்க்கவியல் கேள்விகள் நிற்கின்றன. அதற்கும் ஒரு விடை சொல்ல முடியும். ஆனால் இங்கு அதைப்போட்டு குழப்பிக்கொள்ள விரும்பவில்லை.
மேலும், கடலின் அடிமட்டத்தில் தளம் இருக்குமாயின் மனிதர்களை/புவி உயிரினங்களை அந்தளவு ஆழத்திற்கு கொண்டு செல்வதால் அமுக்கம் காரணமாக உயிரிழப்பு நேர்ந்துவிடும்! பின்னர், என்ன ஆராய்ச்சி செய்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அதேவேளை அவர்களின் தொழில் நுட்பத்தில் அமுக்கத்தை தவிர்க்கக்கூடிய திட்டங்களும் இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.
வழமைபோல் விடை தெரியவில்லை என்றதும் ஏலியன்ஸ்-வேற்றுக்கிரகவாசிகளை சாட்டும் காரணத்தை மேலே பார்த்தோம். வேறு விதமாக சிந்தித்தால்…
பசுபிக் சமுத்திரத்தில் அடிக்கடி கடல் சூறாவளி வருவதுண்டு. (இதற்கு வேறு தனிப்பெயர் இருப்பதாக நினைவு. தெரிந்தவர்கள் கூறவும்.) தன் போது கடல் மட்டத்தில் இருந்து வானுயர வெள்ளை நிறத்தில் கடல் நீர் மேல்னோக்கி செல்லும். (மீன் மழைக்கு இது தான் காரணமாக சொல்லப்படுகிறது.)
//“நாம் எங்கிருக்கிறோம் என தெரியவில்லை… எமது கருவிகல் அனைத்தும் செயல் இழந்துவிட்டன. திசையை அறியமுடியவில்லை. இப்போது வெள்ளை நீரினுள் சென்றுகொண்டிருகிறோம்…” ரெய்லரிடம் இருந்து வந்த செய்தி!//
இவரின் கூற்றையும் கடல்சூறாவளியின் தன்மையையும் பார்க்கும் போது, டெய்லர் கடல் சூறாவளியில் மாட்டுப்பட்டிருக்கலாம்!
எனினும், ஒரு அனுபவ விமானிக்கு கடல் சூறாவளி பற்றி தெரிந்திருக்காதா? என எண்ணத்தோன்றுகிறது.
மற்றும், அவரைத்தேடிச் சென்ற விமானத்திற்கும் என்னாச்சு என்று இதுவரை தெரியவில்லை.
இந்த விமான மறைவு தொடர்பாக எனக்கு தோன்றியவற்றை மேலே பார்த்தோம்.
இது தொடர்பாக இறுதியாக ஆராச்சியாளர்கள் என்ன முடிவு சொன்னார்கள் என்பதை பார்ப்போம்…
1991-2 ஆம் ஆண்டுவரை இந்த விமானங்களின் தேடல் நடைபெற்றது…
அவர்களின் அனுமான கூற்றுக்களில்…
  • டெய்லர் விமானத்தை தவறாக வேறு இடத்திற்கு செலுத்திவிட்டார் என ஒரு சாரார் கூறுகின்றனர். (அப்படியே இருந்தாலும் அனுபவ விமானியால் மீண்டுவர முடியாதா? அப்போ அந்த வெள்ளை நீர்?)
  • விமானத்தின் பாகங்கள் எதேச்சையாக செயல் இழந்துவிட்டன. அதனால்விமானம் கடலினுள் வீழ்ந்திருக்கலாம்.(அப்படியானால், வீழ்ந்த விமானம் எங்கே? விமானம் தொழைந்து அடுத்த நாள் சுமார் 18 கப்பல்களும் 2 நீர்மூழ்கி கப்பல்களும் தேடுதல் வேட்டை நடத்தின எதுவும் சிக்கவில்லை. இதுவரை சிக்கவில்லை!)
மொத்தத்தில், அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட தேடல்கள், ஆராய்வுகளின் பின்னரும் இதுவரை அந்த விமானத்திற்கான பதில் கூறப்படவில்லை. எதிர் காலம் கூறலாம்…
ஃப்லைட் 19 பற்றி போதுமான அளவு பார்த்துவிட்டோம்… இனி மேலும் சில…
29/01/1948 :
AIR MARSHAL AUTHOR CUNNINGHAM விமாணி 6 சிற்பந்திகள் மற்றும் 25 பயணிகளுடன் பேர்முடா தீவில் இருந்து கிழம்பிய விமானம் STAR TIGER இதுவரை தரை இறங்கவில்லை!
28/12/1948 :
”நாங்கள் தெற்கில் 50 மைல் தொலைவில் வந்துகொண்டிருக்கிறோம். மியாமியினுடைய விளக்குகள் எனக்கு மங்கலாகத் தெரிகின்றன. இறங்குவதற்கான விபரங்களுக்காக காத்திருக்கிறேன்.” என கூறிய DOUGLUS DC3 விமானத்தின் விமானி இதுவரை 36 பயணிகளுடன் காத்திருக்கிறார்!
17/01/1949 :
இங்கிலாந்தில் இருந்து 15 பயணிகள் மற்றும் 7 சிப்பந்திகளுடன் புறப்பட்ட STAR ARIEL எனும் சிறிய விமானம். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னராகவே தரை இறங்கிவிடுவோம் என உறுதியாக கூறிய விமானி; இதுவரை விமானத்தை தரை இறக்கவில்லை!
22/09/1963 :
C-132 விமாண விமாணி “விமானத்தின் பயணம் சுமூகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என அறிவித்தார் இதுவரை பயணிக்கிறார்!
28/09/1963 :
KC 135 Jet விமானம் பல நூறு பயணிகளுடன் காணாமல் போனது.
05/06/1965 :
FLYING BOX CAR விமாணம் 10 பயணிகளுடன் காணாமல் போனது.
01/11/1967 :
YC 122 விமானம் நால்வருடன் காணாமல் போனது.
இவை சாதாரணமாக லிஸ்ட் போடும் சம்பவங்கள் இல்லை. இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பை கண்டுக்காமல் விட்டது போன்று இவை விடப்படவில்லை. பல மில்லியன்கள் செலவில் நீண்ட காலமாக பல விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்க்கிக்கப்பல்களின் உதவிகளுடன் தேடல் நடைபெற்றது. ஆனால், எந்த தடையங்களும் சிக்கவில்லை!
எப்படி?
அனைத்துவிமானங்களுமே எங்கே போயின?
இதன் பின்னனி என்ன?
காந்தப்புலமா?
ஏலியன்ஸா?
சூறாவளியா?
அல்லது….

விமானங்களில் திடீர் விபத்துக்கள் நடைபெறும் போது, உயிராபத்துக்கள் அதிகம் இடம்பெறும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. (விமானத்தின் பயணத்தில் திடீர் விபத்து ஏற்படுமாயின்; உதாரணமாக, விமானம் திடீரென நிலைக்குத்தாக பயணிக்க வேண்டி ஏற்படின் அல்லது விமான பாகங்கள் திடீரென இயங்காதுவிடின் பயணிளிக்கு எச்சரிக்கை செய்து அவர்களை பரசூட்* மூலம் காப்பாற்றும் நிலை சாத்தியமற்றதாகிறது.)
இதனால் அப் பகுதியில் விமான விபத்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து தப்பி பிளைத்தவர்களை எதிர்பார்ப்பது கடினம். ஆனால்… கப்பல்களில் அப்படி இல்லை… விமானத்தை காட்டிலும் தப்பிப்பதற்கான விழுக்காடுகள் அதிகம்.
விமானிகள் யாராவது தப்பினார்களா? அவர்கள் சொன்னது என்ன? இவற்றை பின்னர் பார்க்கலாம்.
பேர்முடா முக்கோண வலையத்தில் மர்மமாய்ப்போன கப்பல்கள் தொடர்பாக  ஆராய்வோம்… ஆரம்பத்தில், காணாமல்போன கப்பல்களின் தகவல்களை சிறு ஆய்வுடன் பார்ப்போம்…
பேர்முடா முக்கோண வலையப்பகுதியில் கப்பல்கள் காணாமல் போவது தொடர்பான சம்பவங்கள் 1800 ஆம் ஆண்டில் இருந்தே இடம்பெறத்தொடங்கிவிட்டன…
1800 ஓகஸ்ட்(ஆவணி) மாதம் 340 பயணிகளுடன் கப்பல்(INSURGENT) ஒன்று காணமல் போனது, இந்த சம்பவம் தான் அந்த முக்கோண வலையம் தொடர்பாக மக்களிடையேயும் அரசுகளிடையேயும் பார்வையை செலுத்த தூண்டியது.
ஆரம்பத்தில் அந்த 340 பேரும் கடற்கொள்ளையர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. எனினும், அந்த கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடல்களின் இறந்தவர்களின் உடலோ காணாமல் போன கப்பலோ கண்டுபிடிக்கப்படவில்லை! – எனவே அறிவியல் மட்டத்தை அடையாமல் பேய் முக்கோணம் என்ற நோக்கில் மக்களால் பேசப்பட்ட தொடங்கியது!
1814 / 10 / 09 ஆம் நாளில் மறைந்துபோன 140 பயணிகளுக்கும் கப்பலுக்குமான(WASP) விளக்கம் இல்லை.
1880 / 01 இல் காணாமல் போன 290 பயணிகளுடனான கப்பல்(ATLANTA) தொடர்பான இங்கிலாந்து அரசின் தேடல் எந்த தடையங்களும் இல்லாமல் தோல்வியில் முடிந்தது.
1918 / 03 /04 இல் 309 பயணிகளுடன் பேர்முடா பகுதியில் பயணித்த கப்பல்(USS CYCLOPS) பயணத்தை முடித்தமைக்கான அடையாளம் இல்லை.
இனி புருவத்தை உயற்ற வைக்கும் சற்று வித்தியாசமான மறைவுகளை பார்க்கலாம்…
1951 / 10 / 04, தரை தட்டும் துறைமுகத்தில் இருந்து படகுகளின் உதவியுடன் கடலிற்கு அனுப்ப பட்ட இராணுவ கப்பல் தனது பேமுடாவூடான பயணத்தை தொடங்கியது. பயணம் ஆரம்பிக்கும் போது, கப்பலை கடலில் செலுத்த உதவும் படகு ஒன்றின் இணப்பு துண்டிக்கப்பட்டதால், சிறிது நேரத்தில் இணைப்பை ஏற்படுத்துவதற்காக கப்பலும் மற்ற இணைப்புபடகும் சென்ற் திசையில் சென்றது. ஆனால், சிறிது நேரத்திற்கு முன்னர் சென்ற அந்த கப்பலும் இல்லை படகும் இல்லை!
இன்றுவரை இச்சம்பவம் தொடர்பான எந்த தடையங்களும் கிடைக்கவில்லை. மர்ம்மம் நீடிக்கிறது.
1925 / 04 ஆம் மாதம்… ஜப்பானிய சரக்கு கப்பல் 38 பணியாளர்களுடன் பேர்முடாவலையத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. இறுதியாக துறைமுக கட்டுப்பாட்டகத்திற்கு “உதவி!!! உதவி !!! ஆபத்து ஈட்டி போல வந்து கொண்டிருக்கின்றது. சீக்கிரம் வாருங்கள். எங்களால் தப்பிக்கமுடியாது. காப்பாற்றுங்கள்.” என்ற அலறல் தகவல்கிடைத்தது. அதன் பின்னர் என்னவாயிற்கு என்பதற்கான சான்றுகள் கிடையாது. இது இடம்பெற்றது பஹாமசிற்கும் கியூபாவிற்கும் இடைப்பட்ட பகுதியில்.
1968 / 10 / 31, அன்று பிரபல வர்த்தகரும் அதிவேக கப்பல்கள் ஓட்டுவதில் நிபுணருமான டொனால்ட் குறோஹர்ட்ஸ் விசேட பாதுகாப்புகளுடன் வடிவமைக்கப்பட்ட படகு மூலம் இங்கிலாந்தின் லண்டனில் இருந்து அமெரிக்கா நோக்கிய தனது பயணத்தை பேர்முடா முக்கோண வலையத்தினூடாக திட்டமிட்டு ஆரம்பித்தார். அமெரிக்கா வந்தடைந்த அவர், பேர்முடாவை கடக்கும் போது, தனது படகு பல தொழில் நுட்ப சிக்கல்களை சந்தித்ததாகவும் அவற்றை தான் முறியடித்து பயணத்தை சாதித்ததாகவும் அறிவித்தார். அது, அவரது விளம்பர யுக்தி என பலரும் கூறினார்கள். அடுத்து அங்கிருந்து மீண்டும் லண்டன் செல்வதற்காக புறப்பட்டார்.
லண்டனில் அவரது வருகைக்காக காத்திருந்தவர்கள் தொடர்ந்து காத்திருந்தார்கள். அவர் வரவில்லை.
யூலை 1969 ல் பேர்முடா பகுதியில் தனித்து நின்றிருந்த அவரது படகு கண்டுபிடிக்கப்பட்டது. தான் இனி மீண்டும் வீடு செல்ல முடியாது என்ற வாசகத்துடன் 29,யூன் எழுதிய குறிப்பும் அதில் இருந்தது!

ஏற்கனவே தேவையான அளவிற்கு அங்கு இடம்பெற்ற முக்கியமான மர்ம சம்பவங்களை பார்த்திருந்தோம். இனி, அங்கு என்ன நடக்கிறது? என்ன நடக்கலாம்? என்ற ரீதியில் அறிவியல் கூறுவதையும், ஆய்வாளர்கள் கூறுவதையும், எனக்கு தோன்றுவதையும் பார்க்கலாம். உங்களுக்கு தோன்றுபவற்றை கருத்தில் கூறுங்கள்.
இறுதியாக டொனால்ட் குறோஹர்ட்ஸ் என்பவரின் சம்பவத்தை பார்த்தோம். படகு மட்டும் நிற்க அதில் இருந்த மனிதர் மட்டும் காணாமல் போய் இருந்தார்.
இதே போல், இன்னொரு சம்பவத்தில்…
இராணுவ கப்பல்கள் பேர்முடா முக்கோண வலையப்பகுதியினூடாக சென்ற போது. சுமார் நூறு பேருடன் மூழ்கிப்போனதாக பதியப்பட்ட கப்பல் ஒன்று தனியே நின்றது. சோதனையின் போது மெலிந்த நிலையில் ஒரு நாயும், பயணிகளின் நகைகளும் மீட்கப்பட்டன! ( அந்த நாய்க்குத்தான் தெரிந்திருக்கும் மர்மம்.)
மனித தவறுகள்.
குறித்த பகுதியில் இயற்கையாக ஏற்பட்ட சில விபத்துக்களை தொடர்ந்து, குறித்த பகுதி தொடர்பாக விமான,கப்பல் ஓட்டிகளுக்கு ஆழ்மனதில் ஏற்படுத்தப்பட்டு விட்ட பயம்/பதட்டம் காரணமாகவே விபத்துக்கள் ஏற்பட்டு மாயமாகும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மற்றம்படி அங்கு எந்த மர்மமும் இல்லை என ஒரு சாரார் கூறுகின்றனர்.
மேலும் பேர்முடாவை அண்டிய கடல் நீர் மிகவும் தெளிவானதாகவும் அதே நேரம் அடிக்கடி கால நிலை மாற்றத்திற்கு உட்படும் இடமாகவும் இருப்பதுடன், பேர்முடா முக்கோண வலையத்தை அண்டிய பகுதிகளில் பல கடல் குன்றுகள் காணப்படுவதனால், இலகுவாக தொழைந்து போவதற்கான் சந்தர்பங்கள் அதிகம். எனவே, அடையவேண்டிய இடம் என நினைத்து குன்றுகளை நோக்கி பயணித்து அதன் அருகில் இருக்கும் கூர் பாறைகளின் விளைவாக விபத்துக்குள்ளாகி கப்பல்கள் மூழ்கி இருக்கும். எனவே மனித தவறுதான் என வாதிடப்பட்டது.
எனினும், அக் குன்றுகளை அண்டிய பகுதியில் நடந்த தேடுதலில் எந்த தடையங்களும் கைப்பற்றப்படவில்லை. மற்றும் இக்காரணங்கள் விமானங்களின் விபத்துக்களுக்கும் பொருந்தும் இயல்புகுறைவானதாகையால் இக் கூற்று பலரால் நிராகரிக்கப்பட்டது.
காந்த மையம்.
பேர்முடா முக்கோண வலையத்தில் அதீத காந்த ஈர்ப்பு மையம்(காந்த பாறைகள் என்றும் கூறப்பட்டது.) இருப்பதனால்தான் அதை அண்டி செல்லும் எந்த பொருளும் ஈர்க்கப்படுகிறது… (+ பல சம்பவங்களில் விமானிகளினதும், கப்பலோட்டிகளினதும் திசை அறி கருவியில் வட திசை முற்கள் தாறுமாறாக மாறியதாக, கட்டுப்பாட்டகத்திற்கு இறுதியாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.) என்று ஒரு சாரார் ஆய்வறிக்கை விட்டனர். எனினும், காந்த பாறைக்கான பெளதீக ஆதாரங்கள் இல்லாததால்; ஆய்வாளர்களின் முயற்சியின் படி, எந்த வித உலோகமும் பயன்படுத்தப்படாத நிலையான சிறிய வகை கப்பல்கள் பேர்முடா பகுதியில் உலாவ விடப்பட்டன.
அவற்றிலும் பலது மாயமாய் போனது! எனவே காந்த பாறைகள் என்ற கோட்பாடு அடிபட்டுப்போனது.
கடற்கொள்ளையர்கள்.
கரிபியன் தீவுகளை அண்டிய பகுதியில் நீண்ட காலமாக கடற்கொள்ளையர்களின் வேட்டை நடைபெற்று வந்ததால், காணாமல் போன கப்பல்களின் மாயத்திற்கு காரணம், கடற்கொள்ளையர்கள் தான் என ஒரு சாரார் கூறினர். எனினும், காணாமல் போன கப்பல்களில் இராணுவ கப்பல்களும் அடங்கும். அவற்றை கடற்கொள்ளையர்கள் வீழ்த்தி இருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும்; விமானங்களுக்கு…
(மேலே குறிப்பிட்ட சம்பவத்திலேயே, நகைகள் அப்படியே மீட்கப்பட்டன. மனிதர்கள் வேட்டையாடப்படடதற்கான எந்த அடையாளங்களும் கைப்பற்றப்படவில்லை.)
திடீர் புயல்கள்.
திடீரென ஏற்படும் பாரிய கடல் சூறாவளிகள் காரணமாக கப்பல்கள், விமானங்கள் கடலால் விழுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் திடீர் திடீரென புயல்கள் எழுந்ததற்கான் எந்த சாத்தியமும் விண் ஆய்வுமையங்களில் பதியப்படவில்லை. அதே நேரம் நாம் ஏற்கனவே பார்த்த சில சம்பவங்களில் மனிதர்கள் மட்டுமே காணாமல் போய் உள்ளார்கள். சூறாவளி மனிதர்களை மட்டும்???..
அட்லான்டிஸ் நகரின் விளைவு.
பல காலமாக அமெரிக்க செவ்விந்திய மக்களிடையே இருந்து அன்லான்ட்ஸ் எனும் கடலில் மூழ்கிப்போன மாபெரும் நகரம் பற்றிய கதைகள் உலாவுகின்றன. ஒரு சாரார், இந்த நகரத்தின் கட்டிட வேலைப்பாடுகளினூடாக பாய்ந்து செல்லும் நீரினால் ஏற்படும் சுழற்சியின் காரணமாகவே சில காலங்களில் மட்டும் கப்பல்களும், விமானங்களும் உள் இழுக்கப்படுகின்றன என கூறுகின்றனர்.
பல சுழியோடிகளும் சில ஆய்வாளர்களும் குறித்த பகுதியில் கடலின் அடியில் பிரமிட்டுக்களைப்போன்ற அமைப்புக்கள் இன்றும் அழியாது உள்ளது என கூறுகின்றன. ஆனால், அன்லான்டிஸ் என்ற நகரம் ஆழ்கடலில் இருப்பதற்கான எந்த வித உத்தியோக பூர்வ புகைப்பட ஆதாரங்களும் சிக்கவில்லை.

சிம் காட்(SIM CARD) என்றால் என்ன ?

உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் ஒரு நொடிக்கும் குறைவாக நேரத்தில் தொலைத்தொடர்புகளை இணைக்கும் முக்கிய வேலை கச்சிதமாக செய்கிறது சிம் கார்டில் உள்ள தொழிநுட்பம்.

 சிம் (Sim) என்பது ஒருங்கிணைந்த சுற்றுகளைக் கொண்ட ஒரு சிறிய சிப் ஆகும். இதனுள் பாதுகாப்பட்ட international mobile subscriber identity (IMSI) சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளம் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
மேலும் தனிப்பட்ட வரிசை எண் (ICCID), பாதுகாப்பு அங்கீகார அம்சம் (security authentication), இடுதல் தகவல் (ciphering information), உள்ளூர் வசதிகளுக்கான தற்காலிய தகவல்கள் சிம் கார்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும்அதுமட்டுமல்லாது பயனர்களுக்கு சாதாரண பயன்பாட்டுக்காக தனிபட்ட அடையாள எண் (PIN), தனிப்பட்ட நீக்கல் குறியீடு (PUK) என்ற இரண்டு கடவுச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.சிம்மில் உள்ள முக்கியமான சில Key சந்தாதாரர்களை அடையாளம் காணப் பயன்படுகிறது.
தற்போது 900 மில்லியனுக்கு அதிகமானவர்கள் சிம் கார்ட் மூலம் தொலைத்தொடர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக Department of Telecommunications (DoT) பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொண்டுள்ளது.
ஆரம்ப கட்டத்தில் European Telecommunications Standards Institute சிம் கார்டின் அம்சங்களை TS 11.11 என்ற குறியீட்டில் வரிசைப்படுத்தியது. இது சிம்மின் இயக்கத்தை முழுவதும் விளக்குவதாக இருந்தது.
இதைத் தொடர்ந்து 1991ம் ஆண்டு Giesecke & Devrient என்ற நிறுவனம் சிம் கார்டை வெளியிட்டது. 300 சிம் கார்டுகளை தயாரித்த அந்த நிறுவனம் அதை Finnish wireless network operator Radiolinjaவிடம் விற்றது.
இதுவே சிம் கார்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இந்த சிம் கார்டுகள் 5v, 3v, 1.8v என மூன்று Volt-களில் வெளியானது. 1998ம் ஆண்டு முன்னர் 5v சிம் கார்டுகள் மட்டுமே அதிக பயன்பாட்டில் இருந்தன.
சிம் கார்ட்டின் மையப்பகுதியில் சிப் (Chip) உள்ளது. இந்த Active chip side-ல் தான் மேற்புரப் பரப்பான Metal contact, Bond Wire-ஆல் இணைக்கப்பட்டிருக்கும். இதுவே நமது போனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறது.
Chip பகுதியின் அருகில் Chip Adhesive என்ற அமைப்பும், அதன் மேலே Substrate என்ற அமைப்பும், அதை சுற்றி Encapsulation என்ற அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
hot melt என்ற பகுதி Substrateக்கு கீழே கொடுக்கப்பட்டு, இந்த ஒட்டு மொத்த அமைப்பும் card Body உடன் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இது தான் கண் இமைக்கும் நேரத்தில் பரிமாற்றப்படும் தகவல்களுக்கு காரணமாக உள்ளது.
இந்த தொலைத்தொடர் சேவையில் Data encryption என்ற முறையில் அனுப்பப்படும் தகவலானது பாதுகாப்பாக பரிமாற்றப்படுகிறது. இந்த முறையை 2013ம் ஆண்டு cryptographer and security researcher ஆக உள்ள Karsten Nohl என்பவர் சிம் கார்டுகளில் கொண்டு வந்தார்.
மேலும் 2012ம் ஆண்டு அறிமுகப்பட்டுத்தப்பட்ட Nano Sim புதிய அனுபவத்தை பலருக்கும் கொடுத்து இருக்கும். அதற்கு ஏற்றவாறு தற்போது வரும் ஸ்மார்ட் போன்களும் அந்த அம்சங்களை கொண்டதாக இருக்கிறது.
தொலைத்தொடர்பு துறை பல்வேறு முன்னேற்றங்களை அடைந்திருக்கும் வேளையில் சிம் கார்டுகளில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

முதல் நிலவுப் பயணத்தில் மறைக்கப்பட்டது என்ன?

நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள், நிலவுக்கு செல்லும் முன் தாங்கள் உயிருடன் திரும்புவது சந்தேகம் என்ற நிலையிலேயே பயணத்தை தொடங்கினர்.இதற்காக தங்கள் உயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய முயன்றபோது எந்த நிறுவனமும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை. கிரேய்க் நீல்சன் என்பவர் விண்வெளி பற்றி'ராக்கெட் மேன்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்டு உள்ளார். அந்த புத்தகத்தில் மனிதனின் நிலவுப் பயணத்தில் மறைக்கப்பட்ட சில விஷயங்களையும்,மறக்க முடியாத சம்பவமாக விண்வெளி வீரர்கள் கூறியதையும் தொகுத்துக் கூறி உள்ளார். 

41 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் முதன் முதலில் நிலவில் கால்பதித்தான்.அமெரிக்காவைச் சேர்ந்த நீல்ஆம்ஸ்ட்டிராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய 3 விண்வெளி வீரர்களும் 1969ம் ஆண்டு ஜுலை மாதம் 21-ந்தேதி நிலவில் இறங்கினார்கள்.பரபரப்பாக பேசப்படும் 'ராக்கெட் மேன்' புத்தகத்தில் சுவாரசியமான விஷயங்கள் இதோ… 

திட்டமிட்டபடி இறங்காத விண்கலம்
1. விண்வெளி வீரர்கள் சென்ற அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சிறிது தூரத்தில் சென்றபோது சிறு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இதனால் திட்டமிட்ட இடத்தில் இறங்க முடியாமல்போனது. 31/2 மைல் தொலைவுக்கு அப்பால் சென்று இறங்கியது.

2. அப்போது விண்கலத்தில் பயன்படுத்திய கம்ப்யூட்டர் தற்போது இருக்கும் செல்போன் அளவு வேகம் கூட இருக்கவில்லை. 

3. குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட வேண்டியதாக இருந்தது. ஏனெனில் எரிபொருளுடன் சம்பந்தப்பட்டு வடிகட்டியே பெறப்பட வேண்டியதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் இந்த ஏமாற்றம் நிகழ்ந்தது. அதேபோல் சிறுநீர் கழிப்பது, மலஜலம் கழிப்பது போன்றவற்றுக்கும் மிகுந்த சிரமப்பட வேண்டியதாக இருந்தது. இதனால் மலஜலத்தை நிறுத்தி வைப்பதற்காக விண்வெளி வீரர்கள் மருந்து சாப்பிடும் நிலைக்கு ஆளாகினர்.  

4. அதேபோல் பெரிய விண்கலத்தில் இருந்து ஈகிள் எனப்படும் குட்டி விமானம் மூலம் நிலவில் தரை இறங்கினார்கள். ஈகிளிலும் பிரச்சினை ஏற்பட்டதால் 4 மைல் தூரத்துக்கு அப்பால்தான் தரை இறங்க முடிந்தது. 

5. நீல் ஆம்ஸ்டிராங் ஈகிள் மூலம் நிலவில் இறங்கும்போது அது ஏறக்குறைய எரிபொருள் தீர்ந்து நிலவின் தரையில் மோதுவதுபோல சென்றது. 


6. நிலவில் காலடி வைத்ததை 'மனிதனின் சிறிய அடி' என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதுசிறிய அடியாக இருக்கவில்லை. அவர் ஈகிளின் ஏணிப்படியிலிருந்து 3.5 அடி தாவித்தான் நிலவில் கால் வைத்தார். 

7. ஆம்ஸ்டிராங்கை தொடர்ந்து ஆல்ட்ரின் இறங்கினார். அப்போது ஈகிள் விண்கலத்தின் கதவை பூட்ட முடியாமல் சிரமப்பட்டார். ஏனெனில் அதை வெளியில் இருந்து பூட்டும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. 

கொடியை நடுவதில் சிரமம்
8. நிலவில் இறங்கும் முன்பு நடந்திருந்த ஆய்வுப்படி நிலவின் மணல் மிருதுவாக இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் நிலவில் இறங்கிய பிறகுதான் கடினமாக இருந்தது தெரியவந்தது.மனிதன் இறங்கிய இடம் முழுவதும் பாறையாக இருந்தது. இதனால் கொடியை நடுவதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள்.  

9. நிலவில் நட்ட அமெரிக்கக் கொடி விறைப்பானதாக இருந்தது. ஆனால் அதை நாசா நிறுவனம் மறுத்துவிட்டது. 


10. விண்வெளி ஆடை, அங்குள்ள சூழலுக்கு ஏற்ற கம்ப்யூட்டர் சிப் அனைத்தும் "லிட்டில் ஓல்டு லேடிஸ்'' என அழைக்கப்படும் குழுவினரால் கையால் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த விஷயங்கள் அனைத்தையும் நாசாவின் கருவூலத்தில் இருந்து சேகரித்து தொகுத்து உள்ளார்.
நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள், நிலவுக்கு செல்லும் முன் தாங்கள் உயிருடன் திரும்புவது சந்தேகம் என்ற நிலையிலேயே பயணத்தை தொடங்கினர். இதற்காக தங்கள் உயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய முயன்றபோது எந்த நிறுவனமும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை.
இதனால் தங்களின் நினைவுச் சின்னங்களாக சில பொருட்கள், ஓவியங்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டே விண்வெளி வீரர்கள் பயணத்தை தொடங்கினர்.இந்த விஷயங்கள் ஏற்கனவே விண்வெளி வீரர்களால் வெளிப்படுத்தப்பட்டு பல நூல்களில் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'ஹெர்ட்ஸ்'' என்றால் என்ன? Hertz

கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் பற்றிப் பேசுகையில் நாம் அடிக்கடி ''மெகா ஹெர்ட்ஸ்'' மற்றும் ''கிகா ஹெர்ட்ஸ்'' என்று பேசுகிறோம், படிக்கிறோம். இந்த ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது? ஏன் இந்த பெயர் வந்தது
                       ஹெர்ட்ஸ் என்பதனை சுருக்கமாக Hz என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம். இது ஜெர்மன் பிசிக்ஸ் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப்பட்டது. ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு (ரேடியோ அலைவரிசையில்) கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது.

                      சி.ஆர்.டி. மானிட்டர் (டிவி பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. ஆனால் அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண் கெட்டுப் போகும். எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டு விட்டுக் காட்டப்படுகையில் இடைவெளி தெரிவதில்லை. எடுத்துக் காட்டாக 85 Hzஎன்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின் வாங்கப்பட்டு மீண்டும் காட்டப்படுகிறது. அத்தனை முறை காட்டப்படுவதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.

மெஹா ஹெர்ட்ஸ் Mehahertz (MHz) ஒரு மெஹா ஹெர்ட்ஸ் என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படுகின்றன. இது எப்படி ஏற்படுகிறது என்பதனை படமாகவோ அல்லது வேறு வழியாகவோ விளக்குவது கஷ்டம். கம்ப்யூட்டர் பிராசசரைப் பொறுத்தவரை மெஹா ஹெர்ட்ஸ் என்பது மிகவும் சாதாரணம். ஒரு கம்ப்யூட்டர் பிராசசர் உள்ளாக அமைந்த ஒரு கடிகார துடிப்பினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப்படுகிறது. எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப்படுகிறது. இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப் படுகிறது.

                    முதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன. அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள். தற்போதைய பெண்டியம் 4 கம்ப்யூட்டர் பிராசசர் 3.2 கிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டுள்ளன. (ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ்.) எனவே கணக்குப் போட்டு இந்த அதிவேக துடிப்புகளை உணர்ந்து கொள்க. கிஹா ஹெர்ட்ஸ் Gigahertz (GHz) கம்ப்யூட்டர் உலகில் இது கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ். தற்போது வரும் கம்ப்யூட்டர் பிராசசர் வேகம் இந்த அளவிலேயே சொல்லப்படுகிறது

வியாழன், 25 பிப்ரவரி, 2016

பெருந்தலைவர் காமராஜர் ஒரு நாத்திகவாதி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

பெருந்தலைவர் காமராசர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் வந்த நேரத்தில் ஒரு கிராமத்தின் பாழடைந்த கோயிலைப் பார்த்தார். அக்கோயில் பழம்பெருமை வாய்ந்தது. ஆனாலும், சிதிலமடைந்து கிடந்தது. சுற்றுப்புற மதில்கள் உடைந்தது.

அது பிரகாரம் திறந்து கிடந்தது. அங்கங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கோயில் கோபுரத்திலெல்லாம் மரம், செடி, கொடிகள் வளர்ந்துகிடந்தன. கோயில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து மணியடிப்பார். சற்றும் எதிர்பாராமல் தலைவர் கோயிலுக்குள்ளே போய்விட்டார். சுற்றியிருந்த நாங்களனைவரும் அவருடன் சென்றோம். நான் கடவு ள் நம்பிக்கையில்லாத நாத்திகன். இது தலைவருக்கும் தெரியும். தலைவர் கோயில் வாசலில் இருந்த கல் வெட்டுகளை யெல்லாம்பார்த்தார். புதராக மண்டிக்கிடந்த சாசனங்களையெல்லாம் துடைத்துவிட்டுப் பார்த்தார். பலிபீடம், கொடிமரம் , நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார்.


இவரது ஒவ்வொரு செய்கையும் கட்சிக்காரர்களுக்கு வியப்பாயிருந்தது. கோயிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப் போகாமல், எது எதையோ பார்த்துக் கொண் டிருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக் கொண்டனர். ஆனால், எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும், கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வாங்கிக் கொள்வார். விபூதி பூசிவிட்டால் மறுக்கமாட்டார். பரி வட்டமும் கட்டிக் கொள்வார். தீபாராதனையைத் தொட்டுக்கொள்வார். கோயிலை விட்டு வெளி யில் வந்த மறு நிமிடமே பழம், தேங்காய் மூடி, மாலை களை யார் பக்கத்திலிருக்கிறார்களோ அவர்களிடம் கொடுத்து விடுவார். விபூதி , குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துப் போக மாட்டார். பையில் பத்திரப் படுத்தவும் மாட்டார். அதற்குப்பெரிய முக்கியத்து வமும் கொடுக்கமாட்டார். கேட்டால், கோயில்ல செய்ற மரியா தையை வாங்கிக்க ணும் அதுதான்மனுஷ நாகரிக ம். குரு க்கள், அறங்காவலர், ஊர் ஜனங்க மனசு புண்படக் கூடாதில்லியா…. அதுக்கு மேல அதில ஒண்ணு மில்லே…!” என்பார்.தலைவர் இந்தக் கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையி லேயே அந்தக் கோயிலின் குருக்களும், அறங் காவலரும் வந்துவிட்டனர். பிரகாரத் தைச் சுற்றிவந்த தலைவர், குருக்களைப் பார்த்து, “ இக்கோயிலக் கட்டி எவ்வளவு காலமாச்சு…?” என்றார். குருக்களும், நிருவாகிகளும் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர். “ஏன்ய்யா… குருக்கள்…. நீங்க எவ்வளவு காலமா இந்தக் கோயிலுக்கு மணியடிச்சிகிட்டு இருக்கீங்க…. இந்தக் கோயில பத்தி ன ‘தல வரலாறே’ உங் களுக்குத் தெரியாதா…? எந்த வருஷத்து வண்டி? எத்தனை கிலோ மீட்டருக்கு எவ்வளவு பெட்ரோல் ஆகும்னு தெரியாம, ஒரு டிரைவர் அந்தக் காரை ஓட்டலாமான்னேன்?” என்று காமராசர் ஆரம்பித்ததும் குருக்கள் உள்பட எல்லோரும் ஆடிப் போ னார்கள்.தலைவரே மேலும் தொடர்ந்தார். இக்கோயிலக் கட்டி எண்ணூத்து எழுபது வருஷத்துக்கு மேலாகுது. சோழமாதேவி தானமா கொடுத்த “இறையிலி” நிலங்கள்தான் இந்தக் கோயில சுத்தி இருக்குது. இந்த ஊரும், இந்தத் தாலுக்காவுமே இந்தக் கோயில் சொத்துதான். அதி லேருந்து வர்ற வருமானத்துலதான் சாமிக்குப் பூஜை, புனஸ்காரமெ ல்லாம் பண்ணணும். குத்தகைதாரர்கள் அளக்கிற பகுதி நெல்லை வாங்கித்தான் சாமியாடிகளுக்கும், தேவரடியார்களுக்கும், பூக்குடலைத் தூக்குறவங்களுக்கும் சம்பளம் போடணும். சாமி நெலத்த விவசாயம் பண்ணிச் சாப்பிட்டுக் கிட்டிருக்கிற ஒருத்தனும் ஒரு பிடி நெல்லைக்கூட கோயிலுக்கு அளக்கலப்போலிருக்கு அதனாலதான் சாமி இருட்டில கிடக்குன்னேன்.. !” என்று காமராசர் பேசப்பேச அத்த னை பேரும் அதிர்ந்து போய் நின்றனர். அந்தக் கோயில் சொத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த ‘பெருச்சாளிகள்’ பலரும் அங்கே நின்றுகொண்டிருந்தனர்.தங்கள் அடிமடியிலேயே கை வைக்கிறாரே என்று அந்தக் குத்தகைதாரர்கள் நடுங்கிப்போயிருக்க க் கூடும். இதற்குள் குருக்கள்மார் சிலர் வந்து, ‘பிரசாதம், பொங்கல், வடையெல்லாம் தயாரா இருக்கு!’ என்று ஆரம்பித்தனர். “சாமியை இருட்டில போட்டுட்டு ஆசாமியெல்லாம் சாப்பிட்டு கிட்டிருக்கீ ங்க. பொங்கல், வடையையெல்லாம் ஏழை ஜனங்களுக்கு, சேரிப்பிள் ளை களுக்குக் கூப்பிட்டுக் கொடுங்க…!” என்று சொல்லிவிட்டு வேகமாகத் தலைவர் கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டார். அறங்காவலர் குழு திகைத்துப் போய் நின்றது.தலைவர் அடுத்த ஊர் நிகழ்ச்சிக்குப் போவதற்காகக் காரில் ஏறினார். நானும் அவரோடு பயணம் செய்தேன்.

“கடவுள்பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்… பூஜை, வழிபாடு, நேம, நைவேத்தியங்கள் பற்றி அவரது கருத்து என்ன?” என்பதையெ ல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இதுதான் சரியான வாய்ப்பு என்று எண்ணி நான் தலைவரிடம் மெல்ல ஆரம்பித்தேன்.

“கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா… ?”

“இருக்கு, இல்லைங்கிறதைப்பத்தி எனக்கு எந்தக்கவலையும் கிடை யாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்த னா இருக்கறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணி கிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப்போச்சா…?” (என்றார்).

நான், “கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கை யும் ஒண்ணாயிருக்கும் போலிருக்கே…” என்று ஆரம்பிக்கவும். அவ ரே, “ஆதிஸ்டு(Athiest)ன்னு” சொல்றீயா …? நேரு ரெண்டப்பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனா… மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரும்ணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார்.. அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையில போடணு ம்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச்சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிறதத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும்… ஏற்றத் தாழ் வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றா ங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவலைப்படு தான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவதுதான் முன் னேறணும்னுதானே ஒவ்வொரு மடாதிபதியும் நினைக்கிறான்… இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா…?” (என்று கேட்டார்).

நான் உடனே, “அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதா ன் நீங்களும் நினைக்கிறீங்களா…?

இருந்திருந்தா இந்த அயோக்கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப் பாரே…! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதி ன்னு படைச்சிருக்க மாட்டாரே …?” என்றேன். “மேல் ஜாதி, கீழ் ஜாதி யெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற்பாடு ன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன் சூத்திரன்…? ரொம்ப அயோக்கியத்தனம்…!” (என்றார் காமராசர்).

(எனக்குள் பெருமையும், பூரிப்பும் பிடிபடவில்லை. காமராசரைக் கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்ய வேண்டும் போலிருந்தது. இவரு க்குள் இவ்வளவு சிந்தனை ஊற்றா…..? இத்தனை கம்பீரமா? அடங் காத சீற்றமா? ஆத்திர நெருப்பா? அவர் பேசப்பேச நான் வானுக்கும், பூமிக்குமாய்க் குதித்தேன்.)

“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழு நாத்திகராய் அறிவித்துக் கொள்ள வில்லை…?” (என்று கேட்டேன்).

“நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி – ஆத்திகவாதி எல் லாருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷ ன்” னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே. அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடி யாது. நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக்கொள்கை. அரசியல் வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொ டுக்க வேண்டியது, அரசியல்வாதியோட கடமை. அந்தக்கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்ன் (Govern)” பண்றவனோட வேலை. “நான் நாத் திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடி யாது. கம்யூனிச சமுதாயத்திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே …! தனிப்பட்ட முறையில நான் கோவில், பூஜை, புனஸ்காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமை கள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்”(என்று மிகத் தெளிவாகப் பேசினார்).

“அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனை யெல்லாம் பண்றதில்லை யா…?”(எனக்கேட்டேன்).

“அதெல்லாம் வேலை, வெட்டியில்லாதவன் பண்றதுன்னேன். அடு த்த வேளை சோத்துக்கில்லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத் ராடனம்’ போறான்… எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலைன்னு இவன்கிட்டே கோவிச்சுகிட்டான்….?’ அபிஷேகம் பண் றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன்…. அந்தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ்டியாவாவது வளருமால்லியா…? “பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனு க்குப் பி.ஹெச்.டியா கொடுக்கிறாங்க…? பதினெட்டு வருஷமா கடன் காரனா இருக்கான்னு அர்த்தம். பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் ஸ்டேடஸ்(Social Status)’க்காக. நாலு பேர் தன் னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக.ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோ ர் இல்லத்துக்கோ கொடுக்கலா மில்லியா….” ஊருக்கு நூறு சாமி… வேளைக்கு நூறு பூஜைன்னா…. மனுஷன் என்னிக்கு உருப்படறது…? நாட்டுல வேலையில்லாத் திண் டாட்டம். வறுமை – சுகாதாரக்கேடு. ஏற்றத்தாழ்வு இத்தனையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு…. பூஜைன்னேன்…..? ஆயி ரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக் குன்னேன்…?” (தலைவர் போடு, போடு என்று போட்டுக் கொண்டு வந்தார். அவருக்குள் ஆயிரம் இங்கர்சாலை, பெரியாரை நான் கண் டெடுத்தேன்).

“அப்படியானா. நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா… இல் லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?” என்று கேட்டேன்.

அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல், “லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர் கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம் மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திரு ப்பான். அவன் செத்தும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கி றவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டு தான் இருப்பாரா …? “அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடா தேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினேஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவ ராயன், கழு வடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்….? அவனவனும் அவனவன் இஷ்டத் துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டா க்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்… காங்கிரஸ் – கம்யூ னிஸ்ட் – தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்… மதம் மனி தனுக்குச் சோறு போடுமா…? அவன் கஷ்டங்களப் போக்குமா…? இந் தக் குறைந்தபட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு…? உலகத் துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா… நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே…! நாட்டு க்கு நாடு யுத்தமே வருதே….! இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொ ன்னான்…?” (தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார், ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடி வை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.)

“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளா க்கிட்டானே! அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?” (என்று வினாத் தொடுத்தேன்).

(தலைவர் குலுங்கக் குலுங்கச்சிரித்தார்.) “டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்….? ராமன், கிருஷ்ணன் கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்….! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதா நாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா… அது மாதிரி அக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும், கிரு ஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல் லப்பட்டிருக்கிற விஷயங்கள எடுத்துக்கணும். ஆசாமிய விட்டுபுட ணும்.”….காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக்கணக்கான மக்க ள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்ச தும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப்பாக்குறானுங்க களவாணிப்பசங்க…. புரா ணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதை யை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவராத்திரி கதையைச் சொல் லி சரஸ்வதி பூஜை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாய கருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். நான் தீபா வளி கொண்டாடுனதுமில்ல… எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல … புதுசு கட்டுனதுமில்ல… பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன் னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம கலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்…” (என்று விளக்கினார்).

“மதம் என்பதே மனிதனுக்கு அபின்…!” அப்படிங்கிற கருத்து உங்களு க்கும் உடன்பாடுதான் போலத்தோணுதே…?” என்று ஒரு கேள்வியை ப் போட்டேன்.

தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனித னைச்சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல… பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனா ட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா…? ஏழை வீட்டுப் பெண் ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் லட்சக்க ணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடு ப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க்கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுக் கலாமில்லையா? அதையெல்லாம் செய்யமாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தி யே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்ச வனே அப்படித்தான் இருக்கான்னேன்….” (என்றார்).

“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா…? அதிலேருந்து எப்போ விலகுனீங் க…?”

இது நான். “சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளி யம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்து கிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக் கச்சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போ யும், போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு… எல்லாம் ‘பார்பர் ஷாப்(Barber Shop)’காரன் ‘செட்-அப்’ அப்புடீன்னு சிந்திச் சேன். விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப் பானா…?” (என்று கேட்டுவிட்டு விழுந்து, விழுந்து சிரித்தார்.)

“அப்படியானா… மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம் னு சொல்றாங்களே… அதப்பத்தி….?” என்று கேட்டேன்.

“அடுத்த மனுஷன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளு க்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா… தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்மள வாழ்த்தும்னேன்…!”

காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிட மே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லா மல் நடந்துபோன சிறுவர்களைப் பார்த்து, “ஏன் பள்ளிக்கூடம் போக லியா?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.

-நன்றி:

திரு. சீர்காழி பெ. எத்திராஜ் – முன்னாள் மேலவை உறுப்பினர்) தமிழ் ஓவியாவின் பக்கத்திலிருந்து . . .