வெள்ளி, 27 செப்டம்பர், 2019

கசோகி கொலை : சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல்

உலகையே பரபரப்புக்குள்ளாக்கிய பத்திரிகையாளர் கசோகி கொலை சம்பவத்தில் ஒரு ஆண்டுக்கு பின் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் கட்டுரையாளராக விளங்கியவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால் கசோகி, இவர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதி வந்ததால் சவுதி அரேபியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபுகுந்தார்.

இதனிடையே தன் காதலியைத் திருமணம் செய்து கொள்ள  துருக்கி சென்றிருந்தார் கசோகி. திருமணத்துக்கான ஆவணங்களைப் பெறுவதற்காக இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதியன்று துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் சென்ற நிலையில் மாயமானார். 
அவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரசு கூறியதுடன், இந்த கொலையில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அதிரவைத்தது. இதற்கான ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் துருக்கி கூறியது.

உலகையே அதிரவைத்த பத்திரிகையாளர் கசோகி கொலை சம்பவத்திற்கும் சவுதி அரேபிய அரசுக்கும் தொடர்பு இல்லை என சவுதி மறுத்தது.

இந்நிலையில் ஐ.நா சபையின் சிறப்பு நிபுணர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு கசோகி கொலை சம்பவம் குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. கசோகி கொலை தொடர்பாக அமெரிக்காவின் புலணாய்வு அமைப்பான CIAவும் விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே கசோகி கொலை தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான Frontline பத்திரிக்கையாளர் மார்டின் ஸ்மித், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேட்டி கண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கசோகி கொலை கொலை சம்பவத்தில் எனக்கு எல்லாப் பொறுப்பும் உள்ளது, இருப்பினும் இக்கொலை எனது கவனத்திற்கு வராமல் நடைபெற்ற ஒன்று என கூறினார் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர்.

கடந்த ஒரு ஆண்டாக கசோகி மரணம் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வந்த நிலையில், திடீரென இந்த கொலை சம்பவம் குறித்து சவுதி பட்டத்து இளவரசர் ஒப்புதல் தெரிவித்துள்ளது உலக அரங்கை பரபரபாக்கியுள்ளது.

இந்த பேட்டியின் முழுமையான கலந்துரையாடலும் அக்டோபர் 1ம் தேதி இரவு 8 மணிக்கு  PBS Video App வாயிலாக  வெளியிடப்படும் என Frontline தெரிவித்துள்ளது.

கசோகியின் மரணத்திற்கு பிறகு கடந்த டிசம்பர் மாதத்தில் அவரின் சேவையை கவுரவிக்கும் விதமாக 2018ம் ஆண்டின் சிறந்த மனிதர் என அறிவித்ததுடன், கசோகி ‘உண்மையின் காவலன்’ என புகழாரம் சூட்டியிருந்தது நினைவுகூறத்தக்கது.


கஷோகி கொல்லப்பட்ட கதை :


 

சனி, 21 செப்டம்பர், 2019

உலக அமைதி நாள் செப்.21, 2002

ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் உலக அமைதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

போலி செய்திகளை பரப்பி வந்த ஆயிரக்கணக்கான அக்கவுண்டை முடக்கியது டுவிட்டர்

வாஷிங்டன்:

நவீன உலகில் செய்தி ஊடகங்களை காட்டிலும் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் செய்திகள் வேகமாக பரவி வருகின்றன. அதிலும் குறிப்பாக சமீப காலமாக சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவுவது அதிகரித்து வருகிறது. இந்த போலி செய்திகள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சில டுவிட்டர் கணக்குகளில் இருந்து இந்திய ராணுவத்தினர் காஷ்மீர் மக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக போலியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். குறிப்பாக 'கேம் ஆப் திரோன்ஸ்’ திரை தொடரில் வரும் நடிகையின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த பெண்ணின் கண் பார்வை இழப்புக்கு காரணம் இந்திய ராணுவத்தினர் என போலியான செய்திகள் பரப்பினர்.

மேலும், அசாம், ஜார்க்கண்ட் உள்பட பல மாநிலங்களில் குழந்தை கடத்தல் சம்பவங்களில் பலர் ஈடுபடுவதாக சமூக வலைதளங்களில் போலியாக பரவிய செய்திகளால் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இதுபோன்ற போலி செய்திகள் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு விவகாரங்கள் தொடர்பாக போலி கணக்குகள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த சமூக வலைதள நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் போலி டுவிட்டர் கணக்குகள் மூலம் போலி செய்திகளை வெளியிட்டு வந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் இன்று முடக்கியுள்ளது.

அமெரிக்கா, சீனா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செயல்பட்டு வந்த போலி டுவிட்டர் கணக்குகளை நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

2600 ஆண்டுகள் பழமையானது தமிழர் நாகரிகம் - உலகின் மூத்த குடிகள் என நிரூபித்த கீழடி ஆதாரங்கள்!


சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் 47 லட்ச ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கிய அகழாய்வில் இதுவரை பழங்காலக் கோட்டைச் சுவர், உறைகிணறு, பானை, பானை ஓடுகள், மூடிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், கீழடியில் செய்யபட்டு வரும் ஆய்வு குறித்து தமிழக தொல்லியல்துறை ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வைகை நதிக்கரை நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிடபட்டுள்ளது. கீழடியில் கிடைத்த பொருட்களை, அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகதில் செய்யபட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

தமிழ்-பிராமி எழுத்து வடிவத்தின் காலம் கிமு.5 ம் நூற்றாண்டு என அழகன் குளம் ,கொடுமணல் , பொருந்தல் அகழாய்வின் படி கருதபட்டு வந்த நிலையில் கீழடி ஆய்வின்படி இன்னும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என தெரியவந்துள்ளது.
மேலும் கீழடியில் வாழ்ந்த சங்ககால சமூகம், வேளாண்மையயும் கால்நடை வளர்ப்பையும் முதன்மை தொழிலாக கொண்டிருந்ததாக புனே டெக்கான் கல்லூரியில் எழும்புகளை பகுப்பாய்வு செய்த அறிக்கையின் மூலம் தெரியவந்திருக்கிறது.
கீழடியில் உள்ள கட்டுமான பொருட்களை ஆய்வு செய்ததில் செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. இந்த சுண்ணாம்பு சாந்தில் 97% சுண்ணாம்பு காணப்படுவதால் இன்று வரை நீடித்திருப்பதற்கு இதுவே காரணம் என்று சொல்லபட்டு இருக்கிறது.

கீழடியில் உள்ளூர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தண்ணீர் மற்றும் சமையலுக்கான பானைகளை தயாரித்துள்ளனர். நெசவு செய்யும் தொழிற்கூடம் இருந்ததை கட்டுமானங்கள் ,தொல் பொருட்கள் உறுதிசெய்துள்ளது.
தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ’குவிரன்’ ’ஆதன்’ போன்ற பெயர்களும் முழுமை பெறாத சில எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. தங்கத்திலான பெண்கள் அணியும் ஏழு தங்க துண்டுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல் மணிகள், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள் ஆய்வில் கிடைத்துள்ளது.

இந்த ஆய்வில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650க்கும் மேற்பட்ட் விளையாட்டு பொருட்கள், 35 காதணிகள்,அணிகலன்கள்,தங்கம்,செம்பு இரும்பு போன்ற உலோக தொல்பொருட்கள் கிடைதிருந்தாலும் வழிபாடுகள் தொடர்பான தொல்பொருட்கள் எதுவும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கபெறவில்லை என்று அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது.
இந்த ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதின் மூலம் தமிழில் சங்ககாலம் இன்னும் பின்நோக்கி செல்லக்கூடும் என்றும் மிகவும் தொன்மையான நாகரீகம் என்று கருதப்படுகிறது.

#keeladi 

சனி, 7 செப்டம்பர், 2019

தகவல் தொடர்பை இழந்தது விக்ரம் லேண்டர் - இஸ்ரோ தலைவர் சிவன்

பெங்களூரு:

இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலாவை ஆய்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 என்ற விண்கலம் நிலாவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, நிலாவில் அடுத்தகட்ட ஆய்வு பணிகளை செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து சந்திரயான்-2 விண்கலத்தை தயாரித்தனர்.

இந்த விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 பகுதிகளை கொண்டது. இந்த 3 பகுதிகளிலும் அதி நவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றை சுமந்து கொண்டு சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணுக்கு புறப்பட்டது.

கடந்த 2-ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் அமைப்பு தனியாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணித்தது. 2 தடவை விக்ரம் லேண்டரின் சுற்றுவட்ட பாதை குறைக்கப்பட்டு நிலவுக்கு மிக அருகில் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்லத் தொடங்கியது. 400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கியதாக தெரிய வந்தது. நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எந்த வித சிக்னலும் வரவில்லை எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

இதனையடுத்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில் விக்ரம் லேண்டர் 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது தகவல் துண்டிக்கப்பட்டதாக அறிவித்தார்.

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார்.

India's Chandrayaan-2 Vikram moon lander status a tense mystery