வெள்ளி, 6 செப்டம்பர், 2013

உலக எழுத்தறிவு தினம் / World Literacy Day - செப்டம்பர் 8

ஏற்றம் தரும் எழுத்தறிவு - உலகம் முழுவதும் ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
World Literacy Day
கல்விக்கு அடிப்படையாக விளங்குவது எழுத்தறிவு. இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம். எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை; அவசியம்; கட்டாயம். உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக செப்., 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை.எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இருதயமாக உள்ளது. எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும். எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். இது இன, மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எழுத்தறிவு பெற்ற பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கமாட்டர்.வயது வந்தோரில் 10 கோடி பேர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர். உலகில் எழுத்தறிவற்றவர்களில் மூன்றில் 2 பேர் பெண்கள். எழுத்தறிவற்றவர்களில் 98 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். ஆப்ரிகா கண்டத்தில், எழுத்தறிவு சதவீதம் 60க்கும் குறைவு. வளரும் நாடுகளில் 6 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளில் 15 சதவீதம் பேர் பள்ளி செல்லவில்லை என யுனெஸ்கோ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இலங்கையில் கடுமையான யுத்தகாலங்களில் கூட எம்மக்கள் கல்வியை பொருளாதார மூலதனத்துக்காக பயன்னடுத்தினார்கள் என்றால் அது மிகையாகாது. நாகரீகம் என்ற பெயரில் தாய்மொழியை மறந்து வாழும் பல இனத்தவர்களில் நாங்கள் வேறுபட்டு இருக்கின்றோம். புலம்பெயர்ந்து போகும் போது கல்வியையும் தாய் தமிழையும் உலகம் பூராவும் கொண்டு சென்றவர்கள் இதற்கு எடுத்துக்காட்டு.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு ..கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...தினம் தினம் பல பாடம்களை நாம் படித்தும் கேட்டும் வருகிறோம் ..நமக்கு தெரிந்ததை அனைவருக்கும் கற்றுகொடுப்போம் ..வாருங்கள் நல்ல நாளைய சமுதாயத்தை உருவாக்குவோம்....நண்பர்களே..அன்பு நண்பருக்கு ஒரு வேண்டுகோள்...இன்னும் பல பேர் ஆங்கிலத்தை அப்படியே டைப் செய்து வெளியிடுகிறீர்கள்..
ஆக உங்களுக்கு தமிழ் மொழியை முக நூலில் மற்றும் இணையத்தில் கையாள தமிழ் மொழியறிவு தேவை படுகிறது..
இதோ உங்களுக்கான சரியான தெரிவு...
நல்ல விஷயத்தை நாம் அனைவருக்கும் தெரியும் வண்ணம் ஏன்நம்ம தாய் மொழியான தமிழ் இல் பகிர்ந்து கொள்ள கூடாது.. நீங்கள் உங்களது post இல் இந்த http://www.google.co.in/transliterate/indic/tamil மற்றும் http://tamil.changathi.com/ ஆகிய url ஐ பயன்படுத்த கூடாது..நாங்கள் அனுபவிக்கும் இந்த தமிழின் இனிமையை ஏன் நீங்களும் முயற்சிக்க கூடாது....எனக்கு என்னமோ நீங்கள் முயற்சி செய்தால் இதை வெற்றி பெற செய்யலாம் என்று கருதுகிறேன்.....யோசியுங்கள் தோழர்களே...நம்ம தாய் மொழியை இனிதவறாது  பயன் படுத்துவோம் .
Type in Tamil - Google Transliteration....www.google.co.in
 நேரடியாக முகநூளில் நமது இனிய தமிழைப் பதிப்பதை விட, இது சற்று சிரமமான செயலே. முதலில் இகலப்பை Ekalappai
( www.tavultesoft.com/forums/category.php?ForumCategoryID=82) என்னும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து இணைய இணைப்பு இல்லாநேரங்களிலும் கூட தட்டச்சு செய்ய முடிந்தது. தவிர முகநூளில் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய முடிந்தது. ஆனால் இலவசமாக இருந்த அந்த மென்பொருள் கட்டணம் செலுத்தி தான் பெறமுடியுமென்ற சூழ்நிலை. மொழி மாற்றத்திற்கு உட்படுத்துவதில் (http://tamil.changathi.com/ ) ஐ விட (http://translate.google.co.in/?hl=en&tab=wT#en/ta/internet) டே சிறந்தது. ஆங்கிலத்தில் தெரிந்த ஒரு சொல்லுக்கு தமிழில் ஏறக்குறைய சரியான தமிழ் சொல்லையும் அறிந்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. மீக்க மகிழ்ச்சி தமிழில் எழுத ஊக்கப்படுத்தியமைக்கு. முகநூளிலும் நேரடியாக பதிக்கக் கூடிய, எழுதக் கூடிய தமிழுக்கான இலவச மென்பொருள் இருந்தால் எமக்கு செய்தி அனுப்புங்கள். மிக்க உதவியாக இருக்கும். வாழ்த்துக்கள்.
Tamil - eKalappai Keyboard - Tavultesoft
www.tavultesoft.comகற்றது கையளவு கல்லாதது உலகளவு ...தினம் தினம் பல பாடம்களை நாம் படித்தும் கேட்டும் வருகிறோம் ..நமக்கு தெரிந்ததை அனைவருக்கும் கற்றுகொடுப்போம் ..வாருங்கள் நல்ல நாளைய சமுதாயத்தை உருவாக்குவோம்....