வெள்ளி, 27 ஏப்ரல், 2018

அண்ணாவியார் கலாபூசணம் "அன்ரனி பாலதாஸ்"


ஈழத்தின் பாஷையூரைச் சேர்ந்த அண்ணாவியார் கலாபூசணம் "அன்ரனி பாலதாஸ்" அவர்கள் (26.04.2018) தனது பிறந்த நாளிலேயே காலமானார். கலைப்பாரம்பரியத்தை பாதுகாத்து, வளர்த்து அடுத்த தலைமுறைக்குக் கொடுத்த பெருமைக்குரியவர். வையகத்து வாழ்வாங்கு வாழ்ந்து தன்னை நாடகக்கலைக்காய் அர்ப்பணித்தவர். திருமறைக்கலாமன்றத்தின் பொக்கிஷம். கலைவழி, இறைபணி கண்ட அன்புள்ளம் கொண்டுள்ள தன்னிகரற்ற மனிதருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி. அவரது ஆன்மா இறைவனில் சாந்திபெற வேண்டுகிறேன்.


(புகைப்படம் - 18.01.2018) அண்ணாவியருடைய இல்லம்.
'உடல்' - உலக நாடக அரங்கியல் பத்திரிக்கைக்காக,
பலமணி நேரமாய் அவருடன் உரையாடிநேர்கண்ட நெகிழ்ச்சியான தருணங்கள்...








செவ்வாய், 17 ஏப்ரல், 2018

வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்

அர்ஜென்டினாவின் சாண்டா பெ நகரின் வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

அர்ஜென்டினாவின் சாண்டா பெ நகரின் தெருவில்  நடந்து செல்லும் ஒரு விசித்திரமான மிருகம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வினோத விலங்கு  பாதி மனிதனாகவும், பாதி மிருகமாகவும் இருந்து உள்ளது.  இந்த மிருகம்  கேமராவில் பிடிபடுவதற்கு முன்னதாக இரண்டு நாய்களைக் கொன்றதாக கூறப்படுகிறது.

இந்த மிருகம் ஜெர்மன் ஜெப்பர்ட் நாய் போலவும்,  ஒட்டகத்தை போன்ற  நீண்ட கழுத்துடனும்  சிறிய தலையுடனும் இருந்து உள்ளது. சமூக வலைதளத்தில்  2005 ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு உயிரினத்தை சந்தித்ததாக ஒரு நபர் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்னொருவர் லத்தீன் காட்டுப்பகுதியில்  இருக்கும் சுபாக்காப்ரா என அறியப்பட்ட உயிரினத்தைப் போன்ற ஒரு வாம்பயர் என கூறி உள்ளார்.

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளி சுற்றுப்பாதையில் கருவுற முடியுமா நாசா ஆய்வு

புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளி சுற்றுப்பாதையில் கருவுற முடியுமா என்பதை ஆய்வு செய்ய நாசா மனித விந்தை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கிறது.

வாஷிங்டன்

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து உள்ளன. பூமியிலிருந்து 418 கி.மீ தூரத்தில் இந்த விண்வெளி  ஆய்வு மையம் அமைந்து உள்ளது. விண்வெளி மையத்தின் கட்டுமான பணிக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை 3 வீரர்கள் சென்று திரும்புகின்றனர்.

சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலவுகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் அங்குள்ள மனித வாழ்க்கைக்கு ஏதுவான சூழல் தொடர்பான ஆய்வுகள் அங்கு நடந்து வருகிறது.  அமெரிக்காவின் நாசா மட்டுமல்லாமல் உலகின் பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அதன் விளைவாக, ‘விண்வெளியில் மனிதன் வாழ முடியுமா?’ என்ற அடிப்படையான கேள்வி தொடங்கி, அங்கு வாழத்தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்புகள் உள்ளிட்ட பல தகவல்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட வண்ணமாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், விண்வெளிச் சுற்றுச்சூழலில் மனிதன் வாழக்கூடிய காலம் வரும்போது விண்வெளியானது மனித உடலில் எந்த வகையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பான ஆய்வுகள் கடந்த பல வருடங்களாக நடந்து வருகின்றன.

பூமியில் உள்ளது போல விண்வெளியில் ஈர்ப்பு சக்தி கிடையாது. இதனால், விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் அனைவரும் அந்தரத்தில் மிதந்தபடியே பணிகளை மேற்கொள்கிறார்கள். அதற்கான பயிற்சியும் பூமியில் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், விண்வெளியிலேயே அவர்கள் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு விஞ்ஞானிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  இந்த நிலையில்  மனிதன் சுற்றுப்பாதையில் கருவுற முடியுமா என்பதைப் பார்க்க நாசா மனித விந்தை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கிறது.

நாசாவின் மைக்ரோ -11 திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது, இதில் உறைந்த மனித மற்றும் காளை விந்தணுக்களின் மாதிரிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

பால்கோன் 9 இன் டிராகன் மறு-விநியோக காப்ஸ்யூல் பயணத்தின் முதல் கட்டத்தை நிறைவு செய்து. புவிஈர்ப்புவிசை இல்லாத  விண்வெளியில்  விந்தணுக்குகள் எவ்வாறு நீந்திச்செல்கின்றன  என்பதை  கண்டறியலாம் என நாசா நம்புகிறது.

தற்போது விண்வெளியில் இனப்பெருக்கம் பற்றிய உயிரியல் பற்றி சிறிது அறியப்படுகிறது,மற்றும் இந்த சோதனை  மூலம் அந்த இடைவெளி மிகவும் குறையும்.  முதன் முறையாக மனித விந்து விண்வெளியில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிய முடியும் என நாசா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளது.

ஒரு மனித முட்டை வெற்றிகரமாக கருத்தரித்தல் பல்வேறு காரணிகளை சார்ந்திருக்கிறது, மேலும் இரண்டு நிலைகளாக பிரிக்கப்படுகிறது என்று ஆய்வு கூறுகிறது. முதலாவதாக, விந்தணு செல் செயல்படுத்தப்பட வேண்டும். பின்னர் ஒரு முட்டையை நோக்கி உறிஞ்சுவதற்கு தகுந்ததாக  சிறிது மாறும். அது வேகமாக நகர்த்த வேண்டும் அதனால்  அதன் செல்கள் மென்மையாக்கப்பட வேண்டும். முந்தைய சோதனைகள் முள்ளெலும்பு மற்றும் காளை விந்து,செயல்படுத்தல் நுண்ணுயிரியலில் விரைவாக நடக்கிறது. ஆனால் வெற்றிகரமான உமிழ்வுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகள் மிகவும் தாமதமாகின்றன அல்லது வெறுமனே அனைத்து நடக்காமல் இருக்கிறது.

நாசா முதன்முறையாக மனித விந்தையை அனுப்புகிறது, ஆனால் காளை விந்து மீண்டும் ஒப்பிடுவதற்கு மீண்டும் அனுப்பப்படுகிறது

தந்தையையும் தாத்தாவையும் திருமணம் செய்த எகிப்து ராணி கல்லறை கண்டுபிடிப்பு

தந்தையையும் தாத்தாவையும் திருமணம் செய்த எகிப்து ராணி கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.

எகிப்து மம்மிகள் பற்றிய தகவல்கள் எப்போதும் ஆச்சரியம் தருபவை. பண்டைய எகிப்தியர்கள், தங்கள் மன்னர்களைக் கடவுளர்களாவே கருதினார்கள். அவர்களின் கடவுள் இறந்துவிட்டால், அவரது உடலைப் பதப்படுத்தி, பிரம்மாண்டமான கல்லறையில் வைத்துப் புதைத்துவிடுவார்கள். அந்தக் கல்லறைகளுக்குள் இறந்தவர்கள்  மன்னரின் ‘மறுவாழ்வு’க்காக! அவர்கள் பயன்படுத்திய  விலையுயர்ந்த பொருட்கள், தங்க நகைகள் என்று பல பொருட்களை வைத்துவிடுவார்கள். 

1923. இதே நாள். எகிப்தின் நைல் நதி அருகில் இருக்கும் தீப்ஸ் பகுதியில் 3000 ஆண்டுகளாக, உலகின் கண்களில் இருந்து மறைந்து கிடந்த துட்டன்காமனின் கல்லறையை, பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹாவர்டு கார்ட்டர், அவரது நண்பரும் அவரது ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்த கோடீஸ்வரர் லார்டு கார்னர்வோன் ஆகியோர் திறந்தனர். கல்லறைக்குள்ளே தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் அங்கிருந்தவர்களின் கண்களை மின்னச் செய்தன!

கி.மு. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய எகிப்து மன்னர் துட்டன்காமனின் கல்லறை திறக்கப்படாமல் இருக்கிறது என்று ஹாவர்டு கார்ட்டர் நம்பினார். பண்டைய எகிப்தின் 18-வது வம்ச மன்னர். ‘கிங் டட்’ என்ற பெயரால் அழைக்கப்படும் இவரது கல்லறை இருக்கும் இடத்தைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கினார் கார்ட்டர். பல ஆண்டுகள் தொடர்ந்த இவரது பணிக்கு, நிதியுதவி செய்த லார்டு கார்னர்வோன் ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்தார். “இந்த முயற்சியைக் கைவிட்டுவிடுவோம்” என்று கார்ட் டரிடம் சொன்னார். ஆனால், இன்னும் ஒரே ஒரு வருடம் காத்திருக்கலாம் என்று அவரைச் சமாதானப்படுத்தினார் கார்ட்டர்.

கடைசியில், 1922 நவம்பரில் மற்றொரு கல்லறையின் சிதைந்த பாகங்களுக்கு அருகில், படிக்கட்டுகள் இருப்பதை கார்ட்டரின் குழு கண்டுபிடித்தது. அதன் வழியாகச் சென்றபோது, துட்டன்காமனின் கல்லறை இருக்கும் இடம் தெரியவந்தது. அதன்பின்னர்தான், 1923-ல் அந்தக் கல்லறையின் நான்காவது மற்றும் கடைசி அறை, பல அதிகாரிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டது. ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப் பட்டிருந்த மூன்று சவப்பெட்டிகளின், கடைசிப் பெட்டியில், மன்னர் துட்டன்காமன் மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தார். 18-வது வயதில் மர்மமான முறையில் இறந்த மன்னர் அவர். அவரது இறப்புக்கான காரணம் பற்றி இன்றுவரை ஆய்வுகள் தொடர் கின்றன. 

ஒரே நாளில் இந்தச் செய்தி உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது. இந்தச் சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கதைகள் ஏராளம்.இன்று துட்டன்காமனின் கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொருட்கள், கெய்ரோ நகரின் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருக்கின்றன.

தற்போது துட்டன்காமன்  என்னும் எகிப்திய மன்னனின் இளம் மனைவியாகிய அங்கேஷ்னமுன் (Ankhesenamun)  புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தனது அப்பாவையும் தாத்தாவையும் மணந்ததாகக் கூறப்படும் எகிப்திய ராணியாகிய அங்கேஷ்னமுன் புதைக்கப்பட்ட இடத்தை புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக தேடிவந்த நிலையில் அவர் புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று இந்த அகழ்வாராய்ச்சிக்கு பொருளுதவி செய்து வருவதால் அதன் வெளியீட்டு உரிமைகளையும் அந்த தொலைக்காட்சியே வாங்கியுள்ளது. ஜனவரி மாதம் 100 எகிப்தியப் பணியாளர்கள் எகிப்தின் ராஜாக்களின் பள்ளத்தாக்கு எனப்படும் பகுதியின் இதுவரை ஆராயப்படாத மேற்குப்பகுதியில் அங்கேஷ்னமுன்னின்  கல்லறையைத் தேடும் பணியில் இறங்கினார்கள்.

ராஜ கல்லறை என்று ரேடார்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இடத்தை புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டுவதைக் காட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.இந்த ஆராய்ச்சிக்கு பொருளுதவி செய்யும் அந்த பிரபல தொலைக்காட்சி தங்களது கண்டுபிடிப்புகளை இந்த ஆண்டின் கடைசியில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளதைப் பார்க்கும்போது பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

யார் இந்த அங்கேஷ்னமுன்? எகிப்திய மன்னரான பார்வோன் அங்கேஷ்னமுன் அங்கேனேட்டனுக்கும் அவரது மனைவி நெப்ரிட்டிக்கும்  பிறந்தவர் அங்கேஷ்னமுன். அவர்களது கலாச்சாரப்படி சகோதரர்களுக்குள் திருமணம் செய்வது சகஜம் என்பதால், அங்கேனேட்டன் தனது தங்கையாகிய நெப்ரிட்டியை மணந்து கொண்டார்.

கி.மு.1332 முதல் 1327 வரை எகிப்தை ஆண்ட துட்டன்காமன்  மனைவிதான் இந்த அங்கேஷ்னமுன் . கணவர் திடீரென்று இறந்துபோக அய் என்பவரை மணந்துகொண்டார் அங்கேஷ்னமுன். சில ஆவணங்கள் அவர் தனது கணவர் இறந்ததும் தனது தாத்தாவை மணந்துகொண்டார் என்றும் வேறுசிலர் அவர் தனது தந்தையையே மணந்து கொண்டார் என்றும் கூறுகின்றன.

புதன், 11 ஏப்ரல், 2018

85,000 ஆண்டுகளுக்கு முன்பு, சவுதி அரேபியாவில் மனிதன் வசித்தான் ஆய்வில் தகவல்

சவுதி அரேபியாவில் 85,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதன் வசித்தான் என்பதை புதிய ஆய்வு ஒன்று வலியுறுத்துகிறது.

85 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேபியன்ஸின் ஒரு விரல் எலும்பு  அல் நிபட் பாலைவனத்தில் அல் வுஸ்டா பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.அல் வுஸ்டா படிவம்  90,000 ஆண்டுகளுக்கு முன்னர் அரேபியாவை அடைந்தனர் என  நிரூபிக்கிறது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் நிபுணரான பேராசிரியர் மைக்கேல் பெட்ரக்லியா கூறி உள்ளார்.சுவாரஸ்யமாக, வுஸ்டாவில் 2 லடசம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  கல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

60,000 ஆண்டுகளுக்கு முன்னர் சில வெகுஜன இடம்பெயர்வுகளில் ஹோமோ சேபியர்கள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி உள்ளனர்.

ஆப்பிரிக்காவுக்கு வெளியே 60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதன் தொடர்ச்சியாக வசித்ததில்லை என்னும் முந்தைய வாதத்தை இந்த ஆய்வு பொய்யாக்குகிறது. அரேபியாவின் உட்பகுதிகளில் நடத்தப்பட்ட முந்தைய அகழாய்வுகளில் மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், எலும்புகூடுகள் எதுவும் கிடைக்காமல் இருந்தது. இப்போது அதுவும் கிடைத்துள்ளது.

சிரியா ரசாயன தாக்குதலுக்கு, விரைவில் பதிலடி: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சூளுரை

சிரியாவில் நடந்து உள்ள ரசாயன தாக்குதலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சூளுரைத்தார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும், அதிபர் படைகளுக் கும் இடையே 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

அந்த நாட்டின் அதிபர் படைகள் தடை செய்யப்பட்டு உள்ள ரசாயன ஆயுத தாக்குதல்களில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றன என்று குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.

இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி, கிழக்கு கூட்டாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி நகரான டூமா நகரில் ஹெலிகாப்டரில் இருந்துபோட்ட பீப்பாய் குண்டில் இருந்து நச்சுத்தன்மை கொண்ட சரின் என்ற வாயு கசிந்தது.

அந்த வாயுவை சுவாசித்த மக்கள் கூட்டம் கூட்டமாக மூச்சு திணறலுக்கு ஆட்பட்டனர். பலர் வாயில் நுரை தள்ளி உயிரிழந்தனர்.

இந்த ரசாயன ஆயுத தாக்குதலில் 70 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

இப்போது அந்த தாக்குதலில் 60 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளானதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த ரசாயன ஆயுத தாக்குதலுக்கு அதிபர் ஆதரவு படைகளும், ரஷிய படைகளும்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதை இரு தரப்பினரும் மறுத்து வருகின்றனர்.

ஆனாலும், இதற்கு முன்பு சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதல்களின் முத்திரைதான் இந்த தாக்குதலிலும் உள்ளது என அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட்டாக கூறுகின்றன.

இதுபற்றி வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறும்போது, “இதில் பாதிப்புக்கு ஆளான குழந்தைகளின் படங்கள், ஒட்டுமொத்த நாகரிக உலகின் மனசாட்சியை அதிர வைத்து உள்ளன. இந்த தாக்குதல்கள், பஷார் அல் ஆசாத் படைகள் நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலின் பாணிதான் தெரிந்து உள்ளது” என கூறினார்.

சிரியாவில் நடந்து உள்ள ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ராணுவ தலைவர்களுடனும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குழுவினருடனும் நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறும்போது, “சிரியா ரசாயன ஆயுத தாக்குதலில் பதிலடி தருவது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும். ராணுவ ரீதியில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக பல்வேறு யோசனைகள் உள்ளன. நாம் எல்லோரும் பார்த்த இந்த வன்கொடுமைகள் இனியும் தொடர்வதை அனுமதிக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “நம்மால் இதைத் தடுத்து நிறுத்த முடியும். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது விரைவான, வலுவான பதிலடி கொடுப்போம்” எனவும் அவர் சூளுரைத்தார்.

முன்னதாக நடந்த மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் டிரம்பிடம், “சிரியாவில் நடந்து உள்ள ரசாயன ஆயுத தாக்குதலுக்கு ரஷியா பொறுப்பேற்றால் என்ன செய்வீர்கள்?” என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு டிரம்ப், “அவர் பொறுப்பேற்கலாம். அவர் பொறுப்பு ஏற்றால், நிலைமை இன்னும் கடினமானதாகி விடும்” என்று குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கருத்து தெரிவிக்கையில், “இதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுத்தாலும் சரி, எடுக்காவிட்டாலும் சரி, நிச்சயமாக வாஷிங்டன் தக்க பதிலடி கொடுக்கும்” என்று கூறி இருப்பது முக்கியத்துவம் பெற்று உள்ளது.

திங்கள், 2 ஏப்ரல், 2018

தெற்கு பசுபிக் நோக்கி விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் வந்து கொண்டிருப்பதாக என சீனா தகவல்

தெற்கு பசுபிக் நோக்கி விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் வந்து கொண்டிருப்பதாக என சீனா தெரிவித்து உள்ளது. #China

China's Tiangong-1 space lab plummets to Earth

பெய்ஜிங்,

சீனா 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 29-ந்தேதி ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையத்தை லாங் மார்ச் 2 எப்/ஜி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவி, நிறுவியது. இதுதான் சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம் ஆகும். இந்த விண்வெளி மையம் தனது முக்கியப்பணிகளை 2013-ம் ஆண்டு, ஜூன் மாதம் முடித்துக்கொண்டது. அதன் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘டியான்காங்-1’ தனது பணிகளை முடித்துக்கொண்டு செயலற்றுப்போய் விட்டது என சீனா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி அறிவித்தது.இந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள், இன்று (திங்கட்கிழமை) பூமியில் வந்து விழும் என்று விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். 

இந்த நிலையில்,  விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் தெற்கு பசுபிக் பகுதியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் பெரும்பாலானவை அழிந்துவிட்டதாகவும் தெரிவித்து உள்ளனர். தெற்கு பசுபிக்கில் தண்ணீர் நிறைந்த பகுதியை நோக்கி வருவதால், விண்வெளி ஆய்வுக்கூடம் விழுவதால் பாதிப்பு பெரிய அளவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

மகிழ்ச்சியில் பின்லாந்து முன்னிற்பது எப்படி?

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் இருக்கிறது என்ற சமீபத்திய செய்தியைப் படித்திருப்பீர்கள். இது யாரோ போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போன செய்தியல்ல, ஐ.நா. சபையின் அதிகாரப்பூர்வ அறிக்கை.
பின்லாந்து பூர்வீக குடிமக்கள் மட்டுமின்றி, அங்கே குடியேறியவர்களும் மகிழ்ச்சியாக இருக் கிறார்களாம்.

அப்படி என்ன மகிழ்ச்சி ரகசியம் பின்லாந்தில் இருக்கிறது?

தரமான இலவசக் கல்வியும், சுகாதார வசதியும்தான் மகிழ்ச்சியின் பிரதான காரணங்கள் என்று கூறப்படுகின்றன.

இதுகுறித்து பின்லாந்து பிரஜையான ஆன்டி காப்பினன் கூறும்போது, “என் நாடு குறித்து நான் பெருமைப்படுகிறேன். ஐ.நா. சபையின் மகிழ்ச்சி குறியீடு அறிக்கையில் எங்கள் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்ததால் நான் இதைக் கூறவில்லை. எப்போதுமே நான் பின்லாந்தை நினைத்து பெருமையே படுகிறேன்” என் கிறார்.

அது ஏன் என்று கேட்டால், “பின்லாந்தில் எல்லோருக்கும் எல்லாவிதமான வாய்ப்புகளும் இருக்கின்றன. அதுவே இங்கு அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முக்கியக் காரணம். அதுமட்டுமின்றி, இரண்டாவது உலகப் போருக்குப் பின் இங்கு எந்த அரசியல் நெருக்கடியும் ஏற்படவில்லை. பின்லாந்து ஒரு நடுநிலையான நாடு. உலகில் யாருடனும் எங்களுக்கு விரோதம் இல்லை” என்கிறார்.

“பின்லாந்து மக்களாகிய நாங்கள் 24 மணிநேரமும் வேலை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டோம். ஓய்வு நேரங்களை எங்களுக்குப் பிடித்தமான விஷயத்தில் செல விடுவோம். இசை, குடும்பம், விளையாட்டு என எங்களுக்கு விருப் பமான விஷயங்களில் மூழ்குவோம். இவையெல்லாம்தான் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் என்று கருதுகிறேன்” என்கிறார், மகிழ்ச்சிக் குரல் மாறாமலே.

அதேபோன்ற கருத்தைப் பிரதிபலிக்கிறார், தொடர்பியல் துறை மாணவரான யெனா வுரெலா. “பின்லாந்து ஒரு பாதுகாப்பான நாடு. இங்கு யாருக்குள்ளும் எந்த வேற்றுமையும் இல்லை. இங்கு முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் நிலவுகின்றன. எல்லோருக்கும் எங்கள் நாடு வாய்ப்பு வழங்குகிறது. இவையெல்லாம் எங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கின்றன” என்கிறார்.

பின்லாந்தில் குடியேறிய வெளிநாட்டவர்களும் மகிழ்ச்சியாக இருப்பது குறித்து யெனா, “எங்கள் நாட்டில் குடியேறியவர்களிடம் நாங்கள் எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை. ஒரு பின்லாந்து நாட்டவருக்கு என்னென்ன வாய்ப்பு, வசதிகள் கிடைக்குமோ அவை அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து இங்கு குடியேறியவர்களுக்கும் கிடைக்கும். அதனால் அவர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள்” என்று விளக்கமாகச் சொல்கிறார்.

கடந்த ஆண்டு இந்த மகிழ்ச்சிப் பட்டியலில் பின்லாந்து ஐந்தாவது இடத்தில் இருந்தது, நார்வே முதலிடத்தில் இருந்தது. இந்த ஆண்டில் நார்வே இரண்டாமிடத்துக்கு இறங்க, பின்லாந்து முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

மகிழ்ச்சி விஷயத்தில் ‘பின்’லாந்து ‘முன்’னே நிற்கிறது!