வியாழன், 3 நவம்பர், 2011

போதி தர்மன் யார்? Bodhidharma

போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.

ஏழாம் அறிவு திரைப்படத்தின் கதைக் கருவை பற்றிய விடயங்களையும் யார் இந்த போதிதர்மன் என்று ஆராய்ந்து இணையத்தேடல் வாயிலாக  பகிர்ந்து கொள்வதில் ஒரு முயற்சி...

(Bodhidharma was a Buddhist monk who lived during the 5th/6th century and is traditionally credited as the leading patriarch and transmitter of Zen (Chinese: Chán, Sanskrit: Dhyāna) to China. He was the third son of a Tamil king of the Pallava Dynasty) http://en.wikipedia.org/wiki/Bodhidharma

போதி தர்மன்... தமிழ் சினிமாக்காரர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் அதிகமாககத் தேடிக் கொண்டிருக்கும் பெயர் இன்றைக்கு இதுதான்!காரணம், சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் கதையின் நாயகன் இந்த போதி தர்மன்தான்!முதலில் போதி தர்மன் யார் என்பதை சுருக்கமாகப் பார்த்து விடுவோம்

இப்போது சாவலின்குங்க்பூவில் "பூமராங்" என்றொரு ஆயுதம் இருக்கிறதே, இது வளரி எனும் பெயரில் அகஸ்தியரால் முன்பே பயன்படுத்தப்பட்டது. உலகத் தற்காப்புக் கலைகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் நமது சித்தர்கள் என்பதை எவரும் மறுக்கமுடியாது. ஆன்மீக ரகசியங்களை உணர்ந்து கொள்வதற்கு உறுதுணையாக இருந்தது சிலம்பம் எனும் தற்காப்புப் பயிற்சியே என்பதை அகஸ்தியர் தனது"கம்பு சூத்திரத்தில்" தெளிவு படக் கூறுகிறார். மேலும் எதிரியின் "கால்" வரிசையை வைத்து அவருடைய சுவாசம் இடகலையிலா? பிங்கலையிலா? என்பதை கவனித்து அந்த நிலையில் அவரைத் தாக்க வேண்டுமா? அல்லது அவரின் தாக்குதலைத் தடுக்க வேண்டுமா? என்பதையெல்லாம் தனது "கம்பு சூத்திரத்தில்" தெளிவுபடக்கூறுகிறார் அகஸ்தியர்.

இன்று உலக ராணுவப்பயிற்சிகளிலெல்லாம் "லெப்ட்,ரைட்" என்று கூறுகிறார்களே இதற்கு முன்னோடி நமது அகத்தியர் என்றால் அது மிகையாகாது. martial arts என்று சொல்லக்கூடிய எல்லாத் தற்காப்புப் பயிற்சிகளிலும் இடது காலை முன் வைத்தே பயிற்சி தொடங்கப்படுகிறது. வலது சுவாசத்தைச் செயல்படச் செய்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். சாவலின்குங்க்பூவிற்கும், சிலம்பத்திற்கும், வர்மத்திற்கும், யோகாசனத்திற்கும், ஆடல் கலையான பரதத்திற்கும் அடிப்படை ஒன்றுதான்.

குங்க்பூவிலும் முத்திரை உண்டு, வர்மத்திலும் முத்திரை உண்டு, யோகத்திலும் முத்திரை உண்டு, பரதத்திலும் முத்திரை உண்டு, குங்க்பூவில் ஆரம்ப நிலையில் செய்யக்கூடிய "sengoose stance" என்னும் நிலையே யோகத்தில் வீரபத்ராசனம். பரதத்தில் ஊர்த்துவ தாண்டவமாக செய்யக்கூடிய ஒரு நிலை குங்க்பூவில் elephant stance. இந்த நிலையே யோகத்தில் ஏகபாத ஊர்த்துவாசனம். பரதத்தை மித வேகமாக செய்தால் குங்க்பூ. அதையே மிக வேகமாக செய்தால் அது களறி, குங்க்பூவை மென்மையாக செய்தால் அது பரதம். அது சரி, இதுக்கும் போதி தர்மனுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கத் தோன்றுகிறதா?.......

சாவலின் கோவிலை நிர்மாணித்து குங்க்பூவை அறிமுகப்படுத்தியது போதிதர்மன் என்பது உலகறிந்த செய்தி. ஆனால் போதி தர்மன் குங்க்பூவின் தாய் பயிற்சியான களரியைப் பயின்றது பொதிகை மலையில் என்பது மறைக்கப்பட்ட வரலாறு. போதி தர்மன் புத்தபிக்கு என்றபோதும் அகத்தியரின் நேரடி சீடர் என்பதும் மறைக்கப்பட்ட செய்தி.

பல்லவ சாம்ராஜ்யத்தில் வைஷ்ணவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் புத்தப்பிக்குவாக அறிமுகம் செய்யப்பட்டப் பல்லவ இளவரசனைக் கொன்றுவிட வைஷ்ணவர்கள் முயற்சி செய்கிறார்கள். போகமஹரிஷியின் உதவியுடன் புத்தப்பிக்குவான இளவரசன் பொதிகைமலைக்கு அழைத்துவரப்பட்டு அகஸ்தியருக்கு அறிமுகப்படுத்தப் படுகிறான். "இறையில்லை ஆனால் இறைத்தன்மை உண்டு அதனை விழிப்புணர்வால் மட்டுமே அடையமுடியும்" எனக்கூறுகின்ற புத்தமும், "நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்" எனக்கூறுகின்ற சித்தமும், கைகோர்த்ததில் ஒரு புது சந்நியாசி உருவானார். அவரே அக்கால தமிழ்நாடு, கேரள எல்லைப்பகுதியில் உள்ள மக்களால் “லாட சன்யாசி” எனும் திருப்பெயரால் அழைக்கப்பட்ட போதிதர்மன்.

குதிரையின் லாடத்தைத் தனது மரச் செருப்பின் அடியில் பதித்திருந்த இந்த லாட சன்யாசியால் இப்போதைய தென்காசி, செங்கோட்டை, நாகர்கோவில் பகுதியில் வாழும் மனிதர்களின் மூதாதையர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதே “அப்பியும்”, "விலங்குவர்மமும்". இன்றும் இந்தப்பகுதியிலேயே வர்மத்தில் சிறந்த வர்மானிகள் இருக்கிறார்கள் என்பது கண்கூடு. லாட சன்யாசியின் நினைவாக இன்றும் இந்தப்பகுதியில் சன்யாசி எனும் பெயருடன் பலர் வாழ்ந்து வருகிறார்கள். அகத்தியரிடம் வித்தை கற்பதற்காகப் போதிதர்மன் குற்றாலமலையில் தங்கியிருந்த குகை “பரதேசிப்புடவு” என்னும் பெயரில் இன்றும் உள்ளது. குற்றாலத்தில் உள்ளவர்களுக்கேக் கூடத் தெரியாத இந்தக் குகைக்கு சீனப் புத்தப் பிக்குகள் வந்து செல்வது ஆச்சரியமான அதிசயம்.

அகத்தியரிடம் தான் கற்றுக்கொண்ட யோகபாடத்தையும், களரியையும் இணைத்து ஷாவலின் குங்க்பூவை வடிவமைத்தப் பெருமை போதிதருமனையே சாரும். பொதிகைமலையில் தங்கியிருந்த போதிதருமன் விலங்குகள் சண்டையிடும் காட்சியைப் பார்க்கிறார். உருவத்தில் பெரிய யானை, உருவத்தில் சிறிய சிறுத்தையிடம் தோற்றுப்போவதின் சூட்சுமம் புரிகிறது. ஒவ்வொரு விலங்கும் தனக்குள் இருக்கும் விஷேச சுவாசத்தைச் சப்தமாக,சக்தியாக மாற்றிக்கொள்வதின் ரகசியத்தைத் தனதுக் கூர்ந்த ஞானத்தால் உணர்ந்த போதிதர்மன், தான் கற்ற களரியில் விலங்குகளின் நிலைகளை(stance) இணைத்துக் கொள்கிறார். Monkey stance, elephant stance, tiger stance, snake stance, cat stance போன்ற பயிற்சி முறைகளே இன்றும் குங்க்பூவை மற்ற கராத்தே பயிற்சி முறைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. “சிட்டோரியன்,” “ஹயசிக்கா” போன்ற கராத்தே பயிற்சி முறைகளையும் நான் கற்றிருக்கிறேன். ஆனால் அவற்றிலெல்லாம் animal stance கிடையாது என்பதே நான் உணர்ந்த உண்மை.

ஒவ்வொரு விலங்குகளின் நிலையில் நிற்கும் போதும் மனிதனுக்குளிருக்கும் “தச வாயுக்கள்” இயக்கப்படுகிறது” . இந்த விஷேச நிலையினால் சுவாசம் கட்டுப் படுகிறது. “சலே வாதம், சலே சித்தம் நிச்சலம் நிச்சல பவதி” என்னும் பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் கூறியபடி சுவாசக் கட்டுப்பாடு மனத்தைக் கட்டுப்படுத்துகிறது. மன ஒடுக்கம் மனிதனின் ஞானப்பாதைக்கு வழி வகுக்கிறது. யோகத்தில் மேம்பட்ட சுவாசப் பயிற்சியாகக் கூறப்படும் “பதினெட்டுக் கதிகளையும்” தனது தற்காப்புப் பயிற்சியில் போதிதர்மன் பயன்படுத்தி இருக்கிறார். யோகத்தில், ஒரு குரு தனது நெருக்கமான, மேம்பட்ட சீடனுக்குக் கற்றுக்கொடுக்கும் உச்சக்கட்டப் பயிற்சியான “முத்திரைப் பயிற்சியையும்” குங்க்பூவில் இணைத்த பெருமை போதி தருமனையே சாரும்.

ஒருமுறை ஐந்தலைப்பொதிகையில் போதிதர்மன் இருந்தபோது, மூங்கில் மரத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுப் பனியின் எடை தாங்காமல் மூங்கில் மரம் வளைகிறது. ஒரு குறிப்பிட்ட நிலையில் பனியின் எடை முழுவதையும் இறக்கிவிட்டு மூங்கில் மரம் நிமிர்கிறது. கூர்ந்த மதியுடைய போதிதர்மனுக்கு இந்த நிகழ்வு ஒருப் புது யுக்தியைப் போதிக்கிறது. நினைத்த மாத்திரத்தில் உடலின் எடையைக் குறைக்க முடியுமா? என அகத்தியரை வினவுகிறான். நமது உடலில் தசவாயுக்களில் ஒன்றான “உதானனைச்” செயல்படச் செய்தால் மனித உடலின் எடையைக் காற்றை விடக் கனம் குறைந்ததாக மாற்றிக் கொள்ளமுடியும்.எனும் அறிவியல் போதிக்கப்படுவதோடு உதானனைச் செல்படுத்த யோக பாடத்தில் ஒன்றான “உட்டியானா பந்தமும்” கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இன்றும் சீன தேசத்தில் மூங்கில் மரத்தில் நின்று கொண்டே பறந்து பறந்து பயிற்சி செய்யும் “உட்டான்” பயிற்சி முறை மிகவும் பிரபலம். சிலம்பத்திலும் ஒரு வீட்டிலிருந்து,இன்னொரு வீட்டிற்குப் பரந்த நிலையில் தாவிச் செல்லும் நிலைக்கு “உடான்” எனும் பெயரே வழக்கத்தில் உள்ளது. கொக்கும், நாகமும் சண்டையிடுவதைப் போதிதர்மன் பார்த்ததின் விளைவே இன்று உலகம் போற்றும் யோக ஆடல் கலையான “தாய்ச்சி” தோன்றியதின் ரகசியம்.

இவ்வளவு பெருமை வாய்ந்த போதி தர்மன் ஏன் சீனாவுக்குச் சென்றார் என நீங்கள் வினா எழுப்புவது எனக்குப் புரிகிறது.

அக்காலத்தில் சீன தேசத்தில் “இறைவன் இல்லை, ஆனால் இறைத்தன்மை உண்டு, ஒவ்வொருவரும் தனது விழிப்புணர்வின் மூலமாக மட்டுமே இறைத்தன்மையை உணர முடியும்” எனும் புத்தரின் போதனைகள் இறைவனை வெளியில் தேடிக்கொண்டிருந்தவர்களிடையே ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியது. மதகுருமார்களும், பேரரசர்களும் வெகுண்டெழுந்தார்கள். புத்த பிக்குகள் சித்திரவதைக்கு உட்பட்டதோடு ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். அதிகமான நியமங்களைக் கடை பிடித்த பிக்குகள் உடல் நிலையிலும் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டார்கள். இந்தப்பிக்குகளால் எதிரியின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. இந்தப் பிக்குகளுக்கு எதிரியின் தாக்குதலைச் சமாளித்துக்கொள்ள தற்காப்புப் பயிற்சியுடன் கூடிய உடல் சக்தியை அதிகரித்துக் கொள்ளும் பயிற்சி முறைத் தேவைப்பட்டது. ..............காலம் கனிந்தது., சிறப்பு பயிற்சி பெற்ற போதிதர்மன் என்னும் திராவிடப்பிக்கு சித்த குருமார்களின் ஆசியோடு சீன தேசம் நோக்கிப் பயணப்பட்டார்.


இன்று யோகயுவகேந்திராவின் லோகோவாக வைத்திருக்கிறோமே “யின்-யாங்”, இதுதான் அன்றைய போதிதர்மனின் கொடிச்சின்னம். இந்த யின்-யாங்கை சீனர்கள் இன்று தங்களுடையது எனக்கூறினாலும், இது நமது சித்தகுருமார்களால் வடிவமைக்கப்பட்டது என்பதே உண்மை. வலது சுவாசமான யின் னையும், இடது சுவாசமான யாங் கையும் இணைக்கத் தெரிந்தால் ஒரு மகத்தான சூட்சும, சுழுமுனைச் சக்தியைப் பெறமுடியும் என்பதே யின்-யாங் சொல்லும் தத்துவம். இன்றும் சித்தகுருமார்கள் இருக்கிற ஊர்களிலுள்ள கோவில்களில் யின்-யாங் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. குறிப்பாகத் திருவண்ணாமலைக் கோவிலில் இந்தச் சின்னம் அதிகமாகப் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.


பின்னாட்களில் நான் “அக்குபஞ்சர்” பயின்றபோது, இந்த குத்தூசி வைத்தியத்திலும் போதிதர்மன் சிறந்த ஞானத்துடன் இருந்ததை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. ஷாவலின் கோவிலுள்ள புத்தப்பிக்குகளுக்கு போதி தருமன் "குத்தூசி வைத்தியம்" செய்ததாக அக்குபஞ்சரின் மூலப் புத்தகமான "நெய்ஜிங்கில்" குறிப்புகள் காணப்படுகிறது.

போதிதர்மன் நோக்கு வர்மத்திலும் தலை சிறந்து விளங்கியிருக்கிறார். யோக சத் கிரியாக்களில் ஒன்றான "திராடகப்" பயிற்சியின் உச்சக்கட்ட நிலையே வர்மத்தில் "நோக்கு வர்மமாகப்" பேசப்படுகிறது. பிராணயாமப் பயிற்சியின் மூலமாகப் பிராண சக்தியைத் தனக்குள் தேக்கி வைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்ற ஒரு மேம்பட்ட யோகிக்கு மட்டுமே நோக்கு வர்மம் சித்தியாகும் என்பது யோக ரகசியம்.

வெளியில் போராடும் குணம் உள்ள ஒரு ரஜோ குண வாதியே பின்னாளில் மனதுடன் போராடத் தகுதியுள்ள சத்துவ குண யோகியாக மாற முடியும் என்பதே போதிதர்மன் கண்ட உண்மை. குற்றாலமலையிலுள்ளப் “பரதேசிப்புடவில்” லாடசன்யாசி இன்றும் வந்துபோகிறார். அவருடைய லாடம் பதித்த மரச் செருப்பின் தடம்தான் இதுவென எனது களறி குருமார்கள் காட்டியக் காலடித் தடங்களை இன்றும் என்னால் நினைவு கூற முடிகிறது. இன்று எனது களறி, மற்றும் வர்ம குருமார்கள் என்னுடன் இல்லை. கிருஷ்ணன் தாத்தாவையும், பாஸ்கர நாயரையும், காலம் என்னிடமிருந்து பிரித்துவிட்டது. ஆனால் “பரதேசிப் புடவில்” வைத்து அவர்கள் கற்றுத்தந்த “சித்த வித்தை” என் அடி மனதில் நீங்காமல் நிலைத்திருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பாக சமாதியடைந்த "சண்முகச்சாமி" எனும் சித்த வித்யார்த்தி இந்த பரதேசிப்புடவில் நீண்ட காலம் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாத அறிவுடன் சீனம் சென்று, ஏழாம் அறிவையும் தாண்டி, எட்ட முடியாப் புகழுடன் விளங்கும் போதிதருமன் எனும் திராவிடப் பிக்குவின் யோகப்பணி நினைந்து பெருமை கொள்கிறது -

குங்ஃபூவும் போதி தருமனும்

போதி தருமன் vs prinze ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.

1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple – kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.

3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).

4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.

5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.

6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué
யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)

8.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī (波斯國胡人 bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.

9. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.

10. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.
கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)


11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.நன்றி இணையம்,,yogashiva,wiki

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

உண்மையில் மனிதன் யார் ?

நான் காதலிக்கிறேன்... பாசமாக இருக்கிறேன்... தோழமையோடு இருக்கிறேன்... எல்லாவற்றுக்கும் மேல், சிந்திக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? உங்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது சமீபத்திய ஆய்வு.

மனிதன் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை; காதலிப்பதுமில்லை; பாசம் செலுத்துவதுமில்லை; தோழமையோடு பழகுவதுமில்லை என பொட்டில் அடிப்பதுபோல் சொல்கிறது.

1. மேம்பட்ட விலங்கு என்பதைத் தவிர மனிதனுக்கு வேறு எந்த சிறப்புத் தகுதியும் கிடையாது. சிந்திப்பது மட்டுமே மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்துக் காட்டுகிறது என்று சொல்வது, அபத்தம் என்கிறார்கள் மானிட ஆய்வாளர்கள்.

2. ஒருபோதும் நாமாக சிந்திப்பதில்லை. ஒரு புத்தகமோ, ஒரு உரையாடலோ, ஒரு இசையோ, ஒரு மவுனமோதான் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. தூண்டுவதற்கு ஏதாவது இல்லாவிட்டால் நம்மால் சிந்திக்கவே முடியாது. நம்மை சிந்திக்கத் தூண்டும் புத்தகத்தை எழுதிய மனிதனுக்குக்கூட வேறு ஏதேனும் ஒன்று தூண்டுதலாக இருந்திருக்கும்.

3. மொத்தத்தில் கூட்டு சிந்தனையே அனைத்து தத்துவங்களுக்கும் காரணம்.
இந்த இடத்தில்தான் மொழியின் சிக்கல் விஸ்வரூபம் எடுக்கிறது. உதாரணமாக, "அம்மா" என்று ஒருவரை அழைக்கும்போதே மற்றவர்கள் யாரும் "அம்மா" இல்லை என்பதை உணர்த்துகிறோம். எதிர்பாலினத்தைக் காதலிப்பதாகச் சொல்லும்போதே, மற்றவர்களை வெறுக்கிறோம் என்பதை ஏற்கிறோம். ஒருவரை நேசிக்கும்போதே, அடுத்தவரை நேசிக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறோம். மொத்தத்தில், ஒவ்வொரு வார்த்தையும் அதற்கான எதிர்மறையை சுமந்துகொண்டே அலைகிறது.

4. இப்படி புனிதமாக நாம் நினைக்கும் எல்லாம் வெறும் புடலங்காய்தான் என்றால் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான்.

5. உண்மையில் தன்னைத் தவிர யாரையும் யாரும் காதலிப்பதுமில்லை, நேசிப்பதுமில்லை. சுயநலமாக வாழ்வது மட்டுமே இயல்பானது.

6. அடுத்தவரை வீழ்த்த நாம் நடத்தும் நாடகமே வாழ்க்கை. வாழ்க்கையின் அர்த்தமே, அடுத்தவர் முன்னேறாமல் தடுப்பதுதான். மனதின் சந்தோஷமே அடுத்தவர் வீழ்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது.

7. விலங்குகளின் இயல்பே மனிதனின் இயல்பு. அப்படி இருக்கக் கூடாது என்று நினைக்கும் போதுதான் குற்ற உணர்வுகளும் மன அவஸ்தைகளும் ஏற்படுகின்றன.

8. புனிதம் என்று காலம் காலமாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் வரும் விஷயம் காதல். உண்மையில் காதலைப் போன்ற பம்மாத்து வேறு எதுவுமே கிடையாது.

9. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஓர் ஆண் இருக்கிறான். தனக்குள் இருக்கும் பெண்ணின் பிரதிபலிப்பை வேறொரு பெண்ணிடம் சாயலாகக் காணும் ஆண், அவளைக் காதலிப்பதாக நினைக்கிறான். அவளை அடைவதன் மூலம், வேறொரு ஆணிடம் அவள் போவதைத் தடுக்கிறான். இதே தியரியை பெண்ணுக்கும் பொருத்தலாம்.

10. பிரச்னை என்னவென்றால், ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும், தனக்குள் இருக்கும் மறுபாதியை பலரிடம் காண்பதுதான். அதனால்தான், அனுபவம் கூடக் கூட, காதல் உணர்வு வளர்ந்துகொண்டே போகிறது; மாறிக்கொண்டே இருக்கிறது. மறுபாதியின் பிரதிபலிப்பைக் காணும்போதெல்லாம் உணர்ச்சிப் பெருக்கெடுக்கிறது. பரிணாம வளர்ச்சியில் இந்த உண்மையை ஆண், பெண் இருவருமே புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இப்போது காதலுக்காக வகுக்கப்பட்ட பல வார்த்தைகள் இறந்து, ஆவணக் காப்பகங்களில் செல்லரித்துப் போயிருக்கின்றன.

11. இன்று சராசரியாக ஒவ்வொருவரும் பன்னிரெண்டு, பதிமூன்று வயது முதலே மறுபாதியை எதிர்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். அது முதலே காதல் உணர்வு அரும்ப ஆரம்பித்துவிடுகிறது. அதனால்தான், இருபத்து மூன்று வயதுப் பெண்ணிடம் காதலிப்பதாக ஓர் ஆண் சொல்லும்போது அவள் சிரிக்கிறாள். அவளுக்குத் தெரியும், போகப் போக இன்னும் அதுபோன்ற பலரை தான் எதிர்கொள்ள நேரிடும் என்று!

12. ஒவ்வொருவரும் இன்று நேரில், போனில், இன்டர்நெட்டில் என்று எதிர் பாலினத்தைச் சேர்ந்த பலரிடம் தினமும் பேசுகிறார்கள். கொஞ்சுகிறார்கள். எதற்காகப் பேசுகிறோம், பழகுகிறோம் என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் தெரியாதது போல நடந்துகொள்வதில் இருக்கும் சுவாரஸ்யம், அந்த உறவை அனுமதிக்கிறது. தப்பித் தவறி யாராவது ஒருவர் வெளிப்படுத்தும்போது, திடுக்கிடுவது போல் காட்டிக்கொள்வது நமது ‘புனிதத்தைக் காப்பாற்றுகிறது.

13. உண்மையில் அன்றாடம் நாம் சந்திப்பவர்களில் நமது எதிர்காலத்துக்கு யார் உதவுவார்களோ அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்க மனம் அனுமதிக்கிறது.

14. இன்றைய தேதியில் திருமண மையங்களில் பதிவு செய்பவர்கள்கூட, இன்ன தகுதியுள்ள, இன்ன வேலை செய்யக்கூடிய வரன்தான் தேவை என்பதைத் தெளிவாகக் கேட்டுப் பெறுகிறார்கள். காதலிப்பதாக சொல்பவர்கள்கூட, சாதாரணமானவர்களைக் காதலிப்பதில்லை. தகுதியானவர்களை, தங்கள் எதிர்காலத்துக்கு பயன்படக் கூடியவரை மட்டுமே காதலிக்கிறார்கள்.

15. பரஸ்பர உதவிகளே காதலின் அடித்தளம். இந்தத் தகுதியும், பயனும் ஆறு போல ஓடிக்கொண்டிருக்கும் வரைதான் காதல் உறவும் நீடிக்கும். குட்டையைப் போல தேங்கிவிட்டால், சாக்கடையைப் போல உறவும் நாறி, பிரிவை நோக்கி நகர்ந்துவிடும்.
தோழமையும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

16.தேவை அறிந்து உதவுபவன் மட்டுமே நண்பனாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவான். உதவாதவன் விரோதி பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பான்.
இப்படி உதவுபவனும் சாகும் வரை உதவ வேண்டும். அப்போதுதான் அவன் உயிர் நண்பன்.

17. எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்போதுதான் சந்தோஷம் பிறக்கிறது. எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது துக்கம் தொண்டையை அடைக்கிறது. அப்படியானால் சந்தோஷமும் துக்கமும்கூட கற்பிதம்தானே?

18. மனது ஏற்கும் விஷயம் சரியாகவும் ஏற்க அச்சப்படும் விஷயம் தவறாகவும் அர்த்தமாகும்போது, உணர்வுகளும் பொய்யாக அல்லவா போகிறது?

19. நன்றி, விசுவாசம், நேர்மை, நியாயம்... போன்ற வார்த்தைகள் புனிதமல்ல. ஒரு செயலைச் செய்ய அச்சப்படும்போது, நம்மை நாமே சமாதானப்படுத்துவதற்காக உச்சரிக்கப்படும் வார்த்தைகள் அவை. அவ்வளவுதான்.

20. விசுவாசிகளை தலைவன்கூட நம்புவதில்லை. தலைவனைத் தவிர வேறு யாரையும் சமூகம் அங்கீகரிப்பதில்லை. இந்த விலங்கின் இயல்பை ஏற்றுக்கொண்டவன் புத்திசாலி. ஏற்கத் தயங்கி யோசிப்பவன் முட்டாள்!

21. இந்த சமூகத்தில் வேட்டையாடத் தெரிந்தவன் மட்டுமே வாழத் தகுதியானவன். வேட்டையாட அஞ்சுபவன், வேட்டையாடப்பட வேண்டியவன். நீங்கள் வேட்டையாட விரும்புகிறீர்களா? வேட்டையாடப்பட விரும்புகிறீர்களா? இந்த இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்து உங்கள் எதிர்காலம் இருக்கும். ?

சேகுவேரா வரலாற்றின் நாயகன்

http://amalathaselroy.blogspot.com/சேகுவேரா - வரலாற்றின் நாயகன் - 1

ஜனவரி1, 1959 உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. குயூபா அதிபர் பாட்டிஸ்டா தனது பணிதுறப்பு (இராஜினாமா, resignation) செய்தார். பணிதுறப்பு செய்ததும் இரவோடு இரவாக தனது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ அதிகாலை 3 மணிக்கு கேம்ப் கொலம்பியா விமானதளத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவர் அடைக்கலமாய் சேர்ந்த இடம் டொமினிக்கன் குடியரசில். அதே வேளை ஹவானா முதல் குயூபாவின் தெருக்களில் புரட்சியாளர்கள் மக்கள் வரவேற்புடன் கூடிய நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. பாட்டிஸ்டாவின் அரசில் அதிகாரம் செலுத்தியவர்களை காப்பாற்றி ஐக்கிய அமெரிக்க தேசத்தின் (USA) மயாமி, நியூ ஓர்லியன்ஸ், ஜாக்ஸன்வில் நகரங்களுக்கு கொண்டு செல்ல அன்று இரவு பல விமானங்கள் கேம்ப் கொலம்பியாவிலிருந்து பறந்துகொண்டிருந்தது. தன்னையும், தனது நெருங்கிய சகாக்களையும் காப்பாற்றுமளவு வல்லமை பொருந்திய அமெரிக்காவின் ஆதரவு தனக்கிருந்தும் பாட்டிஸ்டா எதற்காக நாட்டை விட்டு வெளியேறினார்? அவரை வெளியேற்றுமளவு வீறுகொண்ட புரட்சிக்கு காரணமென்ன? விடைகாண இன்னும் 26 வருடங்களுக்கு பிந்தைய கியூபாவுக்கு வாருங்கள்.

செப்டெம்பர் 4, 1933 கியூபாவில் 'சிப்பாய்கள் கலகம்' என்ற இராணுவ புரட்சி நடந்தது. ஜெரால்டொ மசாடோ தலைமையிலான அரசு அன்றைய இராணுவ புரட்சியில் வீழ்ந்தது. 33 வயது நிரம்பிய பாடிஸ்டா கியூபாவின் அரசு அதிகாரத்தை கைப்பற்றினார். அப்போது முதல் இராணுவத்தின் விளையாட்டுகள் அரச அதிகாரத்தில் ஆரம்பமானது. பாடிஸ்டா தன்னை இராணுவத்தலைவராக, அரசை உருவாக்கும் வல்லமையுள்ளவரா, அமெரிக்காவின் ஆதரவு பெற்றவராக உயர்த்தினார். பின்னர் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டின் அன்பிற்குரியவராக மாறிய இந்த பாடிஸ்டா யார்?

********
பாடிஸ்டா பிறந்தது கியூபாவின் ஓரியன்டே மாகாணத்தில் ஜனவரி 16, 1901. இனக்கலப்பு (வெள்ளை, இந்திய, சீன, கருப்பின) கொண்ட கரும்பு விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்த இந்த சிறுவனின் பெயர் ரூபன் புல்ஜென்சியோ பாட்டிஸ்டா சால்திவர். சிறுவயதிலேயே பொருளாதார பிரச்சனைகளை சந்தித்த பாடிஸ்டா பகலில் வேலைக்கு சென்று இரவில் பள்ளிக்கு சென்றார். புத்தகங்கள் படிப்பதே தனது பொழுதுபோக்காக கொண்டிருந்தவர் பாடிஸ்டா. 1921 இல் இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் சேர ஹவானாவுக்கு செல்ல பயணம் செய்வதற்காக கைக்கடிகாரத்தை அடகுவைத்தார். பொருளாதார பிரச்சனையான பின்னணியிலிருந்து வந்த பாடிஸ்டா 1932இல் சார்ஜெண்டாக பதவியுயர்வு பெற்று மறுவருடத்தில் ஆட்சியை கைப்பற்றுமளவு வளர்ந்தார். அதே நேரம் பாடிஸ்டாவின் அதிகாரத்தையே அப்புறப்படுத்த போகிற ஒருவர் பிறந்து ஆறு வருடங்கள் கடந்திருந்தது பாடிஸ்டாவின் கழுகுப்பார்வையில் தெரியவில்லை. அதுவும் தனது மாகாணத்தில் மிக அருகில் அவர் இருப்பதை. யார் அவர்?
Posted Image
*********
பாடிஸ்டா பிறந்த அதே ஒரியன்டே மாகாணத்தில் மயரி என்கிற நகரிய எல்லைக்குட்பட்ட ஒரு பண்ணைக் குடும்பத்தில் ஆகஸ்டு 13, 1926இல் பிறந்த அந்த குழந்தையின் பெயர் பிடல் அலெஜண்டோ காஸ்ரோ ரூஸ். காஸ்ட்ரோவின் தந்தையார் காலனியாதிக்கத்தில் ஸ்பானிய சிப்பாயாக இருந்தவர். தாயார் தந்தையாருக்கு சமையல் வேலையாக வந்த பெண். காஸ்ட்ரோவுக்கு இரு சகோதரர்களுண்டு. மிகவும் வசதியான பண்ணைக் குடும்பத்தில் பிறந்ததால் காஸ்ட்ரோவுக்கு பொருளாதார பிரச்சனைகளில்லை. அமெரிக்க டாலரை பார்க்கும் ஆர்வ மிகுதியால் அமெரிக்க அரச அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு கடிதம் எழுதியதாக நம்பப்படுகிறது (உண்மை கடிதமா தெரியவில்லை, யாரவது தெரிந்தால் உறுதிபடுத்துங்கள்). அந்த சிறுவயது காஸ்ட்ரோவுக்கு தெரியாது அமெரிக்காவை அலற வைக்கிற வலிமை தன்னிடமிருப்பது. குடும்பத்தின் அரவணைப்பில் கியூபாவின் சந்தியாகு, ஹவானாவில் உயர்தர கிறிஸ்தவ பள்ளிகளில் கல்வி கற்றார். 1945இல் சட்டம் பயில துவங்கி 1950இல் ஹவானா பல்கலைப்பட்டம் வாங்கினார். 1948இல் மிர்றா டியஸ் பலர்ட் என்ற பெண்ணை மணந்தார். அவரது திருமணத்திற்கு பாடிஸ்டா கணிசமான தொகையில் பரிசனுப்பினார். இருந்தும் பாடிஸ்டாவின் ஆட்சியை அப்புறப்படுத்த இளைஞர்களை திரட்டி புரட்சிக்கு புறப்பட்டார் பிடல் காஸ்ட்ரோ. அவரை இந்த புரட்சிகர நிலைக்கு தள்ளியது எது? இதனால் கியூபாவின் சரித்திரம் மட்டுமல்ல, உலகின் பார்வையும், விடுதலைப்போரியலில் புதிய வழிமுறையும் பிறக்கபோவது அப்போது அவருக்கு தெரியுமா? அவருக்கு துணையாக புறப்பட்டு உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பிய அந்த சரித்திர மனிதன் யார்?

வரலாறு விரியும்...

ஜூன் 14, 1928 அர்ஜென்டினாவின் தலைநகர் புயெனெஸ் எயர்ஸ்லிருந்து (Buenos Aires)400 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ரொசாரியோவிலுள்ள ஒரு வீடு. ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர் தங்களுக்கு அன்று பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டெ ல செர்னா என பெயர் சூட்டினர்.

அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. குட்டிப்பையனாக இருந்த ஏர்னெஸ்டோவுக்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். ஏர்னெஸ்டோவுக்கு ஒரு வயதிருக்கும் பொழுது ரோசாரியோவிலிருந்து அந்த பண்ணைக்கு குடிபுகுந்தார்கள் அங்கு ஏர்னெஸ்டோவுக்கு தங்கை ஒருவர் கிடைக்கப்பெற்றார். அவரது 2வது வயதில் விளையாடிக் கொண்டிருந்த நேரம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் ஆஸ்துமா நோயிருப்பது கண்டறியப்பட்டது. ஏர்னெஸ்டோவின் மூன்றாவது வயதில் அவரது குடும்பத்தினர் தலைநகர் புயெனெஸ் எயர்ஸ்க்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கு அவருக்கு தம்பியொருவர் பிறந்தார். ஏர்னெஸ்டோவின் ஆஸ்துமா அதிகமானதால் அவரது உடல் நலனுக்கேற்ற காலநிலையுள்ள அல்டா கிரேசியா என்ற நகரில் குடிபெயர்ந்து, சுமார் 10 வருடங்கள் அங்கு வாழ்ந்தார்கள்.

நோய்வாய்ப்பட்டதால் அதிகமாக புத்தகம் படிப்பதும், சிறு வயதிலேயே அறிவுக்கருத்துக்களால் நிரம்பிய சிந்தனைவாதியாகவுமே காணப்பட்டார் ஏர்னெஸ்டோ. சிறு வயதில் ஏர்னெஸ்டோ தனது தாயாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். தாயார் அவரை சுயமாக சிந்தித்து வளரும் தன்மை மிக்கவராக வளரத் தூண்டினார். விடுமுறையில் குடும்பம் சந்தோசமாக பொழுதை கழித்துவந்தனர். தந்தையார் வைத்திருந்த படப்பிடிப்பு கருவியால் ஏர்னெஸ்டோவை படம் பிடிப்பது வாடிக்கை. அவரது 9வது வயதில் ஸ்பெயினில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது. அவரது மாமா அர்ஜெண்டினாவில் ஒரு பத்திரிக்கைக்கு யுத்தச்செய்திகள் சேகரித்து வந்தார். அதனால் சிறுவயதிலேயே யுத்தம் சம்பந்தமான நேரடி செய்திகளை மாமாவிடமிருந்து கேட்டு தெரிந்துகொண்டார் ஏர்னெஸ்டோ. அது தான் ஏர்னெஸ்டோவின் அரசியல் பாடத்தின் துவக்கம். அங்கிருந்து துவங்கிய இந்த அலை அவரை சமூகத்தின் அவலங்களை தேட வைத்தது.

அர்ஜென்டினாவில் ஏர்னெஸ்டோ வளர்ந்து கொண்டிருக்கையில், கியூபாவில், பாடிஸ்டா அதிகாரத்தை கைப்பற்றியதன் பின் அமெரிக்க வல்லரசு பாடிஸ்டாவின் எதிராளிகளை சரிகட்டி அமெரிக்க நிறுவனங்களை அங்கே நிறுவ ஆரம்பித்தது. இடைக்கால அதிபராக இருந்த ரமோன் கிரயு சன் மார்டினுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு, புதிய அதிபராக கார்லோஸ் மெண்டியெட்டா அமர்த்தபட்டார். அமெரிக்கா இந்த புதிய அரசை உடனடியாக அங்கீகரித்தது. மே 29, 1934 குயான்றனாமோ பே (Guantnamo Bay) தீவை பயன்படுத்த உடன்படிக்கையை கியூபாவுடன் எற்படுத்தியது அமெரிக்கா. அன்று முதல் இன்று வரை அந்த தீவு அமெரிக்காவின் வசம்.
தொடர்ந்து வந்த அமெரிக்க ஆதரவு பாடிஸ்டாவை பலம் மிக்கவராக மாற்றியது. பாடிஸ்டா பல நிழல் உலக வர்த்தக பிரமுகர்களுடன் தொடர்பை வலுப்படுத்தினார். இந்த தொடர்புகள் வழியாக பல சூதாட்ட விடுதிகள் ஹவானாவில் திறக்கப்பட்டது. அமெரிக்க நிறுவனங்களுக்கு பாடிஸ்டா அதிகாரத்திலுள்ள நண்பனாக இருந்தார். அரசு நிர்வாகம் லஞ்சமும், ஊழலுமாக மக்களுக்கெதிராக நடந்துகொண்டிருந்தது. மாணவர்களும், பொதுவுடமையாளர்களும் எதிர்ப்புகளை காட்டிய வண்ணமிருந்தனர். பல எதிர்ப்பாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பாடிஸ்டாவை கொல்லவும் முயற்சிகள் நடந்தன. மாணவர் தலைவர் ஒருவர் எழுதிய கடிதத்தில் பாடிஸ்டா பற்றி "புரட்சி என ஒன்று நடந்தால், தான் தப்பிச் செல்ல விமானம் ஒன்றை தயாராக வைத்திருக்கும் குணமுடையவர்" என்றார். கியூபாவில் அதிபருக்கான தேர்தலும் வந்தது.

அர்ஜென்டினாவில் 1930ல் ஏற்பட்ட புரட்சியின் பின்விளைவாக பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது. அர்ஜென்டினாவிலிருந்து மாட்டிறைச்சி, கோதுமை முதலியவை ஐரோப்பியாவிற்கு ஏற்றுமதியை மையமாக உற்பத்தி நடைபெற்றது. உள்நாட்டில் மக்களுக்கு தேவையான பொருட்கள் கடுமையாக விலையேறியது. பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் தங்களது வாழ்விற்காக வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். புயெனெஸ் எயர்ஸ்ல் மட்டும் சுமார் 1.4 மில்லியன் பேர் கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தார்கள். ஏழைகள், நடுத்தர வர்க்கம், பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்க துவங்கியது. பாதிப்புக்குள்ளான மக்கள் சமூக போராட்டங்கள், கருத்தியல் அடிப்படையில் அணிசேர்வது என அல்டா கிரேசியாவின் காலச்சாரச் சூழலும் மாறியது. இதன் தாக்கம் ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டது. அவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு மாற்றம் அடிக்கடி நடந்தது. சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு இடம் விட்டு இடம் மாறுவது என்பது பழக்கமாகியது.

அவர்கள் வசித்த வீடு கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரமான இடம். உடல்நிலைக்கு ஏற்ற சுத்தமான, இனிமையான காலநிலையுள்ள சிறிய நகரம் தான் அல்டா கிரேசியா. ஏர்னெஸ்டோவின் தந்தையார் அந்த நகரின் பணக்கார, மத்தியதர குடும்பத்தினர்களுக்கு வீடு கட்டும் வேலை செய்துகொண்டிருந்தார். ஏர்னெஸ்டோவின் தந்தையார் மிகவும் நட்பாகவும் பொறுப்புடனும் பழகக்கூடியவர். கடினமான வேலை செய்துகொண்டிருந்தாலும் அவர் குழந்தைகளை பாசமுடன் கவனித்தார். ஏர்னெஸ்டோவுடன் நீச்சல், கோல்ப்(golf) விளையாடுதல் என இனிமையாக தனது ஓய்வு நேரங்களை செலவிட்டார். ஏர்னெஸ்டோவுக்கு தனது செல்ல நாயின் முதுகில் அமர்ந்து விளையாடுவது, உடன்பிறந்தவர்களுடன் விளையாடுவது என குழந்தைப்பருவம் இனிதாக இருந்தது. தொடர்ந்த மருத்துவம், இதமான சூழல், அன்னையின் அரவணைப்பு அனைத்துமாக ஏர்னஸ்டோவின் குழந்தைப்பருவம் நகர்ந்தது. மற்ற எல்லா குழந்தைகளையும் விட தாயின் அரவணைப்பு ஏர்னெஸ்டோவுக்கு அதிகமாகவே அமைந்தது. அன்னையின் அன்பான பார்வையில் விளையாட்டும், கரங்களை பிடித்தபடியே நடப்பது வருவது என இருவருக்குமிடையே பாசப்பிணைப்பு அதிகமாக இருந்தது.

புத்தகம் படிபதில் அடங்காத அறிவுப்பசியுடன் வளர்ந்தார் ஏர்னஸ்டோ. ஆஸ்துமாவின் அழுத்ததினால் 9 வயது வரை தாயின் கவனிப்பில் வீட்டிலேயே படித்தார் ஏர்னெஸ்டோ. 2 வது மற்றும் 3வது வகுப்புகள் மட்டுமே முறையாக பள்ளிக்கூடத்தில் கற்றார். அவரது உடன்பிறந்தவர்கள் 5வது, 6வது வகுப்பறை பாடங்களை எழுதிக்கொண்டுவந்து கொடுக்க வீட்டிலிருந்தவாறு படித்துவந்தார். ஆஸ்துமாவை எதிர்கொள்ள மனபலம் அவசியம் என்பதையுணர்ந்த அவரது பெற்றோர் அதற்கான உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுத்தனர். மலையேறுதல், ஓட்டப்பயிற்சி, நீச்சல், குதிரையேற்றம் என பயிற்சிகள் வழியாக ஒரு அசாதாரணமான மன உறுதியை சிறுவயதிலேயே பெற்றிருந்தார். உடல் பலவீனத்தை எதிர்கொள்ள அவர் எடுத்த முயற்சிகள் அவரை ஒரு ஆளுமை மிக்கவராக வளர்த்தியது. சிறு வயதிலேயே பல தரப்பட்ட மக்களிடம் குறிப்பாக தன்னையொத்த வயதினரிடம் பழகியதில் ஏர்னெஸ்டோவுக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். கட்டிடவேலை செய்த உதவியாட்களின் பிள்ளைகள் முதல் நடுத்தர வீட்டு பிள்ளைகள் வரை அனைவரிடமும் தொடர்புகள் கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. அவர்களிடம் பழகுவதோ நட்புடன் விளையாடுவதோ அவருக்கு கடினமாக இல்லை. சிறுவயதிலேயே அவரிடம் தலைமைக்கான ஆளுமை இருந்தது. அல்டா கிரேசியாவின் சிறுவயது நண்பர்கள் மத்தியில் ஏர்னெஸ்டோ தனித்தன்மையுடனே இருந்தார்.

லத்தீன் அமெரிக்காவில் புகழ் வாய்ந்த விடுதலைக் கவிஞர் பாப்லோ நெருடாவின் கவிதைகள், ஸ்பானிய கவிதைகள், கதைகள் என பலவிதமான புத்தகங்கள் படித்தார். ஸ்பெயினிலிருந்து மாமா அனுப்பிய செய்தி ஏடுகள், புத்தகங்களில் யுத்தச் செய்திகளை படிப்பது சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு விருப்பம். ஸ்பெயின் உள்நாட்டு யுத்தம் சிறுவயது ஏர்னெஸ்டோவிற்குள் மாற்றங்களை உருவாக்கியது. மேட்ரிட் (Madrid), டெருயெல்(Teruel), குயுரென்சியா(Querencia) நகரங்களின் வீரம் செறிந்த இராணுவ போராட்டங்கள் அவரை வெகுவாக கவர்ந்தது. அவரது அறையில் ஸ்பெயின் நாட்டு வரைபடம் வைத்து அதில் படைகளை நகர்த்தி விளையாடினார். வீட்டு தோட்டத்தில் யுத்தகளங்கள், பதுங்குகுழிகள் மலைகள் போல அமைத்து வைத்திருந்தார் சிறுவயது ஏர்னெஸ்டோ.
~o00o~
கியூபாவில் நடந்த இராணுவ புரட்சிக்கு பின்னர் புதிய அரசியல் சட்டம் உருவானது. புதிய அரசியல் அமைப்பு சட்டம் குடிமக்களுக்கான சமூக உரிமைகள், வேலைவாய்ப்பு, சம ஊதியம், சமூக பாதுகாப்பு திட்டங்கள் என நல்ல பல திட்டங்களை உள்ளடக்கியிருந்தது. தனிநபர்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் கட்டுப்பாட்டில் குவித்து வைத்திருந்த பெரிய பண்ணை நிலங்களை சட்டத்துக்கு புறம்பானதாக்கியது. வெளிநாட்டு நிறுவனங்களின் தலையீட்டை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, நிலசீர்திருத்தத்தை வலியுறுத்தியது புதிய அரசியல் சட்டம். அதன் பின்னர் 1940ல் நடந்த தேர்தலில் பாடிஸ்டா அதிபராக போட்டியிட்டார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அந்த தேர்தலில் தனது பழைய எதிரி சன் மார்டினை தோற்கடித்து கியூபவின் 14வது அதிபராக பதவியேற்றார் பாடிஸ்டா. பாடிஸ்டாவின் அரசு 1943 இல் கம்யூனிஸ்டு கட்சியை சட்டப்படி செயல்பட அனுமதித்தது. அமெரிக்காவுடன் வியாபார தொடர்புகள் அதிகரித்தன. யுத்தவரி என்ற பெயரில் கியூபா மக்கள் மீது கடும் வரிச்சுமை உருவானது. இதன் பிரதிபலிப்பு அடுத்து 1944இல் நடந்த தேர்தலில் சன் மார்டின் வெற்றிபெற்று பாடிஸ்டாவை பதவியிலிருந்து இறக்கினார். வெற்றிபெற்று வந்த புதிய அதிபர் அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்த்தார். பதவிக்கு வந்ததும் அரசியல் சட்டத்தை முறையாக செயல்படுத்த துவங்கியது. அதனால் அமெரிக்காவின் ஆதிக்கம் கியூபாவில் தளர துவங்கியது. அமெரிக்காவின் நிழல் விளையாட்டுக்கள் மீண்டும் கியூபாவில் ஆரம்பமானது.


(வரலாறு வளரும்)

குயூபாவில் சன் மார்டின் அதிபராக பதவியேற்ற போது பிடல் காஸ்ட்ரோ சேசு சபையினர் நடத்திய உயர்நிலை பள்ளியில் கல்வி கற்க சேர்ந்தார். 1944 ல் உயர்நிலை பள்ளி அளவிலான குயூபாவின் சிறந்த விளையாட்டு வீரராக காஸ்ட்ரோ தேர்வு செய்யப்பட்டார். தன்னம்பிக்கையும், இலட்சிய உறுதியும் மிக்க காஸ்ட்ரோ பள்ளிப்படிப்பை முடித்து 1945ல் ஹவானா பல்கலைகழகத்தில் பயில துவங்கினார். மாணவப் பருவத்திலேயே அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ ஏப்ரல் 8, 1948ல் கொலம்பியா நாட்டில் நடைபெற்ற மக்கள் எழுச்சியில் கலந்துகொண்டார்.

குயூபாவில் சன் மார்டின் ஆட்சியின் முதற் பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் அமைந்தாலும் பின்னர் நிழல் உலக தாதாக்களின் குழப்பங்கள் அதிகமாகவும் இருந்தது. இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்ட நிழல் உலகம் சார்ந்தவர்கள் ஹவானாவில் நேசனல் விடுதியில் இரகசிய கூட்டம் நடத்தி படுகொலைகளுக்கு திட்டமிட்டது வாடிக்கையானது. தொடர்ந்து நடந்த தேர்தலில் 1948 அக்டோபர் மாதம் கார்லோஸ் ப்ரியோ சொக்கரஸ் வெற்றி பெற்று அதிபரானார். பாடிஸ்டா லஸ் வில்லாஸ் பகுதியிலிருந்து குயூபாவின் செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

******

யுத்தத்தின் காரணமாக ஸ்பெயினிலிருந்து மருத்துவர் ஜுயன் கொன்சலெஸ் அகுலர் குடும்பத்தினர் 3 குழந்தைகளுடன் அர்ஜெண்டினாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் ஏர்னெஸ்டோவின் அண்டை வீட்டில் குடியிருந்தனர். ஏர்னெஸ்டோ வீட்டிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பள்ளியில் ஏர்னெஸ்டோவும் அந்த 3 குழந்தைகளும் சேர்ந்து படித்து வந்தனர். இரு குடும்பத்தினருக்குமிடையே நெருக்கமான உறவு இருந்தது. மருத்துவர் ஜுயனும் அவரது குடும்பத்தினரும் பகிர்ந்துகொண்ட ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டு யுத்த அனுபவங்கள் ஏர்னெஸ்டோவுக்குள் விடுதலைக்கான விதையை சிறுவயதில் விதைத்திருந்தது.

பெற்றோர் அரசியல் சூழல் பற்றிய கருத்துக்களை இளம் ஏர்னெஸ்டோவுடன் பகிர்ந்து வந்தனர். ஏர்னெஸ்டோவை பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் இளையோர் அமைப்பில் உறுப்பினராக பதிவு செய்தனர் அவரது பெற்றோர். மனான அசியன் அர்ஜெண்டினா என்ற இந்த இயக்கத்தின் கிளையை அந்த பகுதியில் நிறுவியது ஏர்னெஸ்டோவின் தந்தையார். அப்போது ஏர்னெஸ்டோவுக்கு வயது பதினொன்று. அர்ஜெண்டினாவில் நாஜிகள் ஊடுருவலை தடுக்க கூட்டங்கள், நிதிசேகரிப்பு என பலவிதமான நடவடிக்கைகளில் ஏர்னெஸ்டோ பங்கெடுத்தார். அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் பிரதிபலிப்பு ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டது. தனது 16 வயதில் லத்தீன் அமெரிக்கவில் பலரது எண்ணங்களில் புரட்சியை தூண்டிய மாபெரும் மக்கல் கவிஞன் பாப்லோ நெருடாவின் கவிதைகளால் கவரப்பட்டார் ஏர்னெஸ்டோ. இளம் வயதிலேயே கார்ல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்" படித்திருந்தார் ஏர்னெஸ்டோ.

The Me Bird by Pablo Neruda

I am the Pablo Bird,
bird of a single feather,
a flier in the clear shadow
and obscure clarity,
my wings are unseen,
my ears resound
when I walk among the trees
or beneath the tombstones
like an unlucky umbrella
or a naked sword,
stretched like a bow
or round like a grape,
I fly on and on not knowing,
wounded in the dark night,
who is waiting for me,
who does not want my song,
who desires my death,
who will not know I'm arriving
and will not come to subdue me,
to bleed me, to twist me,
or to kiss my clothes,
torn by the shrieking wind.

That's why I come and go,
fly and don't fly but sing:
I am the furious bird
of the calm storm.


ஏர்னெஸ்டோவின் தந்தையாருக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டது. ஒருமுறை அந்த பெண்மணியை வீட்டிற்கு அழைத்து வந்து அறிமுகம் செய்தார் அவர். ஏர்னெஸ்டோவையும் அவரது தாயாரையும் எரிச்சலடைய வைத்தது அந்த நிகழ்வு. அது விசயமாக ஏர்னெஸ்டோ மிகவும் கோபமடைந்திருந்தார். அந்த பெண்ணின் பெயரை கேட்டாலே அவர் கோபமடந்தார். இந்த நிகழ்விற்கு பின்னர் ஏர்னெஸ்டோ அவரது தாயாருடன் மேலும் நெருக்கமானார்.

ஆஸ்துமாவின் தாக்கத்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களாலும் ஏர்னெஸ்டோ ஒரு சராசரி மாணவனாகவே திகழ்ந்தார். மனிதவியல் மற்றும் தத்துவ பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றார் ஏர்னெஸ்டோ. ராகத்திற்கும் தாளத்திற்குமுள்ள வேறுபாடு தெரியாதவராகவே வளர்ந்தார். நடனமாடவோ இசைக்கருவிகளை மீட்டவோ தெரியாதவராக இருந்தார்.

சிறுவயதிலேயே பரந்த மனதுடன் அவர் வாழ்ந்த கொர்டொபா பகுதி வாழ் ஏழைகளுக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளியை அகற்றவும், அடக்குமுறைகளையும் அநீதியையும் எதிர்க்க கடுமையாக முயன்றார். லத்தீன் அமெரிக்காவின் பிற பகுதிகளைப்போல அங்கு புறக்கணிக்கப்பட்டவர்களும், இடம்பெயர்ந்தோரும் தகரத்தாலும், அட்டைபெட்டிகளாலும் அடைத்த வீட்டில் வாழ்ந்தனர். கால்களை இழந்த ஒருவர் அந்த பகுதியில் நாய்கள் இழுக்கிற வண்டியில் பொருட்களை வைத்து விற்று பிழைத்து வந்தார். அவரது வீட்டிலிருந்து வீதிக்கு வரும் வழியில் ஒரு பள்ளத்தில் வண்டியை இழுக்க நாய்கள் சிரமப்படுவது வழக்கம். அந்த மனிதர் அவ்வேளைகளில் நாய்களை அடித்து துன்புறுத்தி நடைபாதையில் வண்டியை செலுத்துவார், இது அந்த பகுதி மக்களை எரிச்சலடையை செய்த அன்றாட நிகழ்வு. ஒரு நாள், அந்த பகுதி குழந்தைகள் அவர் மீது கற்களை வீசினார்கள். ஏர்னெஸ்டோவும் அவரது நண்பரும் அந்த காட்சியை கண்டு, குழந்தைகளிடம் தாக்குதலை நிறுத்த அறிவுறுத்தினர். ஆனால் நன்றி சொல்வதற்கு பதிலாக அந்த மனிதர் ஏர்னெஸ்டோவை வசைபாடி அவர் மீது பணக்காரர்கள் மீதுள்ள வெறுப்பை உமிழ்ந்தார். இந்த நிகழ்வின் வழி பணக்காரர்கள் ஏழைகள் மீது கொள்ளும் இரக்கம் விடுதலையாகாது என்பதை உணர்ந்தார்.

பொறியியல் படிக்க திட்டமிட்டதை மாற்றி 1947 ல் புயெனெஸ் எயர்ஸ் பல்கலைகழகத்தில் மருத்துவ துறையில், தொழுநோய் பற்றி சிறப்பு பாடமாக படித்தார் ஏர்னெஸ்டோ. கல்லூரியில் செயல்பட்ட புரட்சிகர மாணவர் இயக்கத்தில் ஏர்னெஸ்டோ பங்கெடுக்கவில்லை. படித்தவாறு ஒரு மருத்துவமனையில் பகுதி நேர வேலையும் செய்துவந்தார். கல்லூரியில் படித்து வந்த காலங்களில் தனக்கு பிடித்தமான ரக்பி விளையாட்டு விளையாடுவதில் அதிகமான நேரத்தை செலவிட்டார் ஏர்னெஸ்டோ. ரக்பி விளையாட்டு அவருக்கு உடல் வலுவையும் திட்டமிடும் கலையையும் உருவாக்கியது. இருந்தாலும் ஆஸ்துமா கொடுத்த தொந்தரவால் விளையாட்டு களத்திலிருந்து அடிக்கடி வெளியேறி தனக்குத்தானே ஊசி மருந்தை செலுத்துவது ஏர்னெஸ்டோவுக்கு பழக்கம். விடுமுறை நாட்களில் ஏர்னெஸ்டோ மோட்டார் சைக்கிள் பயணங்கள் போவது வழக்கம்.

ஏர்னெஸ்டோவின் நண்பர் ஆல்பர்டோ கிரானடோ, அர்ஜெண்டினா, கொர்டொபாவில் மருந்துக்கடை வைத்திருந்தார். இருவருமாக ஒரு விடுமுறைநாளில் சந்தித்தபோது லத்தீன் அமெரிக்கா முதல் வட அமெரிக்கா வரையிலான மோட்டார் சைக்கிள் பயணத்தை திட்டமிட்டனர். பயண திட்டத்தின் படி ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து 1 வருட விடுப்பில் டிசம்பர் திங்கள் 1951 இல் பொதெரோசாII என பெயரிடபட்ட நோர்டன் 500சிசி மோட்டர் சைக்கிளில் பயணம் துவங்கினர்.

(வரலாறு வளரும்

குயூபாவின் முக்கிய நகரமான ஹவானாவில் படிப்பை முடித்த பின்னர் பிடல் காஸ்ட்ரோ வழக்கறிஞராக பணியாற்ற துவங்கினார். தங்களது வழக்குகளுக்கான கூலியை கொடுக்க முடியாத ஏழைகளுக்காகவே காஸ்ட்ரோ வாதாடினார். இதனால் காஸ்ட்ரோவுக்கு அடிக்கடி பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. வழக்குகளுக்காக வந்த ஏழைகளிடமிருந்து வாழ்க்கை போராட்டங்களை நேரடியாகவே பிடல் அறிந்துகொண்டார். ஏழைகள் வறுமையில், நோயின் கோரப்பிடியில் தவிப்பதும், செல்வந்தர்கள் ஆடம்பரங்களும், கேளிக்கைகளும் நிரம்பிய மயக்கத்தில் வாழ்வதையும் காஸ்ட்ரோ புரிந்துகொண்டார். சிலருக்கு மட்டுமே பயன்படுகிற விதமாக அரசின் திட்டங்களும், அமைப்புகளும் செயல்படுவதை அவர் உணர்ந்தார். குயூபாவில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை பற்றிய அறிவை காஸ்ட்ரோவுக்கு வழக்கறிஞரான அனுபவம் வழங்கியது.

எல்லா குயூபா மக்களையும் போல அமெரிக்க வர்த்தகர்களின் பொருளாதார ஆதிக்கத்தையும் அதன் விளைவாக குயூபா அடிமையாவதையும் கண்ட காஸ்ட்ரோ வேதனையடைந்தார். இந்த அனுபவங்கள் காஸ்ட்ரோவை அரசியலில் ஈடுபட வைத்தது. அரசியல் அறிவு வளர்ந்த வேளையில் மக்களுக்காக பணிசெய்ய தீர்மானித்த காஸ்ட்ரோவுக்கு குயூபா மக்கள் கட்சியின் செயல்பாடு கவர்ந்தது.

காஸ்ட்ரோ 1947 ல் குயூபா மக்கள் கட்சியில் இணைந்தார். ஊழல், அநீதி, வறுமை, வேலையின்மை மற்றும் குறைந்த கூலிக்கு எதிராக குயூபா மக்கள் கட்சியினர் போராடி வந்தனர். காஸ்ட்ரோ அதிகமான நேரத்தை கட்சிப்பணியில் மக்கள் பிரச்சனைகளுக்காக செலவிட்டார். அரசாங்க அமைச்சர்கள் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்று குயூபாவை அடிமையாக்குவதாக குயூபா மக்கள் கட்சி குற்றம் சாட்டியது. காஸ்ட்ரோவின் ஈடுபாடு குயூபா மக்கள் கட்சியில் மேலும் பொறுப்புகளில் வளர்த்தெடுத்தது. மிக அருமையான பேச்சாளரான காஸ்ட்ரோவுக்கு இளைஞர்களை கவர்வது எளிதான செயலாக இருந்தது. காஸ்ட்ரோவால் கவரப்பட்டு இளைய வயதினர் குயூபா மக்கள் கட்சியில் அதிகமாக இணைந்தனர்.

1952ல் குயூபாவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இளமையும் செயல் திறனும் கொண்ட காஸ்ட்ரோ வேட்பாளராக போட்டியிட்டார். அந்த வேளையில் குயூபா மக்கள் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே மிகவும் வலுவாக இருந்தது. தேர்தலில் குயூபா மக்கள் கட்சி வெற்றி பெறும் நிலை இருந்தது. இந்த சூழலில் தேர்தலை நடத்த விடாமல் இராணுவத்தின் துணையுடன் பாடிஸ்டா நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றினார். இந்த நடவடிக்கையானது குயூபா மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தொடர் நிகழ்வுகள் குயூபாவின் வரலாற்றை மாற்றியமைத்தது.



-o0o00o000o00o0o-



அர்ஜெண்டினாவில் 4, ஜனவரி 1952ல் புத்தாண்டு கொண்டாட்டம் ஓய்ந்த வேளை புயனெஸ் எயர்ஸ்லிருந்து ல பேதரோஸ் என்ற 500 சி.சி நார்ட்டன் (Norton 500 cc motorcycle named La Poderosa II ("The Mighty One, the Second")) வகை மோட்டார் வாகனத்தில் ஏர்னெஸ்டோவும் அவரது நண்பர் ஆல்பர்டோ கிரனேடோவும் தங்களது நீண்ட பயணத்தை துவங்கினர்.

ஏர்னெஸ்டோவைப் போல ஆல்பர்டோவும் வாலிப வேகமும், தேடலும் நிறைந்தவர். தென் அமெரிக்காவின் சிலி, பெரு, கொலம்பியா, வெனெசுவேலா நாடுகளுக்கும் அதன் பின்னர் வட அமெரிக்காவிற்கும் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து ஒரு வருடம் விடுமுறை பெற்றிருந்தார். இருவரும் முறையான திட்டமிடல் இல்லாமல், மிகவும் குறுகிய கால அவசரத்தில் பயணத்தை துவக்கினார்கள். பயணம் துவங்கும் முன்னர் நண்பர்களும் குடும்பத்தினரும் கலந்துகொள்ள விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். விருந்து முடிந்து ஏர்னெஸ்டோவும், ஆல்பர்ட்டோவும் புறப்பட்ட வேளையில், ஏர்னெஸ்டோவின் அன்னை சிசிலி அரவணைத்து தழுவி விடை கொடுத்தார். தாயும் மகனும் பிரியும் வேளை பாசத்தின் வெளிப்பாடாய் இருவரின் கண்களும் கலங்கியது. விடை பேற்று வீறிட்டு கிழம்பி காட்சியிலிருந்து மறையும் புள்ளியான வண்டியை பார்க்கையில் ஏர்னெஸ்டோவின் தாயார் மனம் பிரிவின் முதல் வலியை உணர துவங்கியது. எப்போதும் அருகே வைத்து கவனமாக தன்னம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட தனது அருமை மகன் தொலைதூர பயணம் செல்கையில் எழும் வெறுமை, நிச்சயமற்ற தன்மை அன்னையின் மனதை கனமாக்கியது. ஏர்னெஸ்டோ தனக்கு அருகேயே இருந்து ஆதரவாக இருந்த நேரங்களின் அருமை அன்னனயை வாட்டியது. இணைந்திருந்த வேளைகளின் சிறப்பு பிரிவில் தெரியும் மானிட பாசத்தின் இயல்பு ஏர்னெஸ்டோவின் அன்னைக்கும் ஏற்பட்டது.

ஏர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி வேகமாக மனிதர்கள், மரங்கள், புல்வெளிகள், அழுத்தமான காற்று என அனனத்தையும் கடந்து காற்றில் பறக்கும் புரவியாக புயனெஸ் ஏர்ஸ் நகரை விட்டு வெளியேறியது. கடந்து செல்லும் காட்சிகளுக்கு ஏற்ப கவிதை, சிந்தனை என ஏர்னெஸ்டோவின் மனம் சிறகடித்து பறந்துகொண்டே இருந்தது. இயற்கை அழகை அள்ளி தனக்குள் மறைத்து வைத்திருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலும், காதோரம் கிழித்து செல்லும் காற்றும் ஏனெஸ்டோவை கவர்ந்தது. பல மணிநேரங்களில் சந்திக்க இருக்கும் தனது மனம் கவர்ந்த காதலியை நினைத்தபடியே ஏர்னெஸ்டோ காற்றில் மிதந்தபடி பயணம் போகிறார்.

இந்த இளம் வாலிபனின் மனதை கொள்ளைகொண்ட நாயகி யார்?

ஏர்னெஸ்டோவின் காதலி!

தனக்காக காத்திருப்பதாக உறுதியளித்த காதலி சிசினாவை விட்டு பயணம் செய்த ஏர்னெஸ்டோவின் வண்டி கரடு முரடான சாலையில், காற்றை கிழித்து வேகமாக சென்றது. காதலியை பிரிந்த ஏர்னெஸ்டோவின் மனதில் தான் எத்தனை அழகிய பசுமையான எண்ணங்கள். நினைவு அருவி சுழலில் சிக்கி தவிக்கும் மனது பழைய நிகழ்வுகளை சுழல வைத்தது. அழகிய அந்திப்பொழுதில் சிசினாவை சந்தித்த முதல் வேளை ஏர்னெஸ்டோவின் மனதில் பசுமையாய் படர்ந்தது.

மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டு பிசானி கிளினிக்ல் வேலை பார்த்து கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. ரக்பி விளையாடுவதும் ஜார்ஜ் மாமாவிடம் க்ளைடர் பாடங்கள் கற்பதுமாக இருந்தார். அர்ஜென்டினா முழுவதும் மோட்டார் பயணம் செய்து வந்திருந்ததால் உலகை சுற்றிப்பார்க்க ஆசை அலைமோதிய காலகட்டமது. அடுத்த பயணத்திற்கான திட்டங்களை தயாரித்துக்கொண்டே இருந்த அந்த அக்டோபர் மாத கடைசியில் ஏர்னெஸ்டோவின் வாழ்வில் புதிய இனிய அனுபவம் வந்தது.

கொன்சலஸ் அகுலியார் அவர்களுடைய மகள் கார்மன் திருமணத்திற்காக ஏர்னெஸ்டோ குடும்பத்தினர் கொரடோப பயணம் செய்தனர். அந்த திருமண விருந்தில் மரியா டெல் கார்மன் "சிசினா" பெரேரோ என்ற 16 வயது மங்கையை கண்டார். கொரடோபவின் மிகவும் வசதி படைத்த வீட்டு மங்கையான சிசினா அழகாய் இருந்தார். சிறுவயதில் ஏர்னெஸ்டோவும் சிசினாவும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தாலும் நீண்ட நாட்களின் பின்னர் சந்தித்தபோது விழிகள் வீழ்ந்து, இதயங்களில் இறகுகள் முளைத்தது. இருவரின் பார்வையில் இதயங்கள் இடமாறிய வேளையில் "ஏர்னெஸ்டோவின் மீது மின்னல் பாய்ந்த உணர்வு" ஏற்பட்டதாக இந்த நிகழ்வை கண்ட பெப்பெ அகுல்யர் விவரிக்கிறார். முதல் முறையாக காதல் வயப்பட்டார் ஏர்னெஸ்டோ.

ஏர்னெஸ்டோவால் சிசினாவும் கவரப்பட்டார். அவரது அழகிய உருவமும், கலகலப்பும் வெகுளியான பேச்சும், கள்ளமில்லா மனதும் சிசினாவை கவர்ந்தது. "அவரது அழுக்கான கசங்கிய ஆடைகள் சில வேளைகளில் பிடிக்காவிட்டாலும் எங்களை சிரிக்க வைத்தன... அதை ரசித்து ஏர்னெஸ்டோவும் சிரித்து மகிழ்ந்தார்" என சிசினாவின் வார்த்தைகளில் அவர்களது நெருக்கம் வெளிப்பட்டது. சிசினா முதிர்ச்சியடையாதவராக இருந்தாலும் கற்பனை வளமும் புத்தி கூர்மையும் மிக்க பெண்ணாக காணப்பட்டார். சிசினா தான் தனது வாழ்வில் இணையப்போகிற பெண் என ஏர்னெஸ்டோ நம்பினார். ஏர்னெஸ்டோ காதலில் தீவிரமானார்.

தேவதை கதைகளில் வருகிற காதல் போன்றது ஏர்னெச்டோவின் காதல். சிசினா அர்ஜெண்டினாவில் மிகவும் வளம் கொழித்த செல்வந்தரின் மகள். அவர்களுக்கென இருந்த சுண்ணாம்பு சுரங்கம், அரண்மனை போன்ற வீடு, மிகப்பெரிய தோட்டம் என செழிப்புற வாழ்ந்தவர். ஏர்னெஸ்டோ சாதாரணமான குடும்பத்தை சார்ந்தவர். சிசினாவும் அவரது பெற்றோரும் ஏர்னெஸ்டோ குடியிருந்த பழைய வீட்டிற்கு அருகாமையில் குடியிருந்தனர். கொரடொபாவிற்கு வெளியே அவர்களுக்கு சொந்தமான "மலகுயெனோ" என்ற மாளிகையில் கோடைவிடுமுறையில் கழித்த வேளை ஏர்னெஸ்டோ மோட்டார் பயணத்தில் சிசினாவை பார்க்க சென்றிருந்தார்.

ஏழு நாட்களும் அவர் தங்கியிருந்த அந்த அழகு மாளிகை 2000 ஏக்கர் பரப்பளவுடைய நிலத்தில் அமைந்திருந்தது. அரேபிய குதிரைகள், 2 போலோ விளையாட்டு மைதானம், சுண்ணாம்பு சுரங்க்க தொழிலாளர் குடியிருப்பு என பரந்து விரிந்த அந்த இடத்தில், எழிலாய் நிமிர்ந்து நின்றது அழகிய அரண்மனை போன்ற அந்த மாளிகை. ஞாயிற்றுக் கிழமைகளில் சிசினாவின் குடும்பம் அருகிலுள்ள தேவாலயத்தில் சென்று வழிபடுவது வழக்கம். தேவாலயத்தில் அவர்கள் குடும்பம் மற்ற தொழிலாளர்களிடம் சேராது தனியாக ஜெபங்களில் பங்கு பெற தனி வாசல், அமர்ந்து கொள்ள தனியறை என ராஜகுடும்பத்தின் அனைத்து வகை ஆடம்பரமும் நிறைந்தது சிசினா வளர்ந்த சூழல். இந்த அழகிய ராஜகுமாரி மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக சிசினாவும் ஏர்னெஸ்டோவை மிகவும் நேசித்தார். ஏர்னெஸ்டோவுக்கு அந்த மாளிகையின் செல்வந்த உபசரணைகள் தராத இனிய உணர்வை மனதிற்கு இனிய காதலியோடு இருந்த நேரங்களும் நினைவுகளும் தந்திருந்தது.

சிசினாவின் குடும்பத்தினர் ஏர்னெஸ்டோவை ஒரேயடியாக நிராகரிக்கவில்லை. சில விடயங்களில் சிசினாவிற்கு பொருத்தமானவராக ஏர்னெஸ்டோவை பார்த்தனர். அவரது எளிமையான தோற்றம் சிசினா குடும்பத்தினரை கவர்ந்தது. ஏர்னெஸ்டோ இலக்கியம், வரலாறு, தத்துவம் பற்றி பேசிய போதும், அவரது பயண அனுபவங்களை பகிர்ந்த வேளையும் அனைவரும் கவனமாக கேட்டனர். அப்போதெல்லாம் சிசினாவின் கண்களில் ஒளி படர்ந்து கன்னங்கள் சிவந்து புன்னகை வெளிப்பட்டது.

சிசினாவின் பெற்றோர் ஏர்னெஸ்டோவின் பயணங்கள் பற்றி அதிகம் கவலை கொள்ளவில்லை. அவர்களும் உலக அறிவு படைத்து, பன்முக கலாச்சாரத்துடன் எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மையுடன் இருந்தது அதற்கு காரணம். பிற்போக்கு தன்மையுடைய சமுதாயத்தில் அவர்கள் வேறுபட்ட மனிதர்களாக காணப்பட்டனர் அதனால் மற்றவர்களுக்கு சிசினா குடும்பத்தினர் வாழ்க்கை வித்தியாசமானதாக தென்பட்டது. சிசினாவின் தந்தையார் ஆபத்தான அடர்ந்த அமேசான் காடுகளில் பயணம் செய்திருந்தார். சாலைகள் சரியாக அமையாத காலத்தில் 4 சக்கர வாகன பந்தயத்தில் கலந்துகொண்டிருந்தனர். சிசினாவின் பாட்டியின் மேற்பார்வையில் முதல் விமானத்தை ஓட்டிய பெருமை கொண்டவர். சிசினாவின் மாமா ஒருவர் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர்களால் மூழ்கடிக்கப்பட்ட யுத்த கப்பல் ஒன்றில் பலியானார். இப்படி பன்முக தன்மையுடைய குடும்பம் சிசினாவுடையது.

ஏர்னெஸ்டோவுக்கு சிசினாவின் குடும்வ சூழல் சவாலாகவும் அதே வேளை மனதை கவரவும் செய்தது. காதலியை காண அடிக்கடி கொரடோபா நோக்கி பயணம் போனார் ஏர்னெஸ்டோ. 1951ல் தொடர்ந்து மலகுயெனோவிலும், நகரில் அமைந்த வீட்டிலுமாக பலமுறை சிசினா மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டார் ஏர்னெஸ்டோ. சிசினாவின் உறவினர்களின் ஏர்னெஸ்டோவை அதிகம் விரும்பியவர் சிசினாவின் மாமா மார்டின். மலகுயெனோவில் அவர் அரேபிய குதிரைகளை வளர்த்து வந்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நேசநாடுகளின் படைகளை விரும்பி ஆதரவு தெரிவிக்க இவர் மட்டும் நாஜிப் படைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். இரவு முழுவதும் விழித்திருந்து ஏர்னெஸ்டோ, சிசினா மற்றும் நண்பர்கள் விடியும் வரை நடனமாடுவதற்கு பியானோ வாசித்த பாசமான மனிதர் அவர்.

காதல் வளர, ஆசையும் வளர்ந்தது. ஏர்னெஸ்டோ சிசினாவை திருமணம் செய்யவும், தேனிலவு செல்ல தென் அமெரிக்கா முழுவதும் "காரவேன்" பயணம் செல்ல தூண்டினார். பதினாறு வயது மங்கையான சிசினா முடிவெடுக்க முடியாமல் தத்தளிக்க, பெற்றோர் இந்த திட்டத்தை ஆதரிக்கவும் இல்லை. இதன் பின்னர் ஏர்னெஸ்டோவுக்கும் சிசினா குடும்பத்தினருக்குமிடையே இடைவெளி உருவானது. விருந்து உபச்சார மேசையில் ஏர்னெஸ்டோவின் முக்கியத்துவம் குறைய துவங்கி, வீண் விவாதங்கள் அவ்வப்போது தென்பட்டது. குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாவிடினும் ஏர்னெஸ்டோ-சிசினா காதல் இரகசிய சந்திப்புகளில் வளர்ந்தது.

செவிலியர் சான்றிதழ் பெற்ற ஏர்னெஸ்டோ கப்பலில் சில காலம் வேலை பார்த்தார். துறைமுகத்தில் கப்பல் நிற்கிற சிறிது இடைவெளியில் சிசினாவின் கடிதம் கிடைத்தால் கொண்டு சென்று தர அவரது தங்கை செலியாவை அடிக்கடி துரத்துவது ஏர்னெஸ்டோவுக்கு வாடிக்கை. ஓடி வரும் தங்கையின் கைகளில் கடிதம் இருப்பதை பார்க்கும் வேளைகளில் அவர் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை. சிசினாவின் தொடர்புகள் குறைந்து கப்பலில் வேலை பார்ப்பது விருப்பமில்லாமல் வேலையை விட்டு நீங்கி மருத்துவ படிப்பை தொடர்ந்தார். அவருக்கும் சிசினாவுக்கும் காதலில் எந்த பிரச்சனியும் இருப்பதாக குடும்பத்தினரிடம் ஏர்னெஸ்டோ வெளிப்படுத்தவில்லை. சிசினாவை காதலிப்பதில் ஏற்பட்ட அழுத்தங்கள் ஏர்னெஸ்டோவின் மனதை வாட்டியது.

இப்படியான ஒரு சூழலில் 7 நாட்கள் இனிதாக காதலியுடன் கழித்து விடைபெற்ற காதலர் கண்களும் நெஞ்சமும் ஈரமானது இயற்கையே. காதலியை சந்தித்த நிகழ்வுகளை மனதில் சுமந்ததால் பயணத்தின் தூரத்தை ஏர்னெஸ்டோ உணரவில்லை. ஏர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி நெகோசியா என்ற இடத்தில் ஆல்பர்டோவின் கல்லூரி தோழியின் வீட்டை நோக்கி சென்றது.
(வரலாறு வளரும்)

புகைப்பிடிப்போரும் புகை பிடிக்காதோரும் – ஒரு ஒப்பீட்டு ரீதியான ஆய்வு

20000 இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் புகைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் அறிவாற்றல் குறைவாக இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது.

தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்களின் அறிவுத்திறன், சராசரி ஆண்களை விட எட்டு புள்ளிகள் வரை குறைவாக இருக்கின்றது. தினமும் அவர்கள் புகைக்கும் சிகரெட்டின் எண்ணிக்கைக்கு ஏற்ப அறிவாற்றல் குறைவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு 101 புள்ளிகள் அறிவுத்திறன் இருக்கும் நிலையில் புகைப் பிடிப்பவர்களுக்கு 94 புள்ளிகள் மட்டுமே அறிவுத்திறன் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். மன அழுத்தம் அதிகம் உள்ள இளைஞர்களே அதிகம் புகைப்பிடிக்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் புகைப்பழக்கம் மன அழுத்தத்தை அதிகரித்து மனநல பாதிப்புகளுக்கு உள்ளாக்குகிறது மேலும் புகைப்பழக்கம் குடிப்பழக்கத்திற்கும் வழிவகுக்கிறது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மாரடைப்பு, புற்றுநோய், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரிந்த விசயம். ஆனால் மனைவிக்கு நுரையீரல் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றையும், குழந்தைகளுக்கு காதுகோளாறு, ஆகியவையும் பரப்புகின்றனர். புகைப்பழக்கத்தில் இருந்து மீள மனரீதியான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

வேலையில் டென்சன் ஏற்பட்டால் புகையை நாடாமல் நல்ல இசையை ரசிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உடற்பயிற்சி, தியானம் போன்றவையும் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

வியாழன், 28 ஜூலை, 2011

உலகிலேயே முதன் முதலில் கடலுக்கு அடியில் நட்சத்திர ஒட்டல்


நாம் அனைவரும் பல நட்சத்திர ஒட்டல்களை பார்த்திருப்போம், ஆனால் கடலுக்கு அடியில் பார்த்திருக்கிங்களா படங்களை பாருகங்கள். இந்த நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட ஹைடிரோபாலிஸ் ஒட்டல் துபாயில் உள்ளது. இது உலகின் முதன் முதலில் கடலுக்கு அடியில் உருவக்கப்பட்டதாகும்.

சுமார் 300 ஹெக்டோ் பரப்பும் 66 அடி உயரம் கொண்டது. 2006 ம் ஆண்டு இதன் கட்டடப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஹைடிரோபாலிஸசை வடிவமைத்தவர் Joachim Hauser ஆவார். ஹைடிரோபாலிஸ்ன் மேற்ப்பகுதியில் திரையரங்கம் மற்றும் உணவகமும் உள்ளது.









புதன், 22 ஜூன், 2011

நெப்போலியனின் காதலும் வீரமும்.


காதல், நாணம், துணிச்சல், வீரம், ஆசை, ஆளுமை,ஈகை, நகைச்சுவை திறன் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை மனிதகுலத்தின் பிரத்யேக குணங்களாக விளங்கின. மனித நாகரீகத்தில் காதல், வீரம் ஆகிய இரண்டு உணர்வு வெளிப்பாடுகள் மிகுந்து காணப்படும் மனிதன் தளபதியாக, தலைவனாக, அரசனாக கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை ஏற்றுக் கொள்ளப்படுகின்றான்.

17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸ் தேசத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு சின்னஞ்சிறிய தீவில் 'போனபர்ட்' என்றுஅழைக்கப்படும் குடும்பத்தில் பிறந்த நெப்போலியன் தன்னுடைய இருபதாவது வயதிலேயே போர்வீரனாக வாழ்க்கையை தொடங்கியவன். தன் வாழ்நாளின் பாதிக்கும் மேற்பட்ட நாட்களை யுத்த களங்களிலேயே கழித்தவன். நெப்போலியனின் போர் தந்திரங்களும், போரிடும் முறையும்,படைவீரர்களிடையே ஆற்றும் வீரம் மிக்க சொற்பொழிவுகளும், ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாக தன் ஆளுகைக்கு கீழ் கொணர்ந்த திறனும் உலகின் வரலாறு அறிஞர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டவை ஆகும். நெப்போலியனின் அசாதரணமான யுத்த குணங்களை போலவே அவனின் காதலும், அதன் தொடர்ச்சியும் முடிவும் வித்தியாசமானதாக அமைந்து விட்டது.

பிரான்ஸ் தேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தை அடக்கிவிட்டு மாளிகையில் அமர்ந்திருக்கின்றான் நெப்போலியன். அப்பொழுது ஒரு சிறுவன் அவனை வணங்கிவிட்டு சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்தில் அவனுடைய அப்பா இறந்து விட்டதாகவும் அப்பொழுது அவனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வாள் படையினரால் கைப்பற்றப் பட்டதாகவும், அந்த வாள் வழிவழியாக வந்த தன் குடும்பச் சொத்து என்பதால் தாங்கள் அதை பையனின் பணிவும், குடும்ப பாரம்பரியத்தின் மீது கொண்ட அவனுடைய பற்றுதலும் நெப்போலியனை வியப்பில் ஆழ்த்துகின்றது. பாரட்டத்தக்க நற்பண்புகள் கொண்ட இப்பையனை வளர்த்த தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிட அவன் வீட்டிற்கு செல்கின்றான் நெப்போலியன், அவன் நினைத்துக் கொண்டு சென்றதோ நரை முடியும் சுருங்கிய கன்னங்களும் கொண்ட நடுத்தர வயது பெண்ணை. ஆனால் கண்டதோ கட்டுக்குலையாத மேனியும், சொக்கி விழ வைக்கும் அழகும் கொண்ட சொக்கத்தங்கம் போன்ற சொர்ணமயிலை. போர் களங்களில் வெற்றிகளை குவித்த நெப்போலியன் காதல் களத்தில் முதன்முறையாக தோற்றுப் போகின்றான்... பார்த்தவுடன் பற்றிக் கொள்ள நினைத்த அந்த இளம் விதவையின் பெயர் ஜோஸபைன். தன்னை விட இரண்டு வயது மூத்தவளும் இரண்டு ஆண் மக்களுக்குத் தாயுமான ஜோஸபைனிடம் தன் காதலை தெரிவிக்கின்றான். மறுக்கின்றாள் அவள். விடாமல் தொடர்கின்றான். மண்டியிடுகின்றான். அவள் முன் கெஞ்சுகின்றான். பிதற்றுகின்றான். இரண்டு குழந்தைகளையும், விதவைக் கோலத்தையும், சமூகத்தின் ஏச்சுப் பேச்சுக்களையும், நெப்போலியனின் எதிர்கால யுத்த நடவடிக்கைகயையும் சுட்டிக் காட்டி மறுக்கின்றாள் ஜோஸப்பின். இறுதியில் எப்பொழுதும் போல் வென்றான் நெப்போலியன். திருமணம் இனிதே நடைபெறுகின்றது. இன்பமாய் வாழ்வைத் தொடங்கினர் நெப்போலியன்-ஜோஸப்பின் தமபதியினர்.

யுத்தக் களத்தில் நினைத்த மாத்திரத்தில் தூங்கவும், நினைத்த மாத்திரத்தில் திரும்பி எழவும் தெரிந்த நெப்போலியன் திருமணம் முடிக்கும்போது சாதாரண படைத்தளபதி, விரைந்து செயலாற்றும் திறனும், துணிச்சலும், வெறித்தனம் மிக்க வேகமும் கொண்ட நெப்போலியன் இத்தாலி, ஆஸ்ட்ரியா, சார்டினாயா ஆகிய நாடுகளின் வெற்றிக்குப் பின் பிரான்ஸ் தேசத்தின் படைத் தவைனாகின்றான். தேன் குடத்தைச் சுமந்து வரும் வண்டிணை போல் காதல் மனைவியின் சுகத்தை துளித்துளியாய் அனுபவித்த நெப்போலியனால் இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையும், காட்டாறுகளும், கற்பாறைகளும் காட்டு விலங்குகளும் பாலைவனங்களும் அவனுக்கு பூந்தோட்டமாய்க் காட்சியளித்தன. நினைத்த மாத்திரத்தில் நாடுகளை வெல்வதும். கைப்பற்றிய நாட்டிலிருந்து கொண்டு வந்த செல்வங்களைக் குவிப்பதும் என தொடர்நது நெப்போலியன் பிரான்ஸ் தேசத்தின் மக்களால் பெருமிதத்தோடு பார்க்கப் பட்டான். உலக அரங்கில் பிரான்ஸ் தேசத்தின் மதிப்பு மிக வேகமாய் உயர்ந்தது. புதினாறாம் லூயி மன்னனின் முடியாட்சியை முறியடித்து குடியாட்சியை பதினேழாம் நூற்றாண்டிலேயே மலரவிட்ட பிரான்ஸ் தேசம் மெல்ல மெல்ல நெப்போலியனின் வீரத்தால் வசீகரிக்கப்பட்டு அவனைப் பேரரசனாக ஏற்றுக்கொண்டது ஜோஸபின் பேரரசியாக முடிசூட்டப்பட்டான்.

பின்விதி மெல்ல விளையாடியது. உலகின் கால்பகுதி நிலங்களை தன் ஆளுகையில் வைத்திருந்த இங்கிலாந்த௉யும் மிகப்பெரிய நாடான ரஸ்யாவையும் கைப்பற்றினால் இந்த பூமிப்பந்து முழுக்க தன் கையில் வந்து விடும் என கணக்குப் போட்டான் நெப்போலியன் ரஸ்யாவின் போர் தந்திர முறைகளாலோம், அனுபவத்தறியாத கடுங்குளிராலும் தோற்றுப் போனான். இப்போரில் சுமார் ஒன்றறை லட்சம் பேர் குளிரில் விறைத்து இறந்து போனார்கள் மக்கள் மெல்ல வெறுக்க ஆரம்பித்தனஒரு வருடத்தில் மகன் பிறக்கின்றான். சூழ்நிலை மாறி காற்று மாதிரி வீசுகின்றது பாரம்பர்யமாய் அரசியல் தந்திரமும் போர் திறனும் மிக்க இங்கிலாந்து நேசநாடு கிளன் கூட்டணியை ஏற்படுத்தி பிரான்ஸில் உள்நாட்டுக் கலவரத்தை உண்டாக்குகின்றது. நெப்போலியன் செயிண்டு எலினா தீவில் சிறைப் பிடிக்கப் படுகின்றான் வெற்றி பெற்ற நாடுகளின் உப்பரிகைகளில் உலவிய நெப்போலியன் தனிமையில் தவிக்கின்றான். இரண்டாவது மனைவி மேரி லூயி நாட்டை விட்டு ஓடிவிடுகின்றாள். விரட்டி விடப்பட்ட காதல் மனைவி மட்டும் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் நெப்போலியன்-எலினா- நெப்போலியன் என்று புலம்பியபடியே லோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றாள்.

ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் காதலித்தனர் நெப்போலியனும், ஜோஸப்பினும். நெப்போலியன் காதலிலும் வீரத்திலும் தோற்றுப் போனான். ஜோஸப்பின் வாழ்க்கையில் தோற்று காதலில் வென்றாள்.

காதலும் வீரமும் மனித குலத்தின் அடையாளங்கள். சமூக அமைப்புகளையும், இயற்கை நியதிகளையும் மீறிய முரட்டுத்தனமான ஆளுமைகளுடன் கூடிய வீரமும் தோற்றுப் போகும். காதலும் தோற்றுப் போகும்.ர். தனக்குச் சொந்த மகன் பிறந்தால் மண்ணாட்சியை தக்க வைத்துக் கொளளலாம் என்ற தவறான ஆலோசனையால் மனம் மாறிய நெப்போலியன் ஊனுருக. நெஞ்சுருக,நெத்குருக காதலித்த அன்பு மனையாளை மாளிகையை விட்டு அனுப்பிவிட்டு ஆஸ்டிரிய நாட்டு அரச வம்சத்தைச் சேர்ந்த மேரிலூயி என்னும் பெண்ணை மணக்கினறான்.
ஒரு வருடத்தில் மகன் பிறக்கின்றான். சூழ்நிலை மாறி காற்று மாதிரி வீசுகின்றது பாரம்பர்யமாய் அரசியல் தந்திரமும் போர் திறனும் மிக்க இங்கிலாந்து நேசநாடு கிளன் கூட்டணியை ஏற்படுத்தி பிரான்ஸில் உள்நாட்டுக் கலவரத்தை உண்டாக்குகின்றது. நெப்போலியன் செயிண்டு எலினா தீவில் சிறைப் பிடிக்கப் படுகின்றான் வெற்றி பெற்ற நாடுகளின் உப்பரிகைகளில் உலவிய நெப்போலியன் தனிமையில் தவிக்கின்றான். இரண்டாவது மனைவி மேரி லூயி நாட்டை விட்டு ஓடிவிடுகின்றாள். விரட்டி விடப்பட்ட காதல் மனைவி மட்டும் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் நெப்போலியன்-எலினா- நெப்போலியன் என்று புலம்பியபடியே லோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றாள்.

ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் காதலித்தனர் நெப்போலியனும், ஜோஸப்பினும். நெப்போலியன் காதலிலும் வீரத்திலும் தோற்றுப் போனான். ஜோஸப்பின் வாழ்க்கையில் தோற்று காதலில் வென்றாள்.

காதலும் வீரமும் மனித குலத்தின் அடையாளங்கள். சமூக அமைப்புகளையும், இயற்கை நியதிகளையும் மீறிய முரட்டுத்தனமான ஆளுமைகளுடன் கூடிய வீரமும் தோற்றுப் போகும். காதலும் தோற்றுப் போகும்.

சனி, 21 மே, 2011

யுத்தமும் ஆயுத விற்பனையும்

பிரான்ஸ் TF1 தொலைக்காட்சி செய்தியை தற்செயலாக பார்த்தவர்கள், அந்த மாபெரும் உண்மையை அறிந்து திகைத்திருப்பார்கள். லிபியாவில் நடக்கும் போர் குறித்த செய்தி அறிக்கை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பிரெஞ்சு இராணுவ அதிகாரி ஒருவர் தாக்குதல் விபரங்களை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். "லிபியாவில் நடக்கும் போரினால் எமது ஆயுத விற்பனை சூடு பிடித்துள்ளது. சந்தையில் புதிதாக வாங்கிய விமானங்களின் தாக்குதிறனை பரீட்சிப்பதற்கு இது அரிய சந்தர்ப்பம். எமது விமானிகளுக்கும் போர்க்களத்தில் நேரடிப் பயிற்சி கொடுக்க முடிகிறது.
" தற்செயலாக, ஒரு தடவை மட்டுமே அந்த அதிகாரியின் நேர்காணல் ஒளிபரப்பானது. விழித்துக் கொண்ட பிரெஞ்சு அரசு, அவசரமாக விடுத்த வேண்டுகோளின் பின்னர் அந்தப் பகுதி நீக்கப்பட்டு விட்டது. மேலைத்தேய "மனிதாபிமான" அரசுகள், கடாபி என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மையில் இருந்து, லிபிய மக்களை காப்பாற்றுவதற்காகவே, குண்டு போடுவதாக மக்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புதிதாக உற்பத்தி செய்யப் பட்ட நவீன ஆயுதங்களை சந்தையில் விற்பதற்காகத் தான், லிபியா மீது போர் தொடுக்கப் பட்டது. இந்த உண்மையை மக்கள் அறிந்துகொண்டால், கற்பிக்கப்பட்ட நியாயம் அடிபட்டுப் போகாதா? மேற்கத்திய நாடுகளின் மனிதாபிமான முகமூடி கிழிவதை பொறுத்துக் கொள்ளலாமா? ஆயிரம் காரணம் சொல்லுங்கள். உலகில் தயாரிக்கப்படும் முக்கால்வாசி ஆயுதங்கள் மேற்கத்திய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்ற உண்மையை எவராவது மறுக்க முடியுமா?


சாதாரணமாக எவரும் விக்கிபீடியா, கூகிளில் தேடிப் பெறக் கூடிய தகவல் இது. ரஷ்யாவை தவிர்த்தால், அதிக ஆயுதங்களை உற்பத்தி செய்து குவிக்கும் முதல் ஐந்து நாடுகள் மேற்குலகில் இருக்கின்றன. உலகில் ஆயுத உற்பத்தியில் முன்னணியில் நிற்பது, வேறு யார்? அமெரிக்கா தான். உலகில் 30 சதவீத ஆயுதங்கள் அமெரிக்க தயாரிப்புகள் தான். அவை தான் அதிகளவில் விற்பனையாகின்றன. பனிப்போர் முடிந்து இருபதாண்டுகளுக்கு மேலானாலும், இன்றைக்கும் ரஷ்யா தான் அமெரிக்காவுடன் போட்டி போட்டுக் கொண்டு ஆயுதங்களை தயாரிக்கிறது. (23 %) அதற்கு அடுத்ததாக ஜெர்மனி (11 %), பிரான்ஸ் (7 %), பிரிட்டன் (4 %), நெதர்லாந்து (3 %). இவர்கள் எல்லோரும் ஒரு பக்கம் மனித உரிமைகள், போர்க்குற்றம் பற்றி விரிவுரை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம், ஆயுதங்களை விற்று கொலைகாரர்களை ஊக்குவிக்கிறார்கள். எல்லாமே பணத்துக்காகத் தான். எங்கேயோ ஒரு மூன்றாம் உலக நாட்டில் மக்கள் செத்து மடிந்தால் தானே, முதலாம் உலக மக்கள் செல்வந்த வாழ்வு வாழலாம்? இனப்படுகொலை, போர்க்குற்றம், எது நடந்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை. ஆயுதங்களை விற்றோமா, இலாபம் சம்பாதித்தோமா, அது தான் முக்கியம். இல்லாவிட்டால் தொடர்ந்தும் பணக்கார நாடுகளாக அவர்களால் நிலைத்து நிற்க முடியுமா? ஒருவனின் மரணம், இன்னொருவனுக்கு உணவு. ஆதலினால் போர் செய்வீர்.

எங்களால் நம்ப முடியாது. ஆனால் இது தான் உலக யதார்த்தம். புதிய ஆயுதங்களை உற்பத்தி செய்து காட்சிக்கு வைத்தால் மட்டும் போதாது. அவற்றின் செயல்பாட்டை நிரூபித்துக் காட்ட வேண்டும். அப்போது தான் வாடிக்கையாளர்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். எங்காவது ஒரு நாட்டில் போர் நடந்ததால் தானே, புதிய ஆயுதங்களை பரீட்சித்துப் பார்க்க முடியும்? அவை எத்தனை மக்களின் உயிரைக் குடிக்கும், எத்தனை சொத்துகளை நாசமாக்கும், என்றெல்லாம் நிரூபித்துக் காட்ட வேண்டாமா? உதாரணத்திற்கு ஐரோப்பியரின் புதிய தயாரிப்பான Eurofighter Typhoon விமானத்தை எடுத்துக் கொள்வோம். அதன் இணையத்தளத்தில் பின்வருமாறு விளம்பரம் செய்கிறார்கள். "The world's most advanced new generation multi-role/swing-role combat aircraft available on the market." சும்மா விளம்பரம் செய்து விட்டால் போதுமா? இதுவரை எந்த ஒரு யுத்தத்திலும் பாவிக்கப்படாத போர்விமானத்தை எவன் வாங்குவான்? தற்போது லிபியா மீது நேட்டோ படைகள் நடத்தும் தாக்குதல்களில், அந்த விமானங்கள் ஈடுபடுத்தப் படுகின்றன. Eurofighter விமானங்களின் தாக்குதிறன் குறித்த விபரங்களை தொலைக்காட்சி செய்தியில் பார்த்து மகிழலாம். சி.என்.என்., பி.பி.சி., அல்ஜசீரா எல்லாம் இலவச விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சில முக்கிய வாடிக்கையாளர்கள் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா, பிரேசில், குரோவாசியா... இன்னும் பல நாடுகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டியுள்ளன.

அமெரிக்கா தனது மேலாண்மையை நிறுவதற்காக ஒரு புதிய ஆயுதத்தை கண்டுபிடித்துள்ளது. தொலைதூர இலக்குகளைத் தாக்குவதற்கு அணுகுண்டு பொருத்தப்பட்ட ஆயுதங்களை பாவிக்க வேண்டிய தேவை இருந்தது. புதிதாக கண்டுபிடித்த Prompt Global Strike, அதே அளவு தாக்குதிறனைக் கொண்ட, மரபு வழிப் போரில் பயன்படுத்தக் கூடிய ஆயுதம். அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்ட ஒரு மணி நேரத்தில், உலகின் எந்தப் பாகத்திலும் சென்று வெடிக்கக் கூடியது. செய்மதி அந்த ஆயுதத்தை இலக்கு நோக்கி வழிநடத்தும். ஆனால், அந்த ஆயுதம் சந்தைக்கு வர இன்னும் ஓரிரு வருடங்கள் ஆகலாம். எதிர்காலத்தில் அமெரிக்காவின் Prompt Global Strike நிகழ்த்தப் போகும் அற்புதங்களைக் காண தயாராகுங்கள். ஒபாமாவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுத்தது இதற்காகத் தானா?

இன்று நேற்றல்ல, கடந்த எழுபதாண்டுகளாக போர்க்காலத்தில் தான் ஆயுத வியாபாரம் சூடு பிடிக்கின்றது. 1937 ம் ஆண்டு, ஸ்பானியாவில் குவேர்னிகா நகரம் ஜெர்மன் விமானங்களின் குண்டுவீச்சில் அழிக்கப் பட்டது. பிரான்கோவின் பாஸிச படைகளுக்கு உதவும் பொருட்டு நடத்தப்பட்ட குண்டுவீச்சில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முதல் நடந்த போர் அது. பிற்காலத்தில் போர்க்குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நாஸி அரசின் மந்திரி கேரிங் இவ்வாறு கூறினார்:"புதிதாக அமைக்கப்பட்ட எங்களது விமானப்படையினதும், விமானிகளினதும் முதலாவது போர்க்கள அனுபவம்." நாஸி ஜெர்மனி சொல்லிக் கொடுத்த பாடத்தை அமெரிக்கர்கள் வியட்னாம் போரில் பின்பற்றினார்கள். BLU -82B /C -130 என்ற உற்பத்திப் பெயரைக் கொண்ட, "Daisy Cutter " என்று செல்லமாக அழைக்கப்பட்ட நாசகார ஆயுதத்தை வியட்னாம் காடுகளில் போட்டார்கள். அந்தக் குண்டு, வனாந்தரக் காட்டின் மத்தியில் 600 மீட்டர் சுற்றளவுக்கு மரங்களை அழித்து விடும். மரங்கள் அழிக்கப்பட்ட இடத்தில், ஒரு ஹெலிகாப்டர் இறங்குமளவிற்கு இடம் கிடைத்து விடுமாம். டெய்சி கட்டர் குண்டுவீச்சினால் பரவிய காட்டுத்தீயில், அங்கு வாழ்ந்த வியட்நாமிய மக்களும் மரணமடைந்தனர். சீறிப் பாய்ந்த தீச் சுவாலைகள் மிரண்ட மக்களை எந்தப் பக்கம் ஓடுவது என்று தெரியாமல் தவிக்க வைத்தது. அதைப் பற்றி யாருக்கு கவலை? ஹெலிகாப்டர் தரையிரங்குமளவு இடம் கிடைத்ததல்லவா? அது அல்லவா வியாபாரத்திற்கு அவசியமான விளம்பரம்?

குவைத் மீட்பதற்கு நடந்த முதலாவது வளைகுடா போரில், "Bunker Buster " குண்டுகள் பிரயோகிக்கப் பட்டன. சதாம் ஹுசைனின் நிலக்கீழ் மறைவிடங்களை தாக்கி அழிக்கும் நோக்கில் ஏவப்பட்டன. பின்னர் ஆப்கான் போரில், அல்கைதா/தாலிபான் தலைவர்கள் பதுங்கியிருந்த குகைகளை தகர்க்க பயன்படுத்தப் பட்டன. ஆனால் இத்தகைய நவீன ஆயுதங்களால் தாலிபானை அழிக்க முடியவில்லை. அதனால் தற்போது ஒரு புதிய ஆயுதத்தை கண்டுபிடித்துள்ளார்கள். Thermobaric (வெப்ப அமுக்க) குண்டுகள், விழுந்த இடத்தில் பிராணவாயுவை உறிஞ்சி எடுத்து விடும். இதனால் உள் உடல் உறுப்புகள் யாவும் பாதிக்கப்படும். பிரித்தானியா கண்டுபிடித்துள்ள Light weight anti -structure missiles சுவரை துளைத்துச் சென்று உள்ளே சென்று வெடிக்கும் தன்மை கொண்டது. XM25 Individual Airburst Weapon System (IAWS), இதுவும் சந்தையில் புதிதாக வந்துள்ள அமெரிக்க ஆயுதம் தான். இது ஒரு சாதாரணமான கிரனேட் வீசு கருவி. ஆயினும் லேசரால் தூரத்தை அளந்து, கிரனேட் குறிப்பிட்ட இலக்கின் மீது விழுந்து வெடிக்க வைக்கலாம். இந்த புதிய ஆயுதங்களை வாங்கி பாவிக்க விரும்புகிறீர்களா? உடனடியாக ஒபாமாவை தொடர்பு கொள்ளவும். வாங்குபவர் ஏதாவது ஒரு அரசாங்க சார்பாக தொடர்பு கொள்வது விரும்பத் தக்கது. அரசுகளுடன் மட்டும் தான் அவர்கள் வியாபாரம் பேசுவார்களாம். கறுப்புச் சந்தையில் ஆயுதம் விற்கும் சில்லறை வியாபாரிகளும் இருக்கிறார்கள். பெரும்பாலும் சிறிய ரக ஆயுதங்களை அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். அவ்வப்போது பெரிய முதலாளிகள், சில்லறை முதலாளிகளை பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள்.

விமானந்தாங்கிக் கப்பல் மீதான ஒரு பார்வை

விமானந்தாங்கிக் கப்பல்

நாடுகளுக்கிடையிலான யுத்தங்களின் போது விமானப்படையின் பணி பிரதானமானதாகக் காணப்படுகின்றது. எதிரி நாடுகளின் உட்கட்டுமானங்களைச் சிதைப்பதில் விமானப்படையின் பங்கே மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது.

தொலைவிலுள்ள நாடுகளுடனான யுத்தங்களின் போது விமானங்களுக்கான எரிபொருள் மற்றும் வெடிபொருள் நிரப்புதலுக்கான தளங்களைத் தெரிவுசெய்வதிலுள்ள சிரமங்களைத் தவிர்ப்பதன் பொருட்டே விமானந்தாங்கிக் கப்பல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நவீன யுத்த விமானங்களுக்கு வானிற் பறப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே எரிபொருள் நிரப்பும் வசதி காணப்பட்ட போதிலும் வெடிபொருள் மீள் நிரப்புகைக்காகத் தளங்கள் தேவையாகவேயுள்ளன.

விமானந்தாங்கிக் கப்பல்களின் வரலாறு வளிக்கூடு தாங்கிகளின் (Balloon Carrier) உருவாக்கத்திலிருந்தே ஆரம்பமாகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கடற்கண்காணிப்புப் பயன்பாட்டிற்கான வளிக்கூடுகளைத் (Balloon) தாங்கிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட கடற்கலங்களே விமானந்தாங்கிக் கப்பல்களின் எண்ணக்கருவிற்கு அடித்தளமிட்டது. 1910 ஆம் ஆண்டளவில் அமெரிக்கக் கடற்படையின் குருஸ் வகை கப்பலில் இருந்தே உலகின் முதலாவது விமானந் தாங்கிக் கப்பலில் இருந்தான வான்பறப்பு மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் உலக யுத்தக் காலப்பகுதியில் அமெரிக்க, பிரித்தானிய மற்றும் ஜப்பானியக் கடற்படைகளால் Escort வகை விமானந்தாங்கிக் கப்பல்கள் பெருமளவிற் பயன்படுத்தப்பட்டன. இவ்வகை விமானந்தாங்கிக் கப்பல்களின் உற்பத்திச்செலவு குறைவாகக் காணப்பட்ட படியால் அவை அதிகளவிற் தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும் இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் கண்டறிபப்பட்ட இவ்வகை விமானந்தாங்கிக் கப்பல்களின் வினைத்திறன் குறையாடு விமானந்தாங்கிக் கப்பல்களின் தொழினுட்ப மேம்பாட்டுக்கான தேவையை உணர்த்தின. இரண்டாம் உலகப்போரின் பின்னர் விமானந்தாங்கிக் கப்பல்கள் தொழினுட்ப மற்கும் வினைத்திறனில் பாரிய வளர்ச்சியைக் கண்டன.

பொதுவாக விமானந் தாங்கிக் கப்பல்கள் ஏனைய போர்க்கப்பல்களுடன் ஒப்பிடும்போது குறைந்தளவு போராயுதங்களையே கொண்டிருப்பதுடன் தாக்குதல் வலுக் குறைந்ததாகவும் காணப்படுகின்றன. இதன் காரணமாக விமானந்தாங்கிக் கப்பல்கள் அவற்றுடன் விரைவு தாக்குதற்கலங்கள், நாசகாரிக்கப்பல்கள் போன்றவற்றைக்கொண்ட அணியாகவே செயற்படுகின்றன.

நவீன விமானந்தாங்கிக் கப்பல்கள் விமானங்கள் மேலெழுதல் (Take-off) மற்றும் தரையிறங்கல் (Landing) போன்ற செயற்பாடுகளைச் செய்யக்கூடியவாறு தட்டையான மேற்பரப்பை உடையவையாகக் காணப்படுகின்றன. விமானங்கள் கப்பலிலிருந்து கப்பலின் முன்புறக்தால் மேலெழுந்து தரையிறங்கும்போது கப்பலின் பின்புறத்தால் தரையிறங்குகின்றன. சில விமானந்தாங்கிக் கப்பல்கள், விமானங்கள் அவற்றிலிருந்து மேலெழும்போது, குறிப்பிட்டதோர் வேகத்தில் முன்நோக்கி நகர்ந்து விமானத்தின் சார்புவேகத்தை அதிகரிக்கின்றன. இதன்காரணமாக விமானம் கப்பலின் மேற்பரப்பில் குறைந்தளவு வேகத்தில் ஓடி மேலெழ முடிகின்றது. ஆயினும் நவீன விமானந்தாங்கிக் கப்பல்களில் விமானம் மேலெழும்போதான வேகத்தை அதிகரிப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு விசைப்பொறி (Catapult) பயன்படுத்தப்படுகின்றது.

விமானத்தின் முன் சக்கரத்துடன் பொருத்தப்படும் இவ் விசைப்பொறியானது விமானத்தை உந்தித் தள்ளுவதன் மூலம் விமானம் மேலெழுவதற்குத் தேவையான வேகத்தை அதிகரிப்பதோடு மிகக் குறுகிய தூர ஓட்டத்துடன் விமானம் மேலெழுவதற்கும் உதவுகின்றது.
விமானந்தாங்கிக் கப்பல் ஒன்றில் விமானம் ஒன்று தரையிறங்கும்போது விமானத்தின் வாற்பகுதியிலுள்ள கொழுவியமைப்பானது (Tailhook) கப்பலின் மேற்தளத்திலுள்ள வடம் (Arrestor wire) ஒன்றினை பற்றிப்பிடிப்பதன் மூலம் விமானத்தின் வேகம் மிகக்குறுகிய தூரத்தினுள் சடுதியாக ஓய்விற்குக் கொண்டுவரப்படுகின்றது.

விமானந்தாங்கிக் கப்பல்களின் மேற்தளத்தில், இடதுபக்கமாக Island என்றழைக்கப்படும் கப்பலின் கட்டுப்பாட்டுக் கோபுரம் அமைந்திருக்கும். மிகச்சில கப்பல்கள் இக்கட்டுப்பாட்டுக் கோபுரம் இல்லாது வடிவமைக்கப்படுகின்றன. அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகள் அவர்களின் பணிகளிற்கேற்ப வெவ்வேறான நிறக்களினாலான உடைகளை அணிந்திருப்பர்.

பிரித்தானிய றோயல் கடற்படையால் முதலாவதாக வடிவமைக்கப்பட்டு பின்னர் பலநாட்டுக் கடற்படைகளாலும் பயன்படுத்தப்படும் அண்மைக்கால விமானந்தாங்கிக் கப்பல்களின் வடிவம் அவற்றின் முன்பக்கம் மேல்நோக்கி உயர்ந்து காணப்படும். இவ்வகையான கப்பல்கள் குறுந்தூர ஓட்டத்துடன் மேலெழவல்ல Sea Harrier வகை விமானங்களை கருத்திற்கொண்டே வடிவமைக்கப்பட்ட போதிலும் சாதாரண விமானங்களுக்கும் இவை ஏற்றவையாகவே காணப்படுகின்றன. இவ்வகைக் கப்பல்களின் சிறப்பான மேற்தள வடிவமைப்புக் காரணமாக இவ்வகைக் கப்பல்களில் விமானத்தை உந்தித்தள்ளும் விசையமைப்போ (Catapult) அல்லது தடுப்புவடமோ (Arrestor wire) தேவையில்லை. இருந்தபோதிலும் அதிக சுமையினைக் காவவல்ல விமானங்களான Super Hornet மற்றும் Sukhoi Su-33 வகை விமானங்களுக்கும் E-2 Hawkeye வகை வேகம்குறைந்த விமானங்களுக்கும் இவ்வடிவமைப்புப் பொருத்தமற்றே காணப்படுகின்றது. இதன்காரணமாக, அமெரிக்க வடிவமைப்பாளர்கள் இவ்வடிவமைப்பை வரவேற்கவில்லை.

அமெரிக்கக் கடற்படை அணுசக்தியில் இயங்கும் பாரிய விமானந்தாங்கிக் கப்பல்கள் பதினொன்றை தமது கடற்படைச் சேவையில் ஈடுபடுத்துகின்றது. அமெரிக்கக் கடற்படையே உலகில் அதிகளவான விமானந்தாங்கிக் கப்பல்களைப் பயன்படுத்தும் கடற்படையாகும். அமெரிக்கக் கடற்படை இருபத்திநாலு மணிநேரத்தினுள் உலகின் எப்பாகத்திற்கும் செல்லக்கூடியவாறு தனது விமானந்தாங்கிக் கப்பலணியைத் தயார்நிலையில் வைத்திருக்கின்றது. அமெரிக்கா தவிர்ந்து பிரான்ஸ், சீனா, இந்தியா, ரஸ்யா போன்ற நாடுகள் தமக்கான நவீன விமானந்தாங்கிக் கப்பல்களை உருவாக்குகின்றன. ரஸ்யா 2050 ஆம் ஆண்டளவில் 60000 மெற்றிக் தொன் காவுதிறன் கொண்ட உலகின் மிகப்பொரும் விமானந்தாங்கிக் கப்பலை உருவாக்கும் திட்டத்துடன் செயலாற்றி வருகின்றது.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

மூலதனத்துக்குப் பைத்தியம் முற்றும் போது, ஏகாதிபத்திய யுத்தங்கள் அரங்கேறுகின்றன

மூலதனத்தின் ஆன்ம ஈடேற்றத்துக்குத் தடையான அனைத்தையும் மூலதனம் தகர்த்தெறிகின்றது. இங்கு ஈவு, இரக்கம் என்று எதையும் மூலதனம் காட்டுவதில்லை. இன்றைய இந்த நவீன சமூகக் கட்டமைப்பு மூலதனத்தின் ஈடேற்றத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்தியப் பார்ப்பனர்கள் தனது சொந்த நலன் சார்ந்த சமூக ஈடேற்றத்துக்காக எப்படி சாதிகளை உருவாக்கினாரோ, அதேபோல் தான் இன்றைய நவீன நாகரிகக் கட்டமைப்பை மூலதனம் உருவாக்கியது, உருவாக்கி வருகின்றது. இந்த பொதுஅம்சம், மற்றவனை அழிப்பதையே அடிப்படையாகக் கொண்டது. மூலதனக் குவிப்புக்கு எதிரான அனைத்து விதமான போட்டியாளர்களையும் ஈவிரக்கமின்றி ஒடுக்குகின்றது. இதன் போது எங்கும் சமூக அராஜகத்தை ஆணையில் வைக்கின்றது. இது ஜனநாயகம், சுதந்திரம் என்ற பெயரிலேயே அரங்கேறுகின்றது. இதன் மூலம் மூலதனம் தங்கு தடையற்ற வகையில் வீங்கிச் செல்லுகின்றது.


தடையாக உள்ளவை அனைத்தையும் சமூகக் கட்டமைப்பிலான, ஒழுங்குமுறைக்குட்பட்ட சட்டதிட்டங்கள் மூலம், திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வன்முறை மூலம் தகர்க்கின்றது. இதன் போது ஈவிரக்கமற்ற வக்கிரத்துடன் களமிறங்குகின்றது. மூலதனத்தைக் குவிக்கின்ற போக்கில் ஏற்படுகின்ற தடைக்கு எதிராக ஏற்படும் பைத்தியம் முற்றும் போது, தவிர்க்க முடியாது ஏகாதிபத்திய மோதலாகத் தொடங்கி, அதுவே வெறிகொண்ட யுத்தமாக மாறிவிடுகின்றது. இது ஆரம்பத்தில் தணிவான தாழ்நிலையில் இரகசியமாகவும், (இது இரகசிய சதிகளுக்கு உட்பட்ட, எல்லைக்குள் பேசித் தீர்க்க முனைகின்றனர்), பகிரங்கமாகவும் ஏற்ற இறக்கத்துடன் தன்னை வெளிப்படுத்துகின்றது.


மூலதனம் தான் உருவாக்கிய சமூக அமைப்பில் சுரண்டப்படும் மக்களுக்கு வெளியில் சந்திக்கும் தடைகளில் மிகப் பிரதானமானது, எப்போதும், போட்டி மூலதனமே. இங்கு மூலதனத்துக்கு எதிரான வர்க்க மோதல்கள், இதன் மேல்தான் உருவாகின்றன. மூலதனத்துக்கு இடையிலான முரண்பாடு, ஏகாதிபத்திய மோதலாக, யுத்தமாகப் பிரதிபலிக்கின்றது. ஆனால் இது எப்போதும் வேறுயொன்றின் பின்னால் தன்னை மூடிமறைத்துக் கொண்டு, மக்களை அதற்கு பலியிடுகின்றனர். உலகச் சந்தையில் மூலதனத்துக்கு இடையில் நடக்கும் நெருக்கடிகள், அன்றாடம் ஒவ்வொரு செக்சனுக்குமுரிய ஒரு நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது. இதற்குள் நடக்கும் பேரங்களே ராஜதந்திரமாகக் காட்டப்படுகின்றது. இதன்போது ஒன்றையொன்று காலைவாரிக் கவிழ்த்துப் போட முனைகின்றது. போட்டி மூலதனத்தை எதிர்த்தே, சந்தை தனது செயல்பாட்டை களத்தில் வக்கிரமாகவே நடத்துகின்றது. அன்றாடம் நடக்கும் இந்த வர்த்தக நெருக்கடியில், ஒரே ஏகாதிபத்தியத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஒருபுறம் சந்திக்கும் அதேநேரம், மற்றைய ஏகாதிபத்தியப் போட்டியாளனை எதிர்கொண்ட பலமுனை முரண்பாடுகள் ஒருங்கே நிகழ்கின்றன.


ஒரே ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த மூலதனப் போட்டியாளர்கள் ஒரே சட்டவிதிகளுக்குள் இருந்து உருவாகுவதால், போட்டியை இலகுவாகவே மட்டுப்படுத்த முடிகின்றது. இந்தச் சட்டயெல்லை உள்ளூர்ப் போட்டியாளனைக் கட்டுப்படுத்தி ஒன்றையொன்று மேவி அழிப்பதற்கு ஏற்ற ஒரு அதிகார சமூக உறுப்பை, ஜனநாயகத்தின் பெயரில் மூலதனம் உருவாக்குகின்றது. இதன் மூலம் சொந்த நாட்டுப் போட்டியாளனை எதிர்கொள்வது இலகுவாகின்றது. இப்படி உருவாகும் அதிகார வர்க்கம் பெரும் மூலதனத்தை நேரடியாகச் சார்ந்து இருப்பதால், இலகுவாகவே போட்டி மூலதனங்களை அழித்தொழிப்பதற்கு சொந்த சட்டதிட்டம் மூலம் துணைசெய்கின்றனர். இதன் மூலம் உள்ளூர் மூலதனப் போட்டியாளனை இலகுவாக அழித்து விடமுடிகின்றது. ஆனால் மற்றைய ஏகாதிபத்தியப் போட்டியாளர்கள் அப்படி அல்ல. அவன் தனது நாடு என்ற எல்லையில், தனக்கான ஒரு அதிகார அமைப்பைச் சார்ந்த ஒரு சட்ட அமைப்பைச் சார்ந்து வாழ்கின்றது. இதனால் போட்டியாளனை எதிர்கொள்ளும் போது, சதியை அடிப்படையாகக் கொண்ட ராஜதந்திரப் பேச்சு வார்த்தைகள் முதல், பலாத்காரத்தின் எல்லை வரையிலான எல்லைக்குள் ஒன்றையொன்று தற்காத்தும், தகர்த்தும் மோதுகின்றன.


சர்வதேச ரீதியாக நடக்கும் போட்டி மூலதனத்தின் மோதல், அடங்காத வெறியுடன் பல்வேறு நாடுகளை அடிமைப்படுத்தி, சுரண்டவே கடுமையாக முயலுகின்றது. இதன் போது தமக்கு இடையிலான முரண்பாடுகளை எதிர்கொள்ள ஒவ்வொரு ஏகாதிபத்தியமும், இராணுவ மோதல் என்ற எல்லை வரை வன்முறைச் செயலில் குதிக்கின்றது. ஏகாதிபத்திய மோதலில் ஒரு முதிர்ந்த வடிவமாகவே, இராணுவ ரீதியான மோதல் பரிணமிக்கின்றது. மூலதனத்தின் எல்லாவிதமான கடைகெட்ட சமூக விரோதப் பாத்திரங்களினதும் ஒருங்கிணைந்த வடிவம் தான், இதற்கான அடிப்படையாக இருக்கின்றது. ஏகாதிபத்தியத்தின் கடைகெட்ட சமூக விரோத வக்கிரம், ஏகாதிபத்தியத்தின் தோற்றத்திலேயே அதன் உயிர்நாடியாகப் புழுத்துக் கிடக்கின்றது. இதன் அடிப்படையில் தான் லெனின் ஏகாதிபத்தியம் என்றால் என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்து முன்வைக்கின்றர்.


ஏகாதிபத்தியமானது


1. ஏகபோக முதலாளித்துவமாகும்.


2. புல்லுருவித்தனமான, அல்லது அழுகத் தொடங்கிவிட்ட முதலாளித்துவமாகும்.


3. அந்திமக்கால முதலாளித்துவமாகும்....



அதன் சாரப் பொருள்...


1. கார்ட்டல்கள், சிண்டிக்கேட்டுகள், டிரஸ்டுகள் முதலாளிகளது இந்த ஏகபோகக் கூட்டுகள் தோற்றுவிக்கப்படும் அளவுக்கு பொருளுற்பத்தியின் ஒன்றுகுவிப்பு வளர்ந்து விடுகிறது.


2. பெரிய வங்கிகளின் ஏகபோகநிலை....


3. மூலப்பொருட்களுக்கான ஆதாரங்களை முதலாளித்துவ டிரஸ்டுகளும் நிதி ஆதிக்கக் கும்பலும் கைப்பற்றிக் கொண்டு விடுகின்றன...


4. சர்வதேசக் கார்ட்டல்கள் உலகைத் தம்மிடையே கூறுபோட்டு பாகப்பிரிவினை செய்து கொள்வது ஆரம்பமாகிவிட்டது....


5. உலகின் பிரதேசம் (காலனிகள்) பங்கிட்டுக் கொள்ளப்படுதல் நிறைவுற்றுவிட்டது.... ஏகாதிபத்தியத்தை இனம் கண்டு கொள்வதற்குரிய அடையாளமாய் இருப்பது தொழிற்துறை மூலதனத்தின் ஆதிக்கம் அல்ல, நிதி மூலதனத்தின் ஆதிக்கமே ஆகும்'' என்றார் லெனின்.


ஏகாதிபத்தியம் பற்றி மிகச் சாலச் சிறந்த எடுப்பான அடிப்படைகளே, இன்று மேலும் துல்லியமாகக் காணப்படுகின்றன. உலகின் மூலை முடுக்கு எங்கும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவதிலும், அதிகாரத்தை அதன் மேல் செலுத்துவதிலும் மூலதனம் உயர்ந்தபட்ச நிலையைத் தொட்டு நிற்கின்றது. நிதி மூலதனத்தின் ஆதிக்கம், உலகையே விசுவாசமாக வாலாட்டும் வளர்ப்பு அடிமையாக்கி விட்டது. ஆனால் இது பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்து காணப்படுகின்றது. இதனால் ஏகாதிபத்திய முரண்பாடுகள் தணலாக மாறிச் சிவந்து கிடக்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானுக்கு இடையிலான, ஏகாதிபத்திய பிரதான முரண்பாடுகள், கடும் மோதல் நிலையில் நடக்கின்றது. இதனால் அன்றாடம் மூலதனச் சந்தையில், பெரும் அதிர்வுகள் நடந்த வண்ணமே உள்ளது. செல்வம் சிறகு முளைத்து அங்குமிங்கும் பறந்தோடுகின்றது. வர்த்தகம் ஒரு சதிவலையாக, சதிக்கிடங்காக மாறிக் கிடக்கின்றது. இங்கு மோசடியும், சூதாட்டமும் வர்த்தகமுமே ஆன்மாவாகி, உலகை அங்குமிங்குமாக அலைக்கழித்துச் செல்கின்றது. எங்கும் நிலையாத தன்மை, வர்த்தகச் சந்தையில் பெரும் பீதியை ஆணையில் நிறுத்தி விடுகின்றது. 24 மணி நேரத்தில் வரும் ஒவ்வொரு வினாடியும் கண்விழித்து சதிகளைத் தீட்டுவதே, இன்றைய நவீன திட்டமிடலாகயுள்ளது. இதையே இராஜதந்திரம் என்று வாய் கூசாது பிரகடனம் செய்கின்றனர்.


இப்படி ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் பற்றி லெனின் கூறிய கூற்றுகள், உலகமயமாதலில் இன்றும் மிகச் சரியாகவும், சிறப்பாகவும், எடுப்பாகவும் இருக்கின்றன. லெனின் இது பற்றி என்ன கூறுகின்றார் எனப் பார்ப்போம். ""ஏகபோகத்துக்கும் அதன் கூடவே இருந்துவரும் தடையில்லாப் போட்டிக்கும் இடையேயுள்ள முரண்பாடு (பிரம்மாண்டமான இலாபங்களுக்கு) தடையில்லாச் சந்தையிலான "நேர்மையிலான' வாணிபத்துக்கும் இடையிலான முரண்பாடு ஒரு பக்கம் கார்ட்டல்களும் டிரஸ்டுகளுடனானவற்றுக்கும் மறுபக்கம் கார்ட்டல் மயமாகாத தொழிலுக்கும் இடையிலான முரண்பாடு'' ஏகாதிபத்தியத்தின் ஆழமானதும் மோதலுக்குமுரிய அடிப்படை முரண்பாடு என்Ùர் லெனின். இது இன்று பன்னாட்டு தேசங்கடந்த மூலதனத்துக்கும் அப்படியே பொருந்தி நிற்கின்றது. எங்கும் ஒரு அதிகாரத்துடன் கூடிய சதி கட்டமைக்கப்படுகின்றது. வர்த்தகச் சந்தையை திட்டமிட்டே கவிழ்த்து விட்டு, அதை கைப்பற்றுகின்றனர். சந்தை பேரங்கள் முதல் கையூட்டுகள் (லஞ்சம்) கொடுத்தும் கவர்ந்தெடுக்கப்படுகின்றது. தமக்கு இசைவான வகையில் மற்றைய நாட்டுச் சட்டத்திட்டங்களையே திருத்தி விடுகின்றனர் அல்லது மாற்றி விடுகின்றனர். ஏகாதிபத்தியமல்லாத நாடுகளின் கழுத்தில் காலை வைத்தபடிதான், ஒப்பந்தங்களை ஏகாதிபத்தியங்கள் அமைதியாகவே திணிக்கின்றன. அங்கும் இங்குமாகக் கையெழுத்தான ஒருதலைப்பட்சமான ஒப்பந்தங்கள் மக்களுக்கு எதிராகச் செயல்படுத்துவதே இன்றைய அரசுகளின் நவீன கடமையாகி விட்டது. தடையில்லாத சந்தையின் நேர்மையான வர்த்தகம் என்பதைக் கூட, எதார்த்தத்தில் மறுக்கின்றது. மூலதனம் தனது விரிவாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தனது சொந்தக் கோட்பாட்டை மீறி, அடத்தாகவே தனது சொந்த விதியையே மறுத்து வீங்குகின்றது. இன்று ஆளும் வர்க்கங்கள் தங்களைத் தாம் பாதுகாக்க உருவாக்கிய ஜனநாயகத் தேர்தல் முறையைக் கூட, ஆளும் வர்க்கங்கள் முறைகேடாக எப்படிக் கையாளுகின்றதோ அதே போல்தான் வர்த்தகத்திலும் நடக்கின்றது.


மூலதனம் உலகளவிலான சூறையாடலுக்கான மேலாதிக்கத்துக்காக நடத்தும் மோதலினால் ஏற்படும் விளைவுகள், அனைத்து நாடுகளிலும், அனைத்து மக்களிலும் பட்டுத் தெறிக்கின்றது. இதன் போதுதான் சமாதான உலகம் பற்றியும், மனித சுதந்திரம் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் வாய்கிழிய ஓதி அரங்கேற்றுகின்றனர். இதை மூடிமறைக்கவே, மனித குலத்தைப் பிளந்து அதில் குளிர் காய்கின்றது ஏகாதிபத்தியம். மக்களுக்கு இடையில் திட்டமிட்டே மோதல்களை உற்பத்தி செய்கின்றனர். இதன் மூலம் மனித இனப் பிளவுகளின் மேல் கொள்ளை அடிப்பவர்கள், தம்மைத் தாம் தற்காத்துக் கொண்டு, கொடூரமான முகத்துடன் களத்தில் புதுவடிவம் எடுக்கின்றனர். இதன் ஒரு அங்கமாக உருவானதே உலகமயமாதல்.


இதன் போது எங்கும் அமைதி பற்றியும், சமாதானம் பற்றியும் உரத்துப் பேசுகின்றனர். எங்கும், அனைத்துத் துறைகளிலும் படுமோசமான வன்முறையே நவீனமாகின்றது. இதை நியாயப்படுத்தி அல்லது மூடிமறைக்கும், முதுகு சொறியும் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், தமது சொந்த ஜனநாயகத்தின் பெயரால் மக்களின் முதுகில் ஏறி அமருகின்றனர். அமைதியான, சமாதானமான உலகம் பற்றி, வண்ணவண்ணமான கோட்பாடுகளை முன்வைக்கின்றனர். மனித இனத்தைச் சுரண்டிக் கொழுக்கும் மனிதவிரோத, சமூகவிரோத செயலையிட்டு, இந்த ஜனநாயக எழுத்தாளர்கள் யாரும் எப்போதும் கவலைப்படுவது கிடையாது. இந்தக் கொடுமையை எதிர்த்துப் போராடுவதையே, இவர்கள் கோட்பாட்டு ரீதியாக எப்போதும் மறுத்துரைக்க முனைகின்றனர். சமாதானமாகச் சுரண்டும் உலக அமைதிக்கும், சுதந்திரமாகச் சுரண்டும் உரிமைக்கும் எதிராகப் போராடுபவர்களையே, சமாதானத்தின் எதிரிகளாக இவர்கள் சித்தரிப்பவர்களாக உள்ளனர். மனித உழைப்பு மற்றொருவனால் சுரண்டப்படுவதே, உலகின் சமாதானத்துக்குச் சவாலாகின்றது என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை அல்லது சிலர் சடங்குக்காக அதை ஒத்துக் கொண்டு அதற்கு எதிராகவே எதார்த்தத்தில் உள்ளனர். இதை இட்டு இவர்கள் கவலை கொள்ளாத ஒரு நிலையிலும், ஏகாதிபத்தியத்துக்கு இடையில் மூலதனம் உருவாக்கும் பிரதான முரண்பாடு, அமைதிக்கும் சமாதானத்துக்கும் எதிராக செயல்படுவதை மூடிமறைப்பதே இன்றைய இலட்சியமாகி விடுகின்றது. இந்த மூலதனத்துக்கு இடையிலான மோதல், மனித இனத்தையே அழித்துவிடும் என்ற உண்மையைக் கூட கண்டு கொள்வதை திட்டமிட்டே மூடி மறைக்கின்றனர். இன்று மூலதனத்துக்கு இடையிலான மோதல் உலக அமைதிக்கும், சமாதானத்துக்கும் ஆபத்தான ஒன்றாகவே வளர்ச்சியுற்று வருகின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முதல் இரண்டு உலக யுத்தங்களும், மூலதனத்துக்கு இடையேதான் நடந்தன. ஏகாதிபத்திய சகாப்தம் முதல் இன்று வரையில், நாடுகளுக்கு உள்ளேயான வர்க்கப் போராட்டம் அல்லாத அனைத்து மோதல்களும் கூட ஏகாதிபத்திய மூலதனத்துக்கு இடையிலானதாகவே இருந்தது. ஆனால் இதை வெறும் தனிநபர்கள், சிறு குழுக்கள் சார்ந்தாகக் கட்டுவது, மூலதனத்தின் தந்திரமான விளையாட்டாக உள்ளது. இதையே பற்பல ஜனநாயக எழுத்தாளர்களும் பிரதிபலித்து, எதிரொலிக்கின்றனர்.


இந்த மோசடித்தனமான கூச்சல் அன்று முதல் இன்று வரை ஒரேவிதமாக பல வண்ணத்தில் அரங்கேறுகின்றது. லெனின் இதைத் தனது காலத்தில் எதிர் கொண்ட போதே, அதை அம்பலப்படுத்தினார். ""சர்வதேசக் கார்ட்டல்கள், மூலதனம் சர்வதேசியமயமாக்கப்படுதலின் மிகவும் எடுப்பான வெளிப்பாடுகளில் ஒன்றாகுமாதலால், முதலாளித்துவத்தில் தேசங்களிடையே சமாதானம் மலர்வதற்கான நம்பிக்கையை அளிப்பனவாகும் என்ற கருத்தைச் சில முதலாளித்துவ எழுத்தாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். தத்துவார்த்தத்தில் இந்தக் கருத்து அறவே அபத்தமானது, நடைமுறையில் குதர்க்க வாதமும், படுமோசமான சந்தர்ப்பவாதத்தை நேர்மையற்ற முறையில் ஆதரித்து வாதாடுவதுமே ஆகும் என்றார். இந்த உண்மை இன்று பரந்த தளத்தில், ஜனநாயகத்தின் பெயரில் நடக்கின்றது. சமாதானம், அமைதி, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் எதிர்களாக, மக்களுக்காகப் போராடுபவர்கள் மீது அவதூறாக சுமத்தப்படுகின்றது. உலகின் எஞ்சி இருக்கும் சுதந்திரம், ஜனநாயகம் என அனைத்தையும் படிப்படியாக அழித்துவரும் மூலதனம், இதை மற்றவர்கள் மேல் சுமத்தி விடுகின்றனர். யாரிடம் வாழ்வதற்கான அடிப்படையான வாழ்க்கை ஆதாரப் பொருட்கள் தாராளமாக உள்ளனவோ, அவர்கள் மட்டும் தான், குறைந்தபட்சம் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நினைத்துப் பார்க்கமுடியும். மற்றவனிடம் கையேந்தி நிற்கும் ஒருவன் எப்படி சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நினைத்துப் பார்க்க முடியும். தான் நினைத்ததைச் சொல்லவும், அதை எழுதவும் கூட முடியாத வகையில், மூலதனம் அனைத்து ஊடக வடிவங்களையும் கூடக் கைப்பற்றி வைத்துள்ளது.


இந்த நிலையில் உலகத்தில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் எப்படி இருக்கமுடியும். அமைதி முதல் சமாதானத்துக்கு எதிராக மூலதனம் நடத்தும் மோதல்கள் தான், உலக அமைதிக்கு சவால்விடுகின்றது. இதனடிப்படையில் மூலதனம் தமக்கு இடையில் அன்றாடம் மோதுகின்றது. மனிதனைப் பட்டினி போட்டே மனித இனத்தைக் கொன்று போடுகின்றது. வாழ்க்கை ஆதாரப் பொருட்களைக் கைப்பற்றி வைத்துள்ள மூலதனத்துக்கு எதிராகப் போராட வைக்கின்றது. மக்கள் கிளர்ந்து எழுவது ஒருபுறம் நடக்க, மறுபுறத்தில் ஒழுங்குப்படுத்தப்பட்ட வடிவில் உருவாகாத எதிர்வினைகள் அரங்கேறுகின்றன. இது மக்களின் பெயரில் நடக்கும் உதிரியான கொள்ளை, கொலை முதல் தனிநபர் பயங்கரவாதம் வரை விரிந்து செல்கின்றது. ஏகாதிபத்தியம் மறுபுறத்தில் எல்லாவிதமான கொள்ளையையும், சூறையாடலையும், மனிதப் படுகொலைகளையும் கவர்ச்சிகரமாக மூடிமறைத்தபடி, மற்றவர்கள் மீது அதை குற்றம் சுமத்துகின்றனர். கேடுகெட்ட மூலதனத்தின் வல்லான்மையின் துணையுடன், உண்மைகளையே கவிழ்த்துப் போடுகின்றனர். பணத்துக்குப் பல் இளித்து நக்கிப் பிழைக்கும் அறிவுத்துறையினர், உலகத்தையே தம்மையொத்த பன்றிகளின் கூடாரமாக்குகின்றனர்.


எதிர்மறையில் உலக எதார்த்தம் நிர்வாணமாகவே நிற்கின்றது. ஏகாதிபத்திய முரண்பாடே பிரதான முரண்பாடாக, மூலதனத்தின் முன்னே நின்று பேயாட்டமாடுகின்றது. முன்பே இந்த நூலில் சில அடிப்படையான புள்ளிவிபரத் தரவுகளை இதனடிப்படையில் பார்த்தோம். ஏகாதிபத்தியங்களான ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்காவுக்கு இடையில் மூலதனங்கள் எப்படி அங்குமிங்குமாக அலைபாய்கின்றது என்பதைக் கண்டோம். மூலதனம் நிம்மதியற்று, பைத்தியம் படித்த நிலையில் அங்குமிங்குமாகத் தாவிக் குதறுகின்றது. இதை நாம் மேலும் குறிப்பாகப் பாப்போம்.


உலகில் உள்ள 200 முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள், உலகமயமாதல் பொருளாதார நெருக்கடிக்குள் அமெரிக்காவுக்கும் ஜப்பனுக்கும் இடையில் எப்படிக் கைமாறியது எனப் பார்ப்போம்.

ஆண்டு - நாடு - பன்னாட்டு நிறுவன எண்ணிக்கை - வருமானம் கோடி டாலரில்

1982 ஜப்பான் 35 65,700
1982 அமெரிக்கா 80 1,30,000
1992 ஜப்பான் 54 2,00,000
1992 அமெரிக்கா 60 1,70,000
1995 ஜப்பான் 58 2,70,000
1995 அமெரிக்கா 59 2,00,000

14 வருடங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தரவு, அங்கும் இங்குமாக மூலதனம் நடத்திய குழிபறிப்புகளின் வெட்டுமுகத் தோற்றமே இது. இவை ஒரு இழுபறியான மோதலாக மாறி, அரங்கில் உண்மைக் காட்சியாகியுள்ளது. 1982இல் முன்னணி 200 நிறுவனங்களில் ஜப்பான் 35 பன்னாட்டு நிறுவனங்களை சொந்தமாக கொண்டிருந்தது. இது 1992இல் 54ஆகவும், 1995இல் 58ஆகவும் அதிகரித்தது. அமெரிக்காவோ 1982இல் மிகப்பெரிய 200 நிறுவனங்களில் 80 பன்னாட்டு நிறுவனங்களை சொந்தமாகக் கொண்டிருந்தது. இது 1992இல் 60ஆகவும், 1995இல் 59ஆகவும் குறைந்தது. மறுபக்கம் இந்த நிறுவனங்கள் சார்ந்த மூலதன திரட்சி 1982இல் ஜப்பான் 65,700 கோடி டாலரை கொண்டு 35 பன்னாட்டு நிறுவனங்கள் காணப்பட்டது. இது 1992இல் 54 ஆகிய அதேநேரம் மூலதனம் 2,00,000 கோடி டாலராகியது. 1995இல் 58 நிறுவனத்தை சொந்தமாகக் கொண்டு 2,70,000 கோடி டாலரை சொந்தமாக்கியது. அமெரிக்கா 1982இல் 80 பன்னாட்டு நிறுவனத்தைக் கொண்டு 1,30,000 கோடி டாலரை சொந்தமாகக் கொண்டிருந்தது. 1992இல் பன்னாட்டு நிறுவனங்கள் 60ஆக குறைந்ததுடன் 1,70,000 கோடி டாலரையும், 1995இல் 59 நிறுவனத்துடன் 2,00,000 கோடி டாலரைக் கொண்டு ஜப்பானுக்கு கீழ் சரிந்து சென்றது. இது ஒன்றையொன்று உறிஞ்சியதையும், ஏகாதிபத்திய முரண்பாடுகளையும் எடுத்துக் காட்டுகின்றது. மூலதனம் தனக்கிடையில் ஒரு நிலையற்ற தன்மையை அடைவதுடன், மோதல் போக்குக் கொண்ட நெருக்கடியை அன்றாடம் சந்திப்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. இதுவே ஏகாதிபத்திய முரண்பாடாக இருப்பதுடன், இதுவே இராணுவ மோதலுக்குரிய முதிர்வு நிலையை அடைகின்றது. உலகச் சந்தை மறுபடியும் மீளப் பகிர்வதன் மூலமே, மூலதனம் தப்பிப் பிழைக்க முனைகின்றது.


மக்களை மிக அதிகளவில் சூறையாடுவதையே, மூலதனத்துக்கு இடையிலான முரண்பாடு கோருகின்றது. மக்களின் அடிப்படையான வாழ்வியல் கூறுகளை மூலதனம் ஒழித்துக் கட்டுவதன் மூலம், தன்னை தற்பாதுகாத்துக் கொள்ள முனைகின்றது. இதனால் இதை எதிர்த்து கீழ் இருந்து எழும் வர்க்கப் போராட்டம், மூலதனத்தின் முரண்பாட்டை மேலும் கூர்மையாக்குகின்றது. இது தொடர்ச்சியானதும், ஏற்றமும், இறக்கமும் கொண்ட ஒரு அலையாகவே எதார்த்தத்தில் எழுகின்றது.
இந்த முரண்பாடு பல பத்து வருடங்களில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது. 1960இல் அமெரிக்கா ஜப்பானுக்கு 160 கோடி டாலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்த அதேநேரம், 110 கோடி டாலருக்கு பொருட்களை இறக்குமதி செய்தது. 1984இல் அமெரிக்கா 3,815 கோடி டாலர் பெறுமதியான பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்த அதேநேரம், 3360 கோடி டாலருக்கு பொருட்களை இறக்குமதி செய்தது. 1988இல் அமெரிக்கா 6,560 கோடி டாலர் பெறுமதியான பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்த அதேநேரம், 5,920 கோடி டாலருக்கு பொருட்களை இறக்குமதி செய்தது. தமக்கு இடையிலான வர்த்தகம் அதிகரித்த அதே நேரம், சர்வதேச ரீதியான வர்த்தகத்தில் பிளவுகள் அதிகரித்தது. ஜப்பான் 196080 இடையில் தனது பொருளாதார வளர்ச்சியை 300 மடங்காக அதிகரித்த போது, சந்தையில் புதிய நெருக்கடிகள் உருவானது. சந்தையை கட்டுப்படுத்தி வைத்திருந்தவர்கள் அதைத் தக்கவைக்க ஜப்பானுடன் மோதவேண்டிய சூழல் உருவானது. உலகளவில் ஜப்பானின் வர்த்தகம் விரிந்தபோது, உள்நாட்டில் செழிப்பு உருவானது. 1960இல் ஜப்பானின் தலா வருமானம் அமெரிக்க தலா வருமானத்தில் 30 சதவீதமாக இருந்தது. இது 1980இல் 70 சதவீதமாக வளர்ச்சி கண்டது. பெரும் மூலதனத்தின் கொழுப்பு ஏறியபோது, பணக்காரக் கும்பலின் தனிநபர் வருமானம் ஜப்பான் மக்களின் வாழ்வையே நாசமாக்கத் தொடங்கியது. ஏகாதிபத்திய முரண்பாடுகள் உலகச்சந்தையை அங்கும் இங்குமாகப் புரட்டிப் போட்ட அதேநேரம், ஏகாதிபத்தியத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வுகள் சூறையாடப்படுவது அதிகரித்தது.


ஜப்பான் மற்றும் ஜெர்மனிய ஏகாதிபத்தியங்களின் பொருளாதார மீட்சி, ஏகாதிபத்திய மோதலைக் கூர்மையாக்கியது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்கப் பொருளாதாரம் பெற்ற மேன்மையான அனுகூலங்கள் தொடர்ச்சியான இழப்புக்குள்ளாகின. இந்த மோதல் உலகளாவிய வர்த்தகத்தை வெம்பவைத்து, வீங்கி அதிகரிக்க உதவிய அடுத்த கணமே, வீழ்ச்சியும் அதன் பின்னாலே அலை மோதுகின்றது. மூலதனத்தைக் கொழுக்க வைக்கும் வர்த்தக இயங்கியல் விதி என்பது, ஏற்றத்தையும் இறக்கத்தையும் ஒருங்கே கொண்டது. எங்கேயோ ஒரு இடத்தில் நடக்கும் இழப்புத் தான், மற்றொரு பக்கத்தில் குவிப்பாகின்றது. உதாரணமாக 1969இல் அமெரிக்கா நாளாந்தம் 100 கோடி டாலருக்கு அந்நியச் செலாவணி வியாபாரத்தை செய்தது. இது 1983இல் 3400 கோடி டாலராகியது. உலக ரீதியில் இது 750 கோடியில் இருந்து 20,000 கோடி டாலராகியது. 1969இல் அமெரிக்காவின் உலகளாவிய வர்த்தகத்தின் பங்கு 7.5 க்கு ஒன்றாக இருந்தது. இது 1983இல் 5.8க்கு ஒன்றாகியது. வர்த்தக நெருக்கடி தொடராகவே உருவாகின்றது. உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவின் பங்கு 19691983க்கும் இடையில் அதிகரித்த போது, இழப்பு மூன்றாம் உலக நாடுகளினதும் மக்களினதும் தலைகள் மீது நடந்தது. ஆனால் இந்த வர்த்தக அதிகரிப்பு, அமெரிக்காவின் உலகளாவிய வர்த்தக ஆதிக்கத்தைத் தக்க வைக்கவில்லை. மற்றைய ஏகாதிபத்தியத்துடனான போட்டியில் அதை இழப்புக்குள்ளாகியது.


அமெரிக்கா 1950இல் உலகச் சந்தையில் 50 சதவீதத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது. இது 1988இல் 25 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 1965இல் 65 சதவீதமாக இருந்த அமெரிக்க வாகன உற்பத்தி ஆதிக்கம், 1980இல் 20 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. 198084 இடையில் தனது மொத்த ஏற்றுமதிச் சந்தையில் 23 சதவீதத்தை இழந்தது. 1955இல் எஃகு உற்பத்தியில் 39.3 சதவீதத்தை வைத்திருந்த அமெரிக்கா 1975இல் 16.4 சதவீதமாகக் குறைந்து போனது. இது 1984இல் 8.4 சதவீதமாகியது. அதாவது 19731983க்கு இடையில் எஃகு உற்பத்தி 44 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. 1950இல் அமெரிக்கச் சந்தையில் அமெரிக்கப் பொருட்கள் 95 சதவீதத்தை வழங்கியது. இது 1984இல் 60 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. 40 சதவீதம் அமெரிக்கா அல்லாத அன்னியப் பொருட்களால் அமெரிக்கச் சந்தை நிரம்பியது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பாக சந்தை மீதான நெருக்கடி தொடர்ச்சியாக, மிகவும் கடுமையாகி வருகின்றது. இது உலகளாவிய சந்தைகளில் மட்டுமல்ல, உள்நாட்டிலும் இது பொருந்துகின்றது. அமெரிக்கா வகித்த மேன்மையான பொருளாதாரம், படிப்படியாகத் தகர்ந்து வருகின்றது. இது மூன்றாம் உலக யுத்தத்துக்கான ஒரு புதியநிலைக்கு உந்தித் தள்ளுகின்றது. தன்னைத் தான் தக்கவைக்க இராணுவ ரீதியான ஒரு தாக்குதல் யுத்தத்தை, அமெரிக்கா உலகளாவிய ரீதியில் மற்றைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வலிந்து தொடங்கியுள்ளது. எந்த மூன்றாம் உலக நாடுகளில் தலையிட்டாலும், ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாட்டில் இருந்தே இவை தொடங்குகின்றது. இது சோவியத் சிதைவின் பின்பான, புதிய ஒரு உலக நிலையாகும். ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாடே, மூலதனத்துக்கு முதன்மை முரண்பாடாகியுள்ளது. எங்கும் ஒரு மூடி மறைக்கப்பட்ட இரகசிய யுத்தம் நடக்கின்றது. இது பகிரங்கமாக அரங்கேறுவது அதிகரிக்கின்றது. இது முழுமையான ஒரு ஏகாதிபத்திய உலக யுத்தமாக மாறுவதை பின்போடவும், அதில் இருந்து தப்பிப் பிழைக்கவும், மூன்றாம் உலக நாடுகள் மேலான சுரண்டல் கடுமையாகி தீவிரமாக்குகின்றனர். இதன் மூலம் பொருளாதார நெருக்கடிகள், ஒரு இராணுவ மோதலாக மாறுவதை பின்போடுகின்றனர்.


இந்தப் பொருளாதார நெருக்கடி பிரிட்டனுக்கும் கடுமையாக ஏற்பட்டது. முன்னாள் காலனிகளைக் கொண்டு பிரிட்டிஷ் மூலதனம் செழித்தோங்கிய காலம் கனவாகிவிட்டது. உலகம் மறுபங்கீடு செய்யப்பட்ட புதிய நிலையில் கடுமையான முரண்பாடுகளுடன் உள்ளது. பிரிட்டன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, தனது தங்கக் கையிருப்பில் இருந்த 145 டன் தங்கத்தை 19992002க்கு இடையில் விற்றது. இன்று மூலதனம் உருவாக்கும் ஏகாதிபத்திய நெருக்கடி என்பது ஒரு நிகழ்ச்சிப் போக்காகிவிட்டது. பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி வீதம் மந்த நிலைக்குள் சென்றுள்ளது. இது உலகளவில் மூலதனத்துக்கு இடையிலான மோதலைத் தோற்றுவிக்கின்றது. இதுவும் ஏகாதிபத்திய மோதலாக அரங்கில் பிரதிபலிக்கின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பொருளாதார நெருக்கடி, தவிர்க்கமுடியாது பொருளாதார வளர்ச்சி விகிதத்தை மந்த நிலைக்குள் நகர்த்துகின்றது. அதிரடியான பொருளாதாரத் தேக்கம், மூலதனத்துக்கு பீதியை உருவாக்குகின்றது.


உலகின் பிரதான நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீதங்கள்

1950 - 1960 - 1970 - 1980 - 1990 - 1996

அமெரிக்கா 8.7 2.2 0.0 0.5 1.2 1.5
ஜப்பான் 10.3 13.1 10.2 3.6 4.8 1.5
மேற்கு ஜெர்மனி 19.4 8.7 5.0 1.0 5.7 1.5
பிரிட்டன் 3.5 5.6 2.3 2.2 0.4 2.2
சீனா 11.4 5.5 15.5 4.2 3.3 9.3

பொருளாதார வளர்ச்சி வீதத்தில் சீனா மட்டும் விதிவிலக்காகும். இதை நாம் பின்னால் தனியாகப் பார்ப்போம். ஜப்பான், ஜெர்மனி என்பன இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பாக பொருளாதார ரீதியாக மீண்ட போது ஏற்பட்ட வளர்ச்சி, 1990களுடன் முடிவுக்கு வந்து விடுகின்றது. 1990ஆம் ஆண்டு இரண்டு ஜெர்மனிகளும் இணைக்கப்பட்ட போது ஏற்பட்ட அதியுயர் சுரண்டல் சார்ந்த சந்தையில், ஒரு திடீர் வீக்கமே இறுதியான வளர்ச்சியாகக் காணப்பட்டது. பின் ஏகாதிபத்திய முரண்பாடுகள் கூர்மையடைந்து நெருக்கடியான எல்லைக்குள் உலகம் புகுந்துள்ளது. இதில் இருந்து மீள உருவான உலகமயமாதல் கூட, அவர்களுக்கு இடையிலான நெருக்கடியை மட்டுமல்ல, பொருளாதார மீட்சியையும் மீட்டு விடவில்லை. ஏகாதிபத்தியப் பொருளாதாரம் ஒரு நெருக்கடி ஊடான வீழ்ச்சியையே சந்தித்தது, சந்திக்கின்றது. சந்தித்து வருகின்றது. இவை எல்லாம் மூன்றாம் உலக நாடுகளிடம் இருந்து வருடாந்தம் 35,000 கோடி டாலருக்கு மேலாக அறவீடும் வட்டி மற்றும் கடன் மீட்பு என்ற ஏகாதிபத்தியத்தின் பொற்காலத்தில் தான், ஏகாதிபத்திய நெருக்கடிகள் அக்கம்பக்கமாக காணப்படுகின்றன. உண்மையில் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து கொள்ளையிடும் பெரும் தொகை செல்வத்தினால் தான் இன்று தப்பிப் பிழைத்து உயிர் வாழ்கின்றது. இதைக் கொண்டு தான் உலகமயமாதலை ஏகாதிபத்தியம் தனக்குத் தானே பூச்சூட்டுகின்றனர்.



உலகமயமாதலூடாக தப்பிப் பிழைக்கும் பொருளாதாரக் கட்டமைப்புக்குள், மூன்றாம் உலக நாடுகளைக் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய வடிவங்கள் பலவகைப்பட்டது. உதாரணமாக 1977இல் அமெரிக்காவின் தேசங்கடந்த தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்த மூலதனம் 2,11,750 கோடி இந்தியா ரூபாவாகும். ஆனால் இவை அந்நிய நாடுகளில் தொழில் வர்த்தகம் மூலம் கட்டுப்படுத்திய வரவு செலவு 11,34,000 கோடி இந்தியா ரூபாவாகும். அதாவது இது ஐந்து மடங்காகும். எங்கும் ஒரு அராஜகம் மூலம், மனித சமூகத்தை சூறையாடித்தான் ஏகாதிபத்தியங்கள் நீடிக்கின்றன. 1976இல் வர்த்தக ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 12.8 சதவீதமாகும். அதாவது 1,34,100 கோடி இந்தியா ரூபாவாக இருந்தது. அந்நிய வர்த்தகத்தில் உபரி லாபமாக அமெரிக்காவுக்கு கிடைத்த தொகையோ 35,000 கோடி இந்தியா ரூபாவாகும். 1976இல் நேரடி முதலீட்டின் மூலம் வெளிநாடுகளில் இருந்து லாபமாக கொள்ளையிட்ட தொகை 39,200 கோடி இந்தியா ரூபாவாகும். இதைவிட 1977இல் சேவைத்துறை, தொழில்நுட்ப வர்த்தக உபரி மட்டும் 1,00,725 கோடி இந்தியா ரூபாவாக இருந்தது. ஏகாதிபத்தியத்தின் கொள்ளைகள் பற்பல வழிகளில் சூக்குமமாகவே நடக்கின்றது. மூன்Ùம் உலக நாடுகள் 2003இல் வட்டியாகவும், மீள் கொடுப்பனவாகவும் கொடுத்த தொகை 35,000 கோடி டாலர். அதாவது அண்ணளவாக 17,50,000 கோடி இந்தியா ரூபாவாகும்.


எப்படி ஏகாதிபத்திய உலகமயமாதல் சகாப்தம் தப்பி பிழைக்கின்றது என்பதை, இந்தக் கொள்ளை தெளிவாகவும் சிறப்பாகவும் எடுத்துக்காட்டுகின்றது. மூன்றாம் உலக நாடுகள் வட்டி கொடுத்தலை நிறுத்தினால் ஏகாதிபத்திய உலக சகாப்தமே தகர்ந்துபோகும். ஏகாதிபத்தியங்களின் வரவு செலவில் மூன்றாம் உலக நாடுகள் கட்டும் வட்டி மற்றும் மீள் வரவு, எந்தப் பங்கை வகித்து வருகின்றது என்பதை ஒப்பீட்டளவில் ஆராய்வோம்.

சில ஏகாதிபத்தியங்களின் தேசிய வருமானம் கோடி டாலரில்


மூன்றாம் உலக நாடுகள் ஏகாதிபத்தியத்துக்கு கட்டும் வட்டி மற்றும் மீள் கொடுப்பனவுகள் கனடா ஏகாதிபத்தியத்தின் மொத்த தேசிய வருமானத்தில் 56 சதவீதமாகும். 1999இல் மூன்றாம் உலக நாடுகளின் கடன் 2,43,000 கோடி டாலராகவும், வட்டி மற்றும் மீள் கொடுப்பனவு 36,000 கோடி டாலராகவும் இருந்தது. இந்த கடன் அமெரிக்காவின் மொத்த தேசிய வருமானத்தில் 26.5 சதவீதமாக இருந்தது. இது ஜெர்மனி தேசிய வருமானத்தை விட அதிகமாகவும் காணப்பட்டது. பிரான்சின் தேசிய வருமானத்தை விடவும் இரண்டு மடங்கு அதிகமாகவே மூன்றாம் உலக நாடுகளின் கடன் இருந்தது. கனடாவின் தேசிய வருமானத்தை விடவும், நான்கு மடங்கு அதிகமாக மூன்றாம் உலக நாடுகளின் கடன் காணப்பட்டது. ஏகாதிபத்தியத்தின் வரவுகளில் வட்டி மற்றும் மீள் கொடுப்பனவு முக்கியமான ஒன்றாகி விட்டது. இப்படி ஏற்றுமதி, நேரடி வர்த்தகம், மறைமுக வர்த்தகம், பங்குச்சந்தை, மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதி பொருட்களின் மீது திட்டமிட்டு உருவாக்கும் விலை குறைப்பு என்ற ஒரு சுற்று வழிப்பாதையிலான பெரும் கொள்ளைகள் மூலம் தான் ஏகாதிபத்தியம் தப்பிப் பிழைக்கின்றது.


இப்படி தப்பிப் பிழைக்கும் ஏகாதிபத்தியத்தின் மொத்த தேசிய வருமானம் கூட, ஏகாதிபத்திய முரண்பாடுகளால் கூடிக்குறைந்து செல்வதை நாம் மேலே காணமுடிகின்றது. உதாரணமாக ஜப்பானை எடுப்பின் 1987யுடன் 1988 ஒப்பிடின் வருடாந்தர வருமானத்தில் 41,400 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பை 1994யுடன் 1998யை ஒப்பிடின் 90,700 கோடி டாலர் இழப்பாக இருந்தது. இப்படி பல நாடுகளில் தேசிய வருமானம் ஏற்ற இறக்கம் கொண்டதாக அங்கும் இங்குமாக மற்றைய ஏகாதிபத்தியத்துடன் மோதியே வெளிவருகின்றது. ஒன்றையொன்று மிஞ்சமுனையும் அதே தளத்தில், ஏழை நாடுகளை கடுமையாகச் சூறையாடி தம்மைத் தக்கவைக்கவே முனைகின்றது.


ஏகாதிபத்திய கூர்மையான முரண்பாடுகளின் இடையே நடக்கும் ஏற்றுமதி இறக்குமதி குறித்து ஆராய்வோம். 1973க்கும் 1987க்கும் இடையிலான காலத்தில் நடந்த ஏற்றுமதி இறக்குமதியை இந்த அட்டவணை ஆராய்கின்றது.



மற்றையவை முதல் 40க்குள் இல்லை.


1998இல் 92 சதவீதமான ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியமுதல் 30 நாடுகளும் சதவீதத்தில்

ஐரோப்பா 20.3 சதவீதம்
அமெரிக்கா 17 சதவீதம்
ஜப்பான் 9.7 சதவீதம்
கனடா 5.3 சதவீதம்
சீனா 4.6 சதவீதம்
ஹாங்காங் 4.3 சதவீதம்
தென்கொரியா 3.3 சதவீதம்
மெக்சிகோ 2.9 சதவீதம்
தாய்வான் 2.7 சதவீதம்
சிங்கப்பூர் 2.7 சதவீதம்
சுவிஸ் 2.0 சதவீதம்
மலேசியா 1.8 சதவீதம்
ரசியா 1.4 சதவீதம்
ஆஸ்திரேலியா 1.4 சதவீதம்
தாய்லாந்து 1.3 சதவீதம்
பிரேசில் 1.3 சதவீதம்
இந்தோனேசியா 1.2 சதவீதம்
நோர்வே 1.0 சதவீதம்
சவுதிஅரேபியா 1.0 சதவீதம்
இந்தியா 0.8 சதவீதம்
30 வது நாடாக வெனிசுவேலா 0.4 சதவீதம்

1985இல் பிரதேசங்களின் மொத்த உள்நாட்டு வருமானமும் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி கோடி டாலரிலும், மக்கள் தொகை கோடியிலும்



ஏற்றுமதி இறக்குமதி எப்படி உலகில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் பகிரப்படுகின்றது என்பதையே நாம் மேலே பார்க்கின்றோம். பிரதான ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இழுபறியையும், ஏகாதிபத்தியம் எப்படி உலகில் உள்ள அனைத்து செல்வங்களின் சொந்தக்காரராக மாறுகின்றனர் என்பதையும் காண்கின்றோம். இங்கு சிதைந்து போன சோவியத் என்ற சமூக ஏகாதிபத்தியத்தின் பலத்தையும் நாம் கணக்கில் எடுக்கக் கூடியதாக உள்ளது. 1985இல் உலகில் அதிக ஏற்றுமதி செய்த நாடு, முன்னாள் சோவியத்தாக இருப்பதை நாம் காணமுடியும். தேசிய வருமானத்தை எடுப்பினும் கூட அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் காணப்பட்டது. சமூக ஏகாதிபத்தியமான சோவியத் மிக பெரிய போட்டியாளனாகவே அக்கால கட்டத்தில் இராணுவத் துறையில் மட்டுமல்ல, பொருளாதாரத் துறையிலும் காணப்பட்டது. ஜப்பான், ஜெர்மனி ஏகாதிபத்தியத்துக்கு உள்ளேயே மிகவேகமாக முன்னேறி வந்த இக்காலகட்டத்தில் தான், சோவியத் உலக ஆதிக்கத்துக்காக ஏகாதிபத்திய போட்டியில் குதித்து இருந்தது. சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ள, மற்றைய ஏகாதிபத்தியத்துக்கு இடையில் ஒரு நெருக்கமான இணக்கப்பாடு காணப்பட்டது. ஆனால் சமூக ஏகாதிபத்தியத்தின் சிதைவின் பின்பு, இவர்களுக்கு இடையிலான இணக்கப்பாடு சிதைந்து இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ளது.


1985இல் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ரசியா என்ற மூன்று பிரதானமான ஏகாதிபத்திய மையங்கள் மொத்த ஏற்றுமதியில் 76.5 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியது. 1973, 1987, 2000ஆம் ஆண்டுகளில் முதல் ஆறு பிரதான ஏற்றுமதியாளர்களும், உலக ஏற்றுமதியில் முறையே 46, 47.3, 46.2 சதவீதத்தைக் கட்டுப்படுத்தினர். இதற்குள் பல ஏற்றத்தாழ்வுகளை உலகம் சந்தித்தது. உதாரணமாக அமெரிக்கா முறையே 12.4, 10.2, 19.1 சதவீத அளவில் உலக ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியது. 1990இல் உலக ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 18 சதவீதமாகும். இது படிப்படியாக ஏற்ற இறக்கத்துடன் வீழ்ச்சி கண்டு வந்தது. இதேநேரம் ஜெர்மனியை எடுத்தால் முறையே 11.7, 11.8, 5.6 சதவீதத்தை கட்டுப்படுத்திய அதேநேரம், ஏற்றுமதியில் ஒரு சரிவைக் கொடுத்துள்ளது. இந்தச் சரிவுகள் சந்தையில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான நெருக்கடியை அதிகரிக்க வைக்கின்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இறக்குமதி கடும் பற்றாக்குறைக்கு வழி வகுத்துள்ளது.

உதாரணமாக 2002யை எடுத்து ஆராய்ந்தால் அவை அப்பட்டமாக வெளிபடுத்தப்பட்டு நிற்கின்றது. 2002இல் உலகின் முன்னணி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கோடி டாலரில்


2002ஆம் ஆண்டு உலகளாவிய ஏற்றுமதி இறக்குமதி பிரதான நாடுகள் சார்ந்த அட்டவணையை நாம் மேலே காண்கின்றோம். உலகமயமாதலின் நேரடி விளைவு ஏற்றுமதி இறக்குமதியின் அளவை பல மடங்காக்கியுள்ளது. அமெரிக்காவின் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையில் உள்ள ஏற்றத்தாழ்வு இரண்டுமடங்காகி உள்ளது. இந்தப் பற்றாக்குறை சர்வதேச நெருக்கடிக்கு இட்டுச் செல்லுகின்றது. அமெரிக்க டாலர் சர்வதேச நாணயமாக இருப்பதால், அதைக் கொண்டு பெறுமதியற்ற டாலர் நோட்டுகளை சந்தையில் தள்ளி விடுவதன் மூலம், இறக்குமதியிலான பற்றாக்குறையில் இருந்து தப்பி பிழைக்க முனைகின்றனர். டாலர் பெறுமதிக்கு ஏற்பட்ட சரிவு ஈரோவுடன் ஒப்பிடும் போது மிகக் குறுகிய காலத்தில் அண்ணளவாக 30 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டது. இதனால் சர்வதேச நாணயமாக தொடர்ந்தும் டாலர் இருப்பது என்பது கேள்விக்குள்ளாகின்றது. அன்னிய நிதிக் கையிருப்புகள் கணிசமாக ஈரோவுக்கு மாறிவருகின்றது. சர்வதேச வர்த்தகங்கள் கூட டாலருக்கு பதில், ஈரோ மூலம் நிகழத் தொடங்கியுள்ளது. இது கூட ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாட்டையே அதிகரிக்க வைத்துள்ளது. பொதுவாக பல தளத்தில் ஏற்றுமதிச் சந்தை ஏகாதிபத்தியத்துக்கு இடையில் கடும் நெருக்கடியை உருவாக்கி உள்ளதுடன், கடும் போட்டியுடன் போராட வைக்கின்றது. சூதாட்டங்கள் முதல் சதிகள் வரையிலான வர்த்தக ராஐதந்திர மொழியில், ஒன்றையொன்று குழிபறிக்கின்றது.


2000த்துடன் ஒப்பிடும் போது 2002இல் ஏற்றுமதி பல மடங்காகியுள்ளது. உலகமயமாதல் நிபந்தனைகள் ஏகாதிபத்தியத்தின் ஏற்றுமதியை திடீரென வீங்கவைத்துள்ளது. மறுபக்கத்தில் மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதி அதாவது ஏகாதிபத்தியம் நோக்கிய இறக்குமதி மிக மலிவாகவே சூறையாடப்படுகின்றது. சர்வதேச ரீதியாக மூன்றாம் உலக நாடுகளின் பொருட்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்படுகின்றன. இதை தனியாக பிறிதொரு அத்தியாயத்தில் நான் தனியாக ஆராய உள்ளேன். ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்களை சந்தைப் பெறுமானத்தில் குறைய வைத்துள்ளது. இதனால் ஏகாதிபத்திய நாடுகளின் நுகர்வின் அளவு அதிகரிப்பதுடன், உலகை அதிகம் சூறையாடுவது உலகமயமாகி விடுகின்றது. எதிர்மறையில் ஏகாதிபத்திய ஏற்றுமதிப் பொருட்கள் சந்தை விலையை அதிகரிக்க வைத்து, மூன்றாம் உலக நாடுகளை மேலும் ஆழமாகச் சூறையாடுவது அதிகரித்துள்ளது. இதன் மூலம் மூன்றாம் உலக நாட்டு மக்கள் சமூகத் தேவையைக் கூடப் பெறமுடியாத வகையில், இழிநிலைக்கு பெரும்பான்மை மக்கள் அன்றாடம் தள்ளப்படுகின்றனர். இப்படி மக்களை வரைமுறையின்றி சூறையாடும் ஏகாதிபத்தியம், யார் அதிகம் நுகர்வது என்ற போட்டியில் ஈடுபடுகின்றது. அதிகம் நுகரும் போது, மற்றவர் அதை இழக்க வேண்டும். இது நுகர்வின் அடிப்படையான இயங்கியல் விதி. அதிகம் நுகரும் போது, ஏழை நாட்டு மக்கள் நுகர்வு வீழ்ச்சி காணும் அதே நேரத்தில், போட்டி ஏகாதிபத்தியத்துக்கு இடையிலும் மோதல் நடக்கின்றது.


இந்த நிலையில் ஏகாதிபத்தியத்தின் ஏற்றுமதிகள் வெள்ளமாகவே திடீரென உலகெங்கும் திறந்து விடப்பட்டுள்ளது. இதுவே உலகமயமாதலின் சிறப்பான எடுப்பான வடிவமாக இங்கு காட்சி அளிக்கின்றது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் திடீர் ஏற்றுமதி அதிகரிப்புகள் பிரமிப்பைத் தரக் கூடியவை. 2003ஆம் ஆண்டை எடுத்து 2000, 2002யுடன் ஒப்பிட்டு பார்த்தாலே புரிந்து கொள்ளமுடியும்.

ஏற்றுமதி இறக்குமதி 2003இல் கோடி டாலரில்



2000க்கும் 2003க்கும் இடையில் உலகளாவிய ஏற்றுமதி ஐந்து மடங்குக்கு மேலாகவே அதிகரித்தது. உலகமயமாதலில் உலகம் எப்படி திறந்துவிடப்பட்டுள்ள விபச்சாரச் சந்தையாக, குறுகிய காலத்தில் மாற்றப்பட்டது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. இது நுகர்வின் வடிவங்களில் மிகத் தீவிரமான மாற்றத்தை உலகளவில் ஏற்படுத்தியுள்ளது. தேசிய நுகர்வு சார்ந்த பண்பாடுகள் சிதைக்கப்பட்ட அளவு பலமடங்காக இருப்பதை, சர்வதேச ஏற்றுமதி சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது. தேசிய வளங்கள் சிதைந்து நலிந்து போவதையும், நுகர்வுப் பண்பாடுகள் குறுகிய காலத்தில் மாற்றப்பட்டதையும் எடுத்துக் காட்டுகின்றது. தேசிய நுகர்வு சார்ந்த பன்மையான பண்பாடு அழிக்கப்பட்டு, அதனிடத்தில் அன்னியரின் ஒற்றை நுகர்வு சார்ந்த பண்பாடு உலகளாவிய ஒன்Ùக திறந்துவிட்ட சந்தை உருவாக்குகின்றது. உண்மையில் தேசங்களின் சிதைவையே இது எடுத்துக்காட்டுகின்றது. உலகம் பன்னாட்டு நிறுவனங்களின் குறுகிய நலன் சார்ந்த உலகமயமாவதை எடுத்துக் காட்டுகின்றது.


2003இல் உலகின் முன்னணி ஏற்றுமதியாளனாக ஜெர்மனி மாறியது. 2000உடன் ஒப்பிடும் போது 2003இல் ஏற்றுமதி ஐந்து மடங்காக மாறிய போது, இது ஏகாதிபத்தியத்துக்கு இடையில் ஒரே மாதிரி நிகழவில்லை. ஜெர்மனிய ஏற்றுமதி 9 மடங்கு மேலாக அதிகரித்தது. சீன ஏற்றுமதி 10 மடங்கு மேலாக அதிகரித்தது. ஜப்பானின் ஏற்றுமதி 6 மடங்கு மேலாக அதிகரித்தது. அமெரிக்காவின் ஏற்றுமதி 2.6 மடங்காக அதிகரித்தது. தீவிரமான ஏகாதிபத்திய மோதலூடாகவே இந்த அதிகரிப்பு நிகழ்கின்றது. உலகமயமாதலின் இலாபங்களைப் பகிர்வதில் கடுமையான ஏகாதிபத்திய முரண்பாடுகள் இருப்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. இதற்குள் சீனாவும் குதித்துள்ளது. சோவியத் சிதைவின் பின்பு புதிதாக சீனா களத்தில் குதித்துள்ளது.