வியாழன், 30 செப்டம்பர், 2010

ஸ்ராலின் கிராட் யுத்தம்

ஸ்ராலின் கிராட் யுத்தம்

இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மனிய படைகளுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இன்று வோல்கோ கிராட் என்று அழைக்கப்படும் ஸ்ராலின் கிராட்டில் நடைபெற்ற யுத்தம்.உலக வரலாற்றில் பல யுத்தங்கள் நடைபெற்ற போதிலும் இன்றுவரை பேசப்படுகிற அல்லது விமர்சிக்கப்படுகிற யுத்தங்கள் மிக குறைவானவை ஆனால் இன்று வரை ஸ்ராலின் கிராட் யுத்தம் பற்றி பேசப்படுகிறது அல்லது எழுதப்படுகிறது,தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகிறது,அதனால் விம்பமும் ஸ்ராலின் கிராட் யுத்தத்தினை நினைவு கொள்கிறது.



இரண்டாம் உலக யுத்தத்தின் ஐரோப்பிய அரங்கின் திருப்பு முனையாக கருதப்படும் இந்த சமர் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நீடித்தது,நீண்ட காலம் நடைபெற்ற ஒரு மரபு வழி சமராக இராணுவ ஆய்வாவாளர்களால் வர்ணிக்கப்படுகிறது.17 ஜூலை 1942 இற்கும் பெப்ரவரி2 1943 இற்கும் இடையில் நடைபெற்ற இந்த சமரில் மொத்தமாக 1.5 மில்லியன் பேர் பலியானார்கள்.இரண்டு நாள் இரண்டு வாரம்,இரண்டு மாதம் என ஹிட்லரால் எண்ணப்பட்ட நாட்களின் கனவு தவிடுபொடியானது.22 ஆம் திகதி ஜூன் மாதம் 1941 ஆம் ஆண்டி ஹிட்லரின் நாசி படை சோவியத் மீது பார்பரோசா என்ற பெயரில் படை நடவடிக்கையினை ஆரம்பித்தது.ஜேர்மன் படைகளும் அதன் கூட்டுப் படைகளும் விரைவாக சோவியத் பகுதிக்குள் ஆழ கால்பதித்தார்கள்.ஸ்ராலின் கிராட் மீது ஹிட்லர் படை எடுப்பதற்கு பிரதானமான இரண்டு காரணங்கள் இருந்தன.அவற்றுள் ஒன்று வால்கா நதிக்கரையில் அமைந்திருந்த இந்த நகரம் கஸ்பியன் கடலையும் வடக்கு ரஸ்ஸியாவையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து பாதையாக இருந்தது.மற்றய காரணம் எண்ணை வள பகுதியான க்கஸஸ் பகுதியை நோக்கி முன்னேறிய படைகளுக்கு பாதுகப்பாக இருக்கும் என்பதும் ஆகும்.இதனை விட உளவியல் ரீதியாக ஸ்ராலின் பெயரில் நகரம் இருந்ததும் ஸ்ராலின் கிராட் நகரை கைப்பற்ற ஹிட்லறை தூண்டியது.

ஜேர்மனிய 6 வது இராணுவத்துக்கு தலைமை தாங்கிய ஜெனரல் போலசின் பணி காகஸஸ் பகுதியில் உள்ள எண்ணை வழங்களை கைப்பற்றுவதாக இருந்தபோதிலும்,அதற்காக ஸ்ராலின் கிராட்டை கைப்பற்றுமாறு ஹிட்லரால் உத்தரவிடப்பட்டது.செய் அல்லது செத்து மடி என்பது போல தாக்குதலை மேற்கொள்ளுமாறு ஸ்ராலினால் உத்தரவிடப்பட்டது,தமது தலைவனின் பெயராலான நகரை காப்பதற்குபொது மக்களும் ஆயுதம் ஏந்தினார்கள்.இருவருக்கு ஒரு துவக்கு என்ற வகையில் ஆயுதம் வழங்கப்பட்டது.ஒரு அடி கூட பின்னகர வேண்டாம் என உத்தரவு பிறந்தது.பல இடங்களை ஜேர்மனியர்கள் கைப்பற்றியபோதும் அவற்றை நிலையாக தக்க வைக்க முடியவில்லை.பகலில் ஜேர்மனியர்கள் கைப்பற்றிய பகுதிகளை இரவில் ரஸ்ஸியர்கள் மீளவும் மீட்கப்பட்டது.அகல கால் பதித்த ஜேர்மனியர்கள் மீதான முறியடிப்பு சமரினை மேற்கொள்ள நவம்பர் 19 அளவில் ரஸ்ஸியா முழுமையான தயார் நிலையினை அடைந்தது.ஒரு மில்லியன் படைபலம் கொண்ட 6 படைப்பிரிவுகள் மார்ஷல் சுகோவ் தலைமையில் நகரை சுற்றிவளைக்க தயாராகினர்.வடக்கு பகுதியில் இருந்து ரமானன்கோ தலைமையிலான 5 ஆவது தாங்கி படையணி தாக்குதலை ஆரம்பிக்க 21,65,24.64,57,52 ஆவது படையணிகள் தெற்கு பகுதியில் இருந்து தாக்குத‌லை ஆர‌ம்பித்த‌ன‌.இரு முனை தாக்குத‌ல் அணிக‌ளும் ந‌வ‌ம்ப‌ர் 23 ஆம் திக‌தி காலாச் ப‌குதியில் இனைந்து கொண்டன.250 000 முதல்300 000 வரையிலான ஜேர்மன் படையினர் சுற்றி வளைக்கப்பட்டு பொறிக்குள்அகப்பட்டு கொண்டார்கள்.எவரும் சரணடைய கூடாது என்றும் இறுதி தோட்டா உள்ளவரை யுத்தம் செய்ய வேண்டும் எனவும் கட்டளை இட்ட ஹிட்லர் போலஸை ஊக்குவிப்பதற்காக பதவி உயர்வையும் வழங்கினார்.எவையும் வேலைக்கு ஆகவில்லை,கால நிலை மோசமானது,வெப்பநிலை பூச்சியத்துக்கு கீழ் சென்றது.ஆயுதங்களுக்கும்,உணவுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது,எதுவுமே செய்ய முடியாத நிலையில் ஜனவரி1943 இல் தென் பகுதி ப‌டையின‌ர் ச‌ர‌ண‌டைய‌ வ‌ட‌ ப‌குதி ப‌டைய‌ணி 2 ஆம் திக‌தி பிப்ருவ‌ரி ச‌ர‌ண் அடைந்த‌து.பெரும்பாலான‌ ப‌டையின‌ர் இற‌க்க‌ 91000 இற்கும் அதிக‌மானோர் சிறைப்பிடிக‌ப்ப‌ட்டார்க‌ள்.ஸ்ராலின் கிராட்டின் தோல்வியும்,படையணிகளின் இழப்பும் ஜேர்மனியால் ஈடு செய்ய முடியாது போனதை ஜேர்மனி மீது ரஸ்ஸியா படை எடுத்த தருணங்கள் உணர்தி நிற்கிறது.





ஹிட்லரின் தளபதிகள் ; போலுஸ்,மன்சுடெயின்,ரிச்தோபுன்,கொசுடாவ் ,கரிபால்டி,துமிதிரிஸ்கு,கொண்ஸ்டான்டினெஸ்.

ஸ்ராலினின் தளபதிகள் ;
ஸ்யிகொவ், யெமெரென்கோ,வஸ்யேவ்சுகி,கிரகொரி ,செம்யோன்,மலினொவ்சுகி .

படை பலம்
ஜேர்மன்;ஆட்பலம் 1 011 500 ஆட்லறி10,290 தாங்கிகள் 675 விமானங்கள் ;1,216.

ரஸ்ஸியா; ஆட்பலம் 1,000,500 ஆட்லறி 13,541 தாங்கிகள் 894 விமானங்கள் 1,115.

சரித்திரப் பதிவுகள் - 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)



நார்மண்டி தாக்குதல் (D Day Landing)
'பல மாதங்களாகக் காத்திருந்த நீங்கள் தலைசிறந்த புனிதப் போரினை மேற்கொள்ளப் போகின்றீர்கள்...உங்கள் பணி எளிதானதல்ல. எதிரிகள் தக்க பயிற்சியுடனும், தேவையான தளவாடங்களுடனும், போர்களினால் விளைந்த திண்மையுடனும் எதிர்கொள்வார்கள். மிகுந்த மூர்க்கத்தனத்துடன் போரிடுவார்கள்... '

--- ட்வைட்.டி.ஐஸ்சனோவர் (06 ஜீன் 1944, நேசப்படைகளின் தலைமைத் தளபதி)

பிரான்சை ஜெர்மனியின் நாஜிப்படை ஆக்ரமித்திருந்த காலம். உலகத்திலேயே மிகப்பெரிய ஆக்ரமிப்பு படை 'ஓவர்லார்டு நடவடிக்கை (Operation Overlord) ' மூலம் ஜெர்மனியைத் துரத்த தயாரானபோது, நேசப்படைகளின் தலைமைத் தளபதி ஐஸ்சனோவர் வீரர்களிடம், உரை நிகழ்த்தினார். மேற்கோளிடப்பட்ட அவரது பேச்சிலிருந்தே இம்முயற்சி எத்தகைய அபாயகரமானதென்று உங்களுக்கு விளங்கியிருக்கும்.

'ரேங்க் பேதமின்றி, அலையலையாக, 20 மைல்கள் பரந்து, ஐந்தாயிரம் போர்க்கப்பல்கள் புடைசூழ அவர்கள் (நேசப்படையினர்) வந்தார்கள். புதிய வேகம் பெற்ற வாகனாதிகள், துருப்பிடித்த சரக்குக் கப்பல்கள், நீராவிக் கப்பல்கள், மருத்துவக் கப்பல்கள், எரிபொருள் ஏந்திய டாங்கர்கள், கப்பலை இழுக்கும் சிறிய படகுகள் அவற்றுள் அடங்கும். 350 அடி நீளம் கொண்ட துருப்புகள்/தளவாடங்களை கரை சேர்க்கும் கலங்கள்... இவையனைதிற்கும் முன்னே கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள், கரையோரப் பாதுகாப்புக் கப்பல்கள், திசை காட்டும் கருவிகள் விதைக்கும் கலங்கள் சென்று கொண்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான போர்விமானங்கள் மேகத்திற்கு தாழப் பறந்தன. ' (Cornelius Ryan in his book 'The Longest Day).

மேற்கூறிய பத்தி சுருக்கமாக யுத்ததிற்கு சென்ற நேசப் படைகளின் பரிமாணத்தை விளக்கும்.

கிழக்கு மற்றும் மேற்கே நாஜிப்படைகள்

1939-41 'ல் செய்த போர்களினால் மேற்கு ஐரோப்பாவும், 1942 சண்டையில் கிடைத்த ரஷ்யாவின் பெரும்பகுதிகளும் ஹிட்லரின் பிடியிலேயே தொடர்ந்தன. நடுநிலை நாடுகளான ஸ்வீடன், போர்ச்சுகல், ஸ்விட்ஜர்லாந்து மற்றும் ஸ்பெயின் தவிர ஏனைய ஐரோப்பா முழுதையும் நாஜிப்படைகள் ஆக்ரமித்திருந்தன. வட ஆப்பிரிக்காவும் அவர்கள் பிடியிலிருந்து தப்பவில்லை. கிழக்கே ரஷ்யாவின் ஸ்டாலின்கிராடு, குர்ஸ்க் போன்ற பகுதிகளில் நடந்த எதிர்ப்பு சண்டைகளால் சிறிதே ஜெர்மனி பின்வாங்கியது. இருப்பினும் மேற்கிலிருந்து அமெரிக்காவும் இணைந்து இரண்டாவது முனைத் தாக்குதல் தொடுத்தாலொழிய ஜெர்மனியைத் தோற்கடிக்க முடியாதென்று நேச நாடுகளுக்குப் புரிய ஆரம்பித்தது.

இரண்டாவது முனை

ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின், தனது சகாக்களான வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ப்ராங்க்ளின் ரூசோவெல்ட் இருவரிடமும் மேற்கிலிருந்து இரண்டாவது முனைத் தாக்குதலை ஆரம்பிக்கச் சொல்லி வலியுறுத்த ஆரம்பித்தார். ஹிட்லரும் 11 டிசம்பர் 1941 'ல் அமெரிக்கா மீது போர் பிகடனம் செய்தார். அமெரிக்க ஜனாதிபதியான ரூசோவெல்ட் தனது நம்பகமான தளபதியான ஐஸ்சனோவரை அழைத்து, நேசப் படைகளின் வெற்றிக்கான வழிமுறையைக் காண கட்டளை பிறப்பித்தார்.

1943 'ல் ஐஸ்சனோவர் இரு நடவடிக்கைகளை பிரஸ்தாபித்தார். அவையாவன: Operation Roundup மற்றும் Operation Sledgehammer. இவற்றுள் முதல் நடவடிக்கையை இங்கிலாந்து ஆதரித்தது. இருப்பினும் Operation Torch என்று வடஆப்பிரிக்காவிலுள்ள நாஜிப்படைகளை முதலில் அழித்தொழிக்க வேண்டுமென்று புதிய யோசனையையும் முன் வைத்தது. இக்குழப்பத்திலேயே காலம் கடப்பதைக் கண்டு பதறிய ரூசோவெல்ட்டும், ஸ்டாலினும் டெஹ்ரானில் நடந்த சந்திப்பில் மே 1944 'ல் ஜெர்மனிக்கெதிரான மேற்குமுனைத் தாக்குதல் தொடங்க வேண்டுமென்று கறாராக சர்ச்சிலிடம் தெரிவித்தனர். பதிலாக ஸ்டாலின் கிழக்கு முனைப் போரை மும்முரமாக செயல்படுத்துவதாகவும், ஜெர்மனியை வென்ற பிறகு ஜப்பானுக்கெதிரான போரில் நேசப்படைகளோடு பங்கு பெறுவதாகவும் வாக்குறுதியளித்தார்.

ஓவர்லார்டு நடவடிக்கை (Operation Overlord)

முதலில் லெப்டினென்ட் ஜெனரல் பிரட்டெரிக் மோர்கன் நேசப்படைகளின் தலைமைத் தளபதியாக அறிவிக்கப்பட்டார். அவர்தான் ஓவர்லார்டு நடவடிக்கையின் சூத்திரதாரி. ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரான்ஸின் நார்மண்டி பகுதியில் தாக்குதல் தொடுக்க வேண்டுமென்று தனது கருத்திற்கு செயல் வடிவமும் கொடுத்தார். பின்னர் ஐஸ்சனோவர் ஜனவரி 1944 'ல் நேசப்படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தன்னைத் தோற்கடிக்க நேசப்படைகள் இருமுனைத்தாக்குதல் தொடுக்கலாமென்று ஹிட்லரும் கணித்திருந்தார். அதனால் பிரான்ஸில் நாஜிப்படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு தனது தளபதியான எர்வின் ரொம்மலை ஏவினார். நேசப்படைகளும் ரொம்மலை எதிர்த்து ஆப்பிரிக்க பாலைவனங்களில் போரிட்ட பெர்னார்டு லா மாண்ட்கோமரியை, ஐஸ்சனோவர்க்கு உதவியாக நியமித்தது. மேலும் வால்டர் ஸ்மித் என்னும் அமெரிக்கர் பிரதானத் தளபதியாகவும், இங்கிலாந்து தரப்பில் ஏர் சீப் மார்ஷல் ஆர்தர் டெட்டர், அட்மிரல் பெர்ட்ராம் ராம்சே, ஏர் சீப் மார்ஷல் டிராப்போர்டு லே-மலோரி ஆகியோரும் ஐசனோவர்க்கு துணையாக உதவி புரிய அனுப்பப்பட்டார்கள்.

நார்மண்டி பகுதி மொத்தம் 5 கடற்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. உடா, ஓமகா, கோல்டு, ஜுனோ மற்றும் ஸ்வார்டு போன்ற கடற்கரைகளில், மொத்தம் ஐந்து தரைப்படை ஸ்குவார்டன்கள் (2 அமெரிக்கா, 2 இங்கிலாந்து மற்றும் 1 கனடா) மூலம் தாக்குதல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. D Day (தாக்குதலின் முதல் நாள்) நார்மண்டியின் மேற்கு முனையில் 2 அமெரிக்க விமானப்படைப் பிரிவுகளும், இங்கிலாந்தின் ஒரு விமானப்படைப் பிரிவு அதன் கிழக்கு முனையிலும் தாக்குதல் தொடுக்கமாறு முடிவாகியது. எதிரிக்கு வியப்பைத் தரும் வண்ணம் 'நீந்தும் டாங்குகள் ' பயன்படுத்தவும் முடிவானது. இந்நடவடிக்கைக்கு முதல் மூன்று வாரத் தேவையாக 2,00,000 ஊர்திகளும், 6,00,000 டன் சரக்குகளும் மொத்தம் 6,500 கப்பல்கள் மூலம் எடுத்துச் செல்ல பெரிய திட்டம் தீட்டப்பட்டது.

வான்வெளித் தாக்குதல்

தாக்குதலின் முதல் கட்டமாக 13,000 போர்விமானங்கள் ஜெர்மனிப்படை மீது குண்டு பொழியத் தயாராக இருந்தன. நாஜிப்படையோ பதில் தாக்குதலுக்கு வெறும் 400 போர்விமானங்களே தயாரான நிலையில் கொண்டிருந்தது. நேசப் படை விமானங்களின் குண்டு மழையில் பிரான்ஸின் புகைவண்டி நிலையங்கள், சாலைகள், நாஜிப் படைகள் பயன்படுத்தும் விமான நிலையங்கள், ரேடார் கண்காணிப்பு நிலையங்கள், கரையோர பீரங்கிகள் மற்றும் பாலங்கள் அனைத்தும் கடுமையாக சேதமுற்றன. இவ்வான்வெளி தாக்குதலே நேசப்படைகளின் வெற்றிக்கு அடிகோலியதெனலாம்.

மேலும் இத்தாக்குதல் நார்மண்டி பகுதியை குறிவைத்து நடக்காமல் ஏனைய இடங்களில் பரவியிருந்தமையால், நேசப்படைகளின் கடல்வழி தாக்குதல் இடம் பற்றி ஜெர்மனி குழம்பியது. இது போதாதென்று கடல் தாக்குதல் நார்மண்டியிலில்லை என்று வேண்டுமென்றே ஜெர்மன் உளவு ஸ்தாபனத்திற்கு நேசப்ப்படை தவறான துப்பு கொடுத்தும் குழப்பியது. ஜெர்மனியின் சங்கேத செய்திகளை துல்லியமாக இனங்கண்டதால், நாஜிக்களின் எதிர்தாக்குதல் பற்றிய அனைத்து தகவல்களும் முன்கூட்டியே நேசப்படைக்கு தெரிந்தும் விட்டிருந்தது.

ஹிட்லருக்கு மட்டும் ஏனோ நார்மண்டிப் பகுதி தாக்கப்படலாமென்று கடைசி நிமிடத்தில் தோன்றியது. ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டிருந்தது. ரொம்மலோ தேவையில்லாத கடற்கரைப் பகுதிகளிளெல்லாம் 40 லட்சம் கண்ணி வெடிகளைப் புதைத்து, நேசப்படைகளை எதிர்காண ஆவலாயிருந்தார். இதற்கு நடுவே ரொம்மலுக்கும் அவரது மூத்த அதிகாரியான Rundstedt 'க்கும் டாங்க்குள் நிறுத்துமிடங்களில் கருத்துப் பேதமேற்பட, ஹிட்லரே தலையிட்டு பிரச்ச்சினையை சீர் செய்ய வேண்டியதாயிற்று. நேசப்படைகளின் தாக்குதல் ஆரம்பித்த போது ரொம்மல் விடுப்பில் இருந்ததுதான் பெரிய வேடிக்கை.

ஹோபார்ட்டின் பீரங்கிகள்

பாதுகாப்பு அரண் கொண்ட கடற்கரையில் மொத்தம் இரு வழிகளில் துருப்புகளை இறக்கலாம். கடற்கரையில் தொடர் குண்டுமழை பொழிந்து, அதே நேரத்தில் தாக்குதல் படையினை கரைக்கு அருகே எவ்வளவு தூரம் உள்ளே வர முடியுமோ அவ்வளவு தூரம் வந்து துருப்புகளை இறங்கச் செய்யலாம். இச்செய்கையினால் உயிர்ச் சேதம் மட்டுப்படும். இம்முறையினைத்தான் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கடற் கமாண்டோக்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள்.

கடல் வற்றுதலின் போது (low tide) துருப்புகளை கடற்கரையில் துருப்புகளை இறக்குவது இரண்டாவது முறையாகும். கரையில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கு இம்முறை உகந்ததென்றாலும், உயிர்ச் சேதம் அதிகமாக வாய்ப்புண்டு. கரையினருகே வரவேண்டிய தேவையில்லாததால் கலங்களுக்கு அதிக ஆபத்தில்லை.

ஜெர்மனியின் பாதுகாப்பு அரண் மிகப் பலமாக இருந்த காரணத்தால் நேசப் படைகள் இரண்டாவது முறையினையே தேர்ந்தெடுத்தது. முதல் முறைப்படி கடல் ஏற்றத்தின் (high tide) போது தாக்குதல் தொடுத்திருந்தால் அரணிலிருந்த நாஜிக்கள் குருவியைச் சுடுவது போல் நேசப்படையினரையும், கலங்களையும் அழித்திருப்பார்கள். கரையிறங்கும் காலாட்படையோடு (infantry) அதிக டாங்குகளையும் அனுப்பினால் ஜெர்மனியின் பாதுகாப்பு அரணைத் தகர்க்கமுடியுமென்று திண்ணமாக நேசப் படை நம்பியது.

இத்தாக்குதலுக்கு முன்னர் இங்கிலாந்தின் தரைப்படைக்கு நவீன குண்டுதுளைக்கா கவச டாங்க்குகள் பிரிவினை உண்டாக்கும் பணியில் மேஜர் ஜெனரல் பெர்சி ஹோபார்ட் ஈடுபட்டிருந்தார். இவரது கொள்கைகளை 'கொமாளித்தனமென்று ' சிலரும், 'மிகப்புதுமையானதென்று ' சிலரும் தீவிர கருத்து பேதங்களோடு விவாதித்த காலத்தில், இனம்புரியாத காரணங்களுக்காக ஹோபார்ட்டுக்கு படையிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டது. ஆனால் ஹோபார்ட்டின் திறமை குறித்து சர்ச்சிலுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. D Day நடவடிக்கைக்காக மீண்டும் ஹோபார்ட் அழைக்கப்பட்டார். 79 'தாவது கவசவண்டிகள் பிரிவின் தலைவராய் ஹோபார்ட் ஆற்றிய பணி அளவிடமுடியாதது. இவர் உருவாக்கிய கவச டாங்குகள் பல நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. இவரது கண்டுபிடிப்புகளில் 'ஆர்க்ஸ் ' எனப்படும் பாலமைக்கும் டாங்குகள், 'ஷெர்மன் DD [Duplex Drive] ' எனப்படும் நீந்தும் டாங்குகள், 'கிராப் ' எனப்படும் கண்ணிவெடியகற்றும் டாங்குகள், 'பாப்பின்ஸ் ' எனப்படும் பாதையமைக்கும் டாங்குகள், சர்ச்சில் எனப்படும் தீ உமிழும் டாங்குகள், 'பேசைன்ஸ் ' எனப்படும் மதகமைக்கும் டாங்குகள் போன்றவை அடங்கும்.

ஓவர்லார்டு நடவடிக்கையில் நீந்தும் டாங்குகளின் பணி மகத்தானது. ஷெர்மன் வகை டாங்குகளுக்கு தண்ணீர் புகா கேன்வாஸ் அரண் கொடுத்து, இரு முன் தள்ளிகளும் (propellars) பொருத்தப்பட்டன. கரையிறக்கும் கலங்கள் (Landing craft) மூலம் இவ்வகை டாங்குகள் கரைக்கருகே எடுத்துச் செல்லப்பட்டன. 4-5 கீமீ தூரமிருக்கையில் டாங்குகள் கலத்திலிருந்து கடலில் இறக்கப்பட, அவை நீந்தி கரையினை அடைந்தன. பின்னர் கான்வாஸ் உறையின் காற்று நீக்கப்பட்டு போர்முனையில் சீறிப்பாய்ந்தன. கடற்கரையில் துருப்புகளை மட்டுமே எதிர்பார்த்த ஜென்மானியர்க்கு DD டாங்குகள் 'அதிர்ச்சி வைத்தியம் ' அளித்தன.

ஓமகா கடற்கரை

D Day 'ல் இங்குதான் உக்கிரமான போர் நிகழ்ந்தது. மற்ற நான்கு கடற்கரைகளைவிட ஓமகா பெரியது. மேலும் கடற்கரையில் சிறிய மலைக்குன்றுகள் அமெரிக்கப் படைகளின் தாக்குதலை கடினமாக்கியது. ரொம்மலும் தன் பங்கிற்கு 'டிராகன் பற்கள் ' என்று பெயரிட்டு பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியிருந்தர். மலைக்குன்றுகளில் 'எதிர்ப்புக் கூடுகளை ' ஏற்படுத்தியதோடு, படைகளின் இலகுவான நடமாட்டத்திற்காக பதுங்கு குழிகளையும் வெட்டி வைக்க ஆணைகள் பிறப்பித்தார். அமெரிக்கப் படைகளை எதிர்நோக்கி ஜெர்மனியின் பீரங்கிகள் ஓமகா கடற்கரையில் வெறியுடன் காத்திருந்தன.

ஓமர் பிராட்லி தலைமையில் அமெரிக்காவின் முதலாம் தரைப்படை ஓமகா கடற்கரையை வந்தடைந்தது. துரதிருஷ்டவசமாக ஏவப்பட்ட 32 DD டாங்குகளில் 29 மூழ்கிப்போனது (27 தான் மூழ்கியதென்று சொல்வோருமுண்டு). எதிர்பாராமல் வீசிய ஆறடி உயர அலைகள், துருப்புகளோடு டாங்குகளை மூழ்கடிக்கச் செய்துவிட்டன. மேலும் கவச டாங்குகளின் துணையில்லாமல் கரையேறிய அமெரிக்க வீரர்களின் நிலை இன்னும் மோசமானது. இது பற்றாதென்று பலமாக வீசிய காற்று கரையிரக்கும் கலங்களை அலைக்கழித்தது. இதனால் குறித்த இடத்தில் துருப்புகள் வந்தடைய முடியவில்லை. கரையை எட்டிய பின்னர் எப்பிரிவு எங்கே செல்ல வேண்டுமென்ற குழப்பம் அதிகரித்தது. ஜெர்மனியின் தானியங்கி துப்பாக்கி ரவைகள் சந்தோஷமாக அமெரிக்கர்களை துளைத்தெடுத்தன. கடற்கரையினருகே ஏற்பட்டிருந்த மணற்மேடுகள் அமெரிக்கர்களுக்கு சிறிதே பாதுகாப்பளித்தாலும், கடலிலிருந்து அவற்றை சென்றடையுமுன் பலர் குண்டுகளுக்கு மரித்துப் போனார்கள். அமெரிக்க வீரர்கள் உயிரை பணயம் வைத்து மலைகுன்றுகளில் ஏறி வீரமாகப் போரிட்டனர். மேலும் சிறிய கப்பல்களை கரைக்கு மிக அருகே வர வைத்து ஜெர்மனியின் பீரங்கிகளை பதம் பார்த்தார்கள். ஒரே நாளில் இங்கே பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை சுமார் 2,400. காலை 6:30 மணிக்கு ஆரம்பித்த யுத்தத்தில் நண்பகல் தாண்டியவுடன் அமெரிக்கர்களின் கை ஓங்க ஆரம்பித்தது. இருள் சூழும் நேரத்தில் கிட்டத்தட்ட ஓமகாவை அமெரிக்கா பிடித்து விட்டது.

உடா கடற்கரையில் ஏவப்பட்ட 32 DD டாங்குகளில் 28 கரை சேர்ந்தது. மற்ற கடற்கரைகளிலும் DD டாங்குகளின் பங்களிப்பு மகத்தானது.

கோப்ரா நடவடிக்கை (Operation Cobra)


25 ஜூலை அன்று அனைத்து கவச டாங்க்குகளையும் மேற்குப் பகுதியில் இங்கிலாந்தின் தரைப்படையை சமாளிக்க ஜெர்மனி அனுப்பியது. இது போதாதா ? நேசநாடுகளின் துரிதப்படை (Expeditionary Force) கோப்ரா நடவடிக்கை என்னும் வான்வெளித்தாக்குதலைத் தொடுத்தது. இத்தாக்குதலால் இங்கிலாந்தை சமாளிக்கச் சென்ற நாஜிப்படை பிளவுபட்டது. சந்து முனையில் சிந்து பாட அமெரிக்காவின் தரைப்படை கிடைத்த இடைவெளியில் புகுந்து கொண்டது. இப்போது நார்மண்டியில் எஞ்சியிருந்த நாஜிக்களை இப்படைபின்னாலிலிருந்து தாக்கி சின்னாபின்னமாக்கியது. ஹிட்லரின் ஆணைகள் சுத்தமாக மொழி பெயர்க்கப்பட்டதால் ஜெர்மனியின் பதில் தாக்குதலும் விலைவுகள் ஏதுமின்றி பிசுபிசுத்துப் போனது.


நாஜிப்படை தலைமையின் கதி

ஜெர்மனியின் ஏழாவது தரைப்படையின் கமாண்டர் டால்மேன் 28 ஜூன் அன்று இறந்துபோனார். மாரடைப்பென்று காரணம் சொன்னாலும் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென்று ஊகம் நிலவியது. யுத்தத்தில் ஜெர்மனி தோற்றுவிடுமாகையால் நேசப்படைகளுடன் அமைதிப் பேச்சு நடத்துங்கள் என்று ஹிட்லருக்கு அறிவுரை கூறியமையால் Rundstedt 'தற்கொலை ' செய்து கொள்ள நேரிட்டது. இதற்கு நடுவே நாஜிப்படை அதிகாரிகள் சிலர் 20 ஜூலையன்று கிழக்கு பெர்ஷ்யியன் தலைமையகத்தில் ஹிட்லரைக் கொல்ல செய்த சதி தோல்வியில் முடிந்தது. Rundstedt இடத்தில் வந்த Gunther Von Kluge என்பவரும் இதே கருத்தைக் கூற 18 ஆகஸ்ட் அன்று தற்கொலை செய்து கொள்ள நேரிட்டது. இங்கிலாந்து வீரரின் தாக்குதலில் சிக்கி காயமுற்ற ரொம்மல் அக்டோபரில் தற்கொலை செய்துகொண்டார்.

இன்றைய நார்மண்டி

ஏறத்தாழ இரண்டு லட்சம் கட்டிடங்கள் சண்டையில் சிதிலமாகின. கேன் பகுதி ஒரு கற்குவியலாகவே காட்சியளித்தது. மொத்தம் 15,000 வீடுகளில் 9,000 வீடுகள் குண்டுவீச்சினில் தரைமட்டமானது. போருக்குப் பின்னர் வந்த அரசுகள் 'வெற்று அரசியலிலேயே ' காலம் கழிக்க, பிரான்ஸின் அதிகார வர்க்கம் விழித்துக் கொண்டது. அமெரிக்க நிதியுதவியோடு உள்ளூர் மக்களின் உழப்பினையும் ஒருங்கிணைத்து, 1951 'ல் கிட்டத்தட்ட நார்மண்டியை பழைய நிலைமைக்கு கொண்டுவந்தனர். 1954 'ல் கேன் நகரமும் புனரமைக்கப்பட்டது.

நினைவுச் சின்னங்கள்

'தனது பழமையினை மறந்த எந்த தேசத்திற்கும் எதிர்காலமில்லை ' என்று முழங்கிய சர்ச்சிலின் தேசமான இங்கிலாந்து மக்களும் தேசப்பற்றிற்கு பேர் போனவர்கள். அமெரிக்காவைப் பற்றி கேட்கவே வேண்டாம். அமெரிக்க மக்கள் வியட்நாம் யுத்தத்தை மிகவும் எதிர்த்தனர். இருப்பினும் அமெரிக்கர் பலர் இப்போரில் பங்குகொண்டு இறந்து போன மற்றும் காயம்பட்ட வீரர்களை மறந்துவிடவில்லை.

நார்மண்டி படையெடுப்பில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் இறந்தனர். பிணக்குவியலாயிருந்த 9,000 அமெரிக்க வீரர்களின் உடல்களை பிரித்தெடுத்து ஓமகா கடற்கரைக்கு அருகே செயிண்ட் லெளரண்ட் என்னுமிடத்தில் அடக்கம் செய்தனர். லா காம்பே என்னுமிடத்தில் சுமார் 20,000 ஜெர்மனி வீரர்கள் அவ்வாறே அடக்கம் செய்யப்பட்டனர். ரான்வில் என்னுமிடத்தில் சுமார் 2,000 இங்கிலாந்து வீரர்களுக்கு சமாதிகள் உருவானது. நேச நாடுகளைத்தும் ஒவ்வொரு வருடமும் உயிர்த்தியாகம் புரிந்த இவ்வீரர்களை நன்றியோடு நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றன.



இப்போது நார்மண்டியில் பல தரப்பட்ட மக்கள் விஜயம் செய்கின்றனர். இறந்த தோழர்களின் நினைவாகவும், உயிரோடு மீண்டவர் ஒன்று கூடவும், வரலாற்று சிறப்புமிக்க இடத்தை காணும் ஆவலிலும் என்று பார்வையாளர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

தொழிநுட்பத்தின்பயன்பாடு


கையடக்கமான நவீன தொழிநுட்ப சாதனங்களைப் பொறுத்தவரை, அவற்றை பராமரிப்பதைவிட போகும் இடங்களில் அவற்றை கவனமாகப் பத்திரப்படுத்துவது கடினமான ஓரு விடயமாக கணிக்கப்படுகிறது.
கையடக்கத் தொலைபேசிகள், PDA, Note book கணணிகள் போன்றவற்றை போகும் இடங்களில் மறந்து வைத்துவிடுவது மிகவும் சாதாரணமாக நிகழக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
எனினும், நமது தனிப்பட்ட பாதுகாப்பு முறையாக PIN இலக்கங்களை உருவாக்கி பாதுகாக்கலாம்.
இவ்வாறு செய்வது குறிப்பிட்ட சாதனத்தை பிறர் பாவிக்க முடியாதபடி செய்துவிடுமாயினும், இப்பாதுகாப்பு முறை குறித்த பலவீனங்களும் அதிகமாகவே காணப்படுகிறது.

குறிப்பிட்ட நேரத்தில் தானாக இயங்கும் பாதுகாப்பு முறையை (auto lock - active) ஏற்படுத்தத்தவறியிருந்தால் இம்முறையிலும் பயன் இல்லாமல் போய்விடுகிறது.
எனினும், இதைவிட சிறந்த முறைகள் பற்றிய ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், புதிய தொழிநுட்பம் ஒன்றை கையடக்க சாதனங்களில் அறிமுகப்படுத்துவது பற்றிய ஆர்வம் மேலோங்கியுள்ளது.

Biometric தொழிநுட்பம் பல்வேறு வடிவங்களில் உலகில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
எனினும், சிறிய ரக கணணிகள்,கையடக்கத் தொலைபேசிகள் போன்றனவற்றில் இவை ஏற்படுத்தப்போவது நாம் எதிர்நோக்கக்கூடிய ஒரு புதிய விடயமாகவே இருக்கும்.
note book,pda,mobile phone மற்றும் கணணிகளுக்கான பாதுகாப்பு முறையை அவரவர் விரல் ரேகைகளில் உருவாக்குவது என்பது ஒரு புதிய விடயமாகவும், அதே நேரம் நம்பிக்கை தரும் விடயமாகவே கணிக்கலாம்.

ஒருவரின் விரல் அடையாளத்தைப்பெற்று Locking / Unlocking System உருவாக்கப்படும் போது அதன் பயன்பாடு அதிகமாகவே இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

கணணிகளில் பாவிக்கப்படக்கூடிய USB drive,Data Keys போன்ற சாதனங்களையும் இவ்வாறான பாதுகாப்பிற்குட்படுத்தப்படும் போது, தனிப்பட்ட தகவல்களும் பயன்பாடுகளும் பாதுகாக்கப்படலாம்.

எவ்வாறாயினும், இவ்வகைப் புதுமுறையில் பயன்பாடு பற்றிய ஆழமான தகவல்கள் பரவும் வரை இவை பாதுகாப்பானதாகவே அமையும்.
தற்போது கையடக்கத்தொலைபேசிகளில் காணப்படும் PIN முறையிலான Lock முறைகளை Unlock செய்வதை ஒரு வியாபாரமாகவே செய்து வருகின்றனர்.

எனவே, தொழிநுட்பத்தின் ஆழமான அறிவு பரவும் வரை அது பாதுகாப்பானதாகவே இருக்கும்.

வியாழன், 23 செப்டம்பர், 2010

எந்திரன் - விமர்சனம்!



எந்திரன் - விமர்சனம்!

190 கோடி ரூபாய் செலவு, சன் பிக்ஸர்ஸ் + ஷங்கர் + சூப்பர்ஸ்டார் ஆகியோர் இணந்துள்ள பிரம்மாண்டமான படைப்பு. சிவாஜிக்குப் பிறகு மீண்டும் ஷங்கரும் ரஜினியும் இணைந்துள்ளனர். ஐய்வர்யா பச்சன் ஹீரோயினென மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்ட படம். ரஜினி ரசிகர்கள் எந்திராவளியாக கொண்டாடுகிற படம் நேற்று எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் என கனவில் வெளியாகியது. ஒரு படம் பார்த்தால் விமர்சனம் எழுதுவதுதானே கல் தோன்றா மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய தமிழ்ப்பதிவரின் கடமை.ஆகவே ஓவர் டூ விமர்சனம்.

ஒரு முக்கோண காதல் கதையை இவ்வளவு பிரம்மாண்டமாக சொல்ல ஷங்கரால்தான் முடியும். ஒரு விஞ்ஞானி, அவர் பணிபுரியும் அதே இடத்தில் பணிபுரியும் ஒரு பெண், விஞ்ஞானி உருவாக்கும் ஒரு ரோபோ இவர்களுக்குள் நடக்கும் முக்கோண காதல் கதை. விஞ்ஞானியாக சூப்பர்ஸ்டார் பட்டையைக் கிளப்புகிறார். மிக மிக ஸ்டைலிஸாக அந்த குறுந்தாடி அவருக்கு சூப்பராக பொருந்துகிறது. ஸ்டைல் என்ற வார்த்தையே அவருக்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டதைப் போலிருக்கிறது.ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் "க்ளாஸ்".

ரஜினியுடன் பணிபுரியும் பெண்ணாக, எப்போதோ உலக அழகியானாலும் இன்னும் நாம் அழைத்துக் கொண்டிருப்பதால் ,"உலக அழகி" ஐஸ்வர்யா பச்சன். ராவணனில் தெரிந்ததை விட ஒப்பனைக் கலைஞரின் தொழிற் நேர்த்தியால் அம்மணி இப்படத்தில் மிக இளமையாக தெரிகிறார். இருந்தாலும் சில இடங்களில் வயதை மறைக்க முடியவில்லை. பாடல் காட்சிகளில் அதகளம் செய்கிறார். விஞ்ஞானி ரஜினிக்கும் ஐஸ்வார்யாவுக்கும் முதலில் மோதலில் ஆரம்பித்து, தமிழ்த் திரைப்படவுலகின் தலையாய விதிப்படி அது காதலிலேயே முடிகிறது.
ரஜினி நாட்டுக்கு நல்ல‌ வேலை செய்ய, தன் ஆராய்ச்சி மூலம் ஒரு ஒன்மேன் ஆர்மியான் ரோபோவை தயார் செய்கிறார். அந்த ரோபோதான் இன்னோர் ரஜினி. அதாவது ரஜினியின் முகவமைப்புடன் கூடிய இன்னோர் ரஜினி. மனித உணர்ச்சிகள் எதுவும் இல்லாமல், மற்ற எல்லா வித்தைகளும் மொழிகளும் பேசும் திறனும் ப்ரோகிராமிங் செய்யப்பட்டதொரு ஹைடெக் ரோபோ. ஒரு எந்திரத்தை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தினால் நல்லதைச் செய்யலாம். மாறாக கெட்ட விஷய்ங்களுக்கும் பயன்படுத்தலாம். நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த விஞ்ஞானி ரஜினி இருந்தால், கெட்ட விஷயங்களுக்கு பயன்படுத்த ஒரு வில்லன் வேண்டுமல்லவா..? இருக்கிறார். டேனிதான் அந்த வில்லன். அவர் பேசும் தமிழுக்கும் வாயசைப்புக்கும் ஒட்டவேயில்லை. டப்பிங் கலை என்றென்றும் வாழ்க!

ஒரு கட்டத்தில் ரோபோவான ரஜினிக்கு மனித உணர்ச்சிகளான காதல், துரோகம், வெறுப்பு முதலியன வரத் துவங்குகின்றன. அதாவது ஐஸ்வர்யா மீது காதலும் அதனால், தன் தந்தையான விஞ்ஞானி ரஜினி மீது வெறுப்பும் சேர்கிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வில்லன் விஞ்ஞானியான டேனி, ரோபோ ரஜினியை தன்வசப்படுத்துகிறார். விஞ்ஞானி ரஜினிக்கு துரோகம் செய்யும் விதமாக நாட்டின் அழிவுகளுக்கு ரோபோ ரஜினியை பயன்படுத்தத் துவங்குகிறார். விஞ்ஞானியான ரஜினி ரோபோவைவும் வில்லன் டேனியையும் என்ன செய்தார்..? ஐஸ்வர்யா இறுதியில் யாரைக் கரம் பிடித்தார்..? என்பனவற்றை வெள்ளித்திரையில் காண்க.

என்னதான் விஞ்ஞானி ரஜினி ஸ்டைலாக நடித்திருந்தாலும் இரண்டாம் பாதியில் வில்லனாக அவதாரம் எடுக்கும் ரோபோ ரஜினி வந்து ஒருமுறை சிரிப்பதில் மனதைக் கொள்ளை கொண்டு போய் விடுகிறார். பழைய பரட்டை ரஜினியாக சிம்மாசனம் போட்டுக் கொள்கிறார். அவர் துப்பாக்கியைச் சுழட்டும் விதமும் நொடிக்கணக்கில் நூற்றுக்கணக்கான புல்லட் மழை பொழிவதும் அழகே அழகு. அவரும் ரஜினிதானே!! எல்லாப்புகழும் ரஜினிக்கே!!

முதற்பாதியில் ரோபோ ரஜினியான சிட்டி அடிக்கும் டைமிங்க் காமெடிகள் சூப்பர் ரகம் . சுஜாதாவுக்கே ஸ்தோத்திரம். பற்றாக்குறைக்கு சந்தானமும் கருணாஸும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தனி. இருவரும் போட்டி போட்டு மாறி மாறி சிரிக்க வைக்கின்றனர். இந்தப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் பீட்டர் ஹெய்ன். மனிதர் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார். கேமராமேன் ரத்தினவேலு தனக்குக் கொடுத்த வேலையை மிக மிகச் சிறப்பாக செய்து முடித்துள்ளார். வைரமுத்துவின் வைரவரிகளில் ரஹ்மானின் இசையில் ஏற்கனவே பாடல்களனைத்தும் பட்டையைக் கிளப்ப, பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார் ரஹ்மான். அதுவும் ரஜினியின் அறிமுகக் காட்சியில் அவர் அடித்திருக்கும் இசை இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

சாபுசிரிலின் கலை வியக்க வைக்கிறது. எது கிராஃபிக்ஸ்..? எது செட்..? என பிரித்துப் பார்க்க முடியாத வண்ணம் வேலை செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் இவர் போட்டிருக்கும் செட்ஸ் அனைத்தும் அசத்தல் ரகம். அவையனைத்தையும் ரத்னவேலு தன் கேமராவுக்குள் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் சூப்பரோ சூப்பர். வசனங்கள் பல இடங்களில் ஷார்ப்பாக உள்ளது. மூன்று பேர் எழுதியிருப்பதால் யார் யார் எதை எழுதினார்களென சரியாகத் தெரியவில்லை. சுஜாதாவை மட்டுமே சில இடங்களில் கண்டுபிடிக்க முடிகின்றது.

ஒரு சில காட்சிகளை ஆங்காங்கே ஆங்கில படங்களிலிருந்து சுட்டிருந்தாலும், அவற்றை தமிழ் ரசிகர்களுக்காக கொஞ்சம் மாற்றி கமர்ஷியலாக்கிக் கொடுத்திருக்கிறார் ஷங்கர். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். படக்குழுவினர் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்வதைப் போலவே, இந்த மாதிரி ஒரு படம் தமிழில் இதுவரை வந்ததேயில்லை. கண்டிப்பாக திரையரங்கில் மட்டுமே கண்டுகழிக்க வேண்டியதொரு முக்கியமான தமிழ்த்திரைப்படமுங்கோ இது! thanks website.