திங்கள், 24 அக்டோபர், 2016

ஆன்மா சாந்திகொள்ள தமிழன்னை தயை புரிவாள்...

முழு வெள்ளை உடையணிந்து உடல், முகத்துக்கும் முழுவதுமாக பவுடர் பூசி லிப்டிக்கால் முகம் முழுவதும் வரைந்து கொண்டு "அண்ணா கெட்டப் ஓகேயா" என்று முன்வந்து நின்றான். அவனை பார்த்ததும் படப்பிடிப்புதளத்தில் எனக்கு மட்டுமல்ல! தொழிநுட்பகுழு மற்றும் பங்குபற்றிய யாழ்.பல்கலைகழக மாணவர்களிடையே "குபீர்" என்ற சிரிப்பொலியே எழுந்தது… 

சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்ள் சுலக்‌ஷன் மற்றும் கஜன்
இரு அரக்கவேடம் தரித்த கதாபாத்திரத்தில் ஒருவனாக அவனே தனக்குதானே மேக்கப் போட்டு கொண்டு ஜோக்கர் போல முன்வந்து நின்றான். பார்த்த கெட்டப்பில் பயம் வரவில்லை. சிரிப்பொலியே எழுந்தது. அந்தளவுக்கு நகைச்சுவை உணர்வு மிக்கவன். அந்த சந்தர்ப்பத்தில் பதிந்த முகத்தை மீண்டும் இரைமீட்டிப்பார்க்கும் போது மரண செய்தியாகத்தான் தம்பியின்முகம் தெரிகிறது.

     
பாதித் தூரத்திலே பயணம் முடக்கப்பட்ட 'சுலக்‌ஷன்', 'கஜன்' இரு தம்பிமார்களே..
உங்கள் இழப்பு நிச்சயம் ஈடு செய்ய முடியாத ஒன்று!!!!
என் இதயம் மிகையாய் துடிக்கிறது வெறுப்பில்...
உன் ஆன்மா சாந்திகொள்ள தமிழன்னை அவள் தயை புரிவாள்…

மனஉலைச்சலுடன்
- அ. எல்றோய் - 

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

உலகின் முதல் பத்து பழமையான மொழிகள் - முதல் இடத்தில் தமிழ் மொழி

கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழினம் என்பதற்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பதற்கான மற்றுமொரு சான்று இது. கல் என்பது கல்வி, மண் என்பது மன்னர் ஆட்சி. கல்வியும், மன்னராட்சியும் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய இனம் தமிழினம். இலக்கணத்தை மொழிக்கு மட்டுமின்றி, வாழ்வியலுக்கும் வகுத்த இனம் தமிழினம், தமிழர்கள்!!! உலகில் பேசப்பட்டு வரும் பழமையான மொழிகளில் முதல் மொழி தமிழென்று சமீபத்திய ஆய்வும் ஊர்ஜிதம் செய்துள்ளது

10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian) இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian) கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew) இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic) அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

5 வது இடத்தில் சீன மொழி (Chinese) சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

4 வது இடத்தில் கிரீக் (Greek) கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian) ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit) இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil) 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

சர்வதேச சினிமா: இயற்கையைப் புரிந்துகொள்ளாத உலகம்!


அல்பிநொய் (ஐஸ்லாந்து)

நாளுக்குநாள் உலகம் மாறிவருகிறது என்பதே, மனிதர்கள் இடையிலான புரிதலை நோக்கி உலகம் நகர்வதின் தேவையை உணர்வதுதான் என்கிறது ‘அல் பி னோய்' எனும் ஐஸ்லாந்துத் திரைப்படம்.

ஐஸ்லாந்து நாட்டின் மேற்கு ஃஜோர்ட்ஸ் பகுதியின் ஒரு சிறிய நகரம். கடலையும் மலையையும் தொட்டுக்கொண்டு இருக்கும் ஊரில் இரவெல்லாம் பனிப் பொழிவு. உறை பனி வீட்டுவாசலை அடைத்துக்கொள்ள, காலையில் எழுந்து அதை அகற்றினால்தான் வீட்டைவிட்டு வெளியே வரமுடியும். நொய் எனும் டீன்ஏஜ் பையனுக்கு ஒவ்வொரு நாளும் இது பெரிய மெனக்கெடல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஒரு நீளக் கம்புப் பிடிகொண்ட மண்வெட்டியை எடுத்துவந்து வாசலை அடைத்து நிற்கும் உறைபனியைச் சிறிதுசிறிதாக வெட்டத் தொடங்குவான். முழுவதும் அகற்றி வழி சமைப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். உண்மையில் இதைக்கூட அவன் ஒரு கை பார்த்துவிடுவான். ஆனால் மோசமாக நடந்துகொள்ளும் மனிதர்களை?

பள்ளிக்கு வெளியே...

கணக்குப் பாடமென்றால் கசக்கும் நொய், பள்ளியில் கணிதத் தேர்வுகளில் அடுத்தடுத்து மட்டமான மதிப்பெண் பெறும் அவனது பிரச்சினை தலைமையாசிரியருக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. மாணவர்களுக்கான மனநல ஆலோசகரும் வரவழைக்கப்படுகிறார்.

அவரோ கேவலமான கேள்விகளை இவனிடம் கேட்கிறார். இவனும் பதிலுக்கு அதே கேள்விகளை அவரிடம் ஏடாகூடமாகத் திருப்பிக் கேட்கிறான். வந்தவர் ஒருகணம் தடுமாறிவிட்டுப் பின்னரும் கேள்விகளை தொடர்கிறார். வெவ்வேறு கேள்விகளில் ஒரேயொரு கேள்விக்குத்தான் ஒழுங்காகப் பதில் வருகிறது அவனிடமிருந்து.

பொது அறிவைப் பரிசோதிக்க கேட்கப்படும் கேள்விகளில் எந்தப் பிரச்சினையுமில்லை. பொதுஅறிவு மற்றவர்களைவிட அதிகம் பெற்றவன் அவன். அவனைப் போன்றவர்களை என்ன செய்ய வேண்டும் எப்படி வழிக்குக் கொண்டுவரவேண்டுமென்பதில் உள்ள சிக்கல்களை வித்தியாசமாகவே அணுக வேண்டும். பல நேரங்களில் பாடம் கற்பிக்கும் விதங்களில் சலிப்பையே காணும் அவன், அடிக்கடி செல்லுமிடம் கடற்கரை அருங்காட்சியகம். அதற்கடுத்து பெட்ரோல் பங்க் அருகிலுள்ள கேம் ஷோ கடையொன்றில் போய் உட்கார்ந்துவிடுகிறான். அதில் ஏதாவது பரிசு விழுந்தால் அதிலும் ஒரு அற்ப மகிழ்ச்சி.

உண்மையில் மேல்நிலைப் பள்ளிகளில் ஆர்வக் குறைபாடுள்ள மாணவர்களை வழிக்குக் கொண்டுவர கண்டுபிடிக்க வேண்டிய புதிய வழிகளை விவாதப்படுத்தவே இக்காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் நொய் என்பவனின் பள்ளி வாழ்க்கை தவிர, பல்வேறு உலகங்கள் காட்டப்படுகின்றன. அது மட்டுமின்றி அவன் பொருட்டு இயற்கையோடு மனிதனுக்கு இருக்க வேண்டியுள்ள கவனத்தையும் இப்படம் சர்-ரியலிசத் தன்மையோடு முன்வைக்கிறது.



நிலவறை எனும் தாய்மடி

தாயை இழந்த நொய்க்கு பாட்டிதான் எல்லாம். உள்ளூரில் டாக்ஸி ஓட்டும் நேரம் போக எந்நேரமும் மதுவின் மயக்கத்தில் இருக்கும் தந்தையின் அரவணைப்பு எதிர்பார்க்க முடியாதது. நண்பர்களிடமும் முரண்பாடுகள். எல்லோராலும் தனித்துவிடப்படும் நொய், சென்று தஞ்சமடையும் வேறு சில இடங்களும் உண்டு. அதில் ஒன்று உள்ளூர் புத்தகக் கடை. அடுத்தது பாட்டி வீட்டில் தரைக்குக் கீழுள்ள நிலவறை. பாட்டி அவனுக்குப் பரிசாகக் கொடுத்த பூதக்கண்ணாடிதான் அவனது பிறிதொரு உலகம். அதைக்கொண்டு ஊருக்கு வெளியேயுள்ள கடலையும் மலையும் ரசிப்பான்! நிகழப்போகும் மாற்றத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிப்பான்.

மனிதநேசம் குறித்து ஏமாற்றங்களையே சந்திக்கும் ஒருவன் தஞ்சமடையும் இடம் புத்தகங்கள். அடுத்தது பூமிக்குக் கீழுள்ள நிலவறை.அதன் பின் இயற்கைக் காட்சிகள்.

அவனைப் புரிந்துகொள்ளாத உலகம் விரும்புவதோ லாடம் கட்டிக்கொண்ட அட்டவணை வாழ்க்கை. பாடப் புத்தகங்களைத் தாண்டாமல் இருந்தால் பெரிய பெரிய உயரத்துக்குப் போகலாம் என்கிற கணக்கு. அசாதாரண தேடல்கள் எதுவும் தேவையில்லை. இதிலிருந்து முற்றிலும் மாறுபடும் நொய்யின் பாத்திரத்தை வடித்த விதம் இயக்குநரின் சூழல் சார்ந்த வலிமையான நம்பிக்கையை உணர முடிகிறது.

இப்படத்தில் வலி மிகுந்த காட்சிகளும் நகைச்சுவையான காட்சிகளும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளன. ஒருநாள் பள்ளிக்கு விளையாட்டுத்தனமாய் டேப்ரிக்கார்டர் கொண்டுவந்து பையன்களிடம் காட்ட அதைக் கண்டு கணக்கு ஆசிரியர் வெகுண்டெழுந்து தலைமை ஆசிரியரிடம் போய் போட்டுக் கொடுப்பதோடு அவனைப் பள்ளியிலிருந்து தூக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்.

தலைமையாசிரியர் தயங்குகிறார். “ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது அவன் இருக்கவேண்டும்'' என்றுகூறுவதால் ‘நொய்'க்கு பள்ளியிலிருந்து சீட்டு கிழிக்கப்பட வேண்டிய நிலை. மனமுடைந்துபோன நொய், என்ன செய்வது என்று தெரியாமல் பள்ளியைவிட்டு வெளியேறும்போது அதுவரை அவனைப்பற்றிய கவலையில்லாமல் இருந்த அவனது தந்தை, அவனிடம் பிரியமாக நடந்துகொள்ளும் விதம் அருமை. ஒரு மதுவிடுதிக்கு அவனை அழைத்துச்செல்ல அந்த விடுதியாளர் “விடலைப் பையனை இங்கே அழைச்சிட்டுவரியே அறிவில்லை உனக்கு?” என அடித்து உதைத்துத் தூக்கியெறிய, இருவரும் சாலையில் வந்து விழும் காட்சிகள் சிரிப்பையும் சோகத்தையும் ஒரேநேரத்தில் வரவழைக்கக்கூடியன.

வாழ்க்கைக் கணக்கு

அவனை ஒரு வேலையிலும் சேர்த்துவிடுகிறார் அவனது தந்தை. அது பனிமண்டிய நிலத்தில் பிணம் புதைக்க குழிவெட்டும் வேலை.

அந்த நேரம் பார்த்து பாட்டியோ அவனது எதிர்காலம் குறித்து அறிய ஜோதிடரைத் தேடிச் சென்று பார்த்துத் திரும்பியபின். அவனை ஜோதிடரை போய்ப் பார்க்கும்படி கூறுகிறாள். இவனும் உணவு இடைவேளையில் அவரைப் பார்க்கப் போக அவர் உனக்கு விரைவில் மரணம் நிச்சயம் என்று கூறுகிறார். என்னடா இது கொடுமை என அவன் அந்தப் பிணக்குழி தோண்டும் வேலையையும் விட்டுவிடுகிறான்.

ஏற்கனவே இவன் கணக்கு வைத்துள்ள வங்கிக்குத் திருடப்போகிறான். வங்கியில் நுழைந்ததும் துப்பாக்கியைக் காட்டி மிரட்ட, “அவர்களோ நாங்கள் இதற்கெல்லாம் பயப்பட முடியாது. போய் வேறு வேலை இருந்தால் பார்” என்று கூறி துப்பாக்கியை அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு அனுப்பிவிடுகின்றனர். தன் வீரதீரத்தை அவமானப்படுத்திவிட்டதாக நினைக்கும் நொய், வங்கிக்குத் திரும்பி வந்து தனது சேமிப்புக் கணக்கை இத்துடன் முடித்துக்கொள்வதாகக் கூறி தனது கணக்கில் இருந்த பணத்தை வாங்கிக்கொள்கிறான். அந்தப் பணத்தில் ஒரு கோட்சூட் வாங்கி அணிந்துகொண்டு ஒரு காரையும் திருடிக்கொண்டு தன் பழைய தோழியைத் தேடிச் செல்கிறான். அவளோ இவன் மீது நம்பிக்கையின்றி வர மறுக்கிறாள்.

“காரைத் திருடியதற்காக ஜெயிலுக்குப் போனவனை அப்பா மீட்டு வருகிறார் என்று தொடரும் காட்சிகளில் இயக்குநர் டாகூர் காரி முத்தாய்ப்பாக வைத்திருக்கும் காட்சிதான் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவது. ஊரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட, அவனுக்கு மரணம் சம்பவிப்பது நிச்சயம் என்று சொன்ன ஜோதிடர், பள்ளியை விட்டுத் தூக்கிய ஆசிரியர், பிணக்குழி தோண்டும் வேலையில் அவனைக் கடுமையாக வேலை வாங்கிய மதகுரு, பாட்டி, தந்தை, ஊர்மக்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளில் நசுங்கி இறந்துவிடுகிறார்கள். நிலவறைக்குள் மாட்டிக்கொண்ட இவன் மட்டும் சுரங்க வழியாகத் தப்பித்து கடற்கரை செல்கிறான். தனக்குப் பிடித்தமான பூதக்கண்ணாடி வழியே அங்கு அவனோடு உரையாடும் இயற்கையை ரசிக்கத் தொடங்குகிறான்….>

இலுமினாட்டி - என்றால் என்ன? Illuminati

இலுமினாட்டி - என்றால் என்ன?
இலுமினாட்டி பற்றி தெரியாதவர்கள் முதல் முறையாக தெரிந்து கொள்ளும் நாளில் தூக்கத்தைத் தொலைப்பது நிச்சயம். தெரியாதவர்களுக்காக இலுமினாட்டி பற்றி ஒரு சிறு அறிமுகத்துடன் கட்டுரையை தொடங்குகிறேன். உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சர்வதேச நாட்டாமைகள்தான் இலுமினாட்டிகள். உலக அரசியல் அமைப்புகள், மதங்கள், வங்கிகள், ஹாலிவுட், மீடியாக்கள், நுகர்பொருட்கள் எல்லாம் எல்லாம் இவர்களது கையில். எதெல்லாம் இவர்களுடையது என்று ஆராய்வதைவிட எதெல்லாம் இன்னும் இவர்களுக்கு சொந்தமாகவில்லை என்பதை வேண்டுமானால் எளிதாக எண்ணிவிடலாம். இன்றைய உலகைப் பொறுத்தவரை இயற்றலும் ஈட்டலும் காத்தலும் அழித்தலும் இவர்கள் கையில்.


எகிப்திய பார்வோனின் இரத்தவழி வம்சங்களாகிய 13 முதல் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் இந்த இலுமினாட்டிகள். சில உலக அரசியல் தலைவர்களும், மிகப்பெரிய பணமுதலைகளும், கலைத்துறையினரும், விஞ்ஞானிகளும் இதில் அடக்கம். இவர்கள் வரலாறு பல நூற்றாண்டுகளைக் கடந்தது. உலகில் இதுவரை நடைபெற்ற அத்தனை புரட்சிகளையும், இரு உலகப்போர்கள் உட்பட அத்தனை யுத்தங்களையும் தங்கள் சொந்த ஆதாயத்துக்காக நடத்தியவர்கள் இவர்கள்தான்.
இதை ஏன் அவர்கள் செய்ய வேண்டும்?

New World Order என்ற பெயரில் உலகம் முழுவதையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து அதை ஆளவேண்டும் என்பதே இவர்கள் நோக்கம், அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

இலுமினாட்டிகளின் சிறப்பியல்புகளில் ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்வது இக்கட்டுரையைப் புரிந்துகொள்ள உதவும். இவர்கள் சொல்லி அடிப்பதில் கில்லாடிகள். பில்லி சூனியம், நரபலிகள், மாந்திரீகம், அஸ்ட்ராலஜி, நியூமராலஜி, occultism போன்றவற்றில் இவர்களை மிஞ்ச உலகத்தில் ஆளில்லை. 3,6,7,9, 11, 22, 33, 333, 66, 666 போன்றவை இவர்களது முக்கிய எண்கள். சைத்தானுக்கு செய்யும் சடங்குகளாக இவர்கள் குறிப்பிட்ட நாளில் சில குறிப்பிட்ட செயல்களை செய்வார்கள். அது முழுக்க முழுக்க எண்களின், வானசாஸ்திரத்தின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இவர்கள் தாங்கள் செய்யப்போவதை ஏதேனும் ஒரு மீடியம் வழியாக ஏற்கனவே வெளியே சொல்லியும் விடுவார்கள், ஆனால் அதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.
பெரும்பாலும் சம்பவங்கள் நடந்த பின்னரே அதை உலகம் புரிந்து கொள்ளும். அப்படி முன்னரே கண்டுபிடித்தாலும் எந்தக் கொம்பனாலும் அதைத் தடுத்து நிறுத்தவும் முடியாது. உதாரணத்துக்கு இரட்டை கோபுர இடிப்பு நடத்தப் போவது பற்றி (அதை செய்ததும் இந்தப் புண்ணியவான்கள்தானாம்) சம்பவம் நடப்பதற்கு சிலமாதங்கள் முன்னர் வெளியிட்ட 20$ அமெரிக்க நோட்டில் மறைமுகமாக சொல்லிவிட்டார்களாம், மட்டுமன்றி சம்பவத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன் வெளியான புகழ்பெற்ற காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைகளிலும் ஆங்காங்கே இந்த இரகசியம் வெளியிடப்பட்டிருக்கிறது, ஆனால் அது அப்போது யாருக்கும் தெரியவில்லை.


யார் இவர்கள்? ஏன் இதைச் செய்கிறார்கள்? இவர்கள் ஏன் வெளிச்சத்துக்கு வருவதில்லை? தாங்கள் செய்யப்போவதை யாருக்கு, ஏன் முன்கூட்டியே சொல்லுகிறார்கள்? அது யார் மூலம், எப்படி வெளிவுலகத்துக்கு கசிகிறது?
இலுமினாட்டிகள் யாரும் தன்னை இலுமினாட்டி என்று அறிவித்துக் கொள்ளமாட்டார்கள். இது ஒரு இரகசியக் குழு, இரகசியம்தான் இவர்கள் பலம். இதை ஏன் வெளியே சொல்லுகிறார்கள் என்றால் மக்களுக்காக அதை சொல்லுவதில்லை. உலகம் முழுவதிலுமுள்ள இலுமினாட்டிகள் தங்களுக்குள் போன் மூலமாகவோ கடிதத்திலோ பேசிக்கொள்ள மாட்டார்கள், இதுபோன்ற சமிஞ்கைகள் மூலமே தங்கள் சக இலுமினாட்டிகளிடம் தகவல்களைப் பரிமாறுகிறார்கள். அவற்றை decode செய்து கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இலுமினாட்டிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்து, அவர்கள் தகவல்களை decode செய்து மக்களுக்கு வெளியிடும் conspiracy theorists பலர் இருக்கிறார்கள். அவர்களது கட்டுரைகள் புத்தகங்கள் மூலம் இணையதளங்கள் வழியே பல நூற்றாண்டுகளாக திரைமறைவில் உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருந்த இலுமினாட்டி இயக்கம் பற்றிய இரகசியங்கள் இப்போது ஓரளவுக்குக் கசியத்துவங்கி இருக்கிறது. இணையத்தில் இன்றைய ஹாட் டாபிக் இதுதான். ஆனால் இது கொஞ்சம் ஓவராகவே ஆகிவிட்டது எனவும் சொல்லலாம், கொசு கடித்தால்கூட அதையும் இல்லுமினாட்டி சதி என்று அலறும் பைத்தியங்களும் இன்று பெருகிவிட்டார்கள்.
மலேசிய விமானம் MH370 தொலைந்த அதேநேரத்தில் ரஷ்யா உக்ரேன் பிரச்சனை இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. இரண்டையுமே இலுமினாட்டி சதி என்று பலரும் கூறிவந்தனர். ஆனால் அதற்கான ஆதாரம் அப்போது ஒன்றும் சிக்கவில்லை. இலுமினாட்டிகள்தான் சொல்லி அடிப்பவர்களாயிற்றே இதுபற்றி ஏதாவது முன்கூட்டியே சொல்லி வைத்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து சில conspiracy theorist-கள் சில திடுக்கிடும் தகவல்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள். அந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.


இலுமினாட்டிகளின் மதத்தில் Poseidon என்ற ஒரு நெப்ட்டியூன் கடவுளுண்டு, இது கடலுக்குரிய கிரெக்கக் கடவுளாகும். இதன் கையில் ஒரு மும்முனை குத்தீட்டி வைத்திருக்கும். அந்த மும்முனை குத்தீட்டி(Trident) அதிகாரத்தின் அடையாளமாகும். உலகத்தின் அதிகாரம் கடவுளிடமிருந்து சைத்தானுக்கு கைமாறுவதை கொண்டாடும் விதமாக கடல் தெய்வமான நெப்ட்டியூனுக்கு கடலில் நடத்தும் ஒரு சடங்காகவும் 2014-ஆம் ஆண்டில் இந்த மும்முனை குத்தீட்டி சின்னத்தை(Trident) எல்லோருடைய ஆழ்மனதிலும் பதிக்கும் விதமாகவும் அதை உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்துவது இவர்கள் நோக்கம். மக்களது ஆழ்மனதில் இதை ஏன் பதிய வைக்க வேண்டும் என்று conspiracy theorist-களைக் கேட்டால் அவர்கள் இலுமினாட்டிகளை mind manipulators என்று அழைக்கிறார்கள். இவர்கள் இன்று உலகத்தை ஆண்டு கொண்டிருப்பதே மக்களை உளவியல் ரீதியில் மூலம் mind control செய்துதானாம்.

2014-ஆம் ஆண்டில் தங்கள் மும்முனை குத்தீட்டி செய்யப்போகும் காரியத்தை மசெராட்டி என்ற புகழ்பெற்ற இத்தாலிய கார் விளம்பரத்தில் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். We have prepared, now we strike என்று தெளிவாகவே சொல்லுகிறார்கள். உடனே மும்முனை குத்தீட்டி சின்னம் பொறித்த கார் நம்மை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது. அந்த விளம்பரம் இதோ!



அடுத்து MH370-க்கு நேரப்போவதை முன்கூட்டியே 2013 இல் வெளியான Man of Steel என்ற ஹாலிவுட் படத்தில் அறிவித்துவிட்டார்கள். ஒரு எரிந்து கொண்டிருக்கும் மும்முனை குத்தீட்டி போன்ற விண்கலம் இந்தியப் பெருங்கடலில் விழப்போவதை அந்தப் படம் முன்னறிவிக்கிறது. மேலும் எண் 370-ஐத் தூக்கப்போகிறோம் என்பதையும் அதே படத்தில் தெளிவாகக் காட்டிவிட்டார்கள். Man of Steel படத்தை ஆராய்ந்து conspiracy theorists வெளியுட்டுள்ள வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு:





அதற்குப் பின்பு ஒரு ஜுலை 17-அன்று MH-17 இன்னொரு மலேசிய விமானம் உக்ரேனில் சுட்டி வீழ்த்தப்பட்டதை யாவரும் அறிவோம். இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் மசெராட்டி, உக்ரேன், மலேசிய விமானம் அனைத்துக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு அதுதான் மும்முனை ஈட்டி லோகோ.



இன்னொரு கூடுதல் தகவல், உலகத்தின் ஆளுகை இறைவனிடமுருந்து சைத்தானுக்கு கைமாறியதன் அடையாளமாக இரு மும்முனை ஈட்டிகள் இன்னொரு முக்கியமான இடத்திலும் இப்போது வைக்கப்பட்டுள்ளது, அதுதான் நியூயார்க் இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதன் நினைவாக நியூஜெர்ஸியில் எழுப்பப்பட்டிருக்கும் நினைவகம்.

மலேசியன் ஏர்லைன்சில் உள்ள இரட்டை மும்முனை குத்தீட்டிக்கும், இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதன் நினைவாக நியூஜெர்ஸியில் வைக்கப்பட்டிருக்கும் இரட்டை மும்முனை ஈட்டிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு அது சைத்தானுக்குரிய எண்ணாகிய 33-ஐயும் குறிக்கிறது. 33-இன் முக்கியத்துவம் பற்றி எமது முந்தய கட்டுரையில் பார்த்து தெரிந்து கொள்ளவும்..

இன்னும் வரும் நாட்களில் நீங்கள் திரும்புமிடமெல்லாம் மும்முனை குத்தீட்டியை உலகம் முழுக்க பார்க்கலாம். மும்முனை குத்தீட்டியை மக்கள் ஆழ்மனதில் பதிக்கும் விதத்தில் இனி திரையுலக  நாயகர்கள்கூட படத்தில்  அதைத் தூக்கிக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்..

வெறும் இந்த ஆதாரங்களை வைத்து இதுதான் நடந்திருக்கும் என்று எப்படி நம்புவது என்று கேட்டால், இதில் எழுதியிருப்பது எதுவுமே எனது சொந்தக் கற்பனையோ கருதுக்களோ அல்ல, conspiracy theory என்பது வெவ்வேறு புள்ளிகளை இணைத்து ஒரு புரிந்துகொள்ளுதலுக்கு வருவதாகும். conspiracy theorists இணையத்தில் ஆங்கிலத்தில் சொல்லுவதை தமிழில் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறேன்.அவ்வளவே! அவர்களால்கூட இதற்கு ஒருபோதும் சட்டம் ஏற்றுக்கொள்ளும்படியான ஆதாரங்களைக் காட்ட இயலாது. இது எப்போதும் கோட்பாட்டளவிலேயேதான் நிற்கும். நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.

கட்டுரை எழுதப்பட்டதற்கு ஆதார வீடியோக்கள்:
https://www.youtube.com/watch?v=oI2UcmpcdQA
https://www.youtube.com/watch?v=8kNOdLbPLJY

திங்கள், 10 அக்டோபர், 2016

வேற்றுக்கிரக வாசிகளை தொடர்புகொண்டது எப்படி?


எமது அண்டத்தை படம் பிடித்தது எப்படி? வேற்றுக்கிரக வாசிகளை தொடர்புகொண்டது எப்படி?


நாம் இருக்கும் சூரியகுடும்பம் மற்றும்.. பல நட்சத்திரங்களைக்கொண்ட நமது அண்டத்தை (கலக்சியை) எவ்வாறு நாங்கள் படம் பிடித்தோம்.? அதுவும், நாங்கள் இன்னமும் ஒளியின் வேகத்தை நெருங்க கூட இல்லை… ஒளியின் வேகத்தில் சென்றாலே எமது அண்டத்தை தாண்ட பல ஆண்டுகள் எடுக்கும். என்ற கேள்வியுடன் முடித்திருந்தேன்.
——————————————————————————————–
முன்னர் சொன்னது போன்று, ஒளியின் வேகமே இல்லாமல், நாங்கள் இந்த சூரிய குடும்பத்தை தாண்டுவதே கடினமானது. ஆனால், கலிலியோவினால் கண்டறியப்பட்ட தொலை நோக்கி (telescope) இந்த கேள்விக்கு விடையளிக்கும்.
நவீன ரக தொலை நோக்கி மூலமாக, எமது சூரிய குடும்பத்தை தாண்டி வாறு நட்சத்திரங்களையும், பால்வீதிகளையும், அண்டங்களையும் பார்க்க முடிகிறது.
அவ்வாறான… தொலை நோக்கிகளின் உதவியுடனேயே, பல அண்டங்கள் இருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
அவ்வாறு பார்க்கப்பட்ட அண்டங்களில், கிட்டத்தட்ட நாம் இருக்கும் சூழ் நிலைகளை ஒத்துப்போக கூடியதாக சில அண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அப்படி கண்டறியப்பட்ட ஒரு அண்டத்தின் உருவத்தைத்தான்… இப்போது நாங்கள் எமது அண்டத்தின் உருவம் என கூறிக்கொள்கிறோம். மற்றம் படி இன்னமும் எமது அண்டத்தை நாம் படம் பிடிக்கவில்லை.
(இப்போது அமது அண்டம் என நாம் காட்டிக்கொள்ளும் படம் நாங்கள் தேடி கண்டுபிடித்துள்ளது பல ஆண்டுகளுக்கு முட்பட்ட உருவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான விளக்கம் ஏற்கனவே முன்னைய பதிவுகளில் உள்ளது. மேலதிக தகவல்களை பிறகு எழுதுகிறேன். )
——————————————————————————————–
இதுக்கும் வேற்றுக்கிரக வாசிகளுக்கும் இடையிலான தொடர்புகளை பார்க்க முதல்…
அண்டத்தில் நாம் இருக்கும் இடத்தை பார்ப்போம்.
ந‌ம‌து அண்டத்தை ஒரு அப்ப‌த்துட‌ன் ஒப்பிட‌ முடியும். அப்ப‌த்தின் வெளிப்பக்கத்தில் மொறு மொறு ப‌குதியில்தான் நம‌து சூரியகுடும்பமே இருக்கிறது. பூமி சூரியனை சுற்றுவதுபோன்று… இந்த அண்டத்தின் மையத்தை நமது சூரிய குடும்பம் சுத்துகிறது. இப்படி பல அண்டங்கள் வேறு ஒரு பிரபஞ்ச மையத்தை சுற்றுகிறதாம்.
அத்தோடு… இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று.
இப்படிப்பட்ட… இந்த பரந்த பிரபஞ்சத்திலே, நாங்கள்தான் அதீதமான பரிணாம வளர்ச்சியடைந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வது சிறுபிள்ளைத்தனமானது.
இப்போது சும்மா எமது அண்டத்தைப்பற்றி சிந்த்தித்தால்ஜோ… அப்பத்தின் இங்கால் இருக்கும் மொறுமொறு பகுதிபோல், எமக்கு எதிராக உள்ள பக்கத்தில் கூட வேற உயிரினங்கள் இருக்கலாம். இதே போன்ற கால நிலைகள் இருப்பதற்கும் கூட சந்தர்ப்பங்கள் உள்ளன… அதனால், அங்கேயும் மனிதர்களே, ஏன் நாமே இருக்கக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது. ( இது ஒருவகை தேற்றம், அதை அடுத்துவரும் புதிய தேடல்களில் பார்க்கலாம்.)
அதேபோன்று.. எம‌து அண்டத்தின் மையத்தை நோக்கிய‌ திசைக‌ளில் கூட‌ வேற்று உயிரினங்க‌ள் இருக்க‌லாம். ஆனால், அங்கு எம‌து… சூரிய‌குடும்ப‌ம் (முக்கிய‌மாக‌ பூமி) இன் கால‌நிலை இருக்க‌ ச‌ன்த‌ர்ப்ப‌ம் ஒப்பீட்ட‌ள‌வில் குறைவு. எனினும்.. அன்த‌ சூழ் நிலைக்கேற்றவாறு வித்தியாச‌மான‌ உயிரின‌ங்க‌ள் இருக்க‌க்கூடும்.
——————————————————————————————–
wow_signal
அப்ப‌டியானால்… அந்த‌ உயிரின‌ங்க‌ள் எங்க‌ளோடோ அல்ல‌து நாங்க‌ள் அவ‌ர்க‌ளோடோ… தொட‌ர்புகொள்ள‌வில்லையா என்ற‌ கேள்வி எழுகிற‌து.
ம்ம்ம்ம்…
1977 ஆம் ஆண்டு ஒரு விஞ்ஞான ஆய்வுகூடத்தில் “வாவ்…” என்ற ஒரு சமிக்ஞை திடீரென குறிப்பிட்ட நேரத்திற்கு உணரப்பட்டது. அந்த சமிக்ஞையை ஆராய்ந்த போது அது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 120 ஒளியாண்டு தூரத்திற்கு அப்பால் இருந்து வந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. (அது ஒரு நட்சத்திர வெடிப்பின் சத்தமாக இருக்கலாம் என்பதும் ஒரு சாராரின் கருத்து.)
எப்படி இருந்தாலும், பூமியில் மனிதர்களால் அண்டத்தில் இருந்து உணரப்பட்ட ஒரே சமிக்ஞையாக அது கருதப்படுகிறது.
( இதேவகையில் இன்னோர் சமிக்ஞை உணரப்பட்டது. கிட்டத்தட்ட 20 வருட தேடலின் பின்னர், அது ஆய்வுகூடத்தின் பக்கத்தில் இருந்த ஒரு உணவு சூடாக்கும் இயந்திரத்தால் ஏற்படுத்தப்பட்ட சமிக்ஞை என முடிவுகிட்டிய சந்தர்ப்பமும் உண்டு.)
அந்த சமிக்ஞை அண்டத்தில் வேற்றுக்கிரகத்தினரைத்தேடி இன்னோர் கிரகத்தினரால் அனுப்பப்பட்ட சமிக்ஞையாக இருந்தால், அவர்களை நாம் மீண்டும் தொடர்புகொள்ள 120 ஒளியாண்டுகள் பயணிக்கவேண்டும்.
பயணித்தால் அவர்கள் இருப்பார்களா? (இது தொடர்பான விரிவான பதிவுகள் புதிய தேடல் தொடரில் இடம்பெறும்.)இருப்ப‌தும் சாத்திய‌மில்லை.
இதிலிருந்து, எங்கேயோ… எம‌து ப‌ரிமான‌த்தை ஒரு ப‌ரிமாண‌மாக‌ கொண்ட‌ உயிரின‌ம் இருக்கிற‌து என்பதை ஓரளவு உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

அப்ப‌டியானால்… நாங்க‌ள் ஒன்றுமே அனுப்ப‌வில்லையா? என்ற கேள்வி இப்போது எழும்.
உக்ரைனிலி இருக்கும் பண்பலை தொலை நோக்கி (radio telescope) மூலம்… 1999 இலும் 2003 இலும் பிரபஞ்சத்தில் வேற்று உயிரினங்கள் இருந்தால்… எமது இருப்பை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் செய்தி சமிக்ஞையாக அனுப்பப்பட்டது…
இது தான் அந்த செய்தி…
இந்த செய்தியில்..
கணிதக்குறியீடுகள்…
இதுவரை கண்டறியப்பட்ட மூலக்கூறுகள்… முக்கியமானவற்றின் சேர்க்கை…
கலப்பிரிவு… ( அடிப்படை உயிரினமான அமீபாவின் தோற்றம்.. )
டி.என்.ஏ அமைப்பு…
மனித உடற்கட்டமைப்பு..
புவியியல் அமைப்பு… நில அமைப்பு…
மற்றும் சமிக்ஞை அனுப்பப்பட்ட முறை உள்ளடங்களாக பல தகவல்கள் இருக்கின்றன.
கூர்ந்து அவதானித்தால்… எவருக்கும் விளங்குமாம் இந்த குறியீடுகள்.
1 23456
ஆனால், இதுவரை ஏவப்பட்ட இந்த சமிக்ஞைக்கான பதில்கள் வெளியிலிருந்து கிடைக்கவில்லை.
ஒன்று… இந்த தகவல்கள் இன்னமும் வேற்று உயிரினங்களை சென்றடையவில்லை… அவர்களால் இதை உணரமுடியவில்லை.. அதாவது எமது பரிமாணங்களுடன் அவர்கள் ஒத்துப்போவதில்லை… என்ற முடிவுக்கே வரலாம். மாறாக.. உரினங்கள் இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது.
காரணம், இந்த சமிக்ஞை இன்னமும்… அண்டவெளியில் பயணித்துக்கொண்டுதான் இருக்கிறதாம்… விரிவடைந்துகொண்டே இருக்கும் இந்த பிர பஞ்சத்தில்… எங்கோ ஒரு நாள்.. எமது பரிமாணத்தை ஒத்துப்போக்கக்கூடியர்களிடன்ம்… இந்த தகவல் சென்றடையும் என்ற நம்பிக்கையுடனேயே இந்த நீண்ட காலத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
——————————————————————————————–
இனி வரும் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான பதிவுகளில் பல வியப்பான தகவல்கள் பதிவிடப்படவுள்ளன வரும் வாரங்களில்…
வேற்றுக்கிரகவாசிகளுள் இங்கே வாழ்ந்த ஆதாரம்! வாழும் ஆதாரமும்!!!
எம்மை சோதைக்குள்ளாக்கும் அவர்கள்.
எம்மை நாமே வேற்றுக்கிரகவாசிகள் என்கிறோமா?
வேற்றுக்கிரகவாசிகள் என அடையாளம் காணப்படுபவர்கள், பரிமாணத்தில் விடுபட்டவர்களா?
இணைந்திருங்கள் ஆராய்வோம். :)

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன்

பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்த செல்வங்களை சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். எகிப்துக்குப் படையெடுத்தவர்கள், உள் நாட்டவர்கள் என பல்லாண்டுகள் வந்து கொள்ளையடித்துச் சென்ற பின் மிஞ்சியது விலை போகாத சவங்களும், சில பொருள்களும், எடுத்துச் செல்ல முடியாத பிரமிடுகளின் கட்டிடங்கள் மட்டுமே. ஆனால் பிரமிடுகளில் இருந்து கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மீக ரகசியங்கள் இன்னும் ஏராளமாக அவற்றில் உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து. எனவே தான் பால் ப்ரண்டன் பெரிய பிரமிடினுள்ளே ஒரு நாள் இரவைக் கழித்து அந்த ரகசியங்களை அறிய விரும்பினார்.

ஸ்பிங்ஸ்

பெரிய பிரமிடு அரசாங்கத்தின் சொத்தாக இருந்ததால், நுழைவுக் கட்டணம் செலுத்தி சென்று பார்த்து வரும் உரிமை பார்வையாளர்களுக்கு இருந்தாலும் அங்கு ஒரு இரவு முழுவதும் தங்க வேண்டுமானால் அரசாங்க உத்தரவு வேண்டும் என்று அவருக்குச் சொல்லப்பட்டது. எனவே அரசாங்கத்தின் பழங்காலக் கலைப் பொருள் காப்பகத்தில் சென்று தன் விருப்பத்தை அவர் தெரிவித்தார். அந்த அதிகாரி நிலவுக்குச் செல்ல பால் ப்ரண்டன் ஆசைப்பட்டது போல் அவரைத் திகைப்போடு பார்த்தார். பின் அவரை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்து சொன்னார். “நான் இது வரை இது போன்ற கோரிக்கையைக் கேட்டதில்லை. ஆனால் இதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் என் கையில் இல்லை. உயர் அதிகாரியைப் பாருங்கள்”

எகிப்து பிரமிடின் அமானுஷ்யம் – பால் பிரண்டனின் நேரடி அனுபவம் 
எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம் என்றால் அது மிகையாகாது. இந்தியாவைப் போன்றே மிகப்பழமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மீகத் தேடல்களிலும் சிறந்தே விளங்கியது. இன்றும் ஸ்பிங்க்ஸ¤ம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மீக ரகசியங்களைத் தங்களுள் மறைத்து வைத்திருக்கின்றன என்பது பலருடைய ஆழ்ந்த நம்பிக்கை.
அதுவே பால் ப்ரண்டனை அங்கும் ஈர்த்தது. பால் ப்ரண்டன் இன்னொரு தேடலை எகிப்தில் தொடர்ந்தார்.
எகிப்தில் பிரமிடுகளைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்பிங்க்ஸ் மனிதத்தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. அது எப்போது கட்டப்பட்டது என்பதை இன்றும் யாராலும் சரியாக ஊகிக்க முடியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கும் முன் சுமார் 2500 ஆண்டுகளிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்பிற்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் அனுமானிக்கிறார்கள். மிகப்பழமை வாய்ந்த அந்த ஸ்பிங்க்ஸ் தேவதை மனிதனின் நுண்ணறிவையும், சிங்கத்தின் தேகபலத்தையும் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. அது ஏழு முறை பாலைவன மணலால் புதையுண்டது என்றும் ஏழு முறை அந்த மணல் விலகி மீண்டது என்றும் சொல்லப்படுகிறது
பால் ப்ரண்டன்   ஸ்பிங்க்ஸ் மற்றும் பெரிய பிரமிடு இரண்டிலிருந்தும் ஞானச் செய்தி பெற வேண்டும் என்று விரும்பினார். ஸ்பிங்க்ஸ் முன் பாலைவன மணலில் ஒரு நாளிரவு முழுவதும் தனியாக அமர்ந்து தியானம் செய்த பால் ப்ரண்டன் கடைசியில் அதிகாலை நேரத்தில் ஸ்பிங்க்ஸிடமிருந்து ஒரு செய்தி கிடைத்ததாகக் கூறுகிறார். “நீ உருவாகி அழியும் சதைகளால் ஆன உருவமல்ல மனிதனே. நீ அழிவில்லாத ஆத்மா! உன்னுடைய இதயத்தில் அது நீ கண்டடையக் காத்திருக்கிறது, இந்தப் பாலைவன மண்ணில் நான் காத்திருப்பதைப் போல். அதனால் உன்னையே நீ அறிவாய்…”
அடுத்ததாக உலக அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிடின் உள்ளே ஒரு நாள் இரவைக் கழிக்க எண்ணினார் பால் ப்ரண்டன். இங்கே பிரமிடுகளைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வது நல்லது. பெரிய பிரமிடு ஒவ்வொரு புறமும் 756 அடி நீளமும், 450 அடி உயரமும் கொண்டது. சுமார் இரண்டரை டன் எடையுள்ள கற்கள் 23,00,000 பயன்படுத்தி கட்டப்பட்ட பிரம்மாண்டமான அமைப்பு அது. சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது. அக்காலத்தில் பிரம்மாண்டமான அமைப்புகளை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்றாலும் எவ்வளவு கச்சிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசம் எட்டு அங்குலங்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இது இன்றைக்கும் கட்டிட வல்லுனர்களை வியக்க வைக்கிறது.
அந்த உயர் அதிகாரி “அனுமதிக்க முடியாது” என்று உறுதியாகச் சொன்னார். அவருடைய பணிக்காலத்தில் இது போன்ற ஒரு கோரிக்கை வந்ததோ, அனுமதிக்கப்பட்டதோ இல்லை என்றார். பால் ப்ரண்டன் தன் கோரிக்கையில் விடாப்படியாக நிற்க அவர் “இரவு வேளையில் தங்குவது போலீசார் அதிகாரத்தில் தான் வருகிறது. அவர்களைப் போய்ப் பாருங்கள்” என்றார்.
போலீசாரும் இந்த வினோத கோரிக்கையை ஏற்க முடியாமல் தங்கள் தலைமை அதிகாரியிடம் அனுப்ப அவரும் திகைத்து முடிவெடுக்க ஒரு நாள் தேவை என்றும் மறுநாள் வந்து பார்க்கும் படியும் சொன்னார். மறுநாள் அவர் மறுபடியும் பழங்கால கலைப் பொருள் காப்பகத்தையே அணுகச் சொன்னார். கடைசியில் கெய்ரோ நகர ஜென்ரல் கமாண்டண்டைச் சென்று பால் ப்ரண்டன் தன் கோரிக்கையைச் சொல்ல அவர் பிரமிடுகளைக் காக்கும் போலீஸ் உயர் அதிகாரிக்கு அனுமதி வழங்குமாறு எழுதி அனுப்பினார்.
அந்தப் போலீஸ் அதிகாரி “நாங்கள் தினமும் மாலையில் பிரமிடின் நுழைவாயிலைப் பூட்டி வருகிறோம். நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமென்றால் மறுநாள் காலை வரை உள்ளேயே இருக்க வேண்டி வரும். சுமார் 12 மணி நேரம் உள்ளே இருக்க ஒத்துக் கொள்கிறீர்களா?”
பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். மறுநாள் மாலை பால் ப்ரண்டன் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு பிரமிடினுள் நுழைந்தார். ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் ஒருவர் அவர் உள்ளே சென்றவுடன் நுழைவாயிலைப் பூட்டிக் கொண்டு வெளியே பூட்டிக் கொள்ள தன்னந்தனியனாய் பால் ப்ரண்டன் தன் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பிரமிடுக்குள் பல பாதாளச் சுரங்கங்கள் இருந்தன. சில மிகவும் குறுகலாய் இருந்தன. சில இடங்களில் அவர் தவழ்ந்து போக வேண்டி இருந்தது. உள்ளே சில இடங்களில் வௌவால்களும், எலிகளும் அவருக்குத் துணையாய் இருந்தன. வேறொருவராக இருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெளியேற நினைத்திருப்பார். ஆனால் பால் ப்ரண்டன் மனம் தளராமல் அரசனுடைய உடலை வைத்துள்ள பிரபலமான சேம்பரை அடைந்தார்.
அங்கு சென்ற அவர் அங்கு சென்றதும் தான் கொண்டு வந்திருந்த தொப்பி, தேனீர் நிறைந்த ·ப்ளாஸ்க், தண்ணீர், நோட்டுப்புத்தகம், பேனா எல்லாவற்றையும் கீழே வைத்து விட்டு சம்மணமிட்டு அமர்ந்து தன் டார்ச் லைட்டை அணைத்து விட்டார். உடனே இருள் சூழ்ந்தது. மயான அமைதி அங்கு நிலவியது. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது அமைதியாகக் காத்திருந்தார். நேரம் செல்லச் செல்ல ஏதோ அமானுஷ்ய சக்திகள் தன்னைச் சுற்றி உலவுவதை அவரால் உணர முடிந்தது. அவர் அந்த இருட்டில் விழிப்புணர்வோடு சூட்சுமமாகக் கவனித்த போது அது கற்பனையல்ல நிஜம் என்பதை அவரால் உணர முடிந்தது. பயத்தில் அவர் உடல் மேலும் சில்லிட்டது.
search in egypt2
பிரமிடின் உள்ளே தனிமையில் நள்ளிரவின் கும்மிருட்டில் அமர்ந்திருந்த பால் ப்ரண்டனுக்கு ஏதோ சக்திகளின் நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. சில நாட்கள் விரதமும் தியானமும் இருந்து அவன் தன் புலன்களை கூர்மைப்படுத்தி இருந்ததால் அந்த சக்திகள் துஷ்ட சக்திகள் என்பதையும் அவரால் மிகத் தெளிவாக உணர முடிந்தது… 
இப்போது அவர் தனிமையில் இல்லை, உடன் துஷ்ட சக்திகளும் உள்ளன என்பதை உணர்ந்த போது அவர் பிரமிடுக்குள்ளே போகப் போவதாகச் சொன்ன போது ஒரு இளம் அரபு நண்பன் எச்சரித்தது நினைவுக்கு வந்தது. “அங்கு ஒவ்வொரு அங்குலமும் தீய சக்திகளாலும் ஆவிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அவை ஒன்றல்ல இரண்டல்ல ஒரு பட்டாளமே இருப்பதால் இந்த விஷப் பரிட்சைக்கு நீங்கள் போகாமல் இருப்பது நல்லது…”
சிறிது நேரத்தில் அவரால் அந்த துஷ்ட சக்திகளின் மாய உருவங்கள் கூட அலைகளாய், நிழலாய் தென்படத் துவங்கியது. ஓரிரு உருவங்கள் அவர் முகத்தின் வெகு அருகில் வந்து அவரை உசுப்புவது போல் தோன்றியது. பால் ப்ரண்டன் இரவின் தனிமைக்குப் பெரிதும் பழக்கப்பட்டவர் என்றாலும் இந்த அனுபவம் அவர் இரத்தத்தை உறைய வைத்தது. அந்த சக்திகள் அவரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுப்புவதற்கு முயற்சிப்பதாக அவருக்குத் தோன்றியது. ஒரு கட்டத்தில் பக்கத்தில் வைத்திருந்த டார்ச் விளக்கைப் போட்டு அந்த சக்திகளை விரட்டுவது நல்லது என்று தோன்றினாலும் பிரமிடுகளின் உள்ளே
என்ன தான் இரவில் நிகழ்கின்றது என்பதை அறியும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செய்யாமல் தடுத்தது.
ஒரு கட்டத்தில் அந்த சக்திகளின் பலம் உச்சத்திற்கு சென்றதாய் பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது. ஆனாலும் ஒரு அசாதாரண மனபலத்துடன் பால் ப்ரண்டன்  தாக்குப் பிடித்தார். திடீரென்று அந்த துஷ்ட சக்திகளின் போக்குவரத்து நின்று போயிற்று. அவை எல்லாம் மாயமாக மறைந்து போயின. அங்கு ஒரு வித மயான அமைதி நிலவியது. பால் ப்ரண்டனுக்கு சிறிது நேரம் கழித்தே காரணம் விளங்கியது.
இரு புதிய உருவங்களின் அருகாமையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். மிகவும் அமைதியான தெய்வீக சக்தி உடையவையாய் அவை இருந்தன. துஷ்ட சக்திகளைப் போன்ற தெளிவில்லாத நிழல்களாகவோ, அலைகளாகவோ இல்லாமல் அந்த இரண்டு உருவங்களும் ஓரளவு தெளிவாகத் தெரிந்தன. பழங்கால எகிப்திய குருமார்கள் போலத் தெரிந்த அவர்களிடத்தில் விவரிக்க முடியாத தூய்மையை அவர் உணர்ந்தார். அவர்களைச் சுற்றி ஒரு ஒளிவெள்ளத்தை பால் ப்ரண்டன் கண்டார்.
வந்தவர்கள் இருவரும் பால் ப்ரண்டன் அருகில் வந்து சிலைகளைப் போல் நின்றனர். இருவரும் தங்கள் கைக¨ள் மார்பிலே கட்டிக் கொண்டு நின்று பால் ப்ரண்டனை ஊடுருவிப் பார்த்தார்கள். அடுத்ததாக முதலில் மிக அருகில் நின்றவர் உதடுகள் அசைவது தெரிந்தது. ஆனால் வார்த்தைகள் ஒலியாக வெளிவரவில்லை என்று புரிந்தாலும் பேசுவது தெளிவாக பால் ப்ரண்டன் மூளையை எட்டியது.
“ஏனிங்கு வந்தாய்? அபூர்வ சக்திகளைப் பெற வந்தாயா? மானிடர்களின் வழியில் கிடைப்பது போதவில்லையா?”
அந்த வார்த்தைகள் எண்ணங்களாக தன் மூளையில் பதியவில்லை என்பதையும், அவருடைய குரலாய் தான் மூளையில் பதிகிறது என்பதையும் புரிந்த பால் ப்ரண்டனுக்கு அது எப்படி என்பது தான் தெரியவில்லை. பால் ப்ரண்டன் சொன்னார். “போதவில்லை”
“திரும்பிப் போய் விடு. இங்கு ரகசியங்களைத் தேடி வந்தவர்கள் பைத்தியம் பிடித்துப் போயிருக்கிறார்கள்”
“நான் தேடி வந்ததை அறியாமல் போக முடியாது”
“எங்களை நெருங்கியவர்கள் சொந்த பந்தங்களை இழந்து தனியராகப் போயிருக்கிறார்கள். அது உனக்கு சம்மதமா?”
“எனக்குத் தெரியவில்லை” என்பதை உண்மையில் பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். ஆனாலும் திரும்பிப் போக முனையவில்லை.
“சரி அப்படியே ஆகட்டும். நீ தேர்ந்தெடுத்த செயலிற்கான பலனை நீயே அனுபவித்தாக வேண்டும்” என்ற அந்த முதல் உருவம் அங்கிருந்து உடனடியாக மறைந்தது. அடுத்த உருவம் பால் ப்ரண்டனை நெருங்கியது. இரண்டாவது உருவத்தின் முகம் மிக மிக வயதானதாக இருந்தது. எவ்வளவு வயதிருக்கும் என்பதை பால் ப்ரண்டனால் அனுமானிக்க முடியவில்லை.
இரண்டாவது உருவத்திடம் இருந்தும் வார்த்தைகள் குரலுடன் பால் பரண்டன் மூளையில் பதிந்தன. “மகனே. இரகசிய சக்திகளின் தலைவர்கள் தங்கள் கைகளில் உன்னை எடுத்துக் கொண்டு விட்டார்கள். நீ ஞான மண்டபத்திற்கு தற்போது அழைத்து செல்லப்படவிருக்கிறாய். நீ அமர்ந்திருக்கும் இந்தக் கல்லில் காலை நீட்டி மல்லாக்கப் படுத்துக் கொள்…”
 பால் ப்ரண்டனுக்கு அதன்படி நடப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அப்படியே படுத்துக் கொண்டார். ஆனால் அதன் பின் நடந்ததென்ன என்று பால் ப்ரண்டனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.
ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் “நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு” என்ற எண்ணம் வந்து போயிற்று.
 உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.
அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது.

அந்த உடலிலிருந்து ஏதோ மங்கலான வெளிர் ஒளி கிளம்பி பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஆவி நிலை வந்திருப்பதை அவர் கண்டார். அது என்ன என்பதை பால் ப்ரண்டனால் சொல்ல முடியவில்லை. சுற்றிலும் உள்ள சுவர்களில் கூட மெல்லிய நிலவொளியாய் அது பிரதிபலிக்கக் கண்டார். உடலில்லாமல் உணர்வுகள் மட்டுமாய் ஒரு மிதவை நிலையில் பால் ப்ரண்டன் இருந்தார். பழங்கால எகிப்தியர்கள் மனிதனின் ஆன்மாவை பறவை வடிவத்தில் பல கல்வெட்டுகளில் வரைந்திருப்பதன் பொருள் உயரத்தில் இருக்கும் போது புரிகிறது போல இருந்தது.
உடலை விட்டுப் பிரிந்திருந்த அந்த நேரத்தில் எடையில்லாத மிகவும் லேசானதொரு நிலையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். தன் உடலைப் பார்க்கையில் பெரியதொரு உண்மை அவருக்குப் புலப்பட்டது. “இது தான் மரண நிலை. உடலை விட்டுப் பிரியும் போது உண்மையாக நான் சாவதில்லை. உடலை விட்டுப் பிரிந்தும் நான் இருக்க முடியும் என்ற உண்மை நிரூபணம் ஆகி விட்டதால் நான் நம்புகிறேன்.” அதே நேரத்தில் “இந்த உடலையா நான் “நான்” என எண்ணி இருந்தேன்?” என்ற திகைப்பும் அவருள் எழுந்தது.
புவியீர்ப்பு விசை பாதி அவரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, பாதி அந்தரத்தில் மிதப்பது போலிருக்க அந்த நிலையில் அவருக்கு ஆத்மஞானம் கிடைத்தது. “அர்த்தமில்லாத இந்த சதைக் குவியல் நான் அல்ல உண்மையில் இந்த உடல் என்னை இத்தனை காலம் சிறை வைத்திருந்தது” என்ற எண்ணம் அவருக்கு பலப்பட்டது. அப்போது உடன் இருந்த அந்த முதிய குரு அவருடைய எண்ணத்தைப் படித்தது போல சொன்னார். “உண்மையே. மிகப் பெரிய பாடத்தை நீ கற்றாய் மகனே. ஆத்மா அழிவில்லாதது!”
அந்த நேரத்தில் பால் ப்ரண்டன் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்து போன அரைகுறையாய் நினைவிருந்த ஒரு பெண்ணின் முகத்தையும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த அவர் நண்பர் ஒருவர் முகத்தையும் ஒரு விபத்தில் அகால மரணமடைந்த ஒரு குழந்தையின் புன்னகை தவழும் முகத்தையும் அண்ட வெளியில் பார்த்தார். அந்த மூன்று முகங்களும் அவரைப் பார்த்தன, பேசின. மிகக் குறுகிய காலமே அவரிடம் பேசிய அந்த முகங்கள் உருகி மறைந்தன.
அந்த குரு அவரிடம் சொன்னார். “நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு வாழ்வது போல் அவர்களும் வாழ்கிறார்கள் மகனே. இங்கு இறைவன் படைத்த அனைத்து உயிர்களின் சரித்திரமும் பதிவாகியுள்ளது. மனித இனத்தின் மறைந்து போன ஆரம்ப கால வம்சாவழியினரின் செயல்கள் எல்லாம் கூட இங்கு பதிவாகியுள்ளது. அட்லாண்டிஸ்* நகரம் கற்பனையல்ல. அந்த நகரம் அழிந்ததும் அந்நகர மக்கள் இறைவனை மறந்து வெறுப்பு, தீமைகளின் வழி சென்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் தான். சுயநலமும், ஆன்மீகக் குருட்டுத்தனமும் தான் அட்லாண்டிஸைக் கடலுக்குள் மூழ்க வைத்தது. இறைவன் அன்பு மயமானவன். ஆனால் அவன் ஏற்படுத்திய விதிகளின் படியே உலகம் இயங்குகிறது. அந்த விதிகளின்படி செய்த தவறுகளுக்கான தண்டனையிலிருந்து யாரும் தப்பி விட முடியாது. இங்கிருந்து செல்லும் போது இந்த செய்தியை மனிதகுலத்திற்கு எடுத்துக் கொண்டு போ மானிடனே”
Pyramids1

(*அட்லாண்டிஸ் நகரம் குறித்து இந்த இடத்தில் நாம் தெரிந்து கொள்வது நல்லது. சகல சுபிட்சங்களுடனும் அட்லாண்டிஸ் என்ற தீவு நகரம் சுமார் 11000 ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்ததாக கிரேக்க ஞானி ப்ளேட்டோ கி.மு.360ல் கூறினார். மிக சக்தி வாய்ந்த மனிதர்கள் வசித்த அந்தத் தீவில் எந்த இயற்கை வளத்திற்கும் குறைவிருக்கவில்லை. மனிதர்கள் அனைவரும் மிக அறிவாளிகளாகவும், குணசீலர்களாகவும் இருந்தனர். அவர்கள் வணிகம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் வரை நீண்டதென்றும் அவர்கள் அந்தக் கண்டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்கள் தங்கள் பண்புகளிலிருந்தும், அறிவார்ந்த செயல்களிலிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்த பின் அவர்களுடைய சிறப்பு குறைய ஆரம்பித்தது. சுயநலம், பேராசை, பொறாமை என்ற வழிகளில் அவர்களின் தவறுகள் மிக அதிகமாகிய போது அந்தத் தீவு கடலில் மூழ்கி அழிந்தது என்று சொல்கிறார்கள். பலரும் கற்பனை என்றும் கதை என்றும் நினைத்த அட்லாண்டிஸ் உண்மையில் இருந்தது என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கிறார்கள். அதையே அந்தக் குருவும் இங்கே சொல்கிறார்.)
“இங்கே வரும் எல்லா மனிதர்களுக்கும் இந்த இரகசியங்கள் விளக்கப்படுவதில்லை. ஆனால் உன் ஆர்வமும், விளக்கினால் புரிந்து கொள்ளப்படும் பக்குவமும் உனக்கு இருப்பதால் மட்டுமே உனக்கு இந்த இரகசியங்கள் விளக்கப்படுகின்றன”
பால் ப்ரண்டன் அடுத்த கணம் புவியீர்ப்பு விசை முழுவதும் தனக்கு அற்றுப் போவதை உணர்ந்தார். முழுவதுமாய் காற்றில் மிதப்பது போல இருந்தது.
“உன்னை ஒரு ரகசிய ஞான கருவூலத்திற்கு அழைத்துப் போகப் போகிறேன்….”
அப்படிச் சொன்னவுடன் பால் ப்ரண்டன் ஆர்வம் அதிகப்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்குச் செல்ல விரும்பினார் அவர். அந்தக் குருவின் ஆவி அதைப் படித்தது போல இருந்தது. “எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறது மகனே அவசரப்படாதே. வா என்னுடன்” என்றார் அந்த குரு.
அடுத்த கணம் பால் ப்ரண்டன் ஏதோ கோமாவில் இருப்பவர் போல தன் பெரும்பாலான உணர்வுகள் ஸ்தம்பித்தது போல் உணர்ந்தார். அடுத்ததாக அவர் நினைவு திரும்பிய போது அவர் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
பால் ப்ரண்டன் சென்றடைந்த பாதை மங்கலாய் ஒளிபடர்ந்ததாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்த போது விளக்கையோ, சன்னல்களையோ அவர் காணவில்லை. பின் எங்கிருந்து ஒளி வருகிறது என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை.
தன்னைப் பின் தொடர்ந்து வரும்படி அந்த மதகுருவின் ஆவி அவரிடம் சொன்னது. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் “பின்னால் மட்டும் திரும்பிப் பார்க்காதே. தலையைத் திருப்பாதே” என்றும் அவருக்குக் கட்டளையிட்டது. பால் ப்ரண்டனுக்கு அது பிரமிடுக்குள் உள்ள ரகசியப்பாதை என்று தோன்றியது. கீழ் நோக்கிச் சென்ற அந்தப் பாதையின் முடிவில் தூரத்தில் ஏதோ கோயில் போன்ற அமைப்புடைய வாயில் இருந்தது. அவர் பிரமிடுக்குள் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்திருந்தாலும் இந்தப் பாதையையும் தூரத்தில் தெரிந்த அந்தக் கோயில் வாசல் போன்ற ஒரு அமைப்பையும் அவர் பார்த்ததாக அவருக்கு நினைவில்லை. இந்த ரகசியப்பாதை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றறியும் ஆவல் அவருக்கு அதிகமாயிற்று. அந்த மதகுரு ஆவி சொன்னதைப் பொருட்படுத்தாமல் பின்னால் அவர் திரும்பிப் பார்த்தார். அந்த நீண்ட பாதையின் இறுதியில் நுழைவாயில் எதுவும் இருக்கவில்லை. ஏதோ ஒரு நுழைவிடம் போல் தெரிந்த இடம் சதுரமான கற்களால் மூடப்பட்டிருந்தது.
the-sphinx-at-gizacairo-in-egypt-
ஆனால் திரும்பிப் பார்த்ததன் தண்டனையாகவோ என்னவோ பால் ப்ரண்டனை ஏதோ ஒரு பெரும் சக்தி பின்னுக்கு இழுத்தது. அடுத்த கணம் அவர் உடல் கிடந்திருந்த அந்த ஆரம்ப இடத்திற்கே வந்து சேர்ந்தார். பால் ப்ரண்டன் திரும்பிப் பார்க்காதிருந்திருந்தால் அவர் ரகசிய ஞானக் கருவூலத்திற்கு சென்று காணும் பாக்கியம் கிடைத்திருக்கலாம். ஆனால் திரும்பிப் பார்த்த ஒரு தவறு அவரை அந்த வாய்ப்பை இழக்க வைத்தது.
தனது உடலைப் பார்த்தபடி இருந்த அவரை பெருத்த ஏமாற்றம் ஆட்கொண்டது. அந்த மதகுருவின் மெல்லிய குரல் அவருக்குத் தெளிவாகக் கேட்டது. “மகனே ரகசியப்பாதையின் வாசலை நீ காண்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. உன் மனதில் உள்ள ரகசிய ஞானக் கருவூலத்திற்கு உன்னை அழைத்துச் செல்லக் கூடிய ரகசியப்பாதையை நீ காண்பதே முக்கியம். இந்தப் பிரமிடின் ரகசியம் உன் ஆத்மாவின் ரகசியமே. உன் ஆத்மாவில் எல்லா ரகசியங்களும் புதைந்துள்ளன. பிரமிடு சொல்வதெல்லாம் மனிதனை தனக்குள்ளே கவனத்தைச் செலுத்தச் சொல்வது தான். அவன் இதுவரை அறிந்திராத அவனுக்குள் உள்ள மையப்புள்ளியில் அவன் ஆத்மரகசியத்தை அறிவதன் மூலம் அனைத்து ஞானத்தையும் பெறவே மனைதனைப் பிரமிடு வலியுறுத்துகிறது. போய் வருகிறேன்”
ஏதோ ஒரு சக்தி பால் ப்ரண்டனை அவருடைய உடலுக்குள் பலமாக ஈர்க்க அவர் மறுபடியும் தன் உடலுக்குள் நுழைந்தார். மரத்துப் போயிருந்த உடலை சிறிது சிறிதாக உணர ஆரம்பித்தார். இருள் சூழ்ந்திருந்த பிரமிடின் அந்த அறைக்குள் தனியாக அவர் இருப்பதைக் கண்டார். மதகுருவின் ஆவியைக் காண முடியவில்லை. இருட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிந்த நிலையும் போயிற்று.
அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவர் டார்ச்சைத் தேடி எடுத்து போட்டுப் பார்த்த போது எல்லாம் அவர் முன்பு விட்டுப் போயிருந்த நிலையிலேயே இருந்தன. கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். மணி சரியாக பன்னிரண்டு. பொழுது புலரும் வரை தன் அனுபவங்களைக் குறித்து பால் ப்ரண்டன் சிந்தித்தபடி இருந்தார். பொழுது புலர்ந்து போலீஸ்காரர் வந்து அவரை அழைத்துக் கொண்டு போய் வெளியே விட்டார்.
மதகுரு கடைசியில் பால் ப்ரண்டனிடம் சொன்ன அறிவுரை, நம் நாட்டில் உபநிஷத்துக்கள் சொல்லும் அறிவுரையே என்பது நம் ஆன்மீக நூல்களைப் படித்தவர்களுக்கு விளங்கும். The End.
Research Articles on Egypt written by London swaminathan in this blog:–

Did Indians Build Egyptian Pyramids? (Posted on 27 August 2012)
Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda (Posted on 26 September 2012)
Hindu Gods in Egyptian Pyramids (Posted on 16 September 2012)
Vishnu in Egyptian Pyramids (Posted on 5 September 2012)
Vedas and Egyptian Pyramid Texts (Posted on 29 August 2012)

Why did Sumeria and Egypt worship Indra? (Posted on 14 September 2014)
Vedic Echo in Sumer and Egyptian Concept of Dreams ( Posted on 31 July 2015)
Flags:Indus Valley – Egypt Similarity (Posted on 15 October 2012)
Human Sacrifice in Indus Valley and Egypt (Posted on 31-10-2012)
Magic in Hindu,Sumer, Egyptian Cultures (Posted on 2 August 2015)
Mata and Pita in Egyptian Religion (Posted on 17 November 2014)
More Tamil and Sanskrit Names in Egypt (Posted on 15 November 2014)
Hindu Mudras in Ancient Egyptian and Sumerian sculptures (posted on 7-10-2012)
Tirumular in Egyptian Pyramids (in Tamil Egiptil Tirumular Karuththukkal posted on 23-11-2013)
எகிப்தில் திருமூலர் கருத்துக்கள் ( 23 நவம்பர் 2013)


புரூஸ்லீயை கொன்றது யார்?



புரூஸ்லீயின் மரணம் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஆனால் எல்லாமே அமானுஷ்யமும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும். அதில் மிகசிறந்ததும் எனக்கு பிடித்ததும் வைரத்தூள் கதைதான். புரூஸ்லீயைக் கொல்ல அவருடைய மனைவியே மோதிரத்திலிருந்த வைரத்தை பொடிபண்ணி பாலில் கலந்து கொடுத்ததாகவும், அதை குடித்ததால்தான் புரூஸ்லீ இறந்துபோனதாகவும் மிகபிரபலமான ஒரு கதை உண்டு. 

புரூஸ்லீயை கொல்வது அவ்வளவு சுலபம் கிடையாது. அவர் ஷூட்டிங்கில் நிஜமாகவே அடித்ததில் நிறையபேர் இறந்து போயிருக்கிறார்கள், அவர் ஒரு மாபெரும் பலசாலி, உக்கிரமானவர், துப்பாக்கி குண்டால் கூட அவர் உடலை துளைக்கமுடியாது என்றெல்லாம் பல கதைகள்! அதனால்தான் அவரை கொல்வதற்காக வைரத்தை பொடி பண்ணி உணவில் கலந்துகொடுத்து, அந்த வைரத்தூள் கூட அவருடைய இதயத்தில் சிக்கியதால் உண்டான மூச்சடைப்பால்தான் புரூஸ்லீ இறந்துபோனார் என்பதாக அந்தக் கதை விரியும். 

எல்லாமே பொய்தான் என்றாலும், சுவாரஸ்யமான காஸ்ட்லியாக கேட்கும் போது துள்ளலாக உணரவைக்கிற கதைகள் அவை. புரூஸ்லீ பற்றிய எல்லா தகவல்களுமே இதுபோன்ற ஃபேன்டஸி தன்மை நிறைந்ததாகவே கேள்விப்பட்டிருக்கிறேன். 
முழுதாக நடித்தது, நான்கே நான்கு படங்கள்தான். அவை எல்லாமே மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சாதாரண படங்கள். ஆனால் நான்கே படங்களில் பல கோடி ரசிகர் சாம்ராஜ்யத்தை தனக்கென உருவாக்கியவர் புரூஸ்லீ. அவர் இறந்தபின்பும்கூட, இன்றுவரை அவருக்கென பிரத்யேக ரசிகர் பட்டாளம் தினம் தினம் உருவாகிக் கொண்டேயிருக்கிறது. 
புரூஸ்லீக்கு பிறகு ஏகப்பட்ட தற்காப்புக்கலை பயின்ற, சப்பைமூக்கு நடிகர்கள் ஹாங்காங்கிலிருந்தும், ஹாலிவுட்டிலிருந்தும் உருவாகிவந்தாலும், புரூஸ்லீ அடைந்த புகழில் ஒரு சதவீதத்தை கூட அவர்களால் நெருங்க முடியவில்லை. (ஜாக்கிசான் நீங்கலாக) 
புருஸ்லீயின் பாதிப்பு நம்மூர் ரஜினி தொடங்கி, இதோ இப்போது வந்த தனுஷ் வரைக்கும் கூட தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ’பொல்லாதவன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்த யாரும், தனுஷின் உடலில் புரூஸ்லீயை கண்டிருக்க முடியும். கோலிவுட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் இது தொடர்கிறது. ’குங்பூ ஹஸில், ஷாவலின் சாக்கர்’ படங்களை எடுத்த ஸ்டீபன் சாவ் கூட தன் படங்களில் இன்றுவரை தொடர்ந்து புரூஸ்லீக்கு மரியாதை பண்ணுகிறார். தாய்லாந்து நடிகரான டோனிஜா தன் படங்களின் திரைக்கதையில் புரூஸ்லீ பட பாணியை தொடர்ந்து புகுத்துவதை உணர்ந்திருக்கலாம்!

புரூஸ்லீ சிறப்பாக நடிக்க கூடிய நடிகரெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் அவருடைய படங்களில் அவர் நடித்ததை விட அடித்ததுதான் அதிகம். அப்படியிருக்க இத்தனை ரசிகர்களை கவரும்படி புரூஸ்லீ என்னதான் செய்துவிட்டார்? இவருடைய வெற்றி எதிர்பாராததா? காக்காய் உட்கார விழுந்த பனம்பழமா புரூஸ்லீயின் வெற்றி? புரூஸ்லீயின் மரணத்திற்கு பின்னாலிருந்த புதிர் என்ன? புரூஸ்லீயின் பாணி இன்றுவரை தொடர்கிற சூட்சமம் என்ன? என ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கிறது அபிலாஷ் எழுதியுள்ள ‘’புரூஸ்லீ - சண்டையிடாத சண்டைவீரன்'’ என்கிற புத்தகம். 
தமிழில் வெளியாகிற பயோகிராஃபி புத்தகங்கள் எல்லாமே ஒரே மாதிரியானவை. பக்திப் படங்களில் ஒரு பாணி உண்டு. எந்த கடவுள் ஹீரோவோ அவருக்கு சகல சக்திகளும் கிடைத்துவிடும். அது விநாயகராக இருக்கலாம் அல்லது முருகனாக இருக்கலாம், சிவனாக இருக்கலாம்... படத்தில் யார் கடவுளோ அவரைத்தான் மற்ற கடவுளர்கள் விழுந்து வணங்கி வழிபடுவார்கள். அவர் மட்டும்தான் உலகை காப்பாற்றுவார். நம்முடைய தமிழ் பயோகிராஃபி புத்தகங்களை வாசிக்கும்போதும் இதை உணரலாம். யாரைப் பற்றின புத்தகமோ, அவரால்தான் அவரால் மட்டும்தான் உலகைக் காப்பாற்ற முடியும் என்கிற உணர்வு! புத்தகம் முழுக்க தனிமனித வழிபாடு மிதமிஞ்சியிருக்கும். 
யாருடைய வரலாறோ, அவருடைய பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே தொடர்ந்து முன்வைக்கிற புத்தகங்களே நமக்கு படிக்க கிடைத்திருக்கிறது. ஒருவருடைய வாழ்க்கை வரலாறு என்பதே நமது சுயமுன்னேற்றத்திற்காக படிக்க கூடியதாகவே இருந்து வந்திருக்கிறது. ஒரு ஆளுமையின் எல்லா பக்கங்களையும் கோட்பாட்டு ரீதியிலும், தத்துவரீதியிலும் ஆராய்கிற புத்தகங்கள் நம்மிடம் ரொம்பவே குறைவு…!

புரூஸ்லீயின் வாழ்க்கையை பற்றிய அபிலாஷின் இந்த புத்தகம் இவைகளுக்கு நேர்மாறானதாக இருக்கிறது. புரூஸ்லீயின் பாசிட்டிவ் பக்கங்களைச் சொன்னாலும், நமக்குத் தெரியாத புரூஸ்லீயின் பலவீனங்களையும் சமரசமின்றி விமர்சிக்கிறது. 
புரூஸ்லீயின் மரணத்துக்கு காரணமான கஞ்சாப்பழக்கம், அவருக்கிருந்த பெண்கள் தொடர்பு, புகழால் உண்டான காமவேட்கை, சிறுவயதிலிருந்து இருந்த மற்றவர்களை பொதுவில் வைத்து அசிங்கப்படுத்தி பார்க்கிற கிறுக்குத்தனம், தோல்வியைக் கண்டு அஞ்சி நடுங்குகிற உள்ளுணர்வு, மீடியாவை சமாளிக்க முடியாமல் திணறியது, தன்னுடைய வெற்றிக்காக நண்பர்களை பயன்படுத்திக்கொண்டு, தூக்கி எறிகிற குணம் என பல விஷயங்களையும் பட்டவர்த்தனமாக முன்வைக்கிறது. 
"கடுமையாக உழைத்தால், வெற்றி நிச்சயம்" என்கிற ஒன்லைன்தான் புரூஸ்லீயின் கதையும். சிறுவயதிலிருந்து சண்டைக்காரனாக வளர்ந்து, குங்பூவால் மனதை ஒருநிலைப்பட்டுத்திக்கொண்டவர் புரூஸ்லீ. அவர் முழு சீனர் கிடையாது. ஜெர்மனிய வம்சாவழி தாய்க்கும், சீனருக்கும் பிறந்தவர். அதனாலேயே அவர் தன் வாழ்க்கை முழுக்க எந்த அடையாளமும் இன்றி வாழ வேண்டியிருந்தது. அமெரிக்காவில் மிகுந்த சிரமங்களுக்கு நடுவே, ஒரு ஆசியனாக பல்வேறு புறக்கணிப்புக்களுக்கு நடுவே வாழ்ந்து, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, முதல் வாய்ப்புக்காக போராடிதான் வெற்றிபெற்றுள்ளார் புரூஸ்லீ! ஆனால் எந்த வெற்றிக்காக வெறித்தனமாக உழைத்தாரோ, அதே வெற்றியைக் கண்டு அஞ்சி நடுங்கி, அதிலிருந்து விடுபட போதைப் பழக்கத்துக்கு ஆளாகி மாண்டுபோனதுதான் புரூஸ்லீயின் கதை. 

புரூஸ்லீ வெறும் குங்பூ கலைஞன் கிடையாது. குங்பூவும் வெறும் தற்காப்புக் கலை கிடையாது. குங்பூ எப்படி சீனக்கலாச்சாரத்தின் பிரதிபலிப்போ, ஒரு தத்துவத்தேடலோ அதைப்போலவேதான் புரூஸ்லீயும்! தன் வாழ்க்கை முழுக்க வாழ்தலின் களிப்பையும், உன்னத்ததிற்கான தேடலையும் கொண்டிருந்த ஒரு அற்புத கலைஞனாக வாழ்ந்திருக்கிறான். திரைப்படங்களில் நாம் பார்த்தா! அசகாய சூரனான புரூஸ்லீக்கு அப்பால் குங்பூவை உயிராக நேசித்த ஒரு சாதாரண இளைஞனான புரூஸ்லீயை இப்புத்தகத்தில் தரிசிக்க முடிகிறது. 
குங்பூவை கற்றுக்கொண்டதோடு நிறுத்திக்கொள்ளாமல், உலகின் மற்ற தற்காப்புக்கலைகளையும் படிக்கிற வெறியோடு திரிந்திருக்கிறார் புரூஸ்லீ. தன்னுடைய குங்பூவில் குத்துசண்டை தொடங்கி ஜூடோ வரைக்கும் பல்வேறு அடவுகளை புகுத்தியிருக்கிறார். (அது என்னென்ன? எப்படி என்பதையெல்லாம் புத்தக்கத்தில் விரிவாக படங்களுடன் விளக்கியிருக்கிறார் அபிலாஷ்). அதோடு சீனர்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த குங்பூவை இன்று வடபழனி வரைக்கும் பரப்பியதும் புரூஸ்லீதான்! 

ஒரு நல்ல தற்காப்பு கலைஞன் ஏதோ ஒரு கலையை அதன் தன்மையோடு கற்றுக்கொண்டு முடங்கிவிடக்கூடாது. அவன் மற்ற தற்காப்புகலைகளையும் தனக்கு உள்வாங்கிக்கொண்டு அனிச்சையான உணர்வோடு சண்டையிட வேண்டும் என்கிற கொள்கையைக் கொண்டிருந்தார் புரூஸ்லீ. தன்னுடைய ’கேம் ஆஃப் டெத்’ படத்தின் திரைக்கதையை அந்த நோக்கத்திலேயே அமைந்திருந்தார் லீ. 
சினிமா இயக்கப் போகிறோம் என்று முடிவானதும், முதலில் புரூஸ்லீ செய்தது சினிமா குறித்து வெறித்தனமாக வாசிக்க ஆரம்பித்ததுதான்! அதை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடியதுதான். தனக்கான வாய்ப்புகளை தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்புடன் இருந்திருக்கிறார். முதுகுவலியால் அவதியுற்றபோது, ஓரு ஆண்டுக்கு குங்பூ பயிற்சியை தொடர முடியாமல் போகிறது. அந்த நேரத்தில் தொடர்ந்து நிறைய புத்தகங்கள் வாசித்து தனக்காக ‘’ஆழ்மன அமைதியை’’ அடையும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். 
ஒருநாளும் தன்னுடைய மனதின் சமநிலை குலையாத வண்ணம் வாழ்ந்தவர் புரூஸ்லீ. அதுதான் அவருடைய ஆற்றலை அதிகமாக்கவும், அதைக் கட்டுப்படுத்தி சரியான நேரத்தில் வெளிப்படுத்தவும் வைக்கிற ஒன்றாக மாற்றியது. 
ஆனால் தன்னுடைய முதல் மூன்று படங்களில் கிடைத்த திடீர் புகழும் எக்கச்சக்கமான பணமும், அவருடைய வாழ்க்கை முறையை சிந்தனைகளை புரட்டிப்போட்டிருக்கிறது. அவருடைய சமநிலை குலைந்ததும் அங்குதான். அதுவரை இருந்த புரூஸ்லீக்கு முற்றிலும் எதிர்மறையான ஒருவனாக அவரை வெற்றி மாற்றிவிடுகிறது. அவர் சில்லறைத்தனமான சண்டைகள் போடுபவராக, பொறாமையும், வஞ்சகமும் நிறைந்தவராகவும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைக் கண்டு அஞ்சி, நல்லவர், கெட்டவர் என்று இனம் பிரிக்க முடியாமல், அனைவரையும் வெறுத்து தனிமையில் சிக்கிகொள்கிறார். 
அவர் வெற்றியைக் கண்டு அஞ்சுகிறார். அது அவரை கொன்றுவிடும் என்பதை உணர்கிறார். அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள தொடர்ந்து கஞ்சா பிஸ்கட்டுகளை தின்கிறார். ’என்டர் தி டிராகன்’ படம் எடுக்கப்படும்போது, அது தன் உச்ச நிலையை அடைகிறது. அப்படத்தின் டப்பிங் வேலைகளின் போதே, மூளையில் நீர்கோர்த்து மரணத்தின் வாயிலை நெருங்கிவிட்டு திரும்புகிறார். 
ஆனால் குணமான பின்னும், கஞ்சா பழக்கத்தை விடமுடியாமல் தொடர்கிறார். அதுதான் அவருக்கு எமனாகியிருக்கிறது. புரூஸ்லீ இறந்த தினத்தில் நடந்த சம்பவங்கள் கூட ஒரு திரைப்படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸின் திரைக்கதையை ஒத்திருக்கிறது. 
தன் காதலியின் வீட்டுக்குச் செல்லும் புரூஸ்லீ தலைவலிக்காக சாப்பிடும் ’EQUAGESIC’ என்கிற மருந்துதான் எமனாகிறது. அவர் அரை உயிராக கிடக்கும்போதே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருந்தால், அவரை காப்பாற்றியிருக்கக் கூடும். ஆனால் வளர்ந்து வரும் நடிகையான புரூஸ்லீயின் கள்ளக்காதலியோ, அந்த நேரத்தில் புரூஸ்லீயை தன் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் பத்திரிக்கைகள் ஏடாகூடமாக எதையாவது எழுதநேரிடும். அது தன் வளர்ச்சியை பாதிக்கும் என அரைமணிநேரம் தாமதப்படுத்துகிறார். கடைசியில் புரூஸ்லீயின் நண்பர் ரேமன்ட் சாவ் என்பவரை போனில் அழைத்து வரச்சொல்கிறார். 
ஆனால் ரேமன்ட் சாவ் அன்றைய தினம் ஹாங்காங்கின் டிராபிக்கில் மாட்டிக்கொள்கிறார். அன்று அந்நகரை ஒரு புயல் கடக்கிறது. அனைத்தையும் தாண்டி ஒருவழியாக புரூஸ்லீயை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. புரூஸ்லீ இறந்துபோகிறார். புரூஸ்லீ இறந்தபின்பும் அவருடைய மரணம் குறித்து, பல்வேறு புனைவுகளை தொடர்ந்து ஊடகங்கள் உருவாக்கின. 
வாழ்க்கையே குங்பூதான் என்று வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை அக்கலை குறித்து கொஞ்சம் கூட தெரியாமல் அணுகவே முடியாது. இந்தப் புத்தகத்தில் புரூஸ்லீ கற்றுக்கொண்ட ’வின்சூன்’ என்கிற குங்பூ பாணிகுறித்த விளக்கமான அறிமுகத்தைத் தருகிறார் நூலின் ஆசிரியர். அதோடு புரூஸ்லீயின் குருவான யிப்மேன் பற்றியும், அவர் புரூஸ்லீயின் வாழ்க்கையை எப்படி பாதித்தார் என்கிற தகவல்களும் புத்தகம் முழுக்க கிடைக்கிறது. புரூஸ்லீயே உருவாக்கிய ’ஜீத்கூனேடூ’ என்கிற முறை குறித்தும் நிறைய விளக்கங்கள் புத்தகம் முழுக்க வருகிறது. 
புத்தகத்தின் பெரிய குறை அபிலாஷின் அடர்த்தியான மொழி. எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்கிற முனைப்பு. சில விஷயங்களை இன்னும் சுறுக்கமாக சொல்லியிருக்கலாமோ என்கிற எண்ணம் எழுகிறது. நிறைய எழுத்துப்பிழைகளும், சில இடங்களில் தவறான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. புத்தகத்தை உருவாக்க கடுமையாக உழைத்தவர், இந்த சின்னச் சின்ன பிரச்சனைகளையும் சரிசெய்து அவற்றை தவிர்த்திருக்கலாம். மற்றபடி இது ஒரு மிகமுக்கியமான முயற்சி. 
புத்தகத்தை படித்து முடிக்கும் போது ‘’வெற்றி’’ என்கிற ஒன்றைப்பற்றிய நம்முடைய சகல நம்பிக்கைகளையும் தகர்த்தெறிகிறது,