செவ்வாய், 4 டிசம்பர், 2018

உலக மண் தினம்! டிசம்பர் 5


உலகளாவிய ரீதியில் மண்ணின் மகத்துவத்தினை அறியும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதியான உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.
World Soil Day: 5 December 2018

பாறைகள் சிதைவடைவதன் விளைவால் உருவாகின்ற நுண்ணிய துகள்கள் மண் எனப்படுகின்றது. மண் உருவாக்கத்தில் பிரதானமாக இரு படி முறைகள் காணப்படுகின்றன. மூலப்பாறைகள் வானிலையால் அழிதல் காரணமாக உடைவடைந்து துகள்களாக மாற்றமடைகின்றன. மேலும் நீர் வாயுக்கள், உயிர்வாழ் அங்கிகள், சிதைவடைந்த சேதன பொருட்களின் சேர்வைகள் இவ்வாறான பல காரணிகளின் செயன்முறையினால் மண் உருவாக்கப்பட்டு விருத்தியடைகிறது.

ஒரு பிரதேசத்தின் மண்ணின் அமைப்பு தன்மை முதலியவற்றைக் கொண்டே தான் அப்பிரதேச விவசாய நடவடிக்கைகள் இடம்பெறுமென்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முன்னேற்றத்துக்கு விவசாயம் முதுகெலும்பு. அந்த விவசாயத்துக்கு முதுகெலும்பாக திகழ்வது மண். உலகில் ஜீவ ராசிகளின் வாழ்க்கைக்குப் புகலிடமாகவும் இருக்கிறது. மண்ணை உயிரற்ற பொருள் என கருது கிறோம். அது தவறு என்கின்றனர் விவசாய வல்லுநர்கள்.

“மண்ணுக்கும் உயிர் உள்ளது. சுவை, நிறம், மணம் உள்ளது. மழை பெய்தால் மணம் வீசும், கையில் எடுத்தால் மற்றொரு மணம் வீசும். நிறத்தின் அடிப்படையில் செம்மண், கரிசல், வண்டல் என மண்ணில் பலவகைகள் உள்ளன. பூமியில் 2.5 செமீ அளவு மண்ணை உருவாக்க இயற்கை 10 ஆயிரம் ஆண்டுகள் நெடிய போராட்டம் நடத்த வேண்டும்” என்கின்றனர். இவ்வளவு பெரிய உழைப்பு தேவைப்படும் மண்ணை, மனிதன் எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும். இந்த மண் வளத்தைப் பாதுகாக்கவும், உறுதி செய்யவும் இதனை விவசாயிகள், மக்களுக்கு நினைவுப்படுத்தவும் ஆண்டு தோறும் டிசம்பர் 5-ம் தேதி உலக மண்வள தினமாக கடைபிடிக்கப் படுகிறது.

மண்ணினால் மனிதர்களுக்கு ஏற்பட்டு வரும் நன்மைகளும் சாதகங்களும் எண்ணற்றவை, ஆனால் மனிதனது சில செயற்பாடுகளால் மண் இன்னமும் அழிவடைந்து செல்கின்றமை இடம்பெற்ற வண்ணமேயுள்ளது என்பது உண்மையான கருத்தாகவே காணப்படுகிறது.


இயற்கையான மண்ணில் பாஸ்பரஸ், சுண்ணாம்பு, இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற கனிம சத்துக்கள் உள்ளன. இன்றைய நிலையில் பெரும்பாலான நிலங்கள் சத்துக்களை இழந்து, நச்சுகளால் விவசாயம் முடங்கியுள்ளது. வேளாண் அதிகாரிகள், இழந்த சத்துக்களை மீண்டும் மண்ணில் சேர்க்க பல்வேறு வழி முறைகளை சொல்லிவருகின்றனர். மண்ணில் இருக்கும் வளத்தை அதிகரித்து, பாதுகாக்க வேண்டும் என்பதையே மண்வள தினம் உணர்த்துகிறது. மண்ணில் சத்துக்கள் குறைந்துவிட்டதால், மழை நீர் நேரடியாக மண்ணுக்குள் இறங்காமல் வழிந்தோடுகிறது.இதனால், மண்ணின் அனைத்து சத்துகளும் பறிபோய், மலட்டுத்தன்மையை பெற்று வருகிறது. இந்நிலை வராமல் இருக்க விவசாயிகள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். மண்ணில் உள்ள நுண்ணுாட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுவாக மண்ணில், 16 வகை நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இவற்றை பாதுகாப்பதே மண் தினம் கொண்டாடுவதன் நோக்கம்.

‘மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை, மனிதன் மீது மண்ணுக்கு ஆசை, மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது, இதை மனம்தான் உணர மறுக்கிறது’ என்ற பாடல் நம்மை தாங்கி நிற்கும் மண்ணின் மகத்துவத்தைப் பறைசாற்றுகிறது. பஞ்சபூதங்களில் ஒன்றான நிலத்தின் ஆதாரமாக விளங்கும் மண்ணின் முக்கியத்துவம், அதன் வளம், மனிதனின் வாழ்வில் மண்ணின் பங்கு, மண் இன்றி மனிதன் இல்லை ஆகியவை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.

மண்ணில் 25 சதவீதம் காற்று, 25 சதவீதம் நீர், 45 சதவீதம் உலோகப் பொருட்கள், 5 சதவீத அங்ககப் பொருள்கள் அடங்கியுள்ளன. மேல் பரப்பில் சுமார் 2.5 செ.மீ. ஆழத்தில் காணப்படும் டாப் சாயில் உருவாக சுமார் ஆயிரம் ஆண்டுகளாகும். மேல்மண் மிகவும் வளம் வாய்ந்தது. விவசாயம் செழிப்படையச் செய்கிறது.

மேல் மண்ணின் தன்மையைப் பொறுத்தே பயிர் விளைச்சல் அமைகிறது. சுமார் ஒரு கிராம் மேல்மண்ணில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள், பூஞ்சைக் காளான்கள், பல லட்சம் ஆக்டினோமைசீட்ஸ் நுண்ணுயிரிகள் உள்ளன. இந்த நுண்ணுயிரிகள் பெரும்பாலும் நமக்கு நன்மை புரிகின்றன.

மண்ணின் தன்மை அறிந்து பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தற்போது மண் ணின் முக்கியத்துவம் உணராமல் பாழ்படுத்துவதில் முனைப்பு காட் டப்படுகிறது. மண்ணுக்கும், மனிதனுக்கும் இடையே சில வேறுபாடுகள்தான் உள்ளது.

மண்ணுக்கும் உயிர் உண்டு. மனித உடலில் நடைபெறும் பல்வேறு வகையான வினை சார்ந்த செயல்களான செரிமானம், சுவாசம், வெப்பநிலை வேறுபாடு போன்றவை மண்ணிலும் நடைபெறுகின்றன. எண்ணிலடங்கா உயிரினங்களின் ஆத்மாக்களின் கலவைதான் மண். பெற்றோரின் குணாதிசயங்களை மனிதன் பிரதிபலிப்பது போல, பாறையின் குணாதிசயத்தை மண் பிரதிபலிக்கிறது.

மனித உடலில் உள்ள செரிமான சக்தியைப் போல், மண்ணில் பிளாஸ்டிக் தவிர்த்து அனைத்து பொருட்களும் செரிமானம் அடைந்து உருமாற்றம் பெறுகிறது. மனிதன் காற்றை சுவாசித்து கார்பன்-டை- ஆக்சைடை வெளியிடுவது போல மண்ணிலும் நடைபெறுகிறது. மனிதன் உடல் பெரும்பாலான பகுதி நீரால் நிரப்பப்பட்டது. மண்ணில் நான்கில் ஒரு பங்கு நீர் உள்ளது.

மண் சிந்தனை ஏதுமின்றி தன்னாலான பங்களிப்பை உலகுக்கு வழங்கி வருகிறது. மனிதர்களால் பல்வேறு இடையூறுகளை சந்தித்த போதிலும், எந்தவித வேறுபாடும் காட்டாமல் மனிதனை தாங்கி நிற்கிறது மண். மண் நிரந்தரமானது. நாட்டின் முன்னேற்றத்துக்கு, மேம்பாட்டுக்கு மரங்கள் மட்டுமின்றி மண் வளமும் இன்றியமையாதது.

இதை உணர்ந்தே நமது மூதாதையர்கள் மரங்களோடு இணைந்து, மண் வளம் நிரம்பிய நிலங்களில் பயிர் சாகுபடி, அங்கிருந்து பெற்ற தரமான உணவுகளை உட்கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தினர். அந்த மகிழ்வான வாழ்வு மீண்டும் வர வேண்டும். மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டும்.

இந்த மண்ணில் பிறந்து, மண்ணில் விளையாடி மண்ணில் வீடுகட்டி, மண்ணில் விளைந்த உணவை உண்டு வளர்ந்து, கடைசியாக இறந்த பின்னும் இந்த மண்ணிலே மக்கிப் போகக் கூடிய நாம் தற்போது மண்ணைப் பற்றி, சிந்திக்க வேண்டிய கடமையை ஐக்கிய நாடுகள் சபை நமக்கு அளித்திருக்கிறது. எனவே மனிதனின் பேராசை மற்றும் பொறுப்பற்ற தன்மையால் மண் தொடர்ந்து தனது வளத்தை இழந்து வருகிறது. விருப்பு, வெறுப்பு இல்லாமல் மனிதனை தாங்கி நிற்கும் மண்: இன்று உலக மண் தினம் எனவே மண் வளத்தை பாதுகாக்க நாமும் முற்படுவோம்

வியாழன், 15 நவம்பர், 2018

வகாபி அடிப்படைவாதம் என்ற அமெரிக்க கள்ளக் குழந்தை!

வகாபிய அடிப்படைவாதத்தை உருவாக்கியது மேற்குலகமே ! சவுதி இளவரசர் ஒப்புதல் !

வகாபி அடிப்படைவாதம் என்பது அமெரிக்காவின் கள்ளக் குழந்தைதான் என்பதற்கு மற்றுமோர் சான்றாவணமாகியிருக்கிறது, சவுதி இளவரசரின் சமீபத்திய பேட்டி!


கூட்டத்தில் தனது கட்டுச் சோற்றை அவிழ்த்துள்ளார் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான். அதில் மொத்த மேற்குலகமும் நாறிவிட்டது. அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள சவுதி இளவரசர், அங்கு வாசிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது வகாபி அடிப்படைவாதத்தின் பரவல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள இளவரசர், பனிப் போர் காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சோவியத் ரசியாவை எதிர் கொள்வதற்காக வகாபியத்துக்கு சவுதி நிதி உதவி அளித்தது என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்.
வகாபி அடிப்படைவாதம் என்பது அமெரிக்காவின் கள்ளக் குழந்தை என்பதை முன்பே சில கட்டுரைகளில் நாம் சுட்டிக் காட்டியிருக்கிறோம். எனினும், “கரட்டாம்பட்டி பஞ்சாயத்துத் தலைவருக்கு தும்மல் வந்தாலும் இவர்கள் (வினவு) அதில் அமெரிக்க சி.ஐ.ஏ சதியை தேடிக் கொண்டிருப்பார்கள்” என்கிற ரீதியில் சங்கிகள் அக்கட்டுரைகளின் மறுமொழிகளில் பொங்கியிருந்தனர். உண்மையில் வகாபி அடிப்படைவாதத்தை தாமே உருவாக்கியதாக அமெரிக்க அதிபர் கார்ட்டரின் அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்த ப்ரெசென்ஸ்கி (Zbigniew Brzezinski) ஒப்புக் கொண்டிருக்கிறார்.

1998-ம் ஆண்டு ப்ரெசென்ஸ்கி அளித்த பேட்டி ஒன்றில் ஆப்கானில் நிலை கொண்டிருந்த சோவியத் படைகளுக்கு எதிராக முஜாஹித்தீன்கள் போரிட அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களில் ஒன்றுதான் வகாபி அடிப்படைவாதக் கோட்பாடு என்பதைக் குறிப்பிட்டிருந்தார். சொல்லப் போனால் சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்து அமெரிக்காவுடன் பனிப்போரில் ஈடுபட்டிருந்த சோவியத் யூனியனை ஆப்கான் விவகாரத்தில் கால் வைக்க தூண்டில் போட்டதும், அதன்படி ஆப்கானில் நுழைந்த சோவியத் படைகளுக்கு எதிராக முஜாஹிதீன்களை தயாரிக்கும் திட்டமும் அமெரிக்காவால் மிக கவனமாக தீட்டப்பட்டதை ப்ரெசென்ஸ்கி ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜியா-உல்-ஹக்குடன் இணைந்து சோவியத் எதிர்ப்புப் போராளிகளை இசுலாமியமயமாக்கும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தியது. இதற்காக முஜாஹிதீன் போராளிகளுக்கு பாகிஸ்தான் மதரஸாக்களில் மதக் கல்வி அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் திட்டம் வெற்றியடைந்தாலும், அதன் பின்விளைவாக ஆப்கான் என்கிற நாடே சீர்குலைந்து போனது. அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட வகாபி தத்துவங்களின் அடிப்படையில் அந்த நாட்டின் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்ட முஜாஹிதீன்கள், ஷரியா சட்டங்களை அமல்படுத்தி பெண்களின் உரிமைகளை நசுக்கி அழித்தனர்.


என்னதான் அமெரிக்காவின் கள்ளக் குழந்தையாகத் தோன்றியிருந்தாலும், தான் வளர்ந்த பிற்போக்கான நிலவுடைமைக் கலாச்சார சூழல் மற்றும் அதன் சித்தாந்தக் கண்ணோட்டம் வகாபியத்தை தன் போக்கில் வளர்த்துச் செல்லத் துவங்கியது. ஒரு கட்டத்தில் – அதாவது சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் – வகாபியத்தை அதற்கு மேலும் வழிநடத்த வேண்டிய தேவையில் இருந்து கை கழுவிக் கொண்டது அமெரிக்கா. தொடர்ந்த பத்தாண்டுகளில் சுயேச்சையாக வளர்ந்த வகாபியம் தனது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள மேற்கத்திய லிபரல் கலாச்சாரத்திற்கு எதிரானக் கூறுகளை வரித்துக் கொண்டது. இதன் போக்கில், மேற்குலகை எதிர்க்கும் அரசியலுக்கு வந்து சேர்ந்தது. இதன் தொடர் விளைவு இரட்டை கோபுரத் தகர்ப்பாக அமெரிக்காவின் தலைமீதே விடிந்தது.

இரட்டை கோபுரத் தகர்ப்பை தனது உலக வல்லாதிக்கத்திற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. செப்டெம்பர் 11 நிகழ்வைத் தொடர்ந்து எண்ணை வளம் மிக்க மத்திய கிழக்கு நாடுகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள தானே உருவாக்கிய – தனக்கே எதிராக கிளம்பிய – அதே வகாபி பயங்கரவாதப் பூச்சாண்டியைப் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. ஈராக் ஆக்கிரமிப்பு, ஆப்கான் ஆக்கிரமிப்பு துவங்கி தற்போது சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் வரை “இசுலாமிய பயங்கரவாதமே” அமெரிக்காவின் ஆதிக்கப் போர்களின் திரைக்கதையில் மிக முக்கிய பாத்திரமாற்றி வருகின்றது.

இந்தச் சூழல் மற்றும் பின்னணியில்தான் சவுதி இளவரசரின் பேட்டியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பக்கம் தனது தந்தையும், தற்போதைய மன்னருமான சல்மானை விட தன்னை லிபரலாக காட்டிக் கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறார் இளவரசர் முகமது. அதே சமயம், சவுதியின் வெளியுறவுக் கொள்கையை கடந்த நான்கு பத்தாண்டுகளாக தீர்மானித்துக் கொண்டிருக்கும் வகாபி அடிப்படைவாதம் என்கிற வேண்டாத சுமையையும் சுமக்க வேண்டியுள்ளது. என்னதான் லிபரலாக தன்னைக் காட்டிக் கொண்டாலும், இவர் அப்பனுக்குத் தப்பாத சர்வாதிகாரி என்பதை கஸோகி கொலை விவகாரம் அம்பலப்படுத்திக் காட்டியது.

எனவே லிபரல் சர்வாதிகாரியாக உருவாகி வரும் முகமது பின் சல்மான், வகாபி பாவத்தில் தங்களுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் பங்கு இருப்பதைக் குறித்து பேசுவதன் மூலம் மேற்குலகிற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதாவது, கசோகி கொலை உள்ளிட்ட தனது சர்வாதிகார நடவடிக்கைகளைக்  கண்டு கொள்ளாமல் விட்டால், ”நாகரீக” மேற்குலகின் அழுக்குகளும் வெளியாகாமல் இருக்கும் என்பதே அது.

புதன், 14 நவம்பர், 2018

அரசு, அரசியல், அரசாங்கம், நீதிமன்றம், உரிமைகளற்ற மக்கள்!

தோழர்களே, நண்பர்களே


நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல! 

The country is run by the people; Not by a man!


ஆனால் தற்போதைய உலக ஒழுங்குமுறையின் நலன்சார் அரசியலும், மாற்றங்களையும் கொஞ்சம் உய்த்தறிய வேண்டும். பத்து வருடங்களாக என் வலைதளத்தில் பதியப்பட்ட கட்டுரைகளும், பகிர்வுகளும் மாற்றுச்சிந்தனைகான பார்வைகளையும், பாதைகளையுமே வலியுறுத்துகின்றது! 






தொடர்ச்சி.... மறுகாலனியாக்கத்தின் விளைவாக அரசுக் கட்டமைப்பு, அரசாங்கம், அவற்றின் அதிகாரங்கள், நீதிமன்றம், தேர்தல், அரசியல் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்தும், அரசியலிலிருந்து மக்கள் மென்மேலும் விலக்கி வைக்கப்பட்டு அரசியலற்றவர்கள் ஆக்கப்படுவது குறித்தும் அதிகமாக சிந்திப்பீர்கள். ஓரளவு அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் பகுத்தறிவார்கள் என்று நம்புகிறேன். இந்த ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை இனிவரப்போகும் கட்டுரை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவுகிறது. 

இங்கே நிறங்களுக்காக கட்சி மோதல்களில் ஈடுபடும் தலைமைகள் சிறிதேனும் மக்களை சிந்திப்பதே இல்லை. சிறுபான்மை மக்கள் தக்க வைக்கும் அரசியல் கதிரைகளுக்கான கறிவேப்பிலைகள். இங்கே அக்கறைகளும், அன்புகளும் அதிகம் இருப்பின் இன்னும் அரசியல் கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருக்க மாட்டார்கள். பேரம் பேசுவதற்கும் பேரினவாத முன்மொழிவுகளுக்கும் தனிநிரல் கொள்கைகள் உண்டு. 

முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறும் நிலையில், கார்ப்பரேட் கொள்ளையர்களே அரசு, அரசாங்கம் இரண்டையும் தீர்மானிக்கும் நிலையிலும், இலங்கையின் விதி ஏகாதிபத்தியங்களால் எழுதப்படும் நிலையில் ஒட்டுமொத்தமாக இன்று நாடு இருக்கும் நிலையில் அதை மாற்றும் கடமையும் நமக்கிருக்கிறது. இதன் பொருட்டு அரசியல் ரீதியில் நாம் செயல்படவேண்டிய கடமையையும் இந்த கட்டுரை வேண்டுகிறது. வாருங்கள், இணைந்து செயல்படுவோம்!

சாராம்சமாக சொன்னால், தனது ஆதிக்கத்திற்கும் பெருக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள ‘தேசிய’ அரசு, தேசங்களின் ‘இறையாண்மை’, அவற்றின் சட்டங்கள் ஆகியவற்றைத் தகர்ப்பதுடன், இத்தகைய தேசிய அரசுகளுடன் சேர்த்து கட்டியெழுப்பப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தகர்த்து நொறுக்கி வருகின்றது சர்வதேசியமயமாகிவிட்ட ஏகாதிபத்திய நிதிமூலதனம்.  மேல்நிலை வல்லரசுகளின் வெளிப்படையான தலையீடுகள்  ஆக்கிரமிப்புகள் ஆகியவை ஒருபுறமிருக்க, உலகப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான சர்வதேச நிறுவனங்கள் என்றழைக்கப்படும் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளின் ஆணைகளுக்கு ஆடும் அரசாகவே, இலங்கை அரசும் அதன் சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களும் மாற்றப்பட்டுள்ளன.

மேல்நிலை வல்லரசுகள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் அதிகார வர்க்கங்களாலும் தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழிற்கழங்களின் நிர்வாகிகளிலும் சர்வதேச நிதிமூலதன கும்பல்களாலும் முதலாளித்துவ வல்லுனர்களாலும் நிரப்பப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள்தான் (எந்த மக்களாலும் இவை தேர்ந்தெடுக்கப்படுவதில்லை) உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெரிதும் பீற்றிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகத்தை, அதன் அரசை, கட்டுப்படுத்துகின்றன, ஆட்டுவிக்கின்றன.

மறுகாலனிய சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதாரம் எப்படி பன்னாட்டு தொழிற்கழகங்கள் மற்றும் சர்வதேச நிதிமூலதனத்தின் நலனுக்கேற்ப தனியார்மயம் தாராளமயம், உலகமயத்துக்கு உட்படுத்தப் பட்டுள்ளதோ, அதேபோல்தான் நம் நாட்டிலும். இவைகளின் நலன்களுக்காகவும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்கத்திற்காகவும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் அரசுக் கட்டமைப்புக்குள்ளும் புகுத்தப்படுகின்றன. அதன் கட்டுமானம், சட்டங்கள், விதிமுறைகள், பணிகள், செயல்பாடுகள் எல்லாம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ‘ஜனநாயக’ அரசமைப்பின் கட்டுமானங்களிலும் அதன் நடைமுறைகளிலும் முதலாளித்துவ சந்தையின் விதிகள் புகுத்தப்பட்டு அவை மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் முதலாளித்துவ சந்தையின் விதிகளே ஜனநாயகத்தின் விதிகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

அரைகுறை இறையாண்மையையும் இழந்து வருகின்ற இலங்கையில் நிலவுகின்ற  அல்லது மாற்றி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற  போலி ஜனநாயகம் கூட அதன் உள்ளடக்கத்தை முற்றிலுமாக இழந்து வருகின்றது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, மக்களைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பது ஓட்டளிப்பதாக மட்டும் வெட்டி குறுக்கப்பட்டு விட்டது. அதுவும் கூட, ‘தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் நாட்டு நலன், மக்கள் நலன் கருதி, விருப்பப்பட்டு, எந்தவித நெருக்குதலுமின்றி சுதந்திரமாக சுயேச்சையாக தனியார்மய  தாராளமய கொள்கைகளை மேற்கொண்டு வருகின்றன’ என்று காட்டி மறுகாலனியாதிக்கத்திற்கு நியாய உரிமை பெறுவது என்ற காரணத்திற்குத்தான் மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

பிராந்திய தேச வரலாற்றை பின்னோக்கினால் இந்தியா ஆங்கிலேயர்களின் நேரடி காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த காலகட்டத்தில், விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கும், எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும் பதவிகளில் ஒட்டிக் கொண்டு சலுகைகளை அனுபவிக்கவும் பொறுக்கித் தின்பதற்கும் விழைந்த நாட்டுப்பற்று அற்ற பிழைப்புவாத கும்பல்களை ஊக்குவிக்கவும் மேலிருந்து திணிக்கப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகம். காலனியாதிக்கத்தை கட்டிக் காக்க ஆங்கில ஏகாதிபத்தியவாதிகளின் கிரிமினல் மூளையில் உதித்த இந்த சாணக்கிய திட்டம் வெற்றிகரமாகவே நிறைவேறிற்று என்று சொல்ல வேண்டும். காலனிய காலம் தொடங்கி 1950களின் தொடக்கத்தில் திணிக்கப்பட்ட நவீன காலனிய ஆதிக்க காலகட்டத்தில் செழித்து வளர்ந்த அரசியல் பிழைப்புவாதமும் சீரழிவும் 1980, 1990களில் அதன் உச்சத்தை எட்டியது. தனிக்கட்சி ஆட்சி போய் கூட்டணி ஆட்சிகள், கட்சித் தாவல்கள், கூட்டணிகள் உடைவது, அரசாங்கங்கள் கவிழ்வது, புதுக்கூட்டணி, புது அரசு, சில மாதங்கள் வருடங்களுக்குள் மீண்டும் கட்சி தாவல்கள், அரசுகள் கவிழ்வது என்று நாடாளுமன்ற அராஜகம் தலைவிரித்தாடியது.

மேல்நிலை வல்லரசுகளின் தோற்றம், நிதிமூலதனம் சர்வதேசியமயமானது, தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழில் கழகங்கள், அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி, ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி ஆகியவைகளின் விளைவாக நவீன காலனியாதிக்கம் அகற்றப்பட்டு மறுகாலனியாதிக்கம் இந்த காலகட்டத்தில்தான் புகுத்தப்பட்டது. சர்வதேச வலைப்பின்னல்களால், ஒரே சங்கிலியால் கட்டப்படிருந்த நிதி மூலதனத்தின் செயல்பாடுகளுக்கும் தேசங்கடந்த தொழில்கழகங்களுக்கும் நாடாளுமன்ற அராஜகமும் நிலையற்ற ஆட்சிகளும் எதிரானவை; எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தடைபோடுபவை; எனவே, அவற்றை ஒழிக்க வேண்டியது அவர்களுக்கு அவசியமும் கட்டாயமும் ஆகியது. இதற்கேற்பவே மறுகாலனியாதிக்க நலன்களுக்காகவே நிலையான ஆட்சி, சிறந்த அரசாளுமை என்ற முழக்கங்களை முன்வைத்துள்ளனர். நிதிமூலதனம், பன்னாட்டு முதலாளிகளின் தனியார்மய சுரண்டலும் ஆதிக்கமும் தங்கு தடையின்றி நடப்பதற்கு ஏற்ற நிலையான ஆட்சி, சிறந்த ஆளுமை, வலுவான ஆட்சி (failed state ஆக இல்லாமல்) ஆகியவையே தேர்தல் மற்றும் ஜனநாயகத்தின் ஒரே இலக்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேர்தல் என்பது, ஏகாதிபத்தியத்தின் பிள்ளைப்பருவத்தில் அதாவது 20-ம் நூற்றாண்டின் துவக்க பத்தாண்டுகளில், நேரடி காலனியாட்சி பிரதான வடிவமாக இருந்த காலகட்டத்தில், கம்யூனிச, தேசிய இயக்கங்கள் ஏற்றம் பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், நேரடிக் காலனிய ஆட்சியைப் பாதுகாக்க ஏகாதிபத்தியவாதிகளால் புகுத்தப்பட்டது. அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டங்களை நீர்த்துப் போக செய்வதற்கும் எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும், பதவிகளில் ஒட்டிக் கொண்டு அரசு சன்மானங்களை பொறுக்கித் தின்னவும் சலுகைகள் கௌரவங்களை அனுபவிக்கவும் நாட்டுப்பற்று அற்றுப் போகும்படியான பிழைப்புவாத கும்பல்களை உருவாக்கவும் ‘ஜனநாயக தேர்தல் அரசியலைப்’ புகுத்துவது ஏகாதிபத்தியங்களின் நலனுக்கு உகந்ததாக இருந்தது. இன்று ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான அரசியல், பொருளாதார வளர்ச்சிப் போக்கின் விளைவாக மேல்நிலை வல்லரசுகள்  அவற்றின் மேலாதிக்கம், ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் சீரழிவு காரணமாக கம்யூனிச தேசிய இயக்கங்கள் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள உலக நிலைமை ஆகியவற்றின் காரணமாக, மறுகாலனியாதிக்க முறையிலான காலனிய ஆட்சி வடிவத்தை மேலாதிக்க வல்லரசுகள் பிரதானமாக கையாண்டு வரும் நிலைமையில் ஜனநாயகமும் தேர்தலும் வெட்டி சுருக்கப்பட்டு பரந்துபட்ட மக்கள் அரசியலில்  இருந்தே விலக்கி வைக்கப்பட்டு வருகின்றனர்.

‘தேர்தல் அரசியல்’ சீரழிவின் விளைவாக பல்கிப் பெருகி பேயாட்டம் போடுகின்ற பிழைப்புவாதக் கும்பல்கள் நாடாளுமன்ற அராகஜம் ஆகியவற்றினால் பாதிக்கப்படாமல், சட்டமன்றங்கள்  நாடாளுமன்றங்களுக்கு இதுவரையிலிருந்த வரம்புக்குட்பட்ட சட்டமியற்றும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களையும் பறித்துக் கொண்டு அவற்றை வெறும் ‘நீயா, நானா’ விவாத மன்றங்களாக்கி விட்டு, அந்த மன்றங்களுக்கு வெளியே எல்லா அதிகாரங்களையும், கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களின் கூலி வல்லுனர்கள், அதிகார வர்க்கத்தினர் நம்பகமான அரசியல் அடிவருடிகள் ஆகியோரைக் கொண்ட குழுக்களிடம் ஒப்படைக்கும் வகையில் அரசின் கட்டமைப்பும் அதன் செயல்பாடுகளும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் இன்னொரு பக்கமாகத்தான், எப்படியும் பணம் சம்பாதித்து உல்லாசமாக வாழவேண்டும் என்கின்ற நெறியின்மையிலும், நுகர்வு வெறியிலும், போதையிலும் சீரழிவிலும் மக்களை ஆழ்த்துவதும்,  கிரிக்கெட் திரைப்படம்செல்போன் போன்ற மோகங்களால் மட்டுமே ஆட்டுவிக்கப்படுகின்ற, தேசப்பற்றோ, கொள்கை  இலட்சியங்களோ அற்ற நடமாடும் பிண்டங்களாக மக்களை மாற்றுவதும் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகின்றது. காலனிய கட்டத்தில் தேர்தல் அரசியலைப் பகுத்தி மக்களைச் சீரழித்த ஏகாதிபத்தியம், மறுகாலனிய கட்டத்தில் மக்களை அரசியல் அற்றவர்களாகவும், அரசியலின்மீதே அருவெறுப்பு கொண்டவர்களாகவும் மாற்றி வருகின்றது. அரசியல் பச்சோந்தித்தனம், பச்சையான அம்மணமான, வெட்கம் மானம் ஏதுமற்ற பிழைப்புவாத அரசியல் தகிடுதத்தங்களால் வெறுப்பின் எல்லைக்கே சென்று, யாராவது நல்லவன் வந்து ஏதாவது நல்லது செய்ய மாட்டானா என எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து, மக்களது மனம் இறுகி விட்டது. ஓட்டை ஒரு சரக்காக கருதும் மனநிலைக்கு கருத்து ரீதியாகவே அவர்கள் வந்து விட்டார்கள். அல்லது யார் அதிக பொருட்களும் இலவசங்களும் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டை விற்கத் தயாராக இருக்கிறார்கள். “நீ எனக்கு பதவி தா; நான் உனக்கு மிக்சி, கிரைண்டர், மடிக்கணினி தருகிறேன்” என்று பகிரங்கமாக ஓட்டை விலைபேசுவதாக தேர்தலே மாறியிருக்கிறது.

“நல்லவன் ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும்; ஆனால் அது எங்கே நடக்கப் போகிறது?” என்று நொந்து கொள்வது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைத்தால் நாமும் பணக்காரனாகி விட வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் மீதான மாயையும் இல்லை; ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அது அரசியல் ரீதியில் காலாவதியாகிவிட்டதா என்ற கேள்விக்கும் இடமில்லை. ஏனென்றால், அந்த வேலையை மறுகாலனியாதிக்கவாதிகள் செய்து விட்டனர்.


நிறைவேற்றப் போகும் புதிய ஜனநாயகப் புரட்சி மட்டும்தான் இந்த சின்னஞ்சிறு தேச மக்களின் எதிர்காலம். அந்த எதிர்காலத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்! 

செவ்வாய், 13 நவம்பர், 2018

யார் அந்த ஏழு பேர் ? நடிகர்களின் சமூக அறிவையும் பொது அறிவையும் நினைத்தால் குலை நடுங்குகிறது.

ஜாதிப் பின்புலத்தால் கிடைக்கப் பெறும் அதிகார அனுகூலங்களோடு பிறந்தவள் அல்ல எனது தங்கை…பொருளாதார பின்புலத்தால் வாய்க்கப் பெற்ற வசதிகளோடு பிறந்தவளும் அல்ல….ஆனால் அவள் தமிழினத்தின் தியாகியாய் வரலாற்றில் நிலைபெற்றிருக்கிறாள்…அது 300 கோடியில் எடுக்கப்படும் மிக பிரம்மாண்ட படத்தால் உருவாகும் வரலாறு அல்ல.. இவளிடம் கேள் யார் அவர்கள் என்று சொல்வாள்...!

மனிதத்தின் எல்லையை
ஒடுக்கப்பட்டோரின் அரசியல் வலிமையை
எளியவர்களின் அரசியல் புரிதலை
“தீ மூட்டிக் கொண்டு சொன்ன வரலாறு”

அடுத்தவர்க்காய் கண்ணீர் சிந்துதல் அறம்
அடுத்தவர்க்காய் உயிர் மாய்த்தல் ..பேரறம்…

அவள் வாழ்ந்திருக்க வேண்டும்…
ஆனால் தேதி குறிக்கப்பட்ட ஏழு தமிழரின் சாவு தடுக்க வழியறியாதவளாய்…
அப்பாவி தமிழர்களின் தாயாக மாறி
அவர்களுக்காய் தீ மூட்டிக் கொண்டாள்..

இருபது வயதில் செங்கொடி அம்பேத்கரைப் படித்திருந்தாள்
பெரியாரைப் படித்திருந்தாள்
மார்க்ஸை படித்திருந்தாள்
சே வை படித்திருந்தாள்
பிரபாகரனை படித்திருந்தாள்

அவள் அரசியல் படுத்தப்பட்டிருந்தாள்…எந்த ஏழு பேர் என்று கேட்ட உனது கேள்வி..
அவளின் தியாகத்தை கொச்சைப்படுத்தவில்லை.. உனது அரசியல் போதாமையை
அரைவேக்காட்டுத் தனத்தை அம்பலப்படுத்தி விட்டது… நேரமிருந்தால் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்திற்கு வந்து விட்டு போ ரஜினி..உன்னை விட பல மடங்கு அரசியல் தெளிவும் முதிர்ச்சியும் பெற்ற எனது தங்கை அங்கே உறங்கிக் கொண்டிருக்கிறாள்..

வா அவளின் நினைவிடம் வந்து நின்று விட்டு போ…தெளிவு பெறுவாய்…..


தமிழர்களின் வாழ்வும், உணர்வும், விடுதலையும் தெரியாத உங்களை தமிழர்கள் நாங்கள்; “யார் நீ” என்றே மீண்டும் மீண்டும் கேட்போம்.

தமிழகத்தை ரட்சிக்க வந்த நடிகர்களின் சமூக அறிவையும் பொது அறிவையும் நினைத்தால் குலை நடுங்குகிறது.

ஏழு பேரின் விடுதலை பற்றிக்கேட்டால் ”எந்த ஏழு பேர்?’’ என்று கேட்கிறார் ரஜினி காந்த். அதில் இருக்கும் அலட்சியமும் அறியாமையும் மலிவானது. பரிதாபத்திற்குரியது. இந்த அறியாமைமிக்க அகம்பாவம்தான் தூத்துக்குடி துப்பாகிச் சூடு பற்றிய பேச்சிலும் இருந்தது இப்படிக் கேட்பதில் ரஜினிக்கு எந்தக் கூச்சமும் இல்லை. 25 வருடங்களாக இடையறாது ஒட்டு மொத்த தமிழகமும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையை என்ன பிரச்சினை என வேற்றுக்கிரக வாசிபோல ரஜினி கேட்கிறார்.

ரஜினியின் முதலமைச்சர் போட்டியாளரான கமல் போன வருடம் நீட் பிரச்சினையில் தமிழகம் பற்றி எரிந்தபோது “ பள்ளிப் படிப்பை முடிக்காத தனக்கு நீட்”டின் கொடுமை புரியவில்லை’’ என்று கூலாக கூறினார்.

இவர்களுக்கெல்லாம் முன்னோடி விஜய காந்த். 2014-ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜய காந்த் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பியபோது “தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பீர்களா… என்னமாதிரியான பிரச்சினைகளை பேசுவீர்கள்?’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் சொன்ன விஜயகாந்த், ’’நான் இப்போதுதான் சென்னைக்கு வந்து இறங்கியிருக்கிறேன்… இங்கே என்ன பிரச்சினை நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. கடந்த ஒருமாத காலமாக நான் தமிழ் பேப்பர் படிக்கவில்லை. தமிழ் டிவி சேனல்களும் பார்க்கவில்லை. வீட்டிற்கு போய் டிவி பார்த்துவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன் ’’ என்றார்.

இவர்களுக்கெல்லாம் மூத்த நடிகரான அரசியல் தலைவர் ஒருவர் இருந்தார். எம்.ஜி.ஆர். அவரது அரசியல் உரைகளை யாராவது தேடி எடுத்து படித்துப்பாருங்கள். தலை சுற்றும். அவரது அண்ணாயிஸத்தை கட்டுடைக்க முடியாமல் தமிழ்கூறும் நல்லுலகே திகைத்து நின்றது. நல்லவேளை அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லை.. இருந்தால் முதன்மையான மீம்ஸ் கதாநாயகனாக எம்.ஜி.ஆரே இருந்திருப்பார்

இந்த அலைவரிசையில்தான் விஜய்யின் சர்காரில் வெளிப்பட்ட இலவசங்களுக்கு எதிரான பேத்தல்கள். நடிகர்கள் நாடாள வந்தால், வர விரும்பினால் என்ன நடக்கும் என்பதற்கு இதெல்லாம் ரத்தம் கக்கவைக்கும் உதாரணங்கள்.

தூக்குமர நிழலில் நின்றவர்களை மீட்டு சிறையில் நிழலில் நிற்க வைத்தது வரை ஒரு சமூகத்தின் பயணம் இதில் இருக்கிறது.

அற்புதம்மாள் என்ற பெண்ணின் உழைப்பும் அலைச்சலுமே, இந்தியாவில் மரண தண்டனை தொடர்பான விவாதத்தை கூர்மையாக்கியது. சதா நேரமும் தண்டனைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் ஒரு தண்டனையின் தீவரத்தை, வன்மத்தை, அதன் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக குலைத்துப் போட்டவர் அற்புதம்மாள்.

அது இந்தியாவில் பல நூறு மரணதண்டனை கைதிகளின் விடுதலைக்கு வழி வகுத்தது. எங்கள் சூப்பர் ஸ்டார் அற்புதம்மாள்தான். காரணம் கோடிகளில் பணம் பெறாமல் தனியொரு மனுஷியாக தமிழ் சமூகத்தில் நின்று சாதித்துக் காட்டியவர் அவர்.

உங்களுக்கு தெரியாமல் போனதில் வியப்பேதும் இல்லை ரஜினி. இதே குணத்தோடு இப்போதேனும் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் அவ்வளவே!
————-

காந்தியைச் சுட்ட நாலாவது குண்டு யாருடையது?

நாலாவது குண்டு யாருடையது?

அவரைக் கண்டுபிடித்தபோது அவரிடம் அதே பெரட்டா ரக துப்பாக்கி இருந்தது. அதன் பதிவு எண் 719791. ஆனால், அதே பதிவு எண்ணில் குவாலியரைச் சேர்ந்த உதய் சந்த் என்பவரிடமும் ஒரு துப்பாக்கி இருந்துள்ளது. காந்தியின் உயிரைப் பறிக்க காரணமாக இருந்த அந்த நான்காவது குண்டு, பதிவு எண் 606824 மற்றும் 719791 ஆகிய இரண்டு துப்பாக்கிகளில் இருந்தும் வந்தது அல்ல என்று 48-ம் ஆண்டு வெளிவந்த போலீஸ் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


மும்பாய் ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு;

மகாத்மா காந்தியை கோட்சேவைத் தவிர வேறு யாரும் சுடவில்லை என்று நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அம்ரேந்தர் ஷரன் விளக்கம் அளித்துள்ளார்.
தேசப்பிதா காந்திஜி கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கோட்சே, நாராயணன் ஆப்தே ஆகியோருக்குக் கடந்த 1949 நவ.15ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றச்சாட்டு நிரூபணமாகாததால் சந்தேகத்தின் அடிப்படையில் சாவர்கர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் , காந்தியின் மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறி ‘அபினவ் பாரத்’ அமைப்பின் அறங்காவலர் பங்கஜ் குமுத்சந்த் பத்னிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், காந்தி மீது 4 குண்டுகள் பாய்ந்ததாகவும், அதில் 3 குண்டுகள் கோட்சோவால் சுடப்பட்டது என்றும், 4வது குண்டு யாருடையது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த நான்காவது குண்டுதான் காந்தி உயிரிழக்கக் காரணமாக அமைந்தது. இதில் வெளிநாட்டுச் சதி அடங்கியுள்ளது. இது குறித்து மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகாத்மா காந்தி கொலை வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் படித்து இந்த மனு மீதான விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் அம்ரேந்தர் ஷரனை நியமித்தது.
அவர் ஆவணங்கள் முழுவதையும் படித்து, இன்று (ஜனவரி 8) உச்ச நீதிமன்றத்தில் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

அதில், மர்ம நபர் சுட்ட 4வது குண்டுதான் காந்தியின் உயிரைப் பறிக்கக் காரணம் என்று வீர் சாவர்கரின் தொண்டர் என்று தன்னைத் தானேக் கூறிக் கொள்பவரும், அபினவ் பாரத் நிறுவனருமான பங்கஜ் பட்னிஸ் கூறுவது போல, காந்தி மீது 4 குண்டுகள் பாய்ந்தது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.
1948ம் ஆண்டு காந்தி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போது பதிவு செய்யப்பட்ட சுமார் நான்கு ஆயிரம் பக்கங்களையும் ஆய்வு செய்த அம்ரேந்தர் ஷரன் தலைமையிலான குழுவினர், இந்தக் கொலையில் வெளிநாட்டுத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என்றும் அக்குழு உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.

பேரழிவை உண்டாக்க காத்திருக்கும் Disease X


Disease X இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தான் இதை பற்றி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இவை இதுவரை கண்டுபிடிக்க படாத ஒன்று ஆனால் தாக்குவதற்கான அபாயம் அதிகம் உள்ள ஒரு பரவும் நோயாகும். இதுவரை உலகில் பல உயிர் சேதங்களை உண்டாக்கிய நோய்கள் அனைத்தும் விலங்குகளிடம் இருந்து தான் மனிதனுக்கு பரவியது. முன்பெல்லாம் இவை இயற்கையாக உருவாகின என்று தான் அனைவரும் நம்பினோம். ஆனால் வியாபாரமாகிப்போன மருத்துவமே இதற்கு காரணமாக இருக்குமோ என்று நம்மை நினைக்க வைக்கிறது. இன்னும் சொல்ல போனால் மருந்து நிறுவனங்கள் நோய்களை குணப்படுத்துவதை காட்டிலும் தங்களின் பொருட்களை விற்க நோயாளிகளை உருவாக்குகின்றனர். இது மறுக்க முடியாத உண்மை. அனைத்தும் வியாபாரமாகிப்போன இந்த காலகட்டத்தில் நோய்களையும் நோயாளிகளையும் உருவாக்குவதன் மூலம் மேலும் சம்பாரிக்க இயலும். இது தான் கசப்பான உண்மை. இங்கு நோய்கள் தானாக உருவாகவில்லை. அவை உருவாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. சரி வாருங்கள் இந்த Disease X பற்றி என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம். இந்த Disease X பெரிய அளவில் பரவும் நோய் மேலும் அதிக அளவு உயிர்சேதத்தை உண்டு பண்ணும் திறன் கொண்டது. Spanish flu போன்று எளிதில் பரவும் தன்மை கொண்டது. மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இதை பற்றிய ஆராய்ச்சிகள் தீவிரமாக உள்ளன. இந்த ஆராய்ச்சிகளில் புதிய வைரஸ் Myanmarese  வௌவ்வால்களில் கண்டுபிக்கப்பட்டுள்ளது. இவை corona வைரஸ் குடும்பத்தை சார்ந்தவை. இந்த குடும்பத்தை சேர்ந்த வைரஸ்கள் தான் ஏற்கனவே பெரும் உயிர்சேதத்தை உண்டு செய்தது. ஒன்று சார்ஸ் வைரஸ் இது எளிதில் பரவும் தன்மை கொண்டது. இன்னொன்று மெர்ஸ் வைரஸ். 35% உயிர் சேதத்தை உண்டு பண்ணும் திறன் கொண்டது.


 "எங்களுடைய நோக்கம் எளிதில் பரவும் மற்றும் அதிக அளவு உயிர் சேதத்தை உண்டு பண்ணும் வைரஸ்களை விலங்குகளிடமிருந்து கண்டுபிடிக்க வேண்டும். இது ஆசியா அல்லது ஆப்பிரிக்காவில் உருவாக்கலாம் ஏனென்றால் அங்கெல்லாம் மனிதர்கள் அசுர வேகத்தில் சுற்றுசூழலை அளித்துக்கொண்டுள்ளனர். மனிதர்களுக்கு நெருக்கமாக அமைந்துள்ள காடுகளில் இதுபற்றிய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. காடுகளை அழித்து சாலைகளை அமைப்பது போன்ற காரணங்களால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன்காரணமாக விலங்குகள் காடுகளை விட்டு வெளிவருகின்றன. இதன் காரணமாக காட்டு விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு அதிகரிக்கிறது என வன விலங்கு கால்நடை மருத்துவர் Marc Valitutto தெரிவித்துள்ளார். நவம்பர் 16 ம் தேதி லண்டனில் நடைபெறும் கண்காட்சியில் Disease X பற்றிய தகவல்கள் இடம் பெறுகின்றன. இதை பற்றி அவர்கள் குறிப்பிடுள்ளதாவது    "அடுத்த உயிர்கொல்லி நோய் மனிதர்களை தாக்கி பெரிய அளவில் உயிர்சேதத்தை உண்டுபண்ணும். இதற்கு முன் உலகில் பரவிய மற்ற நோய்களை போன்று இதுவும் எளிதாய் பரவும் தன்மை கொண்டது. இந்த நோய் எதன் மூலம் பரவும் என்று யாருக்கும் தெரியாது. இதற்காக லண்டன் தயாராக உள்ளது. இதற்கு முன்னர் பல நோய்களை இது போன்று பரவியுள்ளன. 18ம் நூற்றாண்டில் பரவிய சின்னம்மை  20% உயிர்சேதத்தை உண்டு பண்ணியது. பின்னர் தடுப்புசிகளின் உதவியோடு முழுவதும் அளிக்கப்பட்டது. இதே போல தான் காலரா நோய்க்கும் குணப்படுத்தப்பட்டது. இதில் நாம் தான் வெற்றி அடைந்தோம் இது போல  இந்த நோயையும் சமாளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disease X - மனித குலத்தின் மாபெரும் அச்சுறுத்தல்

28,000 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட சிலை ( கல்ப விக்ரஹம் )

கல்ப விக்ரஹமும் மர்மங்களும்
விக்ரகத்துடன் கூடிய கையெழுத்து பிரதியினை, அதில் இருந்த வாசகத்தை அதன் அர்த்தத்தை அறிய CIAவிற்கு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆனது. இந்த பணியில் இந்தியாவை மற்றும் நேபாளத்தை சேர்ந்த ஊழியர்களும் இணைந்து பணியாற்றினார். வரலாற்றுக்கு அப்பாற்பட்ட அந்த மொழி சமஸ்க்ரிதம் தொடர்பு உடையது வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியர்களின் மொழியாக இருக்கலாம் என கணித்த வரலாற்று அறிஞர்களும் சரித்திர அறிஞர்களும் முடிவு செய்தபின் இறுதியாக அந்த கையெழுத்து பிரதியில் உள்ள வாசகத்தினை அறிந்து கொண்டனர், அது அந்த விக்ரஹத்தின் பெயரை சுட்டுவதாக இருந்தது.
கல்ப மகா ஆயுஷ்யம் ரசாயன விக்ரஹா
CIAதனது கோப்பில் கல்ப விக்ராஹமாக சுருக்கி குறிப்பிட்டது,
இனி அந்த கல்ப விக்ரஹத்தின் அமைப்பு பற்றி சற்று பார்ப்போம். பித்தளை போன்ற ஒரு வித உலோகத்தில் செய்யப்பட்ட இந்த சிலையின் எடை வெறும் 47.10 கிராம் மட்டுமே, சிவனை போல தோற்றமுடைய ஒற்றை காலை மடக்கி உள்ள தோற்றத்தில் காணப்படும் அந்த சிலையின் தலை பகுதியில் பாம்பினை கொண்டதாகவும், கழுத்தினால் ருத்ராக்ஷத்தினை போன்ற மாலை அணிந்தவராகவும், தனது வலக்கரத்தில் வட்ட வடிவ ஒன்று அநேகமாக சுதர்ஷன சக்ரம் போன்ற ஆயுதம் தாங்கியும் உள்ளார். மற்றும் ஒரு கையில் சங்கும் கனமான வட்டு போன்ற ஒன்றை கொண்ட நிலையில் அந்த சிலை உள்ளது .5.3 சென்டிமீட்டர் உயரமும் ,4.7 சென்டிமீட்டர் உயரமும் அதன் அடிப்பகுதி 2.5 சென்டிமீட்டர் நீளமும், 1.7 சென்டிமீட்டர் அகலமும் மட்டுமே உடைய கொண்ட இவ்வளவு சிறிய சிலை மிக பாதுகாப்பாக இந்த பேழையினுள் வைக்க பட்டு இருக்கிறது எனில், அது உண்மையில் மகத்துவம் மிகுந்ததாக இருக்க வேண்டும். அதன் மகத்துவம் என்ன CIA ஆர்வம் கொண்டது
இது குறித்த அனைத்து ஆவணங்களையும் தன்வசம் எடுத்து கொண்டது .CIA அங்கே கல்ப விகரகம் குறித்த அனைத்து ஆவங்களும் ஸ்டோர் ரூமில் இருந்ததற்கான மற்றுமாய்வு குறித்த அனைத்து ஆவணங்களும் மறைக்கப்பட்டது.
மற்றுமொரு ஓய்வு பெற்ற CIA அதிகாரியின் ரகசிய வாக்குமூலத்தின் படி CIAவின் ரகசிய சோதனைகள் நடைபெறும் இடமான langley virginiya வில் இது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டதாக கூறுகிறார் .அந்த ஆய்வு கூடங்களில் பல அசாத்திய ஆய்வுகள் நடை பெறுவதாகவும் கூறுகிறார் அந்த அதிகாரி.
மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் மிக முக்கியமானது நீர் ஆய்வு. ஒரு நாளைக்கு ஒரு டம்பளர் வீதம் மூன்று நாட்கள் கல்ப விக்ரகம் இருந்த நீரினை அருந்த வேண்டும். CIA வின் ஆய்வுகளில் இது மிக முக்கியமானதாக கருத்தப்பட்டது .அவ்வாறு அருந்துவது மூலம் ரசாயன கல்ப விக்ரகம் எந்த மாற்றத்தை ஏற்படுத்த போகிறேதென அதிகாரிகள் ஆர்வம் கொண்டிருந்தனர். அதே போல கல்ப விக்ரகம் இருந்த நீரினை ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி அத்தனை சோதனை செய்து மாற்றங்கள் குறித்து அறிந்து ஆர்வம் கொண்டிருந்தார் CIA இயக்குனரான ஜான் மேக்கோன்.
ஒன்பது பேர் அடங்கிய நீர் குழுவானது இந்த நீரை சந்தேகத்திற்கு இடமேர்ப்படாத வகையில் ,பொதுமக்களுக்கு வயது வித்தியாசமின்றி அருந்த சொல்லி சோதனையை மேற்கொண்டனர். பெரும்பாலும் கவனக்குறைவாக பலர் இந்த நீரை அருந்த வில்லை சிலர் சரியாக கடைபிடித்தனர்.
நீர் சோதனைகளை ஒருவழியாக சியா முடித்து கொண்டது இருந்தாலும் இது குறித்த முடிவுகள் பற்றி ஏதும் சரியாக அறியாத நிலையில், சில பல காலங்களுக்கு பிறகு டிசெம்பர் 2008 ஆம் ஆண்டு ஒரு தொலைபேசி உரையாடல் அனைத்தையும் வெளிக்கொணர்ந்தது. நீர் சோதனையில் ஈடுபட்ட ஒரு அதிகாரி இன்னொரு அதிகாரிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார் அவர்கள் சிறு உரையாடல் இங்கே தரப்பட்டுள்ளது பெயர் மாற்றங்களுடன்,
மேக் என்னை நினைவு இருக்கிறதா, கல்ப விக்ரகம் என அழைக்கப்பட்ட ஹிந்து சிலை நீர் குறித்த ஆய்வில் சில விஷயங்களை சொல்ல அழைத்ததாக கூறுகிறார்.
கென் நீ தான் என்னை அழைத்ததா ,ஓய்வு பெற்று 32 வருடங்களுக்கு பிறகு அந்த சிலை பற்றி சொல்ல என்ன இருக்கிறது ?நான் அதை மறந்து போய்விட்டேன் அது தொலைந்து விட்டதா அது குறித்து என்ன இருக்கிறது பேச,

கென் மைக்ரோபயாலஜிஸ்ட் நிபுணத்துவம் வாய்ந்தவர் .இவர் CIA வில் 1946 இல் இணைந்த வயது 38 தற்பொழுது கென்னின் வயது 100, மேக் வயதோ 98 இப்பொழுது கென் நீர் சோதனையை பற்றி நினைவு கூறுகிறார். மேக் தான் ஆய்வில் நீரினை கொடுத்தவர்களை பற்றிய விவரங்களை தனது பழைய நாட்குறிப்பு மற்றும் இன்னும் சில வற்றின் மூலம் கூறுகிறார் . பிறகு நேரில் சந்தித்து கொள்ளும் இருவரும் இது குறித்த அனைத்து விவரங்களையும் குழு நண்பர்களையும் விவாதிக்கிறார்கள் பிறகு அனைத்தையும் சரி பார்க்கும் போது அவர்கள் கண்ட மிக முக்கிய விஷயம் இந்த கல்ப விக்ரக நீரினை அருந்தியவர்கள் மிக நீண்ட காலம் ஏறத்தாழ நூறு வயதுக்கு மேல் வாழ்ந்து உள்ளனர். அதாவது கல்ப ரசாயன விக்ரகம் மனிதர்களை மிக நீண்ட காலம் வாழவைக்கும் சக்தி கொண்டது எனபது மேலும் அந்த விக்ரகம் CIA பிடியில் இருந்து கடத்தப்பட்டு இந்தியாவில் இருப்பதாக கூறப்படுகிறது ,அதன் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது... 


மேலும் அறிய...
Google Search : ST Circus Mustang - 0183

புதன், 31 அக்டோபர், 2018

கப்பல் படையும் தமிழர்களும்




கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவன் தமிழன். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.
கடலில் பயணம் செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?

காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. உலகின் முதல் கப்பலையும், கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும், அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.
கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்கு வருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசா வரும்.
ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும். ஆனால் இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம் கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.
இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்த போது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன. ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும், மக்களின் பண்பாடும், மொழியும் ஏதாவதொரு வகையில் தமிழின் தாகத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.
உதாரணம்:
தமிழா் - மியான்மர்.
சபா சந்தகன் - மலேசியா
ஊழன்,சோழவன்,வான்கர ை,ஒட்டன்கரை, ஊரு - ஆஸ்திரேலியா
கடாலன் - ஸ்பெயின்
நான்மாடல் குமரி - பசிபிக் கடல்
சோழா,தமிழி - மெக்ஸிகோ
திங்வெளிர் - ஐஸ்லாந்து
கோமுட்டி - ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதேபோல் தென்பசிபிக்மாகடல், ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்துபார்த்தால் அது 2500 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்றும், இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.
நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் உலகில் உள்ள கப்பல் மற்றும், கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன.

வெள்ளி, 26 அக்டோபர், 2018

போரா, சமாதானமா—உங்களை எப்படி பாதிக்கிறது

போர் என்பது என்ன?
“போர், கடவுளால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் உலக ஒழுங்கில் உள்ளடங்கிய ஒரு பகுதியாக இருக்கிறது. போரில்லாவிடில் உலகமானது சுறுசுறுப்பில்லாமல் பொருளாசையிலேயே ழூழ்கிவிட்டிருக்கும்.”—ஜெர்மன் தேசத்து படைத்துறை உயர்தரப் பணியாளர், ஹெல்முத் வான் மோல்ட்கி
“போரை அடக்குங்கள். இது இயற்கையின் வளர்ச்சியை அடக்க முயற்சிப்பது போலிருக்கும்.”—ஜோசப் P. கோபெல்ஸ், கருத்துப் பரப்பு மற்றும் தேசீய அறிவொளியின் நாசி அமைச்சர்.
“அரசியலின் ஒரு பாகம்”—ரஷ்ய தேசத் தலைவர், லெனின்.
“ஒரு ஆட்சியாளரின் ஒரே ஆராய்ச்சி. இராணுவ முன்னேற்பாடுகளை திட்டமிட வாய்ப்பை அளித்து அதை நிறைவேற்ற திறமையை அளிக்கும் ஒரு ஓய்வு நேரமாக மட்டுமே அவன் சமாதானத்தைக் கருத வேண்டும்.”—இத்தாலிய அரசியல் தத்துவஞானி, நிக்கல்லோ மக்காவல்வி.
சமாதானம் என்பது என்ன?
“இரண்டு யுத்த காலப்பகுதிகளுக்கிடையே வரும் ஏமாற்றத்தை அளிக்கும் ஒரு காலப்பகுதி.”—அம்ரோஸ் பியர்ஸ், அமெரிக்க தேசத்து பத்திரிக்கை எழுத்தாளர்.
“படைத்துறையை சார்ந்திராத ஆட்கள் எண்ணிக்கையில் அதிகமாயிருப்பதால் ஏற்படும், உயிர் வீரியத்தை இழந்த நிலைக்கு யுத்தம் பரிகாரமளிக்க முயலுகிறது.”—சிரில் கன்னாலி, இங்கிலாந்து நாட்டு விமர்சகரும் எழுத்தாளரும்.
“ஒரு கனவு, அழகான ஒன்று இல்லை.”—ஹெல்முக் வான் மோல்க்.
மேலே மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் கருத்துக்கள் உங்களுக்கு எவ்விதமாக தோன்றுகின்றன? போரினிடமாகவும் சமாதானத்தினிடமாகவும் ஒரு கவலையீனமான அணுகுமுறையை உங்களால் காணமுடிகிறதா? அநேக ஆட்களுக்கு விசேஷமாக ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும்—ஆபத்திலிருப்பது தங்களுடைய உயிராக இல்லாத வரையில்—உயிர் மலிவான ஒன்றாக இருக்கிறது என்ற எண்ணத்தை அவை தருகின்றனவா? என்றபோதிலும் நீங்கள் எந்த தேசத்தாராக இருந்தாலும், சமாதானமும் ஒத்திசைவுமுள்ள ஒரு உலகிலேயே வாழ விரும்புவீர்கள் என்பதைக் குறித்து நாங்கள் நிச்சயமாயிருக்கிறோம்.
6000 வருட மனித சரித்திரத்தில், போரானது பல நூறு லட்சக்கணக்கில் மரித்தோரை அறுவடை செய்திருக்கிறது. இரண்டு உலகப் போர்களின் அனுபவத்துக்குப் பின்னும்கூட, சமாதானமும் ஒத்திசைவும் வெறும் ஒரு கனவாகவே தோன்றுகிறது. போர் என்ற சமீப கால புத்தகத்தில் குவென் டையர் எழுதிய விதமாகவே: “இரண்டாம் உலகப் போரின் கடந்த இரண்டு மாதங்களின்போது, ஒவ்வொரு மாதமும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மறுபடியுமாக ஒரே ஒரு தடவை, வல்லரசுகள் இப்பொழுது அவர்களிடமுள்ள எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தி ஒருவரோடொருவர் போர் செய்வார்களேயானால், ஒவ்வொரு நிமிடமும் பத்து லட்சம் ஆட்கள் கொல்லப்படுவார்கள்.” அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வல்லரசுகள் போருக்குச் செல்லுமேயானால், அவை முதலாவது ஜனங்களுடைய கருத்தை அறிந்துகொள்ள அவர்களை கலந்தாலோசிக்குமா? சரித்திரம் வேறு விதமாக பதிலளிக்கிறது.
கடந்த கால போர்களும் தற்போது படுகொலை செய்யப்படுவதற்கான வாய்ப்பும் பின்வருமாறு நம்மைக் கேட்டுக்கொள்ள வழிநடத்துகிறது: “போருக்கு காரணங்கள் யாவை? போர்களுக்கிடையே வெறும் ஓய்வு நேரமாக இல்லாமல், நம்முடைய காலத்தில் மெய்யான நிரந்தரமான சமாதானத்துக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? நிலையான சமாதானம் வெறும் ஒரு மாயமான கனவாக மட்டுமே இருக்கிறதா? 

சனி, 22 செப்டம்பர், 2018

ஆஸ்கார் போட்டிக்கு “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்” சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு

வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் என்ற அசாம் திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்காரில் போட்டியிடும் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தரமான படங்களை தயாரிப்பதில் இந்திய சினிமா எப்போதும் தவறியதில்லை. அப்படி ரிமா தாஸ் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ். அசாமில் உள்ள கிராமத்தில் இருக்கும் சிறுமி தனது ஏழ்மையிலும் எலக்ட்ரிக் கிட்டார் வாங்க வேண்டும் என்ற கனவினை எட்டிய கதையை மிகவும் எளிமையாக கூறியிருப்பார். இந்த படம் அனைவரையும் கவர்ந்திருந்ததோடு கடந்த ஆண்டுக்கான சிறந்த படம் என்ற தேசிய விருதையும் பெற்றிருந்தது.

2019 ஆஸ்காரில் “சிறந்த வெளிநாட்டு படம்” பிரிவில் போட்டியிட ஒரு இந்திய படத்தினை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களான ஆலியா பட் நடித்த ரசி, தீபிகா படுகோன் நடிப்பில் சக்கைப்போடு போட்ட பத்மாவதி, கீர்த்தி சுரேஷ்  நடிப்பில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட மகாநதி போன்ற படங்கள் இந்த ஒரு இடத்திற்காக போட்டி போட்டன. 

இந்நிலையில் இன்று காலை பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா ரிமா தாஸின் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படத்தை இந்தியாவின் சார்பாக ஆஸ்காருக்கு அனுப்பப்படும் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த மகிழ்ச்சியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள படத்தின் இயக்குனர் ரிமா தாஸ், இந்த திரைப்படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வானது தன்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. அளவுகடந்த ஆனந்தத்தோடும் . பெருமையோடும் இந்த செய்தியை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வானதை தொடர்ந்து திரைப்பட பிரபலங்களும் , இந்திய சினிமா ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர். இது ஆஸ்கார் போட்டிக்கு தேர்வாகியுள்ள முதல் அஸ்ஸாமீஸ் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் நிச்சயம் ஆஸ்காரில் விருதை கைப்பற்றும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ரிமா தாஸ் உருவாக்கிய திரைப்படம் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைத்துமே இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியத் திரைப்படங்கள் எதுவும் இதுவரை ஆஸ்கார் விருதைப் பெறவில்லை என்பது நினைவுக்கூறத்தக்கது.

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

இந்த நாட்டின் வரலாறு, கங்கைச் சமவெளியில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது..ஆனால் உண்மையில், இந்த நாட்டின் வரலாறு காவிரிக் கரையில் இருந்துதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார் பேரறிஞர் அண்ணா. இந்திய வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் ஆய்வை, நீண்ட நெடுங்காலமாகக் கங்கைச் சமவெளியில் இருந்து தொடங்கும் வழக்கத்தைக் கைவிட்டு, கிருஷ்ணா, காவிரி, வைகைச் சமவெளிகளில் இருந்து ஆய்வுகளைத் தொடங்க வேண்டும் என்றார் வரலாற்றாசிரியர் வின்சென்ட் ஏ.ஸ்மித்...சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்றும், மனித நாகரிகம் இந்தியாவின் தென்கோடியில் இருந்து வட இந்தியா முழுவதும் பரவியது என்றும் கூறுகிறார் தொல்லியல் அறிஞர் ஆர்.டி.பானர்ஜி. இவை அத்தனையும் உண்மை..உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை என அடித்துச் சொல்கிறது கீழடி.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட பகுதி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் பூதமாக வெளிவந்து, ஆரிய-பார்ப்பன திரிபுகளுக்கு ஆப்பறைந்தது

மதுரையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தென்னந்தோப்புகள் சூழ்ந்த கிராமம்தான் கீழடி. அந்தத் தென்னந்தோப்புகளுக்கு நடுவில், சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் புதைந்து கிடக்கிறது தமிழினத்தின் தொன்மையை அழுத்தமாகச் சொல்லும் வரலாற்றுக் கருவூலம். அதில் ஒரு சிறிது மட்டுமே தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. வெறும் ஒரு ஏக்கர் நிலப்பகுதியைத் தோண்டியதிலேயே.ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் அள்ளி எடுக்கப்பட்டுள்ளன. அவை அத்தனையும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்றைக் காட்டும் சான்றுகளாக இருக்கின்றன.சங்க இலக்கியங்களில் நாம் படித்துச் சுவைத்த, மனக்கண்ணில் ஓடவிட்டுப் பெருமிதப்பட்ட காட்சிகளை எல்லாம் கீழடி நம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

பட்டினப்பாலை சொன்ன ‘உறைகிணற்றுப் புறச்சேரி’ என்ற வரிக்கு. கீழடியில் தோண்டிஎடுக்கப்பட்ட உறை கிணறு உயிர் கொடுத்திருக்கிறது. இப்பூமிப்பந்தின் பல பகுதிகளிலும், மக்கள் இலைதழைகளையும், விலங்குகளின் தோல்களையும் உடலுக்குச் சுற்றித் திரிந்தபோது, இங்கே தமிழர்கள், நெசவுத் தொழிலை அறிந்தவர்களாக, நெய்த ஆடைகளுக்கு வண்ணம் ஏற்றத் தெரிந்தவர்களாக வாழ்ந்திருக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? கீழடியில் கிடைத்துள்ள ‘தக்ளி’ என்னும் கருவியும், இன்ன பிற பொருள்களும், கட்டிடங்களின் அமைப்புகளும், நம்பித்தான் தீர வேண்டும் என்கின்றன.

சுட்ட செங்கற்களால் ஆன கட்டிடங்கள், தொழிற்சாலைகள் இருந்ததற்கான அடையாளங்கள், சுடுமண் பொம்மைகள், தந்தத்தால் ஆன தாயக்கட்டைகள், கருப்பு சிவப்பு என இரு வண்ணங்களால் ஆன மண்பாண்டங்கள், சூது பவளங்கள் என ஆயிரக்கணக்கில் கீழடி அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இதற்கு முன்பும் இவை போன்ற பல புதைபொருள்கள், ஆதிச்சநல்லூர், கொடுமணல், அரிக்கமேடு போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. என்றாலும் கீழடிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. முதன் முதலாகத் தமிழர்களின் சங்ககால நகரம் ஒன்று இங்குதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்தது, இனக்குழு நாகரிகம்தான் என்ற கருத்துத் திணிக்கப்பட்டு வரும் நிலையில், இல்லை, இல்லை. தமிழினம் தனித்துவம் மிக்கதொரு தேசிய இனம் என்பதை, வரலாற்றுப் புரட்டர்களின் செவிப்பறையில் அறைந்து சொல்கிறது கீழடி. அதனால்தான் அகண்ட பாரதக் கனவில் இருக்கும், பா.ஜ.க. அரசு கீழடியைக்கண்டு அஞ்சுகிறது. ஆய்வைத் தொடரத் தயங்குகிறது.

இந்தியா வேதங்களின் நாடு என்றும், வேதக் கலாச்சாரமே இந்தியாவின் கலாச்சாரம் என்றும் கட்டியமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.,கூட்டத்தின் அடிமடியிலேயே கை வைப்பதாக இருக்கிறது கீழடி அகழ்வாய்வு சொல்லும் மற்றொரு செய்தி. இதுவரை கீழடியில் கிடைத்துள்ள பொருள்களை ஆய்வு செய்து பார்த்த வகையில், மதம் தொடர்பான சிறு அடையாளம் கூட காணப்படவில்லை. தமிழர்களின் வரலாறு. முன்னோர் வழிபாட்டையும், நடுகல் வழிபாட்டையும் மரபாகக் கொண்டதே தவிர, பெருந்தெய்வ வழிபாடு அதற்குத் தொடர்பில்லாதது என்பதைக் காட்டும் கீழடி, மத அரசியலையும், மாட்டு அரசியலையும் மட்டுமே நம்பியிருக்கும் கூட்டத்திற்குப் பேரிடியாய் இறங்கியிருக்கிறது. இதேபோல் இன்னொன்றையும் கீழடி உணர்த்தி நிற்கிறது.

மதச் சார்பற்ற, சமயச் சார்பற்ற ஒரு தேசிய இனத்தின் மொழி மட்டும் சார்புடையதாகவா இருக்கும்? தமிழ் ஒரு சமயச் சார்பற்ற மொழி என மொழியியல் அறிஞர் கால்டுவெல் எடுத்துரைத்ததை மெய்ப்பிக்கின்றன கீழடி ஆய்வுகள். செத்த மொழியான சமஸ்கிருதமே தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளின் தோற்றுவாய் என சற்றும் கூசாமல் சொல்லி, மொழி வரலாற்றையும் திரித்துக் கூறுவோரின் உச்சத்தலையில் குட்டி, தேவபாஷையான சமஸ்கிருதத்திற்கும், சமயச் சார்பற்ற தமிழினத்தின் தாய்மொழிக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறது கீழடி.

2015, 2016ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற கீழடி ஆய்வை, இடைக்கால அறிக்கை தயாரிக்க வேண்டும் என்ற நடைமுறைக்கு உதவாத காரணத்தைச் சொல்லி, பாதியிலேயே நிறுத்தியது பா.ஜ.க., அரசு. தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு, அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்கள் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள தொல்லியில் அருங்காட்சியகங்களுக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.கீழடியிலேயே அவற்றைப் பாதுகாத்து ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி, வரலாற்று அறிஞர்களும், தமிழ் அமைப்புகளும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். ஆனால் என்ன கொடுமை தெரியுமா? தமிழினத்தின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடியைத் தமிழகத்தை ஆளும் அதிமுக அமைச்சர்களோ, மாவட்ட ஆட்சித் தலைவரோ வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

குஜராத்திலும் பத்து ஆண்டுகளாகத் தொல் பொருள் ஆய்வு நடந்து வருகிறது.அங்கு புதிய சான்றுகள் ஏதும் கிடைத்ததாகத் தெரியவில்லை. இருந்தும் அங்கு ஆய்வுகளைத் தொடர இந்த ஆண்டும் நிதி ஒதுக்கியதோடு, பா.ஜ.க.,வின் பாரதப் பிரதமர் மோடி நேரில் சென்று அதைத் தொடங்கியும் வைத்துள்ளார். அதேநேரம் புது வரலாறு படைக்கத்தக்க சான்றுகளை அள்ளித் தருகின்ற கீழடி புறக்கணிக்கப்படுவதை ஏன் என்று கேட்க வக்கற்ற அரசாக, அதிமுக அரசு இருப்பதால், தமிழர்களின் வரலாற்றுக் கருவூலத்தை மண்ணைப் போட்டு மூடத் துணிந்திருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசு.

பிள்ளையாருக்கு யானைத் தலைமை ஒட்ட வைத்ததுதான் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை என அறிவியல் அறிஞர்கள் குழுமியிருந்த அவையில், சற்றும் கூச்சமின்றி சொன்னவர்தான், பாரதப்பிரதமர் மோடி. என்ன செய்வது அவர்களின் வரலாற்று எல்லை அவ்வளவுதான். புராணங்களோடு நின்று போனவை. ஆனால் தமிழர்கள்.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறிவியலோடு இயைந்த நாகரிக வாழ்க்கையைக் கொண்டவர்கள்.

வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால் அதற்கு முன் தெற்கு வாழ்ந்திருக்கிறது.மிக உயர்ந்த நாகரிக வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறது. என்பதை உலகிற்கு அழுத்தமாக எடுத்துச் சொல்லும் தொல்பொருள் ஆய்விடம் கீழடி. ‘தங்கள் இனத்தின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கும் தமிழக மக்களுக்கு, கீழடி ஆய்வை மத்திய அரசு பாதியில் நிறுத்தியது ஏமாற்றத்தையும், வேதனையையும் தருவதாக உள்ளது என ஒட்டுமொத்த தமிழகத்தின் உள்ளக்கிடக்கையை, மத்தியக் கலாச்சாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மாவுக்குக் கடிதத்தின் வழி வெளிப்படுத்தினார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். இப்போது கீழடியில் ஆய்வைத் தொடர்வதற்கான நிதியை ஒதுக்கியிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அறிவிப்பு வந்திருக்கிறதே ஒழிய இன்னும் ஆய்வுகள் தொடங்கப்படவில்லை..இதுவரை ஆய்வினை முன்னின்று நடத்திய அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனை மாற்றிவிட்டு, புதியவர் ஒருவரை நியமித்து, தன் ‘ராஜதந்திரத்தைக் காட்டியிருக்கிறது பா.ஜ.க. அரசு.

சிந்துவெளியில் கிடைத்த, காளைமாட்டின் குறியீட்டையே குதிரையாக்கி, சிந்து வெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று சொல்லி, இல்லாத சரஸ்வதி ஆற்றைத் தேட 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள ஆரிய மாயையின் ஆட்டம், கீழடியில் நடக்காது. நடக்கவும் விட மாட்டோம் என்பதில், தமிழக வரலாற்று அறிஞர்கள் உறுதியுடன் உள்ளனர். மீண்டும் கீழடியில் அகழ்வாய்வுகள் உடனடியாகத் தொடங்கப்பட, மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் தர தொடர் முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

மரங்களின் பாட்டு

ஐரோப்பாவில் இருக்கும் எஸ்டோனியன் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் கல்லூரி ஒரு புதுமையான கருவியை உருவாக்கி இருக்கிறது.


மரங்களின் மெகாபோன் என்று இதை  அழைக்கிறார்கள். அதாவது மரங்களின் தனித்துவமான மொழியை கேட்கவும், அவை இயற்கையோடு பேசுவதை உணரவும், செடி-கொடிகளின் பாஷையை கேட்பதற்காகவும் இந்த பிரமாண்ட இசை சேகரிப்பு கருவியை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதில் என்ன சிறப்பு தெரியுமா..? இந்த மெகாபோனிற்குள் அமர்ந்தால் மட்டுமே செடி-கொடி, மரங்களின் சங்கீதத்தை கேட்கமுடியுமாம். 

பூமியின் புதிய யுகத்தில் நாம்!


பூமியின் கடைசி 4200 ஆண்டுகளை பூமியின் தனி யுகமாகப் பிரித்துள்ளனர் புவியியல் நிபுணர்கள்.
Welcome to the 'Meghalayan Age', A New Phase in Earth's History
அதிகப்படியான வறட்சியால் உலகின் முக்கிய நாகரிகங்கள் அழிந்துபோன இந்தக் காலகட்டத்துக்கு ‘மேகாலயன் யுகம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு குகையில் வளரும் புற்றுப்பாறைகளின் அடிப்படையில் இந்த யுகத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காலவரிசை அடிப்படையிலான சர்வதேச பாறைப்படிவியல் விளக்கப்படமும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியின் புவியியல் வரலாற்றை காலவரிசைப்படி அந்தப் புகழ்பெற்ற விளக்கப்படம் பட்டியலிடுகிறது.

ஆனால் இந்த யுகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அறிவியலாளர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆய்வுக் கட்டுரையில் ‘மேகாலயன் யுகம்’ பற்றி விவரிக்கப்பட்டிருந்தாலும், இதுகுறித்து போதிய விவாதங்கள் நடத்தப்படவில்லை என்பது சில அறிவியலாளர்களின் கருத்து.

சுமார் 4.6 கோடி ஆண்டுகள் நீளும் பூமியின் வரலாற்றை காலத் தொகுதிகளாக விஞ்ஞானிகள் பகுத்துள்ளனர். ஒவ்வொரு பகுப்பும், கண்டங்கள் பிரிந்தது, காலநிலையில் பெரும் மாற்றங்கள் உண்டானது, புதிய வகை விலங்குகள் மற்றும் தாவரங்கள் உருவானது என ஒவ்வொரு முக்கிய அறிவியல் நிகழ்வுடன் தொடர்பு உடையது.

நாம் தற்போது இருப்பது ஹோலோசீன் சகாப்தத்தில். ‘பனி யுகம்’ முடிந்து வெப்பம் பரவத் தொடங்கிய கடைசி 11,700 ஆண்டுகளின் புவியியல் வரலாற்றை உள்ளடக்கியது இந்த யுகம். இந்த ஹோலோசீன் சகாப்தத்தையும் பல கட்டங்களாகப் பிரிக்க முடியும் என்கிறது புவியியல் அடிப்படையிலான காலங்களை வரையறுக்கும் அதிகாரப்பூர்வ அமைப்பான சர்வதேச பாறைப்படிவியல் ஆணையம். ஹோலோசீன் சகாப்தத்தையும் ஆரம்ப, மத்திய மற்றும் இறுதிக் காலகட்டங்களாகப் பிரிக்க முடியும் என்கிறது இந்த அமைப்பு. இந்தக் காலகட்டங்கள் முக்கிய பருவநிலை மாற்றங்களை எதிர்கொண்டுள்ளன. இவற்றில் மிகவும் சமீபத்தியதான மேகாலயன் யுகம் தற்போதுள்ள காலத்துக்கு 4,200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது. அப்போது சுமார் 200 ஆண்டுகள் நீடித்த மிகவும் மோசமான வறட்சி எகிப்து, கிரேக்கம், சிரியா, பாலஸ்தீனம், மெசபடோமியா, சிந்து சமவெளி மற்றும் யாங்சி நதிப் பள்ளத்தாக்கு நாகரிகம் ஆகியவற்றில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கியது.

பெருங்கடல் நீரோட்டத்தின் திசை மற்றும் வளிமண்டலத்தின் காற்று வீசும் திசையில் உண்டான மாற்றங்களால் இந்த வறட்சி உண்டாகியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் அதை ஒட்டி பண்பாட்டு வழக்கங்கள் உண்டான காலகட்டத்துடன் ஒத்திசைந்து இருப்பதால் மேகாலயன் யுகத்துக்கு என்று ஒரு தனித்துவம் இருப்பதாக லாங் பீச் ஸ்டேட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டான்லி பின்னி கூறுகிறார். சர்வதேச புவிசார் அறிவியல் அமைப்பின் பொதுச்செயலாளராக அவர் உள்ளார்.
ஹோலோசீன் சகாப்தத்தின் மத்தியப் பகுதியான ‘நார்த்கிரிப்பியன் யுகம்’, மேகாலயன் யுகம் தொடங்குவதற்கு முந்தைய 8,300 ஆண்டுகளை உள்ளடக்கியது. உருகிய பனியால் கடல் மட்டம் அதிகரித்து, பெருங்கடலின் நீரோட்டத்தின் திசை இந்தக் காலகட்டத்தில் மாற்றங்களைச் சந்தித்தது.

ஹோலோசீன் சகாப்தத்தின் மிகவும் பழைய காலகட்டமான ‘கிரீன்லேண்டியன் யுகம்’ பனியுகம் முடிவுக்கு வந்தபின் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை விஞ்ஞானிகள் தனி யுகமாகக் கருத வேண்டுமென்றால் அக்காலகட்டத்தில் பூமி முழுவதற்கும் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த மாற்றம் பாறை அல்லது வண்டல் மண்ணுடன் தொடர்பு உடையதாக இருக்க வேண்டும்.
6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிரிட்டேசிய காலத்திலிருந்து பேலியோஜீன் காலத்துக்கு மாற்றம் நிகழ்ந்தபோது இரிடியம் படிமங்கள் பூமி முழுதும் பரவி இருந்தன. டைனோசர்கள் இந்தப் பூமியில் இருந்து அழியக் காரணமான விண்கல் மோதலால், அதிலிருந்த இரிடியம் பூமி முழுதும் பரவியது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள மாம்லு குகையில் வளர்ந்துள்ள புற்றுப்பாறைகளில் உள்ள ஆக்சிஜன் அணுக்கள் அல்லது அதன் ஐசோடோப்புகளில் கண்டறியப்பட்டுள்ள குவியலில் இந்த மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், அந்த மாற்றம் நிகழ்ந்த சமயத்தில் மழைப் பொழிவு குறைந்துள்ளது. அந்த மாற்றம் நிகழ்ந்தபோது பருவ மழை பொழிவது 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது என வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக் வாக்கர் கூறுகிறார்.

‘‘மிகவும் முக்கியமான இரண்டு புவிசார் மாற்றங்கள் 4100 மற்றும் 4300 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தன. எனவே இரண்டுக்கும் சராசரியாக 4200 ஆண்டுகளுக்கு முன்பு மேகாலய யுகத்தின் தொடக்கத்தை நிர்ணயித்தோம்’’ என்கிறார் அவர். இந்தக் காலகட்டத்தை தனி யுகமாக்க முன்மொழிந்த ஹோலோசீன் அறிவியலாளர்கள் குழுவுக்கு மைக் வாக்கர் தலைமை வகித்தார்.
யுகம் யுகமாய் பூமி எவ்வளவு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது!