சனி, 31 டிசம்பர், 2016

சார்லஸ் டார்வின் - படிமலர்ச்சி கோட்பாடு

பழைய சிந்தனைகளிலிருந்து விடுபட மறுத்த உலகத்தை தங்களின் அரிய கண்டு பிடிப்புகளால் மாற்றம் பெறச் செய்தவர் களில் நால்வருக்கு முதன்மை பங்கு உண்டு. நாம் வாழும் புவி உருண்டையானது என்ற க—யோ, இயக்கவியல் கோட்பாட்டை நிறுவிய ஐன்ஸ்டீன், புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன், மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த உண்மைகளை வெளியிட்ட சார்லஸ் டார்வின் ஆகியோரே அந்த நான்கு முதன்மை அறிவியலாளர்கள். இவர்களின் கண்டுபிடிப்புகளே நவீன உலகின் அறிவியல் முன்னேற்றத்திற்கு அடித்தளம்.

இங்கிலாந்து நாட்டின் ஷிரூஸ்பரி நகரில் 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் பிறந்த சார்லஸ் டார்வின் பிறந்து 200 ஆண்டுகள் கழித்தும் தன்னை இந்த மனித சமுதாயம் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு மனித குலம் குறித்த மிக முக்கியமான ஆய்வுப்புரட்சியை நடத்தியவர் டார்வின். அப்படியென்ன புரட்சி?

உலகில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றையும் கடவுள் படைத்தார்.
அதுபோல, மனிதனையும் கடவுள் படைத்தார் என்பதே மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கையாக காலங்காலமாக இருந்து வந்தது. டார்வினின் ஆராய்ச்சி முடிவுகள் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து உண்மையை உலகுக்கு உணர்த்தின. எச்.எம்.எஸ் பீகிள் கப்பலில் இயற்கையியலாளராக பதவியமர்த்தப்பட்ட சார்லஸ் டார்வின் ஏறத்தாழ 5 ஆண்டுகள் அந்தக் கப்பலில் பயணித்து தென் அமெரிக்காவின் பசிபிக் கரையோரத்திலும் பசிபிக் கடலில் உள்ள சில தீவுகளிலும் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து 600 குறிப்பேடுகளில் தரவுகளைப் பதிவு செய்தார். மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி (படிமலர்ச்சி) பற்றிய டார்வினின் அரிய ஆய்வுகளுக்கு அந்தக் குறிப்பேடுகளே அடித்தளம்.

உயிரினங்கள் தங்களின் இயற்கையான தேர்ந்தெடுத்தலில் காரணமாகவே படிமலர்ச்சியை அடைகின்றன என்பதே டார்வினின் கோட் பாடாகும். பறவை, விலங்கு என ஒவ்வொரு உயிரினத்திற்கும் பொதுவான குணங்கள் இருந்தா லும் தனிப்பட்ட ஒவ்வொரு பறவைக்கும் விலங்குக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை டார்வின் தெளிவுபடுத்தினார். ஒரே தட்பவெப்பம் நிலவும் பகுதியில் வாழும் பறவை களில் சிலவற்றுக்கு வலிமையான அலகு இருக்கிறது. சிலவற்றுக்கு மென்மையான அலகு இருக்கிறது. சிலவற்றுக்கு நுண்மையான அலகு இருக்கிறது. வலிமையான அலகுகள் கொண்ட பறவைகள் பெரிய விதைகளை சாப்பிடக்கூடியனவாகவும், மென்மையான அலகுகளைக் கொண்ட பறவைகள் சிறிய விதைகளைச் சாப்பிடுபவையாகவும் நுண்ணிய அலகுகளைக் கொண்ட பறவைகள் புழு- புச்சிகளை சாப்பிடக்கூடியனவாகவும் இருப்பதை அவர் தன் ஆய்வில் உறுதி செய்தார்.

ஒரே இனத்தில் இத்தகைய மாறுபாடுகள் கொண்ட உயிரினங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் படிமலர்ச்சியை அடைந்து புதிய உயிரினங் களாக மாற்றம் பெறுகின்றன என்பதே டார்வினின் ஆராய்ச்சி. அதாவது, ஆதாம்-ஏவாள் மூலமாக மனித இனத்தைக் கடவுள் படைத்தார் என ஒரு மதமும், படைப்புக் கடவுளான பிரம்மாவி னால் மனிதர்கள் படைக்கப்பட்டார்கள் என இன்னொரு மதமும் பல நூற்றாண்டுகளாக மக்களின் மனங்களில் கருத்துகளைப் பதிவு செய்திருந்த நிலையில், அதற்கு முற்றிலும் மாறுபட்டிருந்தது டார்வினின் ஆராய்ச்சி. மனித இனம் என்பது தனித்துவமாகப் படைக்கப்பட்டதில்லை. ஒரு செல் உயிரி, பல செல் உயிரி என்ற படிமலர்ச்சியின் தொடர்ச்சி யாக ஒவ்வொரு உயிரினமாக உலகில் தோன்றின. அப்படி தோன்றிய உயிரினங்களின் வழியே, இயற்கையான தேர்வு முறையில் படிமலர்ச்சி பெற்ற இனம்தான் மனித இனம். சுருக்கமாகச் சொல்வதென்றால், குரங்கு இனத் தில் இயற்கைச் சூழலால் தனித்த குணங்களுடன் செயல்பட்ட ஒரு குழுவிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் படிமலர்ச்சி பெற்றவனே மனிதன்.

டார்வினின் இந்த ஆய்வு, அவர் காலத்திற்கு முன்பு வரை இருந்து வந்த மதம் சார்ந்த- மூடநம்பிக்கைகளுடனான அறிவியலை மதத்திற்கு அப்பாற்பட்ட பகுத்தறிவு சார்ந்த அறிவியலாக மாற்றியது என்கிறார் இருபதாம் நூற்றாண்டின் இயற்கைவியலாளரும் படிமலர்ச்சி ஆராய்ச்சியாளருமான எர்னஸ்ட் மேயர். இத்தகைய அறிவியல் புரட்சியை மதம் சார்ந்த உலகம் உடனடியாக ஏற்றுக் கொள்ளுமா?

படிமலர்ச்சி குறித்த டார்வினின் ஆய்வு களுக்கு எதிராக இங்கிலாந்து நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது கடவுளை மறுக்கும் கருத்து, நாத்திக கருத்து என மதரீதி யான எதிர்ப்புகள், அரசியல் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவை நடைபெற்றன. இது டார்வினை கலங்கச் செய்தது. அவ ருடைய ஆய்வுகள் புரட்சிகரமாக இருந்தனவே தவிர, டார்வின் புரட்சியாளர் அல்ல என்கிறார் அறிஞர் ஜான் பெலாமி ஃபாஸ்டர். படிமலர்ச்சி பற்றிய டார்வினின் புகழ்பெற்ற புத்தகமான உயிரினங்களின் தோற்றம் 1859ல் வெளியானது. தன் இறுதிக்காலத்தில் லண்டன் நகரிலிருந்து 15 கல் தொலைவில் உள்ள ஓர் ஊரில் வசித்தார் டார்வின். அவர் தனது ஆய்வுக் கோட்பாடுகளை, தானே தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை. உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகளை புதிய சிந்தனைகளோடு முடுக்கிவிடும் தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடரும் பணியை தாமஸ் ஹக்சிலி போன்றவர்களிடம் விட்டுவிட்டார்.

டார்வின் முன்வைத்த படிமலர்ச்சி கோட்பாடு இன்றளவிலும் பலவித மான ஆய்வுகளைக் கண்டு வருகிறது. மேற்குலக நாடுகளில் நிறத்தின் பெயரா லும் இனத்தின் பெயராலும் அடிமைத்தனம் நிலவி வந்த கால கட்டத்தில், உயிரினங்களின் தோற்றம் பற்றிய டார்வினின் ஆராய்ச்சி உண்மையிலேயே பெரும் புரட்சிதான். ஏனெனில், வெள்ளை இனம் எஜமானம் செய்யவும் கறுப்பினம் அடிமைத்தொழில் புரியவும் படைக்கப்பட்டவர் கள் என்ற ஒடுக்குமுறை சிந்தனையை உடைத்தெறியும் விதத்தில், மனிதர்கள் படைக்கப்படவில்லை. அவர்கள் இயற்கையான தேர்வு முறையில் உயிரினங்களின் படிமலர்ச்சி யின் விளைவாக உருவானவர்கள் என்ற டார் வினின் தத்துவம், ஆண்டான்-அடிமை கோட் பாட்டை உடைத்து நொறுக்குவதாக அமைந் தது. இந்தியாவிலும் பிறப்பினால் உருவாக் கப்பட்டுள்ள நால் வருணக் கோட்பாட்டுக்கு சம்மட்டி அடி தருவதாகவே இருக்கிறது டார்வினின் ஆராய்ச்சி முடிவு.

உலகில் உள்ள மனிதர்கள் ஏற்றத்தாழ்வற்ற சமஉரிமைகளுடன் வாழவேண்டும் என்ற பெருங்கனவுடன் பொதுவுடைமை எனும் அர சியல் விஞ்ஞானக் கோட்பாட்டை வகுத்தவர் களான காரல்மார்க்சும், ஃப்ரெடெரிக் எங்கெல் சும் டார்வினின் ஆய்வுகளை கவனத்துடன் அல சினர். உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தின் முதல் பதிப்பை வாங்கிப்படித்த எங்கெல்ஸ், இது முற்றிலும் சிறப்பானது என மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். டார்வினின் செயலை “அறிவியல் கண்ணோட்டத்தில் பெருங் காப்பியம்’ என வர்ணித்தார் காரல் மார்க்ஸ்.

ஆள்வதற்கும் ஒரு பிரிவும் அடிமையாக இருப்பதற்கு ஒரு பிரிவுமாக மனிதகுலம் படைக்கப்படவில்லை. மனித இனம் என்பது படைப்பால் வந்ததன்று. இயற்கையான தேர்வு முறையினால் வந்ததன்று என்கிற புரட்சிகரமான உண்மையை வெளிக்கொண்டு வந்தவர் அறி வியல் அறிஞர் சார்லஸ் டார்வின். அதனால் தான் மாபெரும் அறிஞர்கள் போற்றும் மகத் தான அறிஞராக இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னும் அவர் நினைக்கப்படுகிறார். டார்வினின் ஆய்வுகள் புதிய புதிய கோணங்களில் இன்றளவும் ஆராய்ச்சி செய்யப்படுவது அவரது பேராற்றலுக்கு கிடைத்துள்ள பெருமை.

தாவரங்களுடன் பேசுங்க

தாவரங்கள் நன்றாக வளர என்ன செய்ய வேண்டும்? 'தண்ணீர் பாய்ச்ச வேண்டும். முறையாக உரமிட வேண்டும்' என்கிறீர்களா? இதெல்லாம் பொதுவான முறைகள். தாவரங்களுடன் மனம்விட்டுப் பேசினால் அவை நன்றாக வளரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தாவரங்களுடன் பேசுவதா? அவற்றுக்கென்ன நாம் பேசுவது புரியுமா என்ன என்று கேள்வி எழுப்புகிறீர்களா? 'தாவரங்களுக்கு மொழி புரியாதுதான். ஆனால் அவை உங்களின் உச்சரிப்பைப் புரிந்து கொள்ளும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இது தொடர்பான புதுமையான ஆய்வை இங்கிலாந்து விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அதன் முடிவில்தான், தாவரங்கள் மனிதர்கள் தம்மிடம் பேசுவதை விரும்புகின்றன என்று அறிவித்துள்ளனர்.

அதிலும் இங்கிலாந்தின் நியுகேசில் பகுதியில் புழங்கும் உச்சரிப்பு முறையைத் தாவரங்கள் அதிகம் ரசிக்கின்றனவாம். எசக்ஸ், வேல்ஸ் பகுதி உச்சரிப்பு முறைகளும் பலன் கொடுக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

எசக்ஸ் பகுதி செடி, கொடிகள் விற்பனை மையம் ஒன்றில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏனோ தெரியவில்லை, மேல்தட்டு மக்களின் உச்சரிப்பு முறையை தாவரங்கள் ரசிக்கவில்லையாம்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 1986-ம் ஆண்டில் தனது தோட்டத்துத் தாவரங்களுடன் பேசுவது பிடிக்கும் என்றபோது பலரும் அவரைக் கிண்டலடித்தார்கள். அவர்கள் தற்போது என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை!

கோஹினூர் ('மலையளவு ஒளிவீச்சு')

இந்தியாவை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் சேனாதிபதி மாலிக் கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் பொது கைப்பற்றப்பட்டது ஒரு வைரம். பின்னர் குவாலியர் மன்னர் குடும்ப வசமானது அந்த வைரம். ஹுமாயுன் தலைமையில் பாபர் படைகள் குவாலியரை தாக்கியபோது, குவாலியர் மன்னர் குடும்பத்தினர் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வைரத்தை விலையாகக் கொடுத்தனர். ஹுமாயுன் தனது தந்தை பாபரிடம் அத வெற்றி பரிசாக அளித்தார். பாபர் அந்த வைரத்தை ஹுமயுனிடமே திருப்பித் தந்துவிட்டார்.

பின்னர், பாரசீக மன்னர் ஷா தாமாஸ்ப் கைக்கு போன அவ்வைரம், தட்சிணப் பீடபூமியை ஆண்ட நிஜாம் ஷாவை வந்தடைந்தது. 17-ம் நூற்றாண்டில் ஷாஜஹான் வசம் வந்தது அந்த வைரம். பின்னர் மொகலாய மன்னர்களிடம் பாதுகாப்பாக இருந்தது. 1739-ல் டெல்லியை சூரையாடிஅய பாரசீக மன்னர் நாதிர் ஷா, மொகலாய மன்னர் முகமது ஷாவிடம் இருந்து அந்த வைரத்தைக் கைபற்றிகொண்டார்.

பிரசித்தி பெற்ற "கோஹினூர்" வைரத்தின் கதை இது. அதற்கு கோஹினூர் ('மலையளவு ஒளிவீச்சு') என்று பெயரிட்டவரும் நாதிர்ஷாதான். தாதிர் ஷாவுக்குப் பின்னர் அவரது வழித்தோன்றல்களிடம் இருந்தது இந்த வைரம். தொடர்ந்து, "பஞ்சாப் சிங்கம்" என்றழைக்கப்பட்ட ரஞ்சித் சிங் கைவசம் மாறியது.

பஞ்சாப் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குள் வந்தபிறகு, சர் ஜான் லாரன்ஸ் என்ற திகாரி அதை பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவுக்குப் பரிசாக அளித்தார். இன்றுவரை பிரிட்டீஷ் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது, கோஹினூர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகில் வெட்டி எடுக்கப்பட்டது இந்த புகழ்பெற்ற வைரம்.

காடுகள் இரவு நேரத்தில் எப்படி இருக்கும்?

பூமியின் மொத்த நிலப்பரப்பில் வெறும் 6 சதவீத நாடுகளில் தான் உலகில் வாழும் பெரும்பான்மையான ஜீவராசிகள் உயிர் வாழ்கின்றன. இந்த காடுகள் இரவு நேரத்தில் எப்படி இருக்கும் என்பன பற்றிய சிறு பார்வை.
     இரவு நேரத்தில் காடுகள் அமைதியாக இருக்கும் என்று நினைத்தால் அது தவறு தான். காரணம் நள்ளிரவில்தான் பூச்சிகள், மிருகங்கள், பறவைகள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். பேசுவது என்றால் படுக்கையில் கணவனும், மனைவியும் பேசும் ரகசியமான பேச்சில்லை. இந்த உயிரினங்களுக்கு இரவு நேரத்தில் தனக்கான துணை எங்கே இருக்கிறது என்றே தெரியாது. அதனால் தனது இணையை “எங்கேடா செல்லம் இருக்க?” என்று விடிய விடிய குரல் எழுப்பி கேட்டு கொண்டே இருக்கும்.
தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை குரங்குகள் எழுப்பும் காதல் ஒழி 5 கி.மீ. தூரத்துக்கு கேட்கும் என்று ஒரு வகையான ஆராய்ச்சி கூறுகிறது. காங்கோ காடுகளில் காணப்படும் ஒரு வகை வவ்வால்களின் தொண்டை கத்தி கத்தியே மார்பு வரை நீண்டு விட்டது. அதன் பரிணாம வளர்ச்சியே மாறி விட்டது. அந்த அளவுக்கு சவுண்ட் கில்லாடியாக இந்த வவ்வால்கள் இருக்கின்றன.
   சிங்கம், புலி, சிறுத்தை போன்றவைகளின் இணைகள் வெகு தொலைவில் எங்கேயோ இருக்கும் இணையை அழைக்க இவை காடே அதிரும்படி கர்ஜிக்கும். ஆண் சிங்கம் கூப்பிட அதற்கு பெண் சிங்கம் பதில் சொல்ல டிடிஸ் எபக்டில் காடே அதிரும். இதற்கு நடுவில் யாரவது மாட்டி கொண்டால் மாட்டியவர் கண்டிப்பாக அச்சத்தின் உச்சத்தை தொடுவார்.
ஆப்ரிக்க யானைகள் எழுப்பும் ஒழி, அடர்ந்த காடுகளை கிழித்துக் கொண்டு பல கி.மீ. தூரம் தாண்டியும் கேட்கும். தன் இணை நடந்து வரும் அதிர்வை வைத்தே எவ்வளவு தூரத்தில் தனக்கான இணை உள்ளது என்று கண்டுபிடித்துவிடும் அளவுக்கு யானைகள் கில்லாடிகள். சிம்பன்சி குரங்குகள் கால்களால் பூமியை தட்டி தன் காதலிக்கு தகவல் தெரிவிக்குமாம்.
    இப்படி கத்தல் பார்ட்டிகள் ஒரே நேரத்தில் ஓராயிரம் தகவல்கள் அனுப்ப அமைதியான உரியினங்கள் எப்படி தங்கள் காதல் மொழியை பகிர்ந்து கொள்ள முடியும்? இறைவன் அதற்கொரு வழி இல்லாமலா விட்டிருப்பான். ஒரு சில அமைதியான விலங்குகள் தங்களின் உடல் வாசனையை தூது அனுப்பும். புனுகுப்பூனை, கஸ்தூரி மான், பட்டாம்பூச்சிகள் வரை சில உயிரினங்கள் வாசனையை வைத்து தான் வம்சத்தை வளர்கின்றனர்.
   அமைதியான இரவுகளை இரைச்சல் ஆக்குவதில் முக்கிய பங்கு தவளைக்கு உண்டு. தவளையின் குரலை வைத்தே அந்த தவளையின் வயது, அளவு பருமன் எல்லாவற்றையும் இணை தவளை அறிந்து கொள்ளும். விருப்பம் இருந்தால் பதில் குரல் தந்து விரும்பிப் போகும். இல்லையென்றல் விலகிப் போகும்.

மரணத்தின் மறுபக்கம்

மறுஜென்மம் உள்ளதா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மரணத்தின் மறுபக்கம் எப்படி இருக்கும் என்பதை பலரிடம் ஆராய்ந்து அது இப்படித்தான் இருக்கும் என்று தகவல் தருகிறார்கள் ஆய்வாளர்கள்.

    அதன்படி நான் இறந்துவிட்டேன் என்று உணர்வதுதான் முதல்நிலை. அதன்பின் பூமியில் இருந்து வெளியேறி வின் வெளியில் சுற்றிச்சுலழ்வது போல் உணர்தல் இரண்டாம் நிலை. உடலைவிட்டு விலகி வெளியே சென்று பார்ப்பது போன்று உணர்தல், உடலைச்சுற்றி டாக்டர்கள், உறவினர்கள் நிற்பதை பார்ப்பது மூன்றாம் நிலை.

  மிக அமைதியான, வெளிச்சம் குறைவான சுரங்கத்திற்குள் போய்க்கொண்டே இருப்பது போல உணர்தல் – இது நான்காம் நிலை. கண்ணை கூசவைக்கும் அதீதமான வெளிச்சத்தை நோக்கி மெதுவாக பறப்பது போன்று உணர்தல் 5-ம் நிலை. வெண்மையான அல்லது வெள்ளை நிற உடை அணிந்த ஆணா, பெண்ணா என்று அடையலாம் கண்டுபிகிக்க முடியாத உருவங்களை பார்ப்பது 6-ம் நிலை. ஒருவர் வாழ்வில் நடந்த எல்லா சம்பவங்களும் அவர் கண்முன்னால் வந்து செல்வது 7-வது நிலை.

     கீழே கிடக்கும் தன உடலுக்குள் நிலைய வேண்டும் என்ற ஆசையும், வேண்டாம் என்ற வெறுப்பும் மாறி, மாறி தோன்றுவதுதான் கடைசி ஆசை இந்த நிலையில் ஒரு சிலரால் மீண்டும் உடலுக்குள் நுழைந்துவிட முடியுமாம். இறந்ததாக நினைத்து சுடுகாடுவரை எடுத்துச் சென்று, பின்னர் நினைவு திரும்பிய சம்பவங்கள் எல்லாம் இதனுடைய தாக்கம் தான்.

    இந்த உணர்வுகள் பெற்ற எல்லோருமே மறுபடி உயிர் திரும்பும்போது எதோ மறுபிறவி அடைந்தது போன்று உணருவார்கள். செய்த தவறுகளுக்கு சம்மந்தப்பட்ட நபர்களிடம் மன்னிப்பும் கேட்டு கொள்கின்றனர். இதற்கு மேல் தவறுகள் எதுவும் செய்வதில்லை என்று உறுதியும் எடுத்துகொள்கின்றனர். ஆனால் மரணத்தின் மறுபக்கமாக உள்ள மீண்டும் உயிர்ப்பு என்பது, மரணத்தை விட மனித வாழ்வை உணர வைக்கிறது.

பழமையான புதிய மனித இனம்


     இதுவரை அறியப்படாத ஒரு புதிய மனித இனம் மண்ணில் உலவித் திரிந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சீனாவில் சில குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிரான புதைபடிவங்கள், அந்த அறியப்படாத மனித இனத்துக்குச் சிந்தமானதாக தொல்லுயிரியல் நிபுணர்களால் கருதப்படுகிறது.

   அந்த எலும்புகள், மிகப் பழங்கால மற்றும் நவீன மனிதனின் அம்சங்களைக் கொண்டிருப்பதும் விஞ்ஞானிகளைக்குழப்புகிறது.
இன்னொரு ஆச்சரியமூட்டும் அம்சம், இந்த எலும்புகள் 11 ஆயிரத்து 500 ஆண்டுகள் பலமையானவைதான். அதாவது நவீன மனிதன் பூமியில் காணப்பட்ட அதே காலகட்டத்தில் இந்தப் புதிரான மனிதன் இருந்திருக்கிறான். இன்னும் விளக்கமாகச் சொல்வதென்றால் சீனாவின் ஆரம்பகால விவசாயிகள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் வசித்திருக்கிறார்கள்.

   இந்த புதிய புதைபடிவங்கள், இதுவரை அறியப்படாத மனித இனத்துக்குச் சொந்தமான இருக்காலம். அதாவது, 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியுகம் முடிவதற்கு முன்புவரை வாழ்ந்த ஓர் இனம். என்பது, முன்னணி தொல்லுயிரியல் ஆய்வாளரான ஆஸ்திரேலியாவின் நியு சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேரன் கர்நோவின் கருத்து.

    அவரே, “அவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த, முன்பு அறியப்படாத, ஆரம்பகால நவீன மனிதர்களாக இருக்கலாம். அவர்கள் மரபனுரீதியகத் தொடராமல் போயிருக்கலாம்” என்கிறார் கர்னோ.

     தென்மேற்குச் சீனாவில் மேங்சி நகருக்கு அருகில் உள்ள மலுடோங் எனப்படும் சிவப்பு மான் குகைப் பகுதியில் உள்ள குவாரியில் இந்தப் புதைப் படிவங்களை சுரங்கத் தொழிலாளர்கள் கண்டு பிடித்தனர். 1989-ம் ஆண்டிலேயே அந்த மூன்று புதைபடிவங்களையும் அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். அனால் 2008-ம் ஆண்டில்தான் அவை தொடர்பான ஆய்வுகள் தொடங்கின.

     குறிப்பிட்ட புதைபடிவங்களுக்கு உரிய மனிதர்கள், மறைந்து போன சிவப்பு மானை உணவாக உட்கொண்டிருப்பதா, அவர்களை ‘சிவப்பு மானை உணவாக உட்கொண்டிருப்பதால், அவர்களை சிவப்பு மான் குகை மனிதர்கள் என்று ஆய்வரளர்கள் குறிப்பிடுகின்றனர்’