புதன், 30 நவம்பர், 2016

மீண்டும் உதயமாகப்போகும் சோவியத் ரஷ்யா

சோவியத் யூனியன் (USSR) என்ற பெயர் புதிய தலைமுறையினருக்கு சற்று அறிமுகமல்லாமல் போயிருக்கும் . கம்யூனிசத்தின் சித்தாந்தக் கடவுள் கார்ல் மார்க்ஸ் வடித்த' டாஸ் கபிடல் ' எனும் நூலின் 'தியரிக்கு' பிராக்டிகல் கொடுக்க 'லெனின் கிராட் ' எனும் இன்னொரு கடவுளால் உருவாக்கப் பட்ட தேசமே சோவியத் யூனியனாகும் .
1989 சோவியத்வரைபடம்
மிக்கைல் கொர்பசோவ் (Mikhail Gorbachev).

இருபதாம் நூற்றாண்டில் உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய ஒன்று அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய 'Clod War' எனப்படும் பனிப்போர். அந்த பனிப்போர் உருவானதற்கு அடிப்படை காரணம் ரஷ்யாவில் லெனினுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஸ்டாலினும், அவருக்கு அடுத்து வரிசையாக வந்த சர்வாதிகாரிகளும் தங்கள் படை பலத்தை அசுர வேகத்தில் பெருக்கிக்கொண்டதொடு தாங்கள் நம்பிய கம்யூனிசத்தை உலக நாடுகளில் திணிக்க முற்பட்டதுதான். ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு மற்ற நாடுகள் வேண்டுமானால் அடிபணியலாம். ஆனால் கம்யூனிசத்தை வெறுத்த அமெரிக்காவோ ரஷ்யாவின் ஆயுத குவிப்பை எதிர்கொள்ள நேரடி ஆயுத போட்டா போட்டியில் இறங்கியது. அதன் விளைவுதான் 'Clod War' எனப்படும் பனிப்போர்.

பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அணு ஆயுத போர் நீளுமோ? மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ? என்று உலகம் அஞ்சிய நாட்கள் ஏராளம். ஆனால் 1917-ஆம் ஆண்டு உலகுக்கு முன்னுதாரணமான ஆட்சி வழங்கும் உறுதியோடு லெனின் மூலம் ரஷ்யாவில் வேருன்றிய கம்யூனிசம் 74 ஆண்டுகளுக்குப் பிறகு 1991-ஆம் ஆண்டில் அடியோடு வேருறந்து போகும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆம் அந்த ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்டது. கம்யூனிசம் சிதைந்து போனது பனிப்போரும் ஆவியாகி காற்றில் கரைந்து போனது. ஆயுத போட்டா போட்டியிலிருந்து விடுபட்ட உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. அதையெல்லாம் சாத்தியமாக்கியது தனி ஒரு மனிதனின் தெளிந்த பார்வையும், உள்நாட்டு பிரச்சினைகளுக்கு அடக்குமுறை மட்டுமே பதிலாகாது என்ற நம்பிக்கையும், உலகத்திற்கு தேவை பொருளாதார வளர்ச்சியே அன்றி ஆயுத வளர்ச்சி அல்ல என்ற தொலைநோக்கும்தான்.

1990-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள் சோவியத் யூனியனிலிருந்து தான் சுதந்திரம் பெற்று விட்டதாக தையரியமாக அறிவித்தது  Lithuania. கொர்பசோவ் அதை விரும்பாவிட்டாலும் படைபலத்தை பயன்படுத்தவில்லை. அந்த ஆண்டு இறுதிக்குள் சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த 15 குடியரசுகளும் சுதந்திர பிரகடனம் செய்தன. சோவியத் யூனியனின் சிதைவை வைத்த கண் வாங்காமல் உலகம் பார்த்துக் கொண்டிருக்க கொதிப்படைந்த சில பழமைவாத கம்யூனிஸ்டுகளும், இராணுவத் தளபதிகளும் 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு கொர்பசோவை கைது செய்தனர். ஆனால் சில தலைவர்களும் சோவியத் மக்களும் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த முயற்சி பிசுபிசுத்து போனது. அதன் பிறகு ரஷ்யாவில் அசுர வேகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. கம்யூனிஸ்டு ஆட்சி தடை செய்யப்பட்டது அதன் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஆண்டு இறுதிக்குள் அத்தனை சோவியத் குடியரசுகளும் தனித்தனியாக பிரிந்தன.
சோவியத் ரஷ்யா மீண்டும் உதயமாக மக்கள் ஆதரவு
பெரும்பாலான ரஷிய குடிமக்கள், சோவியத் ஒன்றியத்தின் சரிவு ஒரு கெட்ட விஷயம் என்றும் அதனைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் நம்புகின்றனர்,  இன்னும் பல மக்கள் சோசியலிச அமைப்பையும் சோவியத் அரசையும் மீட்டெடுப்பதை வரவேற்கத் தயாராக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

தனியார் ஆய்வு நிறுவனமான லெவாடா மையம் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி பற்றி எதிர்மறை உணர்வுகளை 56 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டுள்ளனர், 28 சதவீதம் பேர் தங்கள் உணர்வுகள் முற்றிலும் நேர்மறையாக உள்ளதெனவும், 16 சதவிகிதம் பேர் தெளிவான பதில் கொடுக்க இந்த கேள்வி மிகவும் சிக்கலாக இருப்பதாகவும் கூறினர்.

பதிலளித்தவர்களில் 51 சதவீத மக்கள் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத்  தவிர்த்திருக்க முடியும் எனவும்  33 சதவீதம் பேர் அதை தவிர்க்க முடியாதது எனவும் ஆராய்ச்சியாளர்களிடம் கூறினர். 17 சதவீதம் மக்கள் சிலர் பதில் சொல்ல முடியவில்லை என்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் பொது மக்களிடம் சோவியத் ஒன்றியத்தை மீட்டெடுப்பதை விரும்புவார்களா என்று கேட்டபோது, 58 சதவீதம் பேர் ஆமாம் என்றார்கள், 14 சதவீதம் மக்கள் அத்தகைய திட்டம் இந்நேரத்தில் மிகவும் யதார்த்தமானதாக கருதப்படுகிறது என்று கூறினர். 44 சதவீதம் மக்கள் சோவியத் ஒன்றியத்தின் மீட்டெடுப்பு விரும்பத்தக்கதாக இருந்தாலும் இயலாதது என்றனர். 31 சதவீத மக்கள் அந்த மாதிரி நிகழ்வுகள் நடந்தால் சந்தோஷமாக இருக்காது என்று கூறினர். 10 சதவீதம் மக்கள் கேள்விக்கு ஒரு எளிய பதிலை கொடுக்க முடியவில்லை.

ஏப்ரல் 2005 இல், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ரஷிய பாராளுமன்றத்தில் ஒரு பொது அறிவிப்பில், சோவியத் ரஷியாவின் சரிவைப் பற்றி கூறுகையில்,    “[கடந்த] நூற்றாண்டின் மிகப்பெரிய பூகோள அரசியல் பேரழிவு” என்றார். இந்த மேற்கோள் சர்வதேச செய்தி ஊடகங்களால் விநியோகிக்கப்பட்டு, சோசலிசத்திற்கு திரும்ப எண்ணும் கிரெம்ளினின் திட்டங்களை அது வெளிப்படுத்துகிறது என்று கூறினர். எனினும், ரஷிய தலைவர் மீண்டும் மீண்டும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவர் மக்களின் தினசரி வாழ்வில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைப் பற்றி  கூறியதாக விளக்கம் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டில், புட்டின் ஒரு ஆவணப்படத்திற்காக பேட்டி எடுக்கப்பட்ட போது சோவியத் ஒன்றியத்தை மீண்டும் கொண்டு வரும் திட்டம் ரஷ்யாவிற்கு இல்லை என்று நேரடியாக கூறி, ஆனால் இதை யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை என்றும் புகார் கூறினார்.

அனைவரும் விரும்பும் சோவியத்யூனியன் வரலாறு கீழே சுருக்கமாக தொகுத்து கொடுக்கப் பட்டுள்ளது… சற்றுப் பொறுமையுடன் படியுங்கள்..

சோவியத் புரட்சி என்றால் என்ன ?

உலகியல் வரலாற்றிலே ஜரோப்பிய நாகரிகமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப் படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு நாடுகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில் புரட்சிகள் இடம் பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையானது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மையாகும். அவற்றுள் வரலாற்றில் தடம்  பதித்த முக்கியமான புரட்சிகளுள் ஒன்றாக ரஷ்யாவில் ஏற்பட்ட ‘சோசலிசப் புரட்சி’ விளங்குகிறது.

லெனின்
ஜரோப்பிய வரலாற்றில் மிகவும் விசாலமான பரந்த நிலப்பரப்பினைக் கொண்ட தேசமாக விளங்குவது  ரஷ்யாவாகும்.  ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டு, நவம்பர் 07 ஆம் தேதி, ‘போர் நிறுத்தம், உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம்’ போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட புரட்சிதான் ‘சோசலிசப் புரட்சி’ என அழைக்கப் படுகிறது.

ரஷ்யாவில் பல ஆண்டுகளாக ஜார் மன்னர்கள் சர்வாதிகார ஆட்சியினை மேற்கொண்டு வந்தார்கள். வளங்களைச் சூறையாடி ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். மக்களையோ வறுமையில் தள்ளினார்கள். அவர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தார்கள்.

ஸ்டாலின்
அவர்கள் மக்களின் நாடித்துடிப்பை அறியாமல் தான்தோன்றித் தனமாக ஆட்சி நடத்தினார்கள். அதனால் மக்கள் மத்தியில் பஞ்சம், பசி, பட்டினி என்பன தலை விரித்தாடின. இந் நிலைமை மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தினை உண்டு பண்ணியது. அதனால் ஜார் மன்னர்களின் வரம்பு மீறிய அதிகாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடனும்,  பாட்டாளி வர்க்கத்தினர் தமது சுய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் 1917 ஆம் ஆண்டு, நவம்பர், 07 ஆம் தேதி லெனினுடைய தலைமையில் ரஷ்யாவில் வெடித்த புரட்சிதான் சோசலிசப் புரட்சியாகும். ரஷ்ய வரலாற்றில் முதன் முறையாக தொழிலாளி வர்க்கத்தினரின் அடக்கு முறைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்ததும், உலகியல் வரலாற்றில் தொழிலாளர்களின் முக்கியத்துவத்தினைப் படம் பிடித்துக் காட்டியதும் சோசலிசப் புரட்சிதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.


சோசலிஸ்டு நாடு:

உலக வல்லரசுகளில் ஒன்று ரஷியா. சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்டு கட்சியின் தந்தையான லெனின், ரஷியாவை உருவாக்கினார். கம்ïனிஸ்டு கொள்கைகளை அடிப்படையாக கொண்ட சோசலிஸ்டு நாடு (யு.எஸ்.எஸ்.ஆர்) என்று அழைக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அண்டை நாடுகளைச்சேர்ந்த பல பகுதிகளையும், சில குட்டி நாடுகளையும் இணைத்துக் கொண்டது. இதனால் ரஷியா உலகின் மிகப் பெரிய நாடாக விளங்கியது. இதன் நிலப்பரப்பு ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் பரவி இருந்தது.

இந்த சோவியத் யூனியனில் கம்யூனிஸ்டு ஆட்சி நடைபெற்றது. இந்த நாட்டுக்குள் என்ன நடைபெறுகிறது என்பது வெளி உலகுக்கு தெரியவராது. இதனால் “இரும்பு திரை” நாடு என்று வர்ணிக்கப்பட்டது.

ரஷியக் கூட்டமைப்பில், ரஷியா, பைலோருஷியா, அர்மீனியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்தான், துர்க் மேனிஸ்தான், தஜிக்ஸ்தான், கஜகஸ்தான், கீர்க்கிஸ்தான், ஜார்ஜியா, உக்ரைன், மால் டோவியா, எஸ்டோனியா, லட்வியா, லிதுவேனியா ஆகிய 15 மாநிலங்கள் இருந்தன.

இதில் இடம் பெற்ற லிது வேனியா, லட்வியா, எஸ் டோனியா ஆகிய மாநிலங்கள் (இதற்கு பால்டிக் நாடுகள் என்று பெயர்) ஸ்டாலின் ஆட்சி காலத்தில் ரஷியாவுடன் இணைந்தன.


கார்பசேவின் அமைதியை நோக்கிய பயணமும் , சோவியத் ரஷியாவின் வீழ்ச்சியும்:



கார்பசேவ் ரஷியாவில் உள்ள பிரிவோல்னயா என்ற கிராமத்தில் 1931_ம் ஆண்டு மார்ச் 2_ந்தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். மாணவ பருவத்திலேயே பொது வாழ்வில் ஈடுபட்ட அவர் 21_ம் வயதில் கம்ïனிஸ்டு கட்சியில் உறுப்பினரானார். பிறகு கட்சியின் முக்கிய பொறுப்புகளை ஏற்றார்.

ரஷிய அதிபராக 1984_ம் ஆண்டு கார்பசேவ் பதவி ஏற்றார். அவர் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கம்யூனிஸ்டு ஆட்சியின் அதிகாரப்பிடியை தளர்த்தியதோடு, உலக அமைதி முயற்சியிலும் இறங்கினார். அணு ஆயுதங்களை ஒழிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்தார். இதனால் சமாதானத்துக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்தது. உலக நாடுகளில் அவர் புகழ் ஓங்கியது. 6 ஆண்டுகள் சுமுகமாக நகர்ந்தன.

ஆனால் எதிர்பாராத சூழ்நிலையால் ரஷியாவில் உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டது. உள்நாட்டில் அவருக்கு எதிர்ப்பு கிளம்ப தொடங்கியது. 1991ம் ஆண்டு மத்தியில் அது உச்சக் கட்டத்தை அடைந்தது.

கார்பசேவ் ஜனாதிபதி ஆகும் வரை இருந்த பல்வேறு அதிபர்களிடமும் அதிகாரம் குவிந்து இருந்ததாலும், உலகின் மிகப் பெரிய வல்லரசாக ரஷியா திகழ்ந்ததாலும், இணைந்து இருந்த குட்டி நாடுகள் பிரிந்து போக ஆசைப்படாமல் இருந்தன.

கார்பசேவ் அதிபரானது முதல் அவரது அமைதிக் கொள்கையும், உணவுத்தட்டுப்பாடும் பல மாநிலங்களுக்கு பிரிந்து போகும் எண்ணத்தையும், தைரியத்தையும் கொடுத்தன. பால்டிக் நாடுகள் எனப்படும் லிதுவேனியா, லட்வியா, எஸ்டோனியா ஆகிய மாநிலங்கள் முதல் சுதந்திர குரலை எழுப்பின. அதன் பிறகு ஜார்ஜியாவும் சுதந்திரம் கோரியது.

சுதந்திரம் கோரி போர்க்கொடி உயர்த்திய மாநிலங்கள் இந்த 4 மாநிலங்களும் சுதந்திரப் பிரகடனம் செய்தன. இவற்றுக்கு தூதரக அங்கீகாரம் வழங்க ஜப்பான், பிரான்சு, இங்கிலாந்து, போலந்து, நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் முன்வந்தன.

பால்டிக் நாடுகளுக்கு விரைவில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று ரஷியாவை அமெரிக்கா வலியுறுத்தியது. சில மாநிலங்கள் சுதந்திர பிரகடனம் செய்தது கார்ப சேவுக்கு தலைவலியைக் கொடுத்தது. எனவே, அதி காரங்களை பரவலாக்கி மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

கம்யூனிஸ்டு கொள்கையில் தீவிரம் கொண்ட முன்னணி தலைவர்கள் சிலருக்கு இது பிடிக்கவில்லை. கார்பசேவினால் பதவியில் அமர்த்தப்பட்டவர்களே அவருக்கு எதிராக ஆட்சியை கவிழ்க்க முயன்றனர். திடீரென்று கார்பசேவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி செய்தனர்.

கம்யூனிஸ்டு தீவிரவாதிகள்:

கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் முயற்சியை ரஷிய மாநில ஜனாதிபதியாக இருந்த எல்ட்சின் எதிர்த்து நின்றார். கம்யூனிஸ்டு ஆட்சி முறையால் ஏமாற்றம் அடைந்து இருந்த மக்கள் கம்யூனிஸ்டு தீவிரவாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்க ராணுவம் மறுத்து விட்டது. இதனால் கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் முயற்சி தோற்றுப்போனது. கார்பசேவ் விடுவிக்கப்பட்டார்.

புரட்சியை நடத்திய 8 முன்னணி தலைவர்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. 6 பேர் கைது செய்யப்பட்டார்கள். புரட்சி தோல்வி அடைந்ததால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். புதிய பிரதமர் மற்றும் மந்திரிகளை கார்பசேவ் நியமித்தார். அவருக்கு கம்யூனிஸ்டு உயர்மட்ட குழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் கார்பசேவ்வின் தலைமை பலவீனம் அடைந்தது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆர் மீனியா, மால்டோவியா, பைலோருஷியா, உஸ்பெக்கிஸ் தான், உக்ரைன் ஆகிய 5 மாநிலங்களும் சுதந்திர பிரகடனம் வெளியிட்டன. சுதந்திர நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்ட மாநிலத் தலைவர்களின் மாநாடு, கஜகஸ்தான் மாநில தலைநகரான “அல்மா அடா”வில் நடந்தது.

மொத்தம் உள்ள 15 மாநிலங்களில் பால்டிக் பகுதியைச்சேர்ந்த லிதுவேனியா, எஸ்டோனியா, லட்வியா ஆகியவை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ரஷியா, உக்ரைன், கஜகஸ் தான், அஜர்பைஜான், அர் மினியா உள்பட 11 மாநிலங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த 11 மாநிலத் தலைவர்களும் கூடி, தங்கள் மாநிலங்கள் சுதந்திர நாடுகள் என்றும், சோவியத் யூனியன் மறைத்து விட்டது என்றும் பிரகடனப்படுத்தினர். “காமன்வெல்த்” என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்திக்கொள்வது என்றும் தீர்மானித்தனர். இந்த 11 மாநில தலைவர்கள் சார்பில் எல்ட்சின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“புதிய கூட்டமைப்பில் கார்பசேவுக்கு இடம் கிடையாது. அவர் பதவி விலக வேண்டியதுதான். சாகும் வரை பதவியில் இருப்பது என்ற மரபு 1920ல் தொடங்கியது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்புகிறோம்.

சோவியத் யூனியனுக்கு சொந்தமான அணு ஆயுதங்களும், அணு உலைகளும் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை 11 நாட்டுத் தலைவர்களும் கூட்டாக கட்டுப்படுத்துவார்கள். காமன்வெல்த் கூட்ட மைப்பின் உயர் தலைமை பீடமாக 11 நாட்டு ஜனாதிபதிகளின் குழு இருக்கும். சம வாய்ப்பு, சம அந்தஸ்து அளிக்கப்படும். ஐ.நா. பாதுகாப்பு சபையில் சோவியத் ïனியனுக்குப் பதிலாக ரஷியா இடம் பெறும்.”

இவ்வாறு எல்ட்சின் கூறினார்.

இதனால் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது. அதன் அதிபரான கார்பசேவும் தனது பதவியை டிசம்பர் 25_ந்தேதி இரவு ராஜினாமா செய்தார். டெலிவிஷன் மூலம் கார்பசேவ் தனது ராஜினாமாவை அறிவித்தார். “நான் ராஜினாமா செய்வது என்ற தீர்மானத்துக்கு வந்தது தவிர்க்க முடியாதது” என்று கூறினார். புதிய கூட்டமைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

சோவியத் யூனியனில் இருக்கும் 30 ஆயிரம் அணு ஆயுதங்களின் “கட்டுப்பாடு” அதுவரை கார்பசேவிடம் இருந்தது. அவர் பதவி விலகியதும் “சகட்டுப்பாட்டை ரஷிய ஜனாதிபதி எல்ட்சினிடம் ஒப்படைத்தார்.

ராஜினாமா செய்த கார்பசேவுக்கு மாதா மாதம் ரூ.1 லட்சம் பென்ஷனாக வழங்கப்படும் என்றும், அவர் வசிப்பதற்கு அரசாங்க வீடும், கோடை காலத்தில் ஓய்வு எடுப்பதற்கு குளிர்பிரதேசத்தில் ஒரு வீடும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.







தற்போதைய ரஷ்யாவும் அதிபர் விளாடிமிர் புட்டின்…⤥

தன்னுடைய எல்லையைப் பல்வேறு திசைகளில் அதிகரித்துக் கொள்ள ரஷ்யா முயற்சி செய்கிறது. முதலில் ஜார்ஜியா, அடுத்ததாக கிரிமியா இப்போது கிழக்கு உக்ரைன். உக்ரைனிலேயே ரஷ்ய ஆதரவாளர்கள் கணிசமாக இருப்பதால் பிரச்சினை இப்போ தைக்குத் தீரப் போவதில்லை. இப்போது சிரியாவிலும் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் ரஷ்ய டாங்கிகளை போல...!!!

தொடரும்...

திங்கள், 28 நவம்பர், 2016

அங்கோர் வாட் கோயில் - தமிழர்களின் பொக்கிஷம்

இதை கட்டியது ஒரு தமிழ்  மன்னன்
இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில்.
அங்கோர் வாட் கோயில்  உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ளது. உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ்  மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார்.

இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றாது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில்.

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் துவங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்களில் நிறைவு பெற்றது. கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார்.
பின்பு ஆறாம் “ஜெயவர்மன்” ஆட்சிக்கு வந்த பிறகு “புத்த” கோயிலாக மாறிய இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கிவருகிறது.

அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது.

எந்த ஒரு காமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது. மேலே உள்ள புகைப்படமானது பூமியில் இருந்து 1000 அடி மேலே வானத்தில் இருந்து எடுக்கப்பட்டது. 


ந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய
தேசியக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐ பொறித்துள்ளது. 
அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது. இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேசியக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐ பொறித்துள்ளது. எந்த ஒரு காமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது. இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!


இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது
போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 27 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவுடன் கம்போடியாவுக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. காம்புஜராஜா என்ற இந்திய அரசன் கம்போடியா சென்று, மேரோ என்ற பெண்னை மணந்து, இருவரும் இணைந்து அரசாட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. காம்புஜராஜா என்ற பெயரிலிருந்து 'கம்பூசியா' (kampuchea) என்றாகி தற்போது கம்போடியா ஆகி இருக்கிறது. இவர்களின் வழிவந்தவர்களே "கெமிர்" என்ற அரச குடும்பத்தினர் என்று கூறப்படுகிறது.

கோயிலைச் சுற்றி 5 கிமீ சுற்றளவுள்ள அகழி உள்ளது. இதன் ஆழம் 13 அடி. பெரிய கோயிலின் அடித்தளத்தைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர் மிகவும் உயரமாகவோ, குறைந்தோ போகாமல் பாதுகாக்கவும் இது உதவுகிறது. 53 மில்லியன் கன அடி மணலைத் தோண்டி எடுத்து, பல ஆயிரம் மக்கள் உழைப்பினால் இது தோண்டப்பட்டிருக்கிறது. இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.   

கவுண்டின்யா என்ற அரசன், தான் கண்ட கனவின் படி கம்போடியா சென்று, சோமா என்ற பெண்ணை மணந்து, அரசாட்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.அது எப்படியோ தெரியவில்லை. ஆனால் இந்தியாவிலிருந்து இந்து மதம், இந்துக்கடவுளர்கள், இந்தியக் கலைகள், புத்த மதம் எல்லாம் கம்போடியா சென்றிருக்கின்றன. இந்தியா சீனாவை இணைத்த சில்க் ரூட்டில் கம்போடியா இருந்ததால் நம் நாட்டுடன் வாணிகம் இருந்திருக்கிறது. வணிகர்கள் மூலமும் இந்து மதம், புத்த மதம், இந்தியக்கலைகள் அங்கு சென்றிருக்கின்றன.
கி பி 802ல் இரண்டாம் ஜெயவர்மன் என்ற அரசன் தாய்லாந்து, பர்மா, மற்ற நாடுகளின் பல பகுதிகளை வென்று, வங்கக் கடல் வரை "கெமிர்" என்ற பலமிக்க அரசை நிறுவியிருக்கிறான். இந்தக் கெமிர் அரசு ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை சிறப்புடன் இருந்திருக்கிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

ஜெயவர்மன், சூரிய வர்மன், ராஜேந்திர வர்மன், உதயாதித்ய வர்மன் போன்ற அரசர்களின் பெயர்கள், நம் தமிழகத்து அரசர்கள் பெயர் போலவே இருக்கின்றன. சில இடங்களில் உள்ள கல்வெட்டுக்களின் எழுத்துக்கள் பல்லவர்களின் எழுத்துக்கள் போன்று இருக்கின்றன என்று கூறப்படுகிறது. நம் மன்னர்கள் குறிப்பாக ராஜேந்திர சோழன் படையெடுத்து வென்றபோது கட்டினாரா என்று தெரியவில்லை. இவையெல்லாம் அங்கோர் வாட் பற்றி வலைத்தளத்தில் கண்டறிந்த செய்திகள். இந்தச் செய்திகள் எல்லாம் மனதில் உந்த, உலகின் மிகப்பெரிய இந்துக் கோயிலைக் காண மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன்.

சுமார் 500 ஏக்கர் பரப்பளவுள்ள மிகப் பெரிய கோயில். 1113_1160க்குள் இரண்டாம் சூரியவர்மன் என்ற கெமிர் மன்னரால் அங்கோர் வாட் நகரமும், விஷ்ணுவுக்காக மிகப் பெரிய இந்தக் கோயிலும் கட்டப்பட்ட பொழுது அந்தப் பகுதி மிகச் செழிப்புடன் இருந்திருக்க வேண்டும். மதச்சார்புடன் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களுள் உலகில் இதுவே மிகப் பெரியது. அந்நகரத்தில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வாழ்ந்தனர். தொழிற் புரட்சிக்கு முன் இருந்த நகரங்களில் இதுவே மிகப் பெரியது.
அங்கோர் வாட் என்ற பெயர் "nagara vata" என்ற சமஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்திருக்கிறது. இதன் பொருள் கோயில் நகரம் என்பதாகும்.

முற்றிலும் கற்களால் கட்டப்பட்டு, நம் சோழர் காலக் கோயிலைப் போல இருந்த அக்கோயில் மேற்கு பார்த்த வண்ணம் இருக்கிறது. சூரிய உதயத்தின் போது சூரியன் கோயிலின் பின் எழுவது பார்க்கப் பரவசமாயிருக்கும் காட்சி என்று கூறப்பட்டதால் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஆனால் அன்று மேகமூட்டமாய் இருந்ததால் சூரிய உதயம் காண முடியவில்லை. சற்று மேலே சென்றபின் தான் எட்டிப் பார்த்தான். 

அகழிக்கு முன்னால் பாதுகாப்பிற்காக சிங்கங்களின் சிலைகள் உள்ளன. ஐந்து தலைநாகமும் அதன் நீளமான உடலும் கைப்பிடிச் சுவராக அமைக்கப்பட்டுள்ளன. அகழியைத் தாண்டி, உள்ளே சற்று தூரம் சென்றபின் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.
தூரத்தில் இருந்து பார்த்தால் தஞ்சைக் கோயில் சுற்று மண்டபம் போல் தூண்களுடன் தெரிகிறது. உயரமான பீடத்தின் மேல் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் உள்ள கோயில் சுற்றுச்சுவர் முழுவதும் நீளமாக, பெரியளவில் இராமாயண, மகாபாரத இதிகாசக் காட்சிகள், பாற்கடல் கடைவது போன்றவை ஓவியம் போன்று, சிறிதளவு புடைத்த சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. போர்களத்தில விபீஷணன், லட்சுமணனுடன் இரரமன், இராவணனுடன் போருக்கு நிற்பது, அனுமன் சஞ்சீவி மலையுடன் வருவது எல்லாம் தெளிவாகத் தெரிந்தது. ஒவ்வொன்றையும் நின்று நிதானமாகப் பார்க்க நேரம் தான் இல்லை.


மாபெரும் கோயில் அது. அடுத்த தளத்தில் நூலகம் என்று சில கல்கட்டடங்கள் காட்டப்படுகினறன. ஆங்காங்கே அப்சரா சிற்பங்கள், அலங்காரக் கற்பலகணிகள் இருக்கின்றன. சுமார் 1800 அப்சரா சிற்பங்களும், அவற்றில் சுமார் 300விதமான தலை அலங்காரங்கள் இருக்கின்றனவாம். சில இடங்களில புத்தர் சிற்பங்கள் வைக்கப்பட்டு தற்பொழுதும் வழிபாடு நடந்து வருகிறது. இரண்டாம் தளத்தைக் கடந்து நடுப்பகுதிக்கு வந்தால் அங்கு தான் 200 அடிக்கு மேல் உயரம் உள்ள நடுக் கோபுரமும், அதைச் சுற்றி 4 சிறிய கோபுரங்களும் உள்ளன. தஞ்சைக் கோயில் விமானம் "தட்சிண மேரு" என்று கூறப்படுவதைப் போல் இதுவும் "மேரு மலை" - கடவுளின் இருப்பிடம் என்று கூறப்படுகிறது. இங்கிருந்து கடவுளும், அவரது பிரதிநிதியாக அரசர், தேவராஜாவாக இருந்து ஆட்சி நடத்துவதாகக் கூறப்படுகிறது.

இந்த மேல் தளத்திற்கு செங்குத்தான படிகள் ஏறிச் செல்ல வேண்டும். அங்கு ஏறிச் சென்று சுற்றிப் பார்த்தால் கோவிலும் அதைச் சுற்றிலுமுள்ள மரங்களும் மிக அழகாக இருக்கிறது. இங்கு பெரிய கற் கோபுரத்தின் அடியில் மூலவராக விஷ்ணு எட்டு கரங்களுடன் இருக்கிறார். காஞ்சிக் கோயில்களிலும் விஷ்ணுவுக்கு எட்டு கரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவின் திசை மேற்கு என்பதால் மேற்கு நோக்கிக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கோயில் மேற்கு நோக்கி இருப்பதை வைத்து இக்கோயில் மன்னன் இறந்த பின், அவனது அஸ்தியை வைக்கும் இடமாகவும் கட்டப்பட்டிருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

கோயில் முழுவதும் கற்களைப் பயன்படுத்தியே கட்டப்பட்டிருக்கிறது. உட்பகுதி "லேட்டரைட் "(laterite) எனப்படும் எரிமலைக் கற்களாலும், மேற்பகுதி செதுக்குவதற்கு வசதியாக மணற்கற்களாலும்(sandstones) கட்டப்பட்டிருக்கிறது. அங்கிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள குலன் (kulen hills) மலையிலிருந்து நதி வழியாகக் கற்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.
பெரும்பாலான கற்களில் துளைகள் காணப்படுகின்றன. அவற்றில் மரக் கொம்புகள் செருகி தூக்கியோ இழுத்தோ உபயோகித்திருக்கிறார்கள். கற்களைச் சேர்க்க சாந்தோ, மண்ணோ பூசவில்லை. ஒன்றை ஒன்று தேய்த்தே நேர்த்தியாக இடைவெளி இல்லாமல் சேர்த்திருக்கிறார்கள். நவீன கருவிகள் இல்லாமல் உடல் உழைப்பை மட்டுமே பயன்படுத்தி இவ்வாறெல்லாம் செய்தது விந்தை தான்.

கோயிலின் கூரைப்பகுதி, கோபுரப்பகுதியில் கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, உட்கூடு இருப்பது போல் அமைத்திருக்கிறார்கள். தஞ்சை மற்றும் சோழர் கால விமானங்கள், கோபுரங்கள்
கற்களால் உட்கூடு உள்ளபடி தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது கோபுரத்தின் கீழே இருந்து அண்ணாந்து பார்த்தால் மேற்பகுதி வரை தெரியும்.
முதலில் விஷ்ணு கோயிலாகக் கட்டப்பட்டது, மன்னர்கள் புத்த மதத்திற்கு மாறிய போது கோயிலும் மஹாயான புத்தக் கோயிலாக மாற்றப் பட்டது. சைவத்திற்குரிய லிங்கம், ஆவுடையாரும் சில இடங்களில் காணப் படுகின்றன. பின் 14ம் நூற்றாண்டில் இலஙகையிலிருந்து வந்த தேரவாத புத்த மதத்தைச் (theravada buddhism)சார்ந்த கோயிலாகத் தற்போது இருக்கிறது.

9ம் நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டு வரை சிறப்புடன் இந்தப் பகுதி இருந்து வந்திருக்கிறது. அதன் பின் தாய்லாந்துடன் போர் மற்றும் பல காரணங்களால் தலைநகர் நாம்பென்னிற்கு மாற்றப் பட்டிருக்கிறது. அதன்பின் அங்கோர்வாட் நகரின் முக்கியத்துவம் குறைந்து உள்ளூர் மக்கள் மட்டுமே அறிந்த இடமாகக் கோயில் மாறியிருக்கிறது. 1900களில் பிரெஞ்சுக்காரர்கள் இக் கலைப் பொக்கிஷத்தைக் கண்டறிந்து, உலகிற்கு அறிவிக்கும் வரையில் மரங்கள் வளர்ந்து, சிதைவுற்ற நிலையில் இருந்திருக்கிறது. 

பிரெஞ்சுக்காரர்கள் கோயிலை பழைய பாணி மாறாமல் சீரமைத்து இருக்கிறார்கள். வியட்நாம் போரையும் உள்நாட்டுப் போரையும் தாங்கி கோயில் நிமிர்ந்து நிற்கிறது. இப்பொழுதும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2016 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!
          

சீனா - வியட்நாம் - யுத்த திட்டங்கள்

இணையத்தில் வெளியாகும் "யுத்த திட்டங்கள்" பற்றிய வாக்குவாதம் சீனா-வியட்நாம் பதட்டங்களை விளக்கமாக கூறுகிறது. (Row over Internet "war plans" highlights China-Vietnam tensions)

வியட்நாமுடனான ஒரு யுத்தம் குறித்து சீனாவில் நடக்கும் இணைய கலந்துரையாடல்களுக்கு ஹனாய் (வியட்நாமின் தலைநகர்) உத்தியோகபூர்வமாக கண்டனம் தெரிவித்த பின்னர், கடந்த இரண்டு வாரங்களில் வியட்நாம் மற்றும் சீனா இடையிலான உறவுகள் மோசமடைந்தன. சீன தேசியவாத வெறியர்களின் ஒரு சிறு அடுக்குகளால் மட்டுமே இந்த கலந்துரையாடல்கள் வலைத் தளத்தில் பதிக்கப்பட்டிருந்த போதினும், தெற்கு சீன கடல் பிராந்தியம் உட்பட, மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களில் முரண்பாடு கொண்டுள்ள இந்த இரு நாடுகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களை இந்நிகழ்ச்சி அடிக்கோடிடுகிறது.


வியட்நாம் சீனா சிக்கலுக்குரிய எல்லை பகுதிகள்
செப்டம்பர் 5ல், South China Morning Post-TM வெளியான தகவலின்படி, ஆகஸ்டிலிருந்து சீன வலைத் தளங்களில் வரும் "யுத்த திட்டங்கள்" குறித்து விவரங்கள் அளிக்க மூத்த சீன இராஜாங்க பிரதிநிதிகளுக்கு ஹனாய் இருமுறை அழைப்பு ஆணை விடுத்தது. ஐந்து நாட்களுக்கான ஏவுகணை தாக்குதல்களுடன் தொடங்கி ஒரு முழு வீச்சிலான வியட்நாம்மீதான தாக்குதலின் சாத்தியக்கூறுகளை இந்த யுத்த திட்டங்கள் வரையறுத்திருந்தன. கடற்படை முற்றுகை மற்றும் வியட்நாமின் தொலைதொடர்பு சேவை முடக்கம் ஆகியவற்றை தொடர்ந்து, சீனாவின் யூன்னான் மற்றும் கியாங்சி மாகாணங்களிலிருந்தும் மற்றும் தெற்கு சீன கடலில் இருந்தும் 310,000 சீன துருப்புகள் வடக்கு வியட்நாமிற்குள் நுழையலாம் என்று இந்த திட்டங்கள் குறிப்பிட்டன.

சீனாவின் ஒரு முக்கிய செய்தி வலைத்தளமான Sina.com மற்றும் பல பிற தளங்களிலும் இந்த பதிவுகள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று பின்வருமாறு குறிப்பிட்டது: "சீன மாகாணங்களின் பாதுகாப்பிற்கு வியட்நாம் ஒரு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் சீனாவின் அமைதியான முன்னேற்றத்திற்கும் வியட்நாம் ஒரு தடையாக உள்ளது... தென்கிழக்கு ஆசியா முழுமைக்கும் வியட்நாம் ஒரு மூலோபாய மையமாக உள்ளதால், தென்கிழக்கு ஆசியா முழுமையும் மீண்டும் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டுமானால், முதலில் வியட்நாம் கைப்பற்றப்பட வேண்டும்."

இந்த தீவிர தேசியவாதிகள் பெய்ஜிங்கின் கொள்கை வடிவாக்கத்தில் நேரடியாக எவ்வித செல்வாக்கையும் பெற்றிருக்கவில்லை என்ற போதினும், உண்மையில், சீனாவின் கடுமையான இணைய போலீஸின் எவ்வித தலையீடும் இல்லாமல் இதுபோன்ற பொது விவாதங்கள் பதிப்பிக்கப்பட்டது, உத்தியோகப்பூர்வ அனுமதியின் ஒரு கோணத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது. சீனா ஒரு முக்கிய சக்தியாக வளர்வதில் தான், தங்களின் எதிர்காலம் உள்ளடங்கி இருப்பதாக காணும் சீனாவின் நடுத்தர வர்க்கங்களிடையே ஆதரவை பெறுவதற்கான ஒரு புதிய அடித்தளத்திற்காக, பெய்ஜிங் நினைவுப்பூர்வமாக தேசியவாதத்தை ஊக்குவித்து வருகிறது.

பெய்ஜிங் மற்றும் ஹனாய் இரண்டுமே உடனடியாக அந்த பிரச்சனையைத் தணிவிக்க முயற்சித்தன. வியட்நாமின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லீ டங் கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பாதிக்கும் எதிர்மறை கட்டுரைகளைத் தடுக்க சீனா உறுதியளித்திருப்பதாக அறிவித்தார். அதே சமயம், சீனாவின் ஒரு அரசாங்க செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த பதிவுகள், மக்களில் தொல்லை தரும் ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள், "இது எந்த வகையிலும் சீனாவின் நிலைப்பாட்டை குறிப்பவையல்ல"என்றார்.

South China Morning Post இதழிடம் சீனாவின் ஓர் இராணுவ நிபுணர் Song Xiaojunபேசும் போது, "யுத்த திட்டங்களை" ஒரு "பகடியாக" கூறி நிராகரித்தார். எவ்வாறிருப்பினும், தீங்கு விளைவிக்க கூடிய சதித்திட்ட கோட்பாடுகளைத் தவிர்ப்பதற்காக பொதுக்கருத்துக்களை நெறிப்படுத்த சீன அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்த போதினும், வியட்நாமுடன் பதட்டங்கள் நிலவுவதாக Song குறிப்பிட்டார்."சீனா மற்றும் வியட்நாம் இரண்டும் ஒரே மாதிரியான அரசியல் முறைகளை கொண்டுள்ளன. எனவே இரண்டு நாடுகளுக்கும் பொது எதிரியான அமெரிக்காவை எதிர்க்க இவை ஒன்றுபட வேண்டும். வளர்ந்து வரும் சீனாவிற்கு எதிராக வியட்நாமைத் திருப்ப தெளிவாக இதில் அமெரிக்கா விளையாடி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

சீனா மீதான அமெரிக்காவின் மூலோபாய சுற்றிவளைப்புகளின் ஒரு பகுதியாக, அது வியட்நாமுடன் உறவுகளை வலுப்படுத்தி வருகிறது என்ற அரசாங்க வட்டாரங்களின் பரந்த கவலைகளை தான் Songன் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. தெற்கு சீன கடலிலுள்ள ஸ்ப்ராட்லி மற்றும் பாராசெல் தீவுகள் மீது பதட்டங்கள் அதிகரித்து வருக்கின்றன. ஜூலையில், தெற்கு சீன கடலின் பிரச்சனைக்குரிய கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை அபிவிருத்தி செய்வதற்கு அமெரிக்க எண்ணெய் நிறுவனமான Exxon Mobil உடன் ஹனோய் செய்து கொண்ட ஓர் உடன்படிக்கைக்கு பெய்ஜிங் கண்டனம் தெரிவித்தது. எண்ணெய் வயல் மற்றும் குழாய் அமைப்பு திட்டங்களுக்கு ஒப்பந்த புள்ளிகளை அளிக்குமாறு மேற்கத்திய மற்றும் ஆசிய எண்ணெய் பெருநிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, ஸ்ப்ராட்லி தீவுகள் மீதான இறையாண்மையை வியாட்நாமின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிவித்தது.

பெய்ஜிங்கைப் போலவே, ஹனோயும் நாட்டுப்பற்றை ஊக்குவித்து வருகிறது. ஸ்பார்ட்லி மற்றும் பாராசெல் தீவுகளை சீனாவின் ஹைனன் மாகாணத்துடன் பெய்ஜிங் உத்தியோகப்பூர்வமாக இணைத்த பின்னர், கடந்த டிசம்பரில் நூற்றுக்கணக்கான வியட்நாம் மாணவர்கள் சீன எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினார்கள். ஹனாய்,"சீன ஆக்கிரமிப்புக்கு" எதிராய் நிற்க வேண்டும் என்று போராட்டகாரர்கள் வற்புறுத்தினார்கள்.

கசப்பான வரலாறு

இந்த இரண்டு ஸ்ராலினிச ஆட்சிகளுக்கு இடையிலான உறவுகளின் வரலாறானது குறிப்பிடத்தக்க வேதனைகளின் ஒன்றாக விளங்குகிறது.
1960களின் தொடக்கம் வரை, சீன மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்டு கட்சிகள் உத்தியோகப்பூர்வமாக சோவியத் அணிக்குள் இருந்தன. எவ்வாறிருப்பினும், 1953ல் பிரெஞ்சு முன்மொழிந்த வியட்நாமிய பிரிவினையை ஏற்க ஹோ சி- மின்- ஐ வற்புறுத்தி, ஏகாதிபத்திய சக்திகளுடனான தங்கள் பேரங்களுக்கு, மாஸ்கோவை போலவே, பெய்ஜிங்கும் வியட்நாமுக்குள் காலனித்துவ எதிர்ப்பு போராட்டத்தை பகடைக்காயாக நடத்திக் கொண்டது. இந்த உடன்படிக்கை, ஓர் ஊழல்மிக்க தெற்கு வியட்நாம் சர்வாதிகாரத்திற்கு ஆதரவளிப்பதில் பிரான்ஸிற்கு பதிலாக அமெரிக்காவிற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது; இறுதியில், இது 1965ல் நேரடியாக அமெரிக்க இராணுவத்தின் தலையீட்டிற்கும், மில்லியன் கணக்கான வியட்நாமியர்களின் மரணத்திற்கும் இட்டு சென்றது.
1960களில் ஏற்பட்ட சீன-சோவியத் பிளவில், மாஸ்கோ பெய்ஜிங்கிற்கு எதிராக வடக்கு வியட்நாம் பக்கம் நின்றது. சோவியத் ஒன்றியத்துடனான தீவிரமடைந்த பதட்டங்களும், சொந்த நாட்டில் இருந்த பொருளாதார பிரச்சனைகளும், 1972ல் மீண்டும் அமெரிக்காவுடனான உறவை ஏற்படுத்த மாவோ சே துங்கை இட்டு சென்றது. நிக்சன் நிர்வாகத்தை பொறுத்தவரை, வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தின் தோல்வியினால் ஆசியாவிலிருந்து வெளியேறுவதில் சீனாவின் ஆதரவைத் தக்கவைப்பது தான் இந்த உடன்படிக்கை ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக இருந்தது.
1979 பெப்ரவரியில், கம்போடியாவில் பெய்ஜிங் ஆதரவான பொல்-போட் ஆட்சியை வீழ்த்தியதற்கு பிரதிபலிப்பாக சீனா வியட்நாம் மீது யுத்தம் தொடுத்தது. 200,000த்திற்கும் மேலான சீன துருப்புகள் வடக்கு வியட்நாம் மீது தாக்குதல் நடத்தின. கடுமையான யுத்தத்திற்கு இட்டு சென்ற இந்நடவடிக்கையில், ஆயிரக்கணக்கான வீரர்களும், பல வியட்நாம் குடிமக்களும் கூட உயிரிழந்தனர். Deng Xiaoping தமது வாஷிங்டன் விஜயத்திற்கு சில வாரங்களுக்கு பின்னர், அவர் அறிவித்த "சந்தை சீர்திருத்தத்தை" தொடங்கிய வெறும் இரண்டு மாதங்களில் பெய்ஜிங் இந்த யுத்தத்தை தொடங்கியது.
சீன துருப்புகளைத் திரும்ப பெறுவதையும் உள்ளடக்கிய பொசுக்கிய புவி கொள்கையானது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஆத்திரத்தை தான் அதிகப்படுத்தியது. உலகின் மிகப்பெரிய போர் இல்லாத காலத்து நிரந்தர சேனைகளில் ஒன்றை வியட்நாம் தொடர்ந்து பராமரித்து வருவதற்கு, சீனா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் தான் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. 1980களில் தொடர்ந்து வந்த பரவலான சிறுசிறு மோதல்கள், ஹனாயின் சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் சிதைவிற்கு பின்னர் படிப்படியாக குறைந்து போயின.

வியட்நாமின் தொழிலாளர்களும், மாணவர்களும் கூட இந்த உதாரணத்தை பின்பற்றலாம் என்ற அச்சம் சிறிதுமின்றி, 1989ல், தியனன்மென் (Tiananmen)சதுக்கத்தில் போராட்டக்காரர்களை கொன்று குவித்த பெய்ஜிங்கின் படுகொலைக்கு உலகளவில் வெளிப்படையாக ஆதரவளித்த சில அரசாங்கங்களில் ஹனோயும் ஒன்றாக இருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் அதிகரித்து வரும் போதினும், பதட்டங்கள் தொடர்ந்து நிலவுகின்றன. தற்போது சீனா ஒரு புதிய பொருளாதார சக்தியாக பரிணமித்துள்ளதால், ஸ்பாட்லி தீவுகள் மீது தொடர்ந்து வரும் வியட்நாமின் கட்டுப்பாடுகளை ஒரு மூலோபாய தடையாக பெய்ஜிங்கில் ஆளும் மேற்தட்டின் பிரிவுகள் காணுகின்றன. இராணுவத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் சீனாவின் முன்னணி பாதுகாப்புத்துறை இதழான, Ordnance Knowledge, ஜனவரியில், தெற்கு சீன கடலில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளுக்காக சீனாவின் "ஆழ்கடல்" கப்பற்படையின் திறனை குற்றஞ்சாட்டியது.
ஸ்பார்ட்லி குழுவிலுள்ள 7 தீவுகளை சீனா கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது, அதிகபட்சமாக 29 தீவுகளை கொண்டுள்ள வியட்நாம், அவற்றை பாதுகாக்க சுமார் 2,000 துருப்புகளை நிறுத்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் 8 தீவுகளையும், மலேசியா 5 தீவுகளையும் மற்றும் தாய்வான் 1 தீவையும் அவற்றின் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன. புரூனே மற்றும் இந்தோனேஷியா இரண்டும் கூட அந்த பகுதிகளில் கடல் சார்கோரிக்கைகளை கொண்டுள்ளன.

தெற்கு சீன கடலில் ஏற்படும் போட்டிகள் பல தசாப்தங்களாக நடந்து வருகின்றன. 1974ல், பாராசெல் தீவுகளை ஆக்கிரமிக்க தெற்கு வியட்நாமிய ஆட்சியின் உடனடி சிதைவை சீனா ஆதாயமாக்கி கொண்டது. 1988ல், ஸ்பராட்லி வளைவிலுள்ள ஜோன்சன் கடல் கற்பாறையை சீனா கைப்பற்றிய போது, சீன மற்றும் வியட்நாம் கப்பற்படைகள் மோதி கொண்டன. வியட்நாம் அதன் தென் கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பில் (ASEAN) உள்ள அதன் உறுப்பினர் பதவி மூலம் சீனாவை எதிர் கொண்டுள்ளது. அதில் 1995ல், தெற்கு சீன கடல் பிரச்சனைகள் மீது பெய்ஜிங்கிற்கு ஓர் ஒட்டுமொத்த பிரதிபலிப்பை அளிக்க இருதரப்பு பேச்சுவார்த்தைகளைப் புறக்கணித்தது.
கட்டுப்பாடற்ற வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் கூட்டு பொருளாதார மண்டலங்கள் மூலம் ASEAN நாடுகளுடன் சீனா நெருக்கமான உறவுகளை விரும்புவதால், சமீபத்திய ஆண்டுகளில் பெய்ஜிங் மற்றும் ஹனாய் இடையிலான உறவுகள் மேம்பட்டுள்ளன. 2002ல், தெற்கு சீன கடல் உட்பட இப்பிராந்தியத்தில் உள்ள பிரச்சனையை மேலும் சிக்கலாக்காமல் இருக்க, ASEAN நாடுகளுடன் பெய்ஜிங் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.
எவ்வாறிருப்பினும், ஆழ்ந்த அவநம்பிக்கை நிலவுகிறது. வியட்நாம், மலேசியா மற்றும் பிற நாடுகள் இராணுவ பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும், தீவுகளில் தங்களின் பிடியை வலுப்படுத்த யுத்த கப்பல்கள், யுத்த விமானங்கள் மற்றும் ரோந்து படகுகள் போன்ற புதிய சாதனங்கள் வாங்குவதாகவும் Ordnance Knowledge குற்றஞ்சாட்டியது. 1995ல் வியட்நாம் உடனான உறவுகளை அமெரிக்க சீர்படுத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் செல்வாக்கு குறித்தும் சீனா கவலை கொண்டுள்ளது. 2003ல் இருந்து வியட்நாமை பார்வையிட வாஷிங்டன் யுத்த கப்பல்களை அனுப்பி வருவதால், சீனாவை சுற்றி வளைப்பதற்கான அதன் பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாக அமெரிக்கா நெருக்கமான இராணுவ உறவுகளை விரும்புவதாக சீனாவில் அச்சம் அதிகரித்துள்ளது.

கணிசமான பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் தெற்கு சீன கடலில் நிலை கொண்டுள்ளன. வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா ம்றறும் புரூனே ஆகிய நாடுகளால் ஸ்ப்ராட்லிஸைச் சுற்றி 500க்கும் மேற்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சீனாவால் கோரப்படும் கடலுக்கடியிலுள்ள சுமார் 100 கிணறுகளும் இதில் உள்ளடங்கும். மொத்த ஆண்டு வெளியீடு 50 மில்லியன் டன்களை எட்டியுள்ளது என்பதுடன் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் இரண்டிற்கும் எண்ணெய் ஏற்றுமதி வருவாய் ஈடுவதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக இது மாறியுள்ளது. தெற்கு சீன கடலில் சுமார் 35 பில்லியன் டன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதில் 22.5 பில்லியன் டன் வளங்கள் சீனா கோரும் பகுதிகளில் உள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், உலகின் மிக முக்கிய கடல்வழிகளில் சில (குறிப்பாக, மத்திய கிழக்கிலிருந்து வடகிழக்கு ஆசியா வரை) தெற்கு சீனா கடல் வழியாக செல்கின்றன. சீனாவின் வெளியுறவு வர்த்தகம் மற்றும் எண்ணெய் "வாழ்வாதாரத்திற்கு"ஸ்ப்ராட்லி தீவுகள் இதயம் போன்றிருப்பதாக Ordnance Knowledge குறிப்பிட்டது. சீனாவின் 39 கடல்வழிகளில் 21 வழித்தடங்கள் ஸ்ப்ராட்லிஸ் தீவுகள் வழியாக கடந்து செல்கின்றன. இது சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 60 சதவீத இடத்தைப் பிடிக்கிறது. மலாக்கா ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களில் சுமார் 60 சதவீதம் சீனாவினுடையது, இது மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவிலிருந்து சீனாவின் எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதம் இடம் பிடிக்கிறது.

அந்த இதழ் குறிப்பிட்டதாவது: "வெளியுறவு வர்த்தகம் மற்றும் கடல்-தள பொருளாதாரம் அபிவிருத்தி அடையும் போது, நமது தேசிய நலன்கள் படிப்படியாக அன்னிய நாடுகளை நோக்கி விரிவடைகின்றன. கடல்எல்லை மற்றும் வெளிநாட்டு நலன்களிடமிருந்து பாதுகாப்பதற்கான முக்கிய பொறுப்பேற்றுள்ள கடற்படை, சுமூகமான மற்றும் துல்லியமான பாதைகளை ஏற்படுத்தி அளிக்க வேண்டும்... கிழக்கிலிருந்து பசிபிக்கிற்கும் மற்றும் மேற்கிலிருந்து இந்திய பெருங்கடலுக்கும் இடையிலான சுமூக போக்குவரத்திற்கு, தீவுத்தொடரின் கட்டுப்பாடுகளை நீக்க ஸ்ப்ராட்லிஸை துல்லியமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது நமது கடற்படையின் ஒரு முக்கிய தேவையாகும்."
ஜப்பான் போன்ற முக்கிய போட்டியாளர்களுக்கும் இந்த தீவுகள் ஒரு முக்கிய ஆயுதமாகலாம் என்பதையும் Ordnance Knowledge குறிப்பிட்டது. "ஸ்ப்ராட்லிஸ் தீவுகளையும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் துல்லியமாக கட்டுப்படுத்துவது என்பது சீனாவின் தடுக்கும் சக்தியை ஊக்குவிக்கும், மேலும் நேரடியாக கட்டுப்படுத்துவதாலும் மற்றும் சர்வதேச எண்ணெய் வாழ்வாதாரங்கள் மீது செல்வாக்கை அதிகரிப்பதன் மூலமும் மூலோபாய முனைவுகளை சீனா எடுக்கலாம். விரோத சக்திகளை நேரடியாக அச்சுறுத்துவது என்பது ஒரு கூர்மையாக நடவடிக்கையாக அமையும், அது தெற்கு சீனா கடலைச் சுற்றியுள்ள மேற்கத்திய சக்திகளுக்கு மேலும் அச்சமூட்டும்." என்று அந்த இதழ் குறிப்பிட்டது.
தெற்கு சீனா கடலின் அருகில், ஹைனனின் தெற்கு தீவில் சீனா ஒரு பெரிய கடற்தளத்தை கட்டமைத்து கொண்டிருந்ததாக ஏப்ரலில் பல மேற்கத்திய ஆய்வாளர்கள் குறிப்பிட்டார்கள். அது எதிர்காலத்தில் 20 நீர்மூழ்கி கப்பல்கள் உட்பட, ஒரு யுத்த விமான தடம் அல்லது நீரிலும், நிலத்திலும் செயல்படும் யுத்த குழுக்களை கொண்டிருக்கும் ஒரு பெரிய கடற்படையை அனுமதிக்க கூடும். அதன் சொந்த வர்த்தக கடற்வழிகள் மற்றும் எண்ணெய் வினியோகத்தைப் பாதுகாப்பதில், சீனா அதன் போட்டியாளர்களை வெளிப்படையாகவே அச்சுறுத்தி வருகிறது.

வியட்நாம் மீது தாக்குதல் நடத்துவதற்கான "திட்டங்கள்" சீன வலை பதிவர்களுக்கு ஒரு முக்கிய விடயமாக அல்லது செல்வாக்கு மிக்கதாக இருக்காது என்ற போதினும், தென் சீன கடல் மீதான கட்டுப்பாடு பிரச்சனைகள் மற்றும் பிற பதட்டங்கள், அண்டை நாடுகள் மற்றும் முக்கிய சக்திகளுக்கு இடையே உடனடியாக மோதலை தூண்டி விடும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

அமெரிக்காவின் அடுத்த போர்க்களமா? - கொரிய தீபகற்பம்

கொரிய வரைபடம்
கடந்த மார்ச் முதலாக கொரிய தீபகற்பத்தில் எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றம் நிலவுகிறது. தென்கொரியாவும் அதற்கு ஆதரவாக அமெரிக்காவும் பெரும்படைகளையும் ஆயுதங்களையும் குவித்துப் போர் ஒத்திகைகளை நடத்தி வருவதால், தென்கொரியா மீது போர்ப்பிரகடனம் செய்து வடகொரியாவும் போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவிடமும் அமெரிக்காவிடமும் அணு ஆயுதங்கள் உள்ளதால், ஒருக்கால் போர் தொடங்கிவிட்டால் அதன் விளைவுகள் மிகக் கோரமாக இருக்கும் என்பதால் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகள் அனைத்தும் பெரும் பீதியில் உள்ளன.


கொரிய தீபகற்பம்வடகொரியா 2006 மற்றும் 2009-இல் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியுள்ளதோடு, கடந்த 2012 செப்டம்பரிலும் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. கடந்த பிப்ரவரியில் நிலத்தடி அணுகுண்டு சோதனையையும், ஏவுகணைச் சோதனையையும் நடத்தியுள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தலை முறியடிப்பதாகவும், அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென்கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் பாதுகாப்புக்காகவும் என்று கூறிக் கொண்டு அணுகுண்டு வீசும் பி-52 ரக போர் விமானங்களைக் கொண்டு கடந்த மார்ச் முதலாக தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா நடத்தி வருகிறது. இக்குண்டுகள் 1945-இல் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளை விட 75 மடங்கு அதிக ஆற்றல் கொண்டவையாகும். இரண்டு குண்டுகள் வடகொரியா நாட்டின் மீது போடப்பட்டால், அவை அந்நாட்டை மயான பூமியாக்கிவிடும்.

ஏன் இந்தப் பதற்ற நிலை ?

ஜப்பானின் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட கொரிய மக்கள், கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் தேசிய விடுதலைப் படையைக் கட்டியமைத்து அன்றைய சோசலிச சோவியத் படைகளின் உதவியுடன் கொரியாவின் வடபகுதியை 1945-இல் விடுதலை செய்து சுதந்திர அரசைப் பிரகடனம் செய்தனர். தென்பகுதியில் அனைத்து கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும் இணைந்து ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர் லியூ-வூன்- கியூங் தலைமையிலான கொரிய மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தனர். ஆனால், ஜப்பானின் காலனிகளைக் கைப்பற்றிய அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள், தென்கொரியாவை ஆக்கிரமித்துக் கொண்டு தேசிய விடுதலை இயக்கத்தை ஒடுக்கி, லியூ-வூன்-கியூங்கைப் படுகொலை செய்து சைங்மான் ரீ என்ற கம்யூனிச எதிர்ப்புச் சர்வாதிகாரி தலைமையிலான அமெரிக்க விசுவாச பொம்மையாட்சியை நிறுவினர்.

இதனால் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான வடகொரியாவில் சுதந்திர தேசிய அரசும், தென்கொரியாவில் அமெரிக்காவின் பொம்மையாட்சியுமாக 38-வது அட்சரேகைக்கு தெற்காகவும் வடக்காகவும் 1948-இல் தென் கொரியாவும் வடகொரியாவும் பிளவுபட்டன. அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட பொம்மையாட்சி நிலவும் நாடாக உள்ளதால், அதனை ஒரு சுதந்திர நாடாகவே அங்கீகரிக்க முடியாது என்பதால், 1950-இல் “நம் தேசத்தை ஒன்றிணைப்போம்!” என்ற முழக்கத்துடன் தென்கொரிய பொம்மையாட்சியாளர்களை எதிர்த்து வடகொரியா படையெடுத்துப் பல பகுதிகளைக் கைப்பற்றியது. இதற்கெதிராக அமெரிக்கா தலைமையில் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் கம்யூனிச அபாயத்தை முறியடிப்பது என்ற பெயரில் போரில் குதித்தன. பல்லாயிரக்கணக்கானோரைப் பலிகொண்ட இப்போரைத் தொடர்ந்து, போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டு, ஒரே தேசிய இனத்தவரான கொரிய மக்கள் வடகொரியா மற்றும் தென்கொரியா எனத் தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டனர்.

கொரியா போர் விமானம்தென் கொரியா மற்றும் ஆசிய,பசிபிக் பிராந்திய நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கானது என்ற பெயரில், தென் கொரியாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் அதி நவீன பி-52 ரக அணுகுண்டு தாக்குதல் போர் விமானம்
தென்கொரிய சுதந்திர அரசைப் பாதுகாப்பது, அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது, ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்டுவது என்று பசப்பிக் கொண்டே, இப்பிராந்தியத்தில் தனது போர்க்கப்பல்களையும் போர்விமானங்களையும் கொண்டு அடுத்தடுத்து போர் ஒத்திகைகளை நடத்தி வடகொரியாவையும் சீனாவையும் அமெரிக்கா ஆத்திரமூட்டி வருகிறது. அமெரிக்காவை எதிர்த்து சீனாவும் வடகொரியாவும் நவீன ஆயுதங்களுடன் அணு ஆயுதச் சோதனை நடத்தி எச்சரிப்பதைக் காரணங்காட்டி, தென்கொரியா, தைவான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிக் கொண்டு அந்நாடுகளில் இராணுவத் தளங்களை நிறுவி, அமெரிக்கா தனது ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தி வருகிறது. மறுபுறம், வடகொரியாவைப் பயங்கரவாத நாடு, சர்வதேசச் சட்டங்களை மதிக்காத போக்கிரி நாடு என்று குற்றம் சாட்டி, பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து அந்நாட்டைத் தனிமைப்படுத்திப் பலவீனப்படுத்தி வருகிறது.

ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம்

இப்பிராந்தியம் முழுவதும் சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதையும் அமெரிக்க நட்பு நாடுகளை இணைத்துக் கொண்டு கூட்டுத் தாக்குதல் தொடுப்பதையுமே அமெரிக்க வல்லரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயைக் கப்பல் மூலம் மியான்மர் (பர்மா) வரை கொண்டுவந்து, பின்னர் மியான்மரிலிருந்து நிலத்தடிக் குழாய் வழியாக சீனாவுக்குக் கொண்டுசெல்லும் திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இதனைத் தடுப்பதற்காகவே, மியான்மரில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்ற பெயரில், அமெரிக்கா தலையிட்டு அந்நாட்டை சீனாவின் செல்வாக்கிலிருந்து மீட்டுத் தன்பக்கம் வளைத்துக் கொண்டது. இதனால் சீனா தனது நாட்டுக்கான எண்ணெயைக் கப்பல் மூலம் கொண்டு செல்வதற்கான ஒரே வழியாக மலாக்கா நீரிணை மட்டுமே இருப்பதால், இப்பகுதியிலுள்ள நாடுகளைத் தனது கூட்டாளிகளாக மாற்றிக் கொண்டு இராணுவத் தளங்களை அமைத்து சீனாவை அமெரிக்கா எச்சரிக்கிறது.

போலி சோசலிச நாடான வடகொரியா, ஏறத்தாழ இரண்டரைக் கோடி மக்களைக் கொண்ட சிறிய, வறிய நாடு. மறைந்த வடகொரியாவின் தேசியத் தலைவரான அதிபர் கிம்-இல்-சுங் குடும்பத்தின் இளம் வாரிசு அதிபரான கிம்-ஜாங்-உன் தலைமையில், ஒருகட்சி இராணுவ சர்வாதிகாரத்துடன் அதிகாரவர்க்க முதலாளித்துவ ஆட்சியை அந்நாடு பின்பற்றி வருகிறது. அந்நாட்டின் இராணுவ ஆட்சியாளர்கள், அமெரிக்காவின் அச்சுறுத்தலைக் காட்டி நாட்டின் பொருளாதாரத்தையே இராணுவ மயமாக்கியுள்ளனர். போர் அச்சுறுத்தல்கள் மூலம் வடகொரியாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதை அமெரிக்கா நோக்கமாகக் கொண்டுள்ளதால், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளைப் பின்வாங்கச் செய்வதற்காக அணுகுண்டுத் தாக்குதலை நடத்தப் போவதாக எச்சரிக்க வேண்டிய இக்கட்டான நிலைமையில் வடகொரியா உள்ளது.

தனது வணிகத்துக்கும் எரிபொருளுக்கும் சீனாவையே வடகொரியா பெரிதும் சார்ந்துள்ளது. எனவே சீனா, வடகொரியாவுக்கு நிர்ப்பந்தங்களைக் கொடுக்க வேண்டும், ஒரு பொறுப்பான உலக சக்தியாக சீனா நடந்து கொள்ள வேண்டும், வடகொரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட சீனா ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்திக்கிறது. மறுபுறம், சீனப் பொருளாதாரம் அமெரிக்காவுக்குப் பெருமளவு ஏற்றுமதி செய்வதைச் சார்ந்துள்ளது. அமெரிக்காவின் பொதுக் கடன் பத்திரங்களை 1.6 டிரில்லியன் டாலர் அளவுக்கு சீனா வாங்கி வைத்துள்ளதால், இன்றைய நிலையில் அமெரிக்காவை சீனா பகைத்துக் கொண்டால், சீனாவின் பொருளாதாரம் பெருத்த பேரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், கொரிய விவகாரத்தை நெளிவுசுழிவாகக் கையாள சீனா முயற்சிக்கிறது. மேலும், போர் மூண்டால் அண்டை நாடான வடகொரியாவிலிருந்து ஏராளமான அகதிகள் சீனாவுக்குள் பெருகுவார்கள் என்பதால், சீனா இந்த நெருக்கடியைத் தவிர்க்கவே விரும்புகிறது. வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்துக்கு ஆதரவாக சீனா வாக்களித்துள்ள போதிலும், வடகொரியாவில் தற்போது நிலவும் அமெரிக்க எதிர்ப்பைக் கொண்ட ஆட்சி கவிழ்ந்தால், அது சீனாவுக்குப் பாதகமாக அமையும் என்பதால், வடகொரியாவை அவ்வளவு எளிதில் கைவிடவும் சீனா தயாரில்லை.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்
தென் கொரியாவின் ஜின்ஹே கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள “யு எஸ் சான்பிரான்சிஸ்கோ” எனும் அதிநவீன அணுகுண்டு வீசும் திறனுடைய அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்.

ஒரே தேசிய இனத்தவரைக் கொண்ட இரண்டு கொரியாக்களும் ஒரே நாடாக ஐக்கியப்படவும், கொரிய தீபகற்பத்தில் அமைதியும் சமாதானமும் நீடிக்கச் செயவும் இரண்டு கொரிய அரசுகளோடு அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்று சீனா முன்வைத்த ஆலோசனையின்படி 2003-ஆம் ஆண்டில் ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தைகள் நடந்தன. வடகொரியா தனது அணுஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதெனவும், இதற்கு ஈடாக பொருளாதாரத் தடைகளை நீக்கி வடகொரியாவுக்கு எரிபொருள் உதவியளிப்பது எனவும் முடிவாகி, அனைத்துலக அணுசக்தி முகமையின் மூலம் வடகொரியாவின் அணுசக்தித் திட்டங்களைச் சோதனையிட்டு கண்காணிப்பதும் நடந்தது. இருப்பினும், அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் மற்றும் வெளியுறவுச் செயலரான கண்டலீசா ரைஸ் ஆகியோரின் அடாவடிகளால் இப்பேச்சுவார்த்தைகளை வடகொரியா முறித்துக் கொண்டது. அதன் பிறகு அமைதி,சமாதானம் என்ற பசப்பல்களுடன் அதிபர் ஓபாமா ஆட்சிக்கு வந்தபோதிலும், ஆறுநாடுகளின் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, ஏவுகணைத் தாக்குதல், கூட்டுப் போர் பயிற்சிகளை நடத்திக் கொண்டு வடகொரியாவை மேலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில்தான் ஈடுபட்டு வருகிறார்.

பனிப்போருக்குப் பின்னர் கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் இணைந்ததைப் போல, வட-தென் கொரியாக்கள் இணைய வேண்டுமென்று ஏகாதிபத்தியவாதிகள் பசப்பினாலும், உண்மையில் அது அவர்களின் ஆதிக்க நலன்களுக்கு எதிரானது. இரு நாடுகளும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவினால், அமெரிக்க இராணுவம் இப்பிராந்தியத்திலிருந்து வெளியேற வேண்டியதாகிவிடும். தனது மேலாதிக்க நோக்கங்களுக்காக பசிபிக் கடற் பகுதியிலும், குறிப்பாக சீனாவை ஒட்டியுள்ள பகுதிகளிலும் ஜப்பானின் ஒக்கினவா தீவிலும் நிரந்தரமாகத் தனது படைகளைக் குவித்து வைப்பது அமெரிக்க மேலாதிக்கவாதிகளுக்கு அவசியமாக உள்ளது. மேலும், கொரிய பிரச்சினையை வைத்து தென்கொரியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் ஆயுத வியாபாரம் செய்வதற்கும், ஆசிய பசிபிக் கடல் பிராந்தியத்தில் மேலாதிக்கம் செய்வதற்கும் அமெரிக்காவுக்கு கொரிய பிரச்சினை அவசியத் தேவையாக உள்ளது. இவற்றாலேயே இன்னமும் கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்பவில்லை. அமெரிக்கப் படைகள் தென்கொரியாவிலிருந்து 2012-இல் வெளியேறும் என்ற ஒப்பந்தமும் நிறைவேறவில்லை.

தென் சீனக் கடலில் அமெரிக்காவின் நாட்டாமை

கிம் ஜாங்-உன்
அமெரிக்காவின் மேலாதிக்கப் போர் அச்சுறுத்தலை முறியடிக்க, இராணுவத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தும் வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங்-உன்.

உலகின் கடற் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு தென் சீனக் கடலின் ஊடாக நடப்பதாலும், தொலைத்தொடர்பு கேபிள்கள் நிறைந்த முக்கிய கடற்பகுதியாக இருப்பதாலும், இப்பகுதியானது போர்த்தந்திர முக்கியத்துவம் வாந்த குவிமையமாக உள்ளது. மேலும், தென்சீனக் கடல் பிராந்தியத்தில் ஆளில்லாத் தீவுகளாக 200-க்கும் மேற்பட்ட சிறிய தீவுக் கூட்டங்கள் உள்ளன. எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் கடலுணவு வளமும் நிறைந்துள்ளதால் இத்தீவுகளுக்கு உரிமை கோரி வடக்கே சீனா மற்றும் தைவான், கிழக்கே பிலிப்பைன்ஸ், மேற்கே வியட்நாம், மலேசியா மற்றும் புருணை, தென் கிழக்கே இந்தோனேசியா என இவ்வட்டாரத்திலுள்ள நாடுகள் உரிமை கோருகின்றன.

தென் சீனக்கடலில் உள்ள இத்தீவுகள் யாருக்குச் சோந்தம் என்பதை அந்த வட்டார நாடுகள்தான் தங்களுக்குள் பேசித் தீர்வு காண வேண்டுமே தவிர, இதில் தலையிட்டு நாட்டாமை செய்வதற்கு அமெரிக்காவுக்கோ அல்லது பிற ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கோ எவ்வித உரிமையும் கிடையாது. ஆனால், அவ்வாறு தலையிடுவதற்கான முகாந்திரத்தைத் தேடுவதற்காகவே, தனது நட்பு நாடுகளின் பெயரால் அமெரிக்கா மூக்கை நுழைக்கிறது. பொருளாதார நெருக்கடிகள் முற்றி வருவதால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மீது குறி வைத்து, சீனாவின் செல்வாக்கைத் தடுத்து இப்பிராந்தியத்தில் மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கின்றன.

கிழக்கு சீனக் கடலில் உள்ள எரிவாயு வளமிக்க சென்காகூ தீவுகளுக்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கோரி வருகின்றன. எண்ணெய் எரிவாயு வளமிக்க ஸ்பெரட்லி தீவுகள் தமது பாரம்பரிய உரிமை என்று சீனாவும் தைவானும் ஜப்பானை எதிர்க்கின்றன. பாரசெல்ஸ் தீவுகளில் சிலவற்றை வியட்நாமும் தைவானும் உரிமை கோருகின்றன. இந்தோனேசியாவும் பிலிப்பைன்சும் புருணையும் இன்னும் சில தீவுகளுக்கு உரிமை கோருகின்றன.

இந்நிலையில், ரஷ்ய வல்லரசானது, கடந்த 2010-இல் வோஸ்டாக் எனும் பெயரில் ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் மிகப் பெரிய போர் ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இப்பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விசுவாச நாடுகளுக்குத் தனது இராணுவ வல்லமையை வெளிக்காட்டி எச்சரிக்கும் நடவடிக்கையே ஆகும். இதை ஜப்பான் எதிர்த்த போதிலும், அடுத்தடுத்து இது போன்ற போர் ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும், புதிதாக நவீன அணுசக்தி நீர்முழ்கிக் கப்பல்களை இப்பகுதியில் இயக்கப் போவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

தென் கொரியா மக்கள்“பயங்கரவாத அமெரிக்காவே, கொரியத் தீபகற்பத்திலிருந்து வெளியேறு!” : தென் கொரிய ஆட்சியாளர்களையும் அமெரிக்க வல்லரசையும் எதிர்த்து தென் கொரிய மக்கள் நடத்தும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தென்சீனக்கடல் பகுதியில் பாரம்பரிய உரிமையுள்ள தனது நாட்டின் சில தீவுகளுக்கு வியட்நாம் உரிமை கோருவதால், வியட்நாமுடன் இணைந்து எண்ணெய் துரப்பணப் பணிகளில் இந்தியா ஈடுபடக் கூடாது என்கிறது சீனா. இருப்பினும், கடந்த 2011-ஆம் ஆண்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா வியட்நாமுக்குச் சென்று திரும்பியதோடு, இந்தியாவின் எண்ணெய் எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி.) எண்ணெய் அகழ்வாய்வு மற்றும் துரப்பணப் பணிகளில் வியட்நாமுடன் இணைந்து செயல்படும் என்று அறிவித்துள்ளார். இவற்றை சீனா தடுக்க முற்பட்டால் பதிலடி கொடுப்போம் என்கிறார், இந்தியக் கடற்படைத் தளபதி. ஏற்கெனவே ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் கூலிப்படையாக இந்திய இராணுவத்தை அனுப்பியுள்ள இந்திய அரசு, இப்போது அமெரிக்க விசுவாச நாடான வியட்நாமுக்கு ஆதரவாக தனது கடற்படையை அனுப்பி தாக்குதல் தொடுக்கத் துடிக்கிறது.

கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவும் பதற்றமும் போர்ச்சூழலும் வடக்கே ஜப்பானிலிருந்து தெற்கே ஆஸ்திரேலியா வரையிலான பசிபிக் கடற்பகுதியில் ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டா போட்டியின் ஒரு வெளிப்பாடுதான். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய வல்லரசுகள், ரஷ்யா, சீனா, இந்தியா, மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளுடன் சம்பந்தப்பட்டதாக கொரிய விவகாரம் உள்ளதால், இதனை வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பிரச்சினையாகக் குறுக்கிப் பார்க்க முடியாது.

தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவிலிருந்து அமெரிக்க மேலாதிக்க வல்லரசு வெளியேறாதவரை கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவாது என்பதையும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இயற்கை மூலவளங்களைக் கொள்ளையிடுவதிலும் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதிலும் ஏகாதிபத்திய வல்லரசுகளிடையே போட்டாபோட்டி நிலவும்வரை போர்களும் பதற்றநிலையும் குறையாது என்பதையும், ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர்களின் எடுபிடி ஆட்சியாளர்களுக்கும் எதிராக அனைத்து நாட்டு மக்களும் போராட வேண்டிய அவசியத்தையும் படிப்பினையாக உணர்த்திவிட்டு கொரிய தீபகற்பம் தீராத போர்ப் பதற்றத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

வனங்கள் மறைந்தால் மனிதனும் மறைவான்


வானத்தை மரங்களன்றோ தாங்கிப் பிடிக்கின்றன.  வனங்கள் மறைந்தால்
உலகத்தின் கூரை, வானம் இடிந்து வீழும் அப்போது
இயற்கையும் மனிதனும் இணைந்தே வீழ்வர்.     
ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் வனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. வனங்கள் மனிதனின் சீரான முன்னேற்றத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது. இத்தகைய வனங்கள் மனிதனுக்கு உணவு, நீர், எரிபொருள் மற்றும் மருத்துவ குணங்கள் மூலம் நேரடியாகவும் சுற்றுச் சூழலை பாதுகாத்து மறைமுகமாகவும் உதவுகின்றன. 
முந்தைய காலங்களில் மக்கள் தங்களுடைய தேவைகளையும் இருப்பிடங்களையும் காடுகள் மூலமாக நிறைவேற்றிக் கொண்டனர். இதனால் காடுகளை பாதுகாக்க மரங்களை தெய்வங்களாக வழிபடவும் செய்தனர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் பல்லுயிர் பெருக்கமும் அதிகளவில் இருந்தது. ஆனால் நாகரீகம் வளர வளர, காடுகளின் பரப்பளவு குறைந்து கொண்டே வந்தது. இதனால் இயற்கை சமன்பாடு சரியத் துவங்கியது. 
அதுமட்டுமின்றி இரு உலகப் போர்களும் காடுகளில் மிக அதிகளவு சேதாரத்தை ஏற்படுத்தியது. இதனால் காடுகள் அழிக்கப்பட்டு அதனை நம்பி இருந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்க துவங்கினர். உலக வனக் கொள்கையின் படி ஒரு நாடு 33 சதவீதம் வனங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.
காடுகள் அழிப்பால் அதனை நம்பி வாழும் வன உயிரினங்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன. அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப காடுகளின் பரப்பும் இல்லை. இருப்பதில் போதிய உணவும் இல்லை. உதாரணமாக ஒரு காட்டு யானை உயிர் வாழ 200 கிலோ உணவாவது ஒரு நாளைக்கு உண்டாக வேண்டும். 450 லிட்டர் தண்ணீரும் பருகியாக வேண்டும். இதற்கு காட்டுக்குள் தட்டுப்பாடு ஏற்படும் போது அவை கூட்டம் கூட்டமாக காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுவதை தடுக்க இயலாது.
அழிக்கப்பட்ட காடுகளின் பரப்பை மீண்டும் உருவாக்குவது என்பது மிக மிக கடினமான செயல். இருக்கும் வனச் செல்வத்தையாவது பாதுகாக்க தவறினால் நகரின் முக்கிய வீதிகளில் கூட யானைகள், சிறுத்தைகள், புலி, கரடி என வன விலங்குகள் ஊருக்குள் உலா வருவது தவிர்க்க இயலாதது. இந்நிலை தொடர்ந்தால் சுத்தமான காற்றைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உருவாகும் என்பதே வனத்துறை ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கை.
மக்களில் பெரும்பாலோரிடத்தில் வனங்களைப் பற்றி மேற்கண்ட அடிப்படையில்லாத கற்பனைகளும் நம்பிக்கைகளும் ஏற்பட்டதிற்கு வனங்களின் அறிமுகம் அவர்களுக்கு கிடைக்காமையே முதன்மைக் காரணமாகும். வனங்கள் என்றில்லாமல் இயற்கையைப் பற்றிய சரியான அறிமுகத்தை பள்ளிப் பாடங்களும் வழங்கவில்லை. இந்த நிலையில் மக்கள் தாமாகவே கற்பித்துக்கொண்ட நம்பிக்கைகளை மனத்தில் பதிவு செய்துகொள்கிறார்கள். அதனால் இயற்கையை அவர்கள் மதிப்பதில்லை. இயற்கையினின்றும் ஒதுங்கி, முடிந்தால் கூடியமட்டும் மாறுபட்டு வாழும் வாழ்க்கையைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்தப் போக்கு மனித குலத்திற்கே மிகவும் ஆபத்தானது என்ற உண்மையை மக்களுக்கு எவரும் உணர்த்தவும் இல்லை, உணர்த்தும் காரியத்தைச் செய்ய நல்ல நிறுவனங்களும் இல்லை..
நமது முன்னோர்கள் வனத்தினுடைய இன்றியமையாமையை அறிந்திருந்தனர். அதனால்தான் வனங்களுக்கு ஓர் உயரிய ஆன்மீக மதிப்பைக் கொடுத்திருந்தனர். உண்மையில், ஒவ்வொருவரும் தனது வாழ்நாளின் பிற்பகுதியை வனத்தில் செலவிடவேண்டும் என்றும் அப்போதுதான் இயற்கையுடன் நெருங்கவும் அவற்றின் படைப்புகளான பூவினங்களையும் மாவினங்களையும் கண்டு போற்றவும், வியக்கவும் இயலும் என்று அவர்கள் ஆலோசனை வழங்கினர். 
இலங்கை எனும் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட நம்நாட்டில் வளங்களை நாம் காப்போம். வன உயிரினங்களை வசிப்பிடங்களை ஆக்கிரமிக்காமல் இருப்போம். வியாபாரத்துக்காகவும் சுயநலத்துக்காகவும் வருடக்கணக்கில் வளர்ந்து செழிக்கும் மரங்களை அழியாமல் பாதுகாப்போம். இயற்கையின் சமநிலையை நாம் சிறுசிறுக மாற்றம் செய்வோம் எனில் பெரும் இயற்கை அழிவை நாம் சந்திப்பதில் இருந்து தப்ப முடியாது…!!
“The clearest way into the Universe is through a forest wilderness.” 
― John Muir
    

தியாக தீபங்கள்

உலகமெல்லாம் வாழும் தமிழர்களுடைய திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், மதசார் பண்டிகைகளை விட கார்த்திகை மாதம் பெறுமதியானது, உணர்வுபூர்வமானது என்பது நேற்றைய தினம் பலருக்கு உணர்த்தியிருக்கும். நெருக்கடியான நேரத்திலும் ஈழத்தில் நடைபெற்ற உணர்வெழுச்சிகள் வலிமிகுந்தவை! வேதனையானவை! போற்றுதலுக்குரியவை!
இனிவரும் ஆண்டாண்டு காலங்களில் தமிழர்களுக்கென்று தனித்துவமாகி, அங்கமாகிப்போன நிளைவேந்தலை எந்த ஆயுதங்கள் கொண்டும் மௌனிக்கமுடியாது என்பதை மனித அவலத்தை விதைத்தவர்கள் புரிந்துகொள்ளட்டும்.


கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! 
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.! 
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.! 
உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..! 
உங்கள் 'உயிர்விலைக்கு' எது இங்கே ஈடாகும்? 
உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..! 
அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும். 
ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள் 
ஆணிவேரான ஆலமரங்களே..! 
வாழ்ந்தாலும் ம(வ)ரமாக... 
வீழ்ந்தாலும் விதையாக 
மாவீரன் மறைவதில்லை 
மாவீரம் அழிவதில்லை 
ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம் 
இல்லை 
தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும். 
கல்லறைக்கு வருகையிலே கால் கூசும்-உமைக் 
கண்டவுடன் கட்டியணைத்து மெய் சோரும். 
மணியோசை கேட்டால் மனமுருகும்... 
மாவீரர் கல்லறையில் உயிர் கருகும்... 
கண்களிலே கண்ணீர் கவி எழுதும் 
கையிரண்டும் உமை நோக்கி கூம்பி எழும். 

கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! 
துயிலும் இல்லங்கள் எங்கள் தேசத்தின் ஆலயங்கள்-அதில் 
வாழும் நீங்கள் எங்கள் ஆதிமூலங்கள். 
சாவினை கழுத்தினில் கட்டிக்கொண்டீர்-அந்த 
சாவினை சரித்திரமாய் ஆக்கிக்கொண்டீர். 
விடுதலைத்தீயினை விழி சுமந்தீர் 
வீர வித்துக்காளாய் மண்ணுக்குள் நீர் புதைந்தீர். 
கண்முன்னே கணப்பொழுதில் கரைந்து போனீர்-அந்த 
காலனுக்கே கணக்கெழுதி வைத்துப்போனீர். 
மண்ணின்று மறத்தமிழர் மானம் காத்தீர்-பின் 
விண் சென்றும் மங்காத விடிவெள்ளியானீர். 
கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! 
எவன் சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று? 
கூட்டிவா அவனுக்கு உமைக்காட்டுகிறேன். 
சுட்டெரிக்கும் புழுதிமணல் வெளியில் உங்கள் 'கால்த்தடம்' 
கத்தும் கடலோசையில் உங்கள் 'உயிர்மூச்சு' 
காண்டாமணி ஓசையில் உங்கள் 'கணீர்க்குரல்' 
மூண்டெரியும் தீயினில் உங்கள் 'பூமுகம்' 
கல்லறையில் பூத்திருக்கும் பூக்களில் உங்கள் 'புன்னகை' 
எவனடா சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று? 
தாயகமே தாயாக 
தலைவனே உயிராக 
தமிழ் மானம் பெரிதாக 
தம் உயிர் தந்தவர்கள் 
எரித்தாலும் கடலினுள் கரைத்தாலும் மண்ணினில் புதைத்தாலும் 
மாவீரன் மறைவதில்லை 
மாவீரம் அழிவதுமில்லை 
கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! 
இப்போது கொஞ்ச நாளாய் எங்கள் வானம் கறுத்துக்கிடக்கிறது. 
எப்போதும் இல்லாமல் 'வெயில்' கொளுத்தித்தியும் எறியுது. 
ஏறுக்குமாறாய் ஏதேதோ நடக்கிறது..! 
எவருக்குமே விளங்கவில்லை..! 
எங்கள் தேசம் எப்போதும் சுமக்காத 'சிலுவை' சுமக்கிறது..! 
எங்கள் சனமும் எப்போதும் சுமக்காத 'வலி' சுமக்கிறார்கள் 
எதிரி எம்மண் ஏறி ஏறி வந்து 'எல்லாம்' முடிந்ததாய் 
எக்காளம் போட்டு 'இறுமாப்பு' காட்டுகிறான். 
கண்மணிகளே..! 
கல்லறை வந்து உமைக்கட்டித்தழுவி-எங்கள் 
கவலைகள் சொல்லி கண்ணீர் வடிக்க தவிக்கிறது மனசு... 
என்ன நடக்கிறது எங்கள் தேசத்தில் இன்று? 
எவனுக்குமே விளங்கவில்லை..! 
யார் சொன்னது? 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகளே உமக்குத்தெரியும்.! 
காற்றோடு கலந்திருக்கும் கருவேங்கைகளுக்குத்தெரியும்.! 
கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா..!

இந்நாளில் இழக்கப்பட்ட அனைத்து மனித உயிர்களின் ஆன்மாக்களுக்காக பிராத்திக்கிறேன்…!

சனி, 19 நவம்பர், 2016

நான் பேராபத்தானவன் - அணுகுண்டு


அமெரிக்க தேர்தலில் ட்ரம்ட்டின் வெற்றி, ரஸ்யாவின் மீள்பிரவேசம்,  வடகொரியாவின் அண்டைய செயற்பாடுகள், இந்திய பாகிஸ்தான் விரோதங்கள், சீனாவுடன் தென்சீனக்கடல் முரண்பாடுகள் என்று சமீபத்திய செய்திகளையும் பிரச்சனைகளையும் பார்க்கும் போது சகிப்புத்தன்மையில் இருந்து உலகம் நழுவிச்செல்வதை காண முடிகிறது. மனித முரண்பாடுகளின் இறுதி எல்லை பழிவாங்கல். நவீன காலத்தில் நவீனத்துவமான ஆயுதங்களே மனித எச்சங்கள் அற்ற பூமியில் சில கதிரியக்கங்களை இறுதியில் விட்டுச்செல்லப்போகின்றன. 

அணு இதை இனிவரும் காலங்களில் அதிகம் தெரிந்து கொள்வோம்...




E=mc^2 

ஜப்பானில் போடப்பட்ட அணுகுண்டுகள் ஒவ்வொன்றும் 20,000 டன் TNT வெடி மருந்துக்குச் சமம்.  அவ்வளவு ஆற்றலும் வெளியாக எடுத்துக் கொண்ட நிறை எவ்வளவு?  வெறும் 28 கிராம் [ஒரு அவுன்ஸ்] மட்டுமே.  அப்படியென்றால்,  E=mc^2, நிறையை ஆற்றலாக மாற்றும் வித்தையைச் சொல்லும் சமன்பாடு எனவும், ஆற்றல் வெளியாவதற்கு காரணம் c ஒரு அதி பயங்கரமான எண்ணாக இருப்பதும் தான் என்ற முடிவுக்கு வரலாமா..? 




உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !
கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)
“ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
“எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது !  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் !  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.
பெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)
அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த உலக விஞ்ஞானிகள் !
அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடையாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள்! முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி! அடுத்து செயற்கைக் கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி! அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] புரிந்த என்ரிகோ ஃபெரிமி! இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்! முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப் பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் !
ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள் நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன ! 1945 இல் அமெரிக்கா ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது ! அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன !  இப்போது இஸ்ரேல், வட கொரியா ஈரான் ஆகிய நாடுகளும் அணு ஆயுத வல்லமை பெற்றுக் கொண்டு உலகைப் பயமுறுத்தி வருகின்றன ! உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty, NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன! ஆனால் அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன !
அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஐன்ஸ்டைன்
இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்கும்படி 1939 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதி அனுப்பியவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்!  அதுமுதல் அணு ஆயுத அரக்கன் உலகில் தோன்றி அவன் வமிசாவளி பெருகிக் கொண்டே போகிறது!  அணுசக்தி யுகத்தைத் துவக்கி, உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன் அணுகுண்டுகளின் பெருக்கத்தையும், அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளின் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்.
ஐன்ஸ்டைன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 1955 ஏப்ரல் 16 இல் வேதாந்த மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் (Bertrand Russell) தயாரித்த “அணு ஆயுதப் போர்த் தடுப்பு” விண்ணப்பத்தில் ஒன்பது விஞ்ஞானிகளுடன் தானும் கையெழுத்திட்டு ஒன்றாகக் கூக்குரல் எழுப்பினார்!  “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது!  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும்!  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதங்களை நிறுத்தம் செய்ய முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் ரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வந்தார்கள் !

ஆக்கப் போவது அணு குண்டா ? அல்லது ஹைடிரஜன் குண்டா ?
1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன் திட்டத்தில் மறைமுகமாகப் பணிசெய்த விஞ்ஞானிகள் முதலில் அணுப்பிளவுக் குண்டை [Fission Bomb] ஆக்குவதற்கு முயன்ற சமயத்தில் அணுப்பிணைவுக் குண்டையும் [Fusion Bomb] உண்டாக்க ஒரு சிலருக்கு ஆர்வம் எழுந்தது! அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller]! தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi]! சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது! ஆனால் ஆரம்பத்திலேயிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர்!  ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு! சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான்! அடுத்து 1947-1952 ஆண்டுகளில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதியாக [Chairman, Atomic Energy Commission] இருந்த சமயத்திலும் டெல்லர் மறுமுறை உயிர்ப்பித்த ஹைடிரஜன் குண்டு திட்டத்தை அங்கீகரிக்காது ஒதுக்கித் தள்ளினார்!
இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே ஊமைப் போர் [Cold War] மூண்டு பெரும் அளவில் வலுத்தது ! 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது! அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார்! அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார்! அந்த முயற்சியில் வெற்றி பெற்று 1952 நவம்பர் முதல் நாள் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் முதல் ஹைடிரஜன் குண்டு வெடித்துச் சோதிக்கப் பட்டது! ஏட்டிக்குப் போட்டியாக அடுத்து சோவித் ரஷ்யாவும் எட்டு மாதங்களுக்குள், 1953 ஆகஸ்டு 12 ஆம் தேதி ரஷ்ய விஞ்ஞானி பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] மூலம் உருவாக்கி, முதல் வெப்ப அணுக்கரு ஆயுத வெடிப்பச் சோதனையை வெற்றிகரமாகச் செய்து காட்டியது ! அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன !  இப்போது அமெரிக்கா, ரஷ்யா, (யுக்ரேய்ன்), பிரிட்டன், பிரான்ஸ், சைனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய ஏழு நாடுகளும் சோதனைகளை நடத்தி உலகத்துக்கு அணு ஆயுத நாடுகளாய்த் தம்மை உறுதிப்படுத்தி உள்ளன.

அணு ஆயுதப் போர் மூன்றாவது உலகப் போராய் நிகழுமா ?
1945 இல் அமெரிக்கா ஜப்பானில் முதன்முதலாகப் போட்ட இரண்டு அணுக்குண்டுகளை ஒருபோக்குத் தாக்குதலாகத்தான் கருத வேண்டும்.  பதிலுக்குத் தாக்க ஜப்பானிடம் அப்போது அணு ஆயுதங்கள் கிடையா.  இதுவரை உலகம் இருதரப்பு அணு ஆயுத யுத்தத்தைக் கண்டதில்லை ! ஆனால் இப்போது அணு ஆயுதமுள்ள ஏழு நாடுகள் இரண்டுக்குள் நட்புறவு குன்றி அப்படி ஓர் இருபுற யுத்தம் நிகழ்ந்து அணு ஆயுதங்கள் பயன்பட்டால் பயங்கரச் சிதைவுகள், அழிவுகள், கதிரியக்கப் பொழிவுகள் ஏற்படும்.  அவ்விரு நாடுகளுக்குச் சேதங்கள் நேருவதோடு அண்டை நாடுகளும் பாதிப்படையும்.  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டால் இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டா என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து.  காரணம் இரண்டு நாடுகள் வேறானாலும் எலும்பும் சதையும் போல் நிலத்தாலும், நீராலும், இனத்தாலும், மதத்தாலும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன.  போர் மூண்டாலும் இரண்டு நாடுகளும் அணுவியல் தொழிற்கூடங்களை ஒன்றை ஒன்று தாக்கக் கூடாதென்று வாக்கு மொழிகள் எழுத்து மூலம் கூறியுள்ளன !  ஆனால் பாகிஸ்தானில் தற்போதுள்ள கொந்தளிப்பு நிலையில் எந்த மூர்க்கர் குழு நாட்டைப் பிடித்து ஆட்டப் போகிறது என்பது பெரும் ஐயப்பாட்டில் இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிப்பது கடினம்.

எத்தனை விதமான அணு ஆயுதங்கள் உள்ளன ?
இரண்டு விதமான அணு ஆயுதங்கள் இதுவரைச் சோதனைக்குள்ளாகி ஆக்கப் பட்டுள்ளன.  நியூட்ரான் குண்டுகள் (Neutron Bombs) ஒருவித அணு ஆயுதமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.  அணுப்பிளவு ஆயுதங்கள் (Fission Weapons), அணுப்பிணைவு ஆயுதங்கள் (Fusion Weapons) என்று இருபெரும் பிரிவில் பல்வேறு ஆற்றலைக் கொண்ட அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டு பதுக்கி வைக்கப் பட்டுள்ளன !  கடந்த அறுபது ஆண்டுகளாக உருவான அணு ஆயுதங்கள் யாவும் ஓய்வாகத் தூங்கிக் கொண்டிருப்பதால் துருப்பிடித்து இப்போது முடக்கத்தில் தளர்ந்து போய்க் கிடக்கின்றன !  அவை யாவும் தூசி துடைக்கப் பட்டுப் புதுப்பிக்கப் படவேண்டும் !  அல்லது தற்போதைய கணினி யுகத் தொழில்நுட்பம் புகுத்துப்பட்டு புது விதமாக மாற்றப் பட வேண்டும்.
பல பில்லியன் டாலர் மதிப்பில் படைப்பான பழைய அணு ஆயுதங்களை இப்போது ஏவினால் அவை பகைவரை நோக்கித் தாக்குமா அல்லது சண்டி மாடுபோல் படுத்துக் கொள்ளுமா என்று எழுப்பி விட்டால்தான் தெரியும் !

அணுப்பிளவு ஆயுதங்களில் (அணுக்குண்டு) எரிசக்தியாக யுரேனியம் -235, புளுடோனியம் -239 ஆகிய கன உலோகங்கள் பயன்படுகின்றன.  மாறாக அணுப்பிணைவு ஆயுதங்களில் (ஹைடிரஜன் குண்டு) எளிய வாயுக்களான டியூடிரியம், டிரிடியம் (ஹைடிரஜன் ஏகமூலங்கள் ) (Deuterium & Tritium -Hydrogen Isotopes) உபயோகம் ஆகின்றன.  டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து சக்தி உண்டாக்குவதற்குச் சூரியன் போல் பல மில்லியன் டிகிரி உஷ்ணம் தேவைப் படுகிறது.  அந்த உஷ்ணத்தை உண்டாக்க ஒரு சிறு அணுப்பிளவு இயக்கம் முதலில் ஹைடிரஜன் குண்டில் தூண்டப் படுகிறது.  அவ்விதம் முதல் உந்து யுரேனிய வெடிப்பில் உண்டாகும் பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து வெடிப்பு சக்தியை வெளியேற்றுகிறது.  பொதுவாக அணுப்பிணைவு ஆயுதம் அணு ஆயுதத்தை விட சுமார் ஆயிரம் மடங்கு அழிவு சக்தியை வெளியாக்கும் !  நியூட்ரான் குண்டு அணுக்குண்டு ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு பாதகம் விளைவிக்க வல்லது.

பல்வேறு டன் டியென்டி ஆற்றல் கொண்ட அணு ஆயுதங்கள்.
அமெரிக்கா ஹிரோஷிமாவில் போட்ட யுரேனியம் அணுக்குண்டு 15 கிலோ டன் டியென்டி ஆற்றலும், நாகசாக்கியில் போட்ட புளுடோனியம் அணுக்குண்டு 21 கிலோ டன் டியென்டி ஆற்றலும் கொண்டவை.  அணு ஆயுதங்களின் வெடிப்புப் பரிமாணம் டியென்டி அளவீட்டில் [(TNT) -Trinitrotoluene -CH3C6H2(NO2)3  (A Powerful High Explosive)] கிலோ டன் அல்லது மெகா டன் எண்ணிக்கையில் குறிப்பிடப் படுகிறது !  கிலோ டன், மெகா டன் டியென்டி என்று அளவீடு செய்யும் போது அணு ஆயுதங்களின் எடையைக் குறிப்பிடாது அவற்றின் வெடி ஆற்றலை ஒரு டியென்டி இராசயன வெடிக்கு ஒப்பிடப் படுகிறது.  ஒரு கிலோ டன் அணு ஆயுதம் 1000 டன் டியென்டி ஆற்றல் வெடிக்குச் சமம்.  ஒரு மெகா டன் அணு ஆயுதம் ஒரு மில்லியன் டன் டியென்டி ஆற்றல் வெடிக்கு இணையாகும்.  தற்போது வெப்ப அணுக்கரு ஆயுதம் (Thermonuclear Weapon OR Hydrogen Bomb) ஒன்று 25 மெகா டன் டியென்டி வெடி ஆற்றல் கொண்டதாக உள்ளது.  மேலும் இப்போது 50 மெகா டன் டியென்டி வெடியாற்றல் உள்ள அணு ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன.  தற்போது பாதி உலகைக் கடந்து செல்லும் கட்டளை ஏவு கணைகளில் (Guided Missiles) அணுத்தாக்கு ஆயுதங்களை (Nuclear Strategic Weapons) ஏந்திக் கொண்டோ அல்லது ஆகாய விமானங்களிலிருந்து விடுவித்தோ நகரங்கள், தொழிற்துறை மையங்கள், இராணுவத் தளங்கள் ஆகியவை தகர்க்கப்படத் திட்டமிடப் படுகின்றன.
TargetHiroshimaNagasakiTokyo Fire RaidAverage of 93
Attacks on Cities
Dead/Missing70,000-80,00035,000-40,00083,0001,850
Wounded70,00040,000102,0001,830
Population Density35,000 per sq mile65,000 per sq mile130,000 per sq mile?
Total Casualties140,000-150,00075,000-80,000185,0003,680
Area Destroyed4.7 sq mile1.8 sq mile15.8 sq mile1.8 sq mile
Attacking Platform1 B-291 B-29334 B-29sB-29s
Weapon(s)‘Little Boy’ 15 kT
(15,000 tons of TNT)’Fat Man’ 21 kT
(21,000 tons of TNT)1,667 tons1,129 tons
அணு ஆயுத வெடிப்புகளில் நேரும் அகோர விளைவுகள்
1945 இல் அமெரிக்க போட்ட “லிட்டில் பாய்” அணுக்குண்டு ஹிரோஷிமா நகரை முற்றிலும் தகர்த்தது.  அடுத்துப் போட்ட “·பாட் மான்” அணுக்குண்டில் நாகசாக்கி நகரம் தரைமட்டம் ஆனது.  இவ்விரு நகரங்களில் ஏற்பட்ட விளைவுகளும், கதிர்வீச்சுக் காயங்கள், மரணங்கள், கதிரியக்க பொழிவுகளின் தீவிரம், நீண்ட கால விளைவுகள் அனைத்தும் மாதிரிப் பாடங்களாய் உலக நாடுகளுக்கு அறிவைப் புகட்டுகின்றன.  ஆயுதங்களின் கிலோ டன் டியென்டி, மெகா டன் டியென்டி வெடிப்பு ஆற்றலுக்கு ஏற்ப விளைவுகளின் தீவிரம் குறையவோ கூடவோ செய்கிறது.
1.  அணுக்குண்டு வெடிப்பு அலைகள் (Bomb Blast):
அணு ஆயுத வெடிப்பின் போது வெளியேறும் ஏராளமான வெப்ப அலைச்சக்தி சூழ்வெளிக் காற்றை அதிவிரைவில் சூடாக்குகிறது.  வெப்ப வாயு விரைவாக விரிவாகிப் பாய்ந்து பரவும் அதிர்ச்சி அலையாகத் தாக்குகிறது.  இவ்விதம் வெளியாவது பாதி அளவு வெடிப்புச் சக்தி.  அந்த விளைவில் குண்டு வீழ்ந்த இடத்துக்கு நெருங்கிய கட்டடங்கள் தரை மட்டமாக்கப் பட்டுப் பல மைல் தூரம் வீடுகள் தகர்ந்து பொடியாகும் !  அத்துடன் போட்ட இடத்தில் பெருங்குழி ஒன்றுதோண்டப்படும்.
2.  வெப்ப சக்தி வெளியேற்றம் (Heat Wave Spread):
அணு ஆயுத வெடிப்பால் ஒரு மில்லியன் டிகிரி உஷ்ணமுடைய ஒரு பெரும் தீக்கோளம் உண்டாகும்.  அந்தத் தீப்பிழம்பில் தகர்க்கப் படாத வீடுகள், கட்டங்கள் பற்றிக் கொண்டெரியும்.  வெப்ப வெளியேற்றம் முழு ஆற்றலில் மூன்றில் ஒரு பங்காக கணிக்கப் படுகிறது.  இந்த பயங்கரத் தீப்பிழம்பே ஒரு பெரு குடைக் காளான் முகில்போல் (Huge Mushroom Cloud) உயரே விரிந்து செல்கிறது.
3.  கதிர்வீச்சு & கதிரடிப்பு (Direct Radiation Dose):
வெப்ப வெடிப்போடு அதிதீவிரக் கதிர்வீச்சு எல்லாத் திசைகளிலும் பாய்ந்து உயிரனங்களைத் தாக்குகிறது.  அதில் முதலாக மோதும் நியூட்ரான்கள், காமாக் கதிர்களைத் “துரிதக் கதிர்வீச்சு”  (Prompt Radiation – Mostly Neutrons & Gamma Rays) என்று குறிப்பிடப் படுகிறது.  அதிதீவிரக் கதிரடிகள் (High Amount of Radiation Dose)  மனிதரையும், விலங்குகளையும் உடனே அல்லது சில தினங்களில் கொன்றுவிடும் !  குறைந்த அளவு கதிரடிப்புகள் கதிர் நோய்களை உண்டாக்கி மெதுவாகக் கொல்லும்.  பேரளவு கதிர்வீச்சுக் கதிரடி புற்றுநோய்களை (Cancer) உண்டாக்கும்.
4.  தாமதக் கதிரெழுச்சி விளைவுகள் (Delayed Radiation Effects) :
அணுப்பிளவு விளைவுகளால் பின்னெழும் கதிரியக்கப் பாதிப்புகள் மாந்தருக்கு நீண்ட காலம் கேடு தருபவை.  அக்கொடிய பாதிப்புகள் அணுப்பிளவு மூலகங்களின் “அரை ஆயுளைப்” (Half Life) பொருத்தவை.  அரை ஆயுள் என்பது கதிரியக்கத் தேய்வு முறையில் நிலையற்ற மூலகம் (Unstable Elements due to Radioactive Decay) படிப்படியாகத் தேய்ந்து நிறை பாதியாகும் காலத்தைக் குறிப்பது.  சீக்கிரமாகத் தேயும் நிலையற்ற மூலகம் சிறிது காலம் உயிரினத்தைப் பாதிக்கும்.  மெதுவாகத் தேயும் நிலையற்ற மூலகந்தான் நீண்ட காலம் உயிரினத்துக்குத் தொல்லை கொடுப்பது.  இந்த கதிர்வீச்சு வாயு மூலகங்கள் சூழ்வெளிக் காற்றில் பல நாடுகளுக்கு பயணம் செய்து மக்களைப் பாதிக்கின்றன.
5.  கதிரியக்கப் பொழிவுகள் (Radioactive Fallouts):
இறுதியாக நூற்றுக் கணக்கான மைல் காற்றில் கொண்டு செல்லப்பட்டு இந்த கதிரியக்கத் துணுக்குகள்தான் பொழிவுகளாகப் பூமியில் நிரந்தரமாகப் படிந்து விடுகின்றன.  நீண்ட அரை ஆயுள் உடைய மூலகத் துணுக்குகள் பூமியில் தங்கி நெடுங்காலம் மனித இனத்துக்குத் தொல்லைகள் அளிக்கின்றன.  அவையே நிலவளம், நீர்வளம், சூழ்வெளியைத் தீண்டி பல ஆண்டுகளுக்கு நாசம் புரிகின்றன.

6.  விண்வெளிப் பாதிப்புகள் (Effects in Space):
அணு ஆயுதச் சூழ்வெளிப் பாதிப்புகள் குண்டு போடும் போது எந்த உயரத்தில் வெடிக்கிறது என்னும் மேல்மட்டத்தைப் பொருத்தது.  அதிர்ச்சி அலைகளைப் பரப்பப் போதிய வாயு இல்லாமல் வெறும் கதிர்வீச்சுத் தாக்குதலே பெரும்பான்மையாக விளைந்திடும்.  வெப்ப சக்தி பரவிச் சென்று தீ மூட்டும் நிகழ்ச்சிகள் குன்றும்.  பொதுவாக நியூட்ரான், காமாக் கதிர்களின் தீங்கு மிகைப்படும்.
7.  மின்காந்த அதிர்வு விளைவுகள் (Electromagnetic Pulse Burst):
அணு ஆயுத வெடிப்பிலே மிகவும் விந்தையான விளைவு :  ஒரு பெரும் மின்காந்தத் துடிப்பு (Production of an Electromagnetic Pulse – A Powerful Burst of Electric Current) உண்டாவது !  கதிர்வீச்சில் பாய்ந்து செல்லும் காமாக் கதிர்கள் சூழ்வெளி வாயுவோடுச் சேரும் போது அவ்வித மின்காந்தத் துடிப்பு ஏற்படுகிறது !  அந்த மின்னோட்டம் மின்சார, மின்னியல் சாதனங்களை – கணினிகள், மின்சக்தி நிலையங்கள், தொலைக் கட்சி நிலையங்கள், ரேடியோ தொடர்புகள் போன்றவற்றைப் பெரும் அளவில் பாதிக்கும்.
(கட்டுரை தொடரும்)
*****************************
தகவல் :
Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)
1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)
2.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)
3.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)
4.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)
5.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads (November 2007)
6.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)
7.  Neutron Bombs – Wikipedia Report (December 9, 2009)
8. Jayabarathen (jayabarat@tnt21.com) December 10, 2009

மேன்ஹாட்டன் புராஜக்ட் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்ட முக்கியமான விஞ்ஞானிகளில் சிலர்:
Robert Oppenheimer (USA), David Bohm (USA), Leo Szilard (Hungary), Eugene Wigner (Hungary), Rudolf Peierls (Germany), Otto Frisch (Germany), Felix Bloch (Switzerland), Niels Bohr (Denmark), James Franck (Germany), James Chadwick (Britain), Emilio Segre (Italy), Enrico Fermi (Italy), Klaus Fuchs (Germany) and Edward Teller (Hungary).