ஞாயிறு, 31 ஜனவரி, 2010

நன்றி உணர்வு


குருவியின் நன்றி உணர்வு ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது தோழருடன் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு மரக்கிளையில் குருவி ஒன்று கத்திக் கொண்டே இருந்தது. அதைக் கண்ட தோழர், ஏன் இந்தக் குருவி கத்திக் கொண்டே இருக்கிறது என்று கேட்டார். அதற்கு நபிகள், அந்த குருவிக்கு கண் தெரியாது. அதனால் இறைவா, எனக்கோ கண் தெரியவில்லை. நான் எப்படி இரை தேடி உண்பேன் என்று கூறி கத்துகிறது என்றார். அந்த நேரத்தில் அந்த பக்கம் பந்து வந்த வெட்டுக்கிளி ஒன்று குருவியின் வாயில் விழ, குருவி அந்த வெட்டுக்கிளியை கவ்வி விழுங்கியது. வெட்டுக்கிளியை உண்ட குருவி உடனே மீண்டும் கத்தத் துவங்கியது. இதைப் பார்த்ததும் வியந்துபோன தோழர், இப்போது மீண்டும் ஏன் கத்துகிறது என்று கேட்டார். நபிகள், உணவு கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறது என்று பதிலளித்தார். நன்றி மறப்பது நன்றன்று

எது சுதந்திரம் என்றால்..!



சுயநலமில்லாத மனிதர்களால்சுத்தமாக வார்த்தெடுத்துசுமைகளை சுமக்கும் மக்கள்சுவாசிக்கும் காற்றே சுதந்திரமாகும்சுடுமணலில் வாழ்ந்த மக்கள்சுவையாக பேசிமகிழ எங்கள்சுகபோகங்களை மறந்து என்றும்சுபீட்சம் பெற்று கொடுப்பதே சுதந்திரமாகும்சுயம்வரம் நடாத்தி தேர்வு எழுதிசுயமரியாதையை காப்பாற்றி அவர்களைசுயாட்சிதனை கையில் கொடுத்து மக்களின்சுந்தரத்தை காணுவதே சுதந்திரமாகும்..
சுரண்டல் இல்லாத சமாந்தர புவியில்சுயநலவாதிகளை இல்லாதொழித்துசுய அதிகாரம் கொண்ட உள்ளங்களாகசுற்றிவரச் செய்வதே சுதந்திரமாகும் சுயசேவை மனப்பாண்மை பரவிடசுகபோகம் அனுபவிக்கும் சித்தர்களைசுககேடு அற்ற கல்விமான்களாய்சுத்தம் செய்து வருவது சுதந்திரமாகும்



சுடு தீபம்அணையுமுன்னர்சுடர்விட்டு பிரகாசித்த விளக்கு போலசுய உணர்வு உள்ளவர்களாகசுட்டி உலகிற்கு காட்டுவதே சுதந்திரமாகும்
சுருக்கு பைதனை கையில் வைத்துசுமந்துவாழும் வயோதிபரைசுடுநீரில் தவிக்க விடாமல் நாம்சுகமாக நீராடுவதே சுதந்திரமாகும்
சுயநலம் எனும் வலையில் சிக்காமல்சுயபுத்தியுடன் சிந்தித்து நாம்சுத்தீகரித்த நல் எண்ணையாய்சுடர்விட்டு எரியும் மக்கள் விளக்கில்.. அதுவே…சுதந்திரமாகும்….கிளியின் ஓர் கிராமத்து நாயகன்..

கி.மு கதை : கிதியோன், The 300

இஸ்ரயேலர்கள் சிறிதுகாலம் தங்களை அடிமை நிலையிலிருந்து மீட்டு வந்த கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாய் இருந்தார்கள். ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல அவர்களின் குணம் மாறத் துவங்கியது. அவர்கள் வேற்று தெய்வங்களை வழிபடவும், இஸ்ரயேலர்களின் கடவுளை நிராகரிக்கவும் துவங்கினர். தன்னை மதிக்காத இஸ்ரயேலர்களைக் கடவுளும் கைவிட்டார். அவர்கள் மிதியானியரால் தோற்கடிக்கப்பட்டு அவர்களுக்கு அடிமையானார்கள்.

இஸ்ரயேல் மக்கள் மிதியானியரின் கொடுமைக்குப் பயந்து மலைக்குகைகளிலும், பாறை இடுக்குகளிலும் ஒளிந்து வாழ்ந்தார்கள். மிதியானியரின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அவர்கள் இஸ்ரயேலரின் கால்நடைகள் , விளைபொருட்களைக் கூட விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டனர், அல்லது அழித்தனர். ஏழு ஆண்டுகள் மிதியோனியரின் அடக்குமுறைக்குள் கொடுமை அனுபவித்த இஸ்ரயேலர்கள் மனம் திருந்தி கடவுளை நாடினார்கள். கடவுள் அவர்களுடைய வேண்டுதல் ஒலிகளைக் கேட்டார்.

கடவுள் அவர்களிடம் ஒரு இறைவாக்கினரை அனுப்பினார்.

‘நீங்கள் கடவுளின் கட்டளைகளை மீறினீர்கள் அதனால் தான் உங்களுக்கு இந்தச் சோதனைகள்’ இறைவாக்கினர் சொன்னார்.

‘ஆம் உண்மை தான், நாங்கள் அவரை விட்டு விலகி வெகுதூரம் போய்விட்டோ ம். வேற்று தெய்வங்களுக்கு பலிபீடங்கள் அமைத்து பலி செலுத்தினோம். இதெல்லாம் தீமை என்பதை கடவுள் எங்களுக்குச் சொல்லியிருந்தார். நாங்கள் தான் கேட்கவில்லை. எங்களுக்கு கடவுளிடமிருந்து மன்னிப்புக் கிடைக்காதா ? நாங்கள் மீட்படைய வழியே இல்லையா ?’ மக்கள் கேட்டனர்.

‘கடவுள் நினைத்தால் உங்கள் துயரங்களை நீக்க முடியும். அவரை மட்டும் நம்பி, அவரிடம் மன்றாடுங்கள்’ இறைவாக்கினர் சொன்னார்.

மக்கள் அனைவரும் ஒரே மனதாகக் கடவுளை வேண்டினார்கள். கடவுள் மனமிரங்கினார். யோவாசின் மகனான கிதியோன் மூலம் மக்களை மீட்க கடவுள் தீர்மானித்தார். தன்னுடைய தூதர் ஒருவரை கிதியோனிடம் அனுப்பினார். கடவுளின் தூதர் கருவாலி மரத்தின் அருகே வந்து அமர்ந்தார். அங்கே கிதியோன் மிதியானியர்களுக்குப் பயந்து தன்னுடைய தானியங்களை ஒளித்து வைத்துக் கொண்டிருந்தார். கடவுளின் தூதர் அவருக்கு முன்பாக வந்து நின்றார்.

‘வீரனே…. கடவுள் உன்னோடு இருக்கிறார்’ தூதர் கிதியோனை வாழ்த்தினார்

‘இல்லை… கடவுள் எங்களோடு இல்லை. கடவுள் எங்களோடு இருந்திருந்தால் ஏன் எங்களுக்கு இத்தனை துன்பம்’ கிதியோன் விரக்தியாய்ச் சொன்னார்.

‘நீ ஏன் விரக்தியாய் பேசுகிறாய் ? கடவுள் உன்னுடைய மூதாதையர்களுக்குச் செய்த உதவிகளை நீ மறந்தாயா ?’

‘கதைகள் நினைவில் இருக்கின்றன. கடவுளைத் தான் காணோம்’

‘கதைகளா ? எகிப்தியர்களின் அடிமைகளாக நானூறு ஆண்டுகள் கிடந்த உன்னுடைய மூதாதையர்களைக் கடவுள் பல்வேறு அதிசய, அற்புதச் செயல்களின் மூலம் தான் மீட்டார் தெரியுமா ? செங்கடலையே இரண்டாகப் பிளந்து வழியமைத்தார் தெரியுமா ? இவைகளெல்லாம் கதைகளல்ல, உண்மைச் சம்பவங்கள் ‘ தூதர் சொன்னார்.

‘அப்படியானால் இப்போது எங்கே அந்த அதிசயச் செயல்கள் ? கடவுள் எங்களை மீண்டும் அடிமைகளாய் விட்டு விட்டாரே. எகிப்தியரிடமிருந்து மீட்டு மிதியானியர்களிடம் தானே அனுப்பி வைத்திருக்கிறார். எங்களை மீட்கவேண்டும் என்று தோன்றவில்லையா அவருக்கு ? எங்கள் கதறல் ஒலிகள் அவர் காதுகளை எட்டவில்லையா ? ‘ கிதியோன் கேட்டார்.

‘அதற்காகத் தானே உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்’ தூதர் சொன்னார்.

‘என்னையா ?’

‘ஆம்… உன்னைத் தான், உன் மூலமாகத் தான் கடவுள் இஸ்ரயேலர்களை மிதியானியரிடமிருந்து மீட்கப் போகிறார்.’

‘என்ன விளையாடுகிறீர்களா ? நான் என் குடும்பத்திலேயே மிகவும் சிறியவன். என்மூலமாக மீட்பா ? நல்ல வேடிக்கை தான். நான் இதற்குத் தகுதியானவன் அல்ல’

‘இல்லை நீ தான்.. நீ ஒருவன் இதற்குத் தகுதியானவன். நீ தனியாகவே சென்று மிதியானியரைத் தோற்கடிப்பாய். கடவுள் உன்னோடு இருப்பார்’ தூதர் அழுத்தமாய்ச் சொன்னார்.

‘தூதரே, நீங்கள் சொல்வது எதுவுமே எனக்குப் புரியவில்லை. நான் மிதியானியரோடு போரிடவேண்டும் என்கிறீர்களா ?’ கிதியோன் கேட்டார்.

‘ஆம்… உன் தலைமையில் ஒரு படையைத் திரட்டி நீ மிதியானியருக்கு எதிராகப் போரிடவேண்டும். கடவுள் உன்னை வழி நடத்துவார். ‘ தூதர் சொன்னார்.

‘தூதரே…ஒரு நிமிடம் நில்லுங்கள். நான் உடனே வருகிறேன். எங்கும் போய்விடாதீர்கள்’ கிதியோன் தூதரிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு ஓடினார். வீட்டிற்குச் சென்று சில புளியாத அப்பங்களையும், கொஞ்சம் இறைச்சியையும் எடுத்துக் கொண்டு வந்தார்.

‘நீர் சொல்வதெல்லாம் உண்மையாய் இருந்தால், நீர் உண்மையிலேயே கடவுளின் தூதனாக இருந்தால், எனக்கு ஒரு அடையாளத்தைச் செய்து காட்டுங்கள்’ சொல்லிக் கொண்டே கிதியோன் அப்பங்களையும் இறைச்சியையும் தூதரின் முன்னால் வைத்தார்.

‘ நீ கொண்டு வந்திருக்கும் இந்த அப்பங்களையும், இறைச்சியையும் வைத்தே நான் உனக்கு ஒரு இறை அடையாளத்தைக் காட்டுகிறேன். கொஞ்சம் அப்பத்தையும், இறைச்சியையும் எடுத்து அந்தப் பாறை மீது வை.’ தூதர் சொன்னார். கிதியோன் அவ்வாறே செய்தார்.
தூதர் அந்த அப்பங்களையும், இறைச்சியையும் தன்னிடமிருந்த கோலின் நுனியால் தொட்டார். உடனே நெருப்பு சட்டென்று தோன்றி அந்தப் பொருட்களை எரித்தது.

கிதியோன் பரவசமானார். கடவுள் நெருப்பை அனுப்பிப் பலி பொருட்களை எடுத்துக் கொண்டதை வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். அவருடைய மனதுக்குள் நம்பிக்கை துளிர்விட்டது.

‘இப்போதாவது நம்பு…’ சொல்லிக் கொண்டே சட்டென்று மறைந்தார் ஆண்டவரின் தூதர். கிதியோன் பயந்து போனார்.
‘ஐயோ, நான் எப்படிச் சொல்வேன். கடவுளின் தூதரை நான் நேருக்கு நேராய் சந்தித்தேனே…’ என்று பரவசமடைந்தார்.

அன்று இரவே கிதியோன் அன்னிய தெய்வங்களுக்காய் எழுப்பப்பட்டிருந்த பலிபீடங்களை எல்லாம் தகர்த்து எறிந்தார். இஸ்ரயேலரின் கடவுளுக்காய் அவர் ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டியெழுப்பி, அங்கே ஒரு கொழுத்த மாட்டை பலிசெலுத்தினார்.

மறுநாள் மக்கள் தங்கள் தெய்வங்களின் பலிபீடங்கள் தகர்ந்து கிடப்பதைக் கண்டு ஆவேசமடைந்தனர்.

‘இந்தக் கொடுமையைச் செய்த பாவி யார் ? அவனைக் கொல்லவேண்டும்’ என்று மக்கள் கோபமாகச் சுற்றித் திரிந்தனர்.

‘அது கிதியோன் தான்… இரவில் அவன் தன்னுடைய ஆட்களுடன் வந்து பலிபீடம் கட்டுவதைக் கண்டோ ம்…’ அந்தப் பக்கமாய் வசித்து வந்த மக்கள் சொன்னார்கள்.

‘அதெப்படி கிதியோன் எங்கள் கடவுளின் பலிபீடங்களை இடிக்கலாம். அவனை அழிக்காமல் விடப்போவதில்லை’ ஆவேசமடைந்த மக்கள் கிதியோனின் வீட்டை முற்றுகையிட்டார்கள்.

‘கிதியோனே… வெளியே வா… உனக்கு என்ன தைரியம் இருந்தால் எங்கள் கடவுளர்களை அவமானப் படுத்துவாய் ?’ மக்கள் கூச்சலிட்டனர்.

கிதியோனின் தந்தை வெளியே வந்தார். ‘கிதியோன் இங்கே இல்லை… என்ன விஷயம் ? ஏன் கூச்சலிடுகிறீர்கள் ?’

‘ஒன்றும் தெரியாததுபோல் நடிக்கிறாயா ? எங்கள் கடவுளர்களின் பலி பீடங்களை உன் மகன் இடித்துத் தகர்த்திருக்கிறான். அவனைக் கொல்லவேண்டும்’

‘யார் உங்கள் கடவுள் ? ‘

‘பாகால் !… பாகாலின் பலிபீடத்தையும், அதன் அருகே நின்றிருந்த அசேராக் கம்பத்தையும் உன் மகன் அழித்திருக்கிறான்’ மக்கள் கத்தினார்கள்.

‘பாகால் !! அவன் என்ன பெரிய கடவுளா ? ‘ கிதியோனின் தந்தையும் கோபமானார்.

‘ஆம்.. அவர் மிகவும் சக்திவாய்ந்தவர்’ மக்கள் சொன்னார்கள்.

‘அந்த பாகால் பெரிய சக்திவாய்ந்தவனாக இருந்தால் அவன் என் மகனைக் கொல்லட்டும். நீங்கள் அவனைக் கொல்கிறீர்கள் என்றால் உங்கள் கடவுள் கையாலாகாதவர் என்று தான் அர்த்தம். போங்கள்… உங்கள் கடவுளிடம் சொல்லி என் மகனைக் கொல்லச் சொல்லுங்கள். உங்கள் கடவுளுக்கு வீரம் இருந்தால் அவன் என் மகனைக் கொல்லட்டும்’ கிதியோனின் தந்தையும் பதிலுக்குக் கத்தினார்.

‘பாகாலின் கையால் அவன் சாகப் போவது உறுதி. அவனைப் பாகால் அழிப்பான் என்பதைக் குறிக்கும் விதமாக இனிமேல் அவனை நாங்கள் எருபாகால் என்று அழைப்போம்’ என்று சொல்லிக் கொண்டே அவர்கள் கலைந்து போனார்கள்.

கிதியோன் மக்களின் கையிலிருந்து தப்பினான். ஆனாலும் இன்னும் அவனுக்குள் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ‘ இது ஒருவேளை கடவுளின் அழைத்தல் இல்லையென்றால் என்ன செய்வது ? கடவுள் தான் தூதரை அனுப்பினாரா ? இல்லை ஏதேனும் கண்கட்டு வித்தையா ?’
கிதியோனின் மனம் பல்வேறு கேள்விகளால் நிறைந்தது.

அவன் கடவுளை நோக்கி,’ கடவுளே… நீர் தான் என்னை அழைத்தீர் என்பதற்கு எனக்கு இன்னுமொரு அடையாளத்தைக் காட்டும். நான் என்னுடைய கம்பளி ஆடையை இன்று இரவு வெட்டவெளியில் வைப்பேன். என்னை அழைத்தது நீர் தான் என்றால் என்னுடைய ஆடையில் மட்டும் காலையில் பனி நிறைந்திருக்கட்டும். மற்ற இடங்கள் எல்லாம் காய்ந்து கிடக்கட்டும்’ என்றார். சொல்லிவிட்டு அன்று இரவே தன்னுடைய கம்பளியைக் கழற்றி வெட்டவெளியில் வைத்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அவருடைய கம்பளியில் மட்டும் பனி நிறைந்திருந்தது. தரை உலர்ந்து கிடந்தது.

‘ஒருவேளை தரையில் விழுந்த பனி உலர்ந்து போயிருக்குமோ ? கம்பளியானதால் மட்டும் உலராமல் ஈரமாய் இருக்கிறதோ ? இது இயற்கையாகவே நடக்கும் சாதாரண நிகழ்வோ ?’ கிதியோனின் மனம் மீண்டும் சந்தேகப் பட்டது.

அவன் மீண்டும் கடவுளை நோக்கி, ‘கடவுளே இன்னும் எனக்கு ஒரே ஒரு அடையாளத்தை மட்டும் செய்து காட்டும். இன்றைக்கும் நான் என் கம்பளியை இங்கே வைத்து விட்டுப் போவேன். நாளைக் காலையில் நான் வந்து பார்க்கும்போது கம்பளியில் மட்டும் பனி இருக்கக் கூடாது. தரையெங்கும் பனி நிறைந்திருக்க வேண்டும். உம்மில் நம்பிக்கை வைக்கக் கடைசியாக எனக்கு இந்த அடையாளத்தைச் செய்து காட்டும்’ என்றான்.

மறுநாள். அவன் கண்களை அவனாலேயே நம்பமுடியவில்லை. முந்தைய நாள் உலர்ந்து கிடந்த தரை இப்போது பனியில் குளித்து தொப்பலாய்க் கிடந்தது. புற்களின் தலைகளிலெல்லாம் பனிக் கூடுகள். ஆனால் கிதியோனின் கம்பளி மட்டும் உலர்ந்து கிடந்தது.

‘கடவுளே… என்னை அழைத்தது நீரே ! உம்மை நம்புகிறேன்’ கிதியோன் மண்டியிட்டு கடவுளிடம் பேசினான்.

மிதியானியருடம் போரிட கிதியோன் தயாரானான். அவன் மக்களை பெருமளவில் திரட்டி கடல் அலையென மிதியானியரை நோக்கிப் படையெடுத்தான். கடவுள் அவனை அழைத்தார்.
‘கிதியோனே… நீ இத்தனை மக்களை அழைத்துக் கொண்டு போகவேண்டாம். வெற்றி பெற்றபின் அவர்கள் கர்வம் கொள்வார்கள். மக்கள் சக்தியே வென்றது என்று அவர்கள் ஆணவம் அடைவார்கள். அவர்களில் சிலர் மட்டும் போதும் உனக்கு. அப்போதுதான் என்னுடைய வலிமையை மக்கள் உணர்வார்கள்’ கடவுள் சொன்னார்.

கிதியோன் கடவுளின் வார்த்தையின் படி மக்களை நோக்கி,’ உங்களில் யாரையும் நான் கட்டாயப் படுத்தவில்லை. போரில் ஆர்வம் இல்லாதவர்களும், பயப்படுபவர்களும் உடனே திரும்பிப் போய்விடுங்கள்’ என்றான்.

மக்களில் முக்கால் வாசி பேர் உடனே திரும்பி நடந்தார்கள். மிச்சமிருந்த கூட்டம் சுமார் பத்தாயிரம் இருந்தது.

கடவுள் மீண்டும் கிதியோனிடம், ‘இதுவும் மிக அதிகமான கூட்டம் தான். இவர்களை அதோ அந்த நீர் நிலைக்கு அழைத்துப் போய் தண்ணீர் குடிக்கச் சொல். யாரெல்லாம் தண்ணீரை கைகளில் அள்ளிக் குடிக்கிறார்களோ அவர்களை தனியே நிற்க வை. யாரெல்லாம் மண்டியிட்டுக் குடிக்கிறார்களோ அவர்களை திரும்ப அனுப்பிவிடு’ என்றார்.

கிதியோன் மக்களை நோக்கி,’ நீங்கள் எல்லோரும் அந்த நீர் நிலைக்குச் சென்று தண்ணீர் குடியுங்கள்’ என்றார்.

அவர்களில் பெரும்பாலானோர்கள் மண்டியிட்டுத் தண்ணீர் குடித்தார்கள். வெறும் முந்நூறு பேர் மட்டுமே கைகளில் நீரை அள்ளிக் குடித்தார்கள்.
கிதியோன் கலங்கினார். ‘கடவுளே… மிதியானியரை அழிக்க வெறும் முந்நூறு பேர் போதுமா ?’.

கடவுள் அவரிடம் ‘போரிடப் போவது முந்நூறு பேர் என்றால் தோல்வி நிச்சயம் ! ஆனால் போரிடப் போவது முந்நூறு பேர் அல்லவே ! நான் ஒருவன் மட்டுமல்லவா ? அதனால் வெற்றி நிச்சயம் தான். கவலையை விடு’ கடவுள் பதிலளித்தார்.

அன்று இரவு கிதியோனின் நண்பன் ஒரு கனவு கண்டான். கனவில் ஒரு வட்டமான கோதுமை அப்பம் சுழன்று சென்று மிதியானியரின் கூடாரத்தை இடித்துத் தகர்த்தது. நண்பன் கிதியோனிடம் ஓடோ டி வந்தான்.

‘நண்பா… நீ வெற்றி பெறும் வேளை வந்துவிட்டது ! உன்னுடைய வாள் தான் அந்த அப்பம். நீ அவர்களை துரத்தும் நேரம் வ்ந்துவிட்டது என்பதைத் தான் கடவுள் என் கனவு வாயிலாகச் சொல்லியிருக்கிறார்’ நண்பன் சொன்னான்.

‘கடவுள் எனக்கு வாக்களித்திருக்கிறார். நமக்கு நிச்சயம் வெற்றிதான். நாம் போருக்குத் தயாராவோம்’ கிதியோன் சொன்னான்.

கிதியோன் அந்த முந்நூறு பேரையும் மூன்று குழுக்களாகப் பிரித்தார். அவர்களில் ஒவ்வொருவர் கைகளிலும் ஒவ்வொரு நெருப்புப் பந்தமும், ஒரு காலிப் பானையும், ஒரு எக்காளமும் கொடுத்தார். அதை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்.

நள்ளிரவில் எல்லோரும் கைகளில் நெருப்புப் பந்தத்தோடும், காலிப் பானைகளோடும் மிதியானியர் கூடாரமடித்திருந்த இடத்தைச் சுற்றி வளைத்தார்கள்.

கிதியோன் திடீரென்று எக்காளத்தை எடுத்து ஊதினார். உடனே மிதியானியர்களைச் சுற்றி நின்ற அத்தனை பேரும் பந்தங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு எக்காளம் ஊதினார்கள். பெரும் சத்தத்தைக் கேட்ட மிதியானியர்கள் திடுக்கிட்டு விழித்தார்கள். அப்போது கிதியோனின் வீரர்கள் தங்கள் கைகளில் இருந்த பானையை ஒரே நேரத்தில் உடைத்து பெரும் சத்தம் எழுப்பினார்கள். மிதியானியர்கள் இதென்ன சத்தம் என்று அதிர்ந்து போய் நிமிர்கையில் கிதியோனின் வீரர்கள் எல்லோரும் ஒரே குரலாக

‘ஆண்டவருக்காக…. கிதியோனுக்காக’ என்று சத்தமிட்டார்கள். கிதியோனின் திட்டம் வெற்றியடைந்தது. மிதியானியர்கள் குழப்பத்தில் அங்குமிங்கும் ஓடினார்கள். கடவுள் மிதியானியர்களுக்குள்ளேயே திடீர்க் கலகத்தை உண்டாக்கினார். இரவில் மிதியானியர்கள் தங்களுக்குள்ளே சண்டை போட ஆரம்பித்தார்கள்.

மிதியானியர்கள் தங்களுக்குள்ளேயே வெட்டிக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் சிதறி ஓட, கிதியோன் மாபெரும் வெற்றி பெற்றார். கடவுளின் வழிகாட்டுதல் அவரை வெற்றி வீரனாக்கியது. மக்கள் எல்லோடும் அவரிடம் வந்து,’ இனிமேல் நீங்கள் தான் எங்களை ஆளவேண்டும்.. வாருங்கள். எங்கள் அரசராகுங்கள்’ என்று அழைத்தார்கள்.

அவரோ அவர்களிடம்,’ மீண்டும் தவறிழைக்காதீர்கள்.. கடவுள் ஒருவரே அரசர். அவர் சொல்வதை மட்டுமே கடைபிடித்து வாழுங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

காம சக்தி

பூக்கும் மலரில் பொங்கும் தேனது !
ஆக்கும் சக்தி ! ஆத்மா சிறகு !
அளவுக்கு மீறின் அழிக்கும் சக்தி !
கவரும் சக்தி ! காந்த சக்தி !
பிணைக்கும் சக்தி ! பிறப்பின் சக்தி !
துருவம் இருவகை ஆண்மை, பெண்மை !
ஆண்மை பாதி ! பெண்மை மீதி !
ஆண்பால் இன்றேல் பெண்பால் தேயும் !
பெண்பால் இன்றேல் ஆண்பால் மாயும் !
வயிறுக்கு உணவு ! உடலுக்கு உறவு !
ஈரினம் இணைந்து பூரணம் அடைவது
மனித நியதி !

பூரணச் சுதந்திரம் ?

பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டிப்
போராடினோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
பூகம்பம் நிற்காமல்
மும்மூர்த்தி யானது
பங்களா தேசமாய் !
கட்டுப்பாடுள்ள சுதந்திரம்
கண்ணிய மானிடருக்கு !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,
காட்டு மிராண்டிகளுக்கு !
ராவணன் சீதையைத் தூக்கி
ரதத்தில் போவான் !
கண்ணன் குளிக்கும் மாதர்
புடவை
களவாடு வான் !
பூரணச் சுதந்திரம் ஒரு போர்க்களம் !
பட்டப் பகலில் பாஞ்சாலி
பட்டுச் சேலையைப்
பலர்முன்
பற்றி இழுப்பான்
துச்சாதனன் !
பூரணச் சுதந்திரம் ஒரு குருச்சேத்திரம் !
ஆலயத்தை இரவில் தகர்த்து
வேரறுப்பது
பூரணச் சுதந்திரம் !
பாதிரியார் உடையில்
தீ வைப்பது
வேதியர் சுதந்திரம் !
ரயில் பெட்டிகளை எரித்துச்
சவப்பெட்டி

கலைஞன் ! காதலன் ! கணவன் !


உடலை மெழுகாக்கி உன்னை
ஓவியமாய் உருவாக்கிச்
சிற்பமாய்ச் செதுக்கி,
ஒப்பனை செய்து
உலகுக்குக் காட்டுபவன்,
கற்பனைக் கலைஞன் !
உள்ளத்தின் மேல் படையெடுத்து,
வெள்ளைப் புறாவைத் தூதுவிட்டு,
இதயத்தைத் துணைக்கோள்
ஈர்ப்பில் சுற்றுபவன்
ஈசல் காதலன் !
உரிமைச் சிறையி லிட்டு, உன்னை
உயிருள்ள மட்டும் மூடி,
உள்ளமற்ற உடலாய்,
உடமைப் பண்டமாய்,
உரிமைப் பிண்டமாய்,
பம்பரமாய்,
பசும் பொன்னாய்ப் பேணுவோன்
அசுரக் கணவன் !
காதலனுக்கு வேட்கை
உன் துடிப்பு !
கலைஞனுக்கு தேவை
உன் நடிப்பு !
கணவனுக்கு வேண்டும்
உன் முடிப்பு !
கலைஞன், காதலன், கணவன் என்ற
முப்பெரும் அவதாரம்
ஒப்புடன் நிற்குமா
ஓருடலில் ?
ஒருநாள் விருந்து நீ
ஓவியக் கலைத் தூரிகைக்கு !
சிலநாள் கனவு நீ
சிந்தை நுழை காதலனுக்கு [...]

காதலர் தினம் 2010


காதலர் தினம் காதலைப் புனிதப்படுத்துகிறது, உள்ளத்துக்குள் ஒளிந்து கிடக்கும் நேசத்தைப் பிரதிபலிக்க நாள்காட்டியில் தங்கத் தகடுகளால் நிரப்பப்பட்டிருக்கும் தினமே காதலர் தினம் என காதலர்கள் குதூகலிக்கின்றனர்.
காதலர் தினம் கலாச்சாரச் சீரழிவின் உச்சம். இது காதலைப் புனிதப்படுத்தி வந்த தேசத்தின் வேர்களில் விழுந்திருந்த போலித்தனமான மேலை நாட்டுக் கலாச்சார விஷம் என எதிர்ப்பாளர்கள் எதிர்க்கின்றனர்.
உணவகங்களில் உணவருந்தச் சென்றால் கூட பிப்ரவரி பதினான்காம் தியதி உங்களுக்குக் கிடைக்கும் “வேலண்டைன் ஸ்பெஷல் சிக்கனும், மட்டனும்”.
மின்னஞ்சல்களும், எஸ்.எம்.எஸ் களும் காதலர்களின் காதல் அலைவரிசையாய் மாறியிருக்கும் இன்றைய சூழலிலும் காதலர் தினத்தில் மட்டும் வாழ்த்து அட்டைகளையும், கூடவே ரோஜாப்பூக்களையும் வழங்க இளசுகள் பிரியப்படுகின்றனர்.
உண்மையில் காதலர் தினம் காதலர்களுக்கானதா ? அல்லது நமது கலாச்சாரத்தைச் சீரழிக்க வேண்டும் என யாரேனும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்களா ? இன்னும் கொஞ்சம் ஆழமாய் சிந்தித்தால் இதன் பின்னணியில் உறைந்து கிடக்கும் உண்மைகள் முகம் காட்டுகின்றன.
வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக முதலாளிகளால் உருவாக்கப்பட்டவை அல்லது பிரபலப் படுத்தப் பட்டவை தான் இந்த ‘தினங்கள்’ என்பதே முதன்மையான உண்மை. அதற்காகவே இவர்கள் ஊடகங்களைக் கவர்ச்சிகரமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர் தினம், மனைவியர் தினம், எதிர் வீட்டுக்காரன் தினம் என்று ஏதேதோ தினங்களை வர்த்தக வளர்ச்சிக்காக உருவாக்கி அந்தந்த தினங்களில் அந்தந்த நபர்களுக்குப் பரிசுகள் வழங்காவிடில் அது சாவான பாவம் போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் வழியாக பரப்பி மக்களை உசுப்பேற்றி விட்டு அதன் வெப்பத்தில் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் தந்திர சாலிகள் அவர்கள்.
முதலாளிகளின் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாத மக்கள் தங்கள் கரன்சிகளை வாழ்த்து அட்டைகளிலும், பூங்கொத்துகளிலும், சாக்லேட் பாக்கெட்களிலும் செலவிடுகையில் சத்தமில்லாமல் மில்லியன் கணக்கில் லாபம் பார்க்கிறார்கள் முதலாளிகள்.
நூறு ரூபாய் மதிப்புள்ள சாக்லேட்களை இதய வடிவப் பெட்டியில் வைத்து ஒரு சிவப்பு நிற ரிப்பனைக் கட்டி காதலர் தின சிறப்புச் சாக்லேட் எனும் பெயரில் விற்கின்றன நவீனக் கடைகள். இவற்றின் ஆயிரம் ரூபாய்க்கும் மேலே !
பழைய சில காதல் பாடல்களை கவர்ச்சிகரமான காதலர் தின ஸ்பெஷல் சிடி என கடைகளில் விற்கின்றனர் நான்கு மடங்கு அதிக விலையில்.நகைக்கடை, வைரக்கடை, துணிக்கடைகள் எல்லாம் கேட்கவே வேண்டாம். இந்த வைர மாலையைப் போட்டால் காதல் வளரும் என்றெல்லாம் விளம்பரங்கள் சிலிர்க்க வைக்கும்.
என்னென்ன உத்திகளை உங்களால் கற்பனை செய்ய முடியுமோ அத்தனை யுத்திகளும் காதலர் தினத்தில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. நோக்கம் வியாபாரம், வியாபாரம், வியாபாரம் !
காதலர் தினம் என்னும் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய், ஏதேனும் அதிகமாய், ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள்.
நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது ஆனால் முதலாளிகள் நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானித்திருக்கிறார்கள் என்பது தான் நிஜம். இந்த தினங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் பளீரென புலப்படும்.
அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 210 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 73 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவையெல்லாம் காதலர் தினம் எத்தனை ஆழமாய் வேர் விட்டு விரிவாய் கிளை பரப்பியிருக்கின்றன என்பதற்கான “ஒரு சோறு பதம்” மட்டுமே.
காதலர் தினத்தன்று தனக்கு ஒரு காதலனோ காதலியோ இல்லை என்று மற்றவர்கள் அறிந்து கொள்வதே அவமானம் என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கிறார்கள். எப்படியாவது ஒரு இணையைப் பிடித்து வாழ்த்துத் தெரிவிப்பதே மரியாதைக்குரியது எனும் எண்ணத்தை ஊக்குவிக்கவே ஊடகங்களும், காதலர் தினம் போன்ற விழாக்களும் உதவுகின்றன.
காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்வதை சிறப்பான காதலின் அடையாளமாகப் பார்க்கும் போக்கும் இன்று பரவி வருகிறது. தாய்லாந்தில் காதலர் தினத்தன்று திருமணப் பதிவு அலுவலகங்கள் நிரம்பி வழிகின்றன. காதலர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
காதல் என்பது நதியைப் போல ஒரு பயணம். உணர்வுகளை மனதில் வழிய விடும் பயணம். காதலர் தினம் கொண்டாடாவிடில் காதல் மலராது என்று அர்த்தமில்லை. பொது இடங்களில் ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவில்லையெனில் காதல் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தமில்லை.
நேசத்தின் வளர்ச்சியாய் காதலைப் பார்க்காமல், மெய்யின் கிளர்ச்சியாய்ப் பார்ப்பதால் இன்று பல காதல்கள் கண்களில் ஆரம்பித்து கனவுகளில் பயணித்து விடியலில் முடிந்து விடுகிறது. இன்றைய திரைப்படங்கள் சித்தரிக்கும் கவர்ச்சிப் பணியே காதலென்று கற்றுக் கொள்ளும் இளவயதினர் ஆழமான திருமண உறவுகளின் மீதான கலாச்சார வேர்களை கத்தரிக்கவும் துணிந்து விடுவது தான் வேதனை.
டிஸ்கோதேக், இரவு உணவக விடுதிகள், கடற்கரைகள் இவையெல்லாம் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு குத்தகைக்கு விட்டது போலாகி விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உண்மையான காதலர்கள் இல்லை என்பதும், பெரும்பாலான காதல்கள் காளான்கள் போல சடுதியில் தோன்றி மறைவனவாக உள்ளன என்பதும் காதலை இளைய சமூகத்தினர் இன்னும் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
காதல் தவறென்று எந்த தமிழ் இலக்கியமும், தலைவர்களும் சொல்லவில்லை.“பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து …. “ கம்ப ராமாயணத்தில் கம்பரின் கவித்துவம் கவியும் இந்தக் கவிதை இன்றும் காதலுக்கு அழகூட்டுவதாய் விளங்குகிறது. காதல் என்பது தமிழர்களின் கலாச்சார வேர்களில் கலந்த உணர்வு தான் என்பதனை சங்க இலக்கியமும் நமக்கு தெளிவாக்குகிறது.
அகத்திணையில் இல்லாத காதலா, அகநாநூறில் இல்லாத காதல் ரசமா, காமத்துப் பால் சொல்லாத சங்கதியா என்பது இலக்கியவாதிகளின் காதல் குறித்த கேள்வியாய் மலர்கிறது. உண்மை தான். காதல் தவறென்று இலக்கியங்கள் சொல்லவில்லை. எனில் இன்றைய வணிக மயமாக்கப்பட்டு விட்ட வசீகரத்தை எந்த இலக்கியமும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
தனக்குக் காதலி இருப்பதைப் பிரகடனப் படுத்திக் கொள்ளவும், பழைய காதலர்கள் தங்கள் உடைந்து போன காதலை நினைத்து டாஸ்மார்க் கடைகளில் தாடி தடவவும், மற்றவர்கள் ஐயோ நமக்கு யாரும் இல்லையே என நினைத்து தனிமையில் புலம்பவும் ஒரு நாள் தேவை தானா என்பதை இளைஞர்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
வாழ்த்து அட்டைகள், பரிசுகள், பூங்கொத்துகள் என வர்த்தக வளாகத்தைச் சூடுபிடிக்கச் செய்யும் இந்த காதலர் தினம் உண்மையில் எதைத் தான் தருகிறது ?. காதலை வெளிப்படுத்தவும் கொண்டாடவும் 364 நாட்கள் வலுவற்றவையாகி ஒரே ஒரு நாள் பட்டுமே பலமுடையதாகிறதா ? காதல் என்பது மைல் கல்லா ? பயணமா ? சிந்திப்பவர்கள் கண்டடைகிறார்கள் எது தேவையானது என்பதை !