புதன், 29 ஜனவரி, 2020

விண்வெளித்துறை சாதனையில் உயர... உயர... பறக்கும் இந்தியா

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா தனது விண்வெளி பயணத்தில் மாபெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது.
விண்வெளி என்பது பிரபஞ்சத்தின் பொருட்கள் எல்லாம் நகர்ந்து செல்லக்கூடிய கிட்டத்தட்ட ஒரு வெற்றிடம் ஆகும். நகர்ந்து செல்லும் பொருட்களில் நமது பூமியும் அடங்கும். இந்த பரந்த விண்வெளியில் நட்சத்திரங்களும் கிரகங்களும் பூமியும் மிகமிக சிறிய புள்ளிகளே.
மனிதன், பூமி, நிலவு, கிரகங்கள், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள், பால் வெளி இவை குறித்து அறிந்து கொள்வதற்கான ஆர்வத்திற்கு மனித சமுதாயம் எடுத்து கொண்ட முயற்சியே விண்வெளி பயணங்கள். ஆள் இல்லாத, ஆளோடு கூடிய விண்கலங்களை பூமியின் எல்லைகளுக்கு அப்பால் அனுப்பி இந்த பிரபஞ்சம் குறித்த பல உபயோகமான தகவல்களை பெறுவதற்கான ஒரு முயற்சியாக இது அமைந்து உள்ளது. விண்வெளி காலம் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது.
இந்த விண்வெளி பயணம் நமது பூமிக்கும், இந்த பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை கண்டறிவதற்காகவும் சூரியன் கிரகங்கள், நட்சத்திரங்கள் எப்படி தோன்றின என்பதை ஆய்வு செய்வதற்காகவும் இந்த பூமிக்கு அப்பால் உயிரினங்கள் மற்றும் நம்மை போன்ற மனித சமுதாயங்கள் இருக்கின்றனவா என அறிந்து கொள்வதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன.
உலக நாடுகள் அனைத்தும் விண்வெளித்துறையில் பல்வேறு ஆய்வுகளை  மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில்  வியத்தகு சாதனைகளை நிகழ்த்தி உலகத்தையே வியக்க வைத்து வருகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இந்திய அரசின் முதன்மையான விண்வெளி ஆராய்ச்சி நிலையமாக விளங்குகிறது. இது ஆகஸ்டு 15, 1969 -இல் நிறுவப்பட்டது. உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆய்வு மையங்களில் இஸ்ரோ ஆறாவதாக உள்ளது. புதிய மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றை நாட்டு நலனுக்காக பயன்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு உள்ளது. 
இஸ்ரோவின் பல்வேறு பணிகளுக்காகவும், ஆராய்ச்சிகளுக்காகவும் பெங்களூரு, திருவனந்தபுரம், டெல்லி, ஸ்ரீஹரிகோட்டா, மகேந்திரகிரி (தமிழகம்) உள்பட 21 இடங்களில் இஸ்ரோ மையங்கள் உள்ளது.
விஞ்ஞானிகளின் விடா முயற்சி, கடின உழைப்பு, மற்றும் திறமையினால் இஸ்ரோ பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 1975 -இல் ஆர்யபட்டா என்ற இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் இஸ்ரோவினால் உருவாக்கப்பட்டது. இது சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் அந்நாட்டிலிருந்து, அவர்களுடைய  ராக்கெட்  மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாஸ்கரா, ரோகிணி, கல்பனா, இன்சாட் போன்ற பல செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. 
நிலவை ஆராய்வதற்கு இந்தியா அனுப்பிய முதல் செயற்கைக்கோள் சந்திரயான். சந்திரயான் விண்கலம் இந்திய தயாரிப்பான பி.எஸ்.எல்.வி.(எக்ஸ்எல்) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
சந்திரயான் விண்கலம், நவம்பர் 8-ம்தேதி (2008) நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. நவம்பர் 14-ம் தேதி நிலவின் தென்துருவ பகுதியில் இறங்கியது. அங்கு வெற்றிகரமாக இந்திய தேசியக் கொடியை நிலைநாட்டியது. இதன்மூலம் நிலவில் தனது நாட்டின் கொடியை பதித்த 4-வது உலகநாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. சந்திரயானின் முக்கியச் சாதனையாக கருதப்படுவது நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை அது உறுதிபடுத்தியதுதான்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பி வெற்றி கண்டதைத் தொடர்ந்து செவ்வாய்கிரக ஆராய்ச்சிக்காக ஒரு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. அந்த விண்கலத்திற்கு மங்கள்யான் என்று பெயர்சூட்டப்பட்டது 
2013 ஆம் ஆண்டு நவம்பர் 5 ந்தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. மங்கள்யான் விண்கலம் 450 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் இவ்வளவு குறைந்த செலவில் தயாரிக்கப்படவில்லை. இதன் எடை 1,350 கிலோ.
24.9.2014 அன்று இஸ்ரோ விஞ்ஞானிகளின் 3 மணி நேர தொடர் நடவடிக்கைக்குப்பின், செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
சந்திரயான் வெற்றியைத் தொடர்ந்து பல  வெளிநாட்டினரும் செயற்கைகோள் தயாரித்து தரக்கேட்டுக் கொண்டார்கள். இதைத் தொடர்ந்து இந்தியா பல செயற்கைக்கோள்களை விண்ணுக்கும் அனுப்பியது.
2017 ஆம் ஆண்டில் ஒரே ஒரு பயணத்தில் 104 செயற்கைக்கோள்களை ஏவி சாதனை படைத்தது. பிஎஸ்எல்வி - சி 37 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன.
இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 நானோ செயற்கைக்கோள்கள் இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 5 நானோ செயற்கைக்கோள், அமெரிக்காவின் 96 நானோ செயற்கைக் கோள்கள் என மொத்தம் 104 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் சுமந்து சென்றது. இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக  நிலை நிறுத்தப்பட்டன.
அதிகபட்சமாக 37 செயற்கைக்கோள்களை ரஷ்யா ஏவியதுதான் உலக சாதனையாக இருந்தது. 104 செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் ரஷ்யாவின் சாதனை முறியடித்து உள்ளது.
இதன் மூலம் இந்தியா குறைந்த கட்டண விண்வெளி ஆய்வு மற்றும் அறிவியல் பணிகள் குறித்த நற்பெயரையும் உருவாக்கியுள்ளது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றினாலும் 10 நாடுகள்தான் அவற்றை ஏவும் வசதியைப் பெற்றுள்ளது. அவ்வகையில் இஸ்ரோவினால் 11-12-2019  வரை 319  வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
1994 ஆம் ஆண்டிலிருந்து 40க்கும் அதிகமான முறை பிஎஸ்எல்வி ராக்கெட்டில் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்வெளி வட்டப்பாதையை முத்தமிட்டிருக்கின்றன.
2015க்குப் பிறகு இந்தியா ஹெவி வெய்ட் தொலைதொடர்பு செயற்கைக்கோள்களை ஏவ ஏரியன்ஸ்பேஸ் எனும் வர்த்தகரீதியிலான செயற்கைக்கோள் நிறுவனத்தின் உதவியை நாடியது. பிற்காலத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலமாக செயற்கைக்கோளை ஏவும் முயற்சிகளை இந்தியா தொடங்கும். தற்போதைக்கு இந்தியா, குறைந்த செலவில்  செயற்கைக்கோள்களை அனுப்பும் நிறுவனம் ஒன் அண்ட் ஒன்லி தான் மட்டுமே என உலகிற்கு கூறியுள்ளது.
இஸ்ரோ வெளிநாட்டு லைட்வெயிட் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு ராக்கெட்டுகள் மூலம் அனுப்ப 1.5 கோடி ரூபாய்களை கட்டணமாக வசூலிக்கிறது. இவ்வகையில் பிஎஸ்எல்வி ராக்கெட்டிற்கான மார்க்கெட்டை இஸ்‌ரோ கைப்பற்றும் வாய்ப்பு அதிகம்.
இந்திய செயற்கைக்கோளை அழிக்க எதிரி நாடுகள் முயன்றால் அவர்களின் ஏவுகணையை விண்ணில் தவிடு பொடியாக்கும் வல்லமையை இந்தியா பெற்றுள்ளது.
வெறும் மூன்றே நிமிடங்களில் இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது. மேலும் இதன் தயாரிப்பு 100% இந்திய தொழில்நுட்பத்தால் ஆனது.
மிஷன் சக்தி என்ற பெயர் கொண்ட திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
உலகிலேயே இந்த வகை திறன் பெற்ற 4-வது நாடாக இந்தியா வெற்றி கண்டுள்ளது.
சந்திரயான்-1 விண்கலம் அனுப்பியதன் மூலம் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் ‘சந்திரயான்-2’ திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
சந்திரயான்-2 விண்கலம், கடந்த 2019  ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுப்பாதையில்  வெற்றிகரமாக நிலை நிறுத்தி சாதனை புரிந்தது.
நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அதனுடனான தொடர்பை இழந்தது. விக்ரம் லேண்டர் நிலவின் தரைப் பகுதியில் விழுந்தது. இது சிறிது  பின்னடைவை ஏற்படுத்தினாலும் சந்திரயான்-2 திட்டம் வெற்றிதான்.
2019ம் ஆண்டில் அனுப்பிய விண்கலங்களின் எண்ணிக்கை 7. இஸ்ரோ 77 முறை பூமியில் இருந்து விண்ணிற்கு ஏவுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. 2019ம் ஆண்டில் 6 முறை இது நடந்துள்ளது. 2019ம் ஆண்டில் 50 செயற்கைக்கோள்களை அனுப்பி உள்ளது.
2019ம் ஆண்டில் விண்வெளியில் ஏவப்பட்ட விண்கலங்கள்:
ஜனவரி:  மைக்ரோசாட்-ஆர் (ராணுவ நோக்கத்திற்காக) 
பிப்ரவரி : சிசாட்-31 (தொலைதொடர்புக்காக) 
ஏப்ரலில் : இ.எம்.ஐ.சாட் (மின்காந்த அளவீடுக்காக)
மே: ரிசாட்-2பி (பேரிடர் மேலாண் திட்டம், பூமியை ஆய்வு செய்ய)
ஜூலை: சந்திரயான்-2 (நிலவை ஆய்வு செய்ய)
நவம்பர்: கார்ட்டோசாட்-3 (பூமியை ஆய்வு செய்ய)
டிசம்பர் : ரிசாட்-2பிஆர்ஐ (பேரிடர் மேலாண் திட்டம், பூமியை ஆய்வு செய்ய)
இந்திய வெண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின்  எதிர்கால திட்டங்கள் பல உள்ளன.
சந்திரன், செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை தொடர்ந்து சூரியன் பற்றிய ஆராய்ச்சிகளை 2020-ம் ஆண்டு தொடங்க உள்ளனர். ‘ஆதித்யா எல்-1’ என்ற திட்டத்தின் மூலம் சூரிய ஒளிவட்ட ஆய்வுகளையும் காலநிலை மாற்றத்திற்கான காரணங்களையும் தேட இருக்கிறார்கள்.
சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புவது, செவ்வாய் கிரகம் மற்றும் சந்திரனில் மனித குடியிருப்புகளை அமைப்பது உள்ளிட்ட பல பணிகளையும், 2020-ம் ஆண்டிற்குள் செய்து முடிக்க இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ரோபோ வகைக்கு ஒரு பெரிய பாய்ச்சலை எடுத்து வருகிறது.
2021 (ஜூலை) ஆளில்லா விண்வெளி விமான ஆராய்ச்சிகள்
2021 (டிசம்பர்) ஆளில்லா விண்வெளி விமான ஆராய்ச்சிகளுக்கு அடுத்ததாக, மனிதர்களை சுமந்து செல்லும் ‘ககன்யான்’ என்ற விண்வெளி விமான சோதனையில் ஈடுபட உள்ளனர். இஸ்ரோவின் இந்த திட்டம் வெற்றிப்பெற்றால், மனிதர்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் முதல் விண்வெளி விமானம் என்ற பெருமை, ககன்யானுக்கு கிடைக்கும். 3 விண்வெளி வீரர்கள் பயணிக்கும்படி ககன்யானை வடிவமைக்க உள்ளனர்.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கு முன்னோடியாக மனித உருவிலான பெண் ரோபோவை இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
காலில்லாத வயோம் மித்ரா எனும் பெண் ரோபோ இதற்காக  உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் செய்யும் பல வேலைகளை செய்யும் திறமையுடைய இந்த ரோபோ இரு மொழிகளில் சரளமாக பேசும் திறனுடையது.
அறிமுகவிழாவில் பேசிய வயோம் மித்ரா நான் வியோம் மித்ரா பேசுகிறேன். நான் பாதி மனித ரோபோவின் முன்மாதிரி. முதல் ஆளில்லா ககன்யான் திட்டத்திற்காக நான் உருவாக்கப்பட்டிருக்கிறேன். என்னால் தொகுதி அளவுருக்கள் (மாடுல் பேராமீட்டர்ஸ்) மூலம் கண்காணிக்க முடியும். உங்களை எச்சரிக்க முடியும். வாழ்வியல் செயல்களை செய்ய முடியும். சுவிட்ச் பேனல் செயல்பாடுகள் போன்ற செயல்களை என்னால் செய்ய இயலும்.
நான் விண்வெளி வீரர்களுடன் ஒரு தோழியாக இருக்க முடியும். அவர்களுடன் கலந்துரையாடுவேன். அவர்களை அடையாளம் காண இயலும். அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்கவும் முடியும் என்று பெண் ரோபோ பேசியது அனைவரையும் கவர்ந்தது.
2023 வீனஸ் கிரக ஆராய்ச்சி விண்கலம் அனுப்புவது.
2030 ககன்யான் விண்வெளி விமானத்தில், அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு ஏதுவாக, விண்வெளியில் மிதக்கும் பிரத்யேக விண்வெளி  நிலையத்தை கட்டமைக்கும் முயற்சிகளில் இஸ்ரோ இறங்க உள்ளது. ‘‘இதன்படி 2030-ம் ஆண்டில், இந்தியாவிற்கு என பிரத்யேக விண்வெளி நிலையம் விண்ணில் மிதக்கும்.
இந்த விண்வெளி நிலையம் 20 டன் எடையில் உருவாக உள்ளது. இதில் விண்வெளி வீரர்கள் 15 நாட்கள் வரை தங்கியிருக்கலாம். இந்த விண்வெளி நிலையத்தை, பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் அமைக்க உள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற 107வது தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி விண்வெளி துறையில் இந்தியா வெற்றி, பெற்றதைப்போல ஆழ்கடல் ஆய்விலும் பிரதிபலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

திங்கள், 27 ஜனவரி, 2020

ரஜினி... ஓர் இளைஞர், “யாரு நீங்க?” என்று கேட்கிறார்.

கட்சி ஆரம்பிக்கவில்லை, ஆட்சி அதிகாரத்துக்கு வரவில்லை, அதற்கு முன்னரே இத்தனை உச்சபட்ச திமிரும், அகம்பாவமும் இருக்கிறதென்றால், அது பார்ப்பனியக் கொழுப்பு அன்றி வேறில்லை...

"...ஓர் இளைஞர், “யாரு நீங்க?” என்று கேட்கிறார்.
கடந்த அரைநூற்றாண்டில் ரஜினி எதிர்கொண்டிராத கேள்வி. நிலைகுலைந்துப் போய், “நான் ரஜினிகாந்த், சென்னையிலிருந்து வர்றேன்” என்று இருளடைந்த முகத்தோடு பிளாஸ்டிக் சிரிப்போடு ‘வணக்கம்’ வைக்கிறார்.
மார்பில் வாங்கிய தோட்டாவுக்கு நிகரானதுஅந்த ஒரு வார்த்தை…. ரஜினி மீள சில தினங்கள் ஆகும்
முதல் அடி தூத்துகுடி மக்களிடமிருந்து…. "

வைரஸ் என்றால் என்ன?

21ஆம் நூற்றாண்டை அதிர வைத்த சில வைரஸ் தாக்குதல்கள்
வைரஸ். இந்த சொல்லை சமீப நாட்களாக அடிக்கடி கேட்டிருப்பீர்கள். வைரஸ் என்பது மிகச்சிறிய புரதங்கள் மற்றும் மரபணு பொருட்களை கொண்டதாகும். உலகில் நூற்றுக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. வைரஸ் தொற்றால்தான் காய்ச்சல்,சளி போன்றவையும் ஏற்படுகிறது.

வைரஸ்கள் பரவுவது எப்படி?

சில வகையான வைரஸ்கள் நேரடியாக ஒரு மனிதரிடம் மற்றொரு மனிதருக்கு பரவும். HIV போன்ற வைரஸ், இதனால் பாதிக்கப்பட்ட நபரருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் பரவும்.
வைரஸ் தொற்று பரவுதலை மூன்றாக பிரிக்கலாம். எண்டமிக், எபிடமிக் மற்றும் பாண்டமிக்.

எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமாலும் பரவக்கூடிய வைரஸாகும். உதாரணமாக அம்மை போன்ற விஷயங்களை சொல்லலாம். அதே போல மலேரியா காய்ச்சலையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகமாக பரவக்கூடிய நோயாக இருக்கும். உதாரணமாக மழைக்காலத்தில் பலருக்கும் காய்ச்சல் வரும். அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த வைரஸ் பரவுவது குறைந்துவிடும்.

பாண்டமிக் வகையை சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும். ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணிக்கும்போது, அந்த குறிப்பிட்ட நாட்டில் வைரஸ் பரவக்கூடிய சூழல் இருந்தால், அது அங்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
21ஆம் நூற்றாண்டில் ஒரு சில வைரஸ் தாக்குதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் மிகுந்த கவனம் பெற்று, பல உயிர்களை கொன்ற வைரஸ்கள் குறித்து பார்க்கலாம்.

இபோலாவைரஸ்
மனிதக்குரங்குகள், பழந்தின்னி வௌவால்கள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கும் வேகமாக பரவக்கூடியது இபோலா வைரஸ்.
1976ஆம் ஆண்டு முதன்முதலில் தற்போதைய தென் சூடான் பகுதியிலும், காங்கோ குடியரசு நாட்டிலும் இபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. காங்கோ குடியரசில் இபோலா என்ற நதி அருகே உள்ள ஒரு கிராமத்தை இந்த வைரஸ் தாக்கியதால், இதற்கு இபோலா வைரஸ் என்று பெயரிடப்பட்டது.

  • லைபீரியா, கினியா மற்றும் சியாரா லியோனில் 2013 - 2016 வரை பரவிய இபோலா வைரஸ் தொற்றால் 11,300 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2019ஆம் ஆண்டு ஆகஸ்டில் மீண்டும் ஏற்பட்ட இபோலா தொற்று, மத்திய ஆப்பிரிக்காவில் 1,800 பேரை கொன்றது.
அப்போதைய சூழலை பொது சுகாதார நெருக்கடி நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
திடீர் காய்ச்சல், கடுமையான உடல் சோர்வு, தசை வலி மற்றும் தொண்டை வலி இதன் அறிகுறிகள். நீர்சத்து இழப்பு மற்றும் உறுப்பு செயலிழப்பின் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்படும்.
நிரூபிக்கப்பட்ட தீர்வு அல்லது சிகிச்சை என்று இபோலா வைரஸிற்கு ஏதுமில்லை. இதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

சார்ஸ் (SARS)
21ஆம் நூற்றாண்டின் மோசமான நோயாகவும், உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்பட்டது சார்ஸ்.
Severe Acute Respiratory Syndrome என்பதுதான் சார்ஸ் என்பதன் பொருள். தீவிர சுவாசப் பிரச்சனைக்கான நோய்க்குறி என்று அர்த்தம்
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பும் கவலை தெரிவித்திருந்தது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய சார்ஸ் வைரஸ், கொரோனா வைரஸ் வகையை சார்ந்தது.
  • 2002ஆம் ஆண்டு தென் சீனாவில் உள்ள குவாங்டாங்க் மாகாணத்தில்தான் முதன்முதலில் இந்த தொற்று கண்டறிப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 26 நாடுகளில் 8,000க்கும் மேற்பட்டோருக்கு சார்ஸ் பாதிப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பின் வலைதளம் கூறுகிறது.
காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் உடல்நடுக்கம் இதன் அறிகுறிகள். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டாம் வாரத்தில் இருமல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு, தீவிரமான சுவாசக் கோளாறில் இது முடியும்.
சார்ஸ் பரவுவது குறித்தும், இதனை கட்டுப்படுத்தவது குறித்தும் உலக சுகாதார அமைப்பு 2003ஆம் ஆண்டு ஜெனீவாவில் உலக நாடுகளுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தியது.
  • சார்ஸ் வைரஸால் சீனாவில் மட்டும் 774 பேர் உயிரிழந்தனர். இதில் மருத்துவர்களும் அடங்குவர்.
இதனை கட்டுப்படுத்த தவறியதாக சீனாவை ஜ.நா விமர்சித்தது.
தற்போது வரை இதற்கு எந்த சிகிச்சையும் கிடையாது.

ஜிகா வைரஸ்
Aedes எனப்படும் கொசு வகை கடிப்பால் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படும். இந்த கொசு பகல் நேரத்தில் கடிக்கக் கூடியது.
முதன் முதலில் உகாண்டாவில் 1947ல் குரங்குகளிடம் இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1952ல் உகாண்டா மற்றும் தான்சானியாசில் மனிதர்களிடம் இந்த தொற்று கண்டறியப்பட்டது.
பின்னர் 2007ஆம் ஆண்டுதான் மைக்ரொனீசியாவில் உள்ள யாப் எனும் தீவில் இந்த வைரஸ் தொற்று பதிவாகியது. அதனை தொடர்ந்து 2013ல் பிரெஞ்சு பாலினீசியா மற்றும் பசிபிக் எல்லையில் உள்ள மற்ற நாடுகளில் ஜிகா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை தாக்கியது.
  • 2015ல் பிரேசிலில் இந்த வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை உண்டாக்கியது.
கொசுவில் இருந்து பரவக் கூடிய ஜிகா வைரஸ் தொற்று, இதுவரை 86 நாடுகளில் பதிவாகியிருக்கிறது.
Aedes கொசு வகைதான் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களையும் பரப்புகிறது.
காய்ச்சல், தடிப்பு, தசை மற்றும் மூட்டு வலி, தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகள்.
  • ஜிகா வைரஸிற்கு இதுவரை எந்த சிகிச்சையும் கிடையாது.

நிபா வைரஸ்
நிபா தொற்று விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரஸாகும். இதன் பிறப்பிடம் `Fruit bats` எனப்படும் பழந்தின்னி வௌவால்கள்.
1998ஆம் ஆண்டு முதன்முதலில் மலேஷியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது. வௌவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு இந்த நோய் பரப்பப்பட்டது.
2004ஆம் ஆண்டு வங்க தேசத்தில் பழந்தின்னி வௌவால்கள் கடித்த பனையை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவியது. ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதும் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் தொற்றால் கடுமையான சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படலாம்.
  • இந்தியாவின் கேரளா மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நிபா வைரஸ் பரவிய போது, 17 பேர் உயிரிழந்தனர். முக்கியமாக கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இது பரவியது.
நிபா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும்.
காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்ட வலி ஆகியவை இதன் அறிகுறிகள். மேலும் மயக்கம், நரம்பு பிரச்சனைகளும் ஏற்படலாம்.
இந்த வைரஸிற்கு தற்போது வரை எந்த தடுப்பூசியும் கிடையாது.

பாம்புக் கறியில் இருந்து கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற தகவலால் சைவத்துக்கு மாறும் சீனர்கள்!

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ள நிலையில், ஊஹான் உள்ளிட்ட 13 நகரங்களில் வசிக்கும் மூன்றரை கோடி மக்கள் வெளியேற சீன அரசு தடைவிதித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய ஊஹான் நகர மருத்துவமனைகளில் நீண்ட வரிசை காணப்படுகிறது. கூட்டம் அலைமோதுவதால் பலரும் சிகிச்சை பெற முடியாமல் வீடு திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மருத்துவமனையை 6 நாளில் கட்டி முடிக்க சீன அரசு பணிகளை துவங்கியுள்ளது.

பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீனா தடை செய்த நிலையில் பலி எண்ணிக்கை 82 ஆக அதிகரித்து அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கையும் 1000 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் பதறிப்போன சீன அரசு, ஊஹான், ஹூவாங்காங், இசோ உட்பட 13 நகரங்களில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களை விட்டு மக்கள் வெளியேறவும் தடை விதித்துள்ளது.

இரண்டரை கோடி பேர் வசிக்கும் ஹூவாங்ஷி நகரில் படகுப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 3.5 கோடி பேரின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாம்பு கறியிலிருந்து நோய் பரவியிருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் கூறியிருப்பதால், மக்கள் ஊர்வன பறப்பன போன்றவற்றை விடுத்து காய்கறி மார்க்கெட்டுகளை நாடத் தொடங்கியுள்ளனர். எனினும், இதற்கான ஆய்வு முடிவுகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

ஹாங்காங்கிலும் கொரோனா வைரஸ் சோதனைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது சிங்கப்பூர் மற்றும் வியட்நாமிலும் பரவியுள்ளது. சீனாவில் இருந்து திரும்பிய 2 ஆயிரம் பேரை தீவிரமாக கண்காணிக்கும் இங்கிலாந்து அரசு யாராவது பாதிக்கப்பட்டவர்களை வீட்டிலேயே அடைத்து வைக்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே ஊஹான் நகரில் இருந்து இத்தாலிக்கு வந்த பயணிகள் கடுமையான சோதனைக்கு பின்னரே நாட்டிற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் கொரோனா தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்காதது சந்தேகங்களை கிளப்பியுள்ளது.