வியாழன், 8 மார்ச், 2018

ரஜினி, கமல் திடீரென அரசியலுக்கு வந்து, வெற்றிடத்தை நிரப்ப முடியாது: நடிகை கவுதமி

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஒரேநாளில் யாராலும் நிரப்ப முடியாது என்று நடிகை கவுதமி தெரிவித்தார். #RajiniKanth #KamalHasan

சென்னை, 

நடிகை கவுதமி  சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில்  மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகை கவுதமி , ரஜினி, கமல் திடீரென அரசியலுக்கு வந்து, வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்று தெரிவித்தார். 

கவுதமி மேலும் கூறியதாவது:- “ ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது உண்மைதான். தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினி, கமல் நிரப்புவதற்கு நடைமுறையில் சாத்தியம் இல்லை. 

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஒரே நாளில் யாராலும் நிரப்ப முடியாது. திருச்சியில் கர்ப்பிணிப்பெண் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.