பிரெக்சிட் விவகாரத்தில், பிரிட்டன் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற முடியாததால் அந்நாட்டு பிரதமர் தெரசா மே, ஜூன் 7-ம் தேதி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் அரசு வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்தை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மூன்று முறை கொண்டு வரப்பட்ட ஒப்பந்தம் தோல்வியை தழுவியதால், பிரதமர் தெரசா மே ராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக லண்டனில் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமராக பணியாற்ற இருமுறை கிடைத்த வாய்ப்பை வாழ்நாளின் கவுரவமாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். தான் எவ்வித கவலையும் இல்லாமல் நன்றியுணர்வோடு விடைபெற விரும்புவதாக கண்ணீர் மல்க தெரிவித்த தெரசா மே, புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பதவியில் நீடிப்பேன் எனவும் தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக