ஞாயிறு, 12 மே, 2019

"'தீவிரவாதத்தை விட கொடியது இந்த சமூக வலைதள கருத்தாடல்கள்.'

"'தீவிரவாதத்தை விட கொடியது இந்த சமூக வலைதள கருத்தாடல்கள்.'

ஒரே தாய் தமிழ் மொழி கொண்ட சகோதரர்களின் வசைபாடுகளால் ஏதுவும் ஆகப்போவதில்லை.'"

இழக்கப்பட்ட மனித உயிர்களின் பெறுமதியை விடவா உங்கள் பின்னூட்டல்கள் பெறுமதியானது..?

● இழந்து கொண்டிருக்கின்ற சுதந்திர வாழ்வுரிமையை உங்கள் வசையாடலால் வாழ வைக்க முடியுமா?

'ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரல்களுக்குள் உள்வாங்கப்பட்டு நீங்களாகவே சிதைத்துக்கொள்ளுங்கள். இதைத்தான் கடும்போக்குவாதமும் எதிர்பார்க்கின்றது.' கடும் வார்த்தை பிரயோகங்கள் இழந்து விட்ட சக வாழ்வையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்தாது.

சிலருக்கு.. சமூக வலைதளத்தில் நீங்கள் சிறந்த போராளிகளாக போட்டியிடுகிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

உங்கள் ஆக்கங்களையும், எழுத்துக்களையும் ஆய்வுக்கட்டுரைக்காக ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் 'முதுநிலை' தரச்சிறப்பு உங்களுக்குண்டு.

அந்த இறுதி நாட்களில் சமூக வலைதளங்கள்  பிரபலமல்ல.. இல்லையெனில்  ஆயுதங்ளோடு இதையும் கொஞ்சம் மெளனியுங்கள் என்று அவர்கள் தம் மக்களுக்கு வேண்டிக்கொள்வார்கள்!
(கள யதார்த்துக்கேற்றவாறு)

பொறுப்பான பதவியிலிருப்பவர்களின் கோமாளித்தனமான கருத்துகளை பார்க்கும் போது கண் வேர்க்கின்றது. உங்கள் மனநிலையை சுய பரிசோதளை செய்து கொள்வது சிறந்தது.

'சிதைந்து போன சிறுபான்மையினரே.. நீங்கள் சில்லறை ஆகிவிடாமல் உங்களை பார்த்துக்கொள்ளுங்கள்.'

அனைவருக்கும் பொதுவான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள். நேரமும் காலமும் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.

நன்றி 
அமலதாஸ் எல்றோய்