திங்கள், 27 மே, 2019

எவரெஸ்ட் சிகரத்தில் 24ஆவது முறையாக ஏறி நேபாள மலையேற்ற வீரர் சாதனை...!

எவரெஸ்ட் சிகரத்தில் 24ஆவது முறையாக ஏறி நேபாள மலையேற்ற வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

கமி ரீட்டா ஷெர்பா என்ற அந்த வீரர், இதுவரை 23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியிருந்த நிலையில், தற்போது 24ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு நேபாள தலைநகர் காத்மண்டுவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனிடையே எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சித்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் பெயர் ராபின் ஹெய்னஸ் எனவும், ஆக்சிஜன் பற்றாக்குறைவாலும், உடல் சோர்வு காரணமாகவும் அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.