மொழிப்பெயர்ப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
பைபிள் மொழிப்பெயர்பாளரான செய்ண்ட் ஜெரோம் என்பவரின் நினைவாக சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 1953ம் ஆண்டு சர்வதேச மொழிப்பெயர்ப்பாளர்கள் சம்மேளனம் சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினத்தை கொண்டாட ஆரம்பித்தது.
இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், கடந்த 2017ம் ஆண்டு முதல் செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என அறிவித்தது.
மொழிப்பெயர்ப்பாளர்களது வேலை உன்னதமாகவும் பல நாடுகளை இணைக்கும் விதமாகவும் உள்ளதால் அவர்களுக்கான சரியான அங்கீகாரம் வழங்கவேண்டும் என்பது மொழிப்பெயர்ப்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஒரு நாட்டின் மொழி, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவைகளை மற்ற நாடுகளுக்கு எடுத்துச்செல்வதற்கு மொழிப்பெயர்ப்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. பைபிள், குரானிற்கு அடுத்ததாக தமிழ் மொழியில் இயற்றப்பட்ட திருக்குறள் அதிக அளவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட நூல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது என்றால், அது மொழிப்பெயர்ப்பாளர்களால் மட்டுமே என்று கூறலாம்.
0 comments:
கருத்துரையிடுக