வெள்ளி, 27 செப்டம்பர், 2019

கசோகி கொலை : சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல்

உலகையே பரபரப்புக்குள்ளாக்கிய பத்திரிகையாளர் கசோகி கொலை சம்பவத்தில் ஒரு ஆண்டுக்கு பின் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் கட்டுரையாளராக விளங்கியவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால் கசோகி, இவர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதி வந்ததால் சவுதி அரேபியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபுகுந்தார்.

இதனிடையே தன் காதலியைத் திருமணம் செய்து கொள்ள  துருக்கி சென்றிருந்தார் கசோகி. திருமணத்துக்கான ஆவணங்களைப் பெறுவதற்காக இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதியன்று துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் சென்ற நிலையில் மாயமானார். 
அவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரசு கூறியதுடன், இந்த கொலையில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அதிரவைத்தது. இதற்கான ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் துருக்கி கூறியது.

உலகையே அதிரவைத்த பத்திரிகையாளர் கசோகி கொலை சம்பவத்திற்கும் சவுதி அரேபிய அரசுக்கும் தொடர்பு இல்லை என சவுதி மறுத்தது.

இந்நிலையில் ஐ.நா சபையின் சிறப்பு நிபுணர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு கசோகி கொலை சம்பவம் குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. கசோகி கொலை தொடர்பாக அமெரிக்காவின் புலணாய்வு அமைப்பான CIAவும் விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே கசோகி கொலை தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான Frontline பத்திரிக்கையாளர் மார்டின் ஸ்மித், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேட்டி கண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கசோகி கொலை கொலை சம்பவத்தில் எனக்கு எல்லாப் பொறுப்பும் உள்ளது, இருப்பினும் இக்கொலை எனது கவனத்திற்கு வராமல் நடைபெற்ற ஒன்று என கூறினார் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர்.

கடந்த ஒரு ஆண்டாக கசோகி மரணம் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வந்த நிலையில், திடீரென இந்த கொலை சம்பவம் குறித்து சவுதி பட்டத்து இளவரசர் ஒப்புதல் தெரிவித்துள்ளது உலக அரங்கை பரபரபாக்கியுள்ளது.

இந்த பேட்டியின் முழுமையான கலந்துரையாடலும் அக்டோபர் 1ம் தேதி இரவு 8 மணிக்கு  PBS Video App வாயிலாக  வெளியிடப்படும் என Frontline தெரிவித்துள்ளது.

கசோகியின் மரணத்திற்கு பிறகு கடந்த டிசம்பர் மாதத்தில் அவரின் சேவையை கவுரவிக்கும் விதமாக 2018ம் ஆண்டின் சிறந்த மனிதர் என அறிவித்ததுடன், கசோகி ‘உண்மையின் காவலன்’ என புகழாரம் சூட்டியிருந்தது நினைவுகூறத்தக்கது.


கஷோகி கொல்லப்பட்ட கதை :