எகிப்து நாட்டில் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகளுடன் கூடிய 30 சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
எகிப்தைச் சேர்ந்த தொல்லியல் துறையினர், தெற்கு பகுதியான லக்ஸாரில் மம்மிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு பலன் கிடைக்கும் வகையில், ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட ஆண், பெண், குழந்தைகள் அடங்கிய 30 சவப்பெட்டிகளை தோண்டி எடுத்துள்ளனர்.
அழகிய பூ வேலைப்பாடுகளுடன பல வண்ணத்துடன் காணப்படும் சவப்பெட்டிக்குள் மம்மிக்கள் இருப்பதையும் தொல்லியல் துறையினர் உறுதி செய்துள்ளனர். எகிப்தில் முற்காலத்தில் இறந்தவர்களை முற்றிலும் துணியால் சுற்றி, சவப்பெட்டிக்குள் வைத்து புதைப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக