புதன், 9 அக்டோபர், 2019

அணைக்கட்டு திட்டத்தால் நீரில் மூழ்கும் வரலாற்று சின்னங்கள்..!

துருக்கியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹசன்கீஃப் பகுதி புதிதாக கட்டப்பட்டுள்ள அணைக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

துருக்கியில் டைக்ரிஸ் ஆற்றங்கரையுல் அமைந்துள்ள மிகவும் பழமையான பகுதிகளில் ஹசன்கீஃப் பகுதியும் ஒன்று. இயற்கையை தன்னுள் புதைத்துள்ள பாலைவனச் சோலை மற்றும் மனித நாகரிகத்தின் பழமையான குடியிருப்புகளை கொண்ட அப்பகுதியில் 12 ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

பிரமிப்பை ஏற்படுத்தும் ஆயிரக்கணக்கான குகைகள், நினைவு கல்லறைகள், தேவாலயங்கள் என உலகின் நினைவுச் சின்னமாகமே அறியப்படும் ஹசன்கீஃப் பகுதியில் துருக்கி அரசானது இலிசு என்ற அணையை கட்டியுள்ளது. இதனால் அங்கு பழங்காலம் தொட்டு வாழ்ந்து வந்த 80 ஆயிரம் மக்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 

மொசபடோமியா, பைசான்டியம், ஓட்டோமன் மற்றும் அரேபிய பேரரசுகளின் வரலாற்று எச்சங்களை தன்னுள் கொண்டுள்ள ஹசன்கீஃப் பகுதியை அணைத்திட்டத்திற்கு துருக்கி அரசு பலி கொடுத்துவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மக்களின் பல ஆண்டுகால போராட்டம் வேருடன் பிடுங்கியெறியப்பட்ட நிலையில், ஹசன்கீஃப் பகுதியை இன்னும் சில நாட்களில் மறையும் என்றும் அவர்கள் கவலையுடன் கூறினர்.