திங்கள், 5 ஆகஸ்ட், 2019

மனதில் நினைப்பதை டைப் செய்யும் பேஸ்புக்கின் புதிய அப்டேட்..!

நாம் பேசுவதை டைப் செய்யும் செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில் ஒருவர் நினைத்தாலே டைப் செய்யும் வசதியை ஃபேஸ்புக் விரைவில் கொண்டவர இருக்கிறது.

நாம் நினைக்கும் விஷயத்தை வேறு யாராவது தெரிவித்தாலே அவர்களை வியப்பாக பார்ப்போம், இப்படி இருக்க நாம் நினைக்கும் விஷயத்தை கம்ப்யூட்டர் அதுவாகவே டைப் பண்ணிவிட்டால் எப்படி இருக்கும் ?. ஆம் அதை தொழில்நுட்பத்தின் உதவியோட செயல்படுத்த திட்டமிட்டு இருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். பிரெய்ன் கம்ப்யூட்டர் இண்டர்ஃபேஸ் மூலம் மனித மூளை நினைக்கும் விஷயத்தை கண்டறியும் தொழில்நுட்பம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

இந்த தொழில்நுட்பத்தில் மேலும் சில மாற்றங்களை செய்வதன் முலம்
ஃபேஸ்புக்கில் நுழையும் ஒவ்வொருவரிடமும் உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்கிற கேள்வியை கேட்ட ஃபேஸ்புக்  இனி கேட்காமலேயே டைப் செய்ய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சியை சான்ஃபரான்சிஸ்கோ பல்கலைகழகத்துடன் இணைந்து  மேற்கொண்டு வருகிறது ஃபேஸ்புக் நிறுவனம். 

உலக புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ், தன்னுடைய நரம்புக் குறைப்பாட்டையும் தாண்டி, தான் நினைப்பதை தன் கண்ணத்தின் அசைவு மற்றும் புருவ அசைவை கொண்டு திரை முன் எழுத்துக்களாக கொண்டு வந்தார். அது போல, எபிலிப்சிபி  பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகளின் மூளையில் எலெக்ட்ராடுகள் பொருத்தி,  அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் சொல்லும் பதில்களையும், அவர்களின் மூளையின் செயல்பாடுகளையும் பதிவு செய்யப்பட்டது.

இதன்மூலம் அவர்கள் பேசுவதற்கு முன்னதாகவே அந்த வார்த்தைகளை மூளை செயல்பாடுகள் கொண்டே 76%  சரியாக கணிக்கப்பட்டது. 
இதன் வழியாகவே, பயனாளர்கள் நினைப்பதை அப்படியே எழுத்துகளாக கொண்டுவர முடியும் என்கிறது ஃபேஸ்புக். இந்த ஆராய்ச்சி 100 சதவீதம் வெற்றி அடைய இன்னும் ஆய்வுகளும் காலமும் அதிகம் தேவைப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.