திங்கள், 5 ஆகஸ்ட், 2019

சர்வதேச நண்பர்கள் தினம்...!

பள்ளி பருவம் முதற்கொண்டே வாழ்வில் தவிர்க்க முடியாத உறவாக அமைவது நண்பர்களும், நட்பும் தான், அத்தகைய நட்பின் வலிமையையும், நண்பர்களின் பங்களிப்பையும் இன்று நினைவு கூறுவது அவசியம்.

உறவுகளில் தனித்துவம் நிறைந்த ஒன்றாக, என்றும் நிலைத்திருப்பது நட்புதான் என்றால் அதில் மாற்றுக்கருத்து இல்லை. வாழ்க்கையில் தாய், தந்தைக்கு பின்னர், ஒப்பற்ற உறவாக இருப்பது நண்பன் என்றும், இளமையில் பல்வேறு இக்கட்டான சூழலில் நம்மை காப்பாற்றி கரை சேர்க்கும் பாதுகாவலன் என்றும் உள்ளம் நெகிழ்கின்றனர் கல்லூரி மாணவர்கள். 

நன்மை, தீமை அறியாத நேரத்தில் நம்மை வரிசைபடுத்தும்போது ஒரு தாயாக.... வழிதவறி செல்லும்போது, இதை செய்யாதே என எச்சரிக்கும் ஆசானாக..... இப்படி பன்முகம் கொண்ட நண்பர்கள், என்றுமே வாழ்வில் பலம் என்று பெருமிதம் கொள்கின்றனர் மாணவ, மாணவிகள். 

"உடுக்கை இழந்தவன் கைபோலே" என்ற குறளுக்கு ஒப்பாக, இன்பத்தில் மட்டும் அல்லாமல் துன்பத்திலும் நம்மை துவள விடாது, தோள் கொடுக்கும் ஒவ்வொரு நண்பனும் நட்பிற்கு இலக்கணமே.