புதன், 24 ஜூலை, 2019

முதுகெலும்பை பற்றி பேச பேராயர் 'கார்தினால் மல்கம் ரஞ்சித்துக்கு' தகுதி இருக்கின்றதா?

"முதுகெலும்பை பற்றி பேச பேராயர் 'கார்தினால் மல்கம் ரஞ்சித்துக்கு' தகுதி இருக்கின்றதா? என்றொரு சந்தேகம் என்னிடம் உண்டு.

'பொதுநலமாய் நகர்த்தும் சுயநலம் எனும் மதப்போர்வை' என் 'சமூகத்தின் மீதான கொடிய மனித அவலத்தின் போது 'உன்' முதுகெலும்பு எங்கே போனது?' என்றொரு கேள்வி உள்ளடங்கலாக...! பல கண்ணீர் ஆதாரங்களும் உண்டு.

'அதிமேற்றாசனம்' அதிமேதாவித்தனமாய் காலங்காலமாய் பேரினவாத முகமூடிக்குள் புனிதம் உரைப்பதை யாரறிவார்கள்.!

'பிதாவே' இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும் என்று நான் உரையேன். கடந்த காலங்களில் கொத்துக்கொத்தாய் பலர் கொலை செய்யப்பட்ட போது  நீங்கள் முதுகெலும்பற்று உறக்கத்திலா இருந்தீர்கள்..?'

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி அமெரிக்க யுத்தக் குற்றச் செயல் பிரதிநிதி ஸ்டீவன் ரெப்பை சந்தித்த மன்னார், யாழ்ப்பாண பேராயர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது. இலங்கை கத்தோலிக்க பேராயர் பேரவை ஆதரவளிக்காது. நீங்கள் கூறியதை மறக்கவில்லை பேராயரே??

இராவண தேசம் எது என்பதையும், சிவபூமியை பற்றியும், நாகர்களையும், மூத்த குடிகளையும் முதன்மொழி பற்றிய வரலாறுகளையும், புனிதருக்கு தமிழ் காக்கும் பாதிரியார்கள் கொஞ்சம் போதிக்க வேண்டும். இனவாதிக்கு பால் வார்த்து தன் வரலாற்று புனைவோடு முதுகெலும்பில்லாத தன்மை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை பேராயருக்கு...!

'நீங்கள் யாரை திருப்திபடுத்த முனைகிறீர்கள்..?'

'வரலாறு என்பது உண்மை' என்பதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். மதமோ, அரசியலோ இரண்டாம்பட்சம். ஒரு சமூகநீதிக்கான தர்மங்களையும் புரிந்து கொள்ளுங்கள்.

பதிவுகள் புரியவில்லையாயின் கார்தினாலின் தர்க்க ரீதியான நீர்கொழும்பு கட்டுவ தேவாலய உரையை முழுவதுமாக தேடி படியுங்கள். தர்மரீதியில் புரிபவர்கள் புரிவீர்கள்!'

பிற மதமன உலைச்சலுக்கான பதிவல்ல. மனு நீதிக்கான சிறு பதிவு இது...(வளரும்)©

#எல்றோய் "