செவ்வாய், 4 ஜூலை, 2017

க்யூபா - கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்



109884 சதுர கிலோ மீற்றர் அளவுடைய தேசத்திடமிருந்து 65610 சதுர கிலோ மீற்றர் அளவுடைய தேசம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் அதிகம் உண்டு. சாதாரண குப்பை கழிவு விடயத்தில் கூட மேலான்மை முகாமைத்துவம் அற்ற நிலையில் நாட்டினுடைய எதிர்கால முன்னேற்றத்தை எவ்வாறு கொண்டு சொல்லப்போகிறார்கள் என்பது என்போன்ற அடுத்த தலைமுறையினரின் கேள்வியாக இப்போ தொக்கி நிற்கிறது தெருவோரம் மூக்கை பொத்தியபடி...! 
யுத்தம் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. அதுவும் மனித பேரழிவுடன் முடிவுற்றது. ஆனால் மனித மனங்களுக்கிடையான சமாதானங்களும், சகிப்புத்தன்மைகளும், பொருளாதார நிலைமைகளும் அதாளபாதாளத்திற்குள் செல்வதையே அன்மைய செய்திகளும் செயற்பாடுகளையுமே நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. வறியவர்களினதும் விவசாயிகளினதும் நலன் காக்கும் அரசால் மாத்திரம் தேசத்தை முன்னோக்கி நகர்த்த முடியும். வெறும் சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்கும் வெளிவேஷமான கட்டிட பிரமாண்டத்தை வைத்து மாத்திரம் ஒட்டுமொத்த மனித சுட்டெண்களின் மதிப்பை உயர்த்த முடியாது. இதில் ஏழைகளின்  நிலையைப் போக்க எடுத்துக்கொண்ட பொருளாதார முயற்சிகளில் ஒரு நாடு எவ்வாறு ஒரு முற்போக்கான பாதையில் செல்லும் என்பதை க்யூபா நிரூபித்து வருகிறது. வறியவர்களுக்கான ஒரு பொருளாதார அறிக்கை எவ்வாறு நாட்டின் பொருளாதார அடித்தளத்தையே மாற்றும் என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

உலகில் நிலவிய பனிப்போர் முடிந்த நேரம், பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக கருதிய சோஷ‌லிச பொருளாதாரக் கொள்கையைக் காட்டிலும், முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையே வெற்றிக்கு உகந்தது என்ற கருத்தாக்கம் ஏற்பட்டது.

ஆனால் இந்த சுய தம்பட்ட முதலாளித்துவ மேலாண்மை உயர்வு மறைந்துவிட்டது.  அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கிறது.  ஐரோப்பிய நாடுகளோ தங்களது யூரோ கூட்டணி நாடுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் தவித்துவருகின்றன. அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் முற்றுகை போன்ற பெரும் எழுச்சிகள் அனுதினமும் குலுக்கிக் கொண்டிருப்பதும், ஐரோப்பா முழுவதும் எழுச்சிகள் நடைபெறுவதும்  முதலாளித்துவ பொருளாதாரத் திட்டம் குறித்த உண்மையை வெகுவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்த வளர்ந்த நாடுகளில் பொருளாதாரத்தில் நிலவும் குழப்பம், ஒரு புதிய சோஷ‌லிச பொருளாதார முறையை நோக்கி உலகை நகர்த்தி கொண்டிருக்கிறது.

இந்த வெளித் தெரியாத மாற்றத்துக்கு தலைமை ஏற்றிருக்கும் க்யூபா, அமெரிக்காவின் அனைத்து வகை எதிர்ப்புகளையும் ஏற்று அதற்கு எதிர் தாக்குதல் தொடுத்து, தற்போது உலகின் பல முதலாளித்துவ நாடுகளைக் காட்டிலும் பல்வேறு வகையில் பொருளாதார முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்கா பல்வேறு வகையில் க்யூபாவுக்கு செல்லக்கூடிய பல நாடுகளை, கார்ப்பரேட் நிறுவனங்களுடனான வர்த்தகப் போக்குவரத்தை தடுத்து வருவதுடன், ஜப்பானிலிருந்து மருத்துவ உபகரணங்கள், இத்தாலியிலிருந்து ரசாயனப் பொருட்கள், பிரான்சிலிருந்து எக்ஸ்ரே கருவிகள் இறக்குமதி செய்யப்படுவது உட்பட அனைத்துக்கும் தடைகளை உண்டாக்கி வருகிறது.
ஆனால், அமெரிக்காவின் இந்த தடங்கலை எல்லாம் மீறி க்யூபா தனக்கென்று ஒரு வழிமுறையை உருவாக்கி, வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒரு கூட்டு முயற்சியை உண்டாக்கி தனது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடுகளை பெற்று வருகிறது.

ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டுத்திட்ட முயற்சியின் பலனாக க்யூபாவின் திட்ட மதிப்பீடு 5 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.  இது தற்போது வளர்ந்து, 60 வெவ்வெறு நாடுகளிலுள்ள 40 துறைகளை உள்ளடக்கிய மொத்தம் 240 திட்டங்களாக பெருகியுள்ளது.
இதை க்யூபா தன் சுய முயற்சியில் சோஷ‌லிச வழிமுறைகளில் சாதித்துள்ளது.  அதன் காரணமாக அதன் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 9.6% தொட்டுள்ளது.

இன்னும் அதிகம் சொல்லலாம்.  ஆரம்பக் கல்வி தொடங்கி முனைவர் பட்டம் பெறும்வரை அனைவருக்கும் இலவசக் கல்வியை க்யூபா உத்திரவாதம் செய்துள்ளது. அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ-வின் fact book படி க்யூபாவின் அண்டை முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைக் காட்டிலும் அதிகமாக படிப்பறிவு 99% உள்ளது என்று ஒப்புக்கொண்டுள்ளது.

அது போல மருத்துவ வசதியை உறுதி செய்துள்ளது.  க்யூபா போன்ற வளர்ந்து வரும் பல்வேறு நாடுகளில் உள்ளது போல், மருத்துவத் துறையில் உள்ள அசுத்தமும், கவனிப்பாரற்ற தன்மையும், ஊழலும் க்யூபாவில் இல்லவே இல்லை.

ஆச்சரியப்படும் வகையில், க்யூபா தனது நாட்டின் ஆண்டு நிதி நிலையில் 45 சதவீதத்தை மருத்துவத்திற்கும், கல்விக்கும் மட்டுமே ஒதுக்கீடு செய்து வருகிறது.  ஐக்கிய நாடுகளின் அங்கமான உலக ஆரோக்கிய நிறுவனத்தின் (WHO) குழந்தை இறப்பு விகிதம் 1000-க்கு 4.7 என்ற விகிதத்தில் குறைந்திருப்பதாக பதிவு செய்துள்ளது.  மேற்கத்திய நாடுகளில் பல நாட்டின் நிலைமையைக் காட்டிலும் சிறந்திருப்பதை உறுதி செய்கிறது.

இன்று முதலாளித்துவ நாடுகள் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பாதுகாப்பு கொடுக்கிறது. க்யூபா தனது சோஷ‌லிசப் பாதையில், நாட்டின் அனைத்து மக்களையும் வறுமையிலிருந்து, வேலையின்மையிலிருந்து, நோயிலிருந்து காத்திருப்பது அசாதாரண சாதனையாகும்.

சோஷ‌லிசக் கோட்பாட்டின் உள்ளடக்கத்தை முற்றாக பேணுவதுடன், தனது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டமிடுதலை அந்த நாட்டின் தொழிலாளர்களுடனும், உழைப்பாளர்களுடனும், உள்ளாட்சி அமைப்புகளுடனும் முற்றாக கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்கிறது க்யூபா.  அதுதான் உண்மையான சோஷ‌லிசப் பாதையின் உள்ளடக்கம்.  அத்தோடில்லாமல் நேட்டோ அமைப்பிலுள்ள பிரான்ஸ் போன்ற நாடுகளையும், தனது சோஷ‌லிச வழிமுறைகளை மாதிரியாக கொண்டு திட்டமிடும் அளவுக்கு ஊக்குவித்து வருகிறது.
பெர்கலேயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் “அமெரிக்காக்கள் பற்றிய ஆய்வு” மையத்தின் இயக்குனர் திரு ரோஜர் பர்பேக் எழுதிய ஒரு கட்டுரையில், க்யூபா தனது சோஷ‌லிசத் திட்டங்களின் மூலமாக பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்ததுடன், அதில் வெற்றியும் கண்டதை வெகுவாக பாராட்டியுள்ளார்.

க்யூபா போல் உலகின் எந்த நாடும் தனது பொருளாதாரத் திட்டங்களை தனது நாட்டு தொழிலாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பதில்லை.  கார்ப்பரேட் நிறுவனங்களின் நண்பனான மனிதாபிமானமற்ற முதலாளித்துவக் கணக்கீடுகளை சார்ந்திராமல், நாட்டின் தொழிலாளர் வர்க்கத்துக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது நலனையே பேணி வருகிறது க்யூபா.
அமெரிக்க வழியில் லாபம் மற்றும் வணிகத்தில் புரளும் தொகைகளை வைத்து நாட்டு மக்களின் வாழும் நிலையை குறிப்பதென்பது ஒரு அப்பட்டமான மோசடியாகத்தான் இருக்கும்.  ஏனென்றால், அந்தப் புள்ளி விவரங்கள் உண்மையில் அந்த நாட்டு மக்களின் உண்மையான வளர்ச்சியைப் பிரதிபலிப்பதில்லை.

முந்தைய சோவியத் ரஷ்ய கூட்டணித் திட்டங்கள் சரியானவையாக இல்லாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் சோஷ‌லிசத்தின் மதிப்பு, சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியுடன் மூழ்கிவிடவில்லை.  மாறாக, சரியான திட்டமிடுதலால்,  சோஷ‌லிச கொள்கை இன்னும் வீறுகொண்டதாக எழும்.

மந்திர ஒலியால் கட்டுண்டு குழல் வாசிப்பவன் பின்னால் செல்லும் எலிகளைப் போல, பல்வேறு நாடுகளை தனது  சோஷ‌லிச கொள்கை திட்டங்கள் மீது ஈர்க்க க்யூபாவால் முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.ஏழைகளின்  நிலையைப் போக்க எடுத்துக்கொண்ட பொருளாதார முயற்சிகளில் ஒரு நாடு எவ்வாறு ஒரு முற்போக்கான பாதையில் செல்லும் என்பதை க்யூபா நிரூபித்து வருகிறது. வறியவர்களுக்கான ஒரு பொருளாதார அறிக்கை எவ்வாறு நாட்டின் பொருளாதார அடித்தளத்தையே மாற்றும் என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

உலகில் நிலவிய பனிப்போர் முடிந்த நேரம், பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக கருதிய சோஷ‌லிச பொருளாதாரக் கொள்கையைக் காட்டிலும், முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையே வெற்றிக்கு உகந்தது என்ற கருத்தாக்கம் ஏற்பட்டது.

ஆனால் இந்த சுய தம்பட்ட முதலாளித்துவ மேலாண்மை உயர்வு மறைந்துவிட்டது.  அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கிறது.  ஐரோப்பிய நாடுகளோ தங்களது யூரோ கூட்டணி நாடுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் தவித்துவருகின்றன. அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் முற்றுகை போன்ற பெரும் எழுச்சிகள் அனுதினமும் குலுக்கிக் கொண்டிருப்பதும், ஐரோப்பா முழுவதும் எழுச்சிகள் நடைபெறுவதும்  முதலாளித்துவ பொருளாதாரத் திட்டம் குறித்த உண்மையை வெகுவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்த வளர்ந்த நாடுகளில் பொருளாதாரத்தில் நிலவும் குழப்பம், ஒரு புதிய சோஷ‌லிச பொருளாதார முறையை நோக்கி உலகை நகர்த்தி கொண்டிருக்கிறது.
இந்த வெளித் தெரியாத மாற்றத்துக்கு தலைமை ஏற்றிருக்கும் க்யூபா, அமெரிக்காவின் அனைத்து வகை எதிர்ப்புகளையும் ஏற்று அதற்கு எதிர் தாக்குதல் தொடுத்து, தற்போது உலகின் பல முதலாளித்துவ நாடுகளைக் காட்டிலும் பல்வேறு வகையில் பொருளாதார முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்கா பல்வேறு வகையில் க்யூபாவுக்கு செல்லக்கூடிய பல நாடுகளை, கார்ப்பரேட் நிறுவனங்களுடனான வர்த்தகப் போக்குவரத்தை தடுத்து வருவதுடன், ஜப்பானிலிருந்து மருத்துவ உபகரணங்கள், இத்தாலியிலிருந்து ரசாயனப் பொருட்கள், பிரான்சிலிருந்து எக்ஸ்ரே கருவிகள் இறக்குமதி செய்யப்படுவது உட்பட அனைத்துக்கும் தடைகளை உண்டாக்கி வருகிறது.
ஆனால், அமெரிக்காவின் இந்த தடங்கலை எல்லாம் மீறி க்யூபா தனக்கென்று ஒரு வழிமுறையை உருவாக்கி, வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒரு கூட்டு முயற்சியை உண்டாக்கி தனது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடுகளை பெற்று வருகிறது.

ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டுத்திட்ட முயற்சியின் பலனாக க்யூபாவின் திட்ட மதிப்பீடு 5 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.  இது தற்போது வளர்ந்து, 60 வெவ்வெறு நாடுகளிலுள்ள 40 துறைகளை உள்ளடக்கிய மொத்தம் 240 திட்டங்களாக பெருகியுள்ளது.
இதை க்யூபா தன் சுய முயற்சியில் சோஷ‌லிச வழிமுறைகளில் சாதித்துள்ளது.  அதன் காரணமாக அதன் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 9.6% தொட்டுள்ளது.
இன்னும் அதிகம் சொல்லலாம்.  ஆரம்பக் கல்வி தொடங்கி முனைவர் பட்டம் பெறும்வரை அனைவருக்கும் இலவசக் கல்வியை க்யூபா உத்திரவாதம் செய்துள்ளது. அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ-வின் fact book படி க்யூபாவின் அண்டை முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைக் காட்டிலும் அதிகமாக படிப்பறிவு 99% உள்ளது என்று ஒப்புக்கொண்டுள்ளது.
அது போல மருத்துவ வசதியை உறுதி செய்துள்ளது.  க்யூபா போன்ற வளர்ந்து வரும் பல்வேறு நாடுகளில் உள்ளது போல், மருத்துவத் துறையில் உள்ள அசுத்தமும், கவனிப்பாரற்ற தன்மையும், ஊழலும் க்யூபாவில் இல்லவே இல்லை.
ஆச்சரியப்படும் வகையில், க்யூபா தனது நாட்டின் ஆண்டு நிதி நிலையில் 45 சதவீதத்தை மருத்துவத்திற்கும், கல்விக்கும் மட்டுமே ஒதுக்கீடு செய்து வருகிறது.  ஐக்கிய நாடுகளின் அங்கமான உலக ஆரோக்கிய நிறுவனத்தின் (WHO) குழந்தை இறப்பு விகிதம் 1000-க்கு 4.7 என்ற விகிதத்தில் குறைந்திருப்பதாக பதிவு செய்துள்ளது.  மேற்கத்திய நாடுகளில் பல நாட்டின் நிலைமையைக் காட்டிலும் சிறந்திருப்பதை உறுதி செய்கிறது.
இன்று முதலாளித்துவ நாடுகள் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பாதுகாப்பு கொடுக்கிறது. க்யூபா தனது சோஷ‌லிசப் பாதையில், நாட்டின் அனைத்து மக்களையும் வறுமையிலிருந்து, வேலையின்மையிலிருந்து, நோயிலிருந்து காத்திருப்பது அசாதாரண சாதனையாகும்.
சோஷ‌லிசக் கோட்பாட்டின் உள்ளடக்கத்தை முற்றாக பேணுவதுடன், தனது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டமிடுதலை அந்த நாட்டின் தொழிலாளர்களுடனும், உழைப்பாளர்களுடனும், உள்ளாட்சி அமைப்புகளுடனும் முற்றாக கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்கிறது க்யூபா.  அதுதான் உண்மையான சோஷ‌லிசப் பாதையின் உள்ளடக்கம்.  அத்தோடில்லாமல் நேட்டோ அமைப்பிலுள்ள பிரான்ஸ் போன்ற நாடுகளையும், தனது சோஷ‌லிச வழிமுறைகளை மாதிரியாக கொண்டு திட்டமிடும் அளவுக்கு ஊக்குவித்து வருகிறது.

பெர்கலேயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் “அமெரிக்காக்கள் பற்றிய ஆய்வு” மையத்தின் இயக்குனர் திரு ரோஜர் பர்பேக் எழுதிய ஒரு கட்டுரையில், க்யூபா தனது சோஷ‌லிசத் திட்டங்களின் மூலமாக பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்ததுடன், அதில் வெற்றியும் கண்டதை வெகுவாக பாராட்டியுள்ளார்.

க்யூபா போல் உலகின் எந்த நாடும் தனது பொருளாதாரத் திட்டங்களை தனது நாட்டு தொழிலாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பதில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் நண்பனான மனிதாபிமானமற்ற முதலாளித்துவக் கணக்கீடுகளை சார்ந்திராமல், நாட்டின் தொழிலாளர் வர்க்கத்துக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது நலனையே பேணி வருகிறது க்யூபா.
அமெரிக்க வழியில் லாபம் மற்றும் வணிகத்தில் புரளும் தொகைகளை வைத்து நாட்டு மக்களின் வாழும் நிலையை குறிப்பதென்பது ஒரு அப்பட்டமான மோசடியாகத்தான் இருக்கும்.  ஏனென்றால், அந்தப் புள்ளி விவரங்கள் உண்மையில் அந்த நாட்டு மக்களின் உண்மையான வளர்ச்சியைப் பிரதிபலிப்பதில்லை.

முந்தைய சோவியத் ரஷ்ய கூட்டணித் திட்டங்கள் சரியானவையாக இல்லாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் சோஷ‌லிசத்தின் மதிப்பு, சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியுடன் மூழ்கிவிடவில்லை.  மாறாக, சரியான திட்டமிடுதலால்,  சோஷ‌லிச கொள்கை இன்னும் வீறுகொண்டதாக எழும்.

மந்திர ஒலியால் கட்டுண்டு குழல் வாசிப்பவன் பின்னால் செல்லும் எலிகளைப் போல, பல்வேறு நாடுகளை தனது  சோஷ‌லிச கொள்கை திட்டங்கள் மீது ஈர்க்க க்யூபாவால் முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

தனி நாடு பிறந்த கதை

பொதுவாக ஒரு நாடு எப்படி பிறக்கிறது என்பதை யாராலும் தெளிவாகக் கூற முடியாது. ஒரு நதியின் கதை எவ்வளவு  பழமையானதோ அதே போன்ற கணிக்க முடியாத கால ஓட்டத்தைக் கடந்து ஒரு நாடு பிறக்கிறது. இந்தியா போன்ற மிகப் பழமையான நாடுகளுக்கு இது மிகச்சரியாகப் பொருந்தும். அதே வேளையில் நம் கண் முன்பே சில நாடுகள் புதிதாக பிறந்துள்ளதையும் நாம் கண்டிருக்கிறோம். 1947ல் பிறந்த பாகிஸ்தான் ஒரு சிறந்த உதாரணம்.

பல்லின மக்கள் வாழும் சமூகத்தில் சகிப்புத்தன்மை மேலோக்கி இருக்க வேண்டும். பெரும்பான்மை அடக்குமுறை சிறுபான்மைமீது கட்டவிழ்த்து விடப்படும் போது அதே சிறுபான்மை இனவாதமும் மறுபிரதியீடு செய்ததை வரலாற்றின் பல பக்கங்களில் கற்றிருக்கின்றோம். ஈழப்பிரச்சனையின் போது சிங்கள, தமிழர் தரப்பிடம் இருந்து தனித்துவமாக எவ்வாறு முஸ்லீம்கள் தனி அலகு கேட்டார்களோ அது போன்று. ஏனெனில் கசப்பான வரலாற்று அனுபவங்களை எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கவும், தத்தமது உரிமைகளை பாதுகாத்து கொள்ளவும் அனைத்து சமூகங்களுக்கும் உரிமை உண்டு. அதைத்தான் ஜின்னா செய்தார். ஆங்கிலேயனிடம் இருந்து சுதந்திரம் பெற்றாலும் இந்து அடிப்படைவாதத்தில் இருந்து காக்கவும் தனித்த தேசத்தில் நாட்டம் கொண்டார். அதற்கு காலமும் கலவரங்களும் கை கொடுத்தது. இப்போது இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற நிகழ்தகவுகளை போல. வரும் தேர்தல்களில் பொங்கப்போகின்ற பாற்சோறுகளை போல...!!!!

1946 அக்டோபர் 30 ஆம் தேதிக்கும் நவம்பர் 7 ஆம் தேதிக்கும் இடையே மிகப்பெரிய இனப்படுகொலைகள் பீகாரில் நடந்தன. இம்முறை மிகுதியாக பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்  5,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்று ஓர்  அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை 10,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றது. கொல்லப்பட்டவர்களில் முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் அடங்குவார்கள். ஜின்னா பதறினார். பிரிவினைக்கு முழு அழுத்தம் கொடுத்தார். முக்கியமான விஷயம் என்னவென்றால் கல்கத்தா, நவகாளி படுகொலைகளுக்குப் பழி தீர்ப்பதற்காக பீகார் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்ற கருத்து பரவியதுதான்.

இந்தியாவைப் பிரித்து தனி பாகிஸ்தான் கேட்டவர்கள் முஸ்லிம் லீகைச் சேர்ந்தவர்கள். பிரிவினை வேண்டாம் என்றவை  மற்ற பெரிய கட்சிகளான காங்கிரஸும் இந்து மகாசபையும். 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணப் பொதுத் தேர்தல் அறிக்கையில் இரண்டு கட்சிகளும் தங்கள் தேசப்பிரிவினை எதிர்ப்பைத் தெளிவாகக் குறிப்பிட்டன. முஸ்லிம் லீகைத் தவிர மற்ற முஸ்லிம் அமைப்புகளும் வெளிப்படையாகப் பிரிவினையை எதிர்த்தன. முஸ்லிம் லீக் தனி பாகிஸ்தான் என்ற லட்சியத்தை அடைய  பஞ்சாப், வங்காளம் ஆகிய மாகாணங்களைப் பிரிப்பதையே நம்பி இருந்தது. ஏனென்றால் மேற்கு பஞ்சாபிலும், கிழக்கு வங்காளத்திலும் முஸ்லிம்கள் மிகுதியாக உள்ளார்கள். பீகாரில் மூஸ்லிம்கள் சுமார் 10 சதவீதம் தான். அங்கே பெரும்பான்மையினராக இந்துக்கள் இருக்கிறார்கள். அதனால் சிறுபான்மை மக்களாக இருக்கும் முஸ்லிம்களை அவர்கள் மிரட்டிக் கொல்ல ஆரம்பித்தார்கள் என்று நம்புவது எளிது.

முஸ்லிம்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கொள்கையை ஜின்னாவுக்கு முன்னால் முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்  சர் சையத் அகமது கான்ங (1817—1898). எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, தனி நாடு வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம் மக்கள் சிலரிடம் தோன்றி இருக்கிறது. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்தர இந்தியா மலர்ந்தது. அதற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முன்னமே செதுக்கப்பட்ட பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. இந்தக் கூற்று  தேசப்பிரிவினை பற்றி  ஜின்னா போன்றவர்கள் கொண்டிருந்த கருத்துக்கு மிக மிக நெருக்கமாக இருக்கும். இந்தியாவில் பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்களில் இருந்து  பண்பாடு, மதம் ஆகியவற்றால் வேறுபட்ட முஸ்லிம் இன மக்களை மட்டுமே கொண்ட ஒரு தனி நாடாக பாகிஸ்தான் ஜின்னாவின் கொள்கைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் ஒரு தனி சிலையாகச் செதுக்கி எடுக்கப்பட்டது என்பது அவர் முதலில் கொண்டிருந்த  நம்பிக்கை. பாகிஸ்தான் என்பது செதுக்கப்பட்ட சிலை அல்ல, இந்தியாவிடம் இருந்து உடைக்கப்பட்ட ஒரு பகுதி என்று சொல்பவர்களும் உள்ளனர்.

Muhammad Ali Jinnah
தனி பாகிஸ்தானைப் பெற்று அதிகாரத்தில் அமர கனவு கண்ட சிலர் அதை எவ்வழியில் அடைந்தார்கள் என்பது எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. அவர்கள் அப்போது  கையாண்ட முறைகள் அவர்களுடைய அரசியல் சித்தாந்தத்திலும், கொள்கையிலும் ஒன்றுகலந்தன. அவை இன்றும் பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில்  தொடர்ந்து வெளிப்படுகின்றன.
கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று இந்தியப்  பிரிவினை. அதன் காரணமாகப் பிறந்த  பாகிஸ்தான் பற்றி பல்வேறு காலகட்டங்களில் பலவேறு கருத்துகள் பலரால் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வாதப் பிரதிவாதங்கள் நிறைய இருக்கின்றன.






இந்திய விடுதலைச் சட்டம் 1947 பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு 1947 ஜூலை மாதம் பிரிட்டிஷ் அரசின் ஒப்புதல் கிடைத்தது. இந்தச் சட்டத்தின்படி ஒரே நாடாக இருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு டொமினியன்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு சுதந்தரம் பெற்றன. 1947 ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானும், ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவும் விடுதலை அடைந்தன. இந்திய விடுதலைச் சட்டம் 1947ல் இந்தியப் பிரிவினை பற்றிய விஷயங்கள் அடங்கியுள்ளன. அதன் முக்கியமான பிரிவுகளில் ஒன்று வங்காளம், பஞ்சாப் ஆகிய மாகாணங்கள் பிரிக்கப்பட்டு இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு அளிக்கப்படுவதைக் குறிப்பிடுகிறது. பிரிவினை ஒப்பந்தப்படி அனைத்தும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அவற்றில் இந்தியக் கருவூலம்; இந்திய அரசுப் பணி; இந்திய ராணுவத்தின் தரைப்படை,  கப்பல் படை, விமானப் படை மற்றும் எஞ்சி இருக்கும் அத்தனை நிர்வாக அமைப்புகளும் அடங்கும்.

புதிதாகப் பிறந்த பாகிஸ்தானின் அப்போதைய தலைநகரம் கராச்சி. பளிங்கு கற்களால் ஆன ஓர் அரண்மனையில், பாகிஸ்தான் மக்களின் தன்னிகரற்ற தலைவனாக கிட்டத்தட்ட ஓர் அரசனைப் போல் ஜின்னா இருந்தார். இந்தப் பாகிஸ்தான் அவ்வளவு எளிதாக அவருக்கும் அந்த மாபெறும் கனவை நனவாக்கத் துடித்த அவர் சகாக்களுக்கும் கிடைத்து விடவில்லை. பெரும் விலையை இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் கொடுக்கவேண்டியிருந்தது. பாகிஸ்தான் உருவான கதையின் சாரம் என்பது அந்தத் தேசத்துக்காகக் கொடுக்கப்பட்ட பெரும் விலைதான்.

பிரிவினைக்கு முன்பும் அதற்குப் பின்பும்  இந்தியாவில்  இந்துக்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் முஸ்லிம் மக்கள்தாம். இந்தியாவின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அவர்களுடைய  பங்களிப்பு  கணிசமானது. அதனால்தான் மத அடிப்படையிலான அந்தத் தேசப் பிரிவினையை மிகுதியான மக்களும் தலைவர்களில் பலரும் விரும்பவில்லை. பல நூற்றாண்டுகளாக இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக  வாழும் நாட்டை மத அடிப்படையில் பிரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் கருதினார்கள். இந்தியாவைக் கிட்டத்தட்ட  இரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டவர்கள் பிரிட்டிஷார். அதற்கு முன்னால் சுமார் முந்நூறு ஆண்டுகள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தன. அன்றும் ஒன்றுபட்ட பெரும் இந்தியா இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் மதஅடிப்படையிலான பிரிவினைக் கருத்து மக்களிடையே – குறிப்பாக முஸ்லிம் மக்களிடையே தலைதூக்கவில்லை. இதன் காரணமாகவே 1947 இல் இயங்கிக் கொண்டிருந்த  பல முஸ்லிம் அரசியல் கட்சிகள்  பிரிவினையை எதிர்த்தன.

ஆனால் இந்திய முஸ்லிம் லீக் பிரிவினைக் கொள்கையில் உறுதியாக இருந்தது. 1940ல் நடைபெற்ற லாகூர் கூட்டத்தில் ஜின்னா முஸ்லிம்களுக்குத் தனி நாடு அவசியம் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து தேசப் பிரிவினை அதிகாரப்பூர்வமாக நிழ்ந்த 1947 வரை ஏழு வருடங்களாக நாடு பெரும் இன்னல்களைச் சந்தித்தது. அதற்குப் பிறகும் இன்னல்கள் தொடர்ந்தன.

பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலான முகமது அலி ஜின்னா அந்நாடு உருவாவதற்கு  முக்கியப் பங்காற்றியவர். பிரிட்டிஷ் இந்தியாவின் சிந்துவில் பெரும் செல்வக்குடும்பத்தில் பிறந்த அவர் இங்கிலாந்தில் சட்டம் பயின்றவர். ஒரு தேசியவாதியாக முகமது அலி ஜின்னா உருவானார். இங்கிலாந்தில் இருந்தபோதே தாதாபாய் நௌரோஜி போன்ற தலைவர்களால் அவர் ஈர்க்கப்பட்டார். இந்தியாவுக்கு வந்து 1906ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். அதே ஆண்டு தொடங்கப்பட்ட  முஸ்லிம் லீக்கில் சேர்வதற்குத் தயக்கம் காட்டினார். ஆனால் 1913ல் முஸ்லிம் லீக்கில் இணைந்த அவர் மூன்று ஆண்டுகளில் அதன் தலைவராகி விட்டார். அந்நியர்கள்  ஆண்டபோது வராத கவலை, முஸ்லிம் தலைவர்களை அப்போது வாட்டியது. இந்தியா சுதந்தரம் பெற்றால் இந்துக்கள் தங்கள்மீது அதிகாரம் செலுத்துவார்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். 1906 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் உள்ள இந்து உறுப்பினர்கள் மீது  முஸ்லிம் தலைவர்கள் கொண்ட சந்தேகத்தின் காரணமாக இந்திய முஸ்லிம் லீக்  தொடங்கப்பட்டது.

1930 ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் லீக் கூட்டத்தில் எழுத்தாளர் அலாமா இக்பால்   தலைமை உரையாற்றியபோது இவ்வாறு கூறினார். “இந்துக்கள் மிகுதியாக இருக்கும் இந்தியத் துணைக் கண்டத்தில் முஸ்லிம்களுக்குத் தனி நாடு அவசியமாகிறது.பிரிவினை வெகு சீக்கிரத்தில் நடக்கும் என்பதே என் கணிப்பு.”

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்ச்சிக்கு வழிவகுத்தது இந்திய பாகிஸ்தான் பிரிவினை. அது எல்லைக் கோட்டின் இருபுறமும் சுமார் ஐந்து லட்சம் மக்கள் உயிர் இழக்கக் காரணமாக இருந்தது.

1905 ஆம் ஆண்டு இந்தியாவின் வைஸ்ராய் கர்சன் பிரபு வங்காளத்தை கிழக்கு, மேற்கு பகுதிகளாகப் பிரித்தார். அதன்மூலம் இந்து முஸ்லிம் பகையை வளர்த்து, இந்திய தேசிய காங்கிரஸின் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யலாம் என்று அவர் எண்ணினார். எதிர்ப்புகள் வலுக்கவே 1911ல் மீண்டும் வங்காளத்தின் பகுதிகள் இணைக்கப்பட்டன. அது ஒரு முக்கியமான நிகழ்வுக்குக் காரணமானது. அதுதான் இந்திய முஸ்லிம் லீக்கின் தொடக்கம். மேலும் அது இந்தியாவை மத ரீதியில் பிரிப்பதற்கு ஒத்திகை பார்த்தது போலாகிவிட்டது.

பரந்து விரிந்து பலவிதமான  பழக்க வழக்கங்களையும், மொழிகளையும் கொண்ட மக்கள் வாழும்  நாடு இந்தியா. இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒன்றாக  இருந்தது என்பது  மிகவும் வியப்பான ஒரு விஷயம்தான்.  ஏனென்றால் அப்போது இந்தியாவில் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியின் கீழ் செயல்பட்ட மாகாணங்கள் தவிர, நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத ஐநூறுக்கும் மேலான  சமஸ்தானங்கள் இருந்தன.
முதலில் இந்தியாவை ஆண்டது கிழக்கிந்திய கம்பெனிதான். ஈஸ்ட் இண்டீஸ் என்ற பெயர் பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் பிரபலம் அடையத் தொடங்கியது. ஐரோப்பியர்கள் ஆசியாவில் இருக்கும் பல நாடுகளையும், அவற்றைத் தாண்டி பசிபிக் கடலில் இருக்கும் பெரும் தீவுக் கூட்டங்களையும் ஈஸ்ட் இண்டீஸ் என்ற பெயரால் அழைத்தார்கள். அதன் படி ஈஸ்ட் இண்டீஸ் என்பது இந்திய துணைக்கண்டம்; தென்கிழக்கு ஆசிய நாடுகள்; பசிபிச் கடலில் இருக்கும் ஆஸ்திரேலியாவோடு இன்னும் பல தீவுக் கூட்டங்கள்; மேலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளையும் குறிக்கும் ஒரு சொல்.

1600 ஆம் ஆண்டு  லண்டனில் தொடங்கப்பட்ட ஈஸ்ட் இண்டியா கம்பெனி தான் ஐரோப்பாவில் இருந்தவற்றில் மிகவும் பழமையானது. இந்த கிழக்கிந்திய கம்பெனியின் பங்குதாரர்களாக பெரும் வியாபாரிகளும், பிரபுக்களும் இருந்தார்கள். எலிசபெத் அரசி அதற்கு  ராஜ உரிமை அளித்தார். இருப்பினும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு  அதில் பங்குகள் எதுவும் இல்லை. அரசாங்கம் மறைமுகமாக அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.1707 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டிஷ் ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனி ஆனது. 1757 ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் உறுதியானது. 1857 இல் நடந்த சிப்பாய் கலகம் வரை கிழகிந்திய கம்பனி ஆட்சி தொடர்ந்தது. 1858 இல் இயற்றப்பட்ட இந்திய அரசாங்க சட்டத்தின் படி, இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி ஆளுமையின் கீழ் வந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 60 சதவிகிதம் பிரிட்டிஷாரின் நேரடி ஆளுமையில் இருந்தது. எஞ்சிய 40 சதவிகிதம் 565 பல்வேறு சமஸ்தானங்களின் கீழ் இருந்தது. இந்த சமஸ்தானங்களின் அரசர்கள், அரசர்களாக இருக்க அனுமதிக்கப்பட்டாலும் அவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. சுதந்தரத்துக்குப் பிறகு இவற்றுள் அதிக விவாதத்திற்குள்ளான சமஸ்தானங்கள் காஷ்மீர், ஹைதராபாத், தற்போது குஜராத்தில் இருக்கும் ஜுனாகத் ஆகியவை தாம். முஸ்லிம்கள் மிகுதியாக உள்ள காஷ்மீரை ஓர் இந்து அரசர் ஆள்கிறார். இந்துக்கள் மிகுதியாக உள்ள ஹைதராபாத்தையும், ஜுனாகத்தையும்  முஸ்லிம் அரசர்கள் ஆள்கிறார்கள். இவை விசித்திரமான முரண்பாடுகள். அதே வேளையில் இவை இந்தியாவில் இந்துக்களும், முஸ்லிம் மக்களும் எவ்வாறு கலந்து, கலாசாரத்தால் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு சாட்சிகளாகவும் உள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அனைத்து சமஸ்தானங்களும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இருப்பதற்கு  ஒப்பந்தம் செய்து கொண்டன. மொத்த சமஸ்தானங்களில்  21 சமஸ்தானங்கள் மட்டுமே  தங்களுக்கென மாநில அரசாங்கம் வைத்திருந்தன. அவற்றிலும் ஹைதராபாத், மைசூர், பரோடா, ஜம்மு – காஷ்மீர் ஆகிய நான்கு மட்டுமே பெரியவை. மற்ற எல்லா சமஸ்தானங்களும் சிறியவை.அவற்றின் அரசர்கள்  இந்திய வைஸ்ராயின் ஒப்பந்தக்காரர்கள் போல செயல்பட்டார்கள்.

இந்தியாவை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த  பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் சமஸ்தானங்களை மேய்ப்பது ஒரு  முக்கியமான வேலையாக இருந்தது. சிறிய ஜமீன்கள் போன்றவை நீங்கலாக இருநூறுக்கும் மேலான சமஸ்தானங்கள் பாதுகாப்புப் படை வைத்திருந்தன. இந்த சமஸ்தானங்களில் இரண்டு மோதிக் கொள்ளும் போதும் ஒரு பெரிய சமஸ்தானம் சிறிய ஒன்றைப் பிடிக்க முயலும் போதும், பிரச்னை எழுந்தது. அந்தச் சமயங்களில் இந்தியாவில்  ஆட்சி செலுத்தும் பிரிட்டிஷ் பேரரசின் அதிகாரம் கேள்விக்குள்ளானது. இன்று வளர்ந்த நாடுகளின் வரிசையில் பிரிட்டன் நீடிப்பதற்குக் காரணமாக இருப்பவை ஆங்கிலேயர்களின் அறிவு, திறமை, உழைப்பு ஆகியவைதாம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதே வேளையில் இங்கிலாந்து நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தர்கள் அவர்கள் அல்ல என்பது மறுக்கமுடியாத உண்மை. பிரிட்டானியர் என்ற பெயருக்கும் அவர்கள் உரிமையானவர்கள் அல்ல. ஏனென்றால் இங்கிலாந்தின் பூர்வ குடிகள் செல்டிக் மக்கள். இப்படி தொடக்கம் முதலே பிறரை அடக்கியாளும் குணம் கொண்ட ஆங்கிலேயர்களிடம் இருந்தது. இந்தியாவிலும் இது பிரதிபலித்தது.

தேச பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குக் கிடைத்த மேற்கு பஞ்சாப் மாகாணம் சுமார் 62 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது. பின்னாளில் சுமார் 17ஆயிரம் சதுர மைல் பரப்பளவு கொண்ட பகவல்பூர் சமஸ்தானம் அதனோடு இணைக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தோடு இஸ்லாமாபாத் தலைநகர் பகுதி சேர்ந்திருந்தது. 1955 இல் அது பஞ்சாப் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. பிரிவினையின் போது 16 மாவட்டங்கள் மேற்கு பஞ்சாபுக்குக் கொடுக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பஞ்சாபின் எஞ்சிய பகுதி கிழக்கு பஞ்சாபாக இந்தியாவுக்குக் கிடைத்தது. அதற்கு 13 மாவட்டங்களும், ஐந்து சமஸ்தானங்களும் கிடைத்தன.

(தொடரும்)

இந்தச் சூழல் மாறும், பாட்டாளி வர்க்கம் வாழ்க!


செப்டெம்பர் 11, 1973 அன்று சிலியின் அரசு வானொலியில் பிரதமர் அலண்டேயின் குரல் கடைசியாக இப்படி ஒலித்தது.

சிலியின் பாட்டாளிகளே, சிலியின் எதிர்காலம் குறித்து எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது.  தேசத் துரோகிகள் வெற்றியுடன் உலா வரும் இந்நேரத்தில், வேறு யாராக இருந்திருந்தால் பணிந்து பிழைத்துப் போயிருப்பார்கள். ஆனால், நான் எங்கும் ஓடப்போவதில்லை. நீங்கள் ஒன்றை மறந்து விடாதீர்கள். விரைவில் இந்தச் சூழல் மாறும். ஒரு நல்ல சமுதாயம் உருவாகும். சிலி வாழ்க. மக்கள் வாழ்க. பாட்டாளி வர்க்கம் வாழ்க!’

அலண்டே அளித்த இந்த நம்பிக்கை மட்டும்தான் இன்னமும் மிச்சமிருக்கிறது.

வெள்ளி, 16 ஜூன், 2017

பாம்பு: அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள்! - கடிவாங்கியவனின் தேடல்

மலையேறிட்டு வந்து புல்லு தடுக்கி விழுந்து செத்தவன்ட கதை கேள்விபட்டிருப்பீங்க.. அதான் இப்போ நம்ம வாழ்க்க.. காடு மலையெல்லாம் போய் பாம்பு கூட செல்பி எடுத்து பாம்புக்கே படம் எடுத்திட்டு இப்போ.. பாம்பாட்டிட பல்லு புடுங்காத கருநாகத்திட்ட கடிவாங்கினத எப்படி மறக்க முடியும். கடிச்சதும் சத்தி எடுத்தவன பாத்து இருப்பீங்க. சிரிச்சவன பாத்து இருக்கீங்கள.. அதான்யா நம்ம பாடு. சூட்டிங்கில நடந்த சோகம் கமெடி கலந்த மரண சமாச்சாரம். எதையும் பொசிட்டிவா எடுக்கனும் என்டு என்ர அப்பா சொல்லி இருக்காரு.. சோ.....!! பாம்பு கடிச்ச வலியும் 5 நாள் அவசர சிகிச்சை பிரிவுல படுத்ததையும் மறந்திட்டு அரவத்த பத்தி கொஞ்சம் படிக்கலாம் வாங்க.

பாம்புன்னு எடுத்துக்கிட்டோமுன்னா, நம்மள்ல நெறைய பேருக்கு நல்லா தெரிஞ்ச, பிரபலமான(?) ஒரு பாம்புன்னா அது நல்ல பாம்பு/ராஜ நாகம் அப்படீன்னு சொல்லலாம். நல்ல பாம்பு நான் சில முறை பார்த்தப்போ, அது என்னவோ நம்மள நல்லா உத்து பார்க்குது போலிருக்கு அப்படீன்னுதான் எனக்குத் தோனும்!

ஆக, பாம்புக்கு கண்கள் இருக்கு. அது நல்லாவும் பார்க்கிற மாதிரி நமக்குத் தோனுது(?). பாம்பைப்பத்தின இன்னொரு சந்தேகம், பாம்புக்கு காது இருக்கா? எனக்குத் தெரிஞ்சவரைக்கும் “பாம்பின்கால் பாம்பறியும்” அப்படீன்னு ஒரு பழமொழிதான் இருக்கேத் தவிர கண்ணுக்குத் தெரியுற மாதிரி பாம்புக்கு காது/கால் இதெல்லாம் இல்லைன்னுதான் நெனைக்கிறேன்!

அடுத்த சந்தேகம், பாம்புக்கு மூக்கு இருக்குதா? யாராவது பார்த்து/கேள்விப்பட்டு இருக்கீங்களா?
கண்டிப்பா எனக்குத் தெரியாதுப்பா! சரி, நம்மளுக்குத் தெரியாதுங்கிறதுக்காக பாம்புக்கு காது/மூக்கு இருக்கு/இல்லைன்னு அர்த்தமில்ல. இல்லீங்களா? அப்படீன்னா, உண்மைதான் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னதான் பதில்?

பாம்பின் மூக்கு

கேள்வி: பாம்புகளுக்கு கண்கள் உண்டா?
பதில்: உண்டு. ஆனால் சில பாம்புகளை (நல்ல பாம்பு போன்றவை) தவிர மற்றவைக்கு நன்கு பார்க்கும் திறன் இல்லை!

கேள்வி: பாம்புகளுக்கு காதுகள் இருக்கின்றனவா?
பதில்: உண்டு. ஆனால், அவை தலையினுள் இருப்பதால் வெளியில் தெரிவதில்லை!
கேள்வி: பாம்புகளுக்கு மூக்கு இருக்கிறதா?
பதில்: உண்டு. ஆனால், பாம்புகளின் மூக்கு நமக்கு இருப்பவை போல கண்களுக்கு இடையில் அல்ல. பாம்புகளின் மூக்கு என்பது ஆங்கிலத்தில் ஜேக்கப்சன்ஸ் ஆர்கன் (Jacobson’s organ) என்றழைக்கப்படுகிறது. இந்தப் பகுதி வாயின் மேற்புறத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!


விளக்கம்: பகல் நேரத்தில் இரையை வேட்டையாடும் பழக்கமுள்ள சில பாம்புகளைத்தவிர மற்ற எல்லாப் பாம்பினங்களுக்கும், தெளிவான பார்வைத் திறன் இல்லை.அவை வடிவங்களைப் பார்க்க முடியுமே தவிர விவரங்களை அல்ல! இதன் காரணம், பாம்புகளின் பரிணாம நிலையான பொந்துகளில், இருட்டில் வாழும் தன்மையே. ஏனென்றால் இருட்டில் பார்வைக்கான அவசியம் மிகக் குறைவு என்பதால்!

Pit vipers  எனும் வகையைச் சேர்ந்த பாம்புகள், இரவினில் நன்கு பார்ப்பதற்கான ஒரு பிரத்தியேகத் திறனைக் கொண்டவை!  அதாவது, இவ்வகைப் பாம்புகளின் தலையின் இருபுறமும் இருக்கும் குழிகள் (Pits) வெப்பத்தை (இன்ஃப்ரா ரெட், Infra red) உணரும் சக்தி படைத்தவை. இந்தக் குழிகள் (கண்களல்ல) இவ்வகைப்பாம்புகளின் மூளைக்கு இரையின்(விலங்கின்) வடிவங்களை அனுப்பும் சக்தி கொண்டவை என்கிறார்கள் ஆய்வாளர்கள். யப்பா….!!
அந்த அதிசயத்த, கீழே இருக்குற அற்புதமான இந்தக் காணொளியில நீங்களே பாருங்க……

நல்ல பாம்பினைப் பற்றிய ஒரு சுவாரசியமான(?) தகவல் என்னன்னா, அதோட கண்கள் எதிரியின் கண்களை குறி பார்த்து தன் விஷத்தைக் கக்கும்(செலுத்தும்) திறன் கொண்டவை என்பதுதான்! அதுமட்டுமில்லாம, தன்னோட விஷம் எதிரி யோட (மனுசனும்) கண்களைக் குருடாக்கிவிடும் என்பது நல்லாத் தெரியுமாம் நல்ல பாம்பிற்கு! அதுசரி,  நல்ல பாம்புங்க நம்ம வடிவேல் மாதிரி “எதையுமே ப்ளான் பண்ணிதான் பண்ணனுமுன்னு” கெளம்பி இருக்குங்க போலிருக்கு!? எதுக்கும் நாம ஜாக்கிறதையா இருந்துக்குவோம் சாமீ…!

ராஜ நாகத்தைப் பத்தின ஒரு அட்டகாசமான காணொளிய கீழே பாருங்க……

பாம்புகளுக்கு வெளிப்படையான, பெரிய காதுகள் இல்லைன்னாலும் தலைக்கு உள்ளே கேட்கும் திறனுள்ள காதுகள்(?) இருக்கு. அதனால, காற்றில் எழும் பல அதிர்வுகளை  துள்ளியமாக உணரும் திறன் படைத்தவையாம் பாம்புகள்! இன்னொரு சுவாரசியமான விஷயம், பாம்புகள் ஏற்படுத்தும் மிகப் பிரபலமான(?) “உஸ்ஸ்ஸ்ஸ்…..” அப்படீங்கிற சத்தம். இந்த சத்தத்தை பாம்புகள் ஏற்படுவதற்கான காரணம், பிற விலங்கு/எதிரிகளை எச்சரிக்கை செய்வதற்க்காகவே!
ஒரு பாம்பு எந்த அளவுக்கு “உஸ்ஸ்ஸுங்கும்னு” நீங்களே பாருங்க…..

பாம்புகளுக்கு சிறந்த பார்க்கும்/கேட்கும் திறன் இல்லாததை சரிப்படுத்தும் விதமாக இயற்கை (இறைவன்?) பாம்புகளுக்கு, மிகச்சிறந்த நுகரும் திறனை அளித்திருக்கிறது. ஆக, தங்களின் ஜேக்கப்சன்ஸ் ஆர்கனினால் பாம்புகள் மிகத்துள்ளியமாக நாற்றங்களை உணர்ந்து தங்களின் இரையை தேர்ந்தெடுக்கின்றன/காத்துக்கொள்கின்றன!

“பிளவுபட்ட நாக்கு”

பாம்புகளைப் பற்றிய இத்தகவல்கள் எல்லாத்தையும் விட மிக சுவாரசியமான, பாம்புகள்னாலே நமக்கெல்லாம் நியாபகத்துக்க்கு வர்ற ஒரு விஷயம் இருக்கு. அது என்னன்னு தெரியுமா உங்களுக்கு? கண்டிப்பா உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நம்பறேன். அதுக்கும், பாம்புகளோட நுகரும் தன்மைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கு!  அது  வேற ஒன்னுமில்லீங்க, பொதுவா பாம்புகள் தங்களோட நாக்கினை வெளியில் நீட்டி பின் சட்டென்று உள்ளிழுத்துக்கொள்வதை நாம் எல்லாரும் பார்த்திருப்போம். அது எதுக்குன்னு தெரியுமா உங்களுக்கு?

பாம்புகளின் நாக்கு பிளவுபட்டது போன்றிருக்கும். அந்த நாக்கினை வெளியில் சுழற்றும்போது பாம்புகள், காற்றில் உள்ள நாற்றத் துகள்களை உள்ளிழுத்துக்கொள்கின்றன. பிளவுபட்டது போன்ற நாக்கின் இரு புறங்களும் ஜேக்கப்சன்ஸ் ஆர்கனின் இரு துவாரங்களில் மாட்டிக்கொண்டு விடுகின்றனவாம். பின் நாற்றத்தின் தன்மையை உணர்ந்துகொள்ளுமான் பாம்பு! அடேங்கப்பா….!
படிச்சிட்டாப் புரிஞ்சிடுமா என்ன? அதனால இந்தக் காணொளியில பாருங்க…..

பாம்புகள் தங்கள் இரையை எப்படி தாக்கி, பின் அவற்றைத்க் தங்களின் உணவாக்கிக் கொள்கின்றன என்பதை மிகத்துள்ளியமாகக் காட்டும் இந்த அற்புதமான காணொளியையும் பாருங்க…… நம்பவே முடியலைங்க என்னால!!

என்னங்க, அசந்துபோய் உக்காந்துட்டீங்க? இதுக்கே இப்படின்னா, இன்னும் வரப்போற பாம்புகள் பத்தின காணொளிப்பதிவுகளப் பார்த்துட்டு என்ன செய்வீங்கன்னு தெரியலையே? சரி, பொறுத்திருந்து பார்ப்போம்!

சாகாவரம் தரும் செயற்கை நுண்ணறிவு! - (IARP)

மனிதர்களின் உயிர்காக்கும் நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு செயற்கை உடல் உறுப்புகள் உற்பத்தி, மனிதர்களுக்கு நிகரான ரோபாட் வடிவமைப்பு என விஞ்ஞானம் அசத்திக்கொண்டு இருக்கிறது. இருந்தாலும், ‘மனிதர்கள் நூறு வருடம் வரை வாழ முடியுமா?’ என்ற சந்தேகம் நிலவத்தான் செய்கிறது. ஏனென்றால், மனிதனின் ஆயுட்காலத்தை வெகுவாக குறைத்துவிடும் பல்வேறு வகையான நோய்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு என பல்வேறு காரணங்களால் உள்ளன. இதனால் மனிதனின் நீண்டகால வாழ்க்கை என்பது ஒரு கனவாகத்தான் இருக்கிறது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக, முதுமை என்பது உயிரினங்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு என்றாலும் கூட, அது ஒரு குணப்படுத்தக் கூடிய நோய் போன்றதுதான் என்றே பெரும்பாலான விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

அதன் காரணமாக, முதுமையைக் கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் இதுவரை பல ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். உதாரணமாக, சிலர் முதுமையைக் குறைக்கவும், பலர் முதுமையை முற்றிலும் தடுக்கவும் முயன்று வருகின்றனர்.

முதுமையை முற்றிலும் தடுத்து, மனித ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு எண்ணற்ற வழிகள் இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அத்தகைய வழிகளுள் ஒன்றுதான், உயிர் ஆதாரமான ஸ்டெம் செல்களில் மரபணு மற்றும் உயிரணு அளவிலான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் முதுமையைத் தடுக்கும் தொழில்நுட்பம். இதன்மூலம், ரத்தத்தில் உள்ள சில புரதங்களின் இளமையை நீட்டிக்கும் திறன்கள் சமீப காலமாக பரிசோதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், வேறு சில விஞ்ஞானிகள் குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி முதுமையை தடுக்க முடியும் என்கின்றனர்.
இவர்களை எல்லாம் மிஞ்சுவது போல் உள்ளது புதிய ஆய்வு ஒன்று.

சர்வதேச மூப்பு ஆய்வுப் பிரிவு மற்றும் உயிர் முதுமையியல் ஆய்வு நிறுவனம் (Aging Research Portfolio (IARP) and Biogerontology Research Foundation) ஆகியவற்றின் இயக்குனராகவும், உயிர் தகவலியல் நிறுவனமான (மிஸீவீறீவீநீஷீ Medicine) இன்சிலிகோ மெடிசினின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இயங்கிவரும் அலெக்ஸ் சாவோரோங்கோ இந்த யோசனையை தெரிவித்துள்ளார்.
அதாவது, ‘செயற்கை நுண்ணறிவைக் கொண்டு முதுமையை வெல்ல முடியும்’ என்கிறார் விஞ்ஞானி சாவோரோங்கோ. வாழ்க்கை நீட்டிப்பு வழக்குரை நிறுவனத்திற்கு (லிவீயீமீ Extension Advocacy Foundation (LEAF) சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில், முதுமை மற்றும் அது தொடர்பான நோய்கள் மீதான இன்சிலிகோவின் சமீபத்திய ஆய்வுகளைப் பற்றிய விளக்கியுள்ளார். அதில், உடல் வளர்ச்சி, முதுமை மற்றும் புற்றுநோய் வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய மூலக்கூறு சமிஞ்ஞைத் தடங்களை ஆய்வு செய்யக்கூடிய ஆன்கோ பைண்டர் எனும் செயற்கை நுண்ணறிவு மற்றும் கணக்கியல் வழிமுறைகள் (அல்காரிதம்) போன்றவற்றின் உதவியுடன் மனித செயல்பாடுகளை தொடர்ந்து மேம்படுத்தவும், முதுமை தொடர்பான நோய்களை குணப்படுத்துவதுமே தங்களுடைய நீண்டகால குறிக்கோள் என்கிறார் சாவோரோங்கோ.

முக்கியமாக, மனித உடலின் ஆரோக்கிய நிலையை ஒரு ஆய்வு மாதிரியாக உருவாக்கி அதனை தொடர்ந்து கண்காணித்து, அதில் ஏற்படக்கூடிய கோளாறுகளை வாழ்க்கை முறை அல்லது மருத்துவச் சிகிச்சைகள் மூலம் சரி செய்யக்கூடிய ஒரு முழுமையான மருத்துவக் கருவி அல்லது அமைப்பை இன்சிலிகோ மூலம் இன்னும் ஐந்தே வருடங்களில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார் சாவோரோங்கோ.
மேலும், ஒரு மனிதனின் வயதை கணித்துச் சொல்லக்கூடிய மற்றும் பல அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய ஆழமான நரம்பியல் வலையமைப்பு ( deep neural networks ) தொழில்நுட்பத்தையும் இந்த ஆய்வில் பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், முதுமை மற்றும் அது தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும், முதுமையால் உடலில் ஏற்படும் சிதைவுகளை சரிசெய்யும் அல்லது முதுமையே வராமல் முன்கூட்டியே தடுத்துவிடும் பல்வேறு வகையான மருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் செயற்கை நுண்ணறிவுக்கு உண்டு என்கிறார்.

ஒட்டுமொத்தமாக, மனிதர்களை மரணத்திலிருந்து காக்கும் அசாத்திய திறன் செயற்கை நுண்ணறிவுக்கு நிச்சயமாக உண்டு என்று அடித்துச் சொல்கிறார் அலெக்ஸ் சாவோரோங்கோ.

மர்மம் நிறைந்த குள்ளர்கள் - நெல்லிஸ் குயா

இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள புளோரஸ் தீவு மலைகளும், காடுகளும், எரிமலைகளும், மர்மங்களும் நிறைந்த அதிசய தீவு. புளோரஸ் தீவில் அழகுடன், அறிவியல் அதிசயங்களும் மறைந்துள்ளன. இங்குள்ள பழங்குடியின சந்ததியினர் 'நெல்லிஸ் குயா' என்று அழைக்கப்படுகின்றனர். மிகவும் பழமை வாய்ந்த பழங்குடியினர்களின் பட்டியலில் புளோரஸ் தீவின் 'நெல்லிஸ் குயா' மக்களும் இடம் பிடித்துள்ளனர்.

பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்த ஆராய்ச்சிகளுக்காக, உலக ஆராய்ச்சி யாளர்கள் புளோரஸ் தீவில் முகாமிடுவது வழக்கம். அப்படி செல்லும் ஆராய்ச்சியாளர்களுக்கு அங்குள்ள பழங்குடியின மக்கள், விசித்திர குள்ள மனிதர்களின் கதைகளையும் கூறுகின்றனர்.

'புளோரஸ் மலைகளுக்குப் பின்னால் விசித்திர குள்ளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்கள் பெரிதாகவும், உடல் முழுவதும் ரோமம் மூடியும் காணப்படும். 

மற்றவர்களுக்கு புரியாத மொழியும் பேசுவார்கள். குள்ளர்கள் பழங்குடியின கிராமங்களுக்குள் அடிக்கடி புகுந்து, பயிர்கள், உணவுப் பொருட்கள், பழங்களை திருடிக்கொண்டு ஓடிவிடுவார்கள். எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்தக் குள்ளர்களை 'எபுகோகோ' என்று மூதாதையர்கள் அழைப்பார்கள்' என்று விசித்திர குள்ளர்களின் கதை நீள்கிறது.

இதுபோன்ற கதை புளோரஸ் தீவில் மட்டுமல்லாமல், இந்தோனேஷியாவின் ஏராளமான கிராமங்களிலும் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் 'பழங்குடியின மக்களின் கற்பனை' என்று புறந்தள்ளப்பட்ட இந்த குள்ளர்களின் கதை, தற்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2003-ம் ஆண்டு புளோரஸ் தீவில் நெல்லிஸ் குயா பழங்குடியின மக்கள் வசித்து வரும் கிராமத்தில் இருந்து சுமார் 75 மைல் தொலைவில் ஒரு குகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவை சேர்ந்த தொல் பொருள் ஆய்வுக் குழுவினர், டாக்டர்.ரிச்சர்ட் ராபர்ட் என்பவர் தலைமையில் அந்தக் குகையை ஆராய்ந்தனர். அப்போது 19 அடி ஆழத்தில் சிறிய உருவத்திலான எலும்பு கூடுகளுடன், பல மிருகங்களின் எலும்புகளையும் கண்டுபிடித்தனர்.

ஆரம்பத்தில் இந்த எலும்புக் கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்பாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதினர். ஏனெனில் இதன் மொத்த உயரமே மூன்று அடிதான். குழந்தையின் எலும்புக்கூடு என்ற கோணத்திலே ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்களுக்கு, பேரதிர்ச்சி காத்திருந்தது.

பழங்குடியின மக்கள் கூறிய கதைகளை ஒப்பிட்டு பார்த்த ஆராய்ச்சியாளர்கள், சிறிய அளவிலான எலும்புகூட்டை முழுவதுமாக ஆராய்ந்தனர். அதில் இதுவரை யாரும் அறியாத புதிய மானிட இனத்தின் எலும்பு கூடுகள் அவை என்பதை உணர்ந்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 30 வயது பெண்ணுடையது.

விரிவான ஆராய்ச்சியில், இவர்களின் மொத்த உயரமே சராசரி 3 அடிதான். அதாவது 3 வயது குழந்தையின் உயரம்தான். இவர்களின் மொத்த உடல் எடை 25 கிலோ மட்டுமே. மூளை அமைப்பு மிகச்சிறியதாகவும், சிக்கல் நிரம்பியதாகவும் இருந்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை தலைகீழாக புரண்டு விட்டது. பெரிய மூளையுடைய மனிதர்களை போன்றே குள்ளர்களும் வேட்டையாடுதல், வேட்டை கருவிகளை கூர்மையாக உருவாக்கும் நுட்பம், ஒளிந்திருந்து தாக்குதல், பதுங்குதல் போன்றவற்றையும் சிக்கலான சிறிய அளவு மூளைகளை கொண்டே நிகழ்த்தி உள்ளனர். கண்டெடுக்கப்பட்ட 3 அடி உயர பெண் எலும்புக்கூடு சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இது பற்றி டாக்டர்.ரிச்சர்ட் ராபர்ட் கூறும் பொழுது, 'மனித வரலாற்றில் 18 ஆயிரம் ஆண்டுகள் என்பது நெருக்கமான ஒன்று தான். இந்த குள்ள மனிதர்கள் இன்றும் கூட, அடர்த்தியான காடுகளில் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் இந்தப் புதிய இனத்தைப் பற்றி மேலும் அறியலாம். புளோரஸ் தீவு நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கிறது. முக்கியமாக இதன் அருகில் உள்ள பாலி தீவில் இருந்து லம்போக் தீவு, முப்பது கீலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. மேலும் இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையே “சேப்” என்று அழைக்கப்படும் ஆபத்தான கடல் நீரோட்டமும் ஓடுகிறது. எனவே பாய்மரக் கப்பல் அல்லது இயந்திரப் படகு மூலமாகவே இக்கடல் பகுதியைக் கடக்க முடியும். எனவே கற்கால மனிதர்கள் எப்படி இந்த ஆபத்தான கடல் பகுதியைக் கடந்து புளோரஸ், திமோர் ஆகிய தீவுகளுக்கும், ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் சென்றிருக்க முடியும் என்பது என்னை போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் குழப்பமாகவே உள்ளது. இதற்கு இந்தியா-இலங்கை நாடுகளை உதாரணமாக கொள்ளலாம்.

மண்டை ஓடை மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்ட பெண்ணின் உருவம்


இந்தியா-இலங்கை நாடுகளிலும் கற்கால மனிதர்களின் எலும்புகளும், கற்கால கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரு நாடுகளுக்கும் இடையே அறுநூறு அடி ஆழமுள்ள கடல் உள்ளது. ஆனால் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்சென்று பார்த்தால், கடல் நீர் மட்டத்தின் அளவுகள் ஆட்டம் காண்கின்றன. ஏற்றமும் இறக்கமுமாக இருக்கின்றன. நீர்மட்டத்தின் வீழ்ச்சியையும், அவர்களின் கண்டுபிடிப்புகளையும் கொண்டு கண்டங்களை தாண்டி இருக்கலாம். அதன் பிறகு பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்ததால், இடம்பெயர்ந்த கற்கால மனிதர்கள் அந்தந்த தீவுகளை தங்களுக்கான இருப்பிடமாக கொண்டு வாழ்ந்துள்ளனர். இதுவே குள்ளர்களின் வாழ்க்கையில் நடந்திருக்க வேண்டும். கடல் நீர் மட்டம் குறைந்த போது, இந்தோனேஷியாவை சுற்றியிருந்த குட்டி தீவுகளுக்கு சென்றிருக்கலாம். வேட்டையாட தெரிந்தவர் களுக்கு கடல் தாண்ட தெரியாதா?.

மேலும் சுனாமி பேரலைகளால் தீவில் ஒதுங்கிய பெரிய மரங்களை கொண்டு படகு மாதிரியிலான ஒன்றையும் உருவாக்கி இருக்கலாம். இதன் மூலமாக கூட கடல் தாண்டிஇருக்கலாம். அப்படி தான் புளோரஸ், திமோர், பாலி ஆகிய தீவு பகுதிகளுக்கு சென்றிருப்பார்கள். ஏன் இன்று நம்மால் காண இயலாத சிறு தீவுகளிலும் கூட குள்ள மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். கைவிடப்பட்ட தீவில் சராசரி மனிதர்கள் நின்றாலே நமக்கு தெரியாத பட்சத்தில், குள்ளர்கள் மட்டும் எப்படி தெரிய வாய்ப்பிருக்கிறது' என்று ஆதாரங்களை திட்டவட்டமாக அறிவித்தார்.

இவரின் கூற்றுகளை ஏற்றுக்கொண்டிருக்கும் உலக ஆராய்ச்சியாளர்கள், குள்ள மனிதர்களை தேடும் ஆய்வில் இறங்கியுள்ளனர். குள்ள மனிதர்களின் வரலாற்றை நன்கறிந்த ஆராய்ச்சியாளர்கள், இந்தோனேஷியாவின் வரலாற்றை திருப்பி பார்த்து, அதன் நில அமைப்புகளை ஆராய்ந்து வருகின்றனர். கடல் மட்டத்தின் ஏற்ற இறக்கத்தில் ஆசிய கண்டத்தில் இருந்து பிரிந்த கண்டங்களை வகைப் படுத்தி, அதன் மூலம் குள்ள இனத்தவரை கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர்.

'ஆசியக் கண்டத்திற்கும், ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருக்கும். அதன் வழியாகவே கற்கால மனிதர்கள் ஆசியக் கண்டத்திலிருந்து, ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு நடந்தே தான் சென்றிருப்பார்கள். அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்திருக்கும்.

அதே நேரத்தில் நிலப் பகுதியும் ஆங்காங்கே உயர்ந்ததால், தொடர்ச்சியாக இருந்த நிலப் பகுதி பல துண்டுகளாக உடைந்ததுடன், கடல் மட்டமும் உயர்ந்ததால் பல தீவுகளாக உருவானது. அதனால் கற்கால மனிதர்களால் தீவை விட்டு வெளியேற இயலாமல் தீவுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இறந்து போயிருப்பார்கள்' என்று குள்ள மனிதர்கள் குறித்து யூகமாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தக் கதைக்கான முழுவடிவம் இன்னும் ஆராய்ச்சிக்குள்தான் இருக்கிறது. குள்ள மனிதர்களுக்கான விடை கிடைக்குமா? என்ற கேள்வியுடன் கண்டங்களையும், தீவுகளையும் உலக ஆராய்ச்சியாளர்கள் புரட்டிப் போட்டு வருகின்றனர்.

புதன், 5 ஏப்ரல், 2017

உயிரியல் வளத்தை பாதுகாத்து சூழல் சமநிலையைப் பேணுவோம்.

வெறுமனே இனம்சார், மதசார், மொழிசார் அரசியலுக்குள் மூழ்கிக்கிடந்து தங்களது உரிமைகளை பாதுகாக்க தெரிந்த சமூகத்துக்கு விலங்குகளின் உரிமைகளையும் அவற்றின் வாழ்விட எல்லைகளையும் பாதுகாக்க தெரியவில்லை..!
இலங்கையின் அனைத்து சரணாலயங்கள், காடுகளின் எல்லைகள், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வேட்டையாடுபவர்கள் போன்றோரின் மீது பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு ஒப்பான சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யத்தவறினால் ஆசியாவின் அறிய உயிரினச்செழுமையும் இயற்கை வளமும் கொண்ட இலங்கையின் தனித்துவம் இழக்கப்படும்.
முடிந்தால் மாகாண சபைகள் இந்தியாவின் அநேக மாநிலங்களில் விதிக்கப்பட்ட#பசுவதை_தடுப்புச்சட்டம்.
காடுகள் மற்றும் இயற்கை சூழல்கள் பாதுகாப்புச்சட்டம்
#பிராணிகள்_வதைத்_தடுப்புச்சட்டம் பல்லுயிர் பெருக்க ஒப்பந்தம். காடுகள் மற்றும் இயற்கை சூழல்கள் பாதுகாப்புச்சட்டம், இது போன்ற சட்டங்களை இயற்றினால் காட்டிலேயாவது விலங்குகள் நிம்மதியாவது உறக்கம் கொள்ளும். பௌத்த விழுமிய நாடாக காட்டிக்கொள்பவர்கள் முதலில் இதை செய்யட்டும்.
மனித குடியேற்றம் என்ற பெயரில் காடுகளை அழித்து விலங்குகளின் இடப்பெயர்வுக்கும் இனஅழிப்புக்கும் நீங்கள் வழிசெய்யாதீர்கள் என்பதே என் தாழ்மையான கருத்து.
இந்த பதிவை பகிர்வதற்கு காரணம்..!
(
மான், மரை இறைச்சி இருக்கண்ணே வேணுமா? வன்னி தேக்கு முதிரை மரக்குத்திகள் இருக்கு வேணுமா? இன்னும் வனவிலங்குகள் பறவைகள் இறைச்சிகளும் விற்பனைக்கு இருக்கு வேணுமா? கட்டக்காலி மாட்டு இறைச்சி வேணுமா? சிறுத்தைத்தோல்,யானைத்தந்தம் வேணுமா?? கடத்தல் ஆட்டிறைச்சி வேணுமா? ஆமை இறைச்சி வேணுமா? வேணுமா? வேணுமா????
சரணாலயங்களின் எல்லை ஒட்டி நடந்து கொண்டிருந்த இந்த சட்ட விரோத செய்திகள் நகர் புறம் வரை எட்டியதால் தான்...)
இந்த பூமியும் வாழ்க்கையும் வெறும் மனிதர்களுக்குதான் என நினைத்து இயற்கையை சிதைத்து மிருங்களை கொன்று புசித்தால் மாத்திரம் உங்கள் வாழ்க்கையும் மத நம்பிக்கைகளும் நிறைவு பெறுவதில்லை. படைப்பில் கடைசியாக படைக்கப்பட்ட மனிதனாக மத நூலில் குறிப்பிட்டிருந்தால் படைப்பை நீ பாதுகாத்து கொள் என்ற வார்த்தைகளையும் கடவுள் உரைத்துள்ளான் என்பதையும் நான் அறிந்துள்ளேன். அழிவின் இறுதியில் உள்ளவற்றை பாதுகாக்க அவைக்கென்ற ஒரு அரசியல்கட்சிகள் வரப்போவதில்லை. பாகுபாடு அற்று அனைவரும் குரல் கொடுப்போம்.

ஆசியாவின் அரிய உயிரியல் பொக்கிஷம் இலங்கை .
இலங்கையின் உயிரியல் வளங்களை பாதுகாப்போம் .
உயிரியல் வளத்தை பாதுகாத்து சூழல் சமநிலையைப் பேணுவோம் .
உயிரியல் வளங்களுக்கு நன்மை செய்யாவிடினும் தீமை செய்ய வேண்டாம் .
சகல உயிரிகளும் மண்ணில் வாழும் உரிமை பெற்றவை .

உலகிலேயே அதிகூடிய இனச்செளுமை கொண்ட நாடு இலங்கையாகும். இது தென்னிந்தியாவில் காணப்படும் தாவர,விலங்கினங்களுடன் தொடர்புபட்ட பற்பல வன சூழல்பிராந்தியங்களுக்கு தாயகமாகும். ஈரத்தன்மை பொருந்தியபருவப்பெயற்சிக்காற்றுகளால் வருடப்படும் இலங்கையின் தென் - மேற்கு பகுதியில் இலங்கை தாழ்நிலப் மழைக்காடுகள்அமைந்துள்ளன. நாட்டின் மத்திய மலைப்பகுதியை நோக்கிச்செல்லும் போது அவை இலங்கை மலைசார்ந்த மழைக்காடுகளாகமாற்றம் பெருகின்றன. இவ்விரு அயணமண்டல ஈரலிப்பு காட்டுப்பிராந்தியங்களும் இந்தியாவின் மேற்கு மலைத்தொடருடன்நெருங்கிய தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன.

இலங்கையின் வனப்பகுதிகள் விவசாயம், மரதொழில், கால்நடை போசனம் போன்றவற்றுகாக பெறுமளவில் அழிக்கப்பட்டுள்ளது. பல காப்பரன்கள் எஞ்சியுள்ள வனப்பிராந்தியங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் முன்றுஉயிரிணமண்டல ஒதுக்கங்கள் உள்ளன.

இலங்கையில் ஆயிரக்கணக்கான விலங்கினங்கள் வாழ்வதுடன், அவற்றில் பல இலங்கை உட்பிரதேசத்துக்குரியவை.
இலங்கையானது பறவை உட்பிரதேச உரிமையின் மையமாக காணப்படுகின்றது. 

இலங்கை தீவின் பரப்பளவுடன் ஒப்பிடுகையில் இங்கு பறவையினங்கள் மிக அதியளவில் காணப்படுகின்றன. 443 பறவையினங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இங்கேயே தங்கி வாழும் பறவைகள் தவிர குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையிலான இடம்பெயர் பறவையினங்கள், தங்கள் வடகோளத்து வாழ்விடங்களின் குளிர் காலத்தைத் தவிர்ப்பதற்காக இலங்கைக்கு வருபவை.

பறவையினங்களில் 233 இலங்கையிலேயே வசிப்பவை, இவற்றுள் 26 உட்பிரதேசத்துக்குரியவை. ஏனையவை இந்திய தலைநிலத்தில் வாழ்பவை, எனினும் அவற்றில் 80க்கு யல்புகளைப் பொறுத்தவரை தொடர்புடைய இந்திய இனங்களிலிருந்து மிகுந்த வேறுபாடுள்ளவையாக உள்ளன.

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்
மண் அரிப்பு  - தற்பொழுது காடுகளின் அழிவின் காரணமாக மண்அரிப்பு தவிர்க்க இயலாத பிரச்சினையாக மாறிவருகிறது. மண் அரிப்பு ஏற்படுவதால் விவசாயம் பெரிதும் பாதிப்பு அடையும். வருடந்தோறும் சுமார் பல ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் மண்அரிமானத்தின் காரணமாக எதுவும் விளையாத வறட்டு நிலமாக மாறிவருகிறது.
பாலைவனங்கள் உருவாதல் - காடுகளின் அழிப்பினால் நிலத்தில் எந்;த உயிரினமும், நுண்ணுயிர்களும் வாழ முடிவதில்லை. மண்ணின் உயிரியல் வளம் அழிவதால் அந்த நிலம் எதற்கும் பயன்படாமலும், எதுவும் விளையாமலும் பாலைவனமாக மாறுகிறது.
மழைபொழிவு பாதிப்பு - மரங்களின் அழிவால் காற்று மண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடின் அளவு  அதிகமாகிவிடுகிறது இதனால் மழை குறைந்து வறட்சி ஏற்படுகிறது.
குறைந்து வரும் மரத்தின் அளவு - தொழில்களுக்குத் தேவைப்படும் மரத்தின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வீட்டு உபயோகப் பொருட்களான நாற்காலி, மேசை, கட்டில், பீரோ போன்றவை செய்யும் தொழில்கள் நலிந்து விட்டன.
வறட்சி -  மழை பொழியும் பகுதிகளில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதால் ஓடைகள் வறண்டு விடுகின்றன. ஆறுகளில் வறட்சிக் காலங்களில் மிகக்குறைந்த அளவே தண்ணீர் இருக்கிறது. இந்தக் காரணங்களினால் வறட்சிக்கு வழி ஏற்பட்டு விடுகிறது.
வண்டல் - மலைகளில் இருந்து அரித்துக்கொண்டு வரப்படும் மண் நீர்த்தேக்கங்களிலும், ஆற்றுப்படுககைகளிலும் குவிக்கப்படுகிறது. மலையில் இருந்து வரும் மழைநீரைத் தடுப்பதற்கு காடுகள் இல்லாத காரணத்தினால் இந்த அவலநிலை ஏற்படுகிறது. ஆகவே வண்டல் மண் தேவையில்லா இடங்களில் சேமிக்கப்பட்டு வீணாகிறது. அதுமட்டும் இல்லாமல்  மின்சக்தியின் தயாரிப்பும் குறைகிறது.
மண்ணின் தன்மையை அழிக்கிறது - காடுகள் மண்ணின் தன்மை கெடாமல் பாதுகாத்து வருகின்றன. காடுகளும் மரங்களும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள மண்ணின் தன்மையை மண்அரிமானம் ஏற்படாமல் காப்பதன் மூலமாக பாதுகாத்து வருகின்றன. காடுகளை அழிப்பதால் மண்அரிமானம் ஏற்படுகிறது இதனால் மண் அதன் தன்மையை இழந்தும் விடுகிறது.
பல்லுயிரின மாறுபாட்டின் இழப்பு- ஒரு தாவரம் அழிக்கப்பட்டால் அதை நம்பி வாழும், அண்டி வாழும் நாலுவகை உயிரினங்களின் அழிவுக்கு காரணமாக அமைந்து விடும். சீனக் காடுகளில் மூங்கில் குருத்துக்களை மட்டுமே சாப்பிட்டு வாழும் பாண்டா கரடிகள் தற்போது அரிதாகிவிட்டன  இதன் காரணம் என்ன ? மூங்கில் காடுகள் அழிக்கப்பட்டு விட்டது தான்.
வேலையில்லாத் திண்டாட்டம் - காடுகளின் அழிப்பினால் காடுகளை நம்பிவாழும் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதனால் இவர்களும் வேலைதேடி நகரத்திற்கு வருகின்றனர். இது வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கிறது.
இந்த உயிர்க்கோளமான பூமிக்குத் தேவையான பிராணவாயுவை உற்பத்தி செய்வது உலகின் 13 நடுகளில் உள்ள காடுகள் தான். அவற்றில் இந்தியாவும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத்தொடர்ச்சிமலை, மற்றும் இமயமலைக்காடுகள் ஆகியவை உலகின் உயிர்க்காற்றை உற்பத்தி செய்வதல் பெரும்;பங்கு வகிக்கின்றன. இந்தக் காடுகளை காப்பாற்றுவதன் மூலமாகத்தான் நாம் வெப்பத்தைக் குறைத்து, வெப்ப உயர்வினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து உயிர்களையும், பயிர்களையும் காப்பாற்ற முடியும்.

தொடரும்.........!

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

வரலாற்றின் மர்மங்கள் - 1

பொதுவாக மர்மங்கள் என்றாலே வெளிநாட்டு விசயங்கள்தான் நம் நாட்டில் வெளியிடப்படும் நூல்களிலும் பக்கங்களை நிரப்புகின்றன. இவற்றில் சில படு-சில்லறைத்தனமானது
என்றாலும் கூட நம் 'ப்ரெஞ்சு பியர்ட்' கிறுக்கல் ஆசாமிகள் அதனை வைத்து ஜல்லியடிக்க தயங்குவதில்லை. ஆனால் நம் பழம் இலக்கியங்கள் கூறும் சில விசயங்களை நாம்
ஆராய்ந்து பார்த்தால் அவை தரும் தரவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சிகளையும் நடத்தினால் எத்தனையோ மர்மங்கள் நம் ஊர்ப்புறங்களில் நமக்காக காத்திருப்பது தெரியும். உலக அளவில் புகழ் பெற்ற மர்மங்களுடன் அவற்றைப்போல (ஒருவேளை அவற்றினை விட முக்கியத்துவம் வாய்ந்த) நம்மூர் மர்மங்களும் கீழே.

அட்லாண்டிஸ்:

கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது 'திமேயஸ்' மற்றும் 'கிரேட்டஸ்' எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த 'லிபியாவும் ஆசியா மைனரும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக' அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார். அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் ஆளுகையில் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச்செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத்தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார். அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால்
(கி.மு.384-322) கற்பனையானவை எனக்கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர்.



அட்லாண்டிஸ் தீவு : நம்பப்பட்ட ஒரு கற்பனை ஊகம்

பிளேட்டோ வின் 'திமேயஸ்' பல மறைஞானக் குழுக்களுக்கு முக்கிய நூல். எனவே அக்குழுக்கள் தம் கோட்பாடுகளை அட்லாண்டிஸில் உருவானவை எனக் கூறுவதுண்டு. எட்கார் கைஸி எனும் அமெரிக்க 'தீர்க்கதரிசி' தம் 'ஞானதிருஷ்டியில்' அட்லாண்டிஸ் அமெரிக்க கடற்கரைகளில் அமிழ்ந்துள்ளதாகக் கூறினார். ஜான்.எம்.ஆலன் எனும் ஆய்வாளர்
தென்-அமெரிக்க ஏரியில் மறைந்த ஒரு தீவும் நாகரிகமும் உள்ளதாகவும் அதுவே அட்லாண்டிஸ் எனவும் கூறுகிறார்.


அட்லாண்டிஸ் தென்னமெரிக்காவில்? : ஒரு நூல்

பொதுவாக வரலாற்று ஆய்வாளர்கள் அட்லாண்டிஸை பிளேட்டோ வின் கற்பனையில் உருவான உருவகக்கதை என்றே கருதுகின்றனர். ஏனெனில் பிளேட்டோ இத்தகைய உருவகக் கதைகள் மூலம் தத்துவக் கோட்பாடுகளை விளக்குவது வழக்கம். ஆனால் அட்லாண்டிஸுக்கு வரலாற்றடிப்படையில் வித்திட்ட நிகழ்ச்சியாக ஆய்வாளர்கள் கி.மு.1620களில் திரா எனும் சிறு தீவு -நிச்சயமாக கண்டம் கிடையாது- எரிமலைச் சீற்றத்தால் அழிந்ததைக் குறிப்பிடுகின்றனர்.


திரா தீவில் கிரேக்க நாகரிகம் செழித்திருந்தது. அங்குள்ள ஓர் வீட்டுச்சுவரில் தீட்டப்பட்ட
ஒவியம்

திரா தீவின் படம்: தீவுக்கூட்டத்திலேயே பெரியதீவுதான்
திரா

இந்த எரிமலைச்சீற்றத்தின் விளைவான சாம்பல் துகள்கள் எகிப்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளக்கமும் கூட அனைத்து
ஆராய்ச்சியாளர்களாலும் ஏற்கப்படவில்லை. அட்லாண்டிஸ் உண்மையா? கற்பனையா? உண்மையெனில் அது எங்கு உள்ளது? என்பவை இன்னமும் மர்மமாகவே உள்ளன.


குமரிக்கண்டம்:


குமரி நிலநீட்சி குறித்த முதல் அறிவியல்பூர்வ விளக்க நூல்

பழந்தமிழ் காவியமான சிலப்பதிகாரம் 'குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' எனக் கூறுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் குமரிமலை குறித்தும், அதிலிருந்து தோன்றிய பஃறுளியாறு குறித்தும், குமரி ஆறு குறித்தும் செய்திகள் உள்ளன. இச்செய்திகள் எத்தனை உண்மையானவை? பல தமிழ் அறிஞர்கள் 'குமரிக்கண்டம்' என்று ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததாகவும் அங்கு தமிழ் நாகரிகம் ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மஞான சபையினர் 'லெமூரியா' எனகடலில் ஆழ்ந்து போன ஒரு நிலப்பரப்பு குறித்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் மூலம், இந்தியாவில் பரவிய லெமூரியாக் கோட்பாடும் குமரிக்கண்டமும் இணைந்த ஒரு சித்தாந்தமாகிற்று. புலவர் குழந்தை, அப்பாதுரை, இரா.மதிவாணன் போன்றவர்கள் குமரிக்கண்ட வரைபடங்களை உருவாக்கினர். மார்க்சிசத்தையும் அதீத கற்பனைகளையும் போலி அறிவியல் தரவுகளையும் இணைத்து குமரிகண்டத்தை ஒரு அரசியல் சித்தாந்தத்தின் பகுதியாக மாற்றிக் கொண்டிருப்பவர் குமரிமைந்தன் என்கிற 'ஆராய்ச்சியாளர்'. ஜெயமோகனின் கற்பனை நாவலான 'கொற்றவை' இந்த குமரிகண்டத்தின் அடிப்படையில் அமைந்தது. குமரி கண்ட இயக்கத்தினர் இந்த கற்பனை புனைவை ஏறத்தாழ மதரீதியிலான இறுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வரலாற்று ஆவணமாகவே எடுத்துக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. புகழ்பெற்ற நிலவியல் ஆய்வாளரான சு.கி.ஜெயகரன் அண்மையில் வெளியான தமது 'குமரி நிலநீட்சி' எனும் நூலில் இத்தகைய
கற்பனைகள் 'கவித்துவ சுதந்திரத்துடன்' அதீத தமிழ் பற்றினால் உருவாக்கப்பட்டவையென்பதுடன் இவற்றிற்கு அறிவியல் அடிப்படை எதுவும் இல்லையெனக் காட்டுகிறார். எனில் கடல் கொண்ட குமரிக் கோடு என்பது வெறும் கற்பனைதானா? நிலவியல், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி, இலக்கிய ஆதாரங்கள் மற்றும் தொல்மானுடவியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு யதார்த்த நிலைப்பாட்டினைத் தன் முடிவாக தருகிறார் ஜெயகரன். வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் தமிழகம்-இலங்கை கடற்கரைகளை ஒட்டியிருந்து பின்னர் கடலில் மூழ்கிய நிலப்பரப்புகளே குமரி எனும் நிலநீட்சி குறித்த மரபின் வித்தாகும் எனக்கருதும் ஜெயகரன் அவ்வாறு கடல் நீர்மட்ட உயர்வில் உயிர்தப்பியவர்களிடமிருந்து குமரி நிலநீட்சி குறித்த நினைவு இன்றும் நம்மிடம் நிலவுவதாகக் கூறுகிறார். குமரி மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களான முட்டம் போன்ற இடங்களில் அண்மைக்கால நினைவுகளில் கூட கடல் கொண்ட நிலப்பரப்பு குறித்த விவரணைகள் நிலவுகின்றன. நிச்சயமாக எனில் தொல்பழம் மானுடக்குடியேற்ற எச்சங்கள் இன்றும் தென்னக ஆழ்கடலில் - நாம் கண்டடையக் காத்தபடி - துயில் கொண்டிருக்கக் கூடுமா? இனிவரும் நாட்களில் தென்னகக் கடல்களில் ஆழ்கடல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால் அது இம்மர்மங்களுக்கு விடை பகரக் கூடும்.

துவாரகை:
அகழ்வாய்வின் வரலாற்றில் ஹோமரின் எலியட் காவியத்தில் கூறப்பட்ட டிராய் நகரினை ஜெர்மானிய அகழ்வாய்வாளர் ஹென்ரிச் ஷிலைமான் கண்டுபிடித்தது மிக முக்கிய
மைல்கல்லாகக் கூறப்படுகிறது.


துவாரகை இப்படி இருந்திருக்குமா? இதிகாச விவரணங்கள் அடிப்படையில் ஒரு கற்பனை

ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ராவ்
ஆனால் அதனையொத்த மற்றொரு கண்டுபிடிப்பு டாக்டர்.எஸ்.ஆர் ராவ் எனும் இந்திய அகழ்வாராய்ச்சியாளர் ஆழ்கடலில் துயில் கொண்ட ஒரு நகரத்தைக் கண்டுபிடித்ததாகும். 3700 ஆண்டுகள் இன்றைக்கு முந்திய (இ.மு) காலத்தினைச் சார்ந்த இந்த ஆழ்கடல் நகரத்தை டாக்டர்.எஸ்.ஆர்.ராவ் கண்டுபிடித்தது பழம் காவியமான மகாபாரதத்தில் கூறப்பட்ட விவரணங்களின் அடிப்படையில் என்பதுதான் அதிசயமான விஷயம். இதனையொட்டி பல கேள்விகள் எழுந்துள்ளன.சில வரலாற்றறிஞர்கள் இதுதான் மகாபாரதம் கூறும் துவாரகை என்பதை மறுக்கின்றனர். ஆனால் ராவ் தாம் கண்டெடுத்த முத்திரைகள் மற்றும் சுவர்கள் ஆகியவை மகாபாரத விவரணத்தை பெருமளவு ஒத்திருப்பதைக் காட்டுகிறார்.

துவாரகையில் மூழ்கி நிற்கும் பழம் சுவர்
இந்திய வரலாற்றுப் பாடநூல்களில் இந்திய இதிகாசங்களுக்கு வரலாற்று அடிப்படையில்லையெனக் கற்றுத்தரப்படுகிறது. இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றாசிரியர்களின் நிலைப்பாட்டினைத் 'துவாரகை' கண்டுபிடிப்பு சங்கடத்துக்குள்ளாக்கியுள்ளது. ராவ் தம் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மகாபாரத நிகழ்ச்சிகளை இ.மு. 3500க்கு கொண்டு செல்கிறார்.

ஆழ்கடலில் அகழ்வாராய்ச்சி : துவாரகை
இது துவாபார யுகத்தில் மகாபாரதம் நடந்ததாகக் கூறும் மரபாளர்களைச் சங்கடப்படுத்துகிறது. இந்த ஆழ்கடலுக்குள் இருக்கும் பழமையான நகரம்தான் துவாரகையா?
இல்லையெனில் இந்த நகரம் எவ்வாறு மகாபாரத துவாரகை விவரணத்தை வெகுவாக ஒத்திருக்கிறது? ஆமெனில் துவாரகாதிபதி ஸ்ரீ கிருஷ்ணன் ஒரு வரலாற்று நாயகனா?
(அகழ்வாராய்ச்சி மூலம் பல்லாயிரமாண்டுகள் முன் வாழ்ந்ததாகக் கூறப்படும் தனிமனிதர்களுக்கானச் சான்றுகளை கண்டெடுப்பது இயலாத விஷயம்.) இம்மர்மங்களுக்கான விடைகளைத் தன்னுள் கொண்டு ஆர்ப்பரிக்கும் அலைகளுடன், ஆராய்ச்சியாளர்களை அழைக்கிறது இந்தியாவின் வடமேற்கு கடற்கரை.


பூம்புகார்/காவிரிப்பூம்பட்டினம்:


காவிரிப்பூம்பட்டினத்தில் அகழ்வாராய்ச்சியில் காணப்பட்ட அமைப்புகளை ஓவியர் கற்பனையில் முழுமையாக வரைந்துள்ளார்

தமிழ் காவியமான மணிமேகலை காவிரிபூம்பட்டினத்தின் அழிவினைக் குறித்து பேசுகிறது. மகனை இழந்த சோகத்தில் சோழமன்னன் இந்திர விழா நடத்த மறந்தமையால் ஏற்பட்ட கடல் சீற்ற அழிவாக அது கூறப்படுகிறது. பட்டினப்பாலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் இந்நகரம் பெரும் துறைமுக நகரமாக பேசப்படுகிறது. சுங்க அலுவலகம், மரக்கலங்கள் கொணரும் கொண்டு செல்லும் பொருட்களில் புலி முத்திரை பதித்தல் ஆகிய செயல்கள் அந்நகரில் நடைபெற்றமையையும், பல்வேறு தேசத்திலிருந்தும் நல்ல பண்பாடு கொண்ட மக்கள் அங்கு ஒருவரோடொருவர் பழகியதையும், கள் சாலைகள் முதல் கருத்துகளை விவாதிக்கும் மண்டபங்கள் வரை மனிதரின் அத்தனை தேவைகளும் பூர்த்தி செய்யும் அமைப்புகளைக் கொண்ட பெரும்நகராக அது விளங்கியதையும் அறிகிறோம்.

பூம்புகார்: பழமையான செங்கல் அமைப்பு : நன்றி NIOT
1960களிலும் 1980களிலும் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆய்வுகள் இந்த பெரும் துறைமுக நகரினைக் கடல் அழித்தது உண்மையாக இருக்கும் என்பதனைக் காட்டியுள்ளன. தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சி மையம் (NIOT) நடத்திய அகழ்வாய்வுகள் சங்க காலம் சார்ந்த பல அமைப்புகளை, (செங்கல் அமைப்புகள், சுற்றுசுவர் போன்றவற்றினை) வெளிக்கொணர்ந்துள்ளன. எஸ்.ஆர்.ராவ் போன்ற அகில இந்திய முன்னணி ஆராய்ச்சியாளர்கள் இங்கு அகழ்வாராய்ச்சியின் மூலம் இப்பழமையான நகரம் இருந்ததையும் அது அழிந்ததையும் கூறியுள்ளனர். 1960களிலும் 1980களிலும் நடத்தப்பட்ட முயற்சிகளுக்கு பிறகு 2006 இல் தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி மையம் (NIOT) ஸோனார் ஸ்கேனை நடத்தியுள்ளது. இந்த தொடக்க கட்ட ஆய்வு இன்றைய கரைக்கு இரண்டு கிமீ தூரத்தில் 14-20 மீட்டர் ஆழத்தில் சில அமைப்புகளை காட்டியுள்ளது. ஒரு இயற்கை பேரிடர் நிகழ்ச்சி மணிமேகலையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது திண்ணம். இன்று அதன் எச்சங்களை நாம் அகழ்வாராய்ச்சியின் மூலம் அறிகிறோம். இனிவரும் காலங்களில் மணிமேகலை, சிலப்பதிகார நிகழ்வுகளின் காலத்தையும் அது தொடர்பான இதர வரலாற்று உண்மைகளையும் பாரத அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் நமக்கு மீட்டுத்தருவர் என நம்பலாம்.


ஆழ்கடல் அகழ்வாராய்ச்ச்஢யில் கண்ட வட்டவடிவ அமைப்புகள்: பூம்புகார் அகழ்வாராய்ச்சி நன்றி: NIOT



சிந்து சமவெளி நாகரிகம்:


1920களில் இந்திய அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு சர் ஜான் மார்ஷலால் பிரபலப்படுத்தப்பட்ட இந்நாகரிகம் இன்றைக்கும் தன் மர்மங்களை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. ஒவ்வொரு அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பும் நம் அறிதலை ஆழமாக்கியுள்ளது என்ற போதிலும். இ.மு. 5000 வருடங்களையும் விடப் பழமையான இந்நாகரிகக்தை உருவாக்கியவர்கள் யார்? இந்நாகரிகத்தவர்கள் எங்கு சென்றார்கள்? இந்த நாகரிகம் எவ்வாறு அழிந்தது? உண்மையில் அழிந்ததா அல்லது இன்னமும் வாழ்கிறதா? எனும் கேள்விகள் இன்றைக்கும் உயிர் வாழ்கின்றன. இது ஆரியர் வருகைக்கு முந்தைய இப்பூர்விக நாகரிகம், ஆரியப் படையெடுப்பால் அழிந்ததாக, அகழ்வாய்வாளரான மார்ட்டிமோர் வீலர் கூறினார். பின்னாட்களில் டேல்ஸ், ஜிம் ஷாஃபர், ஜோனதன் கென்னோயர் போன்ற புகழ்பெற்ற அகழ்வாய்வாளர்கள் ஆரியப் படையெடுப்புச் சித்தாந்ததை மறுத்துவிட்டனர். மாறாக இயற்கை அழிவுகளை இந்த நாகரிகத்தின் நகரங்கள் அழிவதற்குக் காரணமாகக் கூறுகின்றனர்.

படையெடுப்பு படுகொலை பொய் என நிரூபித்த டேல்ஸ்

செயற்கைக்கோள்கள் பாலைவனத்தில் புதைந்த ஒரு பழம் நதியைக் காட்டியுள்ளன. அறிவியலாளர் யஷ்பால் இது இந்திய வேதங்களில் கூறப்படும் சரஸ்வதியாக இருக்கலாம் எனக்கருதுகிறார். பல சிந்து சமவெளி நாகரிக மையங்கள் இந்நதியருகே உருவாகியுள்ளன. எனவே இந்நதி வறண்டது காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இம்மக்களின் பண்பாடு வேதங்களில் கூறப்பட்ட பண்பாட்டினை ஒத்திருப்பதை அகழ்வாராய்ச்சியாளர் பிஷ்ட் சுட்டிக்காட்டுகிறார்.

தோலவிரா அகழ்வாராய்ச்சியை ஏற்று நடத்திய பிஷ்ட்
தோலவிரா எனும் ஹரப்பா பண்பாட்டு நகரினை அகழ்வாராய்ச்சி செய்த பிஷ்ட் நகர அமைப்புகள் 'ரிக்வேத பண்பாட்டின் virtual reality' ஆக அவை அமைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்த மையத்தின் நீர் சேகரிப்பு அமைப்புகள் சிறப்பானவை என்பதுடன் இங்கே மிகப்பெரிய ஹரப்பா சின்னங்களுடனான 'பெயர் பலகை' ஒன்றும் கிடைத்துள்ளது. சரஸ்வதி நதி குறித்து வரலாற்றாசிரியர்கள் அனைவரும் இதை ஏற்பதில்லை. வானவியலாளர் ராஜேஷ் கோச்சர் வறண்ட நதியினை சரஸ்வதியுடன் ஒப்பிடுவதை மறுக்கிறார்.

இந்நாகரிகத்தின் சித்திர எழுத்துகள் இன்னமும் விடுவிக்கப்படாத புதிராகவே உள்ளன. இதில் இருபது வருடங்களுக்கும் மேலாக ஆழ்ந்து ஆராய்ந்துள்ள ஐராவதம் மகாதேவன் இவை தொல்-திராவிட பொதுமொழிக்கூறுகள் கொண்டவை என்கிறார். எஸ்.ர்.ராவோ இவை தொல்-இந்தோ-ஐரோப்பிய குடும்பத்தைச் சார்ந்தவையாக இருக்கலாம் என கருதுகிறார். சிந்து-சமவெளிச் சமுதாயம் வேத-நாகரிகமும் திராவிடத்தன்மை வாய்ந்த மொழியும் கொண்டதாக இருந்திருக்கலாம் எனக் கருதும் மகாதேவன் புகழ் பெற்ற ஒற்றைக்காளை முத்திரையை ரிக்வேதத்தில் கூறப்படும் சோம பானச் சடங்குடன் தொடர்புபடுத்துகிறார். எதுவானாலும் சிந்துசமவெளி நாகரிகத்தின் மர்மங்களை முடிச்சவிழ்க்க மிக அடிப்படையான தேவை இன்னமும் மர்மமாகவே இருக்கும் சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படும் சித்திர எழுத்துக்களின் பொருளை அறிவதுதான். மைக்கேல் விட்ஸல் என்கிற இந்தியவியலாளரும், ஸ்டீவ் ஃபார்மர் என்கிற அமெச்சூர் மொழியியலாளரும் அண்மையில் இவை எழுத்துக்களே இல்லை என கூறினர். இதனை சிந்து சமவெளி நாகரிக ஆராய்ச்சியிலேயே தோய்ந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களும் மொழியியலாளர்களும் கடுமையாக மறுக்கின்றனர். பேராசிரியர் சுபாஷ் காக் ஹரப்பா பண்பாட்டு சித்திர எழுத்துக்களின் சில முக்கியக் குறியீடுகளை அவற்றினை ஒத்த வடிவங்கள் கொண்ட பிராமி எழுத்துக்களுடன் அவற்றின் அடுக்கு-நிகழ்வினை (frequency) ஆராய்ந்து அவை ஒத்துப்போவதை சுட்டிக்காட்டியுள்ளார். ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மர்மங்களை தன்னுள் அடக்கியபடி அகழ்வாராய்ச்சிகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறது சிந்து சமவெளி நாகரிகம்.


தோலவிரா: அகழ்வாராய்ச்சியாளர் பிஷ்ட் மேற்பார்வையில் செய்யப்பட்ட கணினி மீள் உருவாக்கம்



தோலவிரா 'பெயர் பலகை' இப்படித்தான் இருந்திருக்குமா சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்?


நாஸ்கா கோடுகள்: 


நாஸ்கா கோடுகள் : நன்றி: நேசனல் ஜியாகிராபிக்

தென்-அமெரிக்காவின் பெரு நாட்டு பாலை பிரதேசங்களில் வரையப்பட்டிருக்கும் பெரும் வரி வடிவங்களே நாஸ்கா கோடுகள் என அழைக்கப்படுகின்றன. 2000 வருடங்களுக்கு நாஸ்கா கலாச்சாரத்தினரால் உருவாக்கப்பட்ட 70 வரிச்சித்திரங்கள் இவை. 360 அடி (110 மீட்டர்கள்) நீளமுடைய குரங்கு வடிவம், திமிங்கிலம் (65 மீட்டர்கள்), காண்டார் பறவை (135 மீட்டர்கள்), ஹம்மிங் பறவை (50 metres), பெலிக்கன் (285 மீட்டர்கள்), சிலந்தி (46 மீட்டர்கள்) ஆகியவை உலகப் பிரசித்தி பெற்றவை. 1920 களில் இவை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இவை பாலைப்பகுதிகளில் இத்தனை சிரமமெடுத்து இவ்வடிவங்கள் வரையப்பட்டிருப்பதன் காரணங்கள் விவாதிக்கபடுகின்றன. எரிக் வான் டானிக்கன் போன்ற போலி-ஆராய்ச்சியாளர்கள் இவை வெளிக்கிரகவாசிகளின் விண்கலங்கள் இறங்க உருவாக்கப்பட்டவை என கருதுகின்றனர். பரபரப்பூட்டும் இத்தகைய விவரணங்கள் அளிக்கும் வர்த்தக வெற்றியால் இந்த அடிமுட்டாள்தனமான 'விளக்கங்கள்' புத்தகங்களாக வெளிவருகின்றன. இத்தகைய அதீத கற்பனைக் காரணங்களை பொதுவாக கறாரான அறிவியல் பார்வை கொண்ட ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர். விமானங்களிலிருந்தே முழு வடிவமும் புலப்படும் படியாக உருவாக்கப்பட்ட இந்த வடிவங்கள் ஏன் உருவாக்கப்பட்டன? மாரியா ரெய்ச்சே (Maria Reiche) பல்லாண்டுகள் இத்தரை வரைவுச் சித்திரங்களை ஆராய்ந்த ஜெர்மானிய ஆய்வாளர்.


நாஸ்கா நில வரைபடங்களை ஆராய வாழ்வினை செலவிட்டமாரியா ரெய்ச்சே

ஒருவேளை வானியல் நிகழ்வுகளான விண்மீன்கள் மற்றும் கிரகங்களின் இயக்கப்பாதைகளைப் பல்லாண்டுகளாக கண்காணித்து அதனடிப்படையில் ஒரு பெரும் வானியல் நாள்காட்டியாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என அவர் கருதுகிறார். 1967, இல் இவ்வடிப்படையில் ஆய்வினை மேற்கொண்ட ஜெரால்ட் ஹாவ்கின்ஸ் எனும் வானியல் ஆய்வாளர் இதற்கு எந்த சான்றுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜிம் வுட்மேன் எனும் அமெரிக்கர் இன்னமும் விசித்திரமான ஒரு கருத்தை தெரிவித்தார். ஒருவேளை நாஸ்கா புதிரை உருவாக்கிய பழம் அமெரிக்க நாகரிகம் பறப்பதைக் கண்டுபிடித்திருக்கலாம் எனக் கருதும் இவர் பூர்விக நாஸ்காவாசிகளுக்கு கிடைத்திருந்த பருத்தியால் உருவாக்கிய பலூனில் புகையை அடைத்து 300 அடிகளுக்கும் மேல் பறந்து தம் கருத்து சாத்தியமானது என்றும் காட்டினார். இவருடன் இணைந்து இதனை நிகழ்த்திக்காட்டியவர் பலூன்களில் பறப்பதில் பல சாதனைகளைப் படைத்த ஜூலியன் நாட் என்பவர். ஆனால் நடக்கமுடிந்தவை எல்லாம் நடந்திருக்க வேண்டியதில்லை. குறிப்பாக இத்தகைய பலூன்களைக் குறித்து வேறு புறச்சான்றுகள் ஏதுமில்லை. என்ற போதிலும் ஒரு கருதுகோளின் சாத்தியதையை ஆராய வெகு துணிச்சலான முயற்சிதான் இது.

இந்த ஓடம் மிதக்குறதே கஷ்டம் பறக்குமாக்கும்?

இது பறக்குமான்னா கேக்கிறே? பறந்துடுச்சே!

நன்றி: www.nott.com

மசசூட்ஸ் மனிதவியல் பேராசிரியர் டொனால்ட். ப்ரோலக்ஸ் (Donald Proulx) டேவிட் ஜான்ஸன் எனும் பள்ளி ஆசிரியருடன் இணைந்து இதற்கு வேறு ஒரு விளக்கம் கொடுக்கிறார். இத்தரைவரைப்படங்கள் நிலத்தடி நீருடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அவர் கருதுகிறார். நேஷனல் ஜியாக்ராபிக் உதவியுடன் ஜான்சனால் உருவாக்கப்பட்ட இந்த கருதுகோள் நிலவியலாளர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள் என பல்துறை நிபுணர் குழுவால் 1998 இல் ஆராயப்பட்டது. சில நாஸ்கா வரைப்படங்களாவது நிலத்தடி நீரோட்டங்களின் பாதைகளை ஒட்டி அமைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நாஸ்கா வரிகள் - வானில் மிதக்கும் ஆற்றலை அடைந்த ஒரு பூர்விக நாகரிகம் உருவாக்கியவையா? கற்பனையாற்றல் கொண்ட ஒரு தரைவாழ் சமுதாயத்தின் விசித்திரச் சடங்கின் விளைவா? நிலத்தடி நீரோட்ட பாதையை அறிந்து அதை திறம்பட பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட கருவியா? இரவு வானை தரையில் பிரதிபலிக்கும் விசித்திர நாட்காட்டியா? நாஸ்கா கோடுகளின் மர்மங்கள் இன்னமும் தெளிவுபடாத வரலாற்றுப்புதிராகவே உள்ளது.

படங்களும் ஆதாரங்களும் தொடரும்...