வெள்ளி, 16 ஜூன், 2017

பாம்பு: அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள்! - கடிவாங்கியவனின் தேடல்

மலையேறிட்டு வந்து புல்லு தடுக்கி விழுந்து செத்தவன்ட கதை கேள்விபட்டிருப்பீங்க.. அதான் இப்போ நம்ம வாழ்க்க.. காடு மலையெல்லாம் போய் பாம்பு கூட செல்பி எடுத்து பாம்புக்கே படம் எடுத்திட்டு இப்போ.. பாம்பாட்டிட பல்லு புடுங்காத கருநாகத்திட்ட கடிவாங்கினத எப்படி மறக்க முடியும். கடிச்சதும் சத்தி எடுத்தவன பாத்து இருப்பீங்க. சிரிச்சவன பாத்து இருக்கீங்கள.. அதான்யா நம்ம பாடு. சூட்டிங்கில நடந்த சோகம் கமெடி கலந்த மரண சமாச்சாரம். எதையும் பொசிட்டிவா எடுக்கனும் என்டு என்ர அப்பா சொல்லி இருக்காரு.. சோ.....!! பாம்பு கடிச்ச வலியும் 5 நாள் அவசர சிகிச்சை பிரிவுல படுத்ததையும் மறந்திட்டு அரவத்த பத்தி கொஞ்சம் படிக்கலாம் வாங்க.

பாம்புன்னு எடுத்துக்கிட்டோமுன்னா, நம்மள்ல நெறைய பேருக்கு நல்லா தெரிஞ்ச, பிரபலமான(?) ஒரு பாம்புன்னா அது நல்ல பாம்பு/ராஜ நாகம் அப்படீன்னு சொல்லலாம். நல்ல பாம்பு நான் சில முறை பார்த்தப்போ, அது என்னவோ நம்மள நல்லா உத்து பார்க்குது போலிருக்கு அப்படீன்னுதான் எனக்குத் தோனும்!

ஆக, பாம்புக்கு கண்கள் இருக்கு. அது நல்லாவும் பார்க்கிற மாதிரி நமக்குத் தோனுது(?). பாம்பைப்பத்தின இன்னொரு சந்தேகம், பாம்புக்கு காது இருக்கா? எனக்குத் தெரிஞ்சவரைக்கும் “பாம்பின்கால் பாம்பறியும்” அப்படீன்னு ஒரு பழமொழிதான் இருக்கேத் தவிர கண்ணுக்குத் தெரியுற மாதிரி பாம்புக்கு காது/கால் இதெல்லாம் இல்லைன்னுதான் நெனைக்கிறேன்!

அடுத்த சந்தேகம், பாம்புக்கு மூக்கு இருக்குதா? யாராவது பார்த்து/கேள்விப்பட்டு இருக்கீங்களா?
கண்டிப்பா எனக்குத் தெரியாதுப்பா! சரி, நம்மளுக்குத் தெரியாதுங்கிறதுக்காக பாம்புக்கு காது/மூக்கு இருக்கு/இல்லைன்னு அர்த்தமில்ல. இல்லீங்களா? அப்படீன்னா, உண்மைதான் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னதான் பதில்?

பாம்பின் மூக்கு

கேள்வி: பாம்புகளுக்கு கண்கள் உண்டா?
பதில்: உண்டு. ஆனால் சில பாம்புகளை (நல்ல பாம்பு போன்றவை) தவிர மற்றவைக்கு நன்கு பார்க்கும் திறன் இல்லை!

கேள்வி: பாம்புகளுக்கு காதுகள் இருக்கின்றனவா?
பதில்: உண்டு. ஆனால், அவை தலையினுள் இருப்பதால் வெளியில் தெரிவதில்லை!
கேள்வி: பாம்புகளுக்கு மூக்கு இருக்கிறதா?
பதில்: உண்டு. ஆனால், பாம்புகளின் மூக்கு நமக்கு இருப்பவை போல கண்களுக்கு இடையில் அல்ல. பாம்புகளின் மூக்கு என்பது ஆங்கிலத்தில் ஜேக்கப்சன்ஸ் ஆர்கன் (Jacobson’s organ) என்றழைக்கப்படுகிறது. இந்தப் பகுதி வாயின் மேற்புறத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!


விளக்கம்: பகல் நேரத்தில் இரையை வேட்டையாடும் பழக்கமுள்ள சில பாம்புகளைத்தவிர மற்ற எல்லாப் பாம்பினங்களுக்கும், தெளிவான பார்வைத் திறன் இல்லை.அவை வடிவங்களைப் பார்க்க முடியுமே தவிர விவரங்களை அல்ல! இதன் காரணம், பாம்புகளின் பரிணாம நிலையான பொந்துகளில், இருட்டில் வாழும் தன்மையே. ஏனென்றால் இருட்டில் பார்வைக்கான அவசியம் மிகக் குறைவு என்பதால்!

Pit vipers  எனும் வகையைச் சேர்ந்த பாம்புகள், இரவினில் நன்கு பார்ப்பதற்கான ஒரு பிரத்தியேகத் திறனைக் கொண்டவை!  அதாவது, இவ்வகைப் பாம்புகளின் தலையின் இருபுறமும் இருக்கும் குழிகள் (Pits) வெப்பத்தை (இன்ஃப்ரா ரெட், Infra red) உணரும் சக்தி படைத்தவை. இந்தக் குழிகள் (கண்களல்ல) இவ்வகைப்பாம்புகளின் மூளைக்கு இரையின்(விலங்கின்) வடிவங்களை அனுப்பும் சக்தி கொண்டவை என்கிறார்கள் ஆய்வாளர்கள். யப்பா….!!
அந்த அதிசயத்த, கீழே இருக்குற அற்புதமான இந்தக் காணொளியில நீங்களே பாருங்க……

நல்ல பாம்பினைப் பற்றிய ஒரு சுவாரசியமான(?) தகவல் என்னன்னா, அதோட கண்கள் எதிரியின் கண்களை குறி பார்த்து தன் விஷத்தைக் கக்கும்(செலுத்தும்) திறன் கொண்டவை என்பதுதான்! அதுமட்டுமில்லாம, தன்னோட விஷம் எதிரி யோட (மனுசனும்) கண்களைக் குருடாக்கிவிடும் என்பது நல்லாத் தெரியுமாம் நல்ல பாம்பிற்கு! அதுசரி,  நல்ல பாம்புங்க நம்ம வடிவேல் மாதிரி “எதையுமே ப்ளான் பண்ணிதான் பண்ணனுமுன்னு” கெளம்பி இருக்குங்க போலிருக்கு!? எதுக்கும் நாம ஜாக்கிறதையா இருந்துக்குவோம் சாமீ…!

ராஜ நாகத்தைப் பத்தின ஒரு அட்டகாசமான காணொளிய கீழே பாருங்க……

பாம்புகளுக்கு வெளிப்படையான, பெரிய காதுகள் இல்லைன்னாலும் தலைக்கு உள்ளே கேட்கும் திறனுள்ள காதுகள்(?) இருக்கு. அதனால, காற்றில் எழும் பல அதிர்வுகளை  துள்ளியமாக உணரும் திறன் படைத்தவையாம் பாம்புகள்! இன்னொரு சுவாரசியமான விஷயம், பாம்புகள் ஏற்படுத்தும் மிகப் பிரபலமான(?) “உஸ்ஸ்ஸ்ஸ்…..” அப்படீங்கிற சத்தம். இந்த சத்தத்தை பாம்புகள் ஏற்படுவதற்கான காரணம், பிற விலங்கு/எதிரிகளை எச்சரிக்கை செய்வதற்க்காகவே!
ஒரு பாம்பு எந்த அளவுக்கு “உஸ்ஸ்ஸுங்கும்னு” நீங்களே பாருங்க…..

பாம்புகளுக்கு சிறந்த பார்க்கும்/கேட்கும் திறன் இல்லாததை சரிப்படுத்தும் விதமாக இயற்கை (இறைவன்?) பாம்புகளுக்கு, மிகச்சிறந்த நுகரும் திறனை அளித்திருக்கிறது. ஆக, தங்களின் ஜேக்கப்சன்ஸ் ஆர்கனினால் பாம்புகள் மிகத்துள்ளியமாக நாற்றங்களை உணர்ந்து தங்களின் இரையை தேர்ந்தெடுக்கின்றன/காத்துக்கொள்கின்றன!

“பிளவுபட்ட நாக்கு”

பாம்புகளைப் பற்றிய இத்தகவல்கள் எல்லாத்தையும் விட மிக சுவாரசியமான, பாம்புகள்னாலே நமக்கெல்லாம் நியாபகத்துக்க்கு வர்ற ஒரு விஷயம் இருக்கு. அது என்னன்னு தெரியுமா உங்களுக்கு? கண்டிப்பா உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நம்பறேன். அதுக்கும், பாம்புகளோட நுகரும் தன்மைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கு!  அது  வேற ஒன்னுமில்லீங்க, பொதுவா பாம்புகள் தங்களோட நாக்கினை வெளியில் நீட்டி பின் சட்டென்று உள்ளிழுத்துக்கொள்வதை நாம் எல்லாரும் பார்த்திருப்போம். அது எதுக்குன்னு தெரியுமா உங்களுக்கு?

பாம்புகளின் நாக்கு பிளவுபட்டது போன்றிருக்கும். அந்த நாக்கினை வெளியில் சுழற்றும்போது பாம்புகள், காற்றில் உள்ள நாற்றத் துகள்களை உள்ளிழுத்துக்கொள்கின்றன. பிளவுபட்டது போன்ற நாக்கின் இரு புறங்களும் ஜேக்கப்சன்ஸ் ஆர்கனின் இரு துவாரங்களில் மாட்டிக்கொண்டு விடுகின்றனவாம். பின் நாற்றத்தின் தன்மையை உணர்ந்துகொள்ளுமான் பாம்பு! அடேங்கப்பா….!
படிச்சிட்டாப் புரிஞ்சிடுமா என்ன? அதனால இந்தக் காணொளியில பாருங்க…..

பாம்புகள் தங்கள் இரையை எப்படி தாக்கி, பின் அவற்றைத்க் தங்களின் உணவாக்கிக் கொள்கின்றன என்பதை மிகத்துள்ளியமாகக் காட்டும் இந்த அற்புதமான காணொளியையும் பாருங்க…… நம்பவே முடியலைங்க என்னால!!

என்னங்க, அசந்துபோய் உக்காந்துட்டீங்க? இதுக்கே இப்படின்னா, இன்னும் வரப்போற பாம்புகள் பத்தின காணொளிப்பதிவுகளப் பார்த்துட்டு என்ன செய்வீங்கன்னு தெரியலையே? சரி, பொறுத்திருந்து பார்ப்போம்!