புதன், 5 ஏப்ரல், 2017

உயிரியல் வளத்தை பாதுகாத்து சூழல் சமநிலையைப் பேணுவோம்.

வெறுமனே இனம்சார், மதசார், மொழிசார் அரசியலுக்குள் மூழ்கிக்கிடந்து தங்களது உரிமைகளை பாதுகாக்க தெரிந்த சமூகத்துக்கு விலங்குகளின் உரிமைகளையும் அவற்றின் வாழ்விட எல்லைகளையும் பாதுகாக்க தெரியவில்லை..!
இலங்கையின் அனைத்து சரணாலயங்கள், காடுகளின் எல்லைகள், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வேட்டையாடுபவர்கள் போன்றோரின் மீது பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு ஒப்பான சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யத்தவறினால் ஆசியாவின் அறிய உயிரினச்செழுமையும் இயற்கை வளமும் கொண்ட இலங்கையின் தனித்துவம் இழக்கப்படும்.
முடிந்தால் மாகாண சபைகள் இந்தியாவின் அநேக மாநிலங்களில் விதிக்கப்பட்ட#பசுவதை_தடுப்புச்சட்டம்.
காடுகள் மற்றும் இயற்கை சூழல்கள் பாதுகாப்புச்சட்டம்
#பிராணிகள்_வதைத்_தடுப்புச்சட்டம் பல்லுயிர் பெருக்க ஒப்பந்தம். காடுகள் மற்றும் இயற்கை சூழல்கள் பாதுகாப்புச்சட்டம், இது போன்ற சட்டங்களை இயற்றினால் காட்டிலேயாவது விலங்குகள் நிம்மதியாவது உறக்கம் கொள்ளும். பௌத்த விழுமிய நாடாக காட்டிக்கொள்பவர்கள் முதலில் இதை செய்யட்டும்.
மனித குடியேற்றம் என்ற பெயரில் காடுகளை அழித்து விலங்குகளின் இடப்பெயர்வுக்கும் இனஅழிப்புக்கும் நீங்கள் வழிசெய்யாதீர்கள் என்பதே என் தாழ்மையான கருத்து.
இந்த பதிவை பகிர்வதற்கு காரணம்..!
(
மான், மரை இறைச்சி இருக்கண்ணே வேணுமா? வன்னி தேக்கு முதிரை மரக்குத்திகள் இருக்கு வேணுமா? இன்னும் வனவிலங்குகள் பறவைகள் இறைச்சிகளும் விற்பனைக்கு இருக்கு வேணுமா? கட்டக்காலி மாட்டு இறைச்சி வேணுமா? சிறுத்தைத்தோல்,யானைத்தந்தம் வேணுமா?? கடத்தல் ஆட்டிறைச்சி வேணுமா? ஆமை இறைச்சி வேணுமா? வேணுமா? வேணுமா????
சரணாலயங்களின் எல்லை ஒட்டி நடந்து கொண்டிருந்த இந்த சட்ட விரோத செய்திகள் நகர் புறம் வரை எட்டியதால் தான்...)
இந்த பூமியும் வாழ்க்கையும் வெறும் மனிதர்களுக்குதான் என நினைத்து இயற்கையை சிதைத்து மிருங்களை கொன்று புசித்தால் மாத்திரம் உங்கள் வாழ்க்கையும் மத நம்பிக்கைகளும் நிறைவு பெறுவதில்லை. படைப்பில் கடைசியாக படைக்கப்பட்ட மனிதனாக மத நூலில் குறிப்பிட்டிருந்தால் படைப்பை நீ பாதுகாத்து கொள் என்ற வார்த்தைகளையும் கடவுள் உரைத்துள்ளான் என்பதையும் நான் அறிந்துள்ளேன். அழிவின் இறுதியில் உள்ளவற்றை பாதுகாக்க அவைக்கென்ற ஒரு அரசியல்கட்சிகள் வரப்போவதில்லை. பாகுபாடு அற்று அனைவரும் குரல் கொடுப்போம்.

ஆசியாவின் அரிய உயிரியல் பொக்கிஷம் இலங்கை .
இலங்கையின் உயிரியல் வளங்களை பாதுகாப்போம் .
உயிரியல் வளத்தை பாதுகாத்து சூழல் சமநிலையைப் பேணுவோம் .
உயிரியல் வளங்களுக்கு நன்மை செய்யாவிடினும் தீமை செய்ய வேண்டாம் .
சகல உயிரிகளும் மண்ணில் வாழும் உரிமை பெற்றவை .

உலகிலேயே அதிகூடிய இனச்செளுமை கொண்ட நாடு இலங்கையாகும். இது தென்னிந்தியாவில் காணப்படும் தாவர,விலங்கினங்களுடன் தொடர்புபட்ட பற்பல வன சூழல்பிராந்தியங்களுக்கு தாயகமாகும். ஈரத்தன்மை பொருந்தியபருவப்பெயற்சிக்காற்றுகளால் வருடப்படும் இலங்கையின் தென் - மேற்கு பகுதியில் இலங்கை தாழ்நிலப் மழைக்காடுகள்அமைந்துள்ளன. நாட்டின் மத்திய மலைப்பகுதியை நோக்கிச்செல்லும் போது அவை இலங்கை மலைசார்ந்த மழைக்காடுகளாகமாற்றம் பெருகின்றன. இவ்விரு அயணமண்டல ஈரலிப்பு காட்டுப்பிராந்தியங்களும் இந்தியாவின் மேற்கு மலைத்தொடருடன்நெருங்கிய தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன.

இலங்கையின் வனப்பகுதிகள் விவசாயம், மரதொழில், கால்நடை போசனம் போன்றவற்றுகாக பெறுமளவில் அழிக்கப்பட்டுள்ளது. பல காப்பரன்கள் எஞ்சியுள்ள வனப்பிராந்தியங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் முன்றுஉயிரிணமண்டல ஒதுக்கங்கள் உள்ளன.

இலங்கையில் ஆயிரக்கணக்கான விலங்கினங்கள் வாழ்வதுடன், அவற்றில் பல இலங்கை உட்பிரதேசத்துக்குரியவை.
இலங்கையானது பறவை உட்பிரதேச உரிமையின் மையமாக காணப்படுகின்றது. 

இலங்கை தீவின் பரப்பளவுடன் ஒப்பிடுகையில் இங்கு பறவையினங்கள் மிக அதியளவில் காணப்படுகின்றன. 443 பறவையினங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இங்கேயே தங்கி வாழும் பறவைகள் தவிர குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையிலான இடம்பெயர் பறவையினங்கள், தங்கள் வடகோளத்து வாழ்விடங்களின் குளிர் காலத்தைத் தவிர்ப்பதற்காக இலங்கைக்கு வருபவை.

பறவையினங்களில் 233 இலங்கையிலேயே வசிப்பவை, இவற்றுள் 26 உட்பிரதேசத்துக்குரியவை. ஏனையவை இந்திய தலைநிலத்தில் வாழ்பவை, எனினும் அவற்றில் 80க்கு யல்புகளைப் பொறுத்தவரை தொடர்புடைய இந்திய இனங்களிலிருந்து மிகுந்த வேறுபாடுள்ளவையாக உள்ளன.

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்
மண் அரிப்பு  - தற்பொழுது காடுகளின் அழிவின் காரணமாக மண்அரிப்பு தவிர்க்க இயலாத பிரச்சினையாக மாறிவருகிறது. மண் அரிப்பு ஏற்படுவதால் விவசாயம் பெரிதும் பாதிப்பு அடையும். வருடந்தோறும் சுமார் பல ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் மண்அரிமானத்தின் காரணமாக எதுவும் விளையாத வறட்டு நிலமாக மாறிவருகிறது.
பாலைவனங்கள் உருவாதல் - காடுகளின் அழிப்பினால் நிலத்தில் எந்;த உயிரினமும், நுண்ணுயிர்களும் வாழ முடிவதில்லை. மண்ணின் உயிரியல் வளம் அழிவதால் அந்த நிலம் எதற்கும் பயன்படாமலும், எதுவும் விளையாமலும் பாலைவனமாக மாறுகிறது.
மழைபொழிவு பாதிப்பு - மரங்களின் அழிவால் காற்று மண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடின் அளவு  அதிகமாகிவிடுகிறது இதனால் மழை குறைந்து வறட்சி ஏற்படுகிறது.
குறைந்து வரும் மரத்தின் அளவு - தொழில்களுக்குத் தேவைப்படும் மரத்தின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வீட்டு உபயோகப் பொருட்களான நாற்காலி, மேசை, கட்டில், பீரோ போன்றவை செய்யும் தொழில்கள் நலிந்து விட்டன.
வறட்சி -  மழை பொழியும் பகுதிகளில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதால் ஓடைகள் வறண்டு விடுகின்றன. ஆறுகளில் வறட்சிக் காலங்களில் மிகக்குறைந்த அளவே தண்ணீர் இருக்கிறது. இந்தக் காரணங்களினால் வறட்சிக்கு வழி ஏற்பட்டு விடுகிறது.
வண்டல் - மலைகளில் இருந்து அரித்துக்கொண்டு வரப்படும் மண் நீர்த்தேக்கங்களிலும், ஆற்றுப்படுககைகளிலும் குவிக்கப்படுகிறது. மலையில் இருந்து வரும் மழைநீரைத் தடுப்பதற்கு காடுகள் இல்லாத காரணத்தினால் இந்த அவலநிலை ஏற்படுகிறது. ஆகவே வண்டல் மண் தேவையில்லா இடங்களில் சேமிக்கப்பட்டு வீணாகிறது. அதுமட்டும் இல்லாமல்  மின்சக்தியின் தயாரிப்பும் குறைகிறது.
மண்ணின் தன்மையை அழிக்கிறது - காடுகள் மண்ணின் தன்மை கெடாமல் பாதுகாத்து வருகின்றன. காடுகளும் மரங்களும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள மண்ணின் தன்மையை மண்அரிமானம் ஏற்படாமல் காப்பதன் மூலமாக பாதுகாத்து வருகின்றன. காடுகளை அழிப்பதால் மண்அரிமானம் ஏற்படுகிறது இதனால் மண் அதன் தன்மையை இழந்தும் விடுகிறது.
பல்லுயிரின மாறுபாட்டின் இழப்பு- ஒரு தாவரம் அழிக்கப்பட்டால் அதை நம்பி வாழும், அண்டி வாழும் நாலுவகை உயிரினங்களின் அழிவுக்கு காரணமாக அமைந்து விடும். சீனக் காடுகளில் மூங்கில் குருத்துக்களை மட்டுமே சாப்பிட்டு வாழும் பாண்டா கரடிகள் தற்போது அரிதாகிவிட்டன  இதன் காரணம் என்ன ? மூங்கில் காடுகள் அழிக்கப்பட்டு விட்டது தான்.
வேலையில்லாத் திண்டாட்டம் - காடுகளின் அழிப்பினால் காடுகளை நம்பிவாழும் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதனால் இவர்களும் வேலைதேடி நகரத்திற்கு வருகின்றனர். இது வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கிறது.
இந்த உயிர்க்கோளமான பூமிக்குத் தேவையான பிராணவாயுவை உற்பத்தி செய்வது உலகின் 13 நடுகளில் உள்ள காடுகள் தான். அவற்றில் இந்தியாவும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத்தொடர்ச்சிமலை, மற்றும் இமயமலைக்காடுகள் ஆகியவை உலகின் உயிர்க்காற்றை உற்பத்தி செய்வதல் பெரும்;பங்கு வகிக்கின்றன. இந்தக் காடுகளை காப்பாற்றுவதன் மூலமாகத்தான் நாம் வெப்பத்தைக் குறைத்து, வெப்ப உயர்வினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து உயிர்களையும், பயிர்களையும் காப்பாற்ற முடியும்.

தொடரும்.........!