செவ்வாய், 4 ஜூலை, 2017

இந்தச் சூழல் மாறும், பாட்டாளி வர்க்கம் வாழ்க!


செப்டெம்பர் 11, 1973 அன்று சிலியின் அரசு வானொலியில் பிரதமர் அலண்டேயின் குரல் கடைசியாக இப்படி ஒலித்தது.

சிலியின் பாட்டாளிகளே, சிலியின் எதிர்காலம் குறித்து எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது.  தேசத் துரோகிகள் வெற்றியுடன் உலா வரும் இந்நேரத்தில், வேறு யாராக இருந்திருந்தால் பணிந்து பிழைத்துப் போயிருப்பார்கள். ஆனால், நான் எங்கும் ஓடப்போவதில்லை. நீங்கள் ஒன்றை மறந்து விடாதீர்கள். விரைவில் இந்தச் சூழல் மாறும். ஒரு நல்ல சமுதாயம் உருவாகும். சிலி வாழ்க. மக்கள் வாழ்க. பாட்டாளி வர்க்கம் வாழ்க!’

அலண்டே அளித்த இந்த நம்பிக்கை மட்டும்தான் இன்னமும் மிச்சமிருக்கிறது.