புதன், 18 ஜூலை, 2018

யூத சியோணிட்டுகளின் இரகசிய அறிக்கை (The Protocols Of The Elders Of Zion.pdf)  இலுமினாட்டி

ப்ரொடோகால்ஸ் (The Protocols of the Elders of Zion)

ரஷ்ய மொழியில் 1905லும் ஆங்கிலத்தில் 1920களிலும் வெளிவந்த இப்புத்தகம் தமிழில் நூறாண்டுகள் கழித்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரீமேஸன்கள் எனப்படும் இரகசிய சமூகத்தைப் பற்றி தமிழில் அரிதாக வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தில், யூதர்கள் "பிறப்பின் அடிப்படையில் உலகை ஆளும் தகுதி தங்களுக்கு மட்டுமே உள்ளது" எனும் மமதையால் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்த போதிலும் உலகை வெல்ல அவர்கள் தொலை நோக்கோடு போட்ட நீண்ட கால திட்டங்களை இப்புத்தகம் விவரிக்கிறது.

யூத சியோனிஸ்டுகளின் இரகசிய அறிக்கை எனும் இப்புத்தகத்தை ரஷ்ய மொழியில் வெளியிட்ட பாதிரியார் செர்கி நிலஸ்ஸும் ஆங்கிலத்தில் வெளியிட்ட விக்டரும் ரஷ்ய படையினரால் கைது செய்யப்பட்டதும் பின் அக்கைதின் போது ஏற்பட்ட சித்ரவதைகளின் காரணத்தாலேயே இறப்புற்றதும் இப்புத்தகம் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டதும் இப்புத்தகம் அணு குண்டைவிட வீரியமான விஷயங்களைத் தன்னகத்தே வைத்துள்ளது என்பதற்குச் சான்றுகள்.

இப்புத்தகம் முழுக்க இலுமினாட்டிகளின் இரகசிய கூட்டத்தில் பேசப்பட்ட தீர்மானங்களின் சாரமாக இருப்பதால் புரிவது சற்று கடினமாக இருந்தாலும் இதை மொழி பெயர்த்துள்ள ஆளூர் சலீம் தன்னால் முடிந்தவரை எளிமைப்படுத்தி தந்துள்ளார். இப்புத்தகத்தின் தொடக்கமே இலுமினாட்டிகள் உலகை யூதர்கள், யூதர்கள் அல்லாதவர்கள் என இரண்டாக பிரித்து பார்க்கும் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கிறது.

தாங்கள் கனவு காணும் யூத அரசை உடனே நிறைவேற்றும் மனித வளம் இல்லாததால் அவ்விலக்கை நோக்கிய பயணத்தில் அவர்கள் தீட்டியுள்ள திட்டங்கள் குறித்து இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது. குறிப்பாக "கட்டற்ற சுதந்திரம்" எனும் பெயரில் மக்களைக் கட்டுப்பாடற்றவர்களாக உருவாக்குவதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி குறித்து பேசுகிறது. பொருளாதார நோக்கங்களுக்காகத்தான் போர்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன என்ற உண்மையையும் வெட்ட வெளிச்சமாக்கப்படும் இப்புத்தகத்தில் உறுதியான அரசுக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்தும் கம்யூனிசத்தை ஆதரிக்க வேண்டியது குறித்து பேசும் போது, "தொழிலாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது தான் கம்யூனிஸம்" என்று இதுகாறும் நினைத்திருந்தது பொய்யோ என்ற எண்ணம் எழுந்து அதிர வைக்கிறது.

மேலும் தற்போதுள்ள ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்து சித்தாந்தங்களையும் உருவாக்கியதன் பின்னணியில் இலுமினாட்டிகள் இருப்பதைச் சுட்டிக் காட்டும் இப்புத்தகம், இவை உடைந்து நொறுங்கும்போது பலவீனப்படும் உள்ளங்களைச் சர்வதிகார ஆட்சிக்குத் தயார்படுத்தி இலக்கை அடைய முயற்சிக்கும் சதித்திட்டம் விவரிக்கப்படுகிறது. இதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறை கல்வி அமைப்பையும் ஊடகத்தையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வருதல் என்று கூறும் இப்புத்தகம், பிஞ்சு உள்ளங்களின் மனத்தில் வன்மத்தையும் சேர்த்து மனனம் செய்து ஒப்புவிக்கும் இயந்திரங்களாக மட்டுமே குழந்தைகளை உருவாக்கி, புதிய தலைமுறையின் சிந்தனை திறனை மழுங்கடிக்கும் நவீன கல்வி திட்டத்தின் அவலத்தைக் கண்களில் விவரித்து காட்டுகிறது.

தங்களுடைய அரசை அமைக்க வசதியாக தமக்கு எதிரான நாடுகளில் பொருளாதார வீழ்ச்சிகளை ஏற்படுத்துதல், பொம்மை அரசுகளை ஏற்படுத்துதல், அறிவியலின் பெயரால் மதத்தின்மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துதல், ஒழுக்க வீழ்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் குடும்ப அமைப்பைச் சீர்குலைத்தல், வளர்ச்சியின் பெயரால் நாட்டைச் சுரண்டுதல், தீவிரவாத பிரமையின் மூலமாக மக்களைப் பீதிக்குள்ளாக்குதல் என்று நாம் தற்சமயம் எதிர்கொள்ளும் விசயங்கள் அனைத்தும் நூற்றாண்டுகளுக்கு முன்னரே வெளியான இப்புத்தகத்தில் அட்சரம் பிசகாமல் வெளிவந்துள்ளது உலகை ஆட்கொள்ள மறைமுகமாக இயங்கிவரும் இலுமினாட்டிகளின் சக்தி எத்தகையது என்ற பீதியை அடிவயிற்றில் கிளப்புகிறது.

மேலும் இப்புத்தகம் இறுதியாக, யூதர்களின் சாம்ராஜ்யத்தை அமைத்தபின் மக்களை அடக்கியாள்வது குறித்தும் யூத அரசர் தேர்ந்தெடுக்கப்படும் விதம் குறித்தும் அவர் எத்தகையவராக இருக்க வேண்டும் என்று அவருக்காக வரையறுக்கப்படும் தகுதிகளும் ஒப்பீட்டளவில்  கொண்டுவருகிறது.
தற்போது தமிழில் வெளிவந்துள்ள இப்புத்தகத்தை மொழிபெயர்த்த ஆளூர் சலீம் மற்றும் வெளியிட்ட அடையாளம் பதிப்பகத்தார் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். இது தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் மட்டுமல்ல, இதில் சொல்லப்பட்டுள்ள சூழச்சிகளை முறியடிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியத்தையும் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்பதில் இரு வேறு கருத்தில்லை.