செவ்வாய், 17 ஜூலை, 2018

மரங்களின் பயன் பற்றிய கல்வியை சேர்க்க வேண்டும்

எனது கோரிக்கை என்னவென்றால் பள்ளிக்கூட பாடத்திட்டத்தில், மரங்களின் பயன் பற்றிய கல்வி சேர்க்கப்பட்டால், அவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவம் புரியவரும். மரங்களை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு அரசே நற்சான்றிதழ் வழங்கி அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

அப்படி சேர்த்தால் மரங்களின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு, சிறு வயதிலேயே உருவாகிவிடும். இதுதான் எனது கோரிக்கை. ஒவ்வொரு மாணவரும் மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும். அதை அவர்கள் பராமரிப்பதை கண்காணித்து, அரசு சார்பில் நற்சான்றிதழ் வழங்க வேண்டும். இது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.