திங்கள், 30 ஜூலை, 2018

தமிழ் கலாச்சாரத்திற்கு முதல் பரிசு!

துபாய் நாட்டில் நடைபெற்ற பன்முக கலாச்சார திருவிழாவில் தமிழ் கலாச்சாரத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

துபாய் அரசின் இஸ்லாமிய சமய அறநிலையத்துறை சார்பில் இந்த திருவிழா நடைபெற்றது. இதில், அரபி, ஜெர்மன், ஸ்பானிஷ், ருமேனியா, தமிழ், மலையாளம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட மொழி, மற்றும் கலாச்சாரங்களின் அடிப்படையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 

இந்த கண்காட்சியில் தமிழ் கலாச்சாரத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. தமிழ் அரங்கில் தமிழ் மொழியின் வரலாறு, வளர்ச்சி, தமிழர் நாகரிகம், தமிழ் கவிஞர்கள், தமிழர்கள் பண்பாட்டு பொருட்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதில் 2-ஆவது பரிசு பெங்காலிக்கும், 3-ஆவது பரிசு எத்தியோப்பியாவுக்கும் வழங்கப்பட்டது.