சனி, 13 பிப்ரவரி, 2010

தொடரும் நம் பயணம்!

வலிகள் தந்த இறுக்கம் கலைத்து


சில மணி நேரம், சில தூரம் என

உன் விரல் கோர்த்து நடந்து

உன் அன்பில் நனைந்தவாறே

தொடரும் நம் பயணம்!



இருவரின் நேசமும்

விகிதங்களி‎ன்‎றி

அன்பை அள்ளித் தெளிக்க

மொழி திறக்காது

மெளனப் போர்வைக்குள்

இமைகள் சுருக்கி

பார்வைக்குள் உருகும் விழிகள்!



ஓ…!

இந்த உதடுகள்

இன்னும் ஏதேதோ சொல்லத்துடிக்க

வார்த்தைகள் யாவும் ஒளிந்து

உயிர்வரை சென்று கொல்ல…



தெளிந்த நீரோடையாய் இரு மனமும்

தெளிந்து அடங்கிய பொழுதுகளில்

தொடர்கிறது நம் பயணம்!!!