செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

நீ காதல் வயப்படாதவரை...

காலையில்                                                                    

நிர்வாணம் பூண்ட

நீலவானம்

மின்சாரம் இல்லாததால்

அடிபம்புத் தண்ணீரில்

குளியல்

பரவசம் படிந்த

பறவையின் மொழி

எப்போதும் போல

இன்றும்

எதிர்வீட்டுக் குழந்தையின்

கையசைப்பு...

இவையன்றி

வேறென்ன சிறப்பு

இருக்கமுடியும்

இந்நாளில்?

இனியவளே

நீ காதல்

வயப்படாதவரை...