செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

மலர்ந்ததிந்த காதலர் திருநாள்

வருடா வருடம் மாசித் திங்களில்

வசந்தகால பனிக்குளிர் தன்னில்

மலர்கள் மலர்ந்து குலுங்கும் பொழுதினில்

மலர்ந்ததிந்த காதலர் திருநாள்

அன்புப் பரிசும் ஆசை முத்தமும்

இன்ப பெருக்கால் இதயச் சுத்தமும்

துன்பம் நீங்கி துயரம் மறப்பதும்

காதலர் தினத்தின் மகிமை அன்றோ

பெண்ணைப் படைத்த பிரமன் கூட

என்னை ஏன் தான் படைத்தானோ - அட

கண்ணை படைத்த இறைவன் பின்னர்

பெண்ணை ஏன்தான் படைத்தானோ


வெண்நிலா சிந்திய தண்ணொழி பாரீர்

பூ நகை சிந்திய பூமியைப் பாரீர்

பொன்னகை அணிந்த பெண்ணினைப் பாரீர்

புன்னகை சிந்திய ஆண்தனைப் பாரீர்