வசந்தகால பனிக்குளிர் தன்னில்
மலர்கள் மலர்ந்து குலுங்கும் பொழுதினில்
மலர்ந்ததிந்த காதலர் திருநாள்
இன்ப பெருக்கால் இதயச் சுத்தமும்
துன்பம் நீங்கி துயரம் மறப்பதும்
காதலர் தினத்தின் மகிமை அன்றோ
பெண்ணைப் படைத்த பிரமன் கூட
என்னை ஏன் தான் படைத்தானோ - அட
கண்ணை படைத்த இறைவன் பின்னர்
பெண்ணை ஏன்தான் படைத்தானோ
வெண்நிலா சிந்திய தண்ணொழி பாரீர்
பூ நகை சிந்திய பூமியைப் பாரீர்
பொன்னகை அணிந்த பெண்ணினைப் பாரீர்
புன்னகை சிந்திய ஆண்தனைப் பாரீர்
0 comments:
கருத்துரையிடுக