வியாழன், 25 ஏப்ரல், 2019

பிணங்களின் மீதே அரசியல் செய்து பழகிவிட்ட ஒரு இந்திய பைத்தியகாரனின் வாக்குமூலம்

இலங்கை குண்டுவெடிப்பின் ரத்த ஈரம் காய்வதற்குள் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சாமி, “இலங்கையில் நடந்த தீவிரவாத நடவடிக்கை காரணமாக இப்போது  இந்தியாவில் பாஜக அரசுதான் வரவேண்டும். ஏனெனில் காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவானது. விரைவில் திக்விஜய் கொழும்பில் நடந்த தாக்குதலுக்கு இந்து தீவிரவாதமே காரணம் என அறிவிப்பார்” என டிவிட்டரில் கருத்திட்டார்.

இந்த கருத்துகளுக்கு பல எதிர்ப்புக்கள் வலுத்தன.

இலங்கை மக்களின் கண்டனத்துக்கு பதிலளித்திருக்கும் பல இந்தியர்கள், அவர்களின் துயரத்தில் பங்கெடுப்பதாக ஆதரவு தெரிவிக்கின்றனர்; பாஜக-வின் கீழ்த்தரமான சந்தர்ப்பவாதத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.