செவ்வாய், 23 ஏப்ரல், 2019

வரப்போகும் மறு காலனிய காவலாதிக்கம். வாய்ப்புக்கள் வேறு. வரலாறு ஒன்றே!


இலங்கையில் நடைபெற்ற துன்பியல் சம்பவங்களின் பின்னணியில் ஏகாதிபத்திய சக்திகளுக்கும், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பிற்கும் ஒரு பரந்த, குற்றவியல் ஒத்துழைப்பு உண்டு. அவை கண்ணுக்கு புலப்படாத பிம்பங்கள். ஒரு வனப்பான சிறுதீவு அவர்களால் இலக்காக்கப்பட்டிருக்கின்றது. அப்பாவிகள் மதத்தின் பெயரால் நிகழ்ச்சி நிரல்களுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள்.

தூண்டப்பட்டிருக்கின்றார்கள்...

தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள்...

பிராந்திய நலன்சார்ந்த அரசியலின் புதிய உள்ளக அதி ஒத்துழைப்பு கொண்ட தூர தேச நாட்டை தள்ளி வைப்பதற்காக தூபம். இவை கொள்கை வகுப்பாளர்களுடைய அறியாமைகள் அல்ல!

இந்து சமுத்திர தேவைகளை தாங்கிய புதிய கலாச்சாரம். இனி இலங்கைக்கு அறிமுகப்படுத்துவார்கள்.

விரிவடையும் பதற்றங்கள் பிராந்தியத்தில் மேலைத்தேய தளங்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்கும்.

இரத்தக்களரியான தேசத்தில் சிதைந்து போன மனித உயிர்கள் குறித்த “மனிதாபிமான” பாசாங்கு கதைகளும் ஆராயப்பட வேண்டியவை.

தமது ஏகாதிபத்திய நலன்களைப் பின்பற்றுவதற்கும், வன்முறைகளை தூண்டவும், குழப்பவும் பயங்கரவாத அமைப்புக்களை தங்களின் பினாமிகளாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

மத்திய கிழக்கில் அவர்கள் செய்ததை மறவாதீர்கள்.

பயங்கரவாத வலையமைப்புகளுக்குப் பெருமளவு பொது நிதியை  வாரி இறைக்கும் அமைப்புக்களையும், வெளி உலக  பினாமி அரசாங்கங்களின் பின்னணிகளை ஆராய்ந்தால் சில திரைகள் விலகும்.

அரசியலுக்காகவோ, அதிகாரத்துக்காகவோ விசாரணைகள் முற்றிலும் அம்பலமாகாமல் முற்றுப்பெறுமாயின் காட்டுமிராண்டித்தன அச்சுறுத்தல்களாக பிராந்தியத்தில் தொடரும். அவை தென்னாசியாவில் ஒரு சிரியாவையோ, ஈராக்கையோ கொண்டு வரலாம்.


அமலதாஸ் எல்றோய்