வியாழன், 26 மார்ச், 2020

கிருமிகள் உலகில் மனிதர்கள்

கொரோனா .. .. .. "கிருமிகள் உலகில் மனிதர்கள்"

தற்கால சூழ்நிலையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விடயங்களை உள்ளடக்கியது இந்த புத்தகம். கிடைத்திருப்பது வரப்பிரசாதமே. நேரம் ஒதுக்கி படியுங்கள் என்று சொல்ல வேண்டிய தேவையில்லை. சுய ஊரடங்கு உங்களை வாசிப்பின் தாற்பரியத்தை மேம்படுத்தும். அதற்கேற்றால் போல் நுண்ணங்கிகளையும் உலகின் அசைவையும் ஓரளவு புரிந்து வைக்க இந்த நூல் உதவும் என நம்புகிறேன்.

- எல்றோய் அமலதாஸ்

நாடெங்கும் ஏன் பாரெங்கும் ஒரு பாதையில் விரைந்து கொண்டிருக்கும் போது அதற்கு எதிரான பாதையில் இயல்பாகவே ஒரு மாற்றுக் குறைவு ஏற்பட்டு விடுகிறது. என்றாலும் அதில் இருக்கும் நியாயங்கள் மறைக்கப்பட்டாக வேண்டுமா? விவாதிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறேன்.

நுண்ணுயிர் தேற்றம் (Germ theory) அதன் தொடக்க காலத்திலிருந்தே எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அவை மறைக்கப்பட்டிருக்கின்றன.

அலோபதி மருத்துவத்தின் போதாமையும், அறிவியல் ஆய்வுகள் என்ற பெயரில் நடக்கும் ஒற்றைப் பார்வை ஆய்வுகளும் கண்டிப்பாக மக்களின் ஆரோக்கியத்தை காக்கப் போவதில்லை. என்றால் மக்களை நேசிப்பவர்களின் அடுத்த அசைவு எதை நோக்கியதாக இருக்க வேண்டும்?

கிருமிகள் உலகில் மனிதர்கள் எனும் அக்கு ஹீலர் உமர் ஃபாரூக் எழுதிய இந்த நூலை படித்துப் பாருங்கள். நுண்ணுயிர்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பார்வையை எளிமையாகவும், வலிமையாகவும் மறுத்து விளக்கங்களையும் தரவுகளையும் முன் வைக்கிறார்.

மருத்துவ மாணவர்களே, மருத்துவர்களே, மருத்துவ வல்லுனர்களே, இதை விவாதிக்க நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கருதுகிறேன். இதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான மக்களின் ஒருமையையும், ஓர்மையையும் குலைப்பது இதன் நோக்கம் இல்லை. சரியானதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் முனைப்பு தான்.

வாருங்கள் விவாதிப்போம்.



நூலை பதிவிறக்க
https://drive.google.com/file/d/13Et9_ThqgJ3vWOuErXyZU724zYJSJwjt/view