வெள்ளி, 7 ஜூன், 2019

எவரஸ்ட் சிகரத்தில் இருந்து 11 ஆயிரம் கிலோ கழிவு பொருட்களை அகற்றிய நேபாள அரசு!

எவரஸ்ட் சிகரத்தில் இருந்து சுமார் 11 ஆயிரம் கிலோ கழிவு பொருட்களை நேபாள அரசு அகற்றியுள்ளது.

எவரஸ்ட் சிகரத்தில் உள்ள கழிவு பொருட்களை அகற்றும் நோக்கில் நேபாள ராணுவத்தினர் கடந்த 14 ஆம் தேதியில் இருந்து அங்கு முகாமிட்டு சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த சுத்தம் செய்யும் பணியில் மலையேறும் பயணிகள் தூக்கி எரிந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்,  பிளாஸ்டிக் பொருட்கள், உணவு கழிவுகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன. இங்கு அகற்றப்பட்ட சில கழிவு பொருட்கள் மறு சுழற்சிக்காக  ஐநா அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என நேபாள அரசு தெரிவித்துள்ளது. இந்த பணியில் 11 ஆயிரம் கிலோ கழிவு பொருட்கள் அகற்றப்பட்டது குறிப்பிடதக்கது