செவ்வாய், 13 நவம்பர், 2018

பேரழிவை உண்டாக்க காத்திருக்கும் Disease X


Disease X இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தான் இதை பற்றி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இவை இதுவரை கண்டுபிடிக்க படாத ஒன்று ஆனால் தாக்குவதற்கான அபாயம் அதிகம் உள்ள ஒரு பரவும் நோயாகும். இதுவரை உலகில் பல உயிர் சேதங்களை உண்டாக்கிய நோய்கள் அனைத்தும் விலங்குகளிடம் இருந்து தான் மனிதனுக்கு பரவியது. முன்பெல்லாம் இவை இயற்கையாக உருவாகின என்று தான் அனைவரும் நம்பினோம். ஆனால் வியாபாரமாகிப்போன மருத்துவமே இதற்கு காரணமாக இருக்குமோ என்று நம்மை நினைக்க வைக்கிறது. இன்னும் சொல்ல போனால் மருந்து நிறுவனங்கள் நோய்களை குணப்படுத்துவதை காட்டிலும் தங்களின் பொருட்களை விற்க நோயாளிகளை உருவாக்குகின்றனர். இது மறுக்க முடியாத உண்மை. அனைத்தும் வியாபாரமாகிப்போன இந்த காலகட்டத்தில் நோய்களையும் நோயாளிகளையும் உருவாக்குவதன் மூலம் மேலும் சம்பாரிக்க இயலும். இது தான் கசப்பான உண்மை. இங்கு நோய்கள் தானாக உருவாகவில்லை. அவை உருவாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. சரி வாருங்கள் இந்த Disease X பற்றி என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம். இந்த Disease X பெரிய அளவில் பரவும் நோய் மேலும் அதிக அளவு உயிர்சேதத்தை உண்டு பண்ணும் திறன் கொண்டது. Spanish flu போன்று எளிதில் பரவும் தன்மை கொண்டது. மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இதை பற்றிய ஆராய்ச்சிகள் தீவிரமாக உள்ளன. இந்த ஆராய்ச்சிகளில் புதிய வைரஸ் Myanmarese  வௌவ்வால்களில் கண்டுபிக்கப்பட்டுள்ளது. இவை corona வைரஸ் குடும்பத்தை சார்ந்தவை. இந்த குடும்பத்தை சேர்ந்த வைரஸ்கள் தான் ஏற்கனவே பெரும் உயிர்சேதத்தை உண்டு செய்தது. ஒன்று சார்ஸ் வைரஸ் இது எளிதில் பரவும் தன்மை கொண்டது. இன்னொன்று மெர்ஸ் வைரஸ். 35% உயிர் சேதத்தை உண்டு பண்ணும் திறன் கொண்டது.


 "எங்களுடைய நோக்கம் எளிதில் பரவும் மற்றும் அதிக அளவு உயிர் சேதத்தை உண்டு பண்ணும் வைரஸ்களை விலங்குகளிடமிருந்து கண்டுபிடிக்க வேண்டும். இது ஆசியா அல்லது ஆப்பிரிக்காவில் உருவாக்கலாம் ஏனென்றால் அங்கெல்லாம் மனிதர்கள் அசுர வேகத்தில் சுற்றுசூழலை அளித்துக்கொண்டுள்ளனர். மனிதர்களுக்கு நெருக்கமாக அமைந்துள்ள காடுகளில் இதுபற்றிய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. காடுகளை அழித்து சாலைகளை அமைப்பது போன்ற காரணங்களால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன்காரணமாக விலங்குகள் காடுகளை விட்டு வெளிவருகின்றன. இதன் காரணமாக காட்டு விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு அதிகரிக்கிறது என வன விலங்கு கால்நடை மருத்துவர் Marc Valitutto தெரிவித்துள்ளார். நவம்பர் 16 ம் தேதி லண்டனில் நடைபெறும் கண்காட்சியில் Disease X பற்றிய தகவல்கள் இடம் பெறுகின்றன. இதை பற்றி அவர்கள் குறிப்பிடுள்ளதாவது    "அடுத்த உயிர்கொல்லி நோய் மனிதர்களை தாக்கி பெரிய அளவில் உயிர்சேதத்தை உண்டுபண்ணும். இதற்கு முன் உலகில் பரவிய மற்ற நோய்களை போன்று இதுவும் எளிதாய் பரவும் தன்மை கொண்டது. இந்த நோய் எதன் மூலம் பரவும் என்று யாருக்கும் தெரியாது. இதற்காக லண்டன் தயாராக உள்ளது. இதற்கு முன்னர் பல நோய்களை இது போன்று பரவியுள்ளன. 18ம் நூற்றாண்டில் பரவிய சின்னம்மை  20% உயிர்சேதத்தை உண்டு பண்ணியது. பின்னர் தடுப்புசிகளின் உதவியோடு முழுவதும் அளிக்கப்பட்டது. இதே போல தான் காலரா நோய்க்கும் குணப்படுத்தப்பட்டது. இதில் நாம் தான் வெற்றி அடைந்தோம் இது போல  இந்த நோயையும் சமாளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disease X - மனித குலத்தின் மாபெரும் அச்சுறுத்தல்