ஞாயிறு, 27 மே, 2018

11 லட்ச மனிதபெயர்களை தாங்கி செல்கிறது - பார்கர்

சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனித பெயர்களை தாங்கி செல்கிறது என நாசா கூறி உள்ளது. #NASA

சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியனாகும். சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப்போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. (ஒரு ஒளி ஆண்டு = 5,88,00,00,000 மைல்கள்).சூரியன்,புவியிலிருந்து ஏறக்குறைய 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அளவில் சூரியன் புவியைப் போல் 13,00,000 மடங்கு பெரியது. 

சந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்கு விண்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் சூரியனுக்கு விண்கலம் அனுப்பி ஆய்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.இந்த நிலையில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சூரியனின்  சுற்றுப்புற தட்ப வெப்ப நிலை 5,500 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. அதற்கு தகுந்தாற் போன்று வெப்பத்தை தாங்க கூடிய வகையில் விண்கலம் தயாரிக்கப்படும். அது  ஜூலை 31 ம் தேதி சூரியனுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாசாவின் பார்கர் சூரிய ஆய்வு விண்கலம்(NASA's Parker Solar Probe) அனுப்புகிறது இது 11 லட்சம்  மனிதர்களின் பெயர்களை தாங்கி செல்கிறது என அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது

ஏழு வருட பணி முடிவில், சூரியனின் வளிமண்டலத்தில்  எந்த விண்கலமும் இதற்கு முன்னர் சென்றதை  விட இந்த ஆய்வில் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு நடத்தும்.

பார்கர் சூரிய ஆய்வின் மூலம் சூரியன் பற்றிய நமது புரிதலை இன்னும் அதிகமாக்கும், ஒரே நட்சத்திரத்தை நாம் நெருங்கிப் படிக்க முடியும்.  மேலும் இந்த விண்கலம் பல லடசம் மக்களின்  பெயர்களை சுமந்து செல்கிறது. யுனெஸ்கோவில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்தில் பார்கர் சோலார் ஆய்வு  திட்ட விஞ்ஞானி  நிக்கோலா ஃபாக்ஸ் கூறி  உள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில், ஒரு நட்சத்திரத்தை  தொடுவதற்கு மக்கள்  தங்கள் பெயர்களை அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டனர். 2 மாதங்களில் மொத்தம் 1,137,202 பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டு  உள்ளது உறுதி செய்யப்பட்டன.

மே 18 அன்று விண்கலத்தில் பெயர்கள் கொண்ட மெமரி கார்டு பொருத்தப்பட்டது.  திட்டமிட்டபடி  ஜூலை 31 ம் தேதி  விண்கலம் ஏவப்படும்.

செவ்வாய், 22 மே, 2018

தேயிலை துகள்களால் நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும்! புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

தேயிலையிலிருந்து பெறப்படும் குவாண்டம் துகள்கள் மூலம் நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தேயிலையிலிருந்து பெறப்படும் துகள்கள் மூலமாக நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்கமுடியும் என அறிவியலாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள். பிரிட்டனின் ஸ்வான்சி பல்கலைக் கழகம், தமிழ்நாட்டின் கே.எஸ் ரங்கசாமி கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரியவந்து உள்ளது. மனித தலைமுடியின் அகலத்தில் 4,000ல் ஒரு பகுதியாக இருக்கும் குவாண்டமானது, புற்றுநோய் செல் சுவர்களின் நானோ துளைகளுக்குள் புகுந்து அவற்றை அழிக்கிறது. புற்றுநோய் செல்கள் பெருக வேண்டும் என்ற செய்தியை வைத்திருக்கும் டிஎன்ஏவை அழிக்கிறது, அத்தகையை செல்களின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.  

இந்த கண்டுபிடிப்பு நுரையீரல் புற்றுநோய் சிகிச்சையில் மிக முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பான மருந்து பயன்பாட்டிற்கு வருவதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் அறிவியலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துகள்களை வேதியியல் ரீதியாக உருவாக்கலாம், ஆனால் சிக்கலானதாகவும், விலையுயர்ந்ததாகவும், நச்சுத்தனையானதாகவும், பக்க விளைவு கொண்டதாக இருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆய்வின் தலைவர் பிரிட்டனின் ஸ்வான்சி பல்கலைக் கழக டாக்டர் சுதாகர் பிச்சைமுத்து பேசுகையில், செயற்கையான முறையில் குவாண்டம் துகள்களை உருவாக்க ஒரு மைக்ரோகிராமிற்கு 250 பவுண்ட் முதல் 500 பவுண்ட் வரை உற்பத்தி செலவு ஏற்படுகிறது. இதுவே நாங்கள் தேயிலையை பரிசோதனை செய்வதற்கு முக்கிய காரணமாகும். 

தேயிலையில் இருந்து இயற்கையான முறையில் எடுக்கப்படும் குவாண்டம் துகள்களுக்கு ஒரு மைக்ரோகிராம் 10 பவுண்ட் மட்டுமே செலவு. 

அதேவேளையில் கேன்சர் செல்களை சுற்றிலும் இருக்கும் நல்ல செல்களை அழிக்காது. குவாண்டமானது புற்றுநோய் செல் சுவர்களின் நானோ துளைகளுக்குள் புகுந்து அவற்றை அழிக்கிறது. இப்போதைக்கு ஆய்வுக்கூடத்தில் மட்டுமே உற்பத்தி செய்கிறது. தொழிற்சாலையில் தயாரிக்க வேண்டுமானால் அதற்கு சில காலம் பிடிக்கும். எல்லாம் சரியாக நகர்ந்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மனிதர்களுக்கு சிகிச்சையை மேற்கொள்ளலாம். 10 ஆண்டுகளில் இந்த சிகிச்சையானது உலகம் முழுவதும் எளிதாக கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது எனக் கூறி உள்ளார்.

வேல்ஸ் புற்றுநோய் நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு பிரிவு தகவலின்படி நுரையீரல் புற்றுநோய் 4 முக்கிய புற்றுநோய்களில் முக்கியமானது. வேல்ஸ் மற்றும் உலக முழுவதும் இதனால் பாதிப்பு உள்ளது. வேல்ஸில் ஒவ்வொரு ஆண்டும் மார்பக மற்றும் குடல் புற்றுநோயைவிட அதிகமான உயிரிழப்புக்கு நுரையீரல் புற்றுநோயே காரணமாக உள்ளது. நுரையீரல் புற்றுநோய் பாதிப்பவர்களில் 6.5 சதவிதபேர் மட்டுமே  5 மற்றும் அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் வரையில் உயிர் வாழ்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 4 மே, 2018

ராணுவத்திற்காக 2017-ல் அதிகம் செலவிட்ட நாடுகள் பட்டியல்

கடந்த ஆண்டில் தான் உலக நாடுகளின் ராணுவ செலவினம் அதிகரித்துள்ளதாக ஸ்வீடனின் அமைதி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

அது வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையில்  கூறி இருப்பதாவது:-

உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவினம் 2017 ஆம் ஆண்டு 1.73 ட்ரில்லியன் டாலர். இது கடந்த 2016 ஆம் ஆண்டை விடவும் 1.1 விழுக்காடு அதிகம் எனவும் தெரியவந்துள்ளது. குறித்த பட்டியலில் 610 பில்லியன் டாலருடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து, சீனா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள்  உள்ளன. 

மிகப்பெரும் ராணுவ வலிமை கொண்டுள்ள அமெரிக்காவின் ராணுவ செலவு நிலையாக உள்ளது. அந்நாட்டிற்கு அடுத்த ஏழு இடங்களில் உள்ள நாடுகளின் ராணுவ செலவின் கூட்டுத் தொகைக்கு அமெரிக்காவின் செலவு த்தொகை சமமாக உள்ளது. 2-ஆம் இடத்தில் இருக்கும் சீனா 228 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சீனா ராணுவத்திற்காக செலவிடும் தொகையானது 13 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 69.4 பில்லியன் டாலர் தொகை செலவிட்டு சவுதி அரேபியா 3-ஆம் இடத்தில் எட்டியுள்ளது. 

மேலும், 2017-ம் ஆண்டு ரஷ்யா 66 பில்லியன் டாலர்கள் செலவு செய்ததாக குறித்த பட்டியலில் தெரிய வந்துள்ளது. இது கடந்த 1998 ஆம் ஆண்டில் இருந்து முதன் முறையாக 20 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ரஷ்யாவை அடுத்து 5-வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து  பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி,தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.

ராணுவத்திற்காக 2017-ல் அதிகம் செலவிட்ட நாடுகள்:

அமெரிக்கா - $610bn

சீனா - $228bn

சவுதி அரேபியா - $69.4bn

ரஷ்யா - $66.3bn

இந்தியா - $64bn இது கடந்த ஆண்டைவிட 5.5 சதவீதம் அதிகமாகும் 

பிரான்ஸ் - $57.8bn

இங்கிலாந்து  - $47.2bn

ஜப்பான் - $45.4bn

ஜெர்மனி - $44.3bn

தென் கொரியா - $39.2bn

புதன், 2 மே, 2018

மூன்றாம் உலக போருக்காக சிரியாவில் போர் விமானங்களை குவித்த ரஷ்யா

சிரியாவில் அமெரிக்காவும், இங்கிலாந்து தாக்குதல் நடத்துவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் ரஷ்யா தனது படைகளுடன் மூன்றாம் உலக போருக்கு தயாரானதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அசாத் ரசாயன தாக்குதல் நடத்தியதாக கூறி அங்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு ரஷ்ய அதிபர் புதின் தனது கடும் கண்டனங்களை பதிவு செய்தார்.இந்நிலையில் இந்த தாக்குதல் நடப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னால் அதாவது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஷ்யா மூன்றாம் உலக போர் தாக்குதலுக்கு தயாரானதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த ஆதாரமான செயற்கைகோள் புகைப்படத்தை இராணுவ வரலாற்றாசிரியரும், பத்திரிக்கையாளருமான பபக் தக்வே வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சிரிய அரசுக்கு சொந்தமான விமானத் தளத்தில் ஆயுதங்கள் ஏந்திய அதிகளவிலான ரஷ்யாவின் ராணுவ விமானங்கள் நிற்கிறது. இதில் 28 போர் விமானங்களும் அடக்கமாகும். இந்தப் புகைப்படங்களானது லட்டகியா நகரில் உள்ள விமான தளத்தில் எடுக்கப்பட்டுள்ளது. Sukhoi Su-30,Su-24M2,Su-25SM3 போன்ற சக்தி வாய்ந்த ரஷ்யாவின் போர் விமானங்கள் அங்கு நின்றுள்ளன. பெரியளவிலான மோதலுக்காகவே இதை ரஷ்ய அதிபர் புதின் தயாராக வைத்திருந்ததாக பபக் தக்வே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தில் விண்வெளிப்படையை உருவாக்க டொனால்டு டிரம்ப் திட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பாதுகாப்பிற்காக விண்வெளி படையை உருவாக்க திட்டமிட்டு உள்ளார்.

விண்வெளி படையை உருவாக்குவதன் மூலம் பூமியில் சூப்பர் பவர் நாடாக இருக்கும் அமெரிக்கா விண்வெளியிலும் சூப்பர் பவர் நாடாக மாறும் என்று கூறியுள்ளார். அவர் மனதில் பெரிய திட்டங்களை வைத்துக் கொண்டு இதை உருவாக்கியதாக கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் அமெரிக்க விமான படையில் தற்போது 5 படைகள் இருக்கிறது. தரைப் படை, விமானப் படை, 2 கடற்படை, ஒரு கடலோரக் காவல்படை ஆகியவை இருக்கிறது. இந்த படைகள் மட்டும் இல்லாமல் இதனுடன் ஆறாவதாக ஸ்பேஸ் போர்ஸ் எனப்படும் விண்வெளி படையை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார். இதற்கான திட்டம் எல்லாம் தயார் அனுமதிக்கு மட்டும் காத்து இருப்பதாக கூறியுள்ளார்.

இப்போது உலக நாடுகள், தனியார் நிறுவனங்கள் விண்வெளி துறையில் சிறந்து விளங்குகிறது. அவர்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் பிரச்சனை செய்யலாம் . அதேபோல் எங்காவது ஒரு கிரகத்தில் புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டு அவை நம்மீது போர் தொடுக்க கூட வரலாம், இதை எல்லாம் தடுக்கத்தான் இந்த விண்வெளி படையை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார்

மற்ற படைகளுக்கு மிகவும் பயிற்சி அளித்து ஆட்களை எடுப்பது போலவே இதற்கும் ஆட்களை எடுக்க இருக்கிறார்கள். ஆனால் இவர்கள், சாதாரண பயிற்சிகளை பெறாமல் புதிய பயிற்சிகளை பெறுவார்கள். இவர்களுக்காக புதிய ஆயுதங்கள் உருவாக்க வேண்டும், புதிய தொழில்நுட்பம் மூலம் இந்த மொத்த படையும் வடிவமைக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான ''பென்டகன்'' இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப்போதைக்கு ஸ்பேஸ் ஃபோர்ஸ் உருவாக்கும் எண்ணமெல்லாம் இல்லை என்று கூறியுள்ளது. அதன்படி பூமியில் இருக்கும் ஐந்து படைகளிலும் தன்னிறைவு பெற்று, போர் பயம் சென்ற பின் ஆகாய படை குறித்து யோசிக்கலாம் என்று கூறியுள்ளது. அதேபோல் செனட் சபையும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்காது என்று கூறப்படுகிறது.

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

அண்ணாவியார் கலாபூசணம் "அன்ரனி பாலதாஸ்"


ஈழத்தின் பாஷையூரைச் சேர்ந்த அண்ணாவியார் கலாபூசணம் "அன்ரனி பாலதாஸ்" அவர்கள் (26.04.2018) தனது பிறந்த நாளிலேயே காலமானார். கலைப்பாரம்பரியத்தை பாதுகாத்து, வளர்த்து அடுத்த தலைமுறைக்குக் கொடுத்த பெருமைக்குரியவர். வையகத்து வாழ்வாங்கு வாழ்ந்து தன்னை நாடகக்கலைக்காய் அர்ப்பணித்தவர். திருமறைக்கலாமன்றத்தின் பொக்கிஷம். கலைவழி, இறைபணி கண்ட அன்புள்ளம் கொண்டுள்ள தன்னிகரற்ற மனிதருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி. அவரது ஆன்மா இறைவனில் சாந்திபெற வேண்டுகிறேன்.


(புகைப்படம் - 18.01.2018) அண்ணாவியருடைய இல்லம்.
'உடல்' - உலக நாடக அரங்கியல் பத்திரிக்கைக்காக,
பலமணி நேரமாய் அவருடன் உரையாடிநேர்கண்ட நெகிழ்ச்சியான தருணங்கள்...








செவ்வாய், 17 ஏப்ரல், 2018

வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்

அர்ஜென்டினாவின் சாண்டா பெ நகரின் வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

அர்ஜென்டினாவின் சாண்டா பெ நகரின் தெருவில்  நடந்து செல்லும் ஒரு விசித்திரமான மிருகம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வினோத விலங்கு  பாதி மனிதனாகவும், பாதி மிருகமாகவும் இருந்து உள்ளது.  இந்த மிருகம்  கேமராவில் பிடிபடுவதற்கு முன்னதாக இரண்டு நாய்களைக் கொன்றதாக கூறப்படுகிறது.

இந்த மிருகம் ஜெர்மன் ஜெப்பர்ட் நாய் போலவும்,  ஒட்டகத்தை போன்ற  நீண்ட கழுத்துடனும்  சிறிய தலையுடனும் இருந்து உள்ளது. சமூக வலைதளத்தில்  2005 ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு உயிரினத்தை சந்தித்ததாக ஒரு நபர் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்னொருவர் லத்தீன் காட்டுப்பகுதியில்  இருக்கும் சுபாக்காப்ரா என அறியப்பட்ட உயிரினத்தைப் போன்ற ஒரு வாம்பயர் என கூறி உள்ளார்.

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளி சுற்றுப்பாதையில் கருவுற முடியுமா நாசா ஆய்வு

புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளி சுற்றுப்பாதையில் கருவுற முடியுமா என்பதை ஆய்வு செய்ய நாசா மனித விந்தை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கிறது.

வாஷிங்டன்

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து உள்ளன. பூமியிலிருந்து 418 கி.மீ தூரத்தில் இந்த விண்வெளி  ஆய்வு மையம் அமைந்து உள்ளது. விண்வெளி மையத்தின் கட்டுமான பணிக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை 3 வீரர்கள் சென்று திரும்புகின்றனர்.

சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலவுகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் அங்குள்ள மனித வாழ்க்கைக்கு ஏதுவான சூழல் தொடர்பான ஆய்வுகள் அங்கு நடந்து வருகிறது.  அமெரிக்காவின் நாசா மட்டுமல்லாமல் உலகின் பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அதன் விளைவாக, ‘விண்வெளியில் மனிதன் வாழ முடியுமா?’ என்ற அடிப்படையான கேள்வி தொடங்கி, அங்கு வாழத்தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்புகள் உள்ளிட்ட பல தகவல்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட வண்ணமாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், விண்வெளிச் சுற்றுச்சூழலில் மனிதன் வாழக்கூடிய காலம் வரும்போது விண்வெளியானது மனித உடலில் எந்த வகையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பான ஆய்வுகள் கடந்த பல வருடங்களாக நடந்து வருகின்றன.

பூமியில் உள்ளது போல விண்வெளியில் ஈர்ப்பு சக்தி கிடையாது. இதனால், விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் அனைவரும் அந்தரத்தில் மிதந்தபடியே பணிகளை மேற்கொள்கிறார்கள். அதற்கான பயிற்சியும் பூமியில் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், விண்வெளியிலேயே அவர்கள் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு விஞ்ஞானிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  இந்த நிலையில்  மனிதன் சுற்றுப்பாதையில் கருவுற முடியுமா என்பதைப் பார்க்க நாசா மனித விந்தை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கிறது.

நாசாவின் மைக்ரோ -11 திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது, இதில் உறைந்த மனித மற்றும் காளை விந்தணுக்களின் மாதிரிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

பால்கோன் 9 இன் டிராகன் மறு-விநியோக காப்ஸ்யூல் பயணத்தின் முதல் கட்டத்தை நிறைவு செய்து. புவிஈர்ப்புவிசை இல்லாத  விண்வெளியில்  விந்தணுக்குகள் எவ்வாறு நீந்திச்செல்கின்றன  என்பதை  கண்டறியலாம் என நாசா நம்புகிறது.

தற்போது விண்வெளியில் இனப்பெருக்கம் பற்றிய உயிரியல் பற்றி சிறிது அறியப்படுகிறது,மற்றும் இந்த சோதனை  மூலம் அந்த இடைவெளி மிகவும் குறையும்.  முதன் முறையாக மனித விந்து விண்வெளியில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிய முடியும் என நாசா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளது.

ஒரு மனித முட்டை வெற்றிகரமாக கருத்தரித்தல் பல்வேறு காரணிகளை சார்ந்திருக்கிறது, மேலும் இரண்டு நிலைகளாக பிரிக்கப்படுகிறது என்று ஆய்வு கூறுகிறது. முதலாவதாக, விந்தணு செல் செயல்படுத்தப்பட வேண்டும். பின்னர் ஒரு முட்டையை நோக்கி உறிஞ்சுவதற்கு தகுந்ததாக  சிறிது மாறும். அது வேகமாக நகர்த்த வேண்டும் அதனால்  அதன் செல்கள் மென்மையாக்கப்பட வேண்டும். முந்தைய சோதனைகள் முள்ளெலும்பு மற்றும் காளை விந்து,செயல்படுத்தல் நுண்ணுயிரியலில் விரைவாக நடக்கிறது. ஆனால் வெற்றிகரமான உமிழ்வுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகள் மிகவும் தாமதமாகின்றன அல்லது வெறுமனே அனைத்து நடக்காமல் இருக்கிறது.

நாசா முதன்முறையாக மனித விந்தையை அனுப்புகிறது, ஆனால் காளை விந்து மீண்டும் ஒப்பிடுவதற்கு மீண்டும் அனுப்பப்படுகிறது