வெள்ளி, 26 அக்டோபர், 2018

போரா, சமாதானமா—உங்களை எப்படி பாதிக்கிறது

போர் என்பது என்ன?
“போர், கடவுளால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் உலக ஒழுங்கில் உள்ளடங்கிய ஒரு பகுதியாக இருக்கிறது. போரில்லாவிடில் உலகமானது சுறுசுறுப்பில்லாமல் பொருளாசையிலேயே ழூழ்கிவிட்டிருக்கும்.”—ஜெர்மன் தேசத்து படைத்துறை உயர்தரப் பணியாளர், ஹெல்முத் வான் மோல்ட்கி
“போரை அடக்குங்கள். இது இயற்கையின் வளர்ச்சியை அடக்க முயற்சிப்பது போலிருக்கும்.”—ஜோசப் P. கோபெல்ஸ், கருத்துப் பரப்பு மற்றும் தேசீய அறிவொளியின் நாசி அமைச்சர்.
“அரசியலின் ஒரு பாகம்”—ரஷ்ய தேசத் தலைவர், லெனின்.
“ஒரு ஆட்சியாளரின் ஒரே ஆராய்ச்சி. இராணுவ முன்னேற்பாடுகளை திட்டமிட வாய்ப்பை அளித்து அதை நிறைவேற்ற திறமையை அளிக்கும் ஒரு ஓய்வு நேரமாக மட்டுமே அவன் சமாதானத்தைக் கருத வேண்டும்.”—இத்தாலிய அரசியல் தத்துவஞானி, நிக்கல்லோ மக்காவல்வி.
சமாதானம் என்பது என்ன?
“இரண்டு யுத்த காலப்பகுதிகளுக்கிடையே வரும் ஏமாற்றத்தை அளிக்கும் ஒரு காலப்பகுதி.”—அம்ரோஸ் பியர்ஸ், அமெரிக்க தேசத்து பத்திரிக்கை எழுத்தாளர்.
“படைத்துறையை சார்ந்திராத ஆட்கள் எண்ணிக்கையில் அதிகமாயிருப்பதால் ஏற்படும், உயிர் வீரியத்தை இழந்த நிலைக்கு யுத்தம் பரிகாரமளிக்க முயலுகிறது.”—சிரில் கன்னாலி, இங்கிலாந்து நாட்டு விமர்சகரும் எழுத்தாளரும்.
“ஒரு கனவு, அழகான ஒன்று இல்லை.”—ஹெல்முக் வான் மோல்க்.
மேலே மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் கருத்துக்கள் உங்களுக்கு எவ்விதமாக தோன்றுகின்றன? போரினிடமாகவும் சமாதானத்தினிடமாகவும் ஒரு கவலையீனமான அணுகுமுறையை உங்களால் காணமுடிகிறதா? அநேக ஆட்களுக்கு விசேஷமாக ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும்—ஆபத்திலிருப்பது தங்களுடைய உயிராக இல்லாத வரையில்—உயிர் மலிவான ஒன்றாக இருக்கிறது என்ற எண்ணத்தை அவை தருகின்றனவா? என்றபோதிலும் நீங்கள் எந்த தேசத்தாராக இருந்தாலும், சமாதானமும் ஒத்திசைவுமுள்ள ஒரு உலகிலேயே வாழ விரும்புவீர்கள் என்பதைக் குறித்து நாங்கள் நிச்சயமாயிருக்கிறோம்.
6000 வருட மனித சரித்திரத்தில், போரானது பல நூறு லட்சக்கணக்கில் மரித்தோரை அறுவடை செய்திருக்கிறது. இரண்டு உலகப் போர்களின் அனுபவத்துக்குப் பின்னும்கூட, சமாதானமும் ஒத்திசைவும் வெறும் ஒரு கனவாகவே தோன்றுகிறது. போர் என்ற சமீப கால புத்தகத்தில் குவென் டையர் எழுதிய விதமாகவே: “இரண்டாம் உலகப் போரின் கடந்த இரண்டு மாதங்களின்போது, ஒவ்வொரு மாதமும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மறுபடியுமாக ஒரே ஒரு தடவை, வல்லரசுகள் இப்பொழுது அவர்களிடமுள்ள எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தி ஒருவரோடொருவர் போர் செய்வார்களேயானால், ஒவ்வொரு நிமிடமும் பத்து லட்சம் ஆட்கள் கொல்லப்படுவார்கள்.” அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வல்லரசுகள் போருக்குச் செல்லுமேயானால், அவை முதலாவது ஜனங்களுடைய கருத்தை அறிந்துகொள்ள அவர்களை கலந்தாலோசிக்குமா? சரித்திரம் வேறு விதமாக பதிலளிக்கிறது.
கடந்த கால போர்களும் தற்போது படுகொலை செய்யப்படுவதற்கான வாய்ப்பும் பின்வருமாறு நம்மைக் கேட்டுக்கொள்ள வழிநடத்துகிறது: “போருக்கு காரணங்கள் யாவை? போர்களுக்கிடையே வெறும் ஓய்வு நேரமாக இல்லாமல், நம்முடைய காலத்தில் மெய்யான நிரந்தரமான சமாதானத்துக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? நிலையான சமாதானம் வெறும் ஒரு மாயமான கனவாக மட்டுமே இருக்கிறதா?