திங்கள், 24 அக்டோபர், 2016

ஆன்மா சாந்திகொள்ள தமிழன்னை தயை புரிவாள்...

முழு வெள்ளை உடையணிந்து உடல், முகத்துக்கும் முழுவதுமாக பவுடர் பூசி லிப்டிக்கால் முகம் முழுவதும் வரைந்து கொண்டு "அண்ணா கெட்டப் ஓகேயா" என்று முன்வந்து நின்றான். அவனை பார்த்ததும் படப்பிடிப்புதளத்தில் எனக்கு மட்டுமல்ல! தொழிநுட்பகுழு மற்றும் பங்குபற்றிய யாழ்.பல்கலைகழக மாணவர்களிடையே "குபீர்" என்ற சிரிப்பொலியே எழுந்தது… 

சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்ள் சுலக்‌ஷன் மற்றும் கஜன்
இரு அரக்கவேடம் தரித்த கதாபாத்திரத்தில் ஒருவனாக அவனே தனக்குதானே மேக்கப் போட்டு கொண்டு ஜோக்கர் போல முன்வந்து நின்றான். பார்த்த கெட்டப்பில் பயம் வரவில்லை. சிரிப்பொலியே எழுந்தது. அந்தளவுக்கு நகைச்சுவை உணர்வு மிக்கவன். அந்த சந்தர்ப்பத்தில் பதிந்த முகத்தை மீண்டும் இரைமீட்டிப்பார்க்கும் போது மரண செய்தியாகத்தான் தம்பியின்முகம் தெரிகிறது.

     
பாதித் தூரத்திலே பயணம் முடக்கப்பட்ட 'சுலக்‌ஷன்', 'கஜன்' இரு தம்பிமார்களே..
உங்கள் இழப்பு நிச்சயம் ஈடு செய்ய முடியாத ஒன்று!!!!
என் இதயம் மிகையாய் துடிக்கிறது வெறுப்பில்...
உன் ஆன்மா சாந்திகொள்ள தமிழன்னை அவள் தயை புரிவாள்…

மனஉலைச்சலுடன்
- அ. எல்றோய் -