ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

மூலதனத்துக்குப் பைத்தியம் முற்றும் போது, ஏகாதிபத்திய யுத்தங்கள் அரங்கேறுகின்றன

மூலதனத்தின் ஆன்ம ஈடேற்றத்துக்குத் தடையான அனைத்தையும் மூலதனம் தகர்த்தெறிகின்றது. இங்கு ஈவு, இரக்கம் என்று எதையும் மூலதனம் காட்டுவதில்லை. இன்றைய இந்த நவீன சமூகக் கட்டமைப்பு மூலதனத்தின் ஈடேற்றத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்தியப் பார்ப்பனர்கள் தனது சொந்த நலன் சார்ந்த சமூக ஈடேற்றத்துக்காக எப்படி சாதிகளை உருவாக்கினாரோ, அதேபோல் தான் இன்றைய நவீன நாகரிகக் கட்டமைப்பை மூலதனம் உருவாக்கியது, உருவாக்கி வருகின்றது. இந்த பொதுஅம்சம், மற்றவனை அழிப்பதையே அடிப்படையாகக் கொண்டது. மூலதனக் குவிப்புக்கு எதிரான அனைத்து விதமான போட்டியாளர்களையும் ஈவிரக்கமின்றி ஒடுக்குகின்றது. இதன் போது எங்கும் சமூக அராஜகத்தை ஆணையில் வைக்கின்றது. இது ஜனநாயகம், சுதந்திரம் என்ற பெயரிலேயே அரங்கேறுகின்றது. இதன் மூலம் மூலதனம் தங்கு தடையற்ற வகையில் வீங்கிச் செல்லுகின்றது.


தடையாக உள்ளவை அனைத்தையும் சமூகக் கட்டமைப்பிலான, ஒழுங்குமுறைக்குட்பட்ட சட்டதிட்டங்கள் மூலம், திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வன்முறை மூலம் தகர்க்கின்றது. இதன் போது ஈவிரக்கமற்ற வக்கிரத்துடன் களமிறங்குகின்றது. மூலதனத்தைக் குவிக்கின்ற போக்கில் ஏற்படுகின்ற தடைக்கு எதிராக ஏற்படும் பைத்தியம் முற்றும் போது, தவிர்க்க முடியாது ஏகாதிபத்திய மோதலாகத் தொடங்கி, அதுவே வெறிகொண்ட யுத்தமாக மாறிவிடுகின்றது. இது ஆரம்பத்தில் தணிவான தாழ்நிலையில் இரகசியமாகவும், (இது இரகசிய சதிகளுக்கு உட்பட்ட, எல்லைக்குள் பேசித் தீர்க்க முனைகின்றனர்), பகிரங்கமாகவும் ஏற்ற இறக்கத்துடன் தன்னை வெளிப்படுத்துகின்றது.


மூலதனம் தான் உருவாக்கிய சமூக அமைப்பில் சுரண்டப்படும் மக்களுக்கு வெளியில் சந்திக்கும் தடைகளில் மிகப் பிரதானமானது, எப்போதும், போட்டி மூலதனமே. இங்கு மூலதனத்துக்கு எதிரான வர்க்க மோதல்கள், இதன் மேல்தான் உருவாகின்றன. மூலதனத்துக்கு இடையிலான முரண்பாடு, ஏகாதிபத்திய மோதலாக, யுத்தமாகப் பிரதிபலிக்கின்றது. ஆனால் இது எப்போதும் வேறுயொன்றின் பின்னால் தன்னை மூடிமறைத்துக் கொண்டு, மக்களை அதற்கு பலியிடுகின்றனர். உலகச் சந்தையில் மூலதனத்துக்கு இடையில் நடக்கும் நெருக்கடிகள், அன்றாடம் ஒவ்வொரு செக்சனுக்குமுரிய ஒரு நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது. இதற்குள் நடக்கும் பேரங்களே ராஜதந்திரமாகக் காட்டப்படுகின்றது. இதன்போது ஒன்றையொன்று காலைவாரிக் கவிழ்த்துப் போட முனைகின்றது. போட்டி மூலதனத்தை எதிர்த்தே, சந்தை தனது செயல்பாட்டை களத்தில் வக்கிரமாகவே நடத்துகின்றது. அன்றாடம் நடக்கும் இந்த வர்த்தக நெருக்கடியில், ஒரே ஏகாதிபத்தியத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஒருபுறம் சந்திக்கும் அதேநேரம், மற்றைய ஏகாதிபத்தியப் போட்டியாளனை எதிர்கொண்ட பலமுனை முரண்பாடுகள் ஒருங்கே நிகழ்கின்றன.


ஒரே ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த மூலதனப் போட்டியாளர்கள் ஒரே சட்டவிதிகளுக்குள் இருந்து உருவாகுவதால், போட்டியை இலகுவாகவே மட்டுப்படுத்த முடிகின்றது. இந்தச் சட்டயெல்லை உள்ளூர்ப் போட்டியாளனைக் கட்டுப்படுத்தி ஒன்றையொன்று மேவி அழிப்பதற்கு ஏற்ற ஒரு அதிகார சமூக உறுப்பை, ஜனநாயகத்தின் பெயரில் மூலதனம் உருவாக்குகின்றது. இதன் மூலம் சொந்த நாட்டுப் போட்டியாளனை எதிர்கொள்வது இலகுவாகின்றது. இப்படி உருவாகும் அதிகார வர்க்கம் பெரும் மூலதனத்தை நேரடியாகச் சார்ந்து இருப்பதால், இலகுவாகவே போட்டி மூலதனங்களை அழித்தொழிப்பதற்கு சொந்த சட்டதிட்டம் மூலம் துணைசெய்கின்றனர். இதன் மூலம் உள்ளூர் மூலதனப் போட்டியாளனை இலகுவாக அழித்து விடமுடிகின்றது. ஆனால் மற்றைய ஏகாதிபத்தியப் போட்டியாளர்கள் அப்படி அல்ல. அவன் தனது நாடு என்ற எல்லையில், தனக்கான ஒரு அதிகார அமைப்பைச் சார்ந்த ஒரு சட்ட அமைப்பைச் சார்ந்து வாழ்கின்றது. இதனால் போட்டியாளனை எதிர்கொள்ளும் போது, சதியை அடிப்படையாகக் கொண்ட ராஜதந்திரப் பேச்சு வார்த்தைகள் முதல், பலாத்காரத்தின் எல்லை வரையிலான எல்லைக்குள் ஒன்றையொன்று தற்காத்தும், தகர்த்தும் மோதுகின்றன.


சர்வதேச ரீதியாக நடக்கும் போட்டி மூலதனத்தின் மோதல், அடங்காத வெறியுடன் பல்வேறு நாடுகளை அடிமைப்படுத்தி, சுரண்டவே கடுமையாக முயலுகின்றது. இதன் போது தமக்கு இடையிலான முரண்பாடுகளை எதிர்கொள்ள ஒவ்வொரு ஏகாதிபத்தியமும், இராணுவ மோதல் என்ற எல்லை வரை வன்முறைச் செயலில் குதிக்கின்றது. ஏகாதிபத்திய மோதலில் ஒரு முதிர்ந்த வடிவமாகவே, இராணுவ ரீதியான மோதல் பரிணமிக்கின்றது. மூலதனத்தின் எல்லாவிதமான கடைகெட்ட சமூக விரோதப் பாத்திரங்களினதும் ஒருங்கிணைந்த வடிவம் தான், இதற்கான அடிப்படையாக இருக்கின்றது. ஏகாதிபத்தியத்தின் கடைகெட்ட சமூக விரோத வக்கிரம், ஏகாதிபத்தியத்தின் தோற்றத்திலேயே அதன் உயிர்நாடியாகப் புழுத்துக் கிடக்கின்றது. இதன் அடிப்படையில் தான் லெனின் ஏகாதிபத்தியம் என்றால் என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்து முன்வைக்கின்றர்.


ஏகாதிபத்தியமானது


1. ஏகபோக முதலாளித்துவமாகும்.


2. புல்லுருவித்தனமான, அல்லது அழுகத் தொடங்கிவிட்ட முதலாளித்துவமாகும்.


3. அந்திமக்கால முதலாளித்துவமாகும்....



அதன் சாரப் பொருள்...


1. கார்ட்டல்கள், சிண்டிக்கேட்டுகள், டிரஸ்டுகள் முதலாளிகளது இந்த ஏகபோகக் கூட்டுகள் தோற்றுவிக்கப்படும் அளவுக்கு பொருளுற்பத்தியின் ஒன்றுகுவிப்பு வளர்ந்து விடுகிறது.


2. பெரிய வங்கிகளின் ஏகபோகநிலை....


3. மூலப்பொருட்களுக்கான ஆதாரங்களை முதலாளித்துவ டிரஸ்டுகளும் நிதி ஆதிக்கக் கும்பலும் கைப்பற்றிக் கொண்டு விடுகின்றன...


4. சர்வதேசக் கார்ட்டல்கள் உலகைத் தம்மிடையே கூறுபோட்டு பாகப்பிரிவினை செய்து கொள்வது ஆரம்பமாகிவிட்டது....


5. உலகின் பிரதேசம் (காலனிகள்) பங்கிட்டுக் கொள்ளப்படுதல் நிறைவுற்றுவிட்டது.... ஏகாதிபத்தியத்தை இனம் கண்டு கொள்வதற்குரிய அடையாளமாய் இருப்பது தொழிற்துறை மூலதனத்தின் ஆதிக்கம் அல்ல, நிதி மூலதனத்தின் ஆதிக்கமே ஆகும்'' என்றார் லெனின்.


ஏகாதிபத்தியம் பற்றி மிகச் சாலச் சிறந்த எடுப்பான அடிப்படைகளே, இன்று மேலும் துல்லியமாகக் காணப்படுகின்றன. உலகின் மூலை முடுக்கு எங்கும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவதிலும், அதிகாரத்தை அதன் மேல் செலுத்துவதிலும் மூலதனம் உயர்ந்தபட்ச நிலையைத் தொட்டு நிற்கின்றது. நிதி மூலதனத்தின் ஆதிக்கம், உலகையே விசுவாசமாக வாலாட்டும் வளர்ப்பு அடிமையாக்கி விட்டது. ஆனால் இது பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்து காணப்படுகின்றது. இதனால் ஏகாதிபத்திய முரண்பாடுகள் தணலாக மாறிச் சிவந்து கிடக்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானுக்கு இடையிலான, ஏகாதிபத்திய பிரதான முரண்பாடுகள், கடும் மோதல் நிலையில் நடக்கின்றது. இதனால் அன்றாடம் மூலதனச் சந்தையில், பெரும் அதிர்வுகள் நடந்த வண்ணமே உள்ளது. செல்வம் சிறகு முளைத்து அங்குமிங்கும் பறந்தோடுகின்றது. வர்த்தகம் ஒரு சதிவலையாக, சதிக்கிடங்காக மாறிக் கிடக்கின்றது. இங்கு மோசடியும், சூதாட்டமும் வர்த்தகமுமே ஆன்மாவாகி, உலகை அங்குமிங்குமாக அலைக்கழித்துச் செல்கின்றது. எங்கும் நிலையாத தன்மை, வர்த்தகச் சந்தையில் பெரும் பீதியை ஆணையில் நிறுத்தி விடுகின்றது. 24 மணி நேரத்தில் வரும் ஒவ்வொரு வினாடியும் கண்விழித்து சதிகளைத் தீட்டுவதே, இன்றைய நவீன திட்டமிடலாகயுள்ளது. இதையே இராஜதந்திரம் என்று வாய் கூசாது பிரகடனம் செய்கின்றனர்.


இப்படி ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் பற்றி லெனின் கூறிய கூற்றுகள், உலகமயமாதலில் இன்றும் மிகச் சரியாகவும், சிறப்பாகவும், எடுப்பாகவும் இருக்கின்றன. லெனின் இது பற்றி என்ன கூறுகின்றார் எனப் பார்ப்போம். ""ஏகபோகத்துக்கும் அதன் கூடவே இருந்துவரும் தடையில்லாப் போட்டிக்கும் இடையேயுள்ள முரண்பாடு (பிரம்மாண்டமான இலாபங்களுக்கு) தடையில்லாச் சந்தையிலான "நேர்மையிலான' வாணிபத்துக்கும் இடையிலான முரண்பாடு ஒரு பக்கம் கார்ட்டல்களும் டிரஸ்டுகளுடனானவற்றுக்கும் மறுபக்கம் கார்ட்டல் மயமாகாத தொழிலுக்கும் இடையிலான முரண்பாடு'' ஏகாதிபத்தியத்தின் ஆழமானதும் மோதலுக்குமுரிய அடிப்படை முரண்பாடு என்Ùர் லெனின். இது இன்று பன்னாட்டு தேசங்கடந்த மூலதனத்துக்கும் அப்படியே பொருந்தி நிற்கின்றது. எங்கும் ஒரு அதிகாரத்துடன் கூடிய சதி கட்டமைக்கப்படுகின்றது. வர்த்தகச் சந்தையை திட்டமிட்டே கவிழ்த்து விட்டு, அதை கைப்பற்றுகின்றனர். சந்தை பேரங்கள் முதல் கையூட்டுகள் (லஞ்சம்) கொடுத்தும் கவர்ந்தெடுக்கப்படுகின்றது. தமக்கு இசைவான வகையில் மற்றைய நாட்டுச் சட்டத்திட்டங்களையே திருத்தி விடுகின்றனர் அல்லது மாற்றி விடுகின்றனர். ஏகாதிபத்தியமல்லாத நாடுகளின் கழுத்தில் காலை வைத்தபடிதான், ஒப்பந்தங்களை ஏகாதிபத்தியங்கள் அமைதியாகவே திணிக்கின்றன. அங்கும் இங்குமாகக் கையெழுத்தான ஒருதலைப்பட்சமான ஒப்பந்தங்கள் மக்களுக்கு எதிராகச் செயல்படுத்துவதே இன்றைய அரசுகளின் நவீன கடமையாகி விட்டது. தடையில்லாத சந்தையின் நேர்மையான வர்த்தகம் என்பதைக் கூட, எதார்த்தத்தில் மறுக்கின்றது. மூலதனம் தனது விரிவாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தனது சொந்தக் கோட்பாட்டை மீறி, அடத்தாகவே தனது சொந்த விதியையே மறுத்து வீங்குகின்றது. இன்று ஆளும் வர்க்கங்கள் தங்களைத் தாம் பாதுகாக்க உருவாக்கிய ஜனநாயகத் தேர்தல் முறையைக் கூட, ஆளும் வர்க்கங்கள் முறைகேடாக எப்படிக் கையாளுகின்றதோ அதே போல்தான் வர்த்தகத்திலும் நடக்கின்றது.


மூலதனம் உலகளவிலான சூறையாடலுக்கான மேலாதிக்கத்துக்காக நடத்தும் மோதலினால் ஏற்படும் விளைவுகள், அனைத்து நாடுகளிலும், அனைத்து மக்களிலும் பட்டுத் தெறிக்கின்றது. இதன் போதுதான் சமாதான உலகம் பற்றியும், மனித சுதந்திரம் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் வாய்கிழிய ஓதி அரங்கேற்றுகின்றனர். இதை மூடிமறைக்கவே, மனித குலத்தைப் பிளந்து அதில் குளிர் காய்கின்றது ஏகாதிபத்தியம். மக்களுக்கு இடையில் திட்டமிட்டே மோதல்களை உற்பத்தி செய்கின்றனர். இதன் மூலம் மனித இனப் பிளவுகளின் மேல் கொள்ளை அடிப்பவர்கள், தம்மைத் தாம் தற்காத்துக் கொண்டு, கொடூரமான முகத்துடன் களத்தில் புதுவடிவம் எடுக்கின்றனர். இதன் ஒரு அங்கமாக உருவானதே உலகமயமாதல்.


இதன் போது எங்கும் அமைதி பற்றியும், சமாதானம் பற்றியும் உரத்துப் பேசுகின்றனர். எங்கும், அனைத்துத் துறைகளிலும் படுமோசமான வன்முறையே நவீனமாகின்றது. இதை நியாயப்படுத்தி அல்லது மூடிமறைக்கும், முதுகு சொறியும் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், தமது சொந்த ஜனநாயகத்தின் பெயரால் மக்களின் முதுகில் ஏறி அமருகின்றனர். அமைதியான, சமாதானமான உலகம் பற்றி, வண்ணவண்ணமான கோட்பாடுகளை முன்வைக்கின்றனர். மனித இனத்தைச் சுரண்டிக் கொழுக்கும் மனிதவிரோத, சமூகவிரோத செயலையிட்டு, இந்த ஜனநாயக எழுத்தாளர்கள் யாரும் எப்போதும் கவலைப்படுவது கிடையாது. இந்தக் கொடுமையை எதிர்த்துப் போராடுவதையே, இவர்கள் கோட்பாட்டு ரீதியாக எப்போதும் மறுத்துரைக்க முனைகின்றனர். சமாதானமாகச் சுரண்டும் உலக அமைதிக்கும், சுதந்திரமாகச் சுரண்டும் உரிமைக்கும் எதிராகப் போராடுபவர்களையே, சமாதானத்தின் எதிரிகளாக இவர்கள் சித்தரிப்பவர்களாக உள்ளனர். மனித உழைப்பு மற்றொருவனால் சுரண்டப்படுவதே, உலகின் சமாதானத்துக்குச் சவாலாகின்றது என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை அல்லது சிலர் சடங்குக்காக அதை ஒத்துக் கொண்டு அதற்கு எதிராகவே எதார்த்தத்தில் உள்ளனர். இதை இட்டு இவர்கள் கவலை கொள்ளாத ஒரு நிலையிலும், ஏகாதிபத்தியத்துக்கு இடையில் மூலதனம் உருவாக்கும் பிரதான முரண்பாடு, அமைதிக்கும் சமாதானத்துக்கும் எதிராக செயல்படுவதை மூடிமறைப்பதே இன்றைய இலட்சியமாகி விடுகின்றது. இந்த மூலதனத்துக்கு இடையிலான மோதல், மனித இனத்தையே அழித்துவிடும் என்ற உண்மையைக் கூட கண்டு கொள்வதை திட்டமிட்டே மூடி மறைக்கின்றனர். இன்று மூலதனத்துக்கு இடையிலான மோதல் உலக அமைதிக்கும், சமாதானத்துக்கும் ஆபத்தான ஒன்றாகவே வளர்ச்சியுற்று வருகின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முதல் இரண்டு உலக யுத்தங்களும், மூலதனத்துக்கு இடையேதான் நடந்தன. ஏகாதிபத்திய சகாப்தம் முதல் இன்று வரையில், நாடுகளுக்கு உள்ளேயான வர்க்கப் போராட்டம் அல்லாத அனைத்து மோதல்களும் கூட ஏகாதிபத்திய மூலதனத்துக்கு இடையிலானதாகவே இருந்தது. ஆனால் இதை வெறும் தனிநபர்கள், சிறு குழுக்கள் சார்ந்தாகக் கட்டுவது, மூலதனத்தின் தந்திரமான விளையாட்டாக உள்ளது. இதையே பற்பல ஜனநாயக எழுத்தாளர்களும் பிரதிபலித்து, எதிரொலிக்கின்றனர்.


இந்த மோசடித்தனமான கூச்சல் அன்று முதல் இன்று வரை ஒரேவிதமாக பல வண்ணத்தில் அரங்கேறுகின்றது. லெனின் இதைத் தனது காலத்தில் எதிர் கொண்ட போதே, அதை அம்பலப்படுத்தினார். ""சர்வதேசக் கார்ட்டல்கள், மூலதனம் சர்வதேசியமயமாக்கப்படுதலின் மிகவும் எடுப்பான வெளிப்பாடுகளில் ஒன்றாகுமாதலால், முதலாளித்துவத்தில் தேசங்களிடையே சமாதானம் மலர்வதற்கான நம்பிக்கையை அளிப்பனவாகும் என்ற கருத்தைச் சில முதலாளித்துவ எழுத்தாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். தத்துவார்த்தத்தில் இந்தக் கருத்து அறவே அபத்தமானது, நடைமுறையில் குதர்க்க வாதமும், படுமோசமான சந்தர்ப்பவாதத்தை நேர்மையற்ற முறையில் ஆதரித்து வாதாடுவதுமே ஆகும் என்றார். இந்த உண்மை இன்று பரந்த தளத்தில், ஜனநாயகத்தின் பெயரில் நடக்கின்றது. சமாதானம், அமைதி, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் எதிர்களாக, மக்களுக்காகப் போராடுபவர்கள் மீது அவதூறாக சுமத்தப்படுகின்றது. உலகின் எஞ்சி இருக்கும் சுதந்திரம், ஜனநாயகம் என அனைத்தையும் படிப்படியாக அழித்துவரும் மூலதனம், இதை மற்றவர்கள் மேல் சுமத்தி விடுகின்றனர். யாரிடம் வாழ்வதற்கான அடிப்படையான வாழ்க்கை ஆதாரப் பொருட்கள் தாராளமாக உள்ளனவோ, அவர்கள் மட்டும் தான், குறைந்தபட்சம் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நினைத்துப் பார்க்கமுடியும். மற்றவனிடம் கையேந்தி நிற்கும் ஒருவன் எப்படி சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நினைத்துப் பார்க்க முடியும். தான் நினைத்ததைச் சொல்லவும், அதை எழுதவும் கூட முடியாத வகையில், மூலதனம் அனைத்து ஊடக வடிவங்களையும் கூடக் கைப்பற்றி வைத்துள்ளது.


இந்த நிலையில் உலகத்தில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் எப்படி இருக்கமுடியும். அமைதி முதல் சமாதானத்துக்கு எதிராக மூலதனம் நடத்தும் மோதல்கள் தான், உலக அமைதிக்கு சவால்விடுகின்றது. இதனடிப்படையில் மூலதனம் தமக்கு இடையில் அன்றாடம் மோதுகின்றது. மனிதனைப் பட்டினி போட்டே மனித இனத்தைக் கொன்று போடுகின்றது. வாழ்க்கை ஆதாரப் பொருட்களைக் கைப்பற்றி வைத்துள்ள மூலதனத்துக்கு எதிராகப் போராட வைக்கின்றது. மக்கள் கிளர்ந்து எழுவது ஒருபுறம் நடக்க, மறுபுறத்தில் ஒழுங்குப்படுத்தப்பட்ட வடிவில் உருவாகாத எதிர்வினைகள் அரங்கேறுகின்றன. இது மக்களின் பெயரில் நடக்கும் உதிரியான கொள்ளை, கொலை முதல் தனிநபர் பயங்கரவாதம் வரை விரிந்து செல்கின்றது. ஏகாதிபத்தியம் மறுபுறத்தில் எல்லாவிதமான கொள்ளையையும், சூறையாடலையும், மனிதப் படுகொலைகளையும் கவர்ச்சிகரமாக மூடிமறைத்தபடி, மற்றவர்கள் மீது அதை குற்றம் சுமத்துகின்றனர். கேடுகெட்ட மூலதனத்தின் வல்லான்மையின் துணையுடன், உண்மைகளையே கவிழ்த்துப் போடுகின்றனர். பணத்துக்குப் பல் இளித்து நக்கிப் பிழைக்கும் அறிவுத்துறையினர், உலகத்தையே தம்மையொத்த பன்றிகளின் கூடாரமாக்குகின்றனர்.


எதிர்மறையில் உலக எதார்த்தம் நிர்வாணமாகவே நிற்கின்றது. ஏகாதிபத்திய முரண்பாடே பிரதான முரண்பாடாக, மூலதனத்தின் முன்னே நின்று பேயாட்டமாடுகின்றது. முன்பே இந்த நூலில் சில அடிப்படையான புள்ளிவிபரத் தரவுகளை இதனடிப்படையில் பார்த்தோம். ஏகாதிபத்தியங்களான ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்காவுக்கு இடையில் மூலதனங்கள் எப்படி அங்குமிங்குமாக அலைபாய்கின்றது என்பதைக் கண்டோம். மூலதனம் நிம்மதியற்று, பைத்தியம் படித்த நிலையில் அங்குமிங்குமாகத் தாவிக் குதறுகின்றது. இதை நாம் மேலும் குறிப்பாகப் பாப்போம்.


உலகில் உள்ள 200 முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள், உலகமயமாதல் பொருளாதார நெருக்கடிக்குள் அமெரிக்காவுக்கும் ஜப்பனுக்கும் இடையில் எப்படிக் கைமாறியது எனப் பார்ப்போம்.

ஆண்டு - நாடு - பன்னாட்டு நிறுவன எண்ணிக்கை - வருமானம் கோடி டாலரில்

1982 ஜப்பான் 35 65,700
1982 அமெரிக்கா 80 1,30,000
1992 ஜப்பான் 54 2,00,000
1992 அமெரிக்கா 60 1,70,000
1995 ஜப்பான் 58 2,70,000
1995 அமெரிக்கா 59 2,00,000

14 வருடங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தரவு, அங்கும் இங்குமாக மூலதனம் நடத்திய குழிபறிப்புகளின் வெட்டுமுகத் தோற்றமே இது. இவை ஒரு இழுபறியான மோதலாக மாறி, அரங்கில் உண்மைக் காட்சியாகியுள்ளது. 1982இல் முன்னணி 200 நிறுவனங்களில் ஜப்பான் 35 பன்னாட்டு நிறுவனங்களை சொந்தமாக கொண்டிருந்தது. இது 1992இல் 54ஆகவும், 1995இல் 58ஆகவும் அதிகரித்தது. அமெரிக்காவோ 1982இல் மிகப்பெரிய 200 நிறுவனங்களில் 80 பன்னாட்டு நிறுவனங்களை சொந்தமாகக் கொண்டிருந்தது. இது 1992இல் 60ஆகவும், 1995இல் 59ஆகவும் குறைந்தது. மறுபக்கம் இந்த நிறுவனங்கள் சார்ந்த மூலதன திரட்சி 1982இல் ஜப்பான் 65,700 கோடி டாலரை கொண்டு 35 பன்னாட்டு நிறுவனங்கள் காணப்பட்டது. இது 1992இல் 54 ஆகிய அதேநேரம் மூலதனம் 2,00,000 கோடி டாலராகியது. 1995இல் 58 நிறுவனத்தை சொந்தமாகக் கொண்டு 2,70,000 கோடி டாலரை சொந்தமாக்கியது. அமெரிக்கா 1982இல் 80 பன்னாட்டு நிறுவனத்தைக் கொண்டு 1,30,000 கோடி டாலரை சொந்தமாகக் கொண்டிருந்தது. 1992இல் பன்னாட்டு நிறுவனங்கள் 60ஆக குறைந்ததுடன் 1,70,000 கோடி டாலரையும், 1995இல் 59 நிறுவனத்துடன் 2,00,000 கோடி டாலரைக் கொண்டு ஜப்பானுக்கு கீழ் சரிந்து சென்றது. இது ஒன்றையொன்று உறிஞ்சியதையும், ஏகாதிபத்திய முரண்பாடுகளையும் எடுத்துக் காட்டுகின்றது. மூலதனம் தனக்கிடையில் ஒரு நிலையற்ற தன்மையை அடைவதுடன், மோதல் போக்குக் கொண்ட நெருக்கடியை அன்றாடம் சந்திப்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. இதுவே ஏகாதிபத்திய முரண்பாடாக இருப்பதுடன், இதுவே இராணுவ மோதலுக்குரிய முதிர்வு நிலையை அடைகின்றது. உலகச் சந்தை மறுபடியும் மீளப் பகிர்வதன் மூலமே, மூலதனம் தப்பிப் பிழைக்க முனைகின்றது.


மக்களை மிக அதிகளவில் சூறையாடுவதையே, மூலதனத்துக்கு இடையிலான முரண்பாடு கோருகின்றது. மக்களின் அடிப்படையான வாழ்வியல் கூறுகளை மூலதனம் ஒழித்துக் கட்டுவதன் மூலம், தன்னை தற்பாதுகாத்துக் கொள்ள முனைகின்றது. இதனால் இதை எதிர்த்து கீழ் இருந்து எழும் வர்க்கப் போராட்டம், மூலதனத்தின் முரண்பாட்டை மேலும் கூர்மையாக்குகின்றது. இது தொடர்ச்சியானதும், ஏற்றமும், இறக்கமும் கொண்ட ஒரு அலையாகவே எதார்த்தத்தில் எழுகின்றது.
இந்த முரண்பாடு பல பத்து வருடங்களில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது. 1960இல் அமெரிக்கா ஜப்பானுக்கு 160 கோடி டாலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்த அதேநேரம், 110 கோடி டாலருக்கு பொருட்களை இறக்குமதி செய்தது. 1984இல் அமெரிக்கா 3,815 கோடி டாலர் பெறுமதியான பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்த அதேநேரம், 3360 கோடி டாலருக்கு பொருட்களை இறக்குமதி செய்தது. 1988இல் அமெரிக்கா 6,560 கோடி டாலர் பெறுமதியான பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்த அதேநேரம், 5,920 கோடி டாலருக்கு பொருட்களை இறக்குமதி செய்தது. தமக்கு இடையிலான வர்த்தகம் அதிகரித்த அதே நேரம், சர்வதேச ரீதியான வர்த்தகத்தில் பிளவுகள் அதிகரித்தது. ஜப்பான் 196080 இடையில் தனது பொருளாதார வளர்ச்சியை 300 மடங்காக அதிகரித்த போது, சந்தையில் புதிய நெருக்கடிகள் உருவானது. சந்தையை கட்டுப்படுத்தி வைத்திருந்தவர்கள் அதைத் தக்கவைக்க ஜப்பானுடன் மோதவேண்டிய சூழல் உருவானது. உலகளவில் ஜப்பானின் வர்த்தகம் விரிந்தபோது, உள்நாட்டில் செழிப்பு உருவானது. 1960இல் ஜப்பானின் தலா வருமானம் அமெரிக்க தலா வருமானத்தில் 30 சதவீதமாக இருந்தது. இது 1980இல் 70 சதவீதமாக வளர்ச்சி கண்டது. பெரும் மூலதனத்தின் கொழுப்பு ஏறியபோது, பணக்காரக் கும்பலின் தனிநபர் வருமானம் ஜப்பான் மக்களின் வாழ்வையே நாசமாக்கத் தொடங்கியது. ஏகாதிபத்திய முரண்பாடுகள் உலகச்சந்தையை அங்கும் இங்குமாகப் புரட்டிப் போட்ட அதேநேரம், ஏகாதிபத்தியத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வுகள் சூறையாடப்படுவது அதிகரித்தது.


ஜப்பான் மற்றும் ஜெர்மனிய ஏகாதிபத்தியங்களின் பொருளாதார மீட்சி, ஏகாதிபத்திய மோதலைக் கூர்மையாக்கியது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்கப் பொருளாதாரம் பெற்ற மேன்மையான அனுகூலங்கள் தொடர்ச்சியான இழப்புக்குள்ளாகின. இந்த மோதல் உலகளாவிய வர்த்தகத்தை வெம்பவைத்து, வீங்கி அதிகரிக்க உதவிய அடுத்த கணமே, வீழ்ச்சியும் அதன் பின்னாலே அலை மோதுகின்றது. மூலதனத்தைக் கொழுக்க வைக்கும் வர்த்தக இயங்கியல் விதி என்பது, ஏற்றத்தையும் இறக்கத்தையும் ஒருங்கே கொண்டது. எங்கேயோ ஒரு இடத்தில் நடக்கும் இழப்புத் தான், மற்றொரு பக்கத்தில் குவிப்பாகின்றது. உதாரணமாக 1969இல் அமெரிக்கா நாளாந்தம் 100 கோடி டாலருக்கு அந்நியச் செலாவணி வியாபாரத்தை செய்தது. இது 1983இல் 3400 கோடி டாலராகியது. உலக ரீதியில் இது 750 கோடியில் இருந்து 20,000 கோடி டாலராகியது. 1969இல் அமெரிக்காவின் உலகளாவிய வர்த்தகத்தின் பங்கு 7.5 க்கு ஒன்றாக இருந்தது. இது 1983இல் 5.8க்கு ஒன்றாகியது. வர்த்தக நெருக்கடி தொடராகவே உருவாகின்றது. உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவின் பங்கு 19691983க்கும் இடையில் அதிகரித்த போது, இழப்பு மூன்றாம் உலக நாடுகளினதும் மக்களினதும் தலைகள் மீது நடந்தது. ஆனால் இந்த வர்த்தக அதிகரிப்பு, அமெரிக்காவின் உலகளாவிய வர்த்தக ஆதிக்கத்தைத் தக்க வைக்கவில்லை. மற்றைய ஏகாதிபத்தியத்துடனான போட்டியில் அதை இழப்புக்குள்ளாகியது.


அமெரிக்கா 1950இல் உலகச் சந்தையில் 50 சதவீதத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது. இது 1988இல் 25 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 1965இல் 65 சதவீதமாக இருந்த அமெரிக்க வாகன உற்பத்தி ஆதிக்கம், 1980இல் 20 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. 198084 இடையில் தனது மொத்த ஏற்றுமதிச் சந்தையில் 23 சதவீதத்தை இழந்தது. 1955இல் எஃகு உற்பத்தியில் 39.3 சதவீதத்தை வைத்திருந்த அமெரிக்கா 1975இல் 16.4 சதவீதமாகக் குறைந்து போனது. இது 1984இல் 8.4 சதவீதமாகியது. அதாவது 19731983க்கு இடையில் எஃகு உற்பத்தி 44 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. 1950இல் அமெரிக்கச் சந்தையில் அமெரிக்கப் பொருட்கள் 95 சதவீதத்தை வழங்கியது. இது 1984இல் 60 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. 40 சதவீதம் அமெரிக்கா அல்லாத அன்னியப் பொருட்களால் அமெரிக்கச் சந்தை நிரம்பியது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பாக சந்தை மீதான நெருக்கடி தொடர்ச்சியாக, மிகவும் கடுமையாகி வருகின்றது. இது உலகளாவிய சந்தைகளில் மட்டுமல்ல, உள்நாட்டிலும் இது பொருந்துகின்றது. அமெரிக்கா வகித்த மேன்மையான பொருளாதாரம், படிப்படியாகத் தகர்ந்து வருகின்றது. இது மூன்றாம் உலக யுத்தத்துக்கான ஒரு புதியநிலைக்கு உந்தித் தள்ளுகின்றது. தன்னைத் தான் தக்கவைக்க இராணுவ ரீதியான ஒரு தாக்குதல் யுத்தத்தை, அமெரிக்கா உலகளாவிய ரீதியில் மற்றைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வலிந்து தொடங்கியுள்ளது. எந்த மூன்றாம் உலக நாடுகளில் தலையிட்டாலும், ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாட்டில் இருந்தே இவை தொடங்குகின்றது. இது சோவியத் சிதைவின் பின்பான, புதிய ஒரு உலக நிலையாகும். ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாடே, மூலதனத்துக்கு முதன்மை முரண்பாடாகியுள்ளது. எங்கும் ஒரு மூடி மறைக்கப்பட்ட இரகசிய யுத்தம் நடக்கின்றது. இது பகிரங்கமாக அரங்கேறுவது அதிகரிக்கின்றது. இது முழுமையான ஒரு ஏகாதிபத்திய உலக யுத்தமாக மாறுவதை பின்போடவும், அதில் இருந்து தப்பிப் பிழைக்கவும், மூன்றாம் உலக நாடுகள் மேலான சுரண்டல் கடுமையாகி தீவிரமாக்குகின்றனர். இதன் மூலம் பொருளாதார நெருக்கடிகள், ஒரு இராணுவ மோதலாக மாறுவதை பின்போடுகின்றனர்.


இந்தப் பொருளாதார நெருக்கடி பிரிட்டனுக்கும் கடுமையாக ஏற்பட்டது. முன்னாள் காலனிகளைக் கொண்டு பிரிட்டிஷ் மூலதனம் செழித்தோங்கிய காலம் கனவாகிவிட்டது. உலகம் மறுபங்கீடு செய்யப்பட்ட புதிய நிலையில் கடுமையான முரண்பாடுகளுடன் உள்ளது. பிரிட்டன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, தனது தங்கக் கையிருப்பில் இருந்த 145 டன் தங்கத்தை 19992002க்கு இடையில் விற்றது. இன்று மூலதனம் உருவாக்கும் ஏகாதிபத்திய நெருக்கடி என்பது ஒரு நிகழ்ச்சிப் போக்காகிவிட்டது. பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி வீதம் மந்த நிலைக்குள் சென்றுள்ளது. இது உலகளவில் மூலதனத்துக்கு இடையிலான மோதலைத் தோற்றுவிக்கின்றது. இதுவும் ஏகாதிபத்திய மோதலாக அரங்கில் பிரதிபலிக்கின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பொருளாதார நெருக்கடி, தவிர்க்கமுடியாது பொருளாதார வளர்ச்சி விகிதத்தை மந்த நிலைக்குள் நகர்த்துகின்றது. அதிரடியான பொருளாதாரத் தேக்கம், மூலதனத்துக்கு பீதியை உருவாக்குகின்றது.


உலகின் பிரதான நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீதங்கள்

1950 - 1960 - 1970 - 1980 - 1990 - 1996

அமெரிக்கா 8.7 2.2 0.0 0.5 1.2 1.5
ஜப்பான் 10.3 13.1 10.2 3.6 4.8 1.5
மேற்கு ஜெர்மனி 19.4 8.7 5.0 1.0 5.7 1.5
பிரிட்டன் 3.5 5.6 2.3 2.2 0.4 2.2
சீனா 11.4 5.5 15.5 4.2 3.3 9.3

பொருளாதார வளர்ச்சி வீதத்தில் சீனா மட்டும் விதிவிலக்காகும். இதை நாம் பின்னால் தனியாகப் பார்ப்போம். ஜப்பான், ஜெர்மனி என்பன இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பாக பொருளாதார ரீதியாக மீண்ட போது ஏற்பட்ட வளர்ச்சி, 1990களுடன் முடிவுக்கு வந்து விடுகின்றது. 1990ஆம் ஆண்டு இரண்டு ஜெர்மனிகளும் இணைக்கப்பட்ட போது ஏற்பட்ட அதியுயர் சுரண்டல் சார்ந்த சந்தையில், ஒரு திடீர் வீக்கமே இறுதியான வளர்ச்சியாகக் காணப்பட்டது. பின் ஏகாதிபத்திய முரண்பாடுகள் கூர்மையடைந்து நெருக்கடியான எல்லைக்குள் உலகம் புகுந்துள்ளது. இதில் இருந்து மீள உருவான உலகமயமாதல் கூட, அவர்களுக்கு இடையிலான நெருக்கடியை மட்டுமல்ல, பொருளாதார மீட்சியையும் மீட்டு விடவில்லை. ஏகாதிபத்தியப் பொருளாதாரம் ஒரு நெருக்கடி ஊடான வீழ்ச்சியையே சந்தித்தது, சந்திக்கின்றது. சந்தித்து வருகின்றது. இவை எல்லாம் மூன்றாம் உலக நாடுகளிடம் இருந்து வருடாந்தம் 35,000 கோடி டாலருக்கு மேலாக அறவீடும் வட்டி மற்றும் கடன் மீட்பு என்ற ஏகாதிபத்தியத்தின் பொற்காலத்தில் தான், ஏகாதிபத்திய நெருக்கடிகள் அக்கம்பக்கமாக காணப்படுகின்றன. உண்மையில் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து கொள்ளையிடும் பெரும் தொகை செல்வத்தினால் தான் இன்று தப்பிப் பிழைத்து உயிர் வாழ்கின்றது. இதைக் கொண்டு தான் உலகமயமாதலை ஏகாதிபத்தியம் தனக்குத் தானே பூச்சூட்டுகின்றனர்.



உலகமயமாதலூடாக தப்பிப் பிழைக்கும் பொருளாதாரக் கட்டமைப்புக்குள், மூன்றாம் உலக நாடுகளைக் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய வடிவங்கள் பலவகைப்பட்டது. உதாரணமாக 1977இல் அமெரிக்காவின் தேசங்கடந்த தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்த மூலதனம் 2,11,750 கோடி இந்தியா ரூபாவாகும். ஆனால் இவை அந்நிய நாடுகளில் தொழில் வர்த்தகம் மூலம் கட்டுப்படுத்திய வரவு செலவு 11,34,000 கோடி இந்தியா ரூபாவாகும். அதாவது இது ஐந்து மடங்காகும். எங்கும் ஒரு அராஜகம் மூலம், மனித சமூகத்தை சூறையாடித்தான் ஏகாதிபத்தியங்கள் நீடிக்கின்றன. 1976இல் வர்த்தக ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 12.8 சதவீதமாகும். அதாவது 1,34,100 கோடி இந்தியா ரூபாவாக இருந்தது. அந்நிய வர்த்தகத்தில் உபரி லாபமாக அமெரிக்காவுக்கு கிடைத்த தொகையோ 35,000 கோடி இந்தியா ரூபாவாகும். 1976இல் நேரடி முதலீட்டின் மூலம் வெளிநாடுகளில் இருந்து லாபமாக கொள்ளையிட்ட தொகை 39,200 கோடி இந்தியா ரூபாவாகும். இதைவிட 1977இல் சேவைத்துறை, தொழில்நுட்ப வர்த்தக உபரி மட்டும் 1,00,725 கோடி இந்தியா ரூபாவாக இருந்தது. ஏகாதிபத்தியத்தின் கொள்ளைகள் பற்பல வழிகளில் சூக்குமமாகவே நடக்கின்றது. மூன்Ùம் உலக நாடுகள் 2003இல் வட்டியாகவும், மீள் கொடுப்பனவாகவும் கொடுத்த தொகை 35,000 கோடி டாலர். அதாவது அண்ணளவாக 17,50,000 கோடி இந்தியா ரூபாவாகும்.


எப்படி ஏகாதிபத்திய உலகமயமாதல் சகாப்தம் தப்பி பிழைக்கின்றது என்பதை, இந்தக் கொள்ளை தெளிவாகவும் சிறப்பாகவும் எடுத்துக்காட்டுகின்றது. மூன்றாம் உலக நாடுகள் வட்டி கொடுத்தலை நிறுத்தினால் ஏகாதிபத்திய உலக சகாப்தமே தகர்ந்துபோகும். ஏகாதிபத்தியங்களின் வரவு செலவில் மூன்றாம் உலக நாடுகள் கட்டும் வட்டி மற்றும் மீள் வரவு, எந்தப் பங்கை வகித்து வருகின்றது என்பதை ஒப்பீட்டளவில் ஆராய்வோம்.

சில ஏகாதிபத்தியங்களின் தேசிய வருமானம் கோடி டாலரில்


மூன்றாம் உலக நாடுகள் ஏகாதிபத்தியத்துக்கு கட்டும் வட்டி மற்றும் மீள் கொடுப்பனவுகள் கனடா ஏகாதிபத்தியத்தின் மொத்த தேசிய வருமானத்தில் 56 சதவீதமாகும். 1999இல் மூன்றாம் உலக நாடுகளின் கடன் 2,43,000 கோடி டாலராகவும், வட்டி மற்றும் மீள் கொடுப்பனவு 36,000 கோடி டாலராகவும் இருந்தது. இந்த கடன் அமெரிக்காவின் மொத்த தேசிய வருமானத்தில் 26.5 சதவீதமாக இருந்தது. இது ஜெர்மனி தேசிய வருமானத்தை விட அதிகமாகவும் காணப்பட்டது. பிரான்சின் தேசிய வருமானத்தை விடவும் இரண்டு மடங்கு அதிகமாகவே மூன்றாம் உலக நாடுகளின் கடன் இருந்தது. கனடாவின் தேசிய வருமானத்தை விடவும், நான்கு மடங்கு அதிகமாக மூன்றாம் உலக நாடுகளின் கடன் காணப்பட்டது. ஏகாதிபத்தியத்தின் வரவுகளில் வட்டி மற்றும் மீள் கொடுப்பனவு முக்கியமான ஒன்றாகி விட்டது. இப்படி ஏற்றுமதி, நேரடி வர்த்தகம், மறைமுக வர்த்தகம், பங்குச்சந்தை, மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதி பொருட்களின் மீது திட்டமிட்டு உருவாக்கும் விலை குறைப்பு என்ற ஒரு சுற்று வழிப்பாதையிலான பெரும் கொள்ளைகள் மூலம் தான் ஏகாதிபத்தியம் தப்பிப் பிழைக்கின்றது.


இப்படி தப்பிப் பிழைக்கும் ஏகாதிபத்தியத்தின் மொத்த தேசிய வருமானம் கூட, ஏகாதிபத்திய முரண்பாடுகளால் கூடிக்குறைந்து செல்வதை நாம் மேலே காணமுடிகின்றது. உதாரணமாக ஜப்பானை எடுப்பின் 1987யுடன் 1988 ஒப்பிடின் வருடாந்தர வருமானத்தில் 41,400 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பை 1994யுடன் 1998யை ஒப்பிடின் 90,700 கோடி டாலர் இழப்பாக இருந்தது. இப்படி பல நாடுகளில் தேசிய வருமானம் ஏற்ற இறக்கம் கொண்டதாக அங்கும் இங்குமாக மற்றைய ஏகாதிபத்தியத்துடன் மோதியே வெளிவருகின்றது. ஒன்றையொன்று மிஞ்சமுனையும் அதே தளத்தில், ஏழை நாடுகளை கடுமையாகச் சூறையாடி தம்மைத் தக்கவைக்கவே முனைகின்றது.


ஏகாதிபத்திய கூர்மையான முரண்பாடுகளின் இடையே நடக்கும் ஏற்றுமதி இறக்குமதி குறித்து ஆராய்வோம். 1973க்கும் 1987க்கும் இடையிலான காலத்தில் நடந்த ஏற்றுமதி இறக்குமதியை இந்த அட்டவணை ஆராய்கின்றது.



மற்றையவை முதல் 40க்குள் இல்லை.


1998இல் 92 சதவீதமான ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியமுதல் 30 நாடுகளும் சதவீதத்தில்

ஐரோப்பா 20.3 சதவீதம்
அமெரிக்கா 17 சதவீதம்
ஜப்பான் 9.7 சதவீதம்
கனடா 5.3 சதவீதம்
சீனா 4.6 சதவீதம்
ஹாங்காங் 4.3 சதவீதம்
தென்கொரியா 3.3 சதவீதம்
மெக்சிகோ 2.9 சதவீதம்
தாய்வான் 2.7 சதவீதம்
சிங்கப்பூர் 2.7 சதவீதம்
சுவிஸ் 2.0 சதவீதம்
மலேசியா 1.8 சதவீதம்
ரசியா 1.4 சதவீதம்
ஆஸ்திரேலியா 1.4 சதவீதம்
தாய்லாந்து 1.3 சதவீதம்
பிரேசில் 1.3 சதவீதம்
இந்தோனேசியா 1.2 சதவீதம்
நோர்வே 1.0 சதவீதம்
சவுதிஅரேபியா 1.0 சதவீதம்
இந்தியா 0.8 சதவீதம்
30 வது நாடாக வெனிசுவேலா 0.4 சதவீதம்

1985இல் பிரதேசங்களின் மொத்த உள்நாட்டு வருமானமும் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி கோடி டாலரிலும், மக்கள் தொகை கோடியிலும்



ஏற்றுமதி இறக்குமதி எப்படி உலகில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் பகிரப்படுகின்றது என்பதையே நாம் மேலே பார்க்கின்றோம். பிரதான ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இழுபறியையும், ஏகாதிபத்தியம் எப்படி உலகில் உள்ள அனைத்து செல்வங்களின் சொந்தக்காரராக மாறுகின்றனர் என்பதையும் காண்கின்றோம். இங்கு சிதைந்து போன சோவியத் என்ற சமூக ஏகாதிபத்தியத்தின் பலத்தையும் நாம் கணக்கில் எடுக்கக் கூடியதாக உள்ளது. 1985இல் உலகில் அதிக ஏற்றுமதி செய்த நாடு, முன்னாள் சோவியத்தாக இருப்பதை நாம் காணமுடியும். தேசிய வருமானத்தை எடுப்பினும் கூட அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் காணப்பட்டது. சமூக ஏகாதிபத்தியமான சோவியத் மிக பெரிய போட்டியாளனாகவே அக்கால கட்டத்தில் இராணுவத் துறையில் மட்டுமல்ல, பொருளாதாரத் துறையிலும் காணப்பட்டது. ஜப்பான், ஜெர்மனி ஏகாதிபத்தியத்துக்கு உள்ளேயே மிகவேகமாக முன்னேறி வந்த இக்காலகட்டத்தில் தான், சோவியத் உலக ஆதிக்கத்துக்காக ஏகாதிபத்திய போட்டியில் குதித்து இருந்தது. சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ள, மற்றைய ஏகாதிபத்தியத்துக்கு இடையில் ஒரு நெருக்கமான இணக்கப்பாடு காணப்பட்டது. ஆனால் சமூக ஏகாதிபத்தியத்தின் சிதைவின் பின்பு, இவர்களுக்கு இடையிலான இணக்கப்பாடு சிதைந்து இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ளது.


1985இல் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ரசியா என்ற மூன்று பிரதானமான ஏகாதிபத்திய மையங்கள் மொத்த ஏற்றுமதியில் 76.5 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியது. 1973, 1987, 2000ஆம் ஆண்டுகளில் முதல் ஆறு பிரதான ஏற்றுமதியாளர்களும், உலக ஏற்றுமதியில் முறையே 46, 47.3, 46.2 சதவீதத்தைக் கட்டுப்படுத்தினர். இதற்குள் பல ஏற்றத்தாழ்வுகளை உலகம் சந்தித்தது. உதாரணமாக அமெரிக்கா முறையே 12.4, 10.2, 19.1 சதவீத அளவில் உலக ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியது. 1990இல் உலக ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 18 சதவீதமாகும். இது படிப்படியாக ஏற்ற இறக்கத்துடன் வீழ்ச்சி கண்டு வந்தது. இதேநேரம் ஜெர்மனியை எடுத்தால் முறையே 11.7, 11.8, 5.6 சதவீதத்தை கட்டுப்படுத்திய அதேநேரம், ஏற்றுமதியில் ஒரு சரிவைக் கொடுத்துள்ளது. இந்தச் சரிவுகள் சந்தையில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான நெருக்கடியை அதிகரிக்க வைக்கின்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இறக்குமதி கடும் பற்றாக்குறைக்கு வழி வகுத்துள்ளது.

உதாரணமாக 2002யை எடுத்து ஆராய்ந்தால் அவை அப்பட்டமாக வெளிபடுத்தப்பட்டு நிற்கின்றது. 2002இல் உலகின் முன்னணி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கோடி டாலரில்


2002ஆம் ஆண்டு உலகளாவிய ஏற்றுமதி இறக்குமதி பிரதான நாடுகள் சார்ந்த அட்டவணையை நாம் மேலே காண்கின்றோம். உலகமயமாதலின் நேரடி விளைவு ஏற்றுமதி இறக்குமதியின் அளவை பல மடங்காக்கியுள்ளது. அமெரிக்காவின் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையில் உள்ள ஏற்றத்தாழ்வு இரண்டுமடங்காகி உள்ளது. இந்தப் பற்றாக்குறை சர்வதேச நெருக்கடிக்கு இட்டுச் செல்லுகின்றது. அமெரிக்க டாலர் சர்வதேச நாணயமாக இருப்பதால், அதைக் கொண்டு பெறுமதியற்ற டாலர் நோட்டுகளை சந்தையில் தள்ளி விடுவதன் மூலம், இறக்குமதியிலான பற்றாக்குறையில் இருந்து தப்பி பிழைக்க முனைகின்றனர். டாலர் பெறுமதிக்கு ஏற்பட்ட சரிவு ஈரோவுடன் ஒப்பிடும் போது மிகக் குறுகிய காலத்தில் அண்ணளவாக 30 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டது. இதனால் சர்வதேச நாணயமாக தொடர்ந்தும் டாலர் இருப்பது என்பது கேள்விக்குள்ளாகின்றது. அன்னிய நிதிக் கையிருப்புகள் கணிசமாக ஈரோவுக்கு மாறிவருகின்றது. சர்வதேச வர்த்தகங்கள் கூட டாலருக்கு பதில், ஈரோ மூலம் நிகழத் தொடங்கியுள்ளது. இது கூட ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாட்டையே அதிகரிக்க வைத்துள்ளது. பொதுவாக பல தளத்தில் ஏற்றுமதிச் சந்தை ஏகாதிபத்தியத்துக்கு இடையில் கடும் நெருக்கடியை உருவாக்கி உள்ளதுடன், கடும் போட்டியுடன் போராட வைக்கின்றது. சூதாட்டங்கள் முதல் சதிகள் வரையிலான வர்த்தக ராஐதந்திர மொழியில், ஒன்றையொன்று குழிபறிக்கின்றது.


2000த்துடன் ஒப்பிடும் போது 2002இல் ஏற்றுமதி பல மடங்காகியுள்ளது. உலகமயமாதல் நிபந்தனைகள் ஏகாதிபத்தியத்தின் ஏற்றுமதியை திடீரென வீங்கவைத்துள்ளது. மறுபக்கத்தில் மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதி அதாவது ஏகாதிபத்தியம் நோக்கிய இறக்குமதி மிக மலிவாகவே சூறையாடப்படுகின்றது. சர்வதேச ரீதியாக மூன்றாம் உலக நாடுகளின் பொருட்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்படுகின்றன. இதை தனியாக பிறிதொரு அத்தியாயத்தில் நான் தனியாக ஆராய உள்ளேன். ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்களை சந்தைப் பெறுமானத்தில் குறைய வைத்துள்ளது. இதனால் ஏகாதிபத்திய நாடுகளின் நுகர்வின் அளவு அதிகரிப்பதுடன், உலகை அதிகம் சூறையாடுவது உலகமயமாகி விடுகின்றது. எதிர்மறையில் ஏகாதிபத்திய ஏற்றுமதிப் பொருட்கள் சந்தை விலையை அதிகரிக்க வைத்து, மூன்றாம் உலக நாடுகளை மேலும் ஆழமாகச் சூறையாடுவது அதிகரித்துள்ளது. இதன் மூலம் மூன்றாம் உலக நாட்டு மக்கள் சமூகத் தேவையைக் கூடப் பெறமுடியாத வகையில், இழிநிலைக்கு பெரும்பான்மை மக்கள் அன்றாடம் தள்ளப்படுகின்றனர். இப்படி மக்களை வரைமுறையின்றி சூறையாடும் ஏகாதிபத்தியம், யார் அதிகம் நுகர்வது என்ற போட்டியில் ஈடுபடுகின்றது. அதிகம் நுகரும் போது, மற்றவர் அதை இழக்க வேண்டும். இது நுகர்வின் அடிப்படையான இயங்கியல் விதி. அதிகம் நுகரும் போது, ஏழை நாட்டு மக்கள் நுகர்வு வீழ்ச்சி காணும் அதே நேரத்தில், போட்டி ஏகாதிபத்தியத்துக்கு இடையிலும் மோதல் நடக்கின்றது.


இந்த நிலையில் ஏகாதிபத்தியத்தின் ஏற்றுமதிகள் வெள்ளமாகவே திடீரென உலகெங்கும் திறந்து விடப்பட்டுள்ளது. இதுவே உலகமயமாதலின் சிறப்பான எடுப்பான வடிவமாக இங்கு காட்சி அளிக்கின்றது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் திடீர் ஏற்றுமதி அதிகரிப்புகள் பிரமிப்பைத் தரக் கூடியவை. 2003ஆம் ஆண்டை எடுத்து 2000, 2002யுடன் ஒப்பிட்டு பார்த்தாலே புரிந்து கொள்ளமுடியும்.

ஏற்றுமதி இறக்குமதி 2003இல் கோடி டாலரில்



2000க்கும் 2003க்கும் இடையில் உலகளாவிய ஏற்றுமதி ஐந்து மடங்குக்கு மேலாகவே அதிகரித்தது. உலகமயமாதலில் உலகம் எப்படி திறந்துவிடப்பட்டுள்ள விபச்சாரச் சந்தையாக, குறுகிய காலத்தில் மாற்றப்பட்டது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. இது நுகர்வின் வடிவங்களில் மிகத் தீவிரமான மாற்றத்தை உலகளவில் ஏற்படுத்தியுள்ளது. தேசிய நுகர்வு சார்ந்த பண்பாடுகள் சிதைக்கப்பட்ட அளவு பலமடங்காக இருப்பதை, சர்வதேச ஏற்றுமதி சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது. தேசிய வளங்கள் சிதைந்து நலிந்து போவதையும், நுகர்வுப் பண்பாடுகள் குறுகிய காலத்தில் மாற்றப்பட்டதையும் எடுத்துக் காட்டுகின்றது. தேசிய நுகர்வு சார்ந்த பன்மையான பண்பாடு அழிக்கப்பட்டு, அதனிடத்தில் அன்னியரின் ஒற்றை நுகர்வு சார்ந்த பண்பாடு உலகளாவிய ஒன்Ùக திறந்துவிட்ட சந்தை உருவாக்குகின்றது. உண்மையில் தேசங்களின் சிதைவையே இது எடுத்துக்காட்டுகின்றது. உலகம் பன்னாட்டு நிறுவனங்களின் குறுகிய நலன் சார்ந்த உலகமயமாவதை எடுத்துக் காட்டுகின்றது.


2003இல் உலகின் முன்னணி ஏற்றுமதியாளனாக ஜெர்மனி மாறியது. 2000உடன் ஒப்பிடும் போது 2003இல் ஏற்றுமதி ஐந்து மடங்காக மாறிய போது, இது ஏகாதிபத்தியத்துக்கு இடையில் ஒரே மாதிரி நிகழவில்லை. ஜெர்மனிய ஏற்றுமதி 9 மடங்கு மேலாக அதிகரித்தது. சீன ஏற்றுமதி 10 மடங்கு மேலாக அதிகரித்தது. ஜப்பானின் ஏற்றுமதி 6 மடங்கு மேலாக அதிகரித்தது. அமெரிக்காவின் ஏற்றுமதி 2.6 மடங்காக அதிகரித்தது. தீவிரமான ஏகாதிபத்திய மோதலூடாகவே இந்த அதிகரிப்பு நிகழ்கின்றது. உலகமயமாதலின் இலாபங்களைப் பகிர்வதில் கடுமையான ஏகாதிபத்திய முரண்பாடுகள் இருப்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. இதற்குள் சீனாவும் குதித்துள்ளது. சோவியத் சிதைவின் பின்பு புதிதாக சீனா களத்தில் குதித்துள்ளது.