வியாழன், 24 பிப்ரவரி, 2011

மாற்றங்களின் நிதர்சனம்

உலக சரித்திர வரலாற்றில் பல அத்தியாயங்கள் நிகழ்கால உலகின் பற்பல மாற்றங்களுக்கு வழிகோலியுள்ளது. மாற்றங்களின் காலக்கணிப்புக்கள் நிமிடங்களாக இருக்கலாம் அல்லது மணித்தியாலங்களாக இருக்கலாம் நாட்கள் மாதங்கள் ஏன்? பல வருடங்களாகக் கூட இருக்கலாம்.

மாறிவரும் உலக ஒழுக்குகளின் சாதக பாதக விடயங்களை நாங்கள் எங்கள் ஏழாவது அறிவுடன் பேசிப்பார்ப்பது இந்த வலைப்பதிவில் நான் எழுதுவது காலக்கிரமத்தின் அடிப்படையில் சிறப்பானது என்று என்னுகின்றேன்

கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் பாரம்பரிய ஆட்சிமுறைகள் மனித உறவு முறைகள், மதவழிபாட்டு அனுஷ்டானங்கள், அடக்கு முறைக்கு எதிரான போராட்ட வடிவங்கள் என்பன இந்த மாற்றங்களுக்கூடான வழிமுறையில் உலக ஒழுக்கின் பாதையில் விபத்துக்குள்ளாகி சிக்கி சின்னாபின்னாமாகியன நிதர்சனம்.

ஜரோப்பிய சரித்திரத்தை நோக்கும் போது தற்போதைய மாற்றங்கள் அன்று மறுமலர்ச்சி காலமாக நோக்கப்பட்டது.அன்றைய மறுமலர்ச்சி பல புதிய தலைமுறைக்கான தேர்ந்த களமாக அன்றைய காலச்சூழல் ஒத்துழைத்திருந்தது. அரசாட்சி முறைகள் மதரீதியான அடக்குமுறைகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டமை பிரபுக்களுக்கும் அடிமைகளுக்கும் இடையிலான பாரிய வேறுபாடுகள் ஜாதி இன மொழிப் பாகுபாடுகள் என்பன மக்கள் சக்தி மூலம் பாரிய சக்தி வடிவமாக வெளிக்கொணரப்பட்டு மறுமலர்ச்சி என்ற பதத்திற்கு அர்த்தத்தை உருவாக்கி புதிய உலக ஒழுக்கிற்கு வழிகோலியது.

இதுபோல் உலக வாரலாற்றில் பல மாற்றங்களுக்கு பல கால சூழல்கள் தத்தமது பாதைகளை திறந்துவிட்டிருக்கின்றன...

விசேடமாக உலக யுத்தங்களின் பின்னரான பூகோள வரைபடங்களின் மாற்றங்களும் நடவடிக்கைகளும் சர்வதேச கட்டமைப்புக்களில் புதிய கள முனைகளையும் திறந்து விட்டன.

பல்தேசியக் கம்பனிகளின் கூட்டுக்களை போல் ஜக்கிய நாடுகளின் சபை உருவாக்கப்பட்டது வரவேற்கப்பட்டது....அன்று! எழுதியது - Friday, November 13, 2009 (http://amalathaselroyleslee.blogspot.com/2009/11/blog-post.html)


.....................................இன்று........................................
பெய்ஜிங்: துனீசியா, எகிப்தில் தொடங்கிய மக்கள் புரட்சி இப்போது பல நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. மேலும் வளைகுடா நாடுகளில் தொடங்கிய இப்புரட்சி லிபியாவிலும் அதிபர் கடாபிக்கு எதிரான போராட்டமாக வலுத்துள்ளது.

இந்நிலையில் அண்டை நாடான சீனாவிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் உருவானது. ஆனால் காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டினர். கம்யூனிஸ ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் நகரில் திரண்டனர். பெய்ஜிங் நகரில் மெக்டொனால்ட் விடுதிக்கு எதிரில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

இணையதளம் மூலமாக பரப்பப்பட்ட இப்போராட்ட தகவலின் அடிப்படையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இங்கு திரண்டனர். வர்த்தகப் பகுதியான வாங்புஜிங் தெருவில் ஒரு சில நிமிஷங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆரம்பத்திலேயே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு காவல்துறையினர் கூட்டத்தினரை விரட்டியடித்தனர். மேலும் சிலரைக் கைது செய்தனர்.

சீன அரசு எதிர்ப்புக் குழு தலைவரான லியு ஜியோபோ-வுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பரிசைப் பெற ஆஸ்லோ செல்லவும் அவரை அனுமதிக்கவில்லை. இதை கண்டித்து பெய்ஜிங்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்த தகவல் முதலில் அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா-வில் வெளியானது. பிற்பகல் 2.10 மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்களில் 2 பேரை மட்டுமே ரோந்து காவல்துறையினர் கைது செய்து வேனில் கொண்டு சென்றதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேபோல ஷாங்காய் நகரில் மக்கள் நூற்றுக் கணக்கில் திரண்டனர். யுனான் ஷோங் சாலை மற்றும் ஹன்கோ சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தை காவல்துறையினர் தடியடி கலைத்தனர். கூட்டத்திலிருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். "மல்லிகைப் புரட்சி' என்று இந்த போராட்டத்துக்கு பெயரிட்டு அதற்காக மக்களை திரட்டும் பணியில் ஈடுபட்டதை அரசு ஓரளவு யூகித்திருந்தது. ஆனால் அது எப்படி நடக்கும் என்பதை தீர்மானிக்கும் முன்பாகவே ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசை மிரளச் செய்துவிட்டனர்.

இத்தகைய போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்ய பயன்படும் இணையதளத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை அரசு தடை செய்தது. ஆனால் அமெரிக்காவிலிருந்து செயல்படும் மற்றொரு இணையதளம் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு ஒன்று திரண்டனர். சீனாவில் 45 கோடி பேரிடம் இணையதள இணைப்பு உள்ளது. 5 கோடிக்கும் அதிகமான பிளாக்-குகள் இங்குள்ளன. ஆனால் அதிகாரபூர்வமற்ற வகையில் 10 கோடி பிளாக்-குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

உலகில் மாற்றம் ஒன்றுமட்டுமே மாறிக்கொண்டு இருக்கும்...

2 comments:

பெயரில்லா சொன்னது…

waiting

priya சொன்னது…

உங்கள் கட்டுரை படிக்கும் போது தலை சுத்துகிறது.